வவுனியா பாரதிபுரம் பொதுநோக்கு மண்டபம் புனரமைக்கப்பட்டு மக்களிடம் கையளிப்பு!!

பொதுநோக்கு மண்டபம்…

வவுனியா இராசேந்திரகுளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட பாரதிபுரம் பொது நோக்கு மண்டபம் புனரமைக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றிருந்தது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைத் தலைவர் யோகராசா மற்றும் அகில இலங்கை இளைஞர் முன்னணியின் தலைவர் இராசையா விக்டர் ராஜ்,

மேலும் அப்பகுதி கிராம சேவையாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

நாடு பொருளாதார ரீதியில் பின்னடைவை சந்தித்துள்ள நேரத்தில் அரச நிதியினை வீண்விரயம் செய்து புதிய கட்டிடம் அமைப்பதற்கு பதிலாக முன்னர் இருந்த கட்டிடத்தினையே வினைத்திறனான முறையில் புனரமைப்பு மேற்கொள்ளப்பட்டு அரச செலவினை கட்டுப்படுத்தி இக் கட்டிடம் பொதுமக்களின் பாவனைக்கு வழங்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.

நாளை எரிபொருள் விலை குறைக்கப்படுமா?

எரிபொருள் விலை..

எரிபொருளின் விலையில் நாளைய தினம் மாற்றம் ஏற்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் இரண்டு தடவைகள் எரிபொருள் விலையில் மாற்றங்களை அறிவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார்.

அதன்படி ஒவ்வொரு மாதமும் 1ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் எரிபொருட்களின் விலையில் மாற்றங்களை அறிவிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார். அத்துடன் எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த நிலையிலேயே நாளைய தினம் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதுடன், இதன்படி எரிபொருள் விலை குறைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள கடும் வீழ்ச்சியை கருத்தில் கொண்டு எரிபொருள் விலையை குறைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தும் என ஐ.ஓ.சி நிறுவனம் அண்மையில் தெரிவித்திருந்தது.

இது தொடர்பில் ஐ.ஓ.சி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மனோஜ் குப்தா மேலும் தெரிவிக்கையில், சர்வதேச சந்தையில் தற்போது எண்ணெய் விலை ஒன்பது மாதங்களில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ள நிலையில், விலை குறைப்பு குறித்து மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் பரிசீலிப்பார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

அதன்படி, எண்ணெய் விலையை குறைப்பது தொடர்பான இறுதி முடிவு எரிசக்தி அமைச்சரிடம் உள்ளது. உலகளாவிய எண்ணெய் விலையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைக் கருத்தில் கொண்டு, உள்நாட்டில் விலையைக் குறைப்பது குறித்து அவர் பரிசீலிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என்று குப்தா கூறியிருந்தார்.

வவுனியா மன்னார் பிரதான வீதி பூட்டு : மாற்று வீதியினை பயன்படுத்துமாறு கோரிக்கை!!

மன்னார் பிரதான வீதி பூட்டு ..

வீதி அபிவிருத்திப் பணிகளுக்காக வவுனியா – மன்னார் பிரதான வீதியினை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மாணிக்கப்பட்டுள்ளமையினால் மாற்று வீதியினை பயன்படுத்துமாறு மக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா சிங்கள பிரதேச செயலகம் அமைந்துள்ள பகுதியினை அண்மித்த பகுதியில் வவுனியா மன்னார் பிரதான வீதியில் காணப்படும் புகையிரத கடவை பாதையினை சீர்செய்யும் வேலைத்திட்டம் காரணமாக,

நாளை (01.10.2022) காலை 7.00 மணி தொடக்கம் நாளைமறுதினம் (02.10.2022) இரவு 10.30 மணி வரையிலான காலப்பகுதிக்கு குறித்த வீதி மூடப்படவுள்ளது.

எனவே மக்கள் சிரமங்களுக்கு உள்ளாகதாக வகையில் மாற்று வீதிகளான புகையிரதநிலைய வீதி, நகரசபை நூலக வீதி, அரச விடுதி வீதி போன்ற வீதிகளை பயன்படுத்துமாறு இலங்கை புகையிரத திணைக்களத்தினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

5 கோடி ரசிகர்களை கவர்ந்த இலங்கைப் பாடகி : அதிர்ச்சியில் இந்திய பாடகர்கள்!!

யொஹானி..

இயக்குநர் இந்திரா குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தேங்க் கோட்’ என்ற ஹிந்தி திரைப்படம் அக்டோபர் 25ஆம் திகதி வெளியாகவுள்ள நிலையில் அதன் முதல் பாடல் 5 கோடி ரசிகர்களை கவர்ந்துள்ளதாக இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வகையில் ‘மெனிக்கே’ கடந்த 16ஆம் திகதி வெளியிடப்பட்டது. இந்தப் பாடல் வெளியான பத்து நாட்களில் யூடியூப்பில் 5 கோடி பார்வையாளர்களைக் கடந்தாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பாடலை யொஹானி டி சில்வா பாடியுள்ளார். இவரது சமீபத்தில் பாடபட்ட ‘மெனிக்கே மகே ஹித்தே ‘ பாடல் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள கோடிக்கணக்கான இரசிகர்களின் கவர்ந்துள்ளது.

இவர் இலங்கையின் இசைத் துறையை சர்வதேசத்திற்கு கொண்டு சென்ற இலங்கை பாடகியாக பார்க்கபடுகிறார்.

இந்நிலையில் இப்பாடல் சிங்களம் மட்டுமின்றி மலையாளம், தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

கணவரை பிரிந்து வாழும் நடிகை ரேவதி… 39 ஆண்டுகால கனவு நிறைவேறியதாக மகிழ்ச்சி : குவியும் வாழ்த்துக்கள்!!

ரேவதி..

ஆங்கில மொழியில் Mitr, My Friend என்ற படம் தான் ரேவதி முதல் முறையில் இயக்கிய படம் ஆகும். தற்போது சலாம் வெங்கி என்ற இந்தி திரைப்படத்தை ரேவதி இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல நடிகை ரேவதி கேரள மாநில விருதை வாங்கியதன் மூலம், தனது 39 ஆண்டுகால கனவு நிறைவேறிவிட்டதாக நெகிழ்ச்சி பதிவு வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் 80களின் கால கட்டத்தில் கதாநாயகியாக கோலோச்சியவர் ரேவதி.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தேசிய விருதுகளையும், ஃப்லிம் ஃபேர் விருதுகளையும் வென்றுள்ள ரேவதி இயக்குனராகவும் சாதித்துக் காட்டியுள்ளார். மேலும் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சுரேஷ் சந்திரா மேனனை காதலித்து திருமணம் செய்துகொண்ட ரேவதி கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார். எனினும் இருவரும் இன்றுவரை நல்ல நட்புடன் இருப்பதாக ஒரு பேட்டியில் கூறினார்.

இந்த நிலையில் சிறந்த நடிகைக்கான கேரள மாநில திரைப்பட விருதை பூதகாலம் படத்திற்காக வென்றுள்ளார். இதன்மூலம் நடிகை ரேவதி மகிழ்ச்சியில் திளைத்துள்ளார். இதற்கு காரணம் தனது பூர்வீகமான கேரளாவின் விருதை முதல் முறையாக வென்றுள்ளது தான்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘இந்த விருதை பலமுறை எனது நண்பர்கள் கைகளிலும், வீடுகளிலும் பார்த்திருக்கிறேன். பலமுறை கிடைக்கும் என்று எதிர்பார்த்து நழுவி போயிருக்கிறது.

தற்போது நான் எதிர்பார்க்காத நேரத்தில் கிடைத்திருக்கிறது. அதற்காக பூத காலம் திரைப்படத்தின் இயக்குனருக்கும், கேரள விருது வழங்கும் குழுவிற்கும் நன்றி’ என தெரிவித்துள்ளார். அவரது இந்த பதிவிற்கு திரையுலக தோழிகள் முதல் நித்யா மேனன் வரை பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மனைவி அனுப்பிய வாய்ஸ் மெசேஜ்.. திருமணமான ஒரே மாதத்தில் கணவனுக்கு தெரியவந்த அதிர்ச்சி உண்மை!!

ஈரோடில்..

திருமணமான ஒரே மாதத்தில் மனைவி குறித்த உண்மையை அறிந்து போலீசில் புகார் கொடுத்திருக்கிறார் கணவர் ஒருவர். இது ஈரோடு பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே தாசப்பகவுண்டன் புதூரை சேர்ந்த செல்வராஜ் – கண்ணம்மாள் தம்பதி மகன் சரவணன் (35). இவர் கைத்தறி நெசவு வேலை செய்துவருகிறார்.

இவருக்கு திருமணம் செய்ய விருப்பப்பட்ட இவரது பெற்றோர், பல இடங்களில் பெண்பார்த்து வந்திருக்கின்றனர். ஆனால், பெண் கிடைக்காததால் பல புரோக்கர்கள் மூலமாக பெண் தேடி வந்திருக்கின்றனர் செல்வராஜ் – கண்ணம்மாள் தம்பதி.

இறுதியில் பரிசபாளையத்தை சேர்ந்த பெண் புரோக்கர் ஒருவர் மூலமாக தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையை சேர்ந்த சரிதா (27) என்ற பெண்ணின் விபரம் கிடைத்திருக்கிறது. இதனையடுத்து பெண்பார்க்க சென்றபோது சரவணனுக்கு சரிதாவை பிடித்துப்போயிருக்கிறது.

அப்போது சரிதாவின் குடும்பம் குறித்து விசாரிக்கையில் அவரது தாய், தந்தை விபத்தில் இறந்து விட்டதாகவும், அவருக்கு அவரது பெரியம்மாள் விஜயலட்சுமி (60) ஆதரவாக உள்ளார் எனவும் கூறப்பட்டிருக்கிறது.

மேலும், திருமண புரோக்கருக்கு 1.2 லட்ச ரூபாய் கமிஷன் கொடுக்க வேண்டும் என விஜயலெட்சுமி தெரிவிக்க, மாப்பிள்ளை வீட்டாரும் வேறு இடத்தில் கடன்வாங்கி கொடுத்திருக்கின்றனர்.

இந்நிலையில், கடந்த மாதம் 20 ஆம் தேதி சரவணன் ஊரில் வைத்து இவர்களது திருமணம் நடைபெற்றிருக்கிறது. இதனையடுத்து, இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்திருக்கின்றனர். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்னர் சரிதா தனது பெரியம்மா விஜயலட்சுமிக்கு வாய்ஸ் மெசேஜ் ஒன்றை அனுப்பியிருக்கிறார்.

