பேரூந்திற்குள் துடிதுடித்து உயிரிழந்த குழந்தை : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

கட்டாரில்..

கத்தாரில் கேரளாவைச் சேர்ந்த 4 வயது குழந்தை பள்ளி வேனில் அடைக்கப்பட்டதால் மரணம். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, ஸ்பிரிங்ஃபீல்ட் மழலையர் பள்ளியை மூட கத்தாரின் கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

கத்தாரில், இந்தியாவன் கேரளாவைச் சேர்ந்த 4 வயது சிறுமி உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவர் படித்த மழலையர் பள்ளி கத்தார் அதிகாரிகளால் மூடப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் புதன்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன.

கேரளாவைச் சேர்ந்த கேஜி 1 மாணவி மின்சா மரியம் ஜேக்கப் (Minsa Mariyam Jacob), கத்தாரில் உள்ள அல் வக்ராவில் பள்ளி பேருந்திற்குள் பல மணிநேரம் பூட்டப்பட்டதால் தனது பிறந்தநாளிலேயே உயிரிழந்தார்.

ஞாயிற்றுக்கிழமை காலை மூடப்பட்ட பள்ளி வேனில் விட்டுச் செல்லப்பட்ட அவர் மூச்சுத் திணறி இறந்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து, அல் வக்ராவில் உள்ள ஸ்பிரிங்ஃபீல்ட் மழலையர் பள்ளியை மூட கத்தாரின் கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சகம் (MoEHE) முடிவு செய்துள்ளதாக ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸை தளமாகக் கொண்ட கலீஜ் டைம்ஸ் தெரிவித்துள்ளது. “விசாரணையில் தொழிலாளர்களின் அலட்சியம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, மாணவி ஒருவரின் மரணத்துடன் சமூகத்தை உலுக்கிய சோகமான விபத்தை கண்ட தனியார் மழலையர் பள்ளியை மூடுவதற்கு கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சகம் முடிவு செய்தது.

நமது பல்வேறு கல்வி நிறுவனங்களில் உள்ள மாணவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான தனது உறுதிப்பாட்டை அமைச்சகம் புதுப்பிக்கிறது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தனியார் மழலையர் பள்ளியில் குறைந்த பணியாளர்களே உள்ளனர் என்பதால் இந்த மரணம் நிகழ்ந்தது என்று அது மேலும் கூறியது. மின்சா ஞாயிற்றுக்கிழமை காலை பேருந்தில் ஏறியதாகவும் ஆனால் பள்ளிக்குச் செல்லும் வழியில் மயங்கி விழுந்ததாகவும் குழந்தையின் குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன.

குழந்தை பேருந்தின் உள்ளே இருப்பதை அறியாமல் வாகன ஊழியர்கள், பேருந்தை பூட்டிவிட்டு வாகன நிறுத்துமிடத்திற்கு நகர்த்திவிட்டு சென்றனர். பிற்பகலில் அவர்கள் வாகனத்திற்குத் திரும்பியபோது, ​​​​4 வயது சிறுமி சுயநினைவின்றி இருப்பதைக் கண்ட பணியாளர்கள் அவளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.

கடும் வெப்பத்தில் குழந்தை மூச்சுத் திணறி உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இரண்டு நாட்கள் மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு, மின்சாவின் அஸ்தி விமானம் மூலம் கொச்சிக்குக் கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள சிங்கவனத்தில் உள்ள அவரது சொந்த இடத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும்.

காதலுக்கு தடையாக இருந்த கணவர் கொலை : இளம் பெண்ணின் திட்டம் அம்பலம்!!

தருமபுரியில்..

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே கள்ளக்காதலுக்கு இடையூராக இருந்த கணவரை ஆட்களை வைத்து கொலை செய்த மனைவி உட்பட மூவரை போலீசார் கைது செய்துள்ளனர். சடலத்தை கைப்பற்றிய பெரும்பாலை காவல் நிலைய போலீசார் உடற்கூராய்வுக்காக தருமபுரி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், உயிரிழந்த இளைஞர் இண்டூர் அருகே சோம்பட்டியை சேர்ந்த மணி(வயது 30) என்பதும், டெம்போ ஓட்டுநராக பணிபுரிந்து வந்தது தெரியவந்தது. உயிரிழந்த மணிக்கு அம்சவள்ளி என்ற மனைவியும், இரண்டு வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர்.

இளைஞரின் மரணத்திற்கான காரணம் குறித்து ஏரியூர் காவல் ஆய்வாளர் யுவராஜன் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் இறந்து போன மணியின் மனைவி, மாமியார் உள்ளிட்ட ஐந்து பேர் மீது சந்தேகம் எழுந்தது.

