மோட்டார் சைக்கிளில் சென்ற காதலர்கள்… வழிமறித்து காதலியைக் கடத்திச் சென்ற போலி போலீஸ்!!

ராமநாதபுரத்தில்..

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியை சேர்ந்த ரோபாஸ்டன், அதே பகுதியை சேர்ந்த 21 வயதான இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் ஊட்டிக்கு பைக்கில் செல்ல திட்டமிட்டனர்.

இதையடுத்து கடந்த 7 ஆம் தேதி சாயல்குடியில் இருந்து ஊட்டிக்கு பைக்கில் புறப்பட்டனர். மதுரை, ஒட்டன்சத்திரம், தாராபுரம் வழியாக சென்றனர். பல்லடம் அருகே வந்த போது அவர்களது பைக்கை இளைஞர் ஒருவர் பின்தொடர்ந்து சென்றுள்ளார்.

சிறிது தூரத்தில் திடீரென 2 பேரையும் வழிமறித்த அந்த இளைஞர் நான் போலிஸ், உங்களை பார்க்கும் போது எனக்கு சந்தேகமாக இருக்கிறது, உங்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார். அதனை அடுத்து அந்த பெண்ணை அங்கேயே நிற்க சொல்லிவிட்டு, காதலன் ரோபாஸ்டனை சிறிது தூரம் அழைத்து சென்றுள்ளார்.

பிறகு அவரிம், நீ இங்கேயே இரு, நான் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்விட்டு வருகிறேன் என கூறிவிட்டு கூறிவிட்டு சென்றுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த சந்தேகமடைந்த ரோபாஸ்டன் உடனே காதலி நிற்குமிடத்திற்கு சென்று பார்த்தார்.

அப்போது அங்கு காதலியை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அப்பகுதியில் தேடி பார்த்தார். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. உடனே இது குறித்து பல்லடம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இந்த புகாரினை பெற்று கொண்ட போலீசார் மாவட்டம் முழுவதும் உள்ள சோதனை சாவடிகளுக்கு தகவல் தெரிவித்து வாலிபரை பிடிக்க உத்தரவிட்டனர். இதைத்தொடர்ந்து அந்த பெண்ணின் செல்போன் எண்ணை கொண்டும், சிசிடிவி காட்சிகள் அடிப்படையிலும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் கடத்தப்பட்ட இளம்பெண் மதுரையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மதுரை சென்ற பல்லடம் போலீசார் இளம்பெண்ணை மீட்டனர். ஆனால் போலீசார் வருவதை அறிந்த அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

விசாரணையில் அவர் திருப்பூரை சேர்ந்த கணேசன் என்பது தெரிய வந்தது. பின்னர் தலைமறைவாக இருந்த அவரையும் கைது செய்தனர். போலீசார் என கூறி கடத்தல் மற்றும் இரு சக்கர வாகன திருட்டு உட்பட 7 வழக்குகள் அவர் மீது நிலுவையில் உள்ளது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து அவரை கைது செய்த பல்லடம் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

8 வயது சிறுவனை கொடூரமாக கொலை செய்த திருநங்கை : சாக்கடையில் மீட்டெடுக்கப்பட்ட சடலம்!!

ஹைதராபாத்தில்..

ஹைதராபாத்தில் 8 வயது சிறுவனை கொடூரமாக கொலை செய்து சாக்கடையில் வீசிய திருநங்கையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்திலுள்ள சானத் நகரில் சாக்கடையில் சிறுவனின் உடல் மூட்டையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து பொலிஸார் நடத்திய விசாரணையில் அது வாசிம்கானின் மகனான, அப்துல் வாகித் என்ற 8 வயது சிறுவன் என தெரிய வந்துள்ளது. அப்பகுதியிலுள்ள சீசீடிவியில் பார்க்கும் போது திருநங்கையான இம்ரான், மற்றொருவரோடு சாக்கு மூட்டையில் உடலை கொண்டு வந்து சாக்கடைக்குள் வீசியது பதிவாகியுள்ளது.

இதனை தொடர்ந்து குற்றவாளியான திருநங்கை இம்ரானை காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்துள்ளனர். விசாரணையில் இம்ரான் 8 வயது சிறுவனை அடித்து சித்திரவதை செய்ததோடு, சிறுவனை தண்ணீர் நிரப்பிய வாளியில் தலையை வலுக்கட்டாயமாக நனைத்து கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

இம்ரானுக்கு வயிறு சரியில்லை என சிறுவனின் தந்தையிடம் ORS வாங்கி கொடுத்து விட சொல்லியிருக்கிறார். அதனை கொண்டு வந்த போது சிறுவனை கொடூரமாக கொலை செய்திருக்கிறார்.

