ஒருவாரத்தில் திருமண நிச்சயதார்த்தம்.. மணப்பெண்ணுடன் வெளியே சென்ற புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த சோகம்!!

கோவையில்..

அடுத்த வாரம் திருமணம் நிச்சயிக்கப்பட இருந்த நிலையில் இளைஞர் ஒருவர் சாலை விபத்தில் மரணமடைந்த சம்பவம் வால்பாறை மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் பாலா சுகேஷ். 23 வயதான இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்திருக்கிறார். இவருக்கும் பொள்ளாச்சி ஜமீன் கோட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த யாஷிகா என்பவருக்கும் அடுத்த வாரம் திருமணம் நிச்சயிக்கப்பட இருந்திருக்கிறது.

இது தொடர்பாக இரு வீட்டினரும் பேசி முடிவு செய்திருந்த நிலையில் இந்த துயர சம்பவம் நடந்திருப்பது மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தனக்கு நிச்சயிக்கப்பட இருக்கும் யாஷிகாவை அழைத்துக்கொண்டு பாலா சுகேஷ் காரில் வெளியே சென்றிருக்கிறார்.

ஆழியாரை சுற்றிப் பார்க்க இருவரும் தங்களது காரில் சென்றிருக்கின்றனர். அப்போது ஆழியாறில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வந்த அரசு பேருந்து மீது கார் மோதியதாக சொல்லப்படுகிறது. இதனால் அங்கிருந்த பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர்.

விபத்தில் சிக்கிய இருவரையும் மீட்டு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு பொதுமக்கள் அனுப்பி வைத்திருக்கின்றனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பாலா சுகேஷ் மரணமடைந்ததாக தெரிகிறது.

படுகாயமடைந்த யாஷிகா பொள்ளாச்சி அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக தகவல் அறிந்த ஆழியார் காவல் துறையினர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கியுள்ளனர்.

அடுத்த வாரம் திருமணம் நிச்சயிக்கப்பட இருந்த நிலையில் மணப்பெண்ணுடன் காரில் சென்ற புது மாப்பிள்ளை சாலை விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அந்த பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மனைவியின் வளைகாப்பிற்கு சென்ற கணவனுக்கு நடந்த விபரீதம்!!

வாலாஜாபாத்தில்..

மது போதையாலும், நிமிஷ நேர கோபத்தாலும் மூன்று குடும்ப பெண்கள் வாழ்க்கையை இழந்து நிர்கதியாக நிற்கிறார்கள். நிறைமாத கர்ப்பிணி, பிரசவத்திற்காக சொந்த ஊரான கேரளாவுக்கு காஞ்சிபுரம், வாலாஜாபாத்தில் இருந்து சென்றிருக்கிறார்.

அவருடைய சீமந்த விழாவில் கலந்து கொண்டு, மனைவியின் பிரசவம் வரையில் உடனிருந்து பார்த்துக் கொள்வதற்காக வாலாஜாபாத்தில் இருந்து கிளம்பிச் சென்ற கணவர், தனது நண்பர்களுக்கு கிளம்பும் முன்பாக மது விருந்து கொடுத்திருக்கிறார்.

நண்பர்களுடன் மது அருந்தியது, அவரது உயிரையே பறித்து விட்டது. கர்ப்பிணி மனைவி, கணவன் குத்திக் கொலைச் செய்யப்பட்ட செய்தி கேட்டு கொடுமை நிகழ்ந்துள்ளது.

வளைகாப்புக்கு ஏற்பாடு செய்திருந்த உறவினர்கள் எப்படி சமாதானப்படுத்துவது என தெரியாமல் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். நண்பர்களுடனான மது போதை அத்தனை பேர் வாழ்க்கையையும் சீர்குலைத்து விட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேரூராட்சி நேரு நகரைச் சேர்ந்தவர்கள் வினித் குமார் (25) மற்றும் பார்த்திபன்(25). அதே பகுதியில் வசித்து வரும் இருவரும் நண்பர்கள்.

கேரளாவில் இருக்கும் தனது கர்ப்பிணி மனைவியின் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு செல்வதற்காக வினித் குமார் தயாராகி வந்த நிலையில், தனது நண்பர் பார்த்திபனுடன் அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையம் அருகே அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது பார்த்திபனின் நண்பரான ஆட்டோ ஓட்டுநர் சின்ராஜ் அங்கு வந்தார். சின்ராஜ், பார்த்திபன் இருவரும் சேர்ந்து வினித் குமாரை கடுமையாக தாக்கி மதுபாட்டிலை உடைத்து கழுத்தில் குத்தியதாக தெரிகிறது. இதில் படுகாயம் அடைந்த வினித் குமார் ரத்த வெள்ளத்தில் துடித்தப்படியே சத்தம் போட்டார்.

வினித் குமாரின் சத்தம் கேட்டு ஓடி வந்த அப்பகுதி மக்கள், ரத்த வெள்ளத்தில் வினித் குமார் துடித்துக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக வினித்குமாரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

எனினும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே வினித்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வாலாஜாபாத் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெயவேல் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

மது பாட்டிலால் குத்தி கொலை செய்து விட்டு தப்பியோடிய பார்த்திபன், சின்ராஜ் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கர்ப்பமாக உள்ள தனது மனைவியை பார்க்க கேரளாவுக்கு செல்ல இருந்த நிலையில் வினித்குமார் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சிறிது நேரத்தில் தான் கணவனால் கொல்லப்படப்போவது தெரியாமல் இளம் மனைவி செய்த செயல்!!

பிரித்தானியாவில்..

பிரித்தானியாவில் கர்ப்பிணிப்பெண்ணொருவர் கணவனால் மலையிலிருந்து தள்ளிவிடப்பட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், சிறிது நேரத்தில் தான் கொல்லப்படப்போவது தெரியாமல், அந்தப் பெண் கணவனுடன் செல்பி எடுத்துக்கொண்டிருந்ததாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

மலையுச்சியிலிருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணிப்பெண் 2021ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி, தன் கணவரான அன்வருடன் (Kashif Anwar, 29) தேனிலவுக்காக ஸ்காட்லாந்திலுள்ள Arthur’s Seat என்ற மலைக்கு சென்றிருந்தார் ஃபவ்ஸியா (Fawziyah Javed, 31).

பின்னர் அவர் மலையுச்சியிலிருந்து கீழே விழுந்து இறந்ததாக கூறப்பட்டது. அவரது வயிற்றிலிருந்த ஆண் குழந்தையும் இறந்துவிட்டிருந்தது. உடற்கூறு ஆய்வில், ஃபவ்ஸியாவின் உடலில் அவர் தாக்கப்பட்டதற்கு ஆதாரமாக பல அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

முன்பு பலமுறை அன்வர் ஃபவ்ஸியாவை தாக்கியதற்கான ஆதாரங்கள் கிடைத்த நிலையில், அன்வர்தான் அவரை மலையுச்சியிலிருந்து தள்ளிவிட்டிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின்பேரில், அவர் மீது கொலைக்குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கணவனுடன் செல்பி எடுத்துக்கொண்டிருந்ததாக தகவல் இந்நிலையில், தான் சிறிது நேரத்தில் தன் கணவனாலேயே பயங்கரமான முறையில் கொல்லப்படப்போவது தெரியாமல், ஃபவ்ஸியா தன் கணவனுடன் செல்பி எடுத்துக்கொண்டிருந்திருக்கிறார்.

ஃபவ்ஸியாவின் மொபைலில், அவர் கொல்லப்பட்ட அன்று இரவு 8.06 மணி முதல் 8.30 வரை, அவர் தன் கணவரான அன்வருடன் எடுத்துக்கொண்ட செல்பிக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விமான நிறுவன ஊழியரை கொடூரமாக வெட்டிக் கொன்ற காதலி : துண்டு, துண்டாக வீசப்பட்ட உடல்!!

சென்னையில்..

சென்னை விமான நிறுவன ஊழியர் ஒருவர் தனது காதலியால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 29 வயதான ஜெயந்தன் என்ற நபர் சென்னையில் தனது சகோதிரி வீட்டில் தங்கியிருந்திருக்கிறார்.

மேலும் இவர் சென்னை விமான நிலையத்தில் கடந்த 5 வருடங்களாக பணியாற்றி வருவதாக தெரிய வந்துள்ளது. கடந்த மார்ச் 18ம் திகதி ஜெயந்தன் தனது சகோதரியிடம் ஊருக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் ஜெயந்தன் ஊருக்கு போய் சேரவில்லை.

மேலும் அவரது சகோதரி அவரை தொடர்பு கொள்ள முயன்ற போது போன் சுவிச் ஆப் என வந்திருக்கிறது. சந்தேகத்தின் பேரில் ஜெயந்தனை காணவில்லை என காவல்துறையில் அவரது சகோதரி புகார் அளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து விசாரணையை துவங்கிய பழவந்தாங்கல் காவல்துறை ஜெயந்தனின் செல்போன் டவரை வைத்து கடைசியாக அவர் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் இருந்ததாக காட்டியுள்ளது.

இதனையடுத்து பொலிஸார் அங்கு சென்று விசாரணை நடத்தி சந்தேகத்தின் பேரில் பாக்கியலட்சுமி(38) என்ற பெண்ணை கைது செய்துள்ளனர். பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள அந்த பெண் தனக்கு எதுவும் தெரியாது என கூறியுள்ளார்.

பாக்கிய லட்சுமியை பொலிஸார் நடத்திய தொடர் விசாரணையில் ஜெயந்தனை கொலை செய்து விட்டதாகவும், உடலை துண்டு துண்டாக கூறு போட்டு கடந்த மாதம் 20 மற்றும் 26 ஆகிய தேதிகளில் கட்டைப் பை, சூட்கேஸ் ஆகியவற்றில் உடல் துண்டுகளை எடுத்து கொண்டு செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் கடற்கரை அருகே குழி தோண்டி புதைத்து விட்டதாக பொலிஸாரிடம் திடுக்கிடும் தகவலை கூறியுள்ளார்.

