இலங்கையில் தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, தங்கத்தின் விலையானது கடந்த தினங்களுடன் ஒப்பிடுகையில்,
இன்று (01.11.2025) சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனடிப்படையில், கொழும்பு செட்டியார் தெரு தங்க விலை நிலவரங்களின்படி,
அதேவேளை, 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 294,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
வர்த்தக நிலையங்களில் இலவசமாக பொலித்தீன் பைகள் வழங்கப்படாது என அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இன்று சனிக்கிழமை (01) முதல் அமுல்படுத்தப்படுகிறது.
நவம்பர் 01ஆம் திகதி முதல் வர்த்தக நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது இலவசமாக பொலித்தீன் பைகள் வழங்கப்படாது என அண்மையில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.
பொலித்தீன் பயன்பாட்டினால் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புக்களை குறைப்பதற்காகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பொலித்தீன் பைகளுக்கு கட்டாயம் அறவிடப்பட வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகார சபையும் அண்மையில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தியப் பெருங்கடலில் இன்று(01.10.2025) அதிகாலையில் 6.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) அறிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் மக்கள் வசிக்காத பகுதியில் ஏற்பட்டுள்ளதால், எந்தவொரு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.
எனினும், இலங்கை மற்றும் இந்தியக் கடற்பிராந்தியங்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்பதை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் முழுமையாக உறுதி செய்துள்ளது.
மேலும் தரவுகளின்படி, நிலநடுக்கம் ஏற்பட்ட பிராந்தியம் முற்றிலும் மக்கள் வசிக்காத கடல் பகுதியாகும். எனவே, உயிர்சேதம் அல்லது சொத்து சேதம் குறித்த எந்தத் தகவலும் இதுவரை பதிவாகவில்லை.
இந்த நிலநடுக்கம் இந்தியப் பெருங்கடலின் டெக்டோனிக் தட்டு (Tectonic Plate) எல்லைகளுக்கு அருகில் நிகழும் வழக்கமான நில அதிர்வுகளில் ஒன்றாகும். இப்பகுதியில் அவ்வப்போது இதுபோன்ற நிகழ்வுகள் பதிவாகுவது இயல்பானது என்றும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
அம்பாறை – வீரகொட பகுதியில் நேற்று (30.10.2025) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மத்திய முகாம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீரகொடவிலிருந்து ருகுணுகம நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியைவிட்டு விலகி கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் உஹன, திஸ்ஸபுரத்தைச் சேர்ந்த 17 வயதுடையவர் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சடலம் அம்பாறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மத்திய முகாம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பலாங்கொட, பின்னவல பொலிஸ் பிரிவின் வளவே அத்தர பகுதியில் சுரங்கத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 26 வயதுடைய கே.ஜி. நதீக சாரதா குணதிலக என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் பல்கலைக்கழக படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்த நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பிரேத பரிசோதனை பலாங்கொட ஆதார மருத்துவமனையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்ததாக மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜயதிலக தெரிவித்தார்.
இளைஞனின் மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கொழும்பில் இருந்து சிலாபம் நோக்கி பயணித்த ரயிலில் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
லுனுவில, கண்டிரிப்புவ பகுதியில் நேற்று முன்தினம் விபத்து ஏற்பட்டுள்ளது. கொச்சிக்கடை, மனவேரிய பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய திருமணமாகாத செவன் எடம்பேல என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.
கொச்சிக்கடை பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருடன் இறந்த இளைஞர் காதல் உறவில் இருந்ததாகவும், தனது காதலியைச் சந்தித்துவிட்டு திரும்பி சென்ற போது விபத்து ஏற்பட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ரயிலில் மோதியதில் பலத்த காயமடைந்த இளைஞன், 119 சுவசேரிய அம்புலன்ஸில் லுனுவில பிராந்திய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
காதலியுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக உயிரை மாய்த்துக் கொண்டாரா அல்லது விபத்து ஏற்பட்டதா என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக மாரவில ஆதார மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனையை மரண விசாரணை அதிகாரி நிரோஷன் குணசேகர நடத்த உள்ளார்.
இலங்கை , தெற்காசிய நாடுகளின் பிராந்திய கூட்டமைப்பின் இரண்டாவது மிக செலவுமிக்க நாடாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, தனி ஒரு நபரின் வாழ்க்கைச் செலவு வாடகையைத் தவிர்த்து 506 டொலர் அல்லது 153,899 ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
வாழ்க்கைச் செலவு புள்ளி விபர வலைத்தளமான Numbeo இன் தரவுகளை மையப்படுத்தித் தெரிவிக்கப்பட்டுள்ளது. சார்க் நாடுகளில், மாலைதீவு ஒரு நபருக்கு மாதம் 840.4 அமெரிக்க டொலர் செலவுடன் மிகவும் விலையுயர்ந்த நாடாகக் கருதப்படுகிறது.
Numbeo இணையதளத்தின்படி, கொழும்பு நகரில் நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்துக்கு, வாடகை நீங்கலாக, சௌகரியமாக வாழ மாதாந்தம் ரூபா 570,997 செலவாவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தச் செலவில் குழந்தைப் பராமரிப்பு, மளிகைப் பொருட்கள், பொழுதுபோக்கு, உணவகச் செலவுகள், பாடசாலைக் கட்டணம், வீட்டுச் செலவுகள் மற்றும் வாகனச் செலவுகள் போன்றவை அடங்கும்.
அதிக வரிகள் மற்றும் விலையேற்றம் காரணமாக மக்கள் சுமையுடன் உள்ள நிலையில், மத்திய வங்கியின் ‘வருடாந்த பொருளாதார ஆய்வு 2024’ சில முக்கிய விடயங்களைக் குறிப்பிடுகிறது.
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டியின் அடிப்படையில், சராசரி மாதாந்த குடும்ப நுகர்வுச் செலவு 2023 இல் ரூபா 103,383 ஆக இருந்தது, 2024 இல் 1.6 வீதமாக அதிகரித்து ரூபா 105,063 ஆக உயர்ந்துள்ளது.
இருப்பினும், 2022 இல் (2021 உடன் ஒப்பிடுகையில்) பதிவான 74.9 வீத அதிகரிப்பு மற்றும் 2023 இல் (2022 உடன் ஒப்பிடுகையில்) பதிவான 16.5 வீத அதிகரிப்புடன் ஒப்பிடுகையில், இது குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளதைக் காட்டுகிறது.
இத்தகைய சூழ்நிலைகளில், குடும்பங்கள் தங்கள் செலவுகளைச் சமாளிப்பதற்கு எதிர்மறையான சமாளிப்பு வழிகளை நாட வேண்டியுள்ளது.
மேலும், மத்திய வங்கியின் 2024 செப்டம்பர் 18 முதல் 2025 செப்டம்பர் 18 வரையிலான தரவுகளின்படி, பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒன்பது மரக்கறிகளின் ஒரு கிலோகிராம் சராசரி விலை ரூபா 225 இலிருந்து ரூபா 321.10 ஆக அதிகரித்துள்ளது.
இது ஒட்டுமொத்தமாக 42.7 வீத உயர்வாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அம்பாந்தோட்டையில் பெலியத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாகுலுகமுவ, தெத்துவாவெல பிரதேசத்தில் உள்ள தென்னந்தோப்பில் நேற்று வியாழக்கிழமை (30.10.2025) காலை சிதைவடைந்த நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பெலியத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
பெலியத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இளைஞன் கடந்த 19 ஆம் திகதி இரவு வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ள நிலையில் 11 நாட்களாக வீடு திரும்பாமல் இருப்பதாக பெலியத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தென்னந்தோப்பு உரிமையாளர் சடலத்தை கண்டு உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்ட இளைஞனின் மோட்டார் சைக்கிள் நாகுலுகமுவ ரயில் நிலையத்திற்கு அருகில் வைத்து பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பெலியத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அநுராதபுரம் – கற்குளம் வீதியில் 120ஆவது மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை (30.10.2025) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிள் மற்றும் தனியார் பஸ் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் போது மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் படுகாயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கம்பஹாவில் உடுகம்பொல – கொட்டுகொட வீதியில் கெஹெல்பத்தர சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கம்பஹா பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து இன்று வெள்ளிக்கிழமை (31.10.2025) காலை 06 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று வீதியில் இருந்த பாதசாரி மோதி பின்னர் அருகிலிருந்த கடை மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கெஹெல்பத்தர பகுதியைச் சேர்ந்தவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனையடுத்து காரின் சாரதியான இளைஞன் ஒருவன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