சிறுவனின் தந்தை வாசிம்கான் வீட்டருகே வசிக்கும் திருநங்கை இம்ரானிடம், 5 லட்சம் ரூபாய் சீட்டு போட்டுள்ளார். கடந்த வாரம் வாசிம்கான் சீட்டை எடுத்த நிலையில், இம்ரான் அந்த பணத்தை தராமல் இழுத்தடித்ததாக கூறப்படுகிறது.

இதனால் இருதரப்புக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் வாசிம்கானின் 8 வயது மகன் காணாமல் போயுள்ளார். அதற்கு பலிவாங்கவே சிறுவனை கொலை செய்ததாக, திருநங்கை இம்ரான் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார். மேலும் இம்ரான் மீது வழக்கு தொடரப்பட்டு நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கபடும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

24 விரல்களோடு பிறந்த அதிசய குழந்தை.. பூரிப்புடன் கண்டு களிக்கும் மக்கள்!!

தெலங்கானாவில்..

தெலங்கானா மாநிலம், நிஜாமாபாத் பகுதியை அடுத்துள்ளது யர்ஜட்லா என்ற கிராமம். இங்கு வசித்து வரும் சுங்கர்பு சாகர் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராவளி என்ற இளம்பெண்ணுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணமானது. இவர்களுக்கு திருமணம் முடிந்து அண்மையில் ராவளி கற்பமுற்றிருந்தார்.

இந்த சூழலில் ராவளிக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்னர் திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் அவரை கொரட்லா பகுதியிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கே இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் அந்த குழந்தைக்கு 24 விரல்கள் இருந்துள்ளது.

இதனால் மருத்துவர்கள், பெற்றோர்கள், அங்கிருந்தவர்கள் இந்த குழந்தையை அதிசயமாக பார்க்கின்றனர். ஏனெனில் பொதுவாக கைகளில் 5+5 என 10 விரல்களும், கால்களில் 5+5 என 10 விரல்களும் தான் இருக்கும்.

ஆனால் இந்த குழந்தைக்கு கைகளில் 6+6 என 12 விரல்களும், கால்களில் 6+6 என 12 விரல்களும் உள்ளன. எனவே இந்த குழந்தையை அனைவரும் அதிசயமாக கண்டு செல்கின்றனர்.

இந்த குழந்தையின் பெற்றோர், தாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், தங்கள் மகனை தெரியாதவர்கள் கூட வாழ்த்துவதாகவும், தங்கள் மகனை கடவுள் கொடுத்த வரமாக கருதி, அவனை இளவரசன் போல் வளர்ப்போம் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதுபோன்ற சம்பவங்கள் மிகவும் அரிது என்று மருத்துவர்கள் தெரிவித்திருந்தாலும் கூட, ஏற்கனவே பலமுறை இதுபோன்று நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இரட்டை உடலுடன், தலையுடன், கால்களுடன் என அதிசய குழந்தைகள் பிறந்த செய்திகள் ஏற்கனவே வெளியாகி வருகிறது. இதுபோல் இருப்பது சில நேரங்களில் ஊட்டச்சத்து குறைபாடு என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே கர்ப்பமாக இருக்கும் பெண்கள் நல்ல ஆரோக்கியமான சாப்பாட்டை சாப்பிட்டு, மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றும், நேரத்துக்கு சாப்பிட வேண்டும் என்றும், அவரை மிகவும் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

துபாய்க்கு கூலி வேலைக்கு சென்ற தமிழக இளைஞருக்கு ஒரே இரவில் அடித்த அதிஷ்டம்!!

ஆன்லைனில்..

ஆன்லைனில் விளையாடினாலும் அல்லது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வழியாக பயணித்தாலும், பிக் டிக்கெட் லாட்டரியில் நுழைவது எளிதானது,அபுதாபி சர்வதேச விமான நிலையத்திலோ அல்லது அல் ஐன் டூட்டி ஃப்ரீயிலோ டிக்கெட் கவுன்டர்களில் டிக்கெட்டுகளை வாங்கலாம், பாஸ்போர்ட் போன்ற செல்லுபடியாகும் புகைப்பட அடையாளத்தை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

உங்கள் டிக்கெட் உடனடியாக வழங்கப்படும் நீங்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு வெளியே வாழ்ந்தாலும் ஆன்லைனில் விளையாட்டில் பங்கேற்கலாம்,எனவே இது இந்தியாவிலும் பிற நாடுகளிலும் கிடைக்கும்,ஆன்லைன் டிக்கெட்டுகள் 24 மணி நேரத்திற்குள் மின்னஞ்சல் மூலம் உங்களுக்கு வழங்கப்படும்.