மேலும் தனக்கு புதுக்கோட்டையை சேர்ந்த சங்கர் மற்றும் கோவளத்தை சேர்ந்த வேல் முருகன் ஆகியோர் உதவியதாகவும் கூறியுள்ளார். பாலியல் தொழிலில் இருந்த தன்னை ஜெயந்தனுக்கு ஏற்கனவே தெரியும் என்றும் நாங்கள் ரொம்ப நாளாக பழகி வந்தோம் எனவும் கூறியுள்ளார்.

மேலும் அவர்கள் கடந்த 2020 ஆண்டில் விழுப்புரத்திலுள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்துள்ளனர். 2021 ஆண்டு அவரை விட்டு பிரிந்து விட்டதாக கூறிய பாக்கியலட்சுமி, அதன் பின் சில தினங்களுக்கு முன் வந்து ஜெயந்தன் தன்னை தொல்லை செய்ததாக கூறியுள்ளார்.

இதனால் தான் அவரை கொலை செய்தேன் என பாக்கியலட்சுமி ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் ஜெயந்தன் உடலை கோவளம் கடற்கரையில் புதைத்த இடத்தை அடையாளம் காட்டுவதாகவும் கூறியுள்ளார்.

ஆண் நண்பர்களை ஏவி தன் மீது ஆசிட் வீசச் சொன்ன பெண்… விசாரணையில் வெளியான அதிர்ச்சி!!

கன்னியாகுமரியில்..

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண்மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவத்தில் தனது ஆண் நண்பரை ஏவி, தன் மீது ஆசிட் வீச சொன்னது காவல்துறை விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே பெண்மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக கடன் வழங்கியர்களிடமிருந்து தப்பிக்க தனது ஆண் நண்பரை ஏவி ஆசிட் வீச சொன்னது காவல்துறை விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே மாடத்தூர்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் லதா (46). இவர் சித்திரங்கோடு அருகே அரசி மில் நடத்தி வருகிறார். கடந்த 31ஆம் தேதி லதா தனது மில்லிருந்து உண்ணியூர்கோணம் பகுதியில் பேருந்திலிருந்து வந்து இறங்கி வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் லதா மீது ஆசிட் வீசிவிட்டு தப்பிச் சென்றனர்.

இதில் படுகாயமடைந்த லதா வலியால் கதறிய சத்தகம் கேட்டு, அப்பக்கத்தினர் லதாவை மீட்டு குலசேகரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த சம்பவம் குறித்து குலசேகரம் காவல்துறையினர் 2 தனிப்படை அமைத்து, குலசேகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடிவந்தனர். மேலும் போலிஸார் நடத்திய விசாரணையில், லதா மீது சந்தேகமடைந்த போலிஸார், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த லதாவிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சுமார் 35 லட்சம் ரூபாய் கடன் இருந்ததாகவும், கடன் வழங்கியர்களிடமிருந்து தப்பிக்க தனது ஆண் நண்பரான முதலார் பகுதியை சேர்ந்த ஜெஸ்டின் கிருமாதாஸ் என்பவருடன் சேர்ந்து ஆசிட் வீச்சு நாடகத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து ஆண் நண்பர் முதலார் பகுதியை சேர்ந்த ஜெஸ்டின் கிருபாதாஸ் (52), அவருக்கு உதவிய ஜெஸ்டின் ராபின் (39), ஷாஜின்(23), அர்ஜூன் குமார் (24) ஆகியோரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். கடன் தொல்லையிலிருந்து தப்பிக்க ஆசிட் வீச்சு நாடகத்தில் ஈடுபட்டபெண்ணால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

தவறான பழக்கத்தால் பட வாய்ப்பை இழந்த ஸ்ரீ திவ்யா.. வெளிவரும் தகவல்கள்!!

ஸ்ரீ திவ்யா..

2013 -ம் ஆண்டு வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை ஸ்ரீ திவ்யா.

இதையடுத்து இவர் வெள்ளைக்கார துறை, ஜீவா, காக்கி சட்டை என பல ஹிட் படங்களில் நடித்து வந்த இவர் சில காலங்களா பட வாய்ப்பு குறைந்து சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.

பிஸியாக சினிமாவில் நடித்து வந்த ஸ்ரீ திவ்யா மது பழக்கத்திற்கு அடிமை ஆகிவிட்டாராம். இதனால் பல பட வாய்ப்பை இழந்தாராம்.

தற்போது இந்த பழக்கத்தில் இருந்து மீண்டு வந்த ஸ்ரீ திவ்யா, திரைப்படங்களில் கவனம் செலுத்துவதாக பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

மனைவி குத்தி கொலை.. 2 வயது மகனை முதலைக்கு போட்ட கொடூர தந்தை!!

அமெரிக்காவில்..

