யாழ். ஊர்காவற்றுறையில் நண்பனுடன் கடலுக்குச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். திருகோணமலை, புளியந்தோப்பைச் சேர்ந்த (வயது 27) உடையவரே ஊர்காவற்றுறைப் பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.
ஊர்காவற்றுறை 9ஆம் வட்டாரத்திலிருந்து நேற்றிரவு நண்பருடன் ஜக்சன் ஆழ்கடலுக்குச் சென்றுள்ளார். ஜக்சனுக்கு மீன்பிடித் தொழிலில் அனுபவமில்லை என தெரியவந்துள்ளது.
இந்தநிலையில், கடலினுள் நீரோட்டப் பாதையில் செல்லும்போது ஜக்சன் படகிலிருந்து இறங்கியுள்ளார். அந்தப் பகுதியில் சுழியோட்டம் அதிகமாக இருந்தமையால் அவர் இழுத்துச் செல்லப்பட்டார் என்று பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
இதன்போது ஜக்சனுடன் சென்ற நண்பர் அவரைத் தேடிக் காணாத நிலையில் ஊருக்குத் திரும்பி விடயத்தை தெரியப்படுத்தியுள்ளார். இந்த நிலையில் இன்று காலை ஜக்சனின் சடலம் கரையொதுங்கியுள்ளது.
லிட்ரோ எரிவாயுவின் விலை நாளை நள்ளிரவு முதல் ஆயிரம் ரூபாவினால் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் வரலாற்றில் இவ்வளவு பாரிய தொகையில் விலை குறைக்கப்பட்டமை இதுவே முதல் சந்தர்ப்பம் என தெரிவித்துள்ளார். ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு மற்றும் உலக சந்தையில் எரிவாயு விலை குறைவடைந்தமை,
உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் இவ்வாறு விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி 12.5 கிலோ கிராம் எடையுடைய லிட்ரோ எரிவாயுவின் புதிய விலை 3743 ரூபாவாகும்.
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்து வந்த வடிவேலு சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட பிரச்சனையால் ரெட் கார்ட் போடப்பட்டு சினிமாவில் நடிக்க தடை போடப்பட்டது. தற்போது அதிலிருந்து மீண்டு வந்த வடிவேலு, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், சந்திரமுகி 2 உள்ளிட்ட பல படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார்.
அதில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் வெளியாகி மிகப்பெரிய தோல்வியை கொடுத்தது. அது ஒருபக்கம் இருக்க வடிவேலு ரஜினிகாந்த் நடிப்பில் சூப்பர் ஹிட் கொடுத்த சந்திரமுகி படத்தின் 2ஆம் பாகத்தில் இயக்குனர் வாசு இயக்கத்தில் நடித்தும் வருகிறார்.
ராகவா லாரன்ஸ், ராதிகா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், வடிவேலு மோசமாக நடந்து கொள்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
படத்தின் ஷூட்டிங் கால்ஷீட் டைம் 9 மணியாம். ஆனால் வடிவேலு 10 மணி, 11 மணி, 12 மணி என்று கூறி 12 மணிக்கு மேல் தான் ஷூடிங்கிற்கே வருகிறாராம். ஒரு சமயம் அவரது போனை ஸ்விச் ஆஃப் செய்தும் விடுகிறாராம்.
இப்படி வந்த வாய்ப்பையும் இப்படி தலைக்கனத்தில் செயல்படுகிறாரே என்று இயக்குனர் உட்பட பலர் கோபத்தில் இருக்கிறார்களாம். இதனால் இயக்குனர் படத்தின் வடிவேலு காட்சிகளை பலவற்றை தூக்கிவிட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில், மும்பையில் நடைபெற்று வரும் ஷூட்டிங்கில் வடிவேலு காட்சியை நீக்கப்பட்டதை தொடர்ந்து நேரடியாக கோபப்பட்டு மூஞ்சை காட்டியிருக்கிறார் இயக்குனர் வாசு.
சீன் முடியாமல் போக வேண்டும் என்று கூறிய வடிவேலுவை, இயக்குனர் கையசைத்து போங்க போங்க என்று போகச்சொல்லி அசிங்கப்படுத்தியிருக்கிறாராம். இந்த விசயத்தை பல விதமாக வெளியில் பலரிடம் கூறி வருகிறாராம் வடிவேலு. இதனால் படப்பிடிப்பில் சற்று மோசமான சூழ்நிலை நடைபெற்று வருகிறது.
தூக்கம் என்பது மனிதரின் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமாகும். ஆனால் இன்றைய பரபரப்பான சூழ்நிலையில் பலரும் தூக்கத்தினை தொலைத்து ஓடிக்கொண்டிருக்கின்றனர்.
ஆனால் சரியான நேரத்தில் தூங்காமல் இருக்கும் நபர்கள் பல பிரச்சினையை சந்திக்க நேரிடும் என்பதை நாம் மறந்து விட வேண்டாம். இங்கு தூக்கத்தினை குறித்த விளக்கத்தினை தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.
நமது தூக்கம் சரியாக இல்லாவிடில், நாள் முழுவதும் சோர்வு, கவனமின்மை, பதட்டம், மனச்சோர்வு, உயர் ரத்த அழுத்தம், எடை அதிகரிப்பு பிரச்சினை ஏற்படுகின்றது.
மேலும் சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படுவதுடன், அடிக்கடி அதிக பசி எடுக்கும். இம்மாதிரியான எதிர்மறை விளைவுகள் மாரடைப்பு, பக்கவாதம், இதய பிரச்சினையை ஏற்படுத்தும்.
துக்கம் இல்லாமலும், சரியான உணவு பழக்கங்கள் இல்லாத நபர்கள் உடற்பயிற்சி மேற்கொண்டால் உயிரிழப்பு ஏற்படலாம். உடல் பருமனை அதிகரிக்கும் தூக்கமின்மை, கொலஸ்ட்ராலையும் அதிகரிப்பதால் இதயம் தொடர்பான பிரச்சினையும் ஏற்படுகின்றது.
ஒரு நபரின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சராசரியாக 7 முதல் 8 மணி நேர நல்ல தூக்கம் தேவைப்படுகிறது. குறைந்தபட்சம் 6 மணி நேரமாவது நல்ல தூக்கத்தை அனுபவிக்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற படம் அங்காடி தெரு. இப்படத்தின் சிறு கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் அங்காடி தெரு சிந்து.
சமீபகாலமாக மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சில தவறான சிகிச்சையால் மார்க்கத்தை அகற்றும் நிலைக்கு தள்ளப்பட்டார். அதன்பின் உதவி கேட்டு பல பேட்டிகளில் தான் கஷ்டப்பட்டு வருவதை கூறி மனவிட்டு அழுது வந்தார்.
சமீபத்தில் பிரபல தனியார் இணையதளத்திற்கு அளித்த பேட்டி அளித்த சிந்து தன்னிடம் தவறாக நடந்து கொண்ட சம்பவம் ஒன்றினை பகிர்ந்திருக்கிறார். இரவு 12.45 மணிக்கு ஒரு தம்பியிடம் ஒருந்து ஒரு கால் வந்தது.
என்னிடம் ஒரு பொண்டாட்டியிடம் பேசுவது போல் வாடி போடி என்று பேச ஆரம்பித்தான். தம்பி 12.45 மணியாகுது நாளைக்கு காலைல பேசு என்று சொல்லியுள்ளார்.
அதற்கு அந்த நபர், இப்போ தான் பேசனும், நான் இப்போதான் ஃபிரியாக இருக்கிறேன் என்ன வேண்டும் எவ்வளவு வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு சிந்து, ஒரு வாரம் 80 ஆயிரம் ஆகுது 5 லட்சம் தேவைப்படுது என்று கூறியதற்கு, 5 ஆயிரம் என்ன 10 லட்சம் தருகிறேன்.
வீடியோக்கால்ல வரமுடியுமா, ஒரு மார்பகம் தான் இல்லை இன்னொரு சைட் காட்டுறீயா நாளைக்கு அக்கவுண்ட்ல காசு போடுறேன்ன்னு சொன்னான். இதை சொல்லக்கூடாது என்று நினைத்தேன். சிலர் இப்படியான கேடுக்கட்டப்படி நடக்குறாங்க என்று கதறி அழுதுள்ளார் அங்காடி தெரு சிந்து.
பொதுவாக இரு மனதுக்கு இடையே உருவாகும் காதல் என்பது மொழி, மதம், வயது என பல விஷயங்களை தாண்டி வரும் என ஒரு கூற்று உண்டு. இருவர் இடையே காதல் உருவாகி விட்டால் எப்படியாவது நிலைத்து நின்று தங்கள் வாழ்வில் முன்னேறி செல்ல வேண்டும் என்றும் அவர் நினைப்பார்கள்.
அதே வேளையில், மறுபக்கம் ஏதாவது சில காரணங்களால் காதல் கைகூடாமல் கூட போகலாம். அப்படி இருக்கையில், சுமார் 60 ஆண்டுகள் கழித்து காதல் காரணமாக நடந்த நெகிழ்ச்சி சம்பவம் ஒன்று தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர் லென் ஆல்பிரைட்டன். இவருக்கு தற்போது 78 வயதாகிறது. அதே பகுதியை சேர்ந்தவர் ஜீனெட் ஸ்டீர் (வயது 78). இவர்கள் இருவரும் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாக தகவல்கள் கூறுகின்றது.
1963 ஆம் ஆண்டு செவிலியர் பயிற்சியின் போது அவர்கள் சந்தித்த போது காதல் உருவாகியது. லென் மற்றும் ஜீனெட் ஆகியோரின் காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிக்க அவர்கள் பிரியும் சூழலும் உருவானது.
மேலும் அந்த சமயத்தில் இருந்த சட்டங்கள் அவர்கள் இளம் வயதில் இணைந்து வாழ தடையாக இருந்ததால் காதலை அவர்களால் தொடர முடியவில்லை என தகவல்கள் கூறுகின்றது.
ஜீனெட்டை பிரிந்த லென், ஆஸ்திரேலியாவிற்கு புறப்பட்டு சென்றதுடன் சில காலங்கள் கழித்து வேறொரு பெண்ணையும் திருமணம் செய்து கொண்டு குழந்தைகளையும் பெற்றெடுத்தார்.
இதனிடையே, கடந்த 2015 ஆம் ஆண்டு நீண்ட நாள் திருமண வாழ்க்கை முடிவடைந்ததையடுத்து மீண்டும் ஜீனெட்டை தொடர்பு கொள்ளவும் லென் முயன்றதாக தகவல்கள் கூறுகின்றது.
என்றாலும் தன்னை நினைவில் கொண்டிருப்பாரா என்ற கவலையுடன் வாக்காளர் பட்டியலில் ஜீனெட்டின் முகவரியை தேடி பிடிக்கவும் நியூபோர்ட் சென்றார் லென். இறுதியில் ஜீனெட் இல்லத்தை கண்டுபிடித்து அவரை நேரில் சந்தித்தார் லென்.
முதலில் அடையாளம் காண முடியாமல் தவித்த ஜீனெட், பழைய நினைவுகளை லென் நினைவு கூர்ந்ததும் அறிந்து அதிர்ச்சியிலும் உறைந்து போனார். அப்போது ஜீனெட் கணவர் இருந்த சூழலில், இரண்டு ஆண்டுகள் கழித்து புற்றுநோயால் அவர் உயிரிழந்து போயுள்ளார்.
இதனையடுத்து, மீண்டும் லென் மற்றும் ஜீனெட் ஆகியோர் டேட்டிங் செய்ய தொடங்கிய சூழலில், சமீபத்தில் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 60 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து சேராமல் போனவர்கள் தற்போது இணைந்துள்ளது இணையவாசிகள் மத்தியில் அதிகம் பேசு பொருளாக மாறி உள்ளது.
இந்தியாவின் நாக்பூரில் வாழும் அபோலி (Aboli Jarit)யைப் பார்ப்பவர்கள் அவரை ஒரு சின்னப் பெண் என்றே நினைக்கிறார்கள். காரணம், அவரது உயரம் மூன்று அடி நான்கு அங்குலம் மட்டுமே.
ஆனால், தனக்கு 20 வயதாகிறது என்கிறார் அபோலி. கல்லூரியில் படிக்கிறார் அவர். அபோலியை renal rickets என்னும் அபூர்வ நோய் தாக்கியுள்ளது. அதனால், அவரது எலும்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
அவரால் நடக்க முடியாது. மேலும், அவருக்கு சிறுநீரகப்பை கிடையாது. ஆகவே, சிறுநீர் உருவானதுமே அது நேரடியாக வெளியே வந்துவிடும் என்பதால், அபோலி எப்போதுமே டயாப்பர் அணிந்தவண்ணம்தான் இருக்கவேண்டும்.
ஆனால், அபோலியைப் பார்த்தால் அவருக்கு இப்படி ஒரு நோய் இருக்கிறது என்று சொல்லவே முடியாது. எப்போதுமே புன்னகை பூக்கும் அழகிய முகம் கொண்ட அபோலிக்கு, பாட்டுப் பாடவும், நடிக்கவும் ஆசை.
ஹாலிவுட், பாலிவுட் என எல்லாத் திரைப்படங்களிலும் தலைகாட்டிவிடவேண்டும் என்ற முடிவில் இருக்கும் அபோலி, பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் எல்லாம் பங்கேற்றிருக்கிறார்.
இந்த நோய் வந்தவர்கள் நீண்ட நாட்கள் உயிர் வாழ்வதில்லை. ஆனால், அபோலி 20 வயதாகியும் உயிர் வாழ்வது மட்டுமல்ல, தனது பிரச்சினையிலும் ஒரு பாஸிட்டிவ் விடயம் இருப்பதாகக் கூறுகிறார்.
யாராவது எப்போதுமே இளமையுடனே இருக்க முடியுமா, ஆனால், நான் எப்போதுமே இளமையுடன் இருக்கிறேனே, எவ்வளவு நல்ல விடயம், நான் அதிர்ஷ்டசாலி என்கிறார் வாய் நிறைய புன்னைகையுடன் அபோலி.
தாம்பரம் அருகே மனைவியைக் கொலைசெய்துவிட்டு தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக, நாடகமாடிய கணவன், அவரின் அம்மா ஆகியோரை போலீஸார் கைதுசெய்திருக்கிறார்கள்.
தாம்பரம் அருகேயுள்ள சோமங்கலத்தை அடுத்த அமரம்பேடு கிராமம், பஜனைக் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கோகுலகண்ணன் (32). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துவருகிறார். கோகுலகண்ணனுக்கு கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு லோகப்பிரியா என்பவருடன் திருமணம் நடந்திருக்கிறது.
இந்த நிலையில், கடந்த 27-ம் தேதி லோகப்பிரியா வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக சோமங்கலம் காவல் நிலையத்துக்குத் தகவல் வந்தது. உடனடியாகச் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் லோகப்பிரியாவின் சடலத்தை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர் லோகப்பிரியாவின் மரணம் குறித்து போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் லோகப்பிரியா தற்கொலை செய்துகொள்ளவில்லை, கொலைசெய்யப்பட்டிருக்கிறார் என்பது தெரியவந்தது.
இதையடுத்து மணிமங்கலம் உதவி கமிஷனர் ரவி தலைமையில் போலீஸார் லோகப்பிரியாவின் கணவர் கோகுலகண்ணன், மாமியார் ராஜேஸ்வரி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் லோகப்பிரியா கொலைசெய்யப்பட்டதற்கான காரணம் தெரியவந்தது.
இது குறித்து சோமங்கலம் போலீஸாரிடம் பேசினோம். “கோகுலகண்ணனுக்குத் திருமணம்செய்ய அவரின் குடும்பத்தினர் பெண் பார்த்துவந்தனர். அப்போது கோகுலகண்ணனின் வழுக்கை தலை காரணமாக அவருக்குப் பெண் கொடுக்க சிலர் முன்வரவில்லை.
அதனால் கோகுலகண்ணன், தன்னுடைய வழுக்கைத் தலையை விக் (செயற்கை முடி) மூலம் மறைத்தார். லோகப்பிரியாவைப் பெண் பார்க்கும்போதுகூட கோகுலகண்ணன், தனக்கு வழுக்கைத் தலை என்று உண்மையைச் சொல்லவில்லை.
திருமணத்தின்போது பந்தாவாக விக்கை வைத்து லோகப்பிரியாவையும் அவரின் குடும்பத்தினரையும் கோகுலகண்ணன் ஏமாற்றியதாகச் சொல்லப்படுகிறது. கோகுலகண்ணனுக்குத் திருமணம் முடிந்து சில தினங்களுக்குப் பிறகு தலையில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
அப்போது மனைவி லோகப்பிரியா, எண்ணெய் தேய்க்க முயன்றபோது கோகுலகண்ணன் மறுத்திருக்கிறார். அப்போது கோகுலகண்ணன் வெட்கப்படுவதாக லோகப்பிரியாவும் அவரின் குடும்பத்தினரும் கருதியிருக்கின்றனர்.
ஆனால், உண்மையை பல நாள்கள் மறைக்க முடியாது என்பதுபோல, கோகுலகண்ணனின் வழுக்கைத் தலையை ஒருநாள் லோகப்பிரியா பார்த்துவிட்டார். அதனால் மனமுடைந்த லோகப்பிரியா, `ஏன் உண்மையை மறைத்துவிட்டீர்கள்?’ என்று கோகுலகண்ணனிடம் கேட்டிருக்கிறார்.
அதற்கு கோகுலகண்ணனும், `நீங்கள் வாக்குறுதி அளித்தபடி வரதட்சணையாக நகைகளைக் கொடுக்காமல் என்னை ஏமாற்றிவிட்டீர்கள்’ என லோகப்பிரியாவிடம் சண்டை போட்டிருக்கிறார்.
மேலும், கோகுலகண்ணன் ஐடி நிறுவனத்தில் வேலை பார்ப்பதாகவும் கூறியிருக்கிறார். ஆனால், அதுவும் உண்மையில்லை என லோகப்பிரியாவுக்குத் தெரியவந்திருக்கிறது. இதனால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்திருக்கிறது.
சம்பவத்தன்று ஆத்திரமடைந்த கோகுலகண்ணன், மனைவி லோகப்பிரியாவைத் தாக்கியிருக்கிறார். இதில் அவர் உயிரிழந்துவிட்டார். அதனால் அதிர்ச்சியடைந்த கோகுலகண்ணன், லோகப்பிரியா உயிரிழந்த தகவலை தன்னுடைய அம்மா ராஜேஸ்வரியிடம் கூறியிருக்கிறார்.
இதையடுத்து, இருவரும் சேர்ந்து கொலையை மறைக்க, லோகப்பிரியா தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாட முடிவுசெய்திருக்கிறார்கள். அதற்காக லோகப்பிரியாவின் சடலத்தை வீட்டில் தூக்கில் தொங்கவிட்டிருக்கிறார்கள். ஆனால், லோகப்பிரியாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரின் குடும்பத்தினர் புகாரளித்திருந்தனர்.
அதை உறுதிப்படுத்தும் வகையில் லோகப்பிரியாவின் பிரேத பரிசோதனை அறிக்கையும் வந்தது. இதையடுத்தே கோகுலகண்ணன், அவரின் அம்மா ராஜேஸ்வரி ஆகியோரைக் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கிறோம்” என்றனர்.
கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் மகேஷ். இவரது மகன் ஷர்மிளா. இவர் வி.வி டிரான்ஸ்போர்ட் என்ற தனியார் நிறுவனத்தின் பேருந்து ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார்.
இதன் மூலம் இவர்தான் கோவை மாவட்டத்தின் முதல் பெண் ஓட்டுநர் என்ற பெருமையையும் ஷர்மிளா பெற்றுள்ளார். கோவை காந்திபுரம் to சோமனூர் வழியில் பேருந்தை இயக்கி வரும் ஷர்மிளா என்ற பெண் ஆணுக்குப் பெண் எந்தவிதத்திலும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்து பெண்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாகவும் வளர்ந்துள்ளார்.
இது குறித்துக் கூறும் ஷர்மிளா, “எனக்கு 7ம் வகுப்பு படிக்கும் போதில் இருந்தே வாகனங்களின் மீதான ஆர்வம் வந்துவிட்டது. இதனால் இருசக்கர வாகனம், பேருந்து, ஆட்டோ, கனரக வாகனங்களை ஓட்டவேண்டும் என ஆசைப்பட்டேன்.
என் ஆசைக்கு எனது பெற்றோர் எந்த தடையும் போடவில்லை. எனது அந்த ஆட்டோ ஓட்டுநர் என்பதால் அவர் எனக்கு ஆட்டோ ஓட்டப் பயிற்சி கொடுத்தார். பின்னர் தந்தைக்கு உதவியாக நான் தனியாகவே ஆட்டோவை ஓட்டிவந்தனர்.
இதையடுத்து கனரக வாகனங்கள் ஓட்டுவதற்கான முறையான பயிற்சி பெற்று இதற்கான உரிமமும் பெற்று உள்ளேன். ஆண்கள் மட்டுமே அதிகம் இருக்கும் கனரக வாகன ஓட்டுநர் பணியில் தனக்கான முத்திரையைப் பதிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது.
தற்போது காந்திபுரம் to சோமனூர் வழியில் தனியார் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறேன். முதலில் நான் ஓட்டுநராகப் பயிற்சி சென்றபோது பலரும் என்னைக் கிண்டல் செய்தார்கள். இன்று அவர்கள்தான் என்னை பாராட்டுகிறார்கள். வாழ்த்து தெரிவிக்கிறார்கள். எனக்கு இது பெருமையாக இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவரது பெற்றோர் கூறுகையில், “கோயம்புத்தூரில் என் பொண்ணு தான் முதல் பெண் பஸ் டிரைவர்னு சொல்லும்போது அது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது” என தெரிவித்துள்ளனர்.
முன்பெல்லாம் காதல் தோல்வியில் இளைஞர்கள் தான் குடித்து விட்டு தேவதாஸ் போல் தாடி வளர்த்து திரிவர். அந்த காலம் மலையேறிவிட்டது. இப்போதெல்லாம் பெண்களும் பாட்டிலும் கையுமாகத் தான் அலைகின்றனர்.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் குடித்து விட்டு ரகளை செய்து கொண்டிருந்தார். சமூக வலைதளங்களில் தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த பெண் செய்யும் ரகளை காதல் தோல்வியால் ஏற்பட்ட விரக்தியில் மது போதை காரணமாக அவர் இவ்வாறு செய்ததாக விளக்கம் அளித்துள்ளார். இந்த வீடியோவில், ஒரு பெண் சாலையில் அங்கும் இங்கும் சுற்றித் திரிகிறார்.
அத்துடன் சாலையில் செல்லும் மக்களை எல்லாம் அவர் படுத்தி எடுக்கிறார். கார் மீது ஏறி நடனம் ஆடுகிறார். தள்ளாடிக் கொண்டே ஒருவரின் பைக்கை பிடுங்குகிறார். சாலையின் நடுவில் வைக்கப்பட்டுள்ள சாலை தடுப்புகளை கீழே தள்ளி விடுகிறார்.
பல பெண்கள் அவரை அங்கிருந்து அழைத்துச்செல்ல முயற்சி செய்கின்றனர். அவர் யாருக்கும் அடங்கவில்லை. அங்கு சுற்றி இருந்த பெண்கள் அந்த பெண்ணுக்கு எடுத்துச்சொல்லி புரிய வைக்கிறார்கள்.
இந்த சம்பவத்தை வீடியோவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டவர் “காதலில் கிடைத்த தோல்வியால் பெண் செய்த கலாட்டா.. இது குவாலியரின் பூல் பாக் சந்திப்பில் நடந்த சம்பவம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பாறை மேல ஏறி நின்னு ஒரு செல்ஃபி, அப்படியே வெவ்வால் மாதிரி தலைகீழா ஆலமர விழுதைப் புடிச்சுக்கிட்டு ஒரு செல்ஃபி என திருமணத்திற்கு முன்பான ப்ரீ வெட்டிங் போட்டோஷூட் களைகட்டி வருகிறது.
ஜோடியா போட்டோ புடிச்சுக்கோங்க… அதுக்கு ஏன் லட்சக்கணக்குல பணத்தை செலவழிச்சு சூனியத்தை வெச்சுக்கறீங்க? என்று இவர்களைப் பார்த்து கேட்க தோன்றுகிறது.
அந்த பணத்துல நாலு ஏழைப் பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கலாம். சரி.. அது அவங்கவுங்க தனிப்பட்ட சுதந்திரம், விருப்பம்.. எதுவாக வேண்டுமென்றாலும் இருக்கலாம்.
அப்புறமா எதுக்கு இந்த கட்டுரைன்னு கேட்கறீங்களா? இதைப் படிச்சுப் பார்த்துட்டு நாலு பெத்தவங்களோ, இல்லை நாலு திருமணம் செய்து கொள்ளப் போகிற பெண்களோ திருந்துனாங்கன்னா அவங்க வாழ்க்கை நல்லா இருக்குமே என்கிற அக்கறை தான்.
திருமண நாள் என்பது ஆயுளுக்கும் நினைவில் வைத்துக் கொள்கிற நாள் என்பதில் சந்தேகமே இல்லை. சிலருக்கு சுகமான நினைவுகளாகவும், சிலருக்கு சிறைப்பட்டோமே என்கிற சோகமான நினைவுகளாகவும் ஆயுளுக்கும் தொடரும் பந்தம்.
அதை மகிழ்ச்சியான தருணங்களாக புகைப்படங்களில் சிறைப்பிடிப்பதும் தவறில்லை. ஆனால், ஊர் கூட்டி பந்தா செய்கிறேன் என்று பண்ணுகிற அலம்பல்கள் சமயங்களில் உயிருக்கே உலை வைத்திடும் என்பதனை நிறைய பேர் உணர்வதில்லை.
அப்படியானதொரு அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கிறது. திருமண ரிசப்ஷன் மேடையில் மணமகனும், மணமகளும் கைகளில் பளபளக்கும் துப்பாக்கியுடன் போட்டோவுக்கும், வீடியோவுக்கும் போஸ் தருகிறார்கள்.
உற்சாகத்தில் துப்பாக்கியால் விளையாடுகிறார்கள். அப்போது எதிர்பாராத விதமாக மணமகளின் கைகளில் இருந்த துப்பாக்கி, சரியாக அவரது முகத்துக்கு அருகே கொண்டு செல்லும் போது திடீரென வெடித்து சிதறுகிறது.
இந்த விபத்தில், மணமகளின் முகத்தில் பலத்த காயம். வலியில் துடித்த மணமகள் துப்பாக்கியை கீழே போட்டு விட்டு மேடையிலிருந்து அலறியடித்து ஓடுகிறாள். ஆசையாய் காதலித்த முகமாச்சே என்கிற கவலையில் மணமகனும் பின்னாலேயே மனைவியைக் காப்பாற்ற ஓடுகிறார். பின்னாலேயே பதற்றத்தில் உறவினர்களும் ஓடிச் சென்று சூழ்ந்து கொள்கின்றனர்.
இந்த விபத்துக்கு பிறகான மணப்பெண்ணின் வாழ்க்கை குறித்த தகவல்கள் இல்லை. இதெல்லாம் தேவையா? என்பதை பெற்றோர்களும், திருமணம் செய்து கொள்பவர்களும் யோசிக்க வேண்டிய நேரம் இது. உஷாரா இருங்க.. பல சமயங்களில் விளையாட்டு விபரீதமாகி உயிரையும் பறிக்கலாம். அப்புறமா வாழ்க்கைப் பூராவும் கலங்கி நிற்காதீங்க.
கரூர் அருகே திருமணமாகிய மூன்று நாளில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த சின்ன கிணத்துப்பட்டியை சேர்ந்தவர் அழகர்சாமி (50). இவரது மகளான ரம்யா என்ற இளம் பெண்ணுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஜெகதீஸ் என்ற சித்திரைச் செல்வன் என்ற இளைஞருக்கும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு, கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.
திருமணம் முடிந்த கையோடு நேற்று புதுமணப்பெண் ரம்யா தனது கணவருடன் தாய் வீட்டிற்கு விருந்து சாப்பிடும் நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். உறவினர்கள் வெளியே இருந்த நேரத்தில் வீட்டில் இருந்த தனி அறை ஒன்றில் ரம்யா தூக்கு போட்டுள்ளார்.
நீண்ட நேரம் அவர் வெளியே வராததை அறிந்த உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, ரம்யா பிணமாக தூக்கில் தொங்கியுள்ளார். அதிர்ச்சியடைந்த உறவினர்கள் இதுகுறித்து மாயனூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரம்யா உடலை மீட்டு, பிரேத பரிசோதனை செய்வதற்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமணம் நடந்து மூன்று நாளில் இளம் பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சந்தேகத்தையும், உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் உலகநாதபுரம் பகுதியில் வீரையா (50), சித்ரா (45) தம்பதி வசித்து வந்தனர். இதில் வீரையா கோழி இறைச்சி கடையொன்றில் டிரைவராக வேலைச் செய்து வருகிறார்.
இவர்களுக்கு கிஷோர்குமார் (24), திலீப்குமார் (19) என்ற இரு மகன்களும், அஷ்டலட்சுமி (21) என்ற மகளும் உள்ளனர். இதில் கிஷோர் குமார் நடன பயிற்சியாளராக உள்ளார். ஒரு மகனுக்கு திருமணமாகி தனியாக வசிக்கிறார்.
அதே நேரம், திருச்சியில் உள்ள கல்லூரி ஒன்றில் பேஷன் டிசைனிங் படித்து வந்த அஷ்டலட்சுமி காசநோயால் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் வீரையா தனது மகளை டாக்டரிடம் அழைத்து சென்று சிகிச்சை அளித்து வந்தார்.