நீங்கள் ஆன்லைனில் விளையாடுகிறீர்கள் என்றால், அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கணக்கைப் பதிவு செய்ய வேண்டும் பாஸ்போர்ட் எண் போன்ற சரியான புகைப்பட அடையாளத்திலிருந்து விவரங்களை நீங்கள் வழங்க வேண்டும்.

ரொக்கப் பெறுவதற்கான டிக்கெட்டின் விலை AED 500 (தோராயமாக 10,000 ரூபாய்) ஒரே பரிவர்த்தனையில் இரண்டு டிக்கெட்டுகளை வாங்கினால் மூன்றில் ஒரு பங்கு இலவசம் இவ்வாறு அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் தினகர் இவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்,இந்த கொரோனா காலத்திலும் அவர் அங்கு கடுமையாக உழைத்து குடும்பத்துக்கு வருமானம் ஈட்டி வந்தார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆன்லைனில் லாட்டரி டிக்கெட் வாங்கலாம்,பரிசு விழுந்தால் ஜாக்பட்தான் என்று நினைத்து பலரும் ஆன்லைனில் லாட்டரி வாங்குவார்கள்,இதேபோல் தினகருக்கும் ஆன்லைனில் லாட்டரி டிக்கெட் வாங்க வேண்டும் என்ற ஆசை மேலோங்கியது ‘பரிசு விழுந்தால் நமக்கு லக்தான்’ என்று நினைத்து தினகர் குலுக்கல் லாட்டரி டிக்கெட் வாங்கினார்.

லாட்டரி சீட்டு குலுக்கல் நாளில் ரிசல்ட்டை பார்த்த தினகருக்கு இன்ப அதிர்ச்சி கார்த்திருந்தது,ஆம்,அவருக்கு லாட்டரி சீட்டு பரிசு விழுந்து விட்டது லாட்டரியில் ரூ.20 கோடி பரிசு விழுந்தது குறித்து தொழிலாளி தினகர் மகிழ்ச்சி பொங்க கூறுகையில், வாங்கிய முதல் லாட்டரியிலேயே ரூ.20 கோடி பரிசு கிடைத்ததால் இன்ப அதிர்ச்சியில் மூழ்கியுள்ளேன்.

லட்சக்கணக்கில் சம்பளம்… வேலையை உதறி விட்டு.. காதலிக்காக கொள்ளையனாக மாறிய தமிழக பொறியியலாளர்!!

திருவள்ளூரில்..

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஹேமந்த் குமார் ரகு படிப்பில் கெட்டிக்காரர். சென்னை ஐஐடியில் படித்து முடித்து விட்டு, துபாயில் இன்ஜினியராக பணியாற்றினார்.

அண்மையில் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்தவர் அதன் பின்னர் துபாய்க்கு திரும்பி செல்லவில்லை. இதனையடுத்து பீகாருக்கு வேலைக்குச் சென்றிருந்தார். அங்கு நடன அழகியோடு ரகுக்கு காதல் ஏற்பட்டுள்ளது.

அந்த நடன அழகி காதலியுடன் ஊர் சுற்றிய ரகு, தான் சம்பாதித்த பணத்தை தண்ணீராக செலவு செய்தார். ஒரு கட்டத்தில் அவரிடம் இருந்த பணம் காலியானது. எனினும் அவர் துபாயில் இருந்த நிறுவனத்திலும் பணிபுரிந்து வந்ததால் அங்கிருந்து பணம் வந்தது. இதனையும் செலவு செய்தார்.

அதே நேரம் நடன அழகியின் அழகில் மயங்கி கிடந்த ஹேமந்த் குமாரால் சரியாக வேலைச் செய்ய முடியவில்லை. பீகாரில் இருக்கும் காதலியின் நினைவு அவரை வாட்டி எடுத்தது. இதனால் கைநிறைய சம்பளத்தை வாங்கி கொடுத்த துபாய் வேலையை முழுமையாக உதறி விட்டு பீகாருக்கு திரும்பினார்.

