24 கேரட்… சுவிட்ச் முதல் வாஷ் பேசின் வரை மின்னும் தங்கவீடு : வாயை பிளக்கும் இணையவாசிகள்!!

தங்கம் விற்கும் விலையில் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட வீடு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி இணையவாசிகளை வாய் பிள்ளக்க வைத்துள்ளது.

இந்தியாவின் மத்திய பிரதேசம் இந்தூரில் அமைந்துள்ள வீடே இவ்வாறு திரும்பும் இடமெல்லாம் தங்கத்தில் ஒளிர்கின்றதாம். 24 கேரட் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட வீடியோவை பிரபல யூ டியூபர் ஒருவர் தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.

இந்த வீடியோ அனைத்து சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவி வருகிறது. இங்கு மின்சார சுவிட்ச் முதல் வாஷ் பேசின் வரை அனைத்து பொருட்களும் 24 கேரட் தங்கத்தில் தயாரிக்கப்பட்டு இருக்கிறது.

அந்த பிரம்மாண்ட வீட்டில் விசாலமான 10 படுக்கை அறைகள் உள்ளன. வீட்டின் பிரதான இடங்களில் தங்கத்தில் செதுக்கப்பட்ட சிலைகள் மின்னுகின்றன. சில நாற்காலிகளும் தங்கத்தில் தயாரிக்கப்பட்டு உள்ளன.

யூ டியூபர் வெளியிட்ட வீடியோவின் தொடக்கத்தில் வீட்டின் போர்டிகோ காண்பிக்கப்படுகிறது. அந்த போர்டிகோவில் 1936-ம் ஆண்டு மெர்சிடஸ் கார் முதல் அண்மையில் அறிமுகமான அனைத்து கார்களும் வரிசையாக அணிவகுத்து நிற்கின்றன.

அடுத்ததாக வீட்டுக்குள் நுழைந்தால் எங்கு பார்த்தாலும் தங்கம் ஜொலிக்கிறமை இணைய வாசிகளை திகைக்க வைத்துள்ளதுது. இந்நிலையில் வீட்​டின் உரிமை​யாளர் கூறும்​போது,

“எங்​கள் குடும்​பத்​தில் மொத்​தம் 25 பேர் உள்​ளோம். முதலில் ஒரு பெட்​ரோல் நிலை​யத்தை நடத்​தினோம். இதன்​பிறகு அரசிடம் இருந்து ஒப்​பந்​தங்​களை பெற்று சாலை, கட்​டிடங்​களை கட்டி கொடுத்​தோம்.

தற்​போது 300 அறை​கள் கொண்ட பிரம்​மாண்ட ஓட்​டலை கட்டி வரு​கிறோம் என்று தெரி​வித்​தார். இந்நிலையில் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட வீடு சமூகவலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

வரதட்சணை கொடுமை : புதுமணப்பெண்கள் விபரீத முடிவு!!

தமிழகத்தில் வரதட்சனை கொடுமையால் அடுத்தடுத்து இடம்பெற்ற தற்கொலை சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே திருமணமான 4-வது நாளிலே லோகேஸ்வரி (24) என்ற புதுமணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஜூன் 27 ஆம் திகதி பெண்னுக்கு திருமணம் நடைபெற்ற நிலையில் கணவருடன் மறுவீட்டிற்காக தனது தாய் வீட்டிற்கு நேற்று வந்தபோது பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இருசக்கர வாகனம், ஏசி, கூடுதல் நகை கேட்டு தொல்லை கொடுத்ததாக லோகேஸ்வரி குடும்பத்தினர் மாப்பிள்ளை வீட்டார் மீது குற்றம்சாட்டியுள்ளார்.

இந்நிலையில் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பொன்னேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேவேளை திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் திருமணம் ஆன 78 நாட்களில் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை தொடர்ந்து பொன்னேரியில் மீண்டுமொரு தற்கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வேன் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து : ஒருவர் படுகாயம்!!

பொலன்னறுவையில் ஜயந்திபுர மற்றும் ஜயவிக்ரம சந்திக்கு இடையில் உள்ள நாக பொக்குன பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று திங்கட்கிழமை (30.06) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிள் ஒன்று முன்னால் பயணித்த வேனுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் படுகாயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

யாழில் மின்சாரம் தாக்கியதில் ஊழியர் வைத்தியசாலையில் அனுமதி!!

யாழ்ப்பாணத்தில் வீதி மின்விளக்கினை பழுது பார்த்துக்கொண்டிருந்த ஊழியர் ஒருவர் மின்சார தாக்குதலுக்கு இலக்கான நிலையில் யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட கொக்குவில் சந்தையை அண்மித்த பகுதியில் செவ்வாய்க்கிழமை (01) காலை, வீதி மின்விளக்குகளை பழுது பார்த்துக்கொண்டிருந்த வேளை மின்சாரம் தாக்கியுள்ளது.

மின்சார தாக்குதலுக்கு உள்ளான ஊழியரை சக ஊழியர்கள் மீட்டு, யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

 

காருக்குள் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட தொழிலதிபர் : கைதானவர் வழங்கிய அதிர்ச்சி வாக்குமூலம்!!