பின்னர் கவனத்தை மணியின் மனைவி அம்சவள்ளி மீது திருப்பிய போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது, அம்சவள்ளி தனது கல்லூரி காதலன் சந்தோஷ்( வயது 27) மூலம், கணவனை பெட்ரோல் ஊற்றி, எரித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

பின்னர் பெங்களூருவில் பேப்பர் கடை வைத்திருந்த சந்தோஷை கைது செய்து பெரும்பாலை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். மேலும், கொலைக்கு உடந்தையாக இருந்த அதே ஊரை சேர்ந்த லோகேஷ் (வயது 23) மணியின் மனைவி அம்சவள்ளி உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அம்சவள்ளிக்கு அதிக ஆண் நண்பர்கள் இருந்து வந்ததுள்ளனர். இதனை அவரது கணவர் கண்டித்துள்ளார். இதனால் கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.


அதனால் கணவரை கொலை செய்ய திட்டம் தீட்டிய அம்சவள்ளி சம்பவத்தன்று காலை கணவருக்கு பணம் கொடுத்து மதுகுடிக்க அனுப்பியுள்ளார். மணி தனது மனைவி கொடுத்த பணத்தில் தொடர்ந்து மாலை வரை குடித்துள்ளார். பிறகு மாலை உனது நண்பர் சந்தோஷ் அழைக்கிறார் சென்று வா என்று என மனைவி அனுப்பி வைத்துள்ளார்.

சந்தோஷ் அடிக்கடி வீட்டிற்கு வந்து சென்று சென்றதால் மணியுடன் நண்பராகியுள்ளார். சந்தோஷை சந்திக்க சென்று அங்கும் அவருடன் சேர்ந்து மணி மது அருந்தியுள்ளார்.

போதை தலைக்கேறிய மணி அசைவற்று கிடந்தபோது சந்தோஷ் மற்றும் லோகேஷ் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் அமரவைத்து பெரும்பாலை அருகே உள்ள நரசிபுரம் சுடுகாட்டிற்கு சுமார் 25 கிலோமீட்டர் தூரம் கூட்டிச் சென்று கை, கால்களை கட்டுப்போது மார்பு பகுதியில் எட்டி உதைத்து கொலை செய்துள்ளனர்.

பின்னர் அடையாளம் தெரியாமல் இருக்க கொலை செய்த மணியின் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு பெங்களூருவிற்கு தப்பி சென்றுள்ளனர். கள்ளக்காதலுக்கு இடையூராக இருந்த கணவரை இளம்பெண் திட்டமிட்டு கொலை செய்த சம்பவம் தருமபுரியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதலியை கல்லால் அடித்துக் கொன்று புதைத்த காதலன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!! 

தெலுங்கானாவில்..

திருமணத்திற்கு மறுத்த காதலியை பாலியல் வன்கொடுமை செய்து கல்லால் அடித்து துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்த காதலன் அவரைக் கொன்று புதைத்திருக்கிறார். தெலுங்கானாவில் நடந்து இருக்கிறது இந்த அதிர்ச்சி சம்பவம்.

தெலுங்கானா மாநிலத்தில் வனபர்த்தி மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் கல்லூரியில் படித்து வந்திருக்கிறார். கல்லூரி மாணவியான இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீ சைலம் என்ற இளைஞரை காதலித்து வந்திருக்கிறார். இருவரும் ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் இவர்களின் காதல் விவகாரம் பெண் வீட்டாருக்கு தெரிய வந்ததும் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். பெற்போரின் பேச்சை கேட்ட அந்த இளம் பெண் காதலனிடம் பேசுவதை நிறுத்திக் கொண்டிருக்கிறார் .

கடந்த ஐந்தாம் தேதி காதலியை செல்போனில் அழைத்து இருக்கிறார் . ஐந்து வருடங்களாக காதலித்து விட்டு இப்படி திடீர் என்று பேசாமல் இருப்பது சரியா என்று கேட்டிருக்கிறார்.

பெற்றோர் பேச்சை என்னால் மீற முடியாது என்று அந்த இளம் பெண் உறுதியாக சொல்லவும், சரி, கடைசியாக ஒருமுறை மட்டும் வந்து சந்தித்து பேசிவிட்டு போய்விடலாம் என்று அழைத்திருக்கிறார். அதை நம்பி அந்த இளம்பெண் காதலன் ஸ்ரீசைலம் உடன் சென்றிருக்கிறார் .

ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றதும் காதலித்து விட்டு ஏமாற்றி விட்டு செல்கிறாயே உன்னை சும்மா விடுவேனா என்று மிரட்டி இருக்கிறார். அந்த பெண்ணை கண்மூடித்தனமாக தாக்கி இருக்கிறார் அதன் பின்னர் பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார்.

அந்த பெண், இத்தனை வருடம் காதலித்த நீ இப்படி செய்து விட்டாயே என்று அழுது புலம்பி இருக்கிறார் . உன்னை சும்மா விடமாட்டேன் . நீ நல்லவன் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இப்போதே போலீசுக்கு போன் செய்து உன்னை கைது செய்ய வைக்கிறேன் என்று போலீசுக்கு போன் செய்திருக்கிறார்.

இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீசைலம் காதலியை கல்லால் அடித்திருக்கிறார். துப்பட்டாவால் கழுத்தை நெரித்திருக்கிறார். அவர் இறந்திருக்கிறார். அதன் பின்னர் தனது உறவினர் சிவா என்பவரை அழைத்து அவரின் உதவியுடன் கால்வாயில் குழி தோண்டி அங்கேயே காதலியை புதைத்து விட்டு தலைமறைவாக இருக்கிறார்.

இதற்கிடையில் மகளை காணவில்லை என்று பெற்றோர் தேடத் தொடங்கி இருக்கிறார்கள் . காதலனுடன் செல்கிறேன் என்று மாணவி அனுப்பிய குறுந்தகவல் பெற்றோருக்கு கிடைத்திருக்கிறது.

இதில் சந்தேகம் அடைந்த அவர்கள் போலீசில் புகார் அளிக்க, போலீசார் ஸ்ரீசைலம் மீது வழக்கு பதிவு செய்து அவரை தீவிரமாக தெரியவந்த போது தான் , காட்டுப்பகுதியில் நண்பருடன் பதுங்கி இருந்த வரை கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் காதலியை கொலை செய்து புதைத்ததை ஒப்பு கொண்டிருக்கிறார். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் புதைக்கப்பட்ட அந்த பெண்ணின் சடலத்தை போலீசார் தோன்றி எடுத்துள்ளனர். ஸ்ரீசைலம், உதவியாக இருந்த சிவாவையும் போலீசார் கைது சிறையில் அடைத்து உள்ளனர்.

தூக்கில் தொங்கிய நிலையில் பெண் மீட்பு : மரணத்தில் சந்தேகம் : உறவினர்கள் சாலை மறியல்!!

உளுந்தூர்பேட்டையில்..

உளுந்தூர்பேட்டையில் இளம்பெண் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார். மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறியும் உரிய விசாரணை மேற்கொள்ளாமல், உடல் பிரேத பரிசோதனை செய்யாமல் அலைக்கழிக்கப்படுவதாக கூறி பெண்ணின் பெற்றோர், உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பிரகாஷ் நகரை சேர்ந்த மணிகண்டன். இவர் தனது மனைவி ரேவதி (24), மகள்கள் ஜெயவர்ஷினி (4), யாழினி (2) ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். மணிகண்டன் வேலைக்கு செல்லாமல் தினந்தோறும் குடித்துவிட்டு ரேவதியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.

இதனால் இருவருக்குமிடையே பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று ரேவதி தனது வீட்டின் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மிட்கப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த உளுந்தூர்பேட்டை காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் தங்களுடைய மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், வரதட்சணை கொடுமையால் தங்களது மகள் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என ரேவதியின் தந்தை வேல்முருகன் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனால் சந்தேக மரணம் என காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இளம்பெண் மரணம் குறித்து கோட்டாச்சியர் விசாரணை மேற்க்கொள்ளவும் உத்தரவிடப்பட்டது. இதனால் ரேவதியில் உடல் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

ஆனால் 2 நாள் வரை மருத்துவமனையில் காத்திருந்தும் காவல்துறை தரப்பிலோ, கோட்டாச்சியர் விசாரணையையோ நடத்தப்படாமல், உடல் பிரேத பரிசோதனை கூட செய்யாமல் தங்களை அலைக்கழிப்பதாக கூறி பெண்ணின் பெற்றோர்கள், உறவினர்கள் மருத்துவமனை முன்பு சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பணியில் ஈடுபட்டு இருந்த காவல்துறையினர் மறியலில் ஈடுப்பட்டவர்களை சமாதானம் செய்து அப்புறப்படுத்தினர். பெண்ணை பறிக்கொடுத்த பெற்றோர் சாலையில் உருண்டு பிரண்டு அழுத சம்பவம் சாலையில் சென்றவர்களை கண்கலங்க செய்தது.

