கிண்ணியா – கண்டி பிரதான வீதி, முனைச்சேனை பகுதியில் சிறிய ரக லொறி ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து, இன்று(30.10.2025) காலை முனைச்சேனை சுமையா அரபு கல்லூரிக்கு முன்னால் இடம்பெற்றுள்ளது.
சூரங்கல் பகுதியில் இருந்து கிண்ணியா நோக்கி வந்து கொண்டிருந்த வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெய்வாதீனமாக எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணம் கச்சேரி கிழக்குத் தெருவில் தெருவில் குப்பை கொட்டிய பெண்ணை மீண்டும் அள்ள வைத்த காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் யாழ்ப்பாணம் கச்சேரி கிழக்குத் தெருவில் பெண் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்து வீதியில் குப்பையை வீசி சென்றுள்ளார். இதனை அவதானித்த நபர் ஒருவர் பெண்ணை மறித்து , அவரது தவறை சுட்டிக்காட்டினார்.
எனினும் குப்பை கொட்டிய பெண் காணொளி எடுத்தவருடன் தகராறில் ஈடுபாட்டார். இதனையடுத்து காணொளியஒஇ வெளியிடுவேன என கூறிய்தை அடுத்து பெண் தான் கொட்டிய குப்பையை மீண்டும் எடுத்துச் சென்றுள்ளார்.
அதேவேளை நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட இடங்களில் கழிவுகளை வீசி சென்றவர்களிடம் இருந்து கடந்த இரண்டு மாத காலத்தினுள் இரண்டு லட்சம் ரூபாவுக்கு மேல் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதாக நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப.மயூரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு- மாங்குளம் வீதியில் மணவாளன் பட்டமுறிப்புக்கு அண்மித்த பகுதியில் பொலிஸாரின் வாகனம் ஒன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தானது இன்று(30.10.2025) காலை இடம்பெற்றுள்ளது. குறித்த வீதியில் பயணித்த பொலிஸ் ஜீப் ஒன்று வீதியின் குறுக்கே மாடுகள் வந்ததால் வீதியினை விட்டு விலகி விபத்தினை சந்தித்துள்ளது.
இந்த விபத்தில் வாகனத்தில் பயணித்த பொலிஸார் சிறுகாயங்களுக்கு உள்ளான நிலையில் பொலிஸ் ஜீப் கடுமையாக சேதமடைந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணையினை முன்னெடுத்து வாகனத்தினை மீட்டு கொண்டு செல்லும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் காலபோக நெற்செய்கை இடம்பெற்றுள்ளதால் வீதிகளில் கால்நடைகளின் நடமாட்டம் தற்போது அதிகாரித்து காணப்படுகின்றது.
இதனால் கால்நடைகளால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் காணப்படுவதுடன் சாரதிகள் மிகவும் கவனமாக வாகனங்களை செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகின்றது.
2025 ஒக்டோபர் 27 ஆம் திகதி, கனடா அரசாங்கம் தனது Express Entry அமைப்பின் மாகாண நியமனத் திட்டம் (PNP) வழியாக 302 வெளிநாட்டவர்களுக்கு நிரந்தர வதிவிடத்திற்கான (PR) அழைப்புகளை அனுப்பியுள்ளது. இந்த அழைப்பு, draw number 374 என அழைக்கப்படுகிறது.
இதில் குறைந்தபட்ச விரிவான தரவரிசை அமைப்பு (Comprehensive Ranking System) (CRS) மதிப்பெண் 761-ஆக இருந்தது, இது கடந்த ஒக்டோபர் 14 ஆம் திகதியிலிருந்து 17 புள்ளிகள் குறைந்துள்ளது.
வெளிநாட்டுத் தொழிலாளர்களை ஈர்க்கும்
இந்த PNP திட்டம், கனடாவின் மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களுக்குத் தேவையான திறமையான தொழிலாளர்கள், மாணவர்கள், தொழில் முனைவோர் மற்றும் பணியாளர்களைத் தெரிவு செய்யும் வாய்ப்பை வழங்குகிறது.
நிரந்தர குடியுரிமை பெறுபவர்கள், கனடாவில் வாழ வேலை செய்ய மற்றும் நிரந்தரமாக குடியிருப்பதற்கான உரிமையைப் பெறுவர்
CRS மதிப்பெண் விநியோக பட்டியலில், 451-500 மதிப்பெண் கொண்டவர்கள் 69,503 பேர் உள்ளனர். மொத்தமாக 248,253 பேர் Express Entry புலத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபரங்கள், புதிய விண்ணப்பங்கள் சேரும் போது மாறக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பு, கனடா அரசாங்கம் வெளிநாட்டுத் தொழிலாளர்களை ஈர்க்கும் புதிய குடியுரிமை திட்டத்தின் ஒரு பகுதியாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் நடந்த வினோதச் சம்பவம் ஒன்று இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமண நாளில் வாங்கிய சீஸ் கேக்கை கணவர் தனியாக சாப்பிட்டதால், மனைவி 25 வருட திருமண வாழ்க்கையை முடித்துள்ளார்.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது அனுபவத்தை ரெட்டிட் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். திருமண ஆண்டு தினத்தில் இருவரும் சேர்ந்து கொண்டாட திட்டமிட்டிருந்தனர்.
அதற்காக பெண் ஒருவர் மிகப் பிரத்தியேகமாக சீஸ் கேக் வாங்கியிருந்தார். ஆனால், அவர் சிறிது நேரம் வெளியே சென்ற போது கணவர் அந்த கேக்கை முழுவதுமாக சாப்பிட்டு விட்டார்.
இதனால் கடும் அதிருப்தியடைந்த மனைவி, “25 ஆண்டுகளாக நான் எவ்வளவோ பொறுமையாகவும், பொருத்தமாகவும் வாழ்ந்து வந்தேன்.
ஆனால், என் உணர்வுகளையும் விருப்பங்களையும் புரிந்து கொள்ளாத ஒருவருடன் இனிமேலும் சேர்ந்து வாழ்வது பயனற்றது” என்று பதிவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து பலரும் அதிர்ச்சியும் நகைச்சுவையுமாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சிலர், “ஒரு கேக்குக்காக 25 வருட திருமணத்தை முடிப்பது மிகைப்படுத்தல்” என விமர்சித்துள்ள நிலையில், மற்ற சிலர் “இது சிறிய விஷயமல்ல, அக்கறை இல்லாமையின் வெளிப்பாடு” என மனைவிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.
கொழும்பில் வெளிநாட்டில் வசிக்கும் ஆயுர்வேத மருத்துவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த காதலர்களால் பாரிய கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
வெளிநாட்டு மதுபானங்கள் மற்றும் மதிப்புமிக்க மின் சாதனங்கள் உட்பட 1.3 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்களையும் 4.5 மில்லியன் ரூபாய் பணத்தையும் திருடிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இந்தத் திருட்டுக் குறித்து தெஹிவளை பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தீவிர தேடுதலுக்கு பின்னர் கொள்ளையில் ஈடுபட்ட 24 மற்றும் 22 வயதுடைய காதலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு பகுதியிலுள்ள பச்சை குத்தும் மையத்தில் தங்கியிருந்த போது கடந்த 22ஆம் திகதி தெஹிவளை பொலிஸாரால் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்ட அதிஷ்ட இலாபச் சீட்டிழுப்பில் இந்தியாவை சேர்ந்த அனில்குமார் பொல்லா என்ற 29 வயது இளைஞன் 240 கோடி இந்திய ரூபாய்களை வென்றுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் ஏற்றுமதி தொழில் செய்து வரும் அவர், 23ஆவது அதிஷ்ட நாள் குலுக்கலில் ஏழு வெற்றி எண்களும் பொருந்தியதால் முழு பரிசுத் தொகையையும் யாருடனும் பகிராமல் தனியாக வென்றுள்ளார்.
அதிஷ்ட இலாபச் சீட்டு குழுவிடமிருந்து அழைப்பு வந்த போது, தான் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்ததாக அனில்குமார் தெரிவித்துள்ளார்.
