வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் தேர்த் திருவிழா!

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த தேர் திருவிழா கடந்த செவ்வாய் கிழமை (04/04//2023) இடம்பெற்றது. அதிகாலை 5.30 மணிக்கு சிவஸ்ரீ ரஞ்சித் செல்வானந்த குருக்கள்(ஆலய பிரதம குரு) தலைமையில் அபிசேகங்கள் ஆரம்பமாகி கும்ப பூஜை காலை 7.00 மணியளவில் இடம்பெற்று மூலஸ்தான பூஜையும் அதனை தொடந்து காலை 7.45 மணிக்கு தம்ப பூஜையும் இடம்பெற்றன. தொடர்ந்து காலை 9.00 மணிக்கு வசந்த மண்டபூஜை ஆரம்பமாகி 8.30 மணிளவில் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர், விநாயகர் வள்ளி தெய்வயானை சமேத முருகப்பெருமான் ஆகியோர் உள்வீதி வலம் வந்து 10.00 மணியளவில் தேரில் ஆரோகணிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய சிவாலயமாக விளங்கும் வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த தேர்பவனி காலை 10.30மணிக்கு ஆரம்பமாகி இருப்புக்கு காலை 11.30 மணியளவில் வந்து சேர்ந்தது. மேற்படி உற்சவத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து இருந்தனர். தேர் இருப்பிடத்தை அடைந்தபின் அர்ச்சனைகள் இடம்பெற்று பிற்பகல் 2.00 மணியளவில் பச்சை சாத்தும் நிகழ்வு இடம்பெற்றதுடன் .தொடர்ந்து 2.30 மணியளவில் பிராயசித்த அபிசேகமும் இடம்பெற்றது.

 

கிழக்கில் மதங்களை கடந்து இணைந்த இதயங்கள் : இந்து இளைஞனை மணந்த இஸ்லாமிய யுவதி!!

கிழக்கு மாகாணத்தில்..

கிழக்கு மாகாணத்தில் இஸ்லாமிய யுவதி ஒருவர் இது மத இளைஞரை திருமணம் செய்த புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.

இரு வீட்டாரின் சம்மதத்துடன் வந்தாறுமமூலை ஆலயத்தில் தம்பதிகளின் திருமணம் மிக கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்தது.

ஏறாவூரை சேர்ந்த பாத்திமா அப்ஸா எனும் யுவதியே இவ்வாறு இந்து மத்திற்கு மாறி வந்தாறுமூலையை சேர்ந்த கந்தசாமி முருகன் என்பவரை திருமணம் செய்துள்ளார்.

இவர்களின் திருமணத்திற்கு பௌத்த துறவி ஒருவரும் கலந்து கொண்டு ஆசிகளை வழங்கியுள்ளார். மூவின நல்லிணக்கத்தை பிரதிபலிக்கும் விதமாக இத்திருமணம் அமைத்துள்ளது.

இந்நிலையில் தம்பதிகளின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவரும் நிலையில், மண மக்களுக்கு பலரும் வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.

மீண்டும் அதிகரிக்கும் தங்கத்தின் விலை : இன்றைய தங்க நிலவரம்!!

தங்கத்தின் விலை..

நாட்டில் நாளாந்தம் நிகழும் பொருளாதார மாற்றத்தின் காரணமாக தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் மாற்றமடைந்து வருகின்றது.  இந்தநிலையில், கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையானது வீழ்ச்சியடைந்து வந்தநிலையில், இன்றையதினம் சற்று அதிகரித்துள்ளது.

இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 647,221 ரூபாவாக காணப்படுகின்றது. இந்த நிலையில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 182,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 167,500 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 159,900 ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது. எனினும், ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 22,840 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 20,940 ரூபாவாகவும், 21 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 19,990 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

வெட்டி துண்டாக்கப்பட்ட 21 வயது யுவதியின் கை : பல மணிநேர போராட்டத்தில் தென்னிலங்கை வைத்தியர்களுக்கு கிடைத்த வெற்றி!!

கேகாலையில்..

கேகாலை பொது வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை நிபுணர்கள் குழுவினர் உடலில் இருந்து துண்டிக்கப்பட்ட கையை வெற்றிகரமாக இணைத்து சாதனை படைத்துள்ளனர்.

கேகாலை பொது வைத்தியசாலையின் நிபுணத்துவ சத்திரசிகிச்சை நிபுணர் ஆனந்த ஜயவர்தன உள்ளிட்ட வைத்திய குழுவினர், இவ்வாறு கையை வெற்றிகரமாக பொருத்தியுள்ளனர்.

கேகாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலபால, நீலபாலகம்மன பிரதேசத்தில் ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் 21 வயதுடைய திருமணமாகாத யுவதியின் கை குடும்ப தகராறு காரணமாக கை முழங்கைக்குக் கீழே வெட்டப்பட்டு கை தரையில் விழுந்துள்ளது.

இதன்போது உடனடியாக துண்டிக்கப்பட்ட கையை ஐஸ் கட்டிகளுடன் பொலித்தீன் பையில் சுற்றிவாறு, காயமடைந்த பெண்ணை உடனடியாக அயலவர்கள் கேகாலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இதன்போது கேகாலை பொது வைத்தியசாலையின் விசேட சத்திரசிகிச்சை நிபுணர் ஆனந்த ஜயவர்தன உள்ளிட்ட வைத்தியர்கள் குழுவினர் நேற்று (05) இரவு 9 மணி முதல் அதிகாலை 1 மணி வரை சத்திரசிகிச்சை மேற்கொண்டு கையை வெற்றிகரமாக இணைத்துள்ளனர்.

சத்திரசிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்ததையடுத்து, அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள யுவதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழில் மின்சாரம் தாக்கி மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம்!!

யாழில்..

யாழ்ப்பாணம் – கொக்குவிலில் 17 வயது மாணவன் ஒருவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் இன்றைய தினம் (06.04.2023) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொக்குவில் இந்துக் கல்லூரியில் உயர்தரம் பயின்று வரும் கொக்குவில் குளப்பிட்டியைச் சேர்ந்த மோகனதாஸ் கிஷோத்மன் என்ற (17 வயது) மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

குறித்த மாணவன் மின்னழுத்தியினை மின் பிறப்பாக்கியுடன் இணைக்க முற்பட்டவேளை மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த மாணவனின் சடலம் யாழ். போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. மாணவனின் உயிரிழப்பு தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

காலநிலை தொடர்பில் இலங்கை மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

இலங்கையில்..

வளிமண்டலவியல் திணைக்களத்தின் தகவலின் படி, இன்று முதல் ஏப்ரல் 15 ஆம் திகதி வரை சூரியன் இலங்கையின் அட்சரேகைகளுக்கு மேல் நேரடியாக இருக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று (06) தல்பே, வலிப்பிட்டிய மற்றும் திஹகொட ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.13 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக வளிமண்மலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கடும் வெப்பமான காலநிலையைக் கருத்தில் கொண்டு சுகாதாரத் துறையினர் சுகாதார நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் பத்மநாபாவின் சிலை திறந்து வைப்பு!!

பத்மநாபாவின் சிலை..

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் பத்மநாபாவின் சிலை திறப்புவிழா நிகழ்வு இன்று (05.04) இடம்பெற்றது. வவுனியாவில் புதிதாக நிறுவப்பட்ட சிலையடியில் குறித்த நிகழ்கள் இடம்பெற்றது.

ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணியின் மத்தியகுழு உறுப்பினர் கே.அருந்தவராஜா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்துகொண்ட கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் சிலைக்கு மலர்மாலை அணிவித்து திரைச்சீலையை திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து ஏனைய முக்கியஸ்தர்கள், மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர்.

நிகழ்வில் தமிழீழ விடுதலைஇயக்கம், தமிழீழ மக்கள் விடுதலைகழகம், புதிய ஜனநாயக மாக்ஸ்சிச லெனினிசகட்சிகளின் முக்கிஸ்தர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் மாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன், உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், இ.இந்திரராஜா, ம.தியாகராஜா, நகரசபை முன்னாள் தவிசாளர் இ.கௌதமன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

8 முறை திருமணம் செய்து கொண்ட 75 வயது முதியவர் : வியந்து பார்க்கும் நெட்டிசன்கள்!!

இங்கிலாந்தில்..

75 வயதான முதியவர் ஒருவர் 8முறை திருமணம் செய்து கொண்ட சம்பவம் தற்போது அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது. ஒருவனுக்கு ஒரு திருமணம் செய்து கொள்வதே பெரும்பாடு…

ஆனால் இங்கிலாந்தைச் சேர்ந்த 75 வயதான ரான் ஷெப்பர்ட் என்பரை 8 முறை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர் கடந்த 1996ம் ஆண்டு மார்கரெட் என்பவருடன் முதல் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இவர்கள் இருவருக்கும் 3 குழந்தைகள் பிறந்த நிலையில் இரண்டு ஆண்டுகள் கழித்து விவாகரத்து செய்து கொண்டனர். பின்னர் 1973இல் ஜீனெட் என்ற பெண்ணை திருமணம் செய்து ஒரு ஆண்டு வாழ்ந்திருக்கிறார். இப்படியே அடுத்தடுத்து திருமணம் செய்து வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் அவர் இது குறித்து தெரிவித்ததாவது, தனக்கு தனியாக வாழப்பிடிக்கவில்லை எனவும் தன்னுடைய குழந்தைகள் மற்றும் மனைவிகளுடன் ஜாலியாக வாழ்க்கையை நகர்த்தித் தான் வந்தேன். ஆனால் தற்போது என்னை விவகாரத்து செய்துவிட்டார்கள்.

இவர்கள் கொடுத்துள்ள விவாகரத்து தன்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது எனத் தெரிவிக்கிறார். இவர் இளம் வயதில் பல திருமணம் செய்து கொண்டதன் விளைவாகத்தான் தற்போது பார்கின்சன் நோய், லூயி பாடி டிமென்ஷியா, சிஓபிடி போன்ற பல நோய்களுக்கு ஆளாகியுள்ளார்.

8 பெண்களைத் திருமணம் செய்திருந்தாலும் தற்போது எல்லோரும் அவரை விட்டுச் சென்று விட்டதாகவும், பலருக்கும் நான் ஒரு உதாரணமாக வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும், அதிகமுறை திருமணம் செய்து கொண்ட நபர் இவர் தான் என அதிகாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டும் உள்ளது.

இன்ஸ்சூரன்ஸ் பணத்திற்காக சகோதரனின் மனைவி மற்றும் 2 மகன்களை கொலை செய்த நபர்!!

ஜார்கண்ட்டில்..

ஜார்கண்ட் மாநிலத்தில் சொத்து தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் சகோதரனின் மனைவி மற்றும் மகளைக் கொன்ற நபரது செயல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலம் கும்லா நகரில் சொத்து தகராறு மற்றும் காப்பீட்டுத் தொகை தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் அனோஸ் கந்துல்னா(Anos Kandulna) என்ற நபர் தனது சகோதரனின் மனைவி மற்றும் இரண்டு மருமகன்களைக் கொன்றுள்ளார்.

குடிபோதையிலிருந்த அந்த நபர் தனது சகோதரரின் மனைவியான பூனம் கண்டுல்னா (35) என்ற பெண்ணை வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியதாக கூறப்படுகிறது.

பூனத்தின் இரண்டு மகன்கள் தாயைக் காப்பாற்ற முயன்றபோது, ​​​​அனோஸ் ஆத்திரத்தில் அவர்களையும் கொன்றுள்ளார். கடந்த 2017ல் கணவரை இழந்த பூனம், லுங்காடு பத்ரா டோலி கிராமத்தில் தனது இரண்டு மகன்களான பவன் மற்றும் அர்பித் ஆகியோருடன் வசித்து வந்தார்.

அவரது மாமியார் மற்றும் அனோஸ் கந்துல்னா அதே கிராமத்தில் அருகிலுள்ள வீட்டில் வசித்து வந்துள்ளனர். பூனம் மற்றும் அவரது இரண்டு மகன்களைக் கொன்ற பிறகு, குற்றவாளி மூன்று சடலங்களையும் வீட்டிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் ஒரு மாட்டுச் சாணக் குழியில் வீசியுள்ளார்.