இதன் காரணமாக கடந்த 2021ம் ஆண்டுக்கு பிறகு அஷ்டலட்சுமி கல்லூரிக்கு செல்லவில்லை. மேலும் ஆன்மிகத்தில் நாட்டம் கொண்ட சித்ரா, “தனது மகளுக்கு நேரம் சரியில்லை.
அவளுக்கு செய்வினை கோளாறு இருக்கிறது. ஒரு ஆண்டுக்கு பிறகு எல்லாம் சரியாகி விடும். டாக்டரிடம் மகளை அழைத்து செல்ல வேண்டாம் என்று கணவரிடம் தொடர்ந்து கூறி வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் சித்ரா, அஷ்டலட்சுமி, திலீப்குமார் ஆகியோர் மட்டும் இருந்தனர். இரவு 3 பேரும் சாப்பிட்டதும், திலீப்குமார் நள்ளிரவு 11 மணி அளவில் தூங்க சென்று விட்டார்.
அப்போது, சித்ரா, தனது மகளுடன் பேசிக் கொண்டிருந்துள்ளார். இதனை தொடர்ந்து நேற்று காலை 5.30 மணி அளவில் திலீப்குமார் எழுந்து பார்த்த போது, அஷ்டலட்சுமி படுக்கையில் இறந்த நிலையில் கிடந்துள்ளார். சித்ரா தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார்.
இது பற்றி அறிந்த கண்டோன்மெண்ட் போலீசார் வீரையாவின் வீட்டுக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது, அஷ்டலட்சுமி உடல் நலக்குறைவால் இறந்து விட்டதும், மகள் இறந்த துக்கம் தாங்காமல் சித்ரா தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து இருவரின் உடல்களையும் கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகள் இறந்த துக்கத்தில் தாய் தூக்குப் போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையம் கொங்கர்பாளையம் தண்டுமாரியம்மன் கோவில் கிணற்றில் சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் சடலம் கிடப்பதாக காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். அந்த பெண் கர்ப்பிணி என்பது தெரிய வந்தது. அதே நேரத்தில் கோபி செட்டிபாளையத்தில் தனது மகள் ஸ்வேதாவை காணவில்லை என அவரது தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்த ஸ்வேதாவிற்கு அதே பகுதியைச் சேர்ந்த லோகேஷுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி இருவரும் தனிமையில் சந்திக்கும் அளவுக்கு வளர்ந்தது.
லோகேஷ், ஸ்வேதாவை தனது பாட்டி வீட்டில் வைத்து தனிமையில் அவ்வப்போது சந்தித்து வந்தார். இதனால் ஸ்வேதா கர்ப்பமானதும் அவரை விட்டுவிட்டு வேறோரு பெண்ணிற்கு பின்னால் சென்று விட்டார். இதனால் ஸ்வேதா லோகேஷ் வேலை செய்யும் இடத்திற்கே சென்று நியாயம் கேட்டுள்ளார்.
தான் கௌரவமாக வாழ வழி செய்யுமாறு கெஞ்சியுள்ளார். இதனை அடுத்து வழக்கம் போல் சந்திக்கும் பாட்டி வீட்டில் ஸ்வேதாவை சமாதானம் செய்துள்ளார். அவர் சமாதானம் ஆனதும் காதலிக்கு உணவு வாங்கி வர லோகேஷ் வெளியில் சென்று விட்டார். அந்த நேரத்தில் ஸ்வேதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
திரும்பி வந்து பார்த்த லோகேசுக்கு என்ன செய்வதென தெரியவில்லை. இறந்த காதலியின் சடலத்தை மறைக்க அதை ஒரு சாக்கு மூட்டையில் கட்டி தூரத்தில் உள்ள விவசாய கிணற்றில் வீசி விட்டு சென்று விட்டார்.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. லோகேஷ் தனிப்படை அமைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். கல்லூரிக்கு சென்ற மாணவி கிணற்றில் கர்ப்பிணியாக சடலமாக மிதந்தது அப்பகுதி முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
வெடுக்குநாறி மலையில் சிதைக்கப்பட்ட விக்கிரகங்கள் இன்றையதினம் மீண்டும் வைக்கப்படும் என்று உறுதி அளித்திருந்த அமைச்சர்கள், நீதிமன்றில் வழக்கு இருப்பதால் அது தொடர்பாக பின்னர் தீர்மானிப்போம் என்று பல்ட்டி அடித்தனர்.
அண்மையில் வவுனியா நெடுங்கேணியில் அமைந்துள்ள வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய வளாகத்தில் இருந்த தெய்வ சின்னங்கள் அழிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து ஆலயத்தின் நிர்வாகத்தினரால் நெடுங்கேணி பொலிஸ் மற்றும் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், அமைச்சர்களான டக்ளஸ், ஜீவன் தொண்டமான, மற்றும் ஜனாதிபதியின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்தவாரம் சர்வமத தலைவர்களின் பங்களிப்புடன் வவுனியா மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டது.
அதன்பிரகாரம் முன்னர் வைக்கப்பட்டிருந்த இடத்தில் மீண்டும் சிவலிங்கம் உட்பட்ட சேதப்படுத்தப்பட்ட சிலைகளை வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை ஏற்கனவே சிலைகள் இருந்த பகுதியில் மீண்டும் வைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
எனினும் நேற்றயதினம் ஆலயநிர்வாகத்தினை மீறி ஆலய வளாகத்தி்ல் சிலதரப்புக்கள் தான்தோன்றித்தனமாக புணரமைப்பு பணிகளை மேற்கொண்டமையால் மூன்று பேர் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டதுடன், விக்கிரகங்களை நிலைநிறுத்தும் நிர்வாகத்தின் எண்ணம் ஈடேறாமால் போயிருந்தது.
இதேவேளை எமது பிரசன்னத்துடன் இன்றையதினம் விக்கிரகங்கள் நிச்சயம் வைக்கப்படும் என்று அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஜீவன் தொண்டமான் ஆகியோர் அனைத்து தரப்பிற்கும் உறுதிபடத் தெரிவித்திருந்தனர்.
அந்தவகையில் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, ஜீவன் தொண்டமான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான கு.திலீபன், ம.ராமேஸ்வரன் ஆகியோரை உள்ளடக்கிய குழுவினர் இன்றைய தினம் காலை ஆலயத்திற்கு வருகைதந்தனர்.
எனினும் நீதிமன்றில் வழக்கு நிலுவையில் இருப்பதால் தற்போது விக்கிரகங்களை வைக்கமுடியாத நிலை ஏற்ப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு பின்னர் கலந்துரையாடி இது தொடர்பாக தீர்மானிக்க முடியும் என அமைச்சர்கள்தெரிவித்தனர். அவர்களது கருத்து அங்கிருந்தவர்கள் மத்தியில் ஏமாற்றத்தையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது.
இதேவேளை நீங்கள் சிலைகளை வைப்போம் என்று அறிக்கை விடும் போது நீதிமன்றில் வழக்கு இருப்பது தெரியவில்லையா என ஊடகவியலாளர்களால் அமைச்சர்களிடம் கேட்கப்பட்டபோது அதற்கான உரிய பதில்கள் அவர்களால் வழங்கப்படவில்லை.
அத்துடன் வருகைதந்த அமைச்சர்கள் குழு ஆலயத்தின் பிரதான மலைப்பகுதிக்கு செல்லாமல் கீழே நின்று அவதானித்து விட்டு திரும்பிச்சென்றனர்.
இதனால் இன்றையதினம் விக்கிரகங்களை வைக்கமுடியும் என்ற நம்பிக்கையில் இருந்த ஆலய நிர்வாகத்தினர் ஏமாற்றமும் கவலையும் அடைந்தனர்.
நேற்றயதினம் ஒரு சிலர் எடுத்த தன்னிச்சையான முடிவுகளின் காரணத்தால் இந்த நிலை ஏற்ப்பட்டுள்ளதுடன், இது எம்மை ஏமாற்றும் செயற்பாடாகவே இருப்பதாக ஆலயத்தின் நிர்வாகத்தினர் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.
இன்றைய இளம் தலைமுறையினர் எதற்கெடுத்தாலும் மன அழுத்தம், சோர்வு, விபரீத முடிவுகள் என தற்கொலை செய்து கொள்கின்றனர். தற்கொலைகள் தீர்வல்ல என்பது குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடையே ஏற்படுத்த பள்ளி கல்லூரி நிர்வாகங்கள் மற்றும் அரசு சார்பில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இருந்தாலும் உடனடி முடிவாக தற்கொலைகளை நாட ஆரம்பித்து பெரும் சீரழிவுகளை ஏற்படுத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் குப்பிநாயக்கன்பட்டியில் வசித்து வருபவர் முருகன்.
இவருடைய மகள் 25 வயது மகேஸ்வரி. இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்.எட். 2ம் ஆண்டு படித்து வருகிறார். இதற்காக அங்கேயே ஒரு விடுதியில் தங்கி படித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு விடுதியின் மேல்தளத்தில் மகேஸ்வரி செல்போனில் பேசிக் கொண்டே இருந்ததை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கவனித்துள்ளனர். கத்தி , கூச்சலிட்டவாறே இரவு 11.30 மணியளவில் திடீரென மரக்கிளைகள் ஒடிந்து விழுந்த சத்தம் கேட்டது. உடனே மற்ற மாணவிகள் ஓடிவந்து பார்த்தனர்.
அங்கே தரையில் ரத்த வெள்ளத்தில் மகேஸ்வரி உயிருக்கு போராடி கொண்டிருந்தார். சக மாணவிகள் உடனடியாக இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் மூலம் மகேஸ்வரியை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மகேஸ்வரி நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன் மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தடயவியல் நிபுணர்கள் அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். மாணவி விடுதியின் மேல் தளத்தில் இருந்து தவறி விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா? வேறு யாரும் அவரை தள்ளி கொலை செய்தனரா?
அதற்கான காரணங்கள் என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கல்லூரி மாணவி திடீரென மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.