சில நாட்களில் திருமணம்.. புதுமாப்பிளைக்கு நேர்ந்த பரிதாபம்.. கதறும் காதலி!!

ராணிபேட்டையில்..

தமிழக மாவட்டம் ராணிபேட்டையில் திருமணத்திற்கு சில நாட்கள் உள்ள நிலையில் மணமகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் சிறுவஞ்சிப்பட்டுப் பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவர் சென்னையில் பணியாற்றி வரும்போது பெண்ணொருவரை காதலித்து வந்துள்ளார்.

இவர்களது காதல் விவகாரம் இருவர் குடும்பத்தினருக்கும் தெரிய வரவே எதிர்ப்பு கிளம்பியது. எனினும் அவர்களை சமாதானப்படுத்திய காதலர்கள், தங்கள் திருமணத்திற்கும் சம்மதிக்க வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து நிச்சயதார்த்தம் நடந்து 26ஆம் திகதி திருமணம் என முடிவானது. இந்த நிலையில் காதலியின் வீட்டிற்கு சென்ற மோகன்ராஜ், அவரிடம் அளவு மேலாடை வாங்கிக்கொண்டு ராணிப்பேட்டைக்கு இருசக்கர வாகனத்தில் பயணித்தார்.

அப்போது அடையாளம் தெரிய முதியவர் சாலையில் இறந்து கிடந்ததால் அங்கே கூட்டம் கூடியிருந்தது. அந்த வழியாக வந்த லொறி ஒன்று, கூட்டத்தைப் பார்த்ததும் திடீரென நின்றது.

இதனால் லொறியின் பின்னால் வந்துகொண்டிருந்த மோகன்ராஜ் வாகனத்தின் மீது பலமாக மோதியதில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதனையடுத்து இருவரது சடலங்களையும் கைப்பற்றிய பொலிஸார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன் பின்னர் மோகன்ராஜின் குடும்பத்திற்கும், அவரது காதலியின் குடும்பத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனைக்கு விரைந்த குடும்பத்தினர் கதறி அழுதனர்.

இதற்கிடையில் இதுகுறித்துவ வழக்குப்பதிவு செய்த பொலிஸார், தப்பியோடிய லொறி ஓட்டுநரை வலைவீசி தேடி வருகின்றனர். திருமணத்திற்கு சில நாட்களே உள்ள நிலையில் மணமகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

மனைவி, குழந்தைகளை துடிதுடிக்க கொன்ற கொடூரன்.. நெஞ்சு பதைபதைக்கும் சம்பவம்!!

கேரளாவில்..

மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளை கழுத்தை நெரித்து துடி துடிக்க கொலை செய்திருக்கிற கொடூரனை போலீசார் கைது செய்துள்ளனர். தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

கேரள மாநிலத்தில் கோட்டையம் பகுதியைச் சேர்ந்தவர் அஞ்சு(34) . இவர் கடந்த 2021 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் கெட்டரின் பகுதியில் இருக்கும் பொது மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்திருக்கிறார்.

இதற்காக தன் கணவர் மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் அதே பகுதியில் தங்கி இருந்து அவர் அந்த வேலையை செய்து வந்திருக்கிறார். இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் கெட்டரிங் பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் அஞ்சு அசோக், அவரது மகள்கள் ஜீவா(6), ஜானகி(4) கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர்.

சம்பவத்தன்று உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஜீவா, ஜானகி இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் சிறிது நேரத்தில்இரண்டு குழந்தைகளும் உயிரிழந்தனர். ஏற்கனவே அஞ்சு உயிரிழந்து விட்டதால் அவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருந்தனர்.

தடயவியல் மற்றும் பிரேத பரிசோதனை முடிவுகளில் மூன்று பேரும் மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்தது தெரிய வந்திருக்கிறது . இதை அடுத்து போலீசார் அஞ்சுவின் கணவர் சஜூவிடம் நடத்திய விசாரணையில் அவர் அளித்துள்ள வாக்கு மூலத்தில் மனைவியையும் மகள்களை கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டிருக்கிறார்.

இதை அடுத்து விசாரணைகள் நடந்து முடிந்து வழக்கின் தீர்ப்பு வரும் ஜூலை 3ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து புறனாய்வு காவல் ஆய்வாளர் அதிகாரி, அஞ்சு ஒரு அர்ப்பணிப்பு உள்ள செவிலியர். அன்பான தாய் . அவரை அவரையும் அவரது குழந்தைகளையும் கொன்ற சஜித் நிச்சயம் மனம் வருந்துவார் என்று கூறியிருக்கிறார்.

8000 கிலோ மீட்டர் பயணம் செய்து முதியவரை காணவரும் பென்குயின்.. வியப்பில் பொதுமக்கள்!!

தென்னமெரிக்காவில்..

தன் உயிரை காப்பாற்றிய ஒருவரை பார்ப்பதற்காக பென்குயின் ஒன்று 8000 கிலோ மீற்றர் தூரத்தில் இருந்து வந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்னமெரிக்காவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் ஜோவா என்ற முதியவர், ஆபத்தான நிலையில் வந்த பென்குயினை காப்பாற்றியுள்ளார்.

காயம் சரியாகும் வரை அதை கவனமாக பார்த்து வந்துள்ளார், சரியானவுடன் கடற்கரைக்கு சென்று விடவே அது செல்லாமல் இருந்துள்ளது. எனவே பென்குயினை முதியவரே வளர்த்து வந்துள்ளார். ஒருநாள் அதற்கு இறகுகள் வளர தொடங்கியவுடன் சட்டென்று காணாமல் போய் உள்ளது.

அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் அந்த முதியவரிடம், பென்குயின் மீண்டும் வருகை தராது என்று கூறியுள்ளனர். வெகுநாட்கள் கழித்து முதியவர் கடற்கரைக்கு சென்ற போது, அந்த பென்குயின் வந்துள்ளது.

அதே போலவே ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மற்றும் அடுத்த செப்டம்பர் மாதம் வரும்வரை அந்த பென்குயின் இவர் கூட தான் இருக்குமாம். இவ்வாறு இருப்பதால் பொதுமக்கள் எல்லாம் கண்டு வியந்துள்ளனர்.

முன்பள்ளி ஆசிரியை கொலை : வெளிவரும் திடுக்கிம் தகவல்கள்!!

கண்டியில்..

கண்டியில் நேற்றைய தினம் கொடூரமாக கொலை செய்யப்பட்ட முன்பள்ளி ஆசிரியை அஞ்சலி சாபா செனவிரத்னவின் மரணம் தொடர்பில் மேலும் பல திடுக்கிம் தகவல்கள் வெளியாகியுள்ளன.

புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக முன்பள்ளிக்குச் சென்ற இருபத்தைந்து வயதுடைய குறித்த ஆசிரியை படுகொலை செய்யப்பட்டமப் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

முருதலாவ பிரதேசத்தை சேர்ந்த அஞ்சலி சாபா செனவிரத்ன என்ற முன்பள்ளி ஆசிரியை ஒருவரே படுகொலை செய்யப்பட்டிருந்தார். இலுகென்ன பிரதேசத்திலுள்ள முன்பள்ளிக்கு தனது வீட்டிலிருந்து சென்று கொண்டிருந்த ஆசிரியை , கினிஹேன மயானத்துக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டி விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

வெட்டுக்காயத்துடன் 100 மீற்றர் தூரத்திலுள்ள தனது அத்தையின் வீட்டுக்கு சென்று தன்னைக் காப்பாற்றுமாறு ஆசிரியை கதறியதாக , பொலிஸார் தெரிவித்தனர்.

ஆசிரியையின் வீட்டில் இருந்து 700 மீற்றர் தொலைவிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றது. பலத்த காயங்களுடன் இலுக்தென்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

ஆசிரியை வீட்டிலிருந்து புறப்படும்போது யாருடனோ தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இது காதல் தொடர்பின் அடிப்படையில் நடந்த படுகொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

அத்துடன், அவரது கையடக்கத் தொலைபேசியிலிருந்து தரவுகளை பெற்று சந்தேக நபரை அடையாளம் காண பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் 10 வயதுச் சிறுமி நீண்டகாலமாக பா.லி.ய.ல் வ.ன்.கொ.டு.மை : உறுதிப்படுத்திய சட்ட வைத்திய அறிக்கை!!