குருணாகலில் மஹவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தியபெட்டே வனப்பகுதியில் கடந்த 26 ஆம் திகதி காருக்குள் இருந்து தீயில் எரிந்த நிலையில் வர்த்தகரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் மாவத்தகம பொலிஸாரால் நேற்று முன்தினம் (29.06.2025) கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாவத்தகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் இருவரும் தொரட்டியாவ மற்றும் மஹவ ஆகிய பிரதேசங்களில் வைத்து நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர்கள் மஹவ மற்றும் பிலெஸ்ஸ ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 19 மற்றும் 27 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தன்று, வர்த்தகர் காரில் பயணித்துக்கொண்டிருக்கும் போது சந்தேக நபர்கள் இருவரும் காரை வழிமறித்து வர்த்தகரை காரில் கடத்திச் சென்று கொலை செய்துவிட்டு அவரிடமிருந்த 14 இலட்சம் ரூபா பணம்,

கையடக்கத் தொலைபேசி மற்றும் 48 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளை கொள்ளையிட்டு பின்னர் சடலத்தை தீ வைத்து எரித்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக மஹவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாணைகளை மஹவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா பம்பைமடுவில் வாகனம் குடைசாய்ந்து விபத்து!!

வவுனியா பம்மைமடு சந்தியில் இன்று (01.07.2025) காலை நெல் மூடைகளை ஏற்றிச்சென்ற வாகனம் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியது.

வவுனியா மன்னார் பிரதான வீதியூடாக வவுனியா நகர் நோக்கி பயணித்த நெல் மூடைகளை ஏற்றிச்சென்ற வாகனம் பம்பைமடு இரானுவ முகாமை அண்மித்த பகுதியில் வீதியின் மறுபக்கம் மாற முற்பட்ட சமயத்தில் வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் வாகனத்திலிருந்த நெல் மூடைகள் சிதறியதுடன் வாகனமும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. இவ் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

உலகிலேயே மிக வறண்ட பாலைவனத்தில் பதிவாகியுள்ள அதிசய நிகழ்வு!!

உலகின் மிகவும் வறட்சியான பாலைவனமான அட்டகமா பாலைவனம், பனியால் சூழப்பட்டுள்ளதாக ஆய்வுத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடல் மட்டத்திலிருந்து 2,900 மீட்டர் (9,500 அடி) உயரத்தில் அமைந்துள்ள ALMA ஆய்வகம் இந்த தகவலை தனது X பக்கத்தில் காணொளியுடன் பதிவேற்றியுள்ளது.

வடக்கு சிலியில் அமைந்துள்ள குறித்த பாலைவனம் பல தசாப்தங்களாக அதிநவீன தொலைநோக்கிகளின் தாயகமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், அட்டகமாவில் உள்ள ALMA ஆய்வகத்தின் முக்கிய பிரிவு,10 ஆண்டுகளாக அந்த பாலைவனத்தில் பனி பொழியவில்லை என்று தெரிவித்துள்ளது.

செண்டியாகோ பல்கலைக்கழகத்தின் காலநிலை விஞ்ஞானி ரவுல் கோர்டெரோ, இந்த பனிப்பொழிவை காலநிலை மாற்றத்தில் ஒன்று என நிர்ணயிப்பது அவ்வளவு எளிதானதல்ல என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இனிவரும் காலங்களில் இவ்வாறான அதிசய நிகழ்வுகள் அடிக்கடி நிகழும் என்ற வகையிலும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

 

பேஸ்புக் – இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு ஏற்பட்ட திடீர் அச்சுறுத்தல்!!

மெட்டா நிறுவனத்தின் புதிய மெட்டா ஏஐ (Meta AI) அம்சங்களில் ஒன்றான கிளவுட் பிராசஸிங் (Cloud Processing) தொழில்நுட்பம், பயனர்களின் தரவுகளை மெகா-தரவகங்களில் பகுப்பாய்வு செய்வதற்காக பயன்படுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் மூலம் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் பகிரப்படும் தனிப்பட்ட தகவல்கள், படங்கள், காணொளிகள் உள்ளிட்டவை மெட்டாவின் AI மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டு சேமிக்கப்படுகின்றன.

அண்மையில், சில தொழில்நுட்ப ஆய்வாளர்கள் மற்றும் தனியுரிமை ஆர்வலர்கள், இந்த தொழில்நுட்பம் பயனர்களின் அனுமதியின்றி தகவல்களை சேகரிக்கிறது என எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது தனியுரிமை மீறலாகவும், கண்காணிப்பு அச்சுறுத்தலாகவும் கருதப்படுகிறது.

மெட்டா நிறுவனம், இவ்வாறு சேமிக்கப்படும் தகவல்கள் பாதுகாப்பாக வைத்திருக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தாலும், இதன் செயல்முறை பற்றிய தெளிவான விளக்கங்கள் அளிக்கப்படவில்லை.

அது மாத்திரமன்றி, ஃபேஸ்புக் பயனர்கள் தