கொத்து ரொட்டி மற்றும் பிரைட் றைஸ் விலைகளில் ஏற்பட்ட மாற்றம்.!!

நாட்டில்..

நாட்டில் கொத்து ரொட்டி மற்றும் பிரைட் றைஸ் ஆகியனவற்றின் விலைகள் 20 வீதத்தினால் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை சிற்றுண்டிச் சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் இதனைத் தெரிவித்துள்ளார்.

சோறு பொதிகளின் விலைகளும் 20 வீதத்தினால் குறைக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளார். சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு காரணமாக இவ்வாறு விலை குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தேநீரின் விலை 30 ரூபாவாக குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பால் தேநீரின் விலை 90 ரூபாவாகவே காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் இந்த விலை மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொலிஸ் நிலையத்திற்கு வந்த உயிரிழந்த நபரால் பரபரப்பு!!

களுத்துறையில்..

களுத்துறையில் ஒரு வாரத்திற்கு முன்னர் உயிரிழந்தவர் மீண்டும் பொலிஸ் நிலையத்திற்கு வந்த சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. புலத்சிங்கள பிரதேசத்தில் ஒரு வாரத்திற்கு முன்னர் தனது சகோதரர் இறந்து விட்டதாக மரண நிவாரண சங்கத்திடம் கூறி 26000 ரூபாவை பெண் ஒருவர் மோசடியாக பெற்றுள்ளார்.

புளத்சிங்கள மொல்காவ பிரதேசத்தில் வசிக்கும் பெண்ணொருவர் கலவான பிரதேசத்தில் வசிக்கும் தனது கணவரின் சகோதரன் இறந்துவிட்டதாக ஏமாற்றி மோசடியாக பணம் பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய உயிரிழந்ததாக கூறப்பட்ட நபர் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பணத்தை திருப்பிக் கொடுத்துள்ளார். குறித்த நபர் உயிரிழந்ததாக கூறப்பட்டமையினால் மரண நிவாரண சங்கத்தினர் மரண சடங்குகளை செய்ய தயாராகியுள்ளனர்.

எனினும் மரண நிகழ்வு வேறு ஊரில் நடப்பதாக கூறி தடுக்கப்பட்டுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த மரண நிவாரண சங்க நிர்வாகிகள் இறந்தவரின் மரண சான்றிதழை சமர்ப்பிக்குமாறு கூறியபோது ​​கிடைத்த தொகையில் பாதியை செலுத்தி சங்கத்தில் இருந்து விலகுவதாக அந்த பெண் தெரிவித்துள்ளார்.

உயிருடன் உள்ள ஒருவர் இறந்துவிட்டதாகக் கூறியதாக சங்கத்தின் பொருளாளர் புலத்சிங்கள பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டிற்கமைய இது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

பலரை காப்பாற்றிவிட்டு பரிதாபமாக உயிரிழந்த இலங்கை இளைஞன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

குருநாகலில்..

குருநாகலில் பலரின் உயிரை காப்பாற்ற உடல் உறுப்புகளை தானம் செய்துவிட்டு மாணவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குருநாகலில் கடந்த வாரம் உயிரிழந்த மாணவி ஒருவரின் உடல் உறுப்புக்கள் பொருத்தப்பட்டு பலர் காப்பாற்றப்பட்ட சம்பவம் இடம்பெற்றிருந்தது. இவ்வாறான நிலையில், விபத்துக்குள்ளாகி மூளைச்சாவு அடைந்த மாணவன் தொடர்பில் மற்றுமொரு செய்தி வெளியாகியுள்ளது.