இதன்பின்னர் கையில் இருந்த பணத்தை காதலிக்காக செலவழிக்க தொடங்கினார். இப்படி சிறுக சிறுக சேமித்த பணம் அனைத்தையும் ஹேமந்த் இழந்தார். நடன அழகியான காதலி சொகுசாக வாழ்பவர். இதனால் அவரது செலவினங்களும் எல்லை மீறியே இருந்துள்ளது.

இதனால் தன்னுடைய 15 ஆண்டுகால சேமிப்பு பணம் மொத்தத்தையும் காதலிக்காக செலவு செய்துள்ளார். ஆனாலும் அவரின் காதலி மீண்டும் மீண்டும் நிறைய கேட்க தொடங்கியதால் இன்ஜினியராக இருந்த ரகு கொள்ளையனாக அவதாரம் எடுத்துள்ளார்.

செயின் பறிப்பு மற்றும் கொள்ளையில் ஈடுபட்டிருக்கிறார். இதனால் தன்னுடைய 40 வயதில் காதலிக்காக சிறை கம்பிகளை தற்போது எண்ணிக் கொண்டிருக்கிறார். சென்னை ஐஐடியில் இன்ஜினியராக படிப்பை முடித்து விட்டு காதலுக்காக கொள்ளையனாக மாறிய இந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

மனைவி கழுத்தை அறுத்த கணவன்.. தப்பியோடியவரை கைது செய்த போலீசார்!!

தென்காசியில்..

நவமணி – ராஜேஸ்வரி தம்பதிநவமணி – ராஜேஸ்வரி தம்பதி
கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில் ராஜேஸ்வரி தனியாக வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் வசித்து வந்தார்.

தென்காசி மாவட்டம் சுரண்டை காமராஜ்நகர் பகுதியை சேர்ந்தவர் நவமணி (53). இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ராஜேஸ்வரி(43)-க்கும் இவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்துள்ளது. இந்தநிலையில் ராஜேஸ்வரி தனியாக வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் வசித்து வந்தார்.

இந்நிலையில் நவமணி அவரது மனைவியைப் பார்க்க சென்ற போது, இரண்டு பேருக்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது வீட்டிலிருந்த அரிவாளை எடுத்து மனைவியின் கழுத்தை அறுத்துள்ளார் நவமணி.

இதில் படுகாயம் அடைந்த ராஜேஷ்வரியின் அலறல் சத்தம் கேட்கவே, அருகில் இருந்தவர்கள் உடனடியாக காவல்துறையினர்க்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையில் நவமணி அந்த இடத்தை விட்டு தப்பி சென்றுள்ளார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்க்கு வந்த சுரண்டை போலீசார் படுகாயம் அடைந்த பெண்ணை மீட்டு தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து சுரண்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கணவரை வலைவீசி தேடி வந்தனர்.

சம்பவத்தைத் தொடர்ந்து போலீசார் தப்பி ஓடிய கணவனை காவல்துறை கைது செய்தது. எதற்காக நடந்தது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவன் மனைவியை அரிவாளால் வெட்டிய சம்பவம் சுரண்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஐஸ்கீரிம் சாப்பிட்ட சிறுவனுக்கு நேர்ந்த சோகம்.. தந்தையின் சகோதரி கைது!!

கேரளாவில்..

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் ஐஸ்கிரீம் சாப்பிட்ட 6ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா காலத்துக்கு பின்பான சமூகம், பணம், பொறாமை, வக்கிரம் என குணங்களில் மனிதத்தை இழந்து வெறிப்பிடித்தாற் போல், பாலியல் குற்றங்கள், கொலை, கொள்ளை என அழிவை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறது.

தாய், தந்தையை கொலைச் செய்யும் மகன், காதலனுக்கு விஷம் கொடுத்து கொல்லும் காதலி, மனைவியைக் கொல்கிற கணவன், கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்று புதைக்கும் மனைவி என சமூகம் புரையோட துவங்கியுள்ளது.

அதே போன்று, 12 வயது சிறுவனுக்கு அவனது அத்தையே ஐஸ்க்ரீமில் விஷம் கலந்து கொடுத்து கொலைச் செய்துள்ளது கேரளாவை அதிர செய்துள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் அரிகுளத்தைச் சேர்ந்தவர் முகமது அலி.

இவரது 12 வயது மகன் அகமது ஹசன் ரிபாயி. அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் அகமது 6ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில், கடந்த ஞாயிறன்று, அகமதுவுக்கு அவனது அத்தை, ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்துள்ளார்.