தங்களது பெண்ணின் மரணத்திற்கு கோட்டாச்சியர் தலைமையில் உரிய விசாரணை மேற்க்கொள்ள வேண்டும், ரேவதியின் உயிரிழப்பு காரணமான அவரது கணவர் மணிகண்டனை கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அம்மாவை அப்பா கழுத்தில் துணியால் நெறித்தாக ரேவதியின் மூத்த மகள் ஜெயவர்ஷினி பேசிய வீடியோ வெளியாகியுள்ளதால் அதனை கொண்டும் காவல்துறையினர் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

ஒரு மில்லியன் இலங்கையர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றம்!!

இலங்கையர்கள்..

கடந்த 20 மாத காலப்பகுதிக்குள் ஒரு மில்லியன் இலங்கையர்கள் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி 10 லட்சத்துக்கும் அதிகமான இலங்கையர்கள் வேலைவாய்ப்ப பெற்று வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர்.

இத்தகவலை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களப் பேச்சாளர் பியூமி பண்டார தெரிவித்துள்ளார். கடந்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் இவ் வருடம் ஆகஸ்ட் 30ஆம் திகதி வரையான,

காலப் பகுதிக்குள் 1,013,992 இலங்கையர்கள் கடவுச்சீட்டு பெற்றுள்ளனர். அதேவேளை இக்காலப் பகுதிக்குள் 1,050,024 இலங்கையர்கள் வெளிநாடு சென்றுள்ளதாகவும் அவர் கூறினார்.

பணத்துக்காக திருமணம் செய்து கொண்டேனா? மாத வருமானத்தை சொல்லி வாயடைக்க வைத்த மகாலட்சுமி!!

மகாலட்சுமி..

சீரியல் நடிகை மகாலட்சுமி பிரபல தயாரிப்பாளர் ரவீந்தரனை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக அவர்கள் இருவரும் குறித்து தான் பெரியளவில் பேசப்பட்டு வருகிறது. அவர்களும் பல்வேறு பேட்டிகளில் கலந்து கொண்டு பேசி வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது அவர்கள் அளித்துள்ள பேட்டி ஒன்றில் நடிகை மகாலட்சுமி பணத்தின் காரணமாக தான் தயாரிப்பாளர் ரவீந்தரனை அவர் திருமணம் செய்து கொண்டார் என அவர் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து பேசியிருக்கிறார்.

அதன்படி மகாலட்சுமி தனது மாத வருமானம் மட்டும் ரூ. 3 லட்சம் எனவே நான் பணம் காரணமாக அவர் செய்து கொள்ள அவசியம் இல்லை என விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.

காதலுக்காக இளம் பெண் எடுத்த அதிரடி முடிவு… இறுதியில் நடந்த திருப்பம்!!

கடலூரில்..

கடலூர் அருகே உள்ள பெரிய கங்கணாங்குப்பம், மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் முருகதாஸ் மகன் வெங்கடேஷ் (21). இவர் ஆந்திரா மாநிலம் சூலூர்பேட்டையை சேர்ந்த முனி கிருஷ்ணப்பா மகள் சுஜிதா (21) என்பவரை முகநூல் வழியாக பழகி காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில், சுஜிதாவின் வீட்டில் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்ததாக கூறப்படுகிறது. இதனால் சுஜிதா தன்னுடைய காதலனை எப்படியாவது கரம் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் கடலூர் வந்துள்ளார்.

அவருக்கு தமிழ் தெரியாததால் ரயில் நிலையத்தில் நின்று கொண்டு எங்கு செல்வது என்று தெரியாமல் இருந்துள்ளார். இது குறித்து ரயில்வே ஊழியர்கள் கடலூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரிக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்தப் பெண்ணிடம் விசாரணை நடத்தி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தார். அப்போது சுஜிதா நடந்த சம்பவங்கள் குறித்து இன்ஸ்பெக்டர் மகேஸ்வரியிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அவர், சுஜிதாவின் காதலன் வெங்கடேசுக்கு தகவல் தெரிவித்து காவல் நிலையத்திற்கு வரவழைத்துள்ளார். பின்னர் இருவரிடம் விசாரணை நடத்தியுள்ளார் அப்போது சுஜிதா தன்னுடைய காதலனை கரம் பிடிப்பதில் உறுதியாக இருந்துள்ளார்.

இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தனது சொந்த செலவில் சுஜிதாவிற்கு பட்டுச்சேலை மற்றும் சீர்வரிசை பொருட்கள் வாங்கிக்கொடுத்து வெங்கடேசுடன் திருமணம் செய்து வைத்தார்.

வெளிநாட்டில் உயிரிழந்த இலங்கைப் பெண் : குடும்பத்தினர் விடுத்த கோரிக்கை!!