எதேச்சையாக அதனை கேட்ட சரவணன் அதிர்ச்சியில் ஒருகணம் உறைந்துபோய்விட்டார். அந்த வாய்ஸ் மெசேஜில், “என்னால் பல நாட்கள் இங்கே இருக்க முடியாது, இங்கே பணம் கிடைப்பது சிரமம். என்மீது இங்கே அனைவரும் பாசமாக இருக்கின்றனர்.

அதுவும் நான் பிரிந்து போனால் சரவணன் ஏதாவது செய்துகொள்வார் என தோன்றுகிறது. நீயாக வந்து கூட்டிச் செல்வது போல வா. அடுத்தமுறை வயதான ஆளை பிடி. அதுதான் சவுகரியம்” என கூறியிருந்திருக்கிறார் சரிதா.

இதனால் அதிர்ச்சியடைந்த சரவணன், தனது நண்பர்களிடம் இதுபற்றி கூறியுள்ளார். இந்த மோசடி கும்பலை கூண்டோடு பிடிக்க நினைத்திருக்கின்றனர் சரவணனும் அவரது நண்பர்களும்.

இதனையடுத்து, தனது நண்பர் ஒருவருக்கு பெண்பார்க்க வேண்டும் எனவும் விஜயலெட்சுமிக்கு தெரிந்த பெண் இருந்தால் சொல்லவும் என தனது மனைவியிடம் கூறியுள்ளார் சரவணன். இதனையடுத்து தனக்கு தெரிந்த கணவனை பிரிந்த பெண் ஒருவர் இருப்பதாகவும், மாப்பிள்ளையின் புகைப்படத்தை அனுப்பிவைக்கும்படியும் கூறியுள்ளார் விஜயலெட்சுமி.

மேலும், மணப்பெண்ணின் புகைப்படத்தையும் அனுப்பியிருக்கிறார் அவர். இதனையடுத்து, பெண்ணை தனது நண்பருக்கு பிடித்துப்போய்விட்டதாகவும், நேரில் அழைத்துவந்தால் எளிமையான முறையில் திருமணம் செய்துகொள்ளலாம் எனவும் சரவணன் கூற விஜயலெட்சுமி ஒரு பெண்ணுடன் சரணவனுடைய ஊருக்கு வந்திருக்கிறார்.

மேலும், தனக்கு கமிஷன் ஏதும் வேண்டாம் என்றும் மற்ற ப்ரோக்கர்களுக்கு 80 ஆயிரம் கொடுக்க வேண்டும் எனவும் அவர் கூற, சரவணனும் ஓகே சொல்லியிருக்கிறார்.

நேரில் வந்ததும் நடந்ததை விவரித்து, இதுபற்றி கேட்டிருக்கிறார் சரவணன். தங்களுடைய நாடகம் முடிவுக்கு வந்துவிட்டதை அறிந்த விஜயலட்சுமி மற்றும் சரிதா ஆகியோர் தங்களது தவறை ஒப்புக்கொண்டிருக்கின்றனர்.

வயதான நபர்களை குறிவைத்து இதுபோன்ற திருமண மோசடியில் ஈடுபட்டு வந்த இந்த கும்பலுக்கு எதிராக பங்களா புதூர் காவல்நிலையத்தில் சரவணனனின் வீட்டார் புகார் கொடுக்க, விஜயலெட்சுமி, சரிதா மற்றும் மற்றொரு பெண் ஆகிய மூவரையும் செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் உள்ளூர் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

15 பேரை ஏமாற்றி திருமணம் பெண் : மனைவியை இழந்தவர்கள் தான் குறி!!

தமிழகத்தில்..

முதல் மனைவியை இழந்த ஆண் ஒருவர் மறுமணம் செய்த நிலையில் அப்பெண்ணின் மிகப்பெரிய மோசடி அம்பலமாகியுள்ளது. தமிழகத்தின் சேலத்தின் எடப்பாடியை சேர்ந்தவர் செந்தில் (48). இவருடைய மனைவி ரம்யா ஓராண்டுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகன் உள்ளார்.

இதனால் மறுமணம் செய்ய முடிவு செய்த செந்தில், ஓன்லைனில் திருமண செயலி ஒன்றில் பதிவு செய்து வரன் தேடினார். இந்நிலையில் ஓன்லைன் வழியாக அவரிடம் பழக்கம் ஏற்படுத்திக் கொண்ட கவிதா என்ற பெண் அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, கடந்த ஜூன் மாதம் 24-ந் திகதி சேலம் அருகே உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

முதலிரவன்றே 4 1/2 பவுன் நகை, வெள்ளிக்கொழுசு, ரொக்கப்பணம் என 2 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருள்களை சுருட்டிக்கொண்டு கவிதா தப்பிச்சென்றுள்ளார்.

இது குறித்த புகாரையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன் சம்பந்தப்பட்ட பெண்ணின் வங்கி கணக்கு உள்ள கோவை மருதமலை பகுதிக்குச் சென்ற பொலிசார் அங்கு அவரது வங்கி கணக்கில் இருந்த முகவரியை தேடி கோவை அருகே உள்ள களப்பநாயக்கன்பாளையம் பகுதிக்கு சென்றனர்.