10 வயது சிறுமி..

வவுனியாவில் 10 வயது சி.று.மி நீண்டகாலமாக பா.லி.ய.ல் வ.ன்.கொ.டு.மை.க்.கு உள்ளாகியுள்ளமை சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை மூலம் உறுதிப் படுத்தப்பட்டுள்ளதாக பொலிசார் இன்று (08.04) தெரிவித்தனர்.

வவுனியாவில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 10 வயது மா.ண.வி ஒருவர் கடந்த 4 வருடங்களாக பா.லி.ய.ல் து.ஸ்.பி.ரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரிய வந்ததையடுத்து,

கடந்த 30 ஆம் திகதி குறித்த மாணவியின் சகோதரன், சிறிய தந்தையார் உள்ளிட்ட 16, 32, 53 வயதுடைய மூவரை வவுனியா பொலிசார் சந்தேகத்தின் பேரில் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தினர். குறித்த மூவரும் நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், குறித்த சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையும் வெளியாகியுள்ளது.

குறித்த அறிக்கையில் 10 வயது மாணவி நீண்டகாலமாக பா.லி.ய.ல் வ.ன்.கொ.டு.மை.க்.கு உ.ள்.ளாக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை, குறித்த சம்பவம் இடம்பெற்றமைக்கு தாயின் பொறுப்பற்ற செயற்பாடே காரணம் என சமூகமட்ட அமைப்புக்கள் கு.ற்.ற.ம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா வைரவபுளியங்குளம் ஆதி விநாயகர் திருக்கோவில் கொடியேற்றம்

வவுனியா வைரவப் புளியங்குளம் ஆதி விநாயகர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவத்தில் கொடியேற்றம் 06.04.2023 வியாழக்கிழமை காலை 11.00 மணியளவில் சிவஸ்ரீ.ஜெ.மயூரக் குருக்கள் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா விஞ்ஞாபனம் 2023

கொடியேற்றம் -> 06.04.2023
மாம்பழத்திருவிழா -> 11.04.2023
வேட்டைத்திருவிழா -> 12.04.2023
சப்பறத்திருவிழா -> 13.04.2023
தேர்த்திருவிழா -> 14.04.2023
தீர்த்ததிருவிழா -> 15.04.2023
பூங்காவனம் -> 16.04.2023

மன்னாரில் உணவகத்தில் காலையுணவு வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

மன்னாரில்..

இன்றுகாலை மன்னார் பேசாலை சாப்பாட்டுக் கடை ஒன்றில் காலையுணவு வாங்கியவருக்கு பெரும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்துள்ளது. குறித்த நபர் கடையில் ரொட்டி வாங்கியிருந்தார்.

ரொட்டியுடன் அவருக்கு வழங்கப்பட்ட குழம்பில் பூரான் இருந்துள்ளது. சாப்பிட தட்டில் ரொட்டியை போட்டு குழம்பை ஊற்றியவருக்கு குழம்பில் பூரான் இருந்த சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் அவரது நண்பர் ஒருவர் பூரான் கறியுடன் வழங்கப்பட்ட ரொட்டியை தனது முகநூலில் ஆதங்கத்துடன் பதிவிட்டுள்ளார்.

அதேவேளை புத்தாண்டு பண்டிகைக் காலத்தில் மனித பாவனைக்குத் தகுதியற்ற உணவுகளை விற்பனை செய்யும் கடைகளை அடையாளம் காணும் நோக்கில் ஏப்ரல் 25 ஆம் திகதி வரை சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

புகையிரதம் தடம் புரண்டதில் 17 பேர் வைத்தியசாலையில்!!

திருகோணமலை..

திருகோணமலை மாவட்டம் கந்தளாய் – அக்போபுர பகுதியில் தொடருந்து தடம் புரண்டதில் 17 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று (07.04.2023) பதிவாகியுள்ளது.

கல்ஓயாவிலிருந்து திருகோணமலை நோக்கி வந்துகொண்டிருந்த தொடருந்து கித்துல்உதுவ பகுதியில் தடம் புரண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்விபத்தில் காயமடைந்த 17 பேரும் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் மூன்று ஆண்களும், ஒரு சிறுவனும் அடங்குவதாக வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.

விபத்து தொடர்பிலான விசாரணைகளை அக்போபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

“நல்ல காலம் பிறக்கும் என்பதால் அவர்களை தீ வைத்து எரித்தேன்” அதிர வைத்த குற்றவாளியின் வாக்குமூலம்.!!

கேரளாவில்..

இந்திய மாநிலம் கேரளாவில் ஓடும் ரயிலில், பயணிகள் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர் அளித்துள்ள வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் கோழிக்கோடு எலத்தூர் அருகே ஓடும் ரயிலில், நபர் ஒருவர் சக பயணியை தீ வைத்து எரித்தார். இதில் 8 பேர் தீக்காயம் அடைந்த நிலையில், இரண்டு வயது குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர்.

அவர்களது உடல்கள் தண்டவாளத்தில் மீட்கப்பட்டன. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தீ வைத்து எரித்த நபரான முகம்மது ஷாரூக் ஷஃபி மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ரயிலில் பயணிகள் மீது வைத்தால் நல்ல காலம் பிறக்கும் என மர்ம நபர் ஒருவர் கூறியதால், அவ்வாறு செய்ததாக அளித்துள்ள வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஷாரூக் தீ வைத்துவிட்டு இரண்டு பெட்டிகள் மாறி அமர்ந்திருந்துள்ளார். அதே ரயிலில் வேறு பெட்டியில் அவர் ஏறி கண்ணூர் சென்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

உடல் அமைப்பை வைத்து அந்த மாதிரி பேசுகிறார்கள்.. திரைப்பட நடிகை வருத்தம்!!

சினிமாவில்..

மலையாள சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ஹனி ரோஸ். இவர் மலையாள படங்களை தாண்டி தமிழ், தெலுங்கு போன்ற மொழி படங்களில் நடித்துள்ளார்.

ஜீவா நடிப்பில் 2011 -ம் ஆண்டு சிங்கம் புலி படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். சமீபத்தில் வெளியான பாலகிருஷ்ணாவின் வீர சிம்ஹா ரெட்டி படத்திலும் நடித்திருந்தார்.

இந்நிலையில் நடிகை ஹனி ரோஸ், ” பொது நிகழ்ச்சி, கடை திறப்பு விழாக்களுக்கு செல்லும் போது நான் அணிந்திருக்கும் ஆடையை வைத்து உருவ கேலி செய்கிறார்கள். எடை கூடிவிட்டால் கேலி செய்கிறார்கள். இது போன்ற விஷயம் என்னை மிகவும் வேதனைப்படுகிறது” என்று உருக்கமாக கூறியுள்ளார்.

நீட் தேர்விற்கு பயிற்சி பெற்று வந்த மாணவி எடுத்த விபரீத முடிவு!!

தமிழகத்தில்..

தமிழகத்தின் நெய்வேலி அருகே நீட் பயிற்சி பெற்று வந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நெய்வேலி அருகே உள்ள ஆபத்தாரணபுரத்தை சேர்ந்த உத்திரபாதி என்பவர் தனது பணிக்காக நெய்வேலியில் குடும்பத்தோடு வசித்து வருகிறார்.

இவரது மகளான நிஷா கடந்த ஆண்டு நடந்த பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வில் 399 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அவர் நீட் தேர்வு எழுதுவதற்காக நெய்வேலி இந்திரா நகரில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து முழு நேரப் பயிற்சி பெற்று வந்துள்ளார்.

மே மாதம் நடைபெறவுள்ள நீட் தேர்வு எழுதுவதற்கு தயாராகி வந்து உள்ளார். இதற்காக பயிற்சி மையத்தில் வைக்கப்பட்ட தேர்வுகளில் அவர் சரியான மதிப்பெண்கள் எடுக்கவில்லை என சொல்லப்படுகிறது.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான நிஷா நேற்று ( ஏப்ரல் 5 ) மாலை வகுப்பு இல்லாத நிலையிலும் வகுப்பு உள்ளதாக கூறிவிட்டு நெய்வேலியிலிருந்து பேருந்து மூலம் வடலூருக்கு சென்றுள்ளார்.