விஷ்மா சந்தமாலி..

தடுப்புக்காவலில் இருந்தபோது உயிரிழந்த இலங்கைப் பெண் விஷ்மா சந்தமாலியின் (Wishma Sandamali) இறுதி நாட்களைக் காட்டும் சிசிடிவி காணொளியின் ஒரு பகுதியை சமர்ப்பிக்குமாறு ஜப்பானின் நகோயா மாவட்ட நீதிமன்றம் அரசாங்கத்திடம் கோரியுள்ளது.

விசா காலாவதியான நிலையில் கடந்தவருடம் ஜப்பானின் நாகோயாவில் அமைந்துள்ள குடிவரவு தடுப்பு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 33 வயதான விஷ்மா (Wishma Sandamali) கடந்த மார்ச் 06 ஆம் திகதி உயிரிழந்தார்.

அங்கு அவருக்கு வழங்கப்பட்ட உணவு குறித்து அவர் தொடர்ந்து முறைப்பாடு அளித்ததாகவும், அந்த உணவினால் அவர் பலவீனமடைந்து உயிரிழந்ததாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் ஆறு சந்தர்ப்பங்களில் மருத்துவர்கள் அந்தப் பெண்ணை பரிசோதித்ததாகவும், குறைந்தபட்சம் அவர் இரண்டு முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குடிவரவு அதிகாரி தெரிவித்ததாக தூதரக செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருந்தார்.

இந் நிலையில் விஷ்மா இறப்பதற்கு முன்னர் அவரை தடுத்து வைத்திருந்த அறையில் உள்ள சிசிடிவியின் முழுமையான காணொளியை நீதிமன்றில் சமர்ப்பிக்க குடிவரவு அதிகாரிகளுக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும் என விஷ்மாவின் சகோதரி நீதிமன்றம் ஊடாக கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

இவ்வாறான நிலையில் நீதிமன்றத்தின் சமீபத்திய கோரிக்கைக்கு இணங்க வேண்டுமா என்பதை பரிசீலிப்பதாக ஜப்பான் அரசு நீதிமன்றத்தில் தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது.

திடீரென உயிரிழந்த தந்தை… சோகம் தாங்க முடியாமல் 30வது நாளில் மனைவி மற்றும் மகன் எடுத்த விபரீத முடிவு!!

விருதுநகரில்..

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர், சிதம்பரம் நகரில் வசித்து வருபவர் சிதம்பரம். இவர் ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் ஆவார். இவரின் மனைவி சுபா. இந்த தம்பதிகளுக்கு முரளிராஜ் பாரதி என்ற மகனும், 2 மகள்களும் இருக்கின்றனர்.

மகள்கள் திருமணம் முடிந்து தங்களது குடும்பத்துடன் வெளியூரில் வசித்து வருகிறார்கள்.முரளிராஜ் படித்துமுடித்துவிட்டு வேலையை தேடி வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த மாதத்தில் சிதம்பரம் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். சிதம்பரம் உயிரிழந்த துக்கத்தில் கடந்த ஒரு மாத காலமாக தாய் மற்றும் மகன் மிகவும் சோகத்தில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

அவரது மனைவி சுபா மற்றும் மகன் முரளி பாரதி கணவரின் 30வது நாள் நினைவு தினத்தை அனுசரித்துவிட்டு துக்கம் தாங்க முடியாமல் இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

அக்கம்பக்கத்தினர் கதவு திறந்து நிலையில், இருவரும் வீழ்ந்து கிடந்ததை கண்டு சாத்தூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தாய் மகன் இருவரும் தங்களது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என தனித்தனியே கடிதம் எழுதியுள்ளதை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி, இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மனைவியின் கிட்னியை விற்று 2வது திருமணம் செய்த கணவன் : 4 ஆண்டுகள் கழித்து தெரியவந்த உண்மை!!

ஒடிசாவில்..

மனைவியின் சிறுநீரகத்தை விற்று கணவன் 2வது திருமணம் செய்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் பேரில் கொடூர கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

மனைவியின் சிறுநீரகத்தை விற்று கணவன் 2வது திருமணம் செய்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் பேரில் கொடூர கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க காவல் துறையும் அரசும் எத்தனையோ நடவடிக்கை எடுத்தது குற்றங்கள் குறைந்தபாடில்லை, அலுவலகங்கள், பொது இடங்கள் என எல்லா இடங்களிலும் பெண்கள் சுரண்டப்படுகின்றனர்.

உடல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் சுரண்டல்கள் நடக்கிறது. ஏமாற்று பேர்வழிகளால் பெண்கள் குறிவைக்கப் படுகின்றனர், சில நேரங்களில் படித்த, உயர்ந்த அந்தஸ்தில் இருக்கும் பெண்கள் கூட ஆண்களால் மோசடிக்கு ஆளாகின்றனர்.

சில நேரங்களில் குடும்பத்தில் உள்ளவர்களாலேயே, ஏன், தொட்டு தாலி கட்டிய கணவன்களாலேயே மோசடி செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்த வரிசையில் தாலி கட்டிய கணவனே மனைவியிடம் அன்பாகப் பேசி மனைவியின் சிறுநீரகத்தை விற்றுள்ள கொடுமை நடந்துள்ளது.

ஒடிசாவில் உள்ள கோட மேட்டா கிராமத்தை சேர்ந்தவர் பிரசாந்த் கந்து, ரஞ்சிதா என்ற பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். பிரசாந்த் கந்து வங்கதேசத்தில் இருந்து வந்து அகதியாக இருப்பவர் ஆவார்.

ரஞ்சிதாவுக்கும் பிரசாத்துக்கும் திருமணமாகி 12 வருடங்கள் ஆகிறது, இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பிரசாந்த் குடிக்கு அடிமையானவர், அதனால் அவருக்கு குடும்பத்தின் மீதோ மனைவி மக்கள் மீதோ, ஈடுபாடு இல்லாமல் இருந்து வந்தார்.

இந்நிலையில்தான் கடந்த 2018 ஆம் ஆண்டு மனைவியின் சிறுநீரகத்தை விற்று அதில் உல்லாச வாழ்க்கை வாழலாம் என பிரசாந்த் முடிவு செய்தார், எனவே கடந்த 2018 ஆம் ஆண்டு சிறுநீரகத்தில் உள்ள கற்களை அகற்றுவதாக கூறி, மனைவியை நம்ப வைத்து, புவனேஸ்வரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பிரசாந்த் அழைத்துச் சென்றார்.

அப்போது மனைவி கணவர் தனது உடல்நிலை மீது இவ்வளவு அக்கறை காட்டுகிறாரே என பாசத்தில் மகிழ்ந்தார். ஆனால் பிரசாந்த் மருத்துவர்களுடன் ரகசிய ஒப்பந்தம் செய்துகொண்டு, மனைவியின் சிறுநீரகத்தை காசுக்காக விற்பனை செய்து விட்டார்.

ரஞ்சிதாவிற்கு தெரியாமலேயே அவரது சிறுநீரகம் அவரது உடலில் இருந்து அகற்றப்பட்டது, அதன் பின்னர் கணவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார், கடந்த நான்கு ஆண்டுகளாக ஒரே சிறுநீரகத்துடன் ரஞ்சிதா தனிமையில் வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில்தான் திடீரென அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது, பின்னர் அவர் மருத்துவமனைக்கு சென்றார், அப்போதுதான் அவருக்கு உண்மையான விஷயம் தெரியவந்தது, தங்களுக்கு ஒரே ஒரு சிறுநீரகம் தான் உள்ளது என மருத்துவர்கள் கூறியதை கேட்டு ரஞ்சிதா அதிர்ச்சி அடைந்தார்.

தான் கணவனால் ஏமாற்றப் பட்டதை எண்ணி கதறி அழுதார், இந்நிலையில் கடந்த மாதம் 24ஆம் தேதி மல்கான் கிரி காவல் நிலையத்தில் தனது ஏமாற்றுக்கார கணவன் மீது மோசடி புகார் கொடுத்தார், சிறுநீரகத்தை விற்ற கையோடு கணவர் பிரசாத் ஆந்திராவுக்கு சென்று அங்கு வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு, பின்னர் பெங்களூர் சென்று அங்கு வசித்து வருவதாக ரஞ்சிதா புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.

அவரின் புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் தனிப்படை அமைத்து பெங்களூர் அனுப்பினர், இந்நிலையில் கடந்த வாரம் பெங்களூரில் இருந்த பிரசாத்தை போலீசார் கைது செய்தனர். தற்போது ரஞ்சிதா ஒற்றைச் சிறுநீரகத்துடன் பெற்றோருடன் வசித்து வருகிறார்.

“ஹைய்யா ஜாலி ஜாலி‌..” தாலி கட்டும்போது மகிழ்ச்சியில் கைத்தட்டி குதித்த மணப்பெண்!!

தமிழகத்தில்..

இன்றைய காலகட்டத்தில், திருமண நிகழ்வு என்பது மிகப் பெரிய ஒரு கொண்டாட்டமாக தான் பார்க்கப்படுகிறது. மணமக்கள் இருவரும், தங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை தொடங்கும் நாளாக திருமணம் இருந்து வருகிறது.