சம்பந்தப்பட்ட முகவரியில் குடியிருந்த கவிதா கடந்த சில வாரங்களுக்கு முன்பு வீட்டை காலி செய்து சென்று விட்டதாக வீட்டின் உரிமையாளர் கூறினார் இருப்பினும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து கோவை பகுதியில் முகாமிட்டு பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் இது போல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோரை ஏமாற்றி திருமண ஆசை காட்டி பணத்தை பறித்து சென்றதும் தெரியவந்தது.

பாதிக்கப்பட்ட செந்தில் கூறும்போது, தனது மனைவி இறந்துவிட்ட நிலையில் தனது குழந்தைக்கு பாதுகாப்பு வேண்டும் என்ற நோக்கில் ‘ஜோடி ஆப்’ மூலம் 2வது திருமணம் செய்ய ஏற்பாடு செய்ததாகவும், இதில் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த கவிதா என்ற பெண்ணிடம் ஏமாற்றப்பட்டதாகவும் தெரிவித்தார்.

கால்களை இழந்த இளைஞனுடன் காதல் திருமணம் : ஆத்திரத்தில் பெண்ணின் பெற்றோர் செய்த செயல்!!

திருநெல்வேலியில்..

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே கால்களை இழந்த வாலிபருடன் காதல் திருமணம் செய்துகொண்ட பெண்ணை, பெற்றோர் அடித்து, இழுத்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரை அடுத்த கேசவனேரியைச் சேர்ந்தவர் பிரகாஷ், சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். கேசவனேரியை அடுத்த வள்ளியம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் திவ்யா. பிரகாசும், திவ்யாவும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இரு வீட்டாரும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பிகாஷ் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்துகொண்டிருந்த போது ஏற்பட்ட சாலை விபத்தில் தனது இரு கால்களையும் இழந்தார். கால்களை இழந்தாலும் பிரகாசும், திவ்யாவும் தொடர்ந்து காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். ஆனால் இதற்கு திவ்யாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி இருவரும் கடந்த 20 தினங்களுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டனர்.

இந்நிலையில் தனது மகள் திவ்யாவை, கணேசன் கடத்திச் சென்றுவிட்டதாக பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தனர். இந்த நிலையில், காதலர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டு மணமகனின் வீட்டில் இருப்பதாக பெண்ணின் பெற்றோருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் அங்கு சென்ற பெண்ணின் பெற்றோர் கால் இல்லாத நபரை எப்படி திருமணம் செய்துகொள்வாய் என்று பிரகாசை சரமாரியாக தாக்கிவிட்டு திவ்யாவை அழைத்துச் சென்றுவிட்டனர்.

இதனைத் தொடர்ந்து தனது காதல் மனைவியை அவரது பெற்றோர் வலுக்கட்டாயமாக என்னிடம் இருந்து பிரித்துச் சென்றுள்ளனர், எங்கள் இருவரையும் சேர்த்துவைக்குமாறு பிரகாஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இளைஞருக்கு கிடைத்த அரசு வேலை.. ஊரே சேர்ந்து திருவிழா கொண்டாட்டம் : சுவாரஸ்ய சம்பவம்!!

பீகாரில்..

இளைஞர் ஒருவருக்கு அரசு வேலை கிடைத்த நிலையில், அதனை ஒட்டுமொத்த கிராமமே கொண்டாடிய சம்பவமும், அதற்கு பின்னால் உள்ள காரணமும் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

பீகார் மாநிலம், முசாபர்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது சோஹாக்பூர் எனும் குக்கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் இளைஞர் ராகேஷ் குமார். இவருக்கு தற்போது 25 வயதாகிறது.

முன்னதாக, ராகேஷின் 19-வது வயதில் அவரது தந்தை உயிரிழந்துள்ளார். இதன் பின்னர் தன்னுடைய கல்வியின் நிதி நெருக்கடியை சமாளிக்க, அப்பகுதியிலுள்ள குழந்தைகளுக்கு வகுப்பு எடுத்து வந்துள்ளார் ராகேஷ்.

தனக்கு உதவி செய்ய ஆசை யாரும் இல்லாததால் சொந்த காலிலேயே மிகவும் கடினமாக உழைத்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறவும் அவர் முடிவு எடுத்துள்ளார்.

மேலும், அரசு வேலைக்கு சேர வேண்டும் என்பது தான் ராகேஷின் லட்சியமாகவும் இருந்துள்ளது. இதற்காக தீவிரமாக தயாராகி வந்த ராகேஷுக்கு, முசாபர்பூரில் உள்ள ஆரம்பப் பள்ளி ஒன்றில் ஆசிரியராக அரசு வேலை கிடைத்துள்ளது.

ராகேஷுக்கு அரசு வேலை கிடைத்ததை ஒட்டுமொத்த சோஹாக்பூர் கிராமமும் மிக விமரிசையாக கொண்டாடி உள்ளது. இதற்கு காரணம், அந்த கிராமத்தில் உள்ள ஒருவருக்கு கூட கடந்த 75 ஆண்டுகளாக அரசு வேலை கிடைக்கவில்லை என்பது தான்.

