தேனீர் குடிக்கும்போது வந்த ஒரு மின்னஞ்சல் : திறந்த அடுத்த நிமிடம் மாறிய வாழ்க்கை!!

கனடாவில்..

சிலரது வாழ்க்கையில் எப்போது என்ன திருப்புமுனை நிகழும் என்பதையே கணிக்க முடியாது. யாரும் எதிர்பாராத ஒரு நேரத்தில், நமது வாழ்க்கையே தலை கீழாக திருப்பி போடும் சம்பவங்கள் அரங்கேறும்.

அப்படி நமது வாழ்வையே திருப்பும் சம்பவங்கள் எப்போது நடைபெறும் என்பதே தெரியாது. அந்த வகையில், கனடாவை சேர்ந்த நபர் காபி குடித்து கொண்டிருந்த போது நடந்த சம்பவம், அவருக்கு உச்சகட்ட இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

கனடாவின் Oakville என்னும் பகுதியைச் சேர்ந்தவர் Richard Noronha. இவருக்கு தற்போது 51 வயதாகிறது. மேலும் சுகாதார துறையிலும் ரிச்சர்ட் பணியாற்றி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக, தனது வீட்டில் இருந்த ரிச்சர்ட், காபி குடித்துக் கொண்டிருந்துள்ளார். அந்த சமயத்தில், ரிச்சர்டிற்கு இ மெயில் ஒன்று வந்துள்ளது. காபி குடித்த படி, அதனை திறந்து பார்த்த ரிச்சர்ட், அப்படியே ஒரு நிமிடம் மகிழ்ச்சியில் உறைந்து போனார்.

இதற்கு காரணம், லாட்டரி நிறுவனம் ஒன்றில் இருந்து வந்த அந்த மெயிலில், 1,29,754 டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் 79 லட்ச ரூபாய்க்கு மேல்) ரிச்சர்ட் வென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் பற்றி பேசும் ரிச்சர்ட், இத்தனை பெரிய தொகை தனக்கு லாட்டரியில் கிடைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும், பரிசு பணத்தை கொண்டு தானும், தனது மனைவியும் சேர்ந்து தொண்டு நிறுவனத்திற்கு பெரிய அளவில் நன்கொடை கொடுக்க திட்டம் போட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனக்கு லாட்டரியில் பணம் கிடைத்ததை கொண்டாடும் விதமாக, தனது குடும்பத்தினர் அனைவருக்கும் ஒரு நல்ல இரவு நேர விருந்து அளிக்க உள்ளதாகவும் ரிச்சர்ட் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

காபி குடிக்கும் நேரத்தில் வந்த மெயிலால், ஒருவரின் வாழ்க்கையை அப்படியே திருப்பி போட்டுள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

கர்ப்பிணிப் பெண்ணை கொலை செய்த காதலன் : நெஞ்சை உலுக்கும் கொடூரம்!!

ஜார்க்கண்ட்டில்..

ஜார்க்கண்ட் மாநிலம் ஹல்டியா கிராமத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண் அதே பகுதிய சேர்ந்த இளைஞரை காதலித்து வந்தார். இதனிடையே இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர்.

இதனால், அப்பெண் கர்ப்பமாகியுள்ளார். இந்நிலையில், தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு அப்பெண் காதலனை வற்புறுத்தி வந்தார். ஆனால், அந்த இளைஞர் கர்ப்பிணி காதலியை திருமணம் செய்யாமல் காரணம் கூறி மழுப்பியுள்ளார்.

இந்நிலையில், நேற்றிரவு அப்பெண் காதலனை சந்தித்து பேசியபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபமடைந்த காதலன் கர்ப்பிணி என்றும் பாராமல் அடித்து கொன்றுள்ளார்.

பின்னர் அந்த இளைஞர் காவல்நிலையத்தில் சரணடைந்தார். அவரை கைது செய்த போலீசார் கொல்லப்பட்ட இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைகாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சொந்த செலவில் சூனியம் : புதையலுக்காக நண்பனை நரபலி கொடுத்த கொடூரன்!!

கிருஷ்ணகிரியில்..

கெலமங்கலம் அருகே உள்ள புதூர் கிராமத்தை சேர்ந்த லட்சுமணன் என்பவர் கடந்த 28ம் தேதி அவரது விவசாய தோட்டத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்தார்.

இந்த விவகாரத்தில் லட்சுமணனின் நண்பரான பென்னாகரத்தை சேர்ந்த மணி என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, விவசாய தோட்டத்தில் புதையல் எடுப்பதற்காக நண்பனையே கொன்று நரபலி கொடுத்தது தெரியவந்தது.

லட்சுமணனின் விவசாய தோட்டத்தில் புதையல் இருப்பதாகவும், அதனை எடுக்க நரபலி கொடுக்க வேண்டும் என தருமபுரியை சேர்ந்த மந்திரவாதி ஒருவர் கூறியுள்ளார்.

அதனை நம்பிய லட்சுமணனும் மணியும், அமாவாசை அன்று மேச்சேரியை சேர்ந்த ராணி என்பவரை நரபலி கொடுக்க திட்டமிட்டுள்ளனர் ஆனால் ராணி வராததால், கோழியை பலியிட்டு பூஜை செய்துள்ளனர்.

மீண்டும் 28ம் தேதி பூஜை செய்ய சென்ற போது, லட்சுமணனுக்கு சாமி வந்து மணியை கடிக்க முயன்றுள்ளார். இதனால் பயந்து போன மணி, லட்சுமணனை கட்டையால் அடித்து கொலை செய்துள்ளார்.

பின்னர், தோண்டப்பட்ட குழியின் மீது லட்சுமணனின் உடலை வைத்துவிட்டு புதையல் வரும் என நீண்ட நேரம் காத்திருந்துள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில், அவரை போலீசார் தேடிப் பிடித்து கைது செய்தனர்.

கல்லூரி மாணவிகள் முன்பு சாகசம் காட்ட நினைத்த இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்!!

காரைக்குடியில்..

காரைக்குடியில் கல்லூரி மாணவிகள் முன்பு இருசக்கர வாகனத்தில் சீன் போட நினைத்த வாலிபர் கீழே விழும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழகம் உள்ளது. இக்கல்லூரி அருகே இருக்கும் பேருந்து நிலையத்தில் மாணவிகள் பேருந்திற்காக காத்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக இரண்டு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் வந்தனர். இதில் வாகனத்தின் பின்னால் இருந்த இளைஞர், இருக்கையின் மேலே ஏறி நிற்க முயற்சி செய்தார். அப்போது நிலை தடுமாறி இந்த இளைஞர் கீழே விழுந்துள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், “இருச்சகர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த மஞ்சல் சட்டை அணிந்த இளைஞர், மாணவிகளை பார்த்தவுடன் இருக்கையின் மேலே ஏறி நிற்க முயற்சி செய்கிறார். அப்போது நிலை தடுமாறி அவர் சாலையில் கீழே விழும் காட்சி” பதிவாகியுள்ளது.

இந்த வீடியோவை அவர்களுக்கு பின்னால் வாகனத்தில் வந்தவர் எடுத்துள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலானை அடுத்து நெட்டிசன்கள் பலரும் இளைஞரை கிண்டல் அடித்து வருகின்றனர்.

ஒரே நேரத்தில் வாங்கிய 200 லொட்டரி.. அனைத்திலும் பரிசு பெற்று வாயடைக்க வைத்த நபர்!!

அமெரிக்காவில்..

ஒரே நேரத்தில் லொட்டரியை வாங்கி அனைத்திலும் பரிசு பெற்ற நபர் சுவாரஸ்ய சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. அமெரிக்காவில் விர்ஜீனியா மாகாணத்தில் உள்ள அலெக்ஸ்சாண்ட்ரியா நகரை சேர்ந்தவர் அலி கெமி.

இவர், அவரின் அதிர்ஷ்டத்தை பரிசோதிக்க, கடந்த 6 ஆம் தேதி, விர்ஜீனியாவில் உள்ள கடை ஒன்றில் 200 ஒரு டாலர் லொட்டரி டிக்கெட்களை வாங்கியுள்ளார். அதில் வாங்கிய அனைத்து லொட்டரியிலும் ஒரே மாதிரியான நான்கு எண்களை உள்ளீடு செய்ய திட்டமிட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, தன்னுடைய பிறந்த நாள் மற்றும் பிறந்த மாதம் ஆகியவை வரும் 0-2-6-5 என்ற எண்களை தான் வாங்கிய அனைத்து லாட்டரியிலும் உள்ளீடு செய்திருக்கிறார் அலி கெமி.

ஆனால், அதேப்போல் அதிர்ஷ்டவசமாக அவர் தேர்ந்தெடுத்த எண்களுக்கு பரிசு கிடைத்திருக்கிறது. ஒவ்வொரு டிக்கெட்டின் அதிகபட்ச பரிசு 5000 அமெரிக்க டாலர்கள்.

இதன் மூலம் கெமிக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் 8.1 கோடி ரூபாய்) கிடைத்திருக்கிறது. என்ன செய்வது என தெரியாமல் மகிழ்ச்சியில் திழைத்துள்ளார் அந்த நபர்.

விளையாடிக் கொண்டிருந்த 2 சிறுமிகளுக்கு நேர்ந்த சோகம் : எச்சரிக்கை செய்தி!!

தேனியில்..

தேனி மாவட்டம் உத்தம்பாளையம் அருகே பண்ணைப்புரம் உள்ளது. கிராமத்தின் பாவலர் தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரன் இவருக்கு 7 வயதில் நிகிதாஸ்ரீ என்ற மகளும், அதே பகுதியை சேர்ந்த ஜெகதீஷ் என்பவருக்கு 6 வயதில் சுபஸ்ரீ என்ற மகளும் இருந்தனர்.

தோழிகளான இருவரும் அரசுப்பள்ளியில் 2ம் வகுப்பு படித்துவந்தனர். இந்நிலையில் சிறுமிகள் இருவரும் வியாழக்கிழமை மாலை அப்பகுதியில் உள்ள பெண்கள் பொது சுகாதார வளாகத்தின் கழிவு நீர் தொட்டியில் மேல் சேர்ந்து விளையாடியுள்ளனர்.

அப்போது எதிர்பாராத விதமாக தொட்டியின் சிமெண்ட் கல் மேல் மூடி உடைந்ததில் சிறுமியர் இருவரும் தவறி தொட்டிக்குள் விழுந்துள்ளனர். சிறுமியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் – பக்கத்தினர் தொட்டிக்குள் விழுந்த சிறுமிகள் இருவரையும் போராடி மீட்டனர்.

நிகிதாஸ்ரீ சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் சிகிச்சைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சுபஸ்ரீ செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

சிறுமிகள் இருவர் உயிரிழந்த ஆத்திரத்தில் அவர்களின் உறவினர்கள் உத்தமபாளையம் – தேவாரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். பல ஆண்டுகள் பழமையான கழிவுநீர் தொட்டியை பராமரிக்க பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை முறையாக நடிவடிக்கை எடுக்காததே சிறுமிகள் உயிரிழப்பிற்கு காரணம் என்று கூறி மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த உத்தமபாளையம் வருவாய்க் கோட்டாட்சியர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், சிறுமிகள் மரணத்திற்கு நீதி கிடைக்கும் என உறுதியளித்ததை அடுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். சிறுமிகள் மரணம் குறித்து கோப்பை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் : “சின்னஞ்சிறு சிறார்கள் என்ன ஆயுதம் ஏந்தியவர்களா”?

கவனயீர்ப்பு போராட்டம்..

சர்வதேச சிறுவர் தினத்தில் காணாமல் போன தமது குழந்தைகளுக்கு நீதி கோரி வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (01.10.2022) காலை 11.00 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றிருந்தது.

தமிழ் குழந்தைகள் என்ன பயங்கரவாதிகளா?, எங்கள் உறவுக்காக நீதி சர்வதேச நீதியாகவே வழங்கப்பட வேண்டும் , இலங்கையில் போர்க்குற்றம் செய்தவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் முற்படுத்துங்கள்,

சின்னஞ்சிறு சிறார்கள் என்ன ஆயுதம் ஏந்தியவர்களா?, பாடசாலை சென்ற மாணவன் எங்கே போன்ற பல்வேறு கோசகங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இக் கவனயீர்ப்பு போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள் , பெற்றோர்கள் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியா குடியிருப்பு சிறுவர் பூங்காவில் சிறப்பாக நடைபெற்ற சிறுவர் தினம்!!

சிறுவர் தினம்..

வவுனியா சிக்கன கூட்டுறவுச் சங்கத்தின் ஏற்பாட்டில் குடியிருப்பு சிறுவர் பூங்காவில் இன்று (01.10) காலை 9 மணிக்கு சிறுவர் தின நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றது.