வடலூர் ரயில் நிலையம் அருகே ரயில் தண்டவாளத்தில் அவர் பெங்களூரிலிருந்து கடலூர் நோக்கி வந்த ரயில் முன்பு தலையை வைத்து தற்கொலை செய்து கொண்டார். இதில் அவரது உடல் சிதைந்து போனது.

இதனை பார்த்த எஞ்ஜின் ஓட்டுநர் ரயிலை நிறுத்திவிட்டு கடலூர் முதுநகர் ரயில்வே காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். ரயில்வே காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து நிஷாவின் உடலைக் கைப்பற்றி உடற் கூராய்வுக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

காவல் துறையினர் விசாரணையில், நீட் பயிற்சி மையத்தில் நடந்த மாதிரி தேர்வில் அவர் குறைவான மதிப்பெண் எடுத்தது தெரிய வந்துள்ளது. அதனால் மனவேதனை அடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார். நீட் பயிற்சி பெற்று வந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவில் இருந்து வந்த காதலியை கொடூரமாக கொலை செய்த காதலன்!!

ஹரியானாவில்..

கனடாவில் இருந்து காதலியை வரவழைத்து கொலை செய்த இளைஞரின் செயல் ஹரியானாவில் பெரிய பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலம் ரோஹ்டக் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் நீலம் (23).

இவர் சோனிபட் பகுதியை சேர்ந்த சுனில் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் நீலம் கனடாவில் வேலை செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

அவர் அதற்காக சர்வதேச ஆங்கில மொழி சோதனை முறை (IELTS) தேர்வில் தேர்ச்சி பெற்று கன்னடாவுக்கு சென்றார். அங்கு வேலையும் பார்த்து வந்தார். இந்த நிலையில், நீலத்தை திருமணம் செய்துகொள்ளலாம் எனக்கூறி இந்தியாவுக்கு அழைத்துள்ளார் சுனில்.

அதன்படி கடந்த ஜனவரியில் இந்தியாவுக்கு வந்த நீலம் ரோஹ்டக்கில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் காதலனை சந்திக்க சோனிபட் வந்துள்ளார். அதன் பிறகு நீலம் திரும்பி வரவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த நீலத்தின் பெற்றோர் சுனில் வீட்டுக்கு சென்று பார்த்தபோது அவரும் மா.யமாகி இருந்தார். பின்னர் அவரது குடும்பத்தினர் கணவுர் காவல் நிலையத்தில் கா.ணவில்லை என்று புகார் அளித்தனர்.

ஆனால், போலீஸார் வி.சாரணை உதவாததால், பெண்ணின் குடும்பத்தினர் ஹரியானா உள்துறை அமைச்சர் அனில் விஜை சந்தித்து நடவடிக்கை எடுக்க அழுத்தம் கொடுத்தனர். பின்னர் இந்த வழக்கு பிவானியில் உள்ள கு.ற்றப் பு.லனாய்வு முகமைக்கு மாறியது.

சிஐஏ விசாரணை நடத்தி வந்த நிலையில் சுனிலை கண்டுபிடித்து கஸ்டடியில் எடுத்தனர். அதில் அவர் நீலத்தை கொ.லை செ.ய்.து வீட்டு காலியிடத்தில் குழி தோ.ண்டி பு.தைத்ததாக கூறி பகீர் கிளப்பினார்.

உடனே அதிகாரிகள் சுனில் சொன்ன இடத்துக்கு சென்று தோண்டி பார்த்ததில் சுமார் 10 அடி குழிக்குள் மனித எலும்புக்கூடு இருப்பது தெரிய வந்தது. அதனை கைப்பற்றி ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

கொ.லை குறித்து சுனில் கொடுத்த வாக்குமூலத்தில், கடந்தாண்டு கன்னடாவில் இருந்து வந்த காதலி தன்னை பார்ப்பதற்கு வீட்டுக்கு வந்தார். அப்போது நான் கு.டி போ.தையில் இருந்தேன்.

அப்போது காதலியின் நெற்றியில் இரண்டு முறை சு.ட்.டு கொ.லை செ.ய்.தே.ன் என சுனில் கூறினார். இந்நிலையில், எதற்காக அவர் கொ.லை செ.ய்.தா.ர் என்பதை அறிய அதிகாரிகள் வி.சாரணை நடத்தி வருகின்றனர்.