அதிஷ்ட இலாபச் சீட்டிழுப்பில் வெல்வது தனது நீண்ட நாள் கனவு எனவும் இதனை நம்ப முடியாது மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மொத்தம் 88 இலட்சம் போட்டியாளர்களில் அனில்குமார் பொல்லா ஒரு வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் தங்கத்தின் விலையில் சடுதியான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கத்தின் விலை, தற்போது வேகமாக சரிந்து வருகின்றது.
அதன்படி, இன்று (30) காலை கொழும்பு செட்டியார் தெரு தங்கச்சந்தையில் ஒரு பவுண் “22 கரட்” தங்கத்தின் விலை ரூ.310,500 ஆக விற்பனை செய்யப்படுகி்ன்றது.
அதன்படி, ஒரு பவுண் “24 கரட்” தங்கத்தின் விலை ரூ.ரூ.338,700 ஆக விற்பனை செய்யப்படுகி்ன்றது.
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை 4,230 அமெரிக்க டொலரை அடைந்துள்ளமையினால் இவ்வாறு தங்கம் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தியா டெல்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் அருகில் நிறுத்தப்பட்ட ஒரு பேருந்து நேற்று தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் தெய்வாதீனமாக பாரிய அனர்த்தங்கள் எதுவுமின்றி, தீயணைப்பு வீரர்களால், தீ விரைந்து அணைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
டெல்லியில் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் உள்ளது. இங்கு விமான நிறுவனங்களுக்கு ‘சாட்ஸ் ஏர்போர்ட் சர்வீசஸ்’ என்ற நிறுவனம் பேருந்து சேவை வழங்கி வருகிறது.
இதற்கு சொந்தமான ஒரு பேருந்து நேற்று பிற்பகல் மூன்றாவது முனையத்தில் ஏர் இந்தியா விமானத்துக்கு அருகில் நின்றிருந்த பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்தது.
இதையடுத்து விமான நிலைய தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து சென்று சில நிமிடங்களில் தீயை அணைத்தனர். தீ விபத்து ஏற்பட்டபோது பேருந்தில் பயணிகளோ அல்லது உடைமைகளோ இல்லை என்றும் சாரதி மட்டுமே எருந்ததாகவும் கூறப்படுகின்றது.
தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிய பேருந்தில் ஆய்வு மேற்கொள்ளப்படும் என சாட்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இந்த சம்பவத்தால் தங்களின் வழக்கமான செயல்பாடுகள் பாதிக்கப்படவில்லை என விமான நிலையம் தெரிவித்துள்ளது.
ஆசியப் பிராந்தியத்தில், வயதான மக்கள் தொகை அதிகரிப்பின் வேகம் அதிகமாக உள்ள நாடுகளில் ஒன்றாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் சமூக சுகாதார நிபுணர் வைத்தியர் நிஷாணி உபயசேகர 2012 ஆம் ஆண்டில் நாட்டில் வயதான மக்கள் தொகை 12% ஆக இருந்தது என்றும், அது 2024 ஆம் ஆண்டில் 18% ஆக உயர்ந்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர் மேலும் கூறுகையில், “இலங்கையில், 2012 ஆம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பின்படி, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 12% ஆக இருந்தனர். 2024 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில், வயதான சமூகம் 18% ஆக உயர்ந்துள்ளது.
2040 ஆம் ஆண்டளவில் இந்த மக்கள் தொகையில் 25% பேர், அதாவது நான்கு பேரில் ஒருவர் வயதானவராக இருப்பார்கள் என்று நாங்கள் முன்னறிவித்துள்ளோம்.
ஆசியாவில் உள்ள ஒத்த நாடுகளுடன் ஒப்பிடுகையில், வயதான மக்கள் தொகை அதிகரிப்பு வீதம் அதிகமாக உள்ள நாடாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதற்குக் பிறக்கும்போதே ஆயுட்கால எதிர்ப்பார்ப்பு அதிகரித்ததும், புதிய பிறப்புகளின் எண்ணிக்கை குறைவதுமே முக்கிய காரணங்களாகும்.
வயதான சமூகத்தினரிடையே காணப்படும் பலவீனங்கள் காரணமாக ஏற்படும் தடுக்கி விழுதல் தற்போது ஒரு நோயியல் நிலைமையாக அடையாளம் காணப்பட்டுள்ளது என்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் முதியோர் நோய் நிபுணர் வைத்தியர் சிதிர செனவிரத்ன குறிப்பிட்டார்.
65 வயதுக்கு மேற்பட்டவர்களில், மூன்று பேரில் ஒருவர் ஒரு வருட காலத்திற்குள் தடுக்கி விழுவதாகவும், 80 வயதுக்கு மேற்பட்டவர்களில் பாதிப் பேர் ஒரு வருட காலத்திற்குள் தடுக்கி விழுவதாகவும் புள்ளிவிவரங்கள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
பல சமயங்களில், விழுவது ஒரு நோயாக அடையாளம் காணப்படவில்லை. ஆனால், இப்போது விழுவதையும் ஒரு நோய் என்று நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம்.
பெரும்பாலும் விழுந்த பிறகு காயம் ஏற்பட்டால், காயத்திற்கு சிகிச்சை அளிக்கிறோம்; ஆனால் விழுவதற்கான காரணம் என்ன என்பதைப் பார்ப்பதில்லை. வயதாகும்போது விழுந்தால், இது வயதின் காரணமாக நடக்கிறது என்று நினைக்கிறோம்.
ஆனால், அது சாதாரணமானது அல்ல. விழுவது என்பது ஒரு நோய்தான். விழுவதால் விபத்துகளுக்கு முகம் கொடுக்க நேரிடலாம். விழுவதால் மரணங்கள் கூட நிகழும் சந்தர்ப்பங்கள் உள்ளன.
பலவீனம் என்பது விழுவதற்கான ஒரு முக்கிய காரணியாகும். இதைப் பரிசோதித்து, தேவையான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் சிக்கல்களைத் தவிர்க்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆரச்சிகட்டுவ, அனவிலுண்தாவ பகுதியில் இந்த விபத்து நேற்று மதியம் நிகழ்ந்துள்ளது. சம்பவத்தில் உடப்புவ பகுதியை சேர்ந்த காந்திபன் சஷிதரன் என்ற 18 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞன் தொழிற்சாலையில் தொழிலாளியாக பணி புரிந்தார். மூன்று இளைஞர்களுடன் இணைந்து கூரைத் தகடுகளை கொள்கலனில் ஏற்றி, மற்றுமொரு இடத்தில் இறக்கச் சென்றார்.
இதன்போது, கொள்கலன் வாகனத்தின் ஓட்டுநர் பிரேக்கை அழுத்தியுள்ளதால் கூரைத் தகடுகளுக்குள் சிக்கிய இளைஞன், படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சையின் பலனின்றி உயிரிழந்தார்.
இந்த விபத்துக்கு பணியாற்றியவர்களின் அலட்சியமே காரணம் அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.
விபத்து நடந்த நேரத்தில் இளைஞர் எந்த பாதுகாப்பு உபகரணங்களும் அணிந்திருக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கிளிநொச்சி – அக்கராயன்குளம் பகுதியில் வசித்து வந்த இளைஞன் ஒருவர் கடந்த 19 ஆம் திகதி முதல் காணாமல் போன நிலையில் தற்போது சடலமாக மீட்கப்பட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் யூனியன் குளத்தைச் சேர்ந்த அப்சரன் (வயது 26) எனும் இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேற்படி இளைஞன் கடந்த 24ஆம் திகதி வெளிநாட்டுக்குப் பயணமாக இருந்த நிலையில் ஐந்து தினங்களுக்கு முன்னர் கடந்த 19ஆம் திகதி முதல் காணாமல்போனார்.
மாயமான மகனை பெற்றோர் தேடி வந்த நிலையில் கடந்த 21ஆம் திகதி அக்கராயன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
அந்த முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் உறவினர்களும் இளைஞனைத் தேடி வந்தனர்.