அப்படி இருக்கையில், தற்போது அந்த கிராமத்திலிருந்து இளைஞர் ஒருவர் முதல் முறையாக அரசு வேலை பெற்றுள்ளது ஒட்டுமொத்த கிராமத்தையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இது பற்றி பேசும் இளைஞர் ராகேஷ், “கடந்த 75 ஆண்டுகளாக எனது கிராமத்தில் இருந்து ஒருவர் கூட அரசு வேலையில் சேரவில்லை. அப்படி இருக்கையில் அதனை உடைத்து எனது கிராமத்தின் இமேஜை மாற்ற வேண்டும் என்றும் நான் முடிவெடுத்தேன்.

கடைசியில் அதனை நான் தற்போது நிறைவேற்றி உள்ளேன்” என மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். ராகேஷுக்கு அரசு வேலை கிடைத்ததை கிராமத்தில் உள்ள மக்கள் அனைவரும் கோலாகலமாக கொண்டாட தொடங்கி உள்ளனர்.

2000 பேர் வரும் வசித்து வருகின்ற கிராமத்தில் அரசு வேலைகள் கிடைப்பது என்பது வரம்பு மீறியது என இருந்து வந்த விஷயத்தை இளைஞர் உடைத்துள்ளார். இதனை கொண்டாடும் விதமாக கிராம மக்கள் இனிப்புகளை வழங்கினர்.

இளைஞருக்கு அரசு வேலை கிடைத்தது தொடர்பாக அந்த கிராமத்து மக்கள் பேசுகையில், சுதந்திரத்திற்கு பிறகு எங்கள் கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை கிடைத்துள்ளது மிகவும் பெருமையாக உள்ளது என்றும், இனி வரும் புதிய தலைமுறை அரசு வேலைக்கு செல்லவும்,

கிராமத்தின் மீதான விதியை மாற்றவும் நிச்சயம் ஒரு தூண்டுகோலாக இது இருக்கும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். 75 ஆண்டில் முதல் முறையாக ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை கிடைத்துள்ளது, தற்போது நாட்டில் உள்ள பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

தகவல் அறியும் உரிமை தொடர்பில் வடக்கு மாகாண ஊடகவியலாளருடன் கலந்துரையாடிய தகவல் அறியும் ஆணைக்குழு!!

செயலமர்வு..

தகவல் அறியும் உரிமை தொடர்பில் வடமாகாண ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பான செயலமர்வு ஒன்று இடம்பெற்றது. ஊடக அமைச்சு மற்றும் தகவல் அறியும் ஆணைக்குழு என்பவற்றின் ஏற்பாட்டில் அப்ரியல் நிறுவனத்தின் அணுசரணையுடன் யாழ்ப்பாணம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் குறித்த செயலமர்வு இன்று (29.09) காலை முதல் மதியம் வரை இடம்பெற்றது.

இதன்போது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தி மேற்கொள்ளக்கூடிய செயற்பாடுகள், அதனை மக்களுக்கு கொண்டு செல்லும் வழிமுறைகள் தொடர்பாக தகவல் அறியும் ஆணைக்குழு உறுப்பினர்கள் விளக்கமளித்திருந்ததுடன்,

வட மாகாண ஊடகவியலாளர்கள் தகவல் அன்றியும் உரிமைச் சட்டம மூலம் தகவல்களை கோரும் போது ஏற்படும் நடைமுறை பிரச்சனைகள் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் செயற்பாடுகள் தொடர்பில் ஆணைக்குழுவிற்கு தெரியப்படுத்தினர்.

இதன்போது ஆணைக்குழுவினர் அடுத்தகட்ட நடவடிக்கைகள், ஆணைக்குழுக்கான மேன்முறையீடுகள் தொடர்பில் தெளிவுபடுத்தியுருந்தனர். அத்துடன் கிராம மட்டத்தில் தகவல் உரிமைச் சட்டத்தை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் தமது கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.

யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் தகவல் அறியும் ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற உயர் நீதியரசர் உபாலி அபயரட்ண, ஆணையாளர் பின்டு ஜெயரட்ண, ஆணையாளர் சிரேஸ்ட சட்டத்தரணி ஜெகத் லியனராட்சி,

ஆணையாளர் முகமட் நகியா, பொது பணிப்பாளர் ருவன் சற்குமார, அப்ரியல் நிறுவனத்தின் பணிப்பாளர் ரவீந்திரடீ சில்வா மற்றும் அரச அதிகாரிகள், வடக்கு மாகாண ஊடகவியலாளர்கள், வடக்கு ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

வயிறு கிழிக்கப்பட்டுக் கிடந்த ஏழு மாத கர்ப்பிணிப் பெண்ணின் உடல் : பதறவைக்கும் ஒரு திகில் சம்பவம்!!

பிரேசில்லில்..

பிரேசில் நாட்டில் அரை நிர்வாணமாக கிடந்த ஒரு கர்ப்பிணிப்பெண்ணின் வயிறு கிழிக்கப்பட்டு, அவரது வயிற்றிலிருந்த குழந்தை திருடப்பட்ட விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அது ஏதோ ஒரு கூட்டத்தார் நரபலியிடும் நோக்கில் செய்யப்பட்ட செயல் என கருதப்படுகிறது.