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறுவர்களை மகிழ்விக்கும் விளையாட்டு நிகழ்வுகள், சிறுவர்களுக்கான போட்டிகள், சிறுவர்களின் கலை ஆக்கங்கள் என்பவற்றை வெளிப்படுத்தி இந் நிகழ்வுகள் இடம்பெற்றன. இதன்போது சிறுவர்களை பாராட்டி மகிழ்வித்து பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.சரத்சந்திர, கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் இந்திரா ரூபசிங்க, முன்னாள் நகரசபை உறுப்பினர் நா.சேனாதிராஜா, சிக்கன கூட்டுறவுச் சங்க தலைவர் மற்றும் பணியாளர்கள், சிறுவர்களின் பெற்றோர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இன்ஸ்டாகிராம் காதலில் குழந்தையை பெற்றெடுத்த பள்ளி மாணவி : அதிர்ச்சி சம்பவம்!!

மதுரையில்..

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி, அங்குள்ள அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். ஆன்லைன் வகுப்புகளுக்காக சிறுமியின் பெற்றோர் செல்போன் வாங்கி கொடுத்துள்ளனர்.

படிப்பதை தவிர, சிறுமி இன்ஸ்டாகிராம், வாட்சப் மற்றும் ஆன்லைனில் கேம் விளையாடுவதற்கும் செல்போனை பயன்படுத்தியுள்ளார். அப்பொழுது சிறுமிக்கும், அவரது உறவினரான திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியை சேர்ந்த 21 வயது இளைஞருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அது காதலாக மாறியது.

சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த இளைஞர் தனியாக அழைத்துச் சென்று பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார். இதனால் மாணவி கர்ப்பமடைந்தார்.

தொடர்ந்து, இதனை பெற்றோரிடம் கூறாமல் மறைத்தும் வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 22ஆம் தேதி வீட்டின் கழிப்பறைக்கு சென்ற மாணவிக்கு குழந்தை பிறந்துள்ளது.

குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு சிறுமியின் பெற்றோர் வந்து பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.கழிவறையில் தங்களது மகள் குழந்தையுடன் மயங்கி கிடந்ததை அடுத்து, இருவரையும் மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இது பற்றி தகவல் அறிந்த குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து இளைஞரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

வகுப்பறையில் மாணவிகளுக்கு ஆபாசப் படம் காட்டிய ஆசிரியர்.. தக்க பாடம் புகட்டிய மக்கள்!!

ஜார்க்கண்ட்டில்..

ஜார்க்கண்ட்டில் வகுப்பறையில் மாணவிகளுக்கு ஆபாச படம் காட்டிய ஆசிரியரை அடித்துப் செருப்பு மாலை அணிவித்து பெற்றோர்கள் வீதி வீதியா அழைத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம், பதம்ஜம்டா பகுதியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஆசியராக இருப்பவர் துகாராம். இவர் வகுப்பறையில் பாடம் எடுக்கும் போது மாணவிகளுக்கு ஆபாசப் படம் காட்டியுள்ளார்.

மேலும் மாணவிகளைத் தகாத முறையில் தொட்டுள்ளார். இது குறித்து மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் ஆசிரியர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

ஆனால் போலிஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் பெற்றோர்கள் பள்ளிக்குச் சென்று அந்த ஆசிரியரைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். பின்னர் ஆசிரியரின் கழுத்தில் செறுப்பு மாலையை அணிவித்து வீதி வீதியா அழைத்துச் சென்றுள்ளனர்.

இது பற்றி தகவல் அறிந்து அங்க வந்த போலிஸார் பொதுமக்களிடம் இருந்து ஆசிரியை மீட்டு காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். ஆசிரியர் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்துவதாக போலிஸார் தெரிவித்ததை அடுத்து பொதுமக்கள் அங்கிருந்து சென்றனர்.

வவுனியாவில் 2050 ஆவது நாளைக் கடந்த காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம்!!

2050 ஆவது நாளைக் கடந்த..

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் 2050 ஆவது நாளை கடந்துள்ள நிலையில் வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்பாக 2050 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தாய்மார் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு கவனயீர்ப்பு போராட்டத்தில் இன்று (01.10) ஈடுபட்டனர்.

இதன்போது ‘எல்லோரும் சிறுவர் தினத்தை கொண்டாடி மகிழ்வாக இருக்கிறார்கள். நாங்கள் சிறுவர் தினத்தை கொண்டாட முடியாத நிலையில் இருக்கின்றோம். நாம் 2050 நாளாக இருப்பது யாருக்கும் தெரியாதா? இன்று நாம் தெருவில் இருந்து கண்ணீர் விடுகின்றோம்.

எமது பிள்ளைகள் வராமையால் எங்களுக்கு நிம்மதி இல்லை. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் வந்து தீர்வு பெற்று தர வேண்டும். எமது பிள்ளைகள் சிறுவர்களாக இருந்த போது தான் காணாமல் ஆக்கப்பட்டடார்கள்.