குருநாகல் – தெமட்டலுவ பிரதேசத்தை சேர்ந்த, மலியதேவ பாடசாலையில் உயர்தர விஞ்ஞான பிரிவில் கல்வி கற்கும் மாணவர் பிரவீன் பண்டாரவின் உடல் உறுப்புகள், ஆபத்தான நோயாளிகளுக்கு தானம் செய்வதற்காக நேற்று குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

உயிரிழந்த பிரவீன் தனது தாய், தனது இளைய சகோதரன் மற்றும் சகோதரியுடன் உறவினர் ஒருவரை சந்திப்பதற்காக சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, ​​வீரம்புகெதர பகுதியில் நேற்று முன்தினம் இரவு அவர்கள் பயணித்த முச்சக்கரவண்டி கொள்கலனுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பிரவீனின் தாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் பிரவீனின் அண்ணன் முகத்தில் காயம் ஏற்பட்டு பற்கள் சேதமடைந்ததுடன், சகோதரியின் கை முறிந்து காயம் ஏற்பட்டது.

இவர்கள் அயலவரின் முச்சக்கர வண்டியில் பயணித்துள்ளதுடன் அவரும் விபத்தில் படுகாயமடைந்து குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இருப்பினும், விபத்தில் தலையில் படுகாயம் அடைந்து ஆபத்தான நிலையில் இருந்த பிரவீனை சிகிச்சைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்த போதும் அவருக்கு சிகிச்சை அளித்த நிபுணர்கள் மூளைச்சாவு அடைந்துள்ளதாக தெரிவித்தனர்.

மூளைச்சாவு அடைந்த பிரவீனின் உடல் உறுப்புகளை தீவிர நோயாளிகளுக்கு தானமாக வழங்கலாம் என பிரவீனின் தந்தையிடம் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தந்தை தொழிலில் மரப்பொருட்கள் உற்பத்தியாளர் மற்றும் தாய் ஒரு இல்லத்தரசியாகும்.

அதற்கமைய, பிரவீனின் தந்தையின் விருப்பத்திற்கமைய, நேற்று பிரவீனின் இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், கண் சவ்வுகள் உடல் நலம் பாதிக்கப்பட்ட மற்ற நோயாளிகளுக்கு மாற்று சிகிச்சைக்காக பிரிக்கப்பட்டன. பிரவீனின் தாயாரின் இறுதிச் சடங்குகள் நடந்த அடுத்த நாள் இந்த உடல் உறுப்புக்கள் தானம் இடம்பெற்றுள்ளது.

குருநாகல் வடமேற்கு றோயல் கல்லூரியில் ஐந்தாண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த பிரவீன், அந்த பெறுபேறுகளின் அடிப்படையில் ஆறாம் ஆண்டில் மலியதேவ கல்லூரிக்குள் நுழைந்துள்ளார். சாதாரண தரப் பரீட்சையில் 9 ஏ சித்திகளுடன் சித்தியடைந்த அவர், விஞ்ஞானப் பிரிவில் கல்வி கற்க கடந்த வருடம் உயர்தரத்திற்கு அனுமதிக்கப்பட்டார்.

படிப்பில் சிறந்து விளங்கிய பிரவீன், இசையில் தனது திறமையால் சிறுவயதிலேயே இசை தொடர்பான தேர்வில் தேர்ச்சி பெற்றார். பிரவீன் மெல்லிசை குரல் கொண்ட திறமையான பாடகர். யூடியூப் சேனலில் அவரது பல பாடல்கள் தற்போது பிரபலமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா செட்டிகுளத்திற்கு மாலை நேர இறுதி பேரூந்தில் பயணிப்பவர்கள் அவலநிலை!!

பயணிகளின் அவலநிலை..

தினமும் மாலை நேர இறுதி பேரூந்தில் வவுனியாவில் இருந்து செட்டிகுளம் நோக்கி செல்பவர்கள் பேரூந்தில் போதிய இடவசதி இன்மையால் பேரூந்தின் பல பகுதிகளிலும் தொங்கிய படியும் பேரூந்தின் மேல் ஏறியும் உயிருக்கு அச்சுறுத்தலான வகையில் பயணிப்பதை அவதானிக்க முடிகிறது.