இந்தநிலையில் இளைஞனின் வீட்டில் இருந்து சுமார் 2 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள காட்டினுள் மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக நேற்று (28) கண்டுபிடிக்கப்பட்டார்.
இளைஞனின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காகக் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் அக்கராயன் பொலிஸார் பல கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட A9 வீதியின் 227ஆவது கிலோமீற்றர் பகுதியில் (பனிக்கன்குளம்) கொழும்பிலிருந்து கிளிநொச்சி நோக்கி வந்த ‘ஹயஸ்’ ரக (Hiace) வேன் வாகனம் ஒன்று, வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
கொழும்பு நோக்கிப் பயணிகளை ஏற்றிச் சென்ற குறித்த வாகனம், அவர்களைக் கொழும்பில் இறக்கிவிட்டு மீண்டும் கிளிநொச்சி நோக்கித் திரும்பிக்கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது, வாகனத்தில் சாரதி மாத்திரமே இருந்துள்ளார். அவர் தெய்வாதீனமாக சிறிய காயங்களுடன் தப்பியுள்ளார். சம்பவ இடத்திற்கு வருகை தந்த மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றுடன் (28.10.2025) ஒப்பிடும்போது, இன்று (29.10.2025) 2000 ரூபாய் குறைந்துள்ளது.
அதன்படி, இன்று (29) காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 294,000 ரூபாயாகக் குறைந்துள்ளது. அதேவேளை நேற்று, இதன் விலை 296,000 ரூபாயாகக் காணப்பட்டது.
இதற்கிடையில், நேற்று (28) 320,000 ரூபாவாகவிருந்த 24 கரட் ஒரு பவன் தங்கத்தின் விலை இன்று (29) 318,000 ரூபாயாகக் குறைந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான ஊழியர்களை விமானத்தில் பயணி ஒருவர் தாக்கும் காணொளி வெளியாகியுள்ளது
அக்டோபர் 26 ஆம் தேதி ரியாத்தில் இருந்து கொழும்புக்கு வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL266 இல் நடந்த பதட்டமான சம்பவத்தை சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது,
அதில், சவுதி அரேபிய பயணி ஒருவரை விமான ஊழியர்கள் தாக்கியதாகக் கூறப்படுவதைத் தடுக்க முயற்சிப்பது தெரிகிறது.
கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறையின் முதற்கட்ட விசாரணைகளின்படி, விமானம் தரையிறங்கத் தயாராகும் போது இந்த வாக்குவாதம் ஏற்பட்டது.
அந்த நேரத்தில், பயணிகள் சீட் பெல்ட்களை அணிந்தபடி இருக்க வேண்டும், ஆனால் சந்தேக நபர் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி கழிப்பறைக்குள் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது.
கேபின் குழுவினர் தலையிட்டபோது, பயணி ஆக்ரோஷமாக நடந்து கொண்டார், இதன் விளைவாக மற்ற பயணிகள் தங்கள் மொபைல் போன்களில் மோதலை பதிவு செய்தனர்.
கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விமானம் வந்தடைந்ததும் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாகவும், சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் விமான நிலைய பொலிஸார் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
🚨 Mid-air chaos aboard SriLankan Airlines flight UL266 from Riyadh to Colombo! Video shows crew members trying to restrain a passenger who allegedly assaulted them during the flight
Police say the altercation began when the passenger tried to go to the lavatory while the… pic.twitter.com/uY6u2u2MMy
போலி ஆவணங்களை தயாரித்து, 150 மில்லியன் ரூபா மதிப்புள்ள காணி ஒன்றை விற்பனை செய்ததாக கூறப்படும் பெண் ஒருவரை கைதுசெய்வதற்கு குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
சந்தேக நபரான பெண் பொலிஸில் முன்னிலையாகாமல் பிரதேசத்தைவிட்டு தப்பிச் சென்று தலைமறைவாக உள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். சந்தேக நபரான பெண்ணின் புகைப்படம் ஒன்றை பொலிஸார் தற்போது வெளியிட்டுள்ளனர்.
இந்த புகைப்படத்தில் உள்ள சந்தேக நபர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் 011 – 2434504 அல்லது 011 – 2422176 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.