அமெரிக்காவின் புளோரிடாவில் தனது தாய் கொல்லப்பட்டதையடுத்து வெறித்தனமான தேடுதலுக்கு பிறகு 2 வயது சிறுவனின் சடலம் ஒரு முதலையின் வாயில் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் காவல்துறைத் தலைவர் அந்தோனி ஹோலோவே மேலும் கூறுகையில், சிறுவனின் தந்தை, 21 வயதான தாமஸ் மோஸ்லி மீது 20 வயதான மனைவி பஷூன் ஜெஃப்ரி மற்றும் 2 வயது மகன் டெய்லன் மோஸ்லியை கொன்றதற்காக இரண்டு முதல்-நிலை கொலைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுள்ளது என்று கூறினார்.

டைவ் டீம்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட தேடுதல் குழுவினர், இந்த வார தொடக்கத்தில் சிறுவனின் தாயின் உடல் அவர்களின் குடியிருப்பில் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து, சிறுவன் எங்கும் காணப்படவில்லை என்பதால், சிறுவனை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு சிறுவனை போலீசார் கண்டெடுத்தனர். அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து சில மைல் தொலைவில் உள்ள ஒரு ஏரியில் குறுநடை போடும் குழந்தையைத் தேடிய அதிகாரிகள், “வாயில் ஒரு பொருளுடன்” ஒரு முதலை இருப்பதைக் கவனித்தனர், அது ஒரு குழந்தையின் உடல் என்பதை அவர்கள் விரைவாக உணர்ந்தனர், பின்னர் முதலையின் மீது துப்பாக்கியால் சுட்டனர், அது உடலை கீழே தள்ளியது.

“எங்களால் டெய்லனின் உடலை அப்படியே மீட்டெடுக்க முடிந்தது, முதலை கருணைக்கொலை செய்யப்பட்டது.’’ என்று போலீசார் கூறினர். தந்தை தாமஸ் மோஸ்லி தனது கைகளில் வெட்டுக் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், மேலும் விசாரணை அதிகாரிகளிடம் அவர் பேச மறுத்துவிட்டார் என்று காவல்துறை தலைவர் ஹோலோவே கூறினார்.

CVS கடையில் பணிபுரிந்த தாய் ஜெஃப்ரி மற்றும் அவரது மகனை கடைசியாக கடந்த புதன் மாலை 5:20 மணியளவில் குடும்ப உறுப்பினர்கள் பார்த்ததாக கூறினர். அதே நாளில் இரவு 8.30 மணியளவில் அவர்களது குடியிருப்பின் அருகே உரத்த சத்தம் கேட்டது என அக்கம்பக்கத்தினர் கூறியுள்ளனர்.

அடுத்த நாள், ஜெஃப்ரியின் தாய் தனது மகளிடம் இருந்து எந்த தகவலும் இல்லாததால் அடுக்குமாடி குடியிருப்பு வளாக மேலாளரை தொடர்பு கொண்டார். அதைத் தொடர்ந்து போலீசார் வரவழைக்கப்பட்டனர்.

மனைவி ஜெஃப்ரியை தாமஸ் மோஸ்லி பலமுறை குத்தி கொன்றது தெரியவந்தது. சிறுவன் டெய்லன் மோஸ்லி எவ்வாறு கொல்லப்பட்டார் அல்லது முதலை அதில் ஏதேனும் பங்கு வகித்ததா என்பதை இன்னும் போலீசார் தெரிவிக்கவில்லை.

கிரிக்கெட் போட்டியில் ‘No Ball’ சிக்னல் காட்டிய நடுவரை கொலை செய்த நபர்!!

ஒடிசாவில்..

ஒடிசாவில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, “நோ பால்” சிக்னல் காட்டிய நடுவரை, இளைஞர் ஒருவர் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசாவின் கட்டக் பகுதியிலுள்ள இளைஞர்களிடையே நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் பிரமாபூர், சங்காபூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த இரு அணிகள் விளையாடியுள்ளன.

அப்போது போட்டியில் நடுவராக இருந்த லக்கி ராட்(Lucky Raut) என்பவர் “நோ பால்” சிக்னல் காட்டியதாக கூறப்படுகிறது. அங்கு விளையாடிக்கொண்டிருந்த சுமிருதி ரஞ்சன் ரூட்(Smruti Ranjan Rout) என்ற நபர் நடுவரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இருவருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த ரஞ்சன் ரூட் கோபத்தில் தன் பாக்கெட்டில் வைத்திருந்த கத்தியை எடுத்து நடுவரைக் குத்தியதாக சம்பவத்தை நேரில் பார்த்த நபர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

உடனே அங்கிருந்தவர்கள் லக்கி ராட்டை அருகிலிருக்கும் சீ.பி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். லக்கி ராட்டை சோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கட்டாக் காவல்துறை இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளது.

ஆற்றில் மகனுக்கு நீச்சல் பயிற்சி கொடுத்த தந்தை.. இருவருக்கும் நேர்ந்த சோகம்!!

கேரளாவில்..

ஆற்றில் நீச்சல் பயிற்சி மேற்கொண்டபோது தந்தை மற்றும் 6 வயது மகன் ஆற்றில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் கேரளாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை அடுத்துள்ளது கொட்டியூர்.

இதன் அருகே கேளகம் என்ற கிராமம் உள்ளது. இங்கு லிஜோ ஜோஸ் (33) என்பவர் வசித்து வருகிறார். தனியார் கோல்டு நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஸ்டெபி என்ற பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமானது.

ஸ்டெபி UAE-யில் வேலை செய்து வருகிறார். தற்போது இந்த தம்பதிக்கு நெபின் ஜோசப் என்ற 6 வயது மகனும், ஷிவானி என்ற 4 வயது மகளும் உள்ளனர். இதில் மகன் நெபின் அந்த பகுதியிலுள்ள பள்ளி ஒன்றில் UKG பயின்று வருகிறார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று லிஜோ ஜோஸ் தனது பகுதியின் அருகே இருக்கும் பாவலி ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது 6 வயது மகனும் அவருடன் சென்றுள்ளார். அங்கே தனது மகனுக்கு நீச்சல் சொல்லிக்கொடுக்க முயன்றுள்ளார் தந்தை லிஜோ. அதன்படி அந்த தற்காலிக தடுப்பணை ஒன்று உள்ளது.

அந்த பகுதியில் வைத்து தனது மகனுக்கு நீச்சல் சொல்லி கொடுத்துக் கொண்டிருந்துள்ளார். அந்த சமயத்தில் சிறுவன் எதிர்பாராத விதமாக ஆற்றில் இருந்த சேற்றில் மகன் சிக்கியுள்ளார்.

உடனே அவனை காப்பாற்ற லிஜோ ஜோஸ் முயற்சித்தார். ஆனால் அந்த சேற்றில் தந்தையம் சிக்கவே அதில் இருந்து இருவரும் மீள முயன்றனர். இருப்பினும் அது தோல்வியில் முடிந்தது. இதனால் காப்பாற்றும்படி இருவரும் கத்தி கூச்சலிட்டுள்ளனர்.

அவர்கள் சத்தத்தை கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், இருவரையும் மீட்டனர். பின்னர் அவர்களை அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கே இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் அந்த சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தால் அவரது குடும்பம் பெரும் சோகத்தில் மூழ்கியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த ஆற்றுக்கு மக்கள் செல்ல கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஆற்றில் நீச்சல் பயிற்சி மேற்கொண்டபோது தந்தை மற்றும் 6 வயது மகன் ஆற்றில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் கேரளாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பானிப்பூரி சாப்பிட்டதால் இளம்பெண் பலியான சோகம்… அதிர்ச்சியில் உறவினர்கள்!!

சென்னையில்..

சென்னை: எந்தெந்த உணவுப்பொருட்களில் எதை எதை கலக்குகிறார்களோ என மக்கள் பயந்து கொண்டிருக்கும் நிலையில், பானிப்பூரி சாப்பிட்ட இளம்பெண் சிறிது நேரத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இளம்பெண் உயிரிழக்க உண்மையிலேயே பானிப்பூரி சாப்பிட்டதுதான் காரணமாக என போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். அப்பெண்ணின் உடல் பிரேதப்பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டிருக்கும் நிலையில், அதன் அறிக்கைக்காக போலீஸார் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சமீபகாலமாக உணவுகளில் கலப்படம் என்பது மிகவும் சாதாரணமாக மாறிவிட்டது.. சென்னை ஹோட்டல்களில் மட்டன் பிரியாணியில் ஆடுகளுக்கு பதிலாக தெரு நாய்களையும், பூனைகளையும் போட்டு சமைத்த செய்திகள் அண்மையில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சமீபத்தில் கூட, கேரளாவில் கெட்டுப்போன இறைச்சியில் செய்த சிக்கன் ஷவர்மாவை சாப்பிட்ட கல்லூரி மாணவி இறந்து போனார். இதுதவிர, சிக்கன் ரைஸ் சாப்பிட்ட இளைஞர் பலி, சிக்கன் தந்தூர் சாப்பிட்ட சிறுமி பலி என்பன போன்ற செய்திகள் அதிர வைப்பதாக உள்ளன.

இவ்வாறு உணவுக் கலப்படங்கள், உயிர்ப்பலி வரை கொண்டு செல்லும் சூழலில், தற்போது ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மோனிஷா. 23 வயது ஆகிறது.. இவர் நேற்று காலை தனது நண்பர்களுடன் சென்னையை சுற்றிப் பார்க்க வந்துள்ளார்.

பின்னர் மெரினா கடற்கரைக்கு அவர்கள் சென்று விளையாடியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, மெரினா கடற்கரையில் விற்கப்பட்ட சுண்டல், பானிப்பூரி போன்றவற்றை மோனிஷா சாப்பிட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, கடற்கரை மணலில் அமர்ந்து சிறிது நேரம் நண்பர்களுடன் பேசிவிட்டு, பீச் ரயில் நிலையத்துக்கு சென்று திருவான்மியூர் செல்வதற்காக அவர்கள் பறக்கும் ரயிலில் ஏறியுள்ளனர்.

இந்நிலையில், மயிலாப்பூர் ரயில் நிலையம் அருகே வந்த போது, திடீரென மோனிஷா வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். இதனால் பதறிபோன நண்பர்கள், அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு மோனிஷாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதை கேட்ட அவரது நண்பர்கள் கதறி அழுதனர். பின்னர் தகவலறிந்த போலீஸார் அங்கு வந்து மோனிஷாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிரிழப்பதற்கு முன்பு பானிப்பூரி, சுண்டலை தான் மோனிஷா சாப்பிட்டார். ஒருவேளை, அதுதான் அவரது உயிரிழப்புக்கு காரணமா என போலீஸார் விசாரித்து வருகிறார்கள். பிரேதப்பரிசோதனை அறிக்கை வந்தால்தான் உண்மை தெரியவரும்.

வறுமையில் குடும்பம்.. இன்ஸ்டாகிராமில் பணத்தை இழந்த மாணவி எடுத்த விபரீத முடிவு!!

சென்னையில்..

இன்ஸ்டாகிராம் மூலம் வந்த பிரபலமான விளம்பரங்களை பார்த்து ஆன்லைன் டிரேடிங்கில் பணத்தை இழந்ததால் மன உளைச்சலில் மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை 7 கிணறு போர்ச்சுகீஸ் சர்ச் தெரு பகுதியில் வசித்து வருபவர் சாந்தி. இவர் கணவரைப் பிரிந்து ஜோசப் என்பருடன் வாழ்ந்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

மூத்த மகள் மகாலட்சுமி அண்ணா அதர்ஸ் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இரண்டாவது மகள் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் ஆவார். இந்த சூழலில் சாந்தி கடந்த 15 வருடமாக amway products விற்பனை செய்து வந்துள்ளார்.

ஆனால் அதில் நஷ்டம் அடைந்த காரணத்தினால் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இதனால் தாய்க்கு உதவ நினைத்துள்ளார் மகாலட்சுமி. அந்த சமயத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வந்த விளம்பரம் ஒன்றை பார்த்துள்ளார்.

அதனை நம்பிய இவர், ஆன்லைன் டிரேடிங் செய்வதற்காக முயற்சி செய்துள்ளார். அது மோசடி இணையதளம் என்று தெரியாமல் ஆன்லைன் டிரேடிங்கில் சுமார் 30 ஆயிரம் ரூபாய் தாயின் பணத்தை முதலீடு செய்து சம்பாதிக்கலாம் என நினைத்துள்ளார். ஆனால் அதில் போட்ட பணம் திரும்பக் கிடைக்காததால் மாணவி மகாலட்சுமி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பணத்தை இப்படி நம்பி ஏமாந்து விட்டோமே, தாய்க்கு என்ன கூறுவது என்று யோசித்து யோசித்து மன உளைச்சலில் இருந்துள்ளார். நேற்று இரவு முழுவதும் பணத்தை இழந்த அதிர்ச்சியில் தூங்காமல் இருந்த கல்லூரி மாணவியை பெற்றோர்கள் தூங்கச் சொல்லி உள்ளனர்.

இந்த நிலையில் இன்று காலை நீண்ட நேரமாகியும் மகாலட்சுமி எழுந்திருக்கவில்லை. இதனால் அவரது தாய் அவரை எழுப்பச் சென்றுள்ளார். அப்போது வீட்டின் நடுப்புறம் உள்ள மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் மகாலட்சுமி இறந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியேயடைந்த பெற்றோர் அக்கம்பக்கத்தினரை அழைத்தனர்.

தொடர்ந்து இதுகுறித்து போலிசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் மாணவி மகாலட்சுமியின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பினர். மேலும் அவரது செல்போன் உள்ளிட்ட உடமைகளை கைப்பற்றினர். அப்போதுதான் அவர் ஆன்லைன் டிரேடிங்கில் 30 ஆயிரம் பணத்தை இழந்தது தெரியவந்தது.

மேலும் இது அவரது குடும்பத்தினருக்கு தெரிந்தால் பிரச்சனையாகிவிடும் என்பதற்காக பயத்தில் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது. தொடர்ந்து இதுகுறித்து முத்தையால் பேட்டை போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கல்லூரி மாணவியின் தற்கொலைக்கு ஆன்லைன் டிரேடிங் பணம் இழந்தது தான் காரணமா? இல்லை வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்ற கோணத்திலும் போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தாய்க்கு உதவ வேண்டும் என்று நினைத்த கல்லூரி மாணவி ஆன்லைன் மூலம் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தந்தையின் கண் முன்பே குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்!!

கரூரில்..

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருப்பதி நகர் பகுதியை சேர்ந்த ஐடி ஊழியரான சரவணன் – மோகனா தம்பதியருக்கு இரண்டு மகன்கள். நேற்று மதியம் பள்ளி முடிந்து வீடு திரும்பிய மூத்த மகனை கூட்டிச் செல்ல வீட்டு வாசல் கதவை நீக்கி சரவணன் வெளியே வந்துள்ளார்.