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் வசிப்பவர்கள் தனியார் வேலைவாய்ப்புக்கள், சந்தை நடவடிக்கைகள், மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள், அரச வேலை என தினமும் பலரும் வவுனியா நகருக்கு வந்து செல்கிறார்கள்.

இவ்வாறு வந்து செல்பவர்கள் மாலை வேளையில் நகரில் இருந்து செட்டிகுளம் நோக்கி திரும்பும் போது போதிய வாகன வசதி இன்மையால் இறுதி பேரூந்தில் தமது உயிரை கையில் பிடித்தபடி பயணிப்பதை அவதானிக்க முடிகின்றது.

அதிகளவான பயணிகள் காரணமாக பேரூந்தில் போதிய இடவசதி இன்மையால் பேரூந்தில் தொங்கிய படியும், அதன் பின்பகுதி, மேற்பகுதி என பல பகுதிகளிலும் உயிருக்கு அச்சுறுத்தலான, ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

எனவே குறித்த பகுதிக்கு மாலை நேரத்தில் போதியளவிலான பேரூந்து வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட வேண்டும் என்பதும் பாதிக்கப்பட்டுள்ள பயணிகளின் கோரிக்கையாகவுள்ளது.

 

கிளிநொச்சியில் மருமகனை கொலை செய்த மாமனார் : பரபரப்பு சம்பவம்!!

கிளிநொச்சியில்..

கிளிநொச்சி கிருஸ்ணபுரம் பகுதியில் இன்று அதிகாலை நபர் ஒருவர் கிலஒ செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாமனாருக்கும் மருமகனுக்கும் இடம்பெற்ற வாக்குவாதம் முற்றியதில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் ஆறுமுகம்பிள்ளை துஸ்யந்தன் எனும் 34 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பிரிந்திருந்த தனது மனைவியை பார்க்க சென்ற குறித்த நபரை, மனைவியின் தந்தை வழிமறித்துள்ளார்.

இதன்போது இருவருக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது, இதனால் ஆத்திரமடைந்த மாமனார் மண்வெட்டி பிடியினால் தாக்கியுள்ளதாக பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாமனாரின் தாக்குதலில் படுகாயமடைந்த மருமகன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வரும் நிலையில் மாமனாரால் மருமகன் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் அதிகரிக்கப்படும் எரிபொருள் ஒதுக்கீடு தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

எரிபொருள்..

புத்தாண்டு பண்டிகை காலத்தை முன்னிட்டு, தற்போதைய எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று (4) நள்ளிரவு முதல் இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பு திட்டமிட்டபடி, பண்டிகைக் காலத்திற்கான அதிகரித்து வரும் தேவைக்கு ஏற்ப, தேவையான எரிபொருள் இருப்புகளை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் பதிவு செய்து பெற்றுக் கொண்டுள்ளது.

அதன்படி, முச்சக்கர வண்டிகளுக்கு 5 லீட்டர் 8 லீட்டர் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள்களுக்கு 4லீட்டர் 7லீட்டர் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. பேருந்துகளுக்கு 40லீட்டர் 60 லீட்டர் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கார்களுக்கு 20லீட்டர் 30லீட்டர் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. லொரிகளுக்கு 50லீட்டர் முதல் 75லீட்டர் வரையிலும் சிறப்பு நோக்க வாகனங்களுக்கு 20லீட்டர் முதல் 30லீட்டர் வரை வான்களுக்கு 20 லீட்டர் முதல் 30லீட்டர் வரை எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் ரயிலுக்கு முன்னால் பாய்ந்து உயிரை மாய்த்த தமிழ் மாணவி!!

கொழும்பில்..

கொழும்பு வெள்ளவத்தை ரயில் நிலையத்திற்கு அருகில் யுவதி ஒருவர் ரயிலுக்குள் முன்னால் பாய்ந்து உயிரை மாய்த்துள்ளார். யுவதி உயிரை மாய்த்தமைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என வெள்ளவத்தை பொலிஸார் கூறியுள்ளனர்.