எங்களது கண்ணீர் பொல்லாத கண்ணீர். எமது தாய்மாரின் கண்ணீருக்கு பதில் தர வேண்டும். அவ்வாறு தராவிடின் எமது கண்ணீர் அவர்களை நிம்மதியாக இருக்க விடாது. எமக்கு நீதி வேண்டும்’ என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிங்களவர்கள் இலங்கைக்கு வந்தேறு குடிகள் என வெளிப்படுத்தும் பதாதையையும், அமெரிக்க கொடி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளையும் ஏந்தியிருந்தனர். குறித்த ஆர்ப்பாட்டத்தில் காணாமல் ஆக்டகப்பட்டோரின் உறவுகள் பலரும் கலந்து கொண்டனர்.

இலங்கையில் தாயை தேடும் 36 ஆண்டுகளுக்கு முன்னர் பிரான்ஸ் சென்ற யுவதி!!

தாயை தேடும்..

இலங்கையில் இருந்து சுமார் 36 ஆண்டுகளுக்கு முன்னர் தத்து பிள்ளையாக பிரான்ஸ் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்ட யுவதி ஒருவர் தன்னை பெற்றெடுத்த தாயை கண்டுபிடித்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

லோரேன் என்ற இந்த யுவதி தற்போது திருமணமான பெண். இதற்கு முன்னர் லோரேன் தனது பிரான்ஸ் கணவருடன் இலங்கைக்கு வந்து தன்னை பெற்றெடுத்த தாயை கண்டுபிடிக்க முயற்சித்துள்ளார்.

எனினும் அவரால் தனது தாயை கண்டுபிடிக்க முடியவில்லை. இதன் காரணமாக தன்னை பெற்றெடுத்த தாயை கண்டுபிடிக்க உதவுமாறு அவர் ஊடகங்கள் வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளார்.

லோரேனிடம் தனது பிறப்பு தொடர்பில் குறைவான தகவல்களே உள்ளன. இதனடிப்படையில் அவர் கொழும்பு காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் கடந்த 1985 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி பிறந்துள்ளார். தாயாரது பெயர் நேன்சி பத்திரகே தயாவதி என லோரேனிடம் இருக்கும் பிறப்பத்தாட்சி பத்திரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நேன்சி பத்திரகே தயாவதி என்ற பெண் தொடர்பான தகவல் அறிந்தவர்கள் எவராவது இருந்தால், அது பற்றி 0772114795 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புக்கொண்டு அறிய தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காதல் மனைவியை விரட்டி விரட்டி வெட்டிய கணவன் : நடந்த விபரீதம்!!

கன்னியாகுமரியில்..

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதியை சேர்ந்த சோனியா (34) கடந்த 14 ஆண்டுகளுக்கு முன் கூடங்குளம் பகுதியை சேர்ந்த ஜெயராஜ் (38) என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

ஜெயராஜ் ஓட்டுநர் தொழிலும் சோனியா அழகு நிலைய தொழிலும் செய்து வருகின்றனர். இவர்களுக்கு 12 மற்றும் 10 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இது தொடர்பாக நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று சோனியா தனது இரண்டாவது மகனுடன் இருசக்கர வாகனத்தில் சுசீந்திரம் பகுதியில் வந்த போது, அவரை பின் தொடர்ந்து ஆட்டோவில் வந்த ஜெயராஜ் மனைவியை வழிமறித்து அரிவாளால் மகன் கண்முன்னே வெட்டியுள்ளார்.

இதில் கன்னம், கை, கால் உட்பட பல்வேறு பகுதிகளில் வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்த அப்பகுதியினர் சுசீந்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததோடு சோனியாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஜெயராஜை பிடித்து சம்பவ இடம் வந்த சுசீந்திரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

சாலையில் இருசக்கரவாகனத்தில் வந்த மனைவியை மகன் கண்முன்னே கணவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சோனியா படுகாயங்களுடன் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஜெயராஜ் மீது ஏற்கனவே திருட்டு உட்பட பல்வேறு வழக்குகள் காவல் நிலையங்களில் நிலுவையில் இருப்பது குறிப்பிடதக்கது.

யாழில் தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட கணவன் மற்றும் மனைவி : உயிரிழப்பிற்கான காரணம் வெளியானது!!

யாழில்..

யாழ். வல்வெட்டித்துறை – நெடியகாடு பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து கணவனும், மனைவியும் தீக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டமைக்கான காரணம் வெளியாகியுள்ளது.