அத்தைக் கொடுத்த ஐஸ்க்ரீமைச் சாப்பிட்ட பின்னர், தொடர்ந்து வாந்தி எடுத்த சிறுவன், அதன் பின்னர் சோர்வாகி இருக்கிறான். மகன் மிகவும் சோர்ந்து காணப்பட்ட நிலையில், அவசர அவசரமாக பதறியடித்தப்படி சிறுவனைக் கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

ஆனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல், அடுத்த நாள் அகமது உயிரிழந்துள்ளான். சிறுவனின் திடீர் சோர்வுக்கும், வாந்திக்கும் காரணம் ஐஸ்க்ரீம் சாப்பிட்டது தான் என்று உறவினர்களும், பெற்றோர்களும் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கையில், சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் குறிப்பிட்ட ஐஸ்க்ரீம் கடையில் ஆய்வு செய்தனர்.

அப்போது, அந்த கடையில் சேகரித்த ஐஸ்கிரீம் மாதிரிகளில் ஆரோக்கியமற்ற எதுவும் இல்லை என்றாலும், ஐஸ்க்ரீம் கடை தற்காலிகமாக மூடப்பட்டது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், சிறுவன் அகமதுவின் பிரேதப் பரிசோதனை அறிக்கையும் வெளியானது. பரிசோதனை அறிக்கையில், சிறுவனின் உடலில் அம்மோனியம் பாஸ்பைட் என்கிற விஷம் கலந்திருப்பது தெரிய வந்தது.

போலீசாரின் சந்தேகப் பார்வை, ஐஸ்க்ரீம் வாங்கிக் கொடுத்த சிறுவனின் அத்தை மீது திரும்பியது. இதையடுத்து போலீசாரின் தீவிர விசாரணையில், அகமதுவின் அத்தை தாஹிரா (34) குற்றத்தை ஒப்புக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

எதற்காக அகமதுவைக் கொலைச் செய்தார் என்பது இன்னும் தெரியவில்லை. இரு குடும்பங்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கொலைக்கான காரணங்கள் தாஹிரா சொன்ன பிறகே வெளிவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை.. காதல் தோல்வியால் சோகம்!!

திருச்சியில்..

கரூா்-திருச்சி இடையே நாள்தோறும் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. வழக்கம்போல் கரூரிலிருந்து வந்த ரயிலானது கோட்டை ரயில் நிலைய பகுதிக்கு வந்தபோது, திடீரென இளைஞா் ஒருவா் ரயில் முன் பாய்ந்துள்ளார்.

இதனை பார்த்து ரயில் என்ஜின் பணியாளா்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக, ரயில் முன்பாக பாய்ந்த நபரை தேடினா். அப்போது, அந்த இளைஞரின் சடலம் என்ஜின் பெட்டியுடன் மற்றொரு பெட்டியை இணைக்கும் பகுதியில் சிக்கிக் கொண்டிருப்பது தெரிந்தது.

தகவலின்பேரில், ரயில்வே பணிமனை ஊழியா்கள் விரைந்து வந்து என்ஜின் பகுதியில் சிக்கியிருந்த சடலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனா். தற்கொலை செய்துக்கொண்ட நபா் குறித்து ரயில்வே போலீசர் விசாரணை நடத்தினா்.

இவர், திருச்சி தென்னூா் வாமடம் பகுதியைச் சோ்ந்த பிரேம்குமார் (23) என்பதும், இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ள அவா், தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிந்ததும் தெரிய வந்தது.

காதல் தோல்வியால் மனமுடைந்து காணப்பட்ட பிரேம்குமார், சில நாள்களுக்கு மருத்துவ சிகிச்சையும் எடுத்துள்ளார். எனினும் விரக்தியில் இருந்த சூழலில், காதல் தோல்வி காரணமாக அவா் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனா். தொடா்ந்து விசாரணை நடைபெறுகிறது.

புகையிரத்தில் செல்பி எடுக்க சென்ற சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்!!

செல்பி..