உயிரிழந்த யுவதியின் உடல் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கொழும்பு இராமநாதன் பாடசாலை மாணவி செல்வி சுபகீர்த்தனா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வெள்ளவத்தை புகையிரத நிலையத்துக்கு அருகாமையில் இன்று மாலை 5 மணியளவில் புகையிரதம் மோதுண்டு இறந்துள்ளார். அதேவேளை உயிரிழந்த மாணவி இம் முறை க.பொ.த உயர்தர பரீட்சை எழுதிய மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.

லிட்ரோவை தொடர்ந்து லாஃப் சமையல் எரிவாயுவின் விலையும் குறைந்தது : வெளியான விபரம்!!

லாஃப்..

12.5 கிலோகிராம் எடையுள்ள லாப் சமையல் எரிவாயுவின் விலையும் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி 12.5 கிலோகிராம் எடையுள்ள லாப் சமையல் எரிவாயுவின் விலை 1,290 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை ரூ.3,990 ஆகும என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 5 கிலோகிராம் எரிவாயு கொள்கலனின் விலை 516 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 1,596 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

12.5 கிலோகிராம் எடையுள்ள லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 1005 ரூபாவால் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பை இன்று (04.04.2023) நள்ளிரவு முதல் மேற்கொள்ள லிட்ரோ நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி 12.5 கிலோகிராம் எடையுள்ள லிட்ரோ சமையல் எரிவாயுவின் புதிய விலை 3738 ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு 402 ரூபாவால் குறைக்கப்படுகிறது. எனவே அதன் புதிய விலை 1,502 ரூபா ஆகும்.

2.3 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு 183 ரூபாவால் குறைக்கப்படுவதால் அதன்ப புதிய விலை 700 ரூபா ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எரிவாயு விலை சூத்திரத்தின் பிரகாரம் உள்நாட்டு எரிவாயுவின் விலை குறைக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் குறிப்பிட்டிருந்தது.

உலக சந்தையில் எரிவாயு விலை வீழ்ச்சி மற்றும் ரூபாயின் மதிப்பு வலுவடைந்தமை உள்ளிட்ட பல்வேறு காரணிகள் விலை குறைப்பில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

புதிய விலைகள் இன்று அறிவிக்கப்படும் எனவும், வரலாற்றில் லிட்ரோ எரிவாயுவின் அதிகூடிய விலை குறைப்பு இதுவாகும் எனவும் லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் நேற்றைய தினம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கோர விபத்தில் பலியான பாடசாலை மாணவர்கள்.. பிரேத பரிசோதனையில் வெளியான காரணம்!!

பதுளையில்..

பதுளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த இரண்டு மாணவர்களின் மரணத்திற்கான காரணம் வெளியாகியுள்ளது. பதுளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரு பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் பதுளை கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றுள்ளது.

பதுளை தர்மதூத கல்லூரிக்கும் ஊவா கல்லூரிக்கும் இடையிலான பாடசாலைகளுக்கிடையிலான வருடாந்த கிரிக்கெட் போட்டியுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகன பேரணியின் போது கெப் வண்டி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரு மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்தில் பதுளை தர்மதூத வித்தியாலயத்தில் 13ஆம் தரத்தில் கல்வி கற்ற ஆர். எம். ரவிந்து மற்றும் ஹரேந்திர ருக்மால் ஆகிய இரு மாணவர்களே உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் விபத்தில் உயிரிழந்த மாணவரான பதுளையைச் சேர்ந்த ரவிது துலக்ஷனா என்பவரின் மரணத்திற்கு மூளை, மார்பு மற்றும் மார்புப் பகுதியின் உள்ளுறுப்புகளில் ஏற்பட்ட பலத்த காயமே காரணம் எனவும் பிரேத பரிசோதனையில் வெளியாகியுள்ளது.