விபத்தின் போது காரில் இருந்த சாரதியின் தாயும் சாகோதரியும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பில் கம்பஹா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கஹவ மற்றும் அக்குரல ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையில் உள்ள ரயில் பாதையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து இன்று வெள்ளிக்கிழமை (31.10.2025) காலை 09.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கவனக்குறைவாக செலுத்தப்பட்ட முச்சக்கரவண்டி ஒன்று பெலியத்தையிலிருந்து மருதானை நோக்கிப் பயணித்த ரயிலுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இறைச்சிகளை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மாலம்பே, அரங்கல பிரதேசத்தில் உள்ள கால்வாயில் கவிழ்ந்து கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று புதன்கிழமை (29.10.2025) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி கால்வாயில் கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் போது காரில் பயணித்த இரண்டு பேர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
திருகோணமலை உட்துறைமுக வீதியில் இன்று (30.10.2025) காலை மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. கார் – பட்டா – மோட்டார் சைக்கிள் ஆகிய மூன்று வாகனங்களே ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயங்களுடன் திருகோணமலை வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து குறித்து, மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மொனராகலை பிரதேசத்தில் காதலனை தாக்கி வலுக்கட்டாயமாக விஷம் கொடுத்ததாகக் கூறப்படும் காதலியும், அவரது இரண்டு சகோதரிகள் மற்றும் உறவினர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
29, 32 மற்றும் 36 வயதுடைய மூன்று பெண்களும், 25 வயதுடைய ஒரு ஆணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குடும்ப தகராறு காரணமாக ஒருவர் விஷம் குடித்து மொனராகலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கினர்.
பிரேத பரிசோதனை போது அது திட்டமிட்ட கொலை என்று தெரியவந்ததாகவும் வலுக்கட்டாயமாக விஷம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக் கொலை செய்ய உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண் வழக்கறிஞர் தமாரா, கெஹல்பத்தர பத்மேவின் நண்பரான தருன் என்ற பாதாள உலகக் குற்றவாளியின் தலைமையில் செயற்பட்டமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
சஞ்சீவவைக் கொல்ல துப்பாக்கியை மறைப்பதற்காக குற்றவியல் நடைமுறைச் சட்டப் புத்தகத்தின இரண்டு பிரதிகளை இஷாரா செவ்வந்திக்கு இந்த வழக்கறிஞர் வழங்கியது தெரியவந்துள்ளது.
இந்த சந்தேக நபர் இஷாரா செவ்வந்திக்கு போலி வழக்கறிஞர் அடையாள அட்டை, வழக்கறிஞர்களுக்கு வழங்கப்பட்ட வாகன நுழைவு அனுமதி மற்றும் வழக்கறிஞர்களின் உடைகளில் பொருத்தப்படும் 2 டைகளையும் வழங்கியது தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் கெஹல்பத்தர பத்மேவுக்கும் அவரது நெருங்கிய ஒருவரான தருனுக்கும் இடையே சிறிது காலமாக உறவுகளைப் பேணி வந்துள்ளார். பத்மேவின் ஆலோசனையின் பேரில், இந்த வழக்கறிஞர் சஞ்சீவவின் கொலைக்கு உதவ முன்வந்துள்ளார்.
தருனின் ஆலோசனையின் பேரில், இந்த வழக்கறிஞர் இஷாரா செவ்வந்தியை சந்தித்து சஞ்சீவவின் கொலைக்குத் தேவையான வசதிகளை வழங்கியுள்ளார்.
அதற்கமைய, சஞ்சீவவின் கொலைக்கான துப்பாக்கியை நீதிமன்றத்திற்கு இரகசியமாக எடுத்துச் செல்ல குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 2 பிரதிகள் வழங்கப்பட்டுள்ளன.
சஞ்சீவ கொலைக்கான துப்பாக்கியை மறைப்பதற்காக கொலையாளி இந்த பிரதிகளில் ஒன்றின் உள் பக்கங்களை வெட்டி எடுத்துள்ளார்.
மேலும், நீதிமன்றத்திற்குள் நுழைவதற்காக வழக்கறிஞர்கள் சங்கத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை போலியாக உருவாக்க இஷாரா செவ்வந்தி ஏற்பாடு செய்துள்ளார்.
இந்த நிலையில் நீதிமன்ற வளாகத்திற்குள் வாகனம் நுழைய வழக்கறிஞர்களுக்கு வழங்கப்பட்ட வாகன நுழைவு அனுமதியையும் இந்த வழக்கறிஞர் வழங்கியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
கொலையை செய்த கமாண்டோ சாலிந்து வழக்கறிஞர் சீருடை அணிய தேவையான இரண்டு டைகளையும் வழக்கறிஞர் செவ்வந்திக்கு வழங்கியதாக புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சஞ்சீவ கொலைக்கு உதவிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இஷாராவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த வழக்கறிஞர் பற்றிய தகவல்கள் வெளியாகின.
அதற்கமைய, நேற்று முன்தினம் இரவு கடவத்தை பகுதியில் நடந்த சோதனையின் போது விசாரணை அதிகாரிகள் இந்த வழக்கறிஞரை கைது செய்ய முடிந்தது.
குற்றப் புலனாய்வுத் துறை இது தொடர்பாக விசாரணைகளை நடத்தி வருகிறது.
பத்மே மற்றும் பாதாள உலகக் கும்பல் டுபாயில் இருந்தபோது, பேலியகொட குற்றப் பிரிவின் அதிகாரி லிண்டன் சில்வாவை மிரட்டி வெளியிட்ட குரல் பதிவு சமீபத்திய நாட்களில் பரவியது.
அந்த பதிவில், லிண்டனை திட்டி கொலை மிரட்டல் விடுத்தது தருன் என்பதும் குறிப்பிடத்தக்கது. பத்மே மற்றும் அவரது கும்பல் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டபோது தருன் டுபாயில் இருந்ததுடன், அவர் இன்னமும் டுபாயில் இருப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன், வெளிநாட்டிலிருந்து தற்காப்புக்காக மூன்று ஆபத்தான மிளகு ஸ்ப்ரேக்கள் (pepper spray) மற்றும் மிளகு தோட்டாக்களை கொண்டு வர அனுமதிக்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ரிவால்வர் வகையிலான இந்த உபகரணம் நீண்ட தூரம் மிளகை ஸ்பிரே செய்யக்க கூடியதாகும் என அதன் தன்மையை குறிப்பிட்டு தான் கொள்வனவு செய்த இதை அனுமதிக்குமாறு கோரி அக்டோபர் 18 ஆம் திகதி பொலிஸ்மா அதிபர் வீரசூரியவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், இலங்கை சுங்க விதிமுறைகளின்படி இதுபோன்ற பொருட்களை இறக்குமதி செய்வதற்கு முன் அங்கீகாரம் தேவை என்பதை வாங்கும் நேரத்தில் தனக்குத் தெரியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், பாதுகாப்பு அமைச்சின் பாதுகாப்பு மதிப்பீட்டை மேற்கோள்காட்டி, தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களில் எம்.பி.க்கு அச்சுறுத்தல் இருப்பதாக இதுவரை வெளிப்படுத்தவில்லை என்றும்,
அது குறைந்தபட்ச ஆபத்து மட்டத்தில் உள்ளது என்றும், அக்டோபர் 23 திகதியிட்ட கடிதத்தில், நாடாளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன எம்.பி.க்கு தெரிவித்துள்ளார்.
ஒரு எம்.பி.உயிராபத்து இருப்பதாக நம்பகமான புலனாய்வு அறிக்கைகள் தெரிவித்தால், அத்தகைய எம்.பி.க்களுக்கு இலவச துப்பாக்கி உரிமத்தின் கீழ் அரசுக்கு சொந்தமான துப்பாக்கியை வழங்குவது குறித்து அமைச்சகம் பரிசீலிக்கலாம் என்று வலியுறுத்தி,
இந்த சாதனங்களைக் கொண்டுவர பாதுகாப்பு அமைச்சின் நேரடி ஒப்புதலைப் பெறுமாறு பதில் செயலாளர் நாயகம் எம்.பி.க்கு உத்தரவிட்டுள்ளார்.