அப்படி ஒரு நாளை, வாழ்நாள் முழுவதும் ஒரு உணர்வுள்ள தருணமாக நினைவு கூரும் வகையில் மாற்ற தான் அனைவரும் நினைப்பார்கள். இதற்காக ஒவ்வொரு விஷயத்தையும் புது ஜோடிகளாக மாற போகிறவர்கள் பார்த்து பார்த்து செய்வார்கள்.

தங்களின் வாழ்நாள் முழுவதும் திருமண நாள் மிக முக்கியமான தருணமாக நினைவிருக்க வேண்டும் என்பது தான் அவர்கள் மனதில் இருக்கும். அந்த வகையில், தற்போது மணப்பெண் ஒருவர் தனது திருமண நாளை இன்னும் அழகாக்க, தாலி கட்டும் நேரத்தில் செய்த விஷயம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

தமிழகத்தின் ஒரு பகுதியில் இந்த திருமணம் நடந்துள்ள நிலையில், மாப்பிள்ளை தாலியை எடுத்துக் கொண்டு மணமகளின் கழுத்திற்கு அருகே சென்றதும் குழந்தை போலவே உற்சாகம் அடைந்து விடுகிறார் அந்த பெண்.

அது மட்டுமில்லாமல், அங்கிருந்த நண்பர்கள் அனைவரும் கத்தி கூச்சல் போட்டு திருமணத்தை கொண்டாட, மறுபக்கம் கல்யாண பொண்ணும் தனக்கு திருமணம் ஆனதால் கத்திய படியே, கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

தொடர்ந்து நண்பர்கள் கத்திக் கொண்டே திருமணத்தை கொண்டாடிய படி இருக்க, மாப்பிள்ளை தாலி கட்டி முடிப்பது வரை மணப்பெண்ணின் முகத்தில் ஆனந்தம் மட்டும் தான் நிரம்பி இருந்ததை காண முடிந்தது. இறுதியில், தாலி கட்டி முடித்த பின், தனது கணவரை கட்டியணைத்த படி முத்தமும் கொடுக்கிறார் மணப்பெண்.

தனக்கு திருமணமான சமயத்தில், குழந்தை போல மாறி, கைதட்டி கொண்டாடிய மணப்பெண்ணின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், இணையவாசிகள் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

அதிகாரிகள் அசமந்தத்தால் தந்தையின் மடியில் உயிரிழந்த பிஞ்சுக் குழந்தை!!

குழந்தை..

அதிகாரிகள் அசமந்தத்தால் தந்தையின் மடியில் நான்கு வயது பிஞ்சுக்குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் உத்தரகாண்டின் பித்தோராகார் மாவட்டத்தில் உள்ள பி.டி. பாண்டே மருத்துவமனைக்கு, உடல் நலக்குறைவால் தனது 4 வயது குழந்தையை அழைத்து கொண்டு பெற்றோர் சென்றுள்ளனர்.

எனினும் , குழந்தையை அவசர சிகிச்சை வார்டில் சேர்க்க மருத்துவர்கள் மறுத்து விட்டனர். அத்துடன் குழந்தையை வெளிப்புற நோயாளிகள் பிரிவில் காண்பிக்குமாறு கூறியுள்ளனர்.

அந்த வார்டில் வரிசை நீண்டு இருந்தது. குழந்தையுடன் பெற்றோர் வரிசையில் நின்றனர். அவர்கள் நீண்டநேரம் வரிசையிலேயே காத்திருந்தபோது குழந்தை தந்தையின் மடியிலேயே உயிரிழந்து விட்டது.

பெற்றோர் இருவரும் குழந்தையின் மறைவால் துக்கம் பொறுக்க முடியாமல் அழுதனர். அது காண்போரை கலங்க செய்தது. இந்நிலையில் வைத்திய அதிகாரிகளின் குழந்தை உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாளுக்கு நாள் குறைவடையும் தங்கத்தின் விலை!!

தங்கத்தின் விலை..

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இந்நிலையில், இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 625,020 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இலங்கையில் கடந்த மாதங்களை விட தற்போது தங்கத்தின் விலையில் நாளுக்கு நாள் பாரிய வீழ்ச்சி பதிவாகி வருகின்றது. கடந்த காலங்களை விட தற்போது தங்கத்தின் விலை கணிசமான அளவு குறைந்துள்ளதாக உள்ளூர் தங்க விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் தங்க நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 173,750 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 159,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, கடந்த மாதங்களில் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று வரலாறு காணாத வகையில் உயர்ந்து 200,000 ரூபாவை எட்டியிருந்தது. எனினும், அடுத்து வந்த சில நாட்களில் 20 தொடக்கம் 40 ஆயிரம் ரூபாவால் இலங்கையில் தங்கத்தின் விலை குறைவடைந்து தற்போது 160,000 என்பதை அண்மித்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.