மேலும் மற்றுமொரு மாணவனான ஹலியால புதிய வீட்டுத் தொகுதியில் வசிக்கும் ஹரேந்திர ருகமலின் தலையில் ஏற்பட்ட பலத்த காயமே மரணத்திற்குக் காரணம் எனவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டியின் போது பிரதான வீதியில் வாகன பேரணிக்கு பொலிஸார் தடை விதித்திருந்த நிலையில்,குப்பைகளை மறுசுழற்சி செய்வதற்காக பதுளையில் நிர்மாணிக்கப்பட்ட இடத்தில் வாகன பேரணியை ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதன்போது விபத்திற்குள்ளான வாகனத்தை பாடசாலை மாணவர் ஒருவர் செலுத்தியதாகவும், விளையாட்டு பயிற்சிவிப்பாளர் வாகனத்தை செலுத்த வேண்டாமென மாணவரை பல முறை எச்சரிக்கை விடுத்திருந்ததாகவும் கூறப்படுகின்றது.

இதனையும் மீறி மாணவர்கள் குழு வாகனத்தை செலுத்திய போது மைதானத்தில் காணப்பட்ட இரும்பு தூண் ஒன்றில் மோதி விபத்து இடம்பெற்றுள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, இந்த வாகன பேரணியை பாடசாலை நிர்வாகம் ஏற்பாடு செய்யப்படவில்லை என பதுளை தர்மதூத உயர்தர பாடசாலை அதிபர் எச்.எம்.எம். செனரத் பண்டார தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கனடா எல்லையில் பனியில் உறைந்து பலியான இந்தியர்கள்.. வெளியான காரணம்!!

கனடாவில்..

கனடா – அமெரிக்க எல்லையில் 8 பேர் சடலங்களாக கண்டெடுக்கப்பட்ட விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், உயிரிழந்த இந்தியர்களின் அடையாளங்கள் வெளியாகியுள்ளன.

கடந்த வியாழக்கிழமை, கனடாவின் கியூபெக் மாகாணப்பகுதியில் அமைந்துள்ள St Lawrence நதிக்கரையோரமாக 8 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டவரின் விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

இவ்வாறு உயிரிழந்தவர்களில், நான்கு பேர் இந்தியாவின் குஜராத்திலுள்ள Manekpur என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என அப்பகுதி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் பிரவீன் சௌத்ரி (50), அவரது மனைவியான தீக்‌ஷா சௌத்ரி (45), தம்பதியரின் பிள்ளைகளான விதி சௌத்ரி (23) மற்றும் மித் சௌத்ரி (20) எனவும் இவர்கள் இரண்டு மாதங்களுக்கு முன்னர் கனடாவுக்கு சுற்றுலா சென்றதாக இந்தியாவிலிருக்கும் அவர்களுடைய குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் சடலங்களாக கண்டெடுக்கப்பட்ட நான்கு பேர் ரோமேனிய வம்சாவளியினரான Florin Iordache (28), Cristina (Monalisa) Zenaida Iordache (28). Florinஇடம் இரண்டு கனேடிய கடவுச்சீட்டுகள் இருந்தமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் இரண்டு வயது குழந்தை, மற்றும் ஒரு வயது குழந்தைகளும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலையில் இவர்கள் கனடாவிலிருந்து நாடுகடத்தப்பட இருந்தவர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

வவுனியா மேல் நீதிமன்றத்தால் 14 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 3 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை!!

வவுனியா மேல் நீதிமன்றத்தால்..

14 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 3 தமிழ் அரசியல் கைதிகள் வவுனியா மேல் நீதிமன்றத்தினால் இன்று (03.04) விடுவிக்கப்பட்டனர். 2009 ஆம் ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் இருந்த,

யாழ் வேலணையை சேர்ந்த இ.திருவருள், யாழ் கரவட்டியை சேர்ந்த ம.சுலக்சன், முள்ளியவளையை சேர்ந்த க.தர்சன் ஆகிய மூவருக்கும் எதிராக வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில்,

அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூப்பிக்கப்படாத நிலையில், குறித்து மூவரையும் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் விடுவித்து, அவர்களை விடுதலை செய்தார்.