பிரேசில் நாட்டிலுள்ள Sao Paulo என்ற மாகாணத்தில், Ohana Karolin (24) என்ற இளம்பெண்ணின் உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

வயிற்றுக்குக் கீழே உடையில்லாமல், அவரது பிறப்புறுப்பு மோசமாக சிதைக்கப்பட்டு, அவரது வயிறு கிழிக்கப்பட்டு, அவரது வயிற்றிலிருந்த ஏழு மாதக் குழந்தை அகற்றப்பட்டிருந்த நிலையில் சடலமாக Karolin கண்டெடுக்கப்பட்ட விடயம், அவரது குடும்பத்தார் மற்றும் நண்பர்களிடையே கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

குழந்தையின் நிலை என்ன என்று தெரியவில்லை.Karolin சமீபத்தில்தான் தனது கணவரைப் பிரிந்து புதிய காதலர் ஒருவரைத் தேடிக்கொண்டிருந்த நிலையில், இந்த பயங்கரம் நிகழ்ந்துள்ளது.

பயங்கரமான ஒரு கூட்டத்துடன் Karolin சுற்றிக்கொண்டிருந்ததாக தெரிவித்துள்ள அவரது தோழி ஒருவர், அதனாலேயே அவரது நண்பர்கள் பலர் அவரைவிட்டு தூர விலகிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

பொலிசார் இந்த பயங்கர சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

மகள்கள் பசியோடு இருக்கக் கூடாது என்று தாயாக மாறிய தந்தை : நெகிழ வைக்கும் வீடியோ!!

ரயிலில்..

ரயிலில் பசியுடன் இருக்கும் தன்னுடைய மகள்களுக்கு தந்தை ஒருவர் உணவை ஊட்டிவிடும் வீடியோ சமூக வலை தளங்களில் பரவி பலரையும் நெகிழ வைத்திருக்கிறது.

தந்தையின் அன்பு பெரும்பாலும் விரிவாக பேசப்படுவதில்லை. அன்னையின் அன்பை உலகம் கொண்டாடும் அளவுக்கு தந்தையின் பாசம் பற்றி பலரும் பேசுவதில்லை. எழுதாத கவிதை போல தேங்கும் தந்தையின் அன்பு எப்போதும் செயல் வடிவமாகவே இருந்து வந்திருக்கிறது.

தாய்க்கும், குழந்தைகளுக்கும் அரணாக திகழும் தந்தைகள் தங்களுடைய சிறிய சிறிய செயல்களின் அடிப்படையிலேயே தங்கள் குடும்பத்தின் மீதும் குழந்தைகள் மீதும் உள்ள பாசத்தினை வெளிப்படுத்திவிடுகிறார்கள். அப்படியான நபர் ஒருவரின் வீடியோ தான் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த வீடியோவில் இரு சிறுமிகள் ஓடும் ரயிலில் அமர்ந்திருக்கிறார்கள். பொதுவாக நகரங்களில் பள்ளி செல்லும் குழந்தைகள் சரியான நேரத்திற்கு பள்ளிக்கு சென்றுவிட வேண்டும் என்ற காரணத்தினால் காலை உணவை தவிர்த்துவிடுவதை நாம் பார்த்திருப்போம்.

அப்படி இந்த இரண்டு சிறுமிகளும் தங்களது காலை உணவை தவிர்த்து விட்டது போல தெரிகிறது. அப்படியான சூழ்நிலையில் தனது மகள்களின் பசியினை பொறுக்காத தந்தை டிபன் பாக்சில் உணவுடன் தனது மகள்களுடன் பயணம் செய்கிறார்.

ரயிலில் இருக்கையில் மகள்கள் அமர்ந்திருக்க, கீழே அமர்ந்திருக்கும் அந்த தந்தை உணவை தனது மகள்களுக்கு ஊட்டுகிறார். தந்தையின் அருகாமையில் பாதுகாப்பு உணர்வுடன் அமர்ந்திருக்கும் இரு சிறுமிகளும் சூழலை வேடிக்கை பார்த்தபடி சாப்பிட்டுக்கொண்டே தங்களது பயணத்தை தொடர்கிறார்கள்.

இந்த வீடியோ பதிவிடப்பட்டது முதலாக பலரும் இதனை வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். நெட்டிசன்கள் இந்த வீடியோவை பகிர்ந்து தங்களுடைய தந்தை பற்றிய நினைவுகளை பதிவாக எழுதி வருகின்றனர்.

தம்பதியினர் சேர்ந்து ஒன்றாக எடுத்த முடிவு.. வியக்க வைக்கும் பின்னணி!!

மத்திய பிரதேசத்தில்..

தம்பதியினர் ஒருவர் தங்களது வேலையை விட்டு விட்டு தற்போது செய்துள்ள செயல் ஒன்று இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் நிகில். இவரது மனைவியின் பெயர் பரிதி.

இவர்கள் இருவரும் கார்ப்பரேட் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்ததாக கூறப்படும் நிலையில், தங்களது வேலையில் இருந்தும் அவர்கள் விலகி உள்ளதாக கூறப்படுகிறது.

அப்படி வேலையை இவர்கள் ராஜினாமா செய்ததற்கான காரணம் தான், தற்போது நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பேசு பொருளாக மாறி உள்ளது. வேலையில் இருந்து விலகிய நிகில் மற்றும் பரிதி ஆகியோர், மணாலியில் இருந்து ஸ்ரீநகர் வரை சுமார் 3,200 கிலோமீட்டர் ட்ரக்கிங் செய்ய கிளம்பி உள்ளனர்.