கொழும்பில் இருந்து பதுளை நோக்கி சென்ற விஷேட தொடருந்தில் இருந்து விழுந்து 15 வயது சிறுவன் ஒருவன் படுகாயமடைந்துள்ளார். ஒஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன பகுதிகளுக்கு இடையில் நேற்று மாலை தொடருந்தில் இருந்து தவறி விழுந்து,

பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் தியத்தலாவ ஆதார வைத்தியசாலையில் குறித்த சிறுவன் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிஹான் என்ற 15 வயது சிறுவனே விபத்தில் சிக்கியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். ரயிலின் நடைபாதையில் வந்ததாகக் கூறப்படும் குறித்த சிறுவன் செல்பி எடுக்கச் சென்று தண்டவாளத்தில் மோதி தொடருந்தில் இருந்து விழுந்ததாக ரயில் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

காயமடைந்த சிறுவன் அதே தொடருந்தில் ஹப்புத்தளை ரயில் நிலையத்திற்கு அழைத்துச் சென்று 1990 சுவசெரிய அம்புலன்ஸ் வாகனத்தில் தியத்தலாவ ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மே மாதம் வரை தொடரும் வெப்பம்.. இலங்கையர்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!!

தொடரும் வெப்பம்..

நாட்டில் நீர் பாவனை 10 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றம் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் அதிக வெப்பம் காரணமாக இவ்வாறு நீர் பாவனை அதிகரித்துள்ளதாக சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பொறியியலாளர் என்.யு.கே ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக மக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் விநியோகிக்கப்படும் நீரை வீட்டுத் தேவைகளுக்கு மாத்திரம் பயன்படுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தற்போது நிலவும் அதிக வெப்பம் மே மாதம் இறுதி வரை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நெடுந்தீவு வயோதிபர்களை இதற்காகவே கொலை செய்தேன்.. கொலையாளி அதிர்ச்சி வாக்குமூலம்!!

நெடுந்தீவில்..

யாழ் நெடுந்தீவில் நேற்றைய தினம் (22-04-2023) வயோதிபர்கள் 5 பேரை கொடூரமாகக் கொலை செய்துவிட்டு தப்பி புங்குடுதீவில் தலைமறைவாகியிருந்த நபரை 24 மணித்தியாலத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரான கொலையாளியிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டபோது அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

“அவர்களின் வீட்டில் தங்கியிருந்தேன். எனக்கு பணம் தேவை என்பதனால் அவர்கள் அணிந்திருந்த நகைளை அபகரிக்க முடிவெடுத்தேன். தனியாக நகைகளை கொள்ளையிட்டால் பிடித்துவிடுவார்கள், சம்பவத்தை திசை திருப்பவே அனைவரையும் கொலை செய்தேன்” என்று கைது செய்யப்பட்டவர் பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 26 தங்கப் பவுண் நகைகள், ஆடைகள் மற்றும் அலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் கூறினர். நெடுந்தீவு மாவிலி இறங்குதுறையை அண்டிய 12ஆம் வட்டாரத்தில் கடற்படை முகாமுக்கு அண்மையிலுள்ள வீடொன்றில் இருந்து வெட்டுக்காயங்களுடன் சடலங்கள் மீட்கப்பட்டன.

100 வயது மூதாட்டி ஒருவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஞ்சுல செனரத்தின் கட்டளையில் யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் விஷாந்தின் வழிகாட்டலில் பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் துரித விசாரணைகளை முன்னெடுத்தனர்.

பொலிஸ் குழுவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நெடுந்தீவில் நடமாடிவிட்டு நேற்றுக் காலை அங்கிருந்து வெளியேறிச் சென்ற நபரை புங்குடுதீவில் வைத்து நேற்றிரவு கைது செய்தனர்.

ஜேர்மனியில் கொலை முயற்சி வழக்கொன்றில் குற்றவாளியாகக் கண்டறிந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டு 51 வயது நபரே கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து அதிகளவு தங்கநகைகள் கைப்பற்றப்பட்டன.

அதுதொடர்பில் விசாரணை மேற்கொண்ட போதே சந்தேக நபர் தானே கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். “நான் நெடுந்தீவு வந்தால் குறித்த வயோதிபர்களின் வீட்டில்தான் தங்கிச் செல்வேன்.

அதுபோன்று கடந்த சில தினங்களுக்கு முன் வந்து தங்கியிருந்தேன். அங்கு வெளிநாட்டிலிருந்து வந்திருந்தவர்கள் நகைகள் அணிந்திருந்தனர். அனைவரது நகைகளையும் அபகரித்து விற்பனை செய்து வரும் பணத்தில் கடவுச்சீட்டு பெற்று நான் மீளவும் ஜேர்மனிக்கு செல்ல திட்டமிட்டேன்.