இது தொடர்பாக குறித்த மூன்று அரசியல் கைதிகள் தொடர்பில் மன்றில் ஆஜராகி வழக்கு விசாரணைகளை முன்னெடுத்த சிரேஸ்ட சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் இருந்து விளக்கமறியலிலும், தடுப்பு காவலிலும் வைக்கப்பட்டிருந்த இ.திருவருள் (வயது 45), ம.சுலக்சன் (வயது 34), க.தர்சன் (வயது 33) ஆகியோர் வவுனியா மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 14 வருடங்களாக இவர்கள் தடுப்பு காவலிலும், விளக்கமறியலிலும் இருந்த நிலையில் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசம் இளஞ்செழியன் அவர்களால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.

அரசாங்கத்திற்கு எதிராக சதித் திட்டம் தீட்டிய குற்றம் இவர்களுக்கு எதிராக சாட்டப்பட்டிருந்தது. இவர்கள் ஏற்கனவே வழங்கிய குற்ற ஒப்புதல் வாக்குமூலம் செல்லுபடியற்றது என நீதிமன்றம் தீர்மானித்தது. அதனைத் தொடர்ந்து சுயாதீன சாட்சிகள் இவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டன.

அந்த சாட்சியங்கள் இவர்களது குற்றத்தை நிரூப்பதற்கு நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூப்பிக்கப்படவில்லை. இதன் காரணமான அனைத்து குற்றங்களிலும் இருந்து இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.

மிக நீண்டகாலம் இருந்த அரசியல் கைதிகளின் வழக்காக இது காணப்படுகின்றது. உண்மையில் இவர்களது விடுதலை எனக்கு மகிழ்ச்சியாக இருக்கின்றது எனத் தெரிவித்தார்.

விடுதலை செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றம் முன்பாக வருகை தந்திருந்த தமது குடும்பத்தினருடனும், தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் அவர்களுடனும் கட்டியணைந்து தமது மகிழ்ச்சியையும், சந்தோசத்தையும் வெளிப்படுத்தியதுடன் தமது விடுதலைக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.

 

முல்லைத்தீவில் வெளிநாட்டிலிருந்து வந்த பெண்ணுக்கு நேர்ந்த துயரம்!!

முல்லைத்தீவில்..

முல்லைத்தீவு அளம்பில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஜேர்மனியில் இருந்து தாயகம் திரும்பிய இளம் குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்து சம்பவம் இன்று (03) மாலை இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த பெண்ணும் வயோதிப தயார் ஒருவரும் உந்துருளியில் சிலாவத்தை பகுதியில் இருந்து கொக்குளாய் செல்லும் வீதியில் சென்றுகொண்டிருந்தபோது வாகனம் வேக கட்டுப்பாட்டினை இழந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த வெளிநாட்டு பெண் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை அனுமதிக்கப்பட்ட போது அவர் உயிரிழந்துள்ளார். உந்துருளியில் பயணித்த மற்றையவர் காயமடைந்த நிலையில் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் சிலாவத்தை பகுதியினை சேர்ந்த ஜேர்மனியில் வசித்துவரும் 42 வயது சறீதர் ஜெனிற்றா என்ற குடும்ப பெண் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண் வெளிநாட்டில் இருந்து தனது மகளுக்கு மஞ்சள் நீராட்டுவிழா செய்வதற்காக சொந்த இடமான முல்லைத்தீவு – சிலாவத்தைக்கு வந்துள்ள நிலையில் இந்த பரிதாபம் இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவில் நேர்ந்த கோர விபத்து.. இளைஞன் பரிதாபமாக பலி!!

முல்லைத்தீவில்..

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர் என்று புதுக்குடியிருப்புப் பொலிஸார் இன்று ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை குழந்தை யேசு கோயில் வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டன. இதன்போது ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர் புதுக்குடியிருப்பு, 9 ஆம் வட்டாரம் மல்லிகைத்தீவைச் சேர்ந்த கி.ஜெமில்ராஜ் (வயது – 36) என கூறப்படுகின்றது.

இலங்கையின் தலையெழுத்தை மாற்றப்போகும் பலாப்பழம்!!

பலாப்பழம்..

“ஹெரலி பெரலி” எனும் தொனிப்பொருளில் நாடு பூராகவும் மூன்று மில்லியன் பலா மரங்களை நடும் வேலைத்திட்டத்தின் முதல் கட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று (02) அனுராதபுரம் விமானப்படை தளத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பலாப்பழ சந்தையை உருவாக்கி இலங்கை மக்கள் மத்தியில் பலாப்பழத்தை ஊக்குவிக்கும் நோக்கில் அரசாங்கத்தின் உணவு பாதுகாப்பு திட்டத்துடன் இணைந்து இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், இந்த வருடத்திற்குள் எழுபத்தைந்தாயிரம் பலா மரங்கள் நடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பலாப்பழத்தோட்டம் தொடர்பாக எழுதப்பட்ட “ஹெரலி பெரலி” என்ற புத்தகமும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

இந்தப் புத்தகத்தில் பலாப்பழம் சாகுபடி மட்டுமின்றி, அது தொடர்பான பொருட்கள் பற்றிய தகவல்களும் இடம் பெற்றுள்ளன. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன்,

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் மற்றும் ஜனாதிபதியின் தலைமை அதிகாரி சாகல ரத்நாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) மற்றும் பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இலங்கையில் 16 பேரை கா.ப்.பா.ற்.றி த.ன்.னு.யி.ரை தி.யாகம் செய்த இளைஞன்!!

எல்ல நீர்வீழ்ச்சியில்..

எல்ல நீர்வீழ்ச்சியில் 16 வெளிநாட்டவர்களை கா.ப்.பா.ற்.றி.ய இ.ளைஞன் நீ.ரி.ல் மூ.ழ்.கி உ.யி.ரி.ழ.ந்.து.ள்ளா..ர். கித்துல்கல பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய அமில மதுசாங்க என்பவரே இவ்வாறு உ.யி.ரி.ழ.ந்.து.ள்.ளா.ர்.

சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சியில் இருந்து இற.ங்குவதற்காக மு.யற்சித்த போது இந்த அ.ன.ர்.த்.த.ம் ஏற்பட்டுள்ளது. அருவியில் தி.டீரென வெள்ளம் பெ.ருக்கெடுத்ததால் ஆ.ப.த்.தா.ன நி.லையில் இருந்த 16 வெளிநாட்டவர்களை அமில மதுசங்க கா.ப்.பா.ற்.றி.யு.ள்.ளா.ர்.

எ.னினும் ஒரு கு.ழ.ந்.தை.யி.ன் தந்தையான அமில மதுசாங்க உ.யி.ரி.ழ.ந்.து.ள்.ளா.ர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களை து.ய.ர.த்.தி.ல் ஆ.ழ்.த்தியுள்ளது.

கிளிநொச்சியில் சோகம் : திருமணமான ஒரு வருடத்தில் இளம் பெண் மரணம்!!

கிளிநொச்சியில்..

கிளிநொச்சி – பூநாகரி பகுதியில் திருமணம் செய்து ஒரு வருடமான நிலையில் இளம் குடும்பப் பெண் டெங்கு நோய் காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் சிவரூபன் கேம்சலா வயது – 26 என்ற இளம் குடும்பப் பெண் இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார். கடந்த வருடம் திருமணம் செய்த நிலையில் கணவர் கட்டார் நாட்டில் தொழில் புரிந்து வருகின்றதாக கூறப்படுகின்றது.

இந் நிலையில் குறித்த பெண் டெங்கு நோயினால் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். சடலம் கிளிநொச்சி வைத்திய சாலையில் வைக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக கூறப்படும் நிலையில், இளம் பெண் டெங்கிற்கு பலியான சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.