ஒரு வாரமாக பூனம் காணாமல் போனதனால் அவரது உறவினரான விஸ்ராம் கண்டுலானா காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். விசாரணையில், மாட்டு சாண குழியிலிருந்து இறந்தவர்களின் உடல்களை காவல்துறை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதற்கிடையில், கிராம பஞ்சாயத்தில் வழக்கை விசாரிக்கப்பட்டுள்ளது, அப்போது குற்றவாளி அந்த இடத்திலிருந்து தப்பிக்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் அருகிலிருந்த கிராமத்திலிருந்து அவரை மடக்கிப் பிடித்துள்ளனர். பின்னர் அவர் பொலிஸிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அனோஸை காவல் துறை விசாரணை செய்து வருகிறது.

பெற்றோர் கூறிய வார்த்தை.. விபரீத முடிவெடுத்த 9ஆம் வகுப்பு மாணவன்!!

சென்னையில்..

சென்னை திருவொற்றியூர் ஜோதி நகரைச் சேர்ந்தவர் பரிமளராஜ். இவருடைய 15 வயது மகன் ரிஷி, அரசு பாடசாலையில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். ரிஷிக்கு படிப்பில் அதிக நாட்டம் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் ரிஷியை சரியாக படிக்கும்படி கூறி வந்துள்ளனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் குளியல் அறைக்குள் சென்ற ரிஷி நீண்ட நேரமாக வெளியேற வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது தாய் மற்றும் சகோதரர் இருவரும் கதவை உடைத்து உள்ளே போய் பார்த்துள்ளனர்.

அப்போது ரிஷி தூக்கில் சடலமாக தொங்கியதைப் பார்த்து இருவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

ரிஷியின் உடலைக் கைப்பற்றிய பொலிஸார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் பெற்றோர் படிப்பில் கவனம் செலுத்து என்று கூறியதால் மனமுடைந்த ரிஷி தற்கொலை செய்துகொண்டதாக தெரிய வந்துள்ளது.

கண்ணீரில் மூழ்கிய திருமண வீடு.. அக்காவை பிரிய மறுத்த தங்கையின் கலங்க வைத்த காட்சி!!

திருமண நிகழ்வில்…

திருமண காரியத்தில் நிகழும் சம்பவங்களில் சில மகிழ்ச்சியினை தந்தாலும், சில காண்பவர்களை கண்கலங்க வைக்கவும் செய்கின்றது. திருமணம் என்றாலே பெண்களுக்கு ஒருவித பயத்தை தான் ஏற்படுத்துகின்றது. காரணம் தனது பிறந்து வளர்ந்த குடும்பத்தினை விட்டுவிட்டு பழக்கம் இல்லாத ஒரு குடும்பத்தில் வாழ வேண்டும் என்பதே.

பல திருமண நிகழ்வில் பெண்கள் திருமணமாகி கணவர் வீட்டிற்கு செல்லும் தருணத்தில், கண்ணீர் மல்க கதறுவதுண்டு. அவர்கள் மட்டுமின்றி அவர்களின் குடும்பமே கண்ணீரில் தான் காணப்படும்.

இது போன்ற காட்சி தற்போது கண்கலங்க வைத்துள்ளது. ஆம் பெண் ஒருவர் தான் திருமணமான பின்பு குடும்பத்தை பிரிவதை நினைத்தும், குறிப்பாக தனது உடன்பிறந்த அக்காவை விட்டு பிரிய மனமில்லாமல் கதறி அழுகின்றார்.

குறித்த பெண்ணின் அக்காவும் தனது சோகத்தை மறைக்க தெரியாமல் கதறியழுத சம்பவம் காண்பவர்களை கலங்க வைத்துள்ளது. ஒரு குடும்பத்தில் ஆயிரம் சண்டை வந்தாலும், இரண்டாவது அம்மாவாக இருக்கும் அக்காவை என்றும் நீங்கள் விட்டுவிடாதீர்கள் என்பதை அருமையாக விளக்கியுள்ளது இக்காட்சி.

காதலன், கணவன் இருவருமே வேண்டும்.. போலிஸ் நிலையத்தில் அடம்பிடித்த மணப்பெண்!!

உத்தரப்பிரதேசத்தில்..

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தின் சிர்காவ் என்ற கிராமத்தில் வசிக்கும் இளம் பெண் ஒருவர், பக்கத்து கிராமத்தில் வசிக்கும் இளைஞர் ஒருவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளார்.

இளம் பெண் தனது காதல் விவகாரம் குறித்து பெற்றோர்களிடம் தெரிவித்த நிலையில், பெற்றோர்கள் அவசர அவசரமாக வேறு ஒரு மாப்பிள்ளை பார்த்து அந்த பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இந்நிலையில் வேறு மாப்பிள்ளையுடன் திருமணம் முடிந்த கையோடு மணமகள், அருகிலுள்ள கிராமத்தில் உள்ள காதலனை கூட்டிக் கொண்டு காவல் நிலையத்தில் கோரிக்கையுடன் தஞ்சமடைந்துள்ளார்.

மணக் கோலத்தில் காவல் நிலையம் வந்த இளம் பெண், தன்னை காதலனுடன் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று ரகளையில் ஈடுபட்டார்.

காவல் நிலையத்தில் இருந்த பெண் காவலர்கள் இளம்பெண்ணை சமாதானப்படுத்த முயன்ற நிலையில், தன்னை காதலனுடன் சேர்த்து திருமணம் செய்து வைக்குமாறு பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மேலும் நான் இருவரையும் திருமணம் செய்து கொள்கிறேன் என்றும் அந்த பெண் காவல் நிலையத்தில் தெரிவித்துள்ளார். அத்துடன் கோபத்தில் அந்த பெண் கையில் இருந்த மொபைல் போனையும் கீழே போட்டு உடைத்தார்.

இறுதியில் அந்த காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் பரத்குமார், அப்பெண்ணை மீட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்திருக்கிறார். காவல்நிலையத்திற்கு,

பெண்ணை திருமணம் செய்து கொண்ட மணமகனும் வந்து இருந்த நிலையில், “ என் மனைவி அவருடைய காதலனை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார் என்று தெரிவித்துள்ளார்.

ஈரத் துணிகளை காயவைத்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

திருவள்ளூரில்..

திருவள்ளூர் மாவட்டம் பட்டரை பெரும்புதூர் பகுதியில் இருக்கும் வராதபுரத்தில் வசித்து வருபவர் நாகராஜ் (45). அந்த பகுதியில் கேபிள் டிவி ஆபரேட்டராக இருக்கும் இவருக்கு கீர்த்தனா (30) என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். கீர்த்தனாதான் வழக்கமாக துணிகளை துவைத்து காயவைப்பார்.

அந்த வகையில் கடந்த சனிக்கிழமையும் மனைவி கீர்த்தனா அனைவரது துணைகளையும் துவைத்துள்ளார். பின்னர் காயவைக்க சென்ற அவருக்கு அங்கு இடம் போதவில்லை.

இதனால் அங்குள்ள சுவர் ஓரம் இருந்த கேபிள் ஒயரில் காய வைத்துள்ளார். அப்போது அதில் இருந்த மின்சாரம் கம்பி மூலம் கீர்த்தனாவின் உடலில் பாய உடனே கீழே சுருண்டு விழுந்துள்ளார்.

இவரது அலறல் சத்தத்தை கேட்டு அங்கு வந்தவர்கள் ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் மூலம் கீர்த்தனாவை மீட்டு மருத்துவமனைக்கு சென்றனர்.

அங்கே அவரை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதையடுத்து இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்க பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் விசாரணை மேற்கொண்டனர். மேலும் கீர்த்தனாவின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கேபிள் ஒயரில் துவைத்த துணிகளை காய வைக்கும்போது மின்சாரம் தாக்கி இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளது திருவள்ளூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்ற சம்பவங்களை தடுக்க அடிக்கடி விழிப்புணர்வும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இதுபோன்ற சம்பவங்கள் குறித்து அரசு தரப்பில் இருந்தும், மருத்துவர்கள் மத்தியில் இருந்தும் பல அறிவுரைகளும் வழங்கப்பட்டு வருகிறது.

இருப்பினும் சிலர் அதனை பெரிதாக எண்ணாமல் இருந்து வருகின்றனர். அதனால்தான் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

திருமணப் பரிசை திறந்த புது மாப்பிள்ளை.. வெடித்துச் சிதறிய பரிசு : புதுப்பெண் கவலைக்கிடம்!!

இந்தியாவில்..

திருமண பரிசாக வந்த ஹோம் தியேட்டர் மியூசிக் சிஸ்டம் வெடித்ததில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் கபீர்தாம் மாவட்டத்தில் திருமண பரிசாக பெற்ற ஹோம் தியேட்டர் மியூசிக் சிஸ்டம் வீட்டில் வெடித்ததில் புதிதாக திருமணமான ஒருவரும் அவரது மூத்த சகோதரரும் கொல்லப்பட்டனர்.

மேலும், வீட்டில் இருந்த நான்கு பேர் காயமடைந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் திங்கட்கிழமை இடம்பெற்றதாகவும், வெடிவிபத்துக்கான சரியான காரணம் இதுவரை அறியப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

வெடிவிபத்தின் தாக்கத்தால் ஹோம் தியேட்டர் சிஸ்டம் வைக்கப்பட்டிருந்த அறையின் சுவர்கள் மற்றும் கூரைகள் இடிந்து விழுந்ததாக பொலிஸார் கூறினர். ராய்ப்பூரிலிருந்து 200 கி.மீ தொலைவில் சத்தீஸ்கர்-மத்திய பிரதேச எல்லையில் மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதியில் இந்த பகுதி உள்ளது.

முதற்கட்ட தகவல்களின்படி, 22 வயதான ஹேமேந்திரா மெராவி ஏப்ரல் 1-ஆம் திகதி திருமணம் செய்து கொண்டார். திங்களன்று, அவரும் மற்ற குடும்ப உறுப்பினர்களும் அவரது வீட்டில் ஒரு அறைக்குள் திருமணப் பரிசுகளை திறந்து பார்த்துக்கொண்டிருந்தனர்.

அதில் பரிசாக வந்த ஹோம் தியேட்டர் சிஸ்டத்தின் வயரை மெராவி எலக்ட்ரிக் போர்டுடன் இணைத்த பிறகு, பாரிய வெடிப்பு ஏற்பட்டது. இதில் மேராவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவரது சகோதரர் ராஜ்குமார் (30) மற்றும் ஒன்றரை வயது சிறுவன் உட்பட நான்கு பேர் காயமடைந்தனர், அவர்கள் கவுரதாவில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி மெராவியின் சகோதரர் உயிரிழந்தார். மற்றவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் அதிகாரி தெரிவித்தார். தகவல் அறிந்ததும், தடயவியல் நிபுணர்களுடன் பொலிஸ் குழு சம்பவ இடத்துக்குச் சென்றது.

அறையை ஆய்வு செய்தபோது, ​​வெடிப்பைத் தூண்டக்கூடிய எரியக்கூடிய வேறு எந்தப் பொருளும் அங்கு கிடைக்கவில்லை. மியூசிக் சிஸ்டம் மட்டுமே அறையில் வெடித்தது. இந்நிலையில், வெடித்ததற்கான காரணம் விசாரணைக்குப் பிறகு தெரியவரும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளார்.

தங்கம் வாங்கலாமா வேண்டாமா… மக்களை குழப்பும் தங்கத்தின் விலை!!

உலக சந்தையில்..

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றத்தின் காரணமாக தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் மாற்றமடைந்தவண்ணம் உள்ளது. அந்தவகையில், கடந்த காலத்துடன் ஒப்பிடும் பொழுது தங்கத்தின் விலையானது இன்றைய தினம் வீழ்ச்சியடைந்துள்ளது.

இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 642,503 ரூபாவாக காணப்படுகின்றது. இந்த நிலையில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 181,350 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 166,250 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 158,700 ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது.

எனினும், ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 22,670 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 20,790 ரூபாவாகவும், 21 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 19,840 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

வெளிநாடொன்றில் சிக்கி தவிக்கும் இலங்கைப் பெண்.. கணவன் வெளியிட்ட கோரிக்கை!!

சவுதி அரேபியாவில்..

சவுதி அரேபியாவில் மனித கடத்தலில் சிக்கி வீடு ஒன்றில் சித்திரவதைக்கு உள்ளாகி வரும் 30 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயை இலங்கைக்கு அழைத்து வருமாறு அவரது கணவர் வட்டேகெதர ஷிரந்த மதுஷங்க திலகரத்ன கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் மற்றும் கம்பளை நகரில் உள்ள வேலைவாய்ப்பு நிறுவனத்திடம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கம்பளை , பஹல வத்தஹேன, அகுருமுல்ல பகுதியைச் சேர்ந்த அமு ஹெனகெதர சச்சினி மதுஷானி குணசேகர என்ற தனது மனைவியை சவுதி அரேபியாவிற்கு வீட்டுப் பணிப்பெண்ணாக அனுப்பியதாக கணவர் கூறுகிறார்.

அவரது உடலில் பல்வேறு இடங்களில் வெட்டுக்காயங்கள் மற்றும் தாக்குதல் காயங்களுடன் இருக்கும் புகைப்படத்தைக் காட்டிய அவர், இந்த தாக்குதல்களால், அவரது அந்தரங்க உறுப்புகளில் இருந்து தொடர்ந்து இரத்தம் வெளியேறுவதாகவும் தெரிவித்தார்.

அடிக்கடி தலையில் அடிபடுவதால், உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டதாகவும், உணவு கூட கொடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார். இவர்களுக்கு 3 வயதுக்குட்பட்ட ஒரு குழந்தையும், பதினொரு வயதுடைய பாடசாலை செல்லும் சிறுவனும் உள்ளதாகவும்,

அவர்களைக் கவனித்துக்கொள்வதற்காக திலகரட்ண வீட்டிலேயே இருக்க வேண்டியிருப்பதால், இந்தக் குழந்தைகளுக்கான உணவைக் கூட தேடமுடியவில்லை என்றும் திலகரத்ன கூறுகிறார்.

இந்நிலையில் பலகைகள் மற்றும் பத்திரிகை தாள்களைப் பயன்படுத்தி கட்டப்பட்ட சிறிய வீட்டைக் கட்டுவதற்காக தனது மனைவி வெளிநாடு சென்றதாகவும் அவர் தெரிவித்தார்.

வெளிநாட்டில் இருந்து வந்த கம்பளை வெலிகல்ல பகுதியைச் சேர்ந்த சங்கீதா என்ற பெண் சச்சினியின் தகவலை திலகரட்னவிடம் கூறியுள்ளதுடன், இந்த பெண் சங்கீதாவும் சவுதி அரேபியாவில் நோய்வாய்ப்பட்டு அவதிப்பட்ட போது சமதான என்ற சமூக அமைப்பு தன்னை இலங்கைக்கு அழைத்து வந்ததாக கூறுகிறார்.

இந்த சமூக அமைப்பின் சரத் துல்வல மற்றும் ஆனந்த விஜேசுந்தர ஆகியோர் சவுதி அரேபியாவில் சிறைவைக்கப்பட்டுள்ள சசினி மதுஷானி குணசேகர என்ற பெண்ணின் தகவல்களை தேடிப்பிடித்து புகைப்படங்களை ஊடகங்களுக்கு வழங்கினர்.

இதன்போது பல வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள் ஒன்றிணைந்து மனித கடத்தலில் ஈடுபட்டு இந்த நாட்டு பெண்களிடம் பணம் சம்பாதிக்கின்றனர். திலகரட்ன தனது மனைவியை அனுப்பிய ஏஜென்சிக்கு சென்றதையடுத்து,

அவரை அழைத்து வர 8 இலட்சம் ரூபாவும், பயணச்சீட்டுக்காக 1 இலட்சம் ரூபாவும் கேட்டதாகவும், சுகவீனம் மற்றும் தாக்குதல்கள் தொடர்பில் தமக்கு தொடர்பில்லை என கூறியதாகவும் குறிப்பிடப்படுகின்றது.