அதனால் நேற்று அதிகாலை 4.30 பின்னர் நித்திரையிலிருந்த அனைவரையும் கொலை செய்துவிட்டு நகைகளை எடுத்துக்கொண்டு தப்பிக்க எண்ணினேன். நகைகளை மட்டும் அபகரித்துச் சென்றால் பொலிஸார் எளிதில் பிடித்துவிடுவார்கள், அதனால் பொலிஸ் விசாரணையை திசை திருப்ப அனைவரையும் கொலை செய்தேன்” என்று சந்தேக நபர் பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபரை நெடுந்தீவுக்கு அழைத்துச் சென்று ஏனைய சான்றுப்பொருள்களை மீட்கும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். சந்தேக நபர் இன்று மாலை ஊர்காவற்றுறை நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்படவுள்ளார்.

ஐரோப்பாவில் வெப்ப அலை காரணமாக15700 பேர் உயிரிழப்பு!!

ஐரோப்பாவில்..

ஐரோப்பாவில் வெப்ப அலை காரணமாக, 15700 பேர் உயிரிழந்துள்ளதாக உலக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உலக வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வறட்சி, வெள்ளம், வெப்ப அலைகள் காரணமாக இந்தியா உட்பட பல நாடுகளை கடுமையாக பாதித்துள்ளதுடன், பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் மூன்று வாகனங்கள் மோதி விபத்து : மாணவன் உள்ளிட்ட இருவர் படுகாயம்!!

விபத்து..

வவுனியாவில் மூன்று வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில், மாணவன் உள்ளிட்ட இருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (23.04) இடம்பெற்ற இவ் விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, வேப்பங்குளம் பகுதியில் இருந்து மன்னார் வீதி வழியாக துவிச்சக்கர வண்டியில் சென்ற மாணவன் யாழ் ஐஸ்கிறீம் வீதியில் திரும்ப முற்பட்ட போது,

அதே திசையில் வந்த பட்டா ரக வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து மாணவனை மோதியதுடன், எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடனும் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் மாணவன் மற்றும் மோட்டார் சைக்கிள் சாரதி ஆகிய இருவரும் பயடுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாணவனின் உடல் நிலை மோசமடைந்துள்ளதால் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து தொடர்பில் நெளுக்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

இலங்கையில் மனைவியை கடத்தி பரபரப்பை ஏற்படுத்திய கணவன்!!

சிலாபத்தில் இளம் மனைவியை கடத்திச் சென்ற கணவன் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஹலவத்த பகுதியில் கணவனுடன் முரண்பட்டுக் கொண்டு தாயின் வீட்டுக்கு சென்ற 18 வயதான இளம் மனைவி 19 வயது கணவனால் கடத்தப்பட்டுள்ளார்.

குறித்த கடத்தல் சம்பவம் கடந்த 19ஆம் திகதி இடம்பெற்றுள்ளதுடன், குறித்த மனைவியின் கணவர் உட்பட ஐவர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மனைவியை கடத்தி பரபரப்பை ஏற்படுத்திய கணவன் | Husband Kidnaped Wife Couple Love Story

கடத்தப்பட்ட பெண் ஹலவத்த பிரதேசத்தில் உள்ள முன்னணி பாடசாலை ஒன்றில் கல்வி கற்றபோது, இளைஞன் ஒருவருடன் காதல் உறவு கொண்டிருந்தார்.

பின்னர் அந்த இளைஞனுடன் இரகசியமாக சென்று திருமணம் செய்து கொண்டு பல மாதங்கள் அவருடன் வாழ்ந்து வந்துள்ளார். எனினும் இளவயதான தம்பதியருக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அவர் தனது தாயின் வீட்டுக்கு சென்றுள்ளார்.

வீட்டில் வந்து தங்கியிருந்த மனைவியை, அவரது கணவர் மற்றும் சிலர் வந்து கடத்திச் சென்றுள்ளனர். இதன் போது இளம் மனைவியின் தாய் மட்டுமே இருந்தமை தெரியவந்துள்ளது.

தாயை தாக்கிவிட்டு திருமணமான பெண் கடத்தப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றர்.

இலங்கையில் ஒழுக்கத்தை மீறி புத்தாண்டு கொண்டாடிய குழுவுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை!!

ஒழுக்கக்கேடான அம்சங்கள் அடங்கிய புத்தாண்டு கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதற்கு புத்தசாசன மற்றும் கலாசார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தீர்மானித்துள்ளார்.