வல்வெட்டித்துறை நெடியகாடு, ஏஜிஏ ஒழுங்கையைச் சேர்ந்த சரவணபவா ரஞ்சித்குமார் (வயது 30) அவரது மனைவி கிருசாந்தினி (வயது 26) என்ற இருவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தனர்.

குறித்த தம்பதியினர் மின் ஒழுக்கு காரணமாக படுக்கை அறையில் சேமித்து வைத்திருந்த பெட்ரோலில் தீ பற்றியதால் தூக்கத்திலிருந்த கணவனும், மனைவியும் தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சம்பவ இடத்தில் இடம்பெற்ற தடயவியல் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது உயிரிழந்த மனைவியின் கையில் அலைபேசி சார்ஜர் வயர் இருந்துள்ளதுடன்,அந்த அலைபேசி வெப்பமாகி சேமித்து வைத்திருந்த பெட்ரோல் கொனள்கலன் வெடித்து தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அறிக்கையிடப்பட்டுள்ளது.

யாழ். வல்வெட்டித்துறை – நெடியகாடு பகுதியில் உள்ள வீடொன்றில் கணவனும், மனைவியும் தீக்காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று அதிகாலை 4.15 மணியளவில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வல்வெட்டித்துறை – நெடியகாடு, ஏஜிஏ ஒழுங்கையைச் சேர்ந்த சரவணபவா ரஞ்சித்குமார் (வயது 30) மற்றும் அவரது மனைவி கிருசாந்தினி (வயது 26) ஆகியோரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தம்பதி உறங்கிய அறையில் தீப்பரவல் ஏற்பட்டதை அவதானித்த வீட்டார் அறையை உடைத்து உள்நுழைந்த போது,

இருவரும் தீயில் எரிந்து சடலமாக காணப்பட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. தீ விபத்திற்கான காரணம் இதுவரையில் தெரியவராத நிலையில் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

ஹோட்டல் அறையில் தூக்கில் தொங்கிய பிரபல நடிகை : அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

மும்பையில்..

மராட்டிய மாநிலம் மும்பையில் வசித்து வந்த இளம்பெண் அகன்ஷா மோகன். 30 வயதான இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 16-ம் தேதி ரிலீஸ் ஆன சியா என்ற படத்தில் ஷிபெய்ல் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவர் விளம்பரங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகையும், மாடல் அழகியுமான அகன்ஷா மோகன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். மும்பை அந்தேரியில் ஒரு ஓட்டலில் தங்கி இருந்த அகன்ஷா மோகன் தனது அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அந்தேரி ஓட்டலில் தங்கி இருந்த அகன்ஷா மோகன் நேற்று வெகு நேரமாகியும் தனது அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஓட்டல் ஊழியர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து ஓட்டலுக்கு வந்த போலீசார் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அங்குள்ள ஒரு அறையில் அகன்ஷா தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

மேலும், அந்த அறையில் இருந்து ஒரு கடிதத்தையும் கைப்பற்றினர். அதில், ‘ எனது மரணத்திற்கு யாரும் காரணமல்ல. யாரையும் தொல்லை செய்ய வேண்டாம்’ என எழுதப்பட்டிருந்தது. அந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார் நடிகையின் மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எரிபொருளின் விலை குறைக்கப்பட்டது : நள்ளிரவு முதல் நடைமுறை!!

எரிபொருளின் விலை..

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் விலை குறைப்பிற்கு ஏற்ப லங்கா ஐஓசி நிறுவனமும் இன்று நள்ளிரவு முதல் தமது பெட்ரோல் விலையை குறைக்க தீர்மானித்துள்ளது.

அதன்படி, இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி ஆகியவற்றின் 92 ரக பெட்ரோலின் புதிய விலை 410 ரூபாவாகவும், 95 ரக பெட்ரோலின் புதிய விலை 510 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலை குறைக்கப்பட்டுள்ளது. எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, பெட்ரோல் 92 இன் விலை லீட்டருக்கு 40 ரூபாயும், பெட்ரோல் 95 இன் விலை லீட்டருக்கு 30 ரூபாயும் குறைக்கப்படுவதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், பெட்ரோல் 92 இன் புதிய விலை 410 ரூபாவாகவும், பெட்ரோல் 95 இன் புதிய விலை லீட்டருக்கு 510 ரூபாவாகவும் குறைவடையவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய எரிபொருட்களின் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ட்விட்டர் செய்தி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.