இதனை தொடர்ந்து சிஐஏ அதிகாரிகள் இளைஞர் மீது கொ.லை ம.ற்றும் ச.ட்டவிரோத கை.த்.து.ப்.பா.க்.கி.க.ளை வை.த்திருந்தது உள்ளிட்ட வழக்குகளை பதிவு செய்துள்ளனர். மேலும், சுனில் மீது ஏற்கனவே கு.ற்ற வழக்குகள் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த இளைஞனின் சடலத்தை உரிமையுடன் பாதுகாத்த நாய் : இலங்கையில் நடந்த துயரம்!!

நாய்..

அம்பேபுஸ்ஸ, பீரிஸ்யால் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரை மாய்த்து இறந்துள்ளார். 25 வயதுடைய இளைஞனே இவ்வாறு இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவரது மரணத்திற்குப் பிறகு, அவரது நாய் குரைத்துக்கொண்டே இருந்ததுடன், அவரது உடலை வீட்டில் இருந்து அகற்ற அனுமதிக்காமல் பாதுகாத்து வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

“விட்டோ என்னை மன்னித்துவிடு, நீ மட்டுமே என்னுடன் என் தனிமையின் போது இருந்தாய்” என அவர் தனது நாய்க்கு கடிதம் ஒன்றையும் எழுதி வைத்திருந்ததாகவும் பொலிஸார் அதனை மீட்டதாகவும் குறிப்பிட்டனர்.

அந்த கடிதத்தில், தனது நாய் மற்றும் பூனையை யாராவது பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் நாயை அன்புடன் பொறுப்பெடுக்கும் ஒருவரிடம் ஒப்படைக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

தந்தை கடந்த சில காலங்களுக்கு முன்பு உயிரிழந்ததுடன், பாட்டியுடன் அவர் வாழ்ந்து வந்தமையும் தெரியவந்துள்ளது. மேலும் அந்த இளைஞன் தனிமையில் வாழ்க்கையை நடத்தி வந்தமையும் தெரியவந்துள்ளது.

ஜப்பான் தடுப்புக் காவலில் உயிரிழந்த இலங்கைப் பெண்.. CCTV காட்சிகளில் வெளியான அதிர்ச்சித் தகவல்!!

ஜப்பானில்..

ஜப்பானில் தடுப்புக் காவலில் உயிரிழந்த இலங்கைப் பெண்ணின் மரணம் தொடர்பில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, தனது மரணத்துக்கு முன்னர் அந்த பெண் முகங்கொடுத்த சம்பவங்கள் அடங்கிய பாதுகாப்பு கமரா காட்சிகள் முதல் முறையாக பகிரங்கமாக வெளியிடப்பட்டுள்ளன.

குறித்த பெண்ணின் குடும்பத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகள் நேற்று(06.04.2023) இந்த கமரா காட்சிகளை வெளியிட்டுள்ளனர். இலங்கையரான ரத்நாயக்க லியனகே விஷ்மா சந்தமாலி (வயது 33) ஒரு மாணவியாக 2017இல் ஜப்பானுக்கு சென்றார்.

இந்நிலையில் அவர் விசா நிபந்தனைகளுக்கு முரணாக தங்கியதால் கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்டில் குடிவரவு பணியகத்தில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார். அங்கு வாந்தி மற்றும் வயிற்றுவலி உள்ளிட்ட உடல்நலக்குறைவால் அவதியுற்ற அவர் 2021 மார்ச் 6ஆம் திகதி உயிரிழந்தார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நாகோயா பிராந்திய குடிவரவு சேவைகள் பணியகத்தில் விஷ்மா சந்தமாலி தடுத்து வைக்கப்பட்டிருந்த போது பாதுகாப்பு கமராவில் பதிவான 5 மணிநேர காட்சிகள் அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளன. அந்த காட்சிகள் 7 நிமிட காணொளியாக சுருக்கி, டோக்கியோவில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பகிரங்கமாக காட்டப்பட்டுள்ளது.