குறித்த புத்தாண்டு கொண்டாட்டங்கள் மற்றும் விளையாட்டுக்கள் தொடர்பான தகவல்களை கண்டறிய விசேட குழுவொன்று ஈடுபடுத்தப்படும் என்று புத்த சாசன அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒழுக்கக்கேடான புத்தாண்டு கொண்டாட்டங்கள் பல நடத்தப்பட்டுள்ளதாக அமைச்சுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

மேலும் பாலியல் செயல்பாடுகளை முன்னிலைப்படுத்தும் அம்சங்களுடன் புத்தாண்டு விளையாட்டுக்கள் நடத்தப்பட்டமை குறித்து குறித்து சமூக ஊடகங்களில் பல புகைப்படங்கள் வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.

உலகில் வாழ பிடிக்கவில்லை.. என் சாவுக்கு காரணம் அவர்தான்.. நடிகை அகான்ஷா துபேயின் கண்ணீர் வீடியோ!!

அகன்ஷா..

நடிகை அகன்ஷா துபே தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கண்ணீர் மல்க பேசியிருந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. பிரபல போஜ்புரி நடிகை அகன்ஷா துபே.

இவர் கடந்த மார்ச் 26ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஓட்டல் அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது புதிய பாடல் யே ஆரா கபி ஹரா எனும் பாடல் வெளியானது.

பாடல் வெளியீட்டிற்கு முன்னரோ அல்லது பின்னரோ அவர் எப்போது இறந்தார் என தெரியவில்லை, இறப்பதற்கு முதல் நாள் கூட நடிகை துபே ஒரு நடன வீடியோவை வெளியிட்டிருந்தார்.

அதில் கருப்பு நிற உடையில் அவர் துள்ளி குதித்து ஆடும் வீடியோவை அவரே தொலைபேசியை பிடித்துக் கொண்டு பதிவு செய்து இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் அவர் மரணமடைந்தார் என்பதை அவருடைய ரசிகர்கள் ஏற்க மறுத்தனர்.

அவருக்கு இன்ஸ்டாவில் 1.7 மில்லியன் ஃபாலோயர்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் துபேயின் தற்கொலை குறித்து அவரது தாய் அளித்த புகாரின் பேரில் அகன்ஷா துபேயின் முன்னாள் காதலர் அமர்சிங் என்பவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் மேலும் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் அகன்ஷா துபே தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு பேசிய வீடியோ ஒன்றும் தற்போது வெளியாகியுள்ளது.

அதில் அவர் மக்களுடன் நான் பேச போவது இதுதான் கடைசி. எனக்கு இந்த உடலில் இருக்க விரும்பவில்லை. எனது மரணத்திற்கு முன்னாள் காதலர் சமர்சிங்தான் காரணம் என குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கெனவே சமர்சிங் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ நடிகர் சமர்சிங்கிற்கு எதிராக வலுவான ஆதாரமாக இருப்பதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் இந்த வீடியோ உண்மையாகவே துபேயின் மரணத்திற்கு முன்பு எடுக்கப்பட்டதா அல்லது உள்நோக்கத்துடன் தயாரிக்கப்பட்டதா என்பதை அறிய தடயவியல் சோதனைக்கு காவல் துறையினர் அனுப்பியுள்ளனர். சமர்சிங்குடன் தொடர்பில் இருந்தவர்களிடமும் விசாரணை நடத்தப்படுகிறது.

அகன்ஷா துபே ஹோட்டல் சோமேந்திரா ரெசிடென்சியில் நள்ளிரவில் ஒரு நபருடன் ஹோட்டலுக்குள் நுழைவதும் அதன் பின்னர் அந்த நபர் நடிகை துபேயை அவருடைய அறைக்கு அழைத்து செல்வதையும் சிசிடிவி காட்சிகளில் தெளிவாக காட்டியிருந்தது. இருவரும் அறையில் 17 நிமிடங்கள் பேசி கொண்டனர்.

ஹோட்டலுக்கு அகான்ஷாவும் அந்த நபரும் நள்ளிரவு 1.30 மணிக்கு வந்தடைந்தனர். அந்த நபர் ஹோட்டலை விட்டு வெளியேறிய சில நிமிடங்களுக்கு பிறகு அகான்ஷா இன்ஸ்டாகிராமில் கண்ணீருடன் காணப்பட்ட வீடியோ வெளியானதாக சொல்லப்படுகிறது.

அடுத்த நாள் நடிகை துபே நீண்ட நேரமாகியும் வெளியே வராத நிலையில் மாற்று சாவியை போட்டு திறந்து பார்த்த போது அவர் ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.