இதற்கு காரணம் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்காக தான். முன்னதாக லடாக் வரை இவர்கள் கடந்த ஆண்டு பயணம் மேற்கொண்டிருந்த சமயத்தில், அங்கே அதிகம் குளிர் இருந்த காரணத்தினால் தங்களது பயணத்தை பாதியில் நிறுத்தினர்.

தொடர்ந்து இந்த ஆண்டு மீண்டும் கடந்த மார்ச் மாதம் முதல் தங்களின் பயணத்தை லடாக்கில் இருந்து ஆரம்பித்தனர். மணாலியில் இருந்து ஸ்ரீநகர் வரை லடாக் வழியாக கிட்டத்தட்ட 3200 கிலோமீட்டர் தூரத்தை நடந்தே செல்லவும் இந்த தம்பதியினர் முடிவு செய்துள்ளனர்.

மேலும் இந்த ட்ரெக்கிங் பயணத்தை தங்கள் வாழ்க்கையின் மிக அழகான தருணம் என்றும் அவர்கள் குறிப்பிடும் நிலையில், 19 மலைப்பாதைகள் வழியாக Lal Chowk பகுதியை அடைய சுமார் 3200 கிலோ மீட்டர் மலையேற்றம் செய்து முடித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

முன்னதாக மணாலி வரை பேருந்தில் வந்த நிகில் மற்றும் பரிதி ஆகியோர், இதன் பின்னர் நடந்தே அனைத்து வழிகளையும் கடக்க முடிவு செய்துள்ளனர். இது தவிர, லடாக் பகுதியில் உள்ள நிறைய கிராமங்களுக்கும் இந்த தம்பதியினர் சென்று அங்குள்ள மக்களிடமும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இந்த மலையேற்றத்தில், நிகில் மற்றும் பரிதி ஆகிய இருவரும் ஈடுபடுவதற்கு முன்பாகவே இதற்கான பயிற்சிகளையும் அவர்கள் மேற்கொண்டு தயாரானதாக கூறப்படுகிறது.

இந்த மலையேற்ற சமயத்தில் எந்தெந்த கிராமங்களை அவர்கள் கடக்கிறார்களோ அங்கே ஒரு மரத்தை நட்டு விட்டு செல்வதாகவும் தெரிவித்துள்ளனர். இது தவிர கையில் குப்பை சேகரிக்கும் பையுடன் அவர்கள் செல்லும் வழியில் உள்ள குப்பைகளை அள்ளிக் கொண்டு சென்றதாக குறிப்பிட்டுள்ளனர்.

கறுப்பாக இருப்பதாக கிண்டல் செய்த கணவன் : கோபத்தில் மனைவி செய்த கொடூரம்!!

சத்தீஸ்கரில்..

கருப்பதாக இருப்பதாக கூறி கிண்டல் செய்ததால் கணவனின் ஆணுறுப்பை கோடாரி கொண்டு வெட்டிய மனைவியின் செயல் சத்தீஸ்கரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் துர்க் பகுதியிலுள்ள அம்ளிஸ்வர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த் சோன்வான் (வயது 40). இவர் தனது மனைவி சங்கீதாவுடன் (வயது 30) வாழ்ந்து வந்துள்ளார்.

திருமணம் ஆனதில் இருந்தே இருவருக்குள்ளும் தகராறு ஏற்படும்போதெல்லாம் மனைவியின் கறுமை நிறத்தை வைத்து வசைபாடி வந்துள்ளார் ஆனந்த். இப்படியாக ஒவ்வொரு முறையும் இருவருக்குள்ளும் சண்டை ஏற்படும்போதெல்லாம் கணவன், மனைவியின் நிறத்தை கிண்டல் செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இதே போல் இருவருக்குள்ளும் ஏதோ சிறு வாக்குவாதம் ஏற்பட மீண்டும் தனது மனைவியின் நிறத்தை வைத்தே கிண்டல் செய்துள்ளார் ஆனந்த்.

இதனால் பொறுமை இழந்த மனைவி சங்கீதா அவரை திட்டியுள்ளார்; மேலும் வீட்டில் இருந்த கோடாரியை எடுத்து தனது கணவர் ஆனந்தை வெட்டியுள்ளார். இருப்பினும் கோபம் தீராத சங்கீதா, மற்றொரு கூர்மையான ஆயுதத்தை எடுத்து வந்து கணவரின் ஆணுறுப்பை வெட்டியுள்ளார்.

இதையடுத்து சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், நடந்த சம்பவம் தொடர்பாக காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் ஆனந்தின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சங்கீதாவையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நிறத்தை வைத்து கிண்டல் செய்ததால் ஆத்திரமடைந்த மனைவி, கணவரின் அந்தரங்க உறுப்பை வெட்டியுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேஸ்புக் காதல் : ஆளைமாற்றிய யுவதியால் அதிரடி திட்டம்போட்ட இளைஞர்!!

பேஸ்புக் காதல்..

தனது பேஸ்புக் காதலியின் புதிய காதலனை குண்டை வெடிக்கச் செய்து தற்கொலை தாக்குதல் மூலம் கொலை செய்யும் திட்டத்துடன் காத்திருந்த இளைஞர் ஒருவர் கைக்குண்டுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அம்பாறை – இறக்காமம் பகுதியில் பதிவாகியுள்ளது.