எதிர்வரும் 19ஆம் திகதி அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை : சற்றுமுன் வெளியான அறிவிப்பு!!

பாடசாலைகளுக்கு விடுமுறை..

நாட்டிலுள்ள சகல பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 19ஆம் திகதி விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டெம்பர் 19ஆம் திகதி அரச நிறுவனங்களுக்கு விசேட விடுமுறை தினமாக பொது நிர்வாக அமைச்சு அறிவித்திருந்தது. இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கை முன்னிட்டு, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்திருந்தது.

எவ்வாறாயினும், அரசாங்கத்தின் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்க விடுமுறை தினம் தடையாக இருக்கமாட்டாது என பொதுநிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் விடுத்துள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அதன்படி பாடசாலைகளுக்கும் அதே விடுமுறை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே அனைத்து அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கும் குறித்த நாளை விடுமுறை தினமாக கருதுமாறு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

தாய் என நினைத்து போஸ்டர் பின்னால் ஓடிச் சென்ற குதிரைக் குட்டி : நெஞ்சை உருக்கும் புகைப்படம்!!

குதிரை..

இணைய உலகில் பல்வேறு வகையான வீடியோக்கள் பகிரப்பட்டாலும், சில வீடியோக்கள் மட்டுமே வைரலாகின்றன. அதிலும் செல்ல பிராணிகளின் குறும்புகள் அல்லது மனதை தொடும் வகையிலான செய்கைகள் சில சமயங்களில் நமது மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விடும்.

சில சமயங்களில் நமது கண்களில் கண்ணீரை வரவழைத்து விடும். அந்த வகையில் குதிரை ஒன்றின் புகைப்படம் தற்போது மிகவும் வைரலாகி வருகிறது. தாய் என நினைத்து புகைப்படத்தின் பின்னால் குதிரை குட்டி ஓடியுள்ளது.

பேருந்து கிளம்பிய போது குதிரை படத்தைப் பார்த்தபடியே பேருந்தை துரத்தி சென்று கத்தியது. குதிரை குட்டியின் இந்த செயலை அங்கிருந்தவர்கள் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

கோபத்தில் இருந்த ஆசிரியை : முத்தம் கொடுத்து கூல் ஆக்கிய மாணவன் : வைரல் காட்சி!!

வகுப்பறையில்..

பள்ளி வகுப்பறையில் ஆசிரியர் ஒருவர் கோபத்தில் இருக்கும் தருணத்தில் மாணவர் ஒருவர் முத்தமிட்டு ஆசிரியையை சமாதானப்படுத்தும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பொதுவாக பள்ளி வகுப்பறையில் குழந்தைகள் சேட்டை என்பது அதிகமாகவே இருக்கும். வீடுகளில் 2 குழந்தைகள் இருக்கும்போதே அவர்கள் சேட்டையை சமாளிக்க முடியாமல் பெற்றோர்கள் தவிக்கும் நிலையில், பள்ளியில் ஆசிரியைகைள் 30 குழந்தைகளுக்கு மேல் சமாளிப்பது என்பது கடினமே.

இங்கு ஒரு குழந்தை வகுப்பில் குறும்புத்தனம் செய்யத் தொடங்குகிறது, அவரைப் பார்த்து ஆசிரியர் கோபமடைந்து தனது இருக்கையில் சென்று அமர்ந்தவரை முத்தம் கொடுத்து சமாதானப்படுத்த முயற்சி செய்கின்றது.

ஆசிரியரை சமாதானம் படுத்தும் போது, ​குறும்புத்தனம் செய்ய மாட்டேன் என்று திரும்பத் திரும்ப கூறுகிறார், ஆனால் ஆசிரியர் அவர் சொல்வதைக் கேட்கத் தயாராக இல்லை.

இதற்கிடையில் அந்த மாணவன் ஆசிரியரை மீண்டும் மீண்டும் அணைத்துக் கொள்கிறார். அத்துடன் அவரது ஆசிரியருக்கு முத்தமிட்டு சமாதானம் படுத்த முயற்சிக்கிறான். இறுதியில் அந்த ஆசிரியரும் குழந்தைக்கு முத்தமிட்டு இனி இப்படி குறும்புத்தனம் செய்ய கூடாது என்று கூறி கட்டி அணைத்துக்கொள்கிறார்.