விஷ்மா இறப்பதற்கு இரண்டு வாரங்களுக்குள் எடுக்கப்பட்ட காட்சிகளின் ஒரு பகுதி, அவர் கட்டிலில் படுத்து இருப்பதையும், தன்னால் அசையவோ சாப்பிடவோ முடியவில்லை என்று கூறிய பிறகு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும்படி அவர் அதிகாரிகளிடம் கெஞ்சுவதையும் காட்டுகிறது.

அவள் இறந்த நாளின் மற்றொரு காட்சியில், ஒரு அதிகாரி விஷ்மாவின் விரல் நுனியில் குளிர்ச்சியாக இருப்பதாக இண்டர்கொம் மூலம் அறிவித்த பிறகு, பதிலளிக்காத விஷ்மாவை எழுப்ப முயற்சிக்கிறார்.

விஷ்மாவின் குடும்பத்தினரும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் அந்த காட்சிகளை தனிப்பட்ட முறையில் பார்க்க முடிந்தது. இந்த காட்சிகளை வழக்கில் ஆதாரமாக அரசாங்கம் சமர்ப்பித்துள்ளதுடன் அதன் ஒரு பகுதி பொதுமக்களுக்கு நேற்று முதல் முறையாக பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த கமரா காட்சிகளுக்கமைய அவரது மரணம் மற்றும் சிகிச்சையின் மீது பல விமர்சனங்களை முன்வைத்து பெரும் சீற்றத்தை தூண்டியுள்ளது. இந்நிலையில் விஷ்மாவின் குடும்பம் அவரது மரணம் தொடர்பாக அரசாங்கத்திடம் நஷ்டஈடு கோரியுள்ளதுடன், அவர் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டதாகவும் தேவையான மருத்துவ வசதி இல்லாததால் உயிரிழந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஜெர்மனியில் இருந்து முல்லைத்தீவிற்கு விழாவிற்காக வந்த பெண் பரிதாபமாக உயிரிழப்பு!!

முல்லைத்தீவில்..

கடந்த 3 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்தில் அளம்பில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஜேர்மனியில் இருந்து வருகைதந்த குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்திருந்தார்.

குறித்த பெண் தனது உறவினருடன் உந்துருளியில் சிலாவத்தை பகுதியில் இருந்து கொக்குளாய் செல்லும் வீதியில் சென்றுகொண்டிருந்தபோது வேக கட்டுப்பாட்டினை இழந்து அளம்பில் பகுதியில் விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் வெளிநாட்டில் இருந்த வந்த பெண் பரிதாபமாக உயிரிழந்திருந்தார். உயிரிழந்த பெண்ணின் மகளுக்கு எதிர்வரும் தினங்களில் பூப்புனித நீராட்டுவிழா செய்வதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியான நிலையில் இந்த சோக சம்பவம் ஏற்பட்டது.

நீண்டகாலமாக குறித்த பெண் ஜேர்மனியில் வசித்துவந்த நிலையில் கணவர் மனைவியின் உடலை ஜேர்மனிற்கு எடுத்து சென்றுள்ளதாக கூறப்படுகின்றது. மகளின் பூப்புனித நீராட்டுவிழா நடத்த தாயகம் வந்த பெண், விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

கண்டியில் இளம் பெண் க.ழு.த்தறுக்கப்பட்டு கொலை!!

கண்டியில்..

கண்டியில் இ.ளம் பெ.ண் ஒருவர் இன்று ப.டு.கொ.லை செ.ய்.யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். பேராதனை, இலுக்வத்தை பகுதியில் 25 வயதான முன்பள்ளி ஆசிரியை ஒருவரே க.ழு.த்.த.றுக்கப்பட்டு கொ.லை செ.ய்.ய.ப்பட்டுள்ளார்.

பாடசாலையில் நடைபெறவிருந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். கினிஹேன மயானத்திற்கு அருகில் அவரது க.ழு.த்.து அ.று.க்.கப்பட்டு கொ.லை செ.ய்.ய.ப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட வி.சாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முன்பள்ளி ஆசிரியையின் கையடக்கத் தொலைபேசியிலிருந்து தரவுகளை பெற்று பொலிஸார் வி.சாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கொ.லை.க்கா.ன இதுவரை தெரியவில்லை. கொ.லை.யா.ளி தொடர்பில் வி.சாரணைகள் இடம்பெற்ற வருகின்றன.