கல்கமுவ – மஹகல்கடவல பகுதியைச் சேர்ந்த 28 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 28 வயதான குறித்த இளைஞன் காலி பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவரை பேஸ்புக் ஊடாக சந்தித்து காதலித்து வந்துள்ளார்.

எனினும் அவ்விருவரும் ஒரு போதும் நேரில் சந்தித்திருக்கவில்லை என பொலிஸார் கூறுகின்றனர். இவ்வாறான நிலையில், அண்மைக் காலமாக குறித்த யுவதி கல்கமுவ இளைஞனை கைவிட்டு, அம்பாறை சுகாதார பரிசோதகர் பணிமனையில் சேவையாற்றும் இளைஞர் ஒருவரை காதலித்துள்ளார்.

அம்பாறை இளைஞர் தொடர்பில் பேஸ்புக் ஊடாக தகவல்களை சேகரித்துள்ள கல்கமுவ இளைஞன், பின்னர் குண்டு ஒன்றை வெடிக்கச் செய்து தற்கொலை தாக்குதல் நடத்தி, அம்பாறை இளைஞனை கொலை செய்யும் நோக்கத்துடன் கடந்த 26 ஆம் திகதி அம்பாறை நோக்கி சென்றுள்ளார்.

இந்நிலையில், அம்பாறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் வைத்து, குறித்த இளைஞனை சந்தித்து குண்டை வெடிகக் செய்து தற்கொலை தாக்குதல் நடத்த, சந்தேக நபர் கடந்த 27 ஆம் திகதி அப்பகுதிக்கு சென்றுள்ளார்.

எனினும் அப்போது அவரால் அந் நோக்கத்தை நிறைவேற்ற முடியாமல் போயுள்ளது. இதனையடுத்து அவர் திரும்பிவரும் வரை கைக்குண்டுடன், அம்பாறை – இறக்காமம் பொலிஸ் பிரிவின் தீகவாபிக்கு திரும்பும் சந்தியில் சந்தேக நபர் காத்திருந்துள்ளார்.

இதன்போது இளைஞன் தொடர்பில் சந்தேகம் கொண்ட பிரதேசவாசி ஒருவர் அளித்த தகவல் பிரகாரம் அங்கு சென்றுள்ள பொலிசார், சந்தேக நபரைக் கைதுச் செய்துள்ளதுடன் குண்டையும் மீட்டுள்ளனர்.

சந்தேக நபரைக் கைது செய்ய முயன்ற போது, அவர் வயல் வெளி ஊடாக தப்பியோட முயன்ற நிலையில் கைது செய்துள்ளனர். சந்தேக நபரிடம் இருந்து, கைக்குண்டு ஒன்றும் கூரிய கத்தியொன்றும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட கைக்குண்டானது, இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் மரணமடைந்த தனது உறவுக்காரர் ஒருவர் ஒருவருக்கு சொந்தமானது என பொலிஸ் விசாரணையில் சந்தேக நபர் கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மனைவி முன்னிலையில் காதலியை கரம்பிடித்த கணவன் : ஒரே வாரத்தில் நடந்த விபரீதம்!!

திருப்பதியில்..

மனைவி முன்னிலையில் காதலியை கரம்பிடித்த வாலிபரை காணவில்லை என தகவல்கள் வெளியாகி இருப்பது திருப்பதி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதி மாவட்டம், டக்கிலி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கல்யாண். சமூக வலை தளத்தில் அதிகம் பிரபலமான இவர், அடிக்கடி வீடியோ எடுத்து பகிர்ந்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வீடியோக்கள் எடுப்பது மூலம் விமலா என்ற பெண்ணுடன் கல்யாணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

நாளடைவில் இந்த பழக்கம், காதலாக மாறி உள்ள நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து, கணவன் மனைவியான கல்யாண் மற்றும் விமலா ஆகியோர் இணைந்து வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளனர். சமூக வலைத்தளத்தில் இவர்களை ஏராளமானோர் பின் தொடர்வதாகவும் கூறப்படுகிறது.

விமலாவுக்கு முன்பு சமூக வலை தளத்தில் பிரபலமாக இருக்கும் விசாகபட்டினத்தை சேர்ந்த நித்யஸ்ரீ என்ற பெண்ணை கல்யாண் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், அவர்களுக்கு இடையே உருவான பிரச்சனை காரணமாக அவர்கள் பிரிந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இதன் பின்னர், நித்யஸ்ரீயை பிரிந்த கல்யாண், விமலாவை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் நித்யஸ்ரீ சமீபத்தில் விமலாவை சந்தித்து கல்யாண் மீதான தன்னுடைய காதல் குறித்து விவரித்ததுடன், கல்யாணை திருமணம் செய்துகொள்ள உதவும்படியும் வலியுறுத்தியுள்ளார். இதனையடுத்து, தனது கணவர் கல்யாணுக்கும் அவருடைய காதலி நித்யஸ்ரீக்கும் திருமணம் செய்து வைத்திருக்கிறார் விமலா. இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

இந்நிலையில், கல்யாண் காணாமல்போய்விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மனைவி முன்னிலையில் காதலியை கரம்பிடித்த வாலிபர் திருமணம் நடைபெற்ற நிலையில் மாயமாகியிருப்பது திருப்பதி வட்டாரம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.