அப்போது இரண்டாவது மகன் சாய் மிதுன் என்ற ஒன்றரை வயது குழந்தை வராண்டாவில் விளையாடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக பள்ளி வாகனத்தின் முன்பு குறுக்கே ஓடியபோது தந்தையின் கண் முன்பே குழந்தையின் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தான்.

விபத்து குறித்து தகவல் அறிந்த தாந்தோணிமலை போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, தனியார் பள்ளியின் வேன் மற்றும் ஓட்டுநரை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

வீட்டு வாசலிலேயே பள்ளி வாகனத்தில் மோதி ஒன்றரை வயது குழந்தை பலியான சம்பவம் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கா. பரமத்தி அருகே முன்னாள் சென்ற லாரி மீது பைக் மோதி விபத்தில் ஒருவர் சாவு குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் சங்கிலி முத்து மகன் அருண்குமார். லாரி ஓட்டுனரான இவர் திருச்சியில் இருந்து புறப்பட்டு கரூர் கோவை தேசிய நெடுஞ்சாலையில் லாரியை இயக்கியுள்ளார்.

புதுக்கனல்லி அருகே சென்ற போது கா. பரமத்தி அடுத்த விஸ்வநாதபுர கிழக்குத் தெருவை சேர்ந்த காளிமுத்து மகன் அரவிந்த் இயக்கி வந்த பைக் முன்னால் சென்ற லாரி மீது பைக் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த அரவிந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்தவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து கா. பரமத்தி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணராயபுரம் அருகே திருமணமாகாத விரக்தியில் கூலி தொழிலாளி பூச்சி மருந்து குறித்து தற்கொலை செய்து கொண்டார். கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் திருக்காம்புலியூர் ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டு திருக்காம்புலியூரை சேர்ந்த மணிவேல் மகன் செந்தில்குமார் கூலி தொழிலாளி இவர் திருமணம் ஆகாத விரக்தியில் தலை வீட்டில் விவசாய பயன்பாட்டிற்கு வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை மதுவில் கலந்து கொடுத்துள்ளார்.

அருகில் இருந்தவர்கள் அவரை விட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு இரவு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தால் இது குறித்து அவரது தம்பி துரைராஜ் கொடுத்த புகாரின் பேரில் மாயனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

IAS அதிகாரி கேட்ட வரதட்சணை.. திருமணம் வேண்டாம் என ஓடிய பல பெண்கள்.. இறுதியில் நடந்த திருப்பம்!!

பேராவூரணியில்..

பேராவூர்யணி அருகில் ஒட்டங்காடு என்ற ஒரு கிராமத்தில் வசிப்பவர் IAS அதிகாரி சிவகுரு பிரபாகரன். இவர் படிப்பு முடிந்த நிலையில் பெற்றோர்கள் திருமணத்திற்காக பல படித்த பெண்களை பார்த்துள்ளனர்.

இவருக்கு யாரையும் பிடிக்கவில்லை. ஏனென்றால் இவருக்கு தனது மனைவியாக வருபவர் ஒரு வைத்தியராக இருக்க வேண்டும் என்பதே ஆசை ஆகும். எனவே இவருக்கு வைத்தியரான பல பெண்களை பார்த்துள்ளனர். இருப்பினும் இவர் கேட்ட வரதட்சனைக்கு யாரும் கைக்கூடி வரவில்லை.

தன்னை திருமணம் செய்யும் பெண்களிடம் இவர் வரதட்சணையாக அவர் வசிக்கும் இடத்திற்கும் அதை சுற்றியுள்ள இடத்திற்கும் வாரத்திற்கு இரண்டு நாட்கள் இலவசமாக வைத்தியம் பார்க்க வேண்டும் என்று கேட்டுள்ளார். இதனை கேட்ட எவரும் இவரை திருமணம் செய்வதற்கு முன்வரவில்லை.

பின்னர் சமீபத்தில் இவருடைய வரதட்சணைக்கு ஒப்புக் கொண்ட கிருஷ்ணபாரதி என்ற பெண்ணுடன் கோலகலமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. இது இணையத்தில் வைரலாகி வருவதால் பல நெட்டிசன்கள் இவரது நல்ல எண்ணத்தை பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியா இறம்பைக்குளம் கருமாரி ஸ்ரீ நாகபூசணி ஆலய பங்குனி உத்தரமும் தீமிதிப்பும் (படங்கள்,வீடியோ)

வவுனியா இறம்பைக்குளம் கருமாரி ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலய பங்குனி உத்தரமும் தீமிதிப்பு நிகழ்வும் நேற்று (05.04.2023) புதன்கிழமை இடம்பெற்றது.

காலையில் பக்தர்கள் வவுனியா கோவில் குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலில் இருந்து பாற்குட பவனியாக ஹொரவப்பொத்தான வீதி ஊடாக ஆலயத்தை வந்தடைந்தனர்.

பிற்பகல் அபிசேகம் வீதி உலா என்பன இடம்பெற்று மாலை தீமிதிப்பு உற்சவம் இடம் பெற்றது. காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் தீ மிதிக்கும் உற்சவத்தில் பங்கு பற்றியிருந்தனர்.அம்பாள் வசந்த மண்டப பூஜையின் பின் உள்வீதி வெளிவீதி சிம்ம வாகனத்தில் வலம்வந்து ஆலயத்துக்கு முன்புறம் தீமிதிப்புக்ககாக தயார் செய்யபட்ட பகுதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாட்சி வழங்க தயாரான நிலையில் அம்பாளின் பக்தர்கள் கடும் நெருப்பு கொண்ட குழியை தமது நேர்த்திகளை நிறைவேற்ற அருள்புரியுமாறு அம்பாளை வேண்டிபாடி தீமிதித்து சென்றனர் .

வருடாந்தம் நடைபெறும் இந்நிகழ்வில் காப்பு கட்டி விரதமிருந்த அடியார்களே தீமிதிப்புக்கு அனுமதி வழங்கப்படுவது வழமையாகும்.

கணவனின் கொடுமை தாங்காமல் திருமணமான 4 மாதத்தில் மனைவி எடுத்த விபரீத முடிவு!!

மதுரையில்..

மதுரை திருப்பாலை பசும்பொன் நகரைச் சேர்ந்த அருணாதேவி என்ற இளம்பெண்ணுக்கும், திருமங்கலத்தை சேர்ந்த அருண்குமார் என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றது.

பெற்றோர் பார்த்து திருமணம் நடத்திவைத்தனர். திருமணத்தின் போது 38 பவுன் தங்க நகையினை அருணாதேவிக்கு அவரது பெற்றோர் கொடுத்துள்ளனர். திருமணத்துக்கு பிறகு நாகையாபுரத்தில் அருண்குமார்- அருணாதேவி தம்பதி வசித்து வந்துள்ளனர்.

இந்தநிலையில் கடந்த பிப்ரவரி மாதம் அருணாதேவிக்கு திடீரென வலிப்பு நோய் வந்துள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அருணாதேவி சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார்.

ஆனால் அவரது கணவர் அருண்குமாரோ, வலிப்பு நோயுடன் உள்ள பெண்ணுடன் வாழ முடியாது என தகராறில் ஈடுபட்டுள்ளார். எவ்வளவு பேசியும் மாப்பிள்ளை தகராறு செய்ததால் அருணாதேவி தனது பெற்றோருடன் சென்றுவிட்டார். அதன்பிறகு மனைவி அருணாதேவியுடன் செல்போன் மூலம் பேசுவதை அருண்குமார் திடீரென நிறுத்திக் கொண்டார்.

இதுகுறித்து அவரிடம் சென்று பெண்ணின் வீட்டார் கேட்டபோது, மீண்டும் சேர்ந்து வாழவேண்டும் என்றால் 10 லட்ச ரூபாய் வாங்கி வரும்படி சொன்னதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே கணவரைப் பிரிந்த மனவேதனையில் இருந்த அருணாதேவி, சேர்ந்து வாழ வரதட்சணை பணம் கேட்ட கணவரின் செயலால் மேலும் வேதனை அடைந்தார்.

இந்தநிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அருணாதேவி தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த திருப்பாலை போலீஸார் அருணாதேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

இந்நிலையில் வரதட்சணை கேட்டு தனது மகளை தற்கொலைக்கு தூண்டிய அருண்குமார், அவரது தந்தை ராஜகோபால் மற்றும் உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி பெருமாள் புகார் அளித்துள்ளார். திருமணமான 2 மாதத்தில் வரதட்சணை கேட்டதால் மனமுடைந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெற்றோர் கண் முன்னே சோகம்.. நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்!!

சென்னையில்..

சென்னை ஓட்டேரி பகுதியை சேர்ந்த குப்தா என்பவரின் மகன் தேஜஸ், பெரியமேடு பகுதியில் உள்ள மைலேடிஸ் நீச்சல் குளத்தில் கடந்த 10 நாட்களாக நீச்சல் பயிற்சி பெற்றுவந்தார். சிறுவனுக்கு சிலர் பயிற்சியும் அளித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை 6:30 மணி அளவில் 7 வயது நிரம்பிய சிறுவன் தேஜஸ் குப்தா நீச்சல் குளத்தில் நீச்சல் பயிற்சியாளர்கள் இருவரின் மேற்பார்வையில் வழக்கம்போல் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது தேஜஸ் தீடீரென நீரில் மூழ்கினார். அவரை உடனிருந்தவர்கள் மீட்டு உதவி அளித்தனர்.

ஆனால் சிறுவன் மயக்க நிலையிலேயே இருந்ததால் உடனடியாக ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்தனர்.

நீச்சல் குளத்தில் இரண்டு பயிற்சியாளர்கள் உடனிருந்தும் சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து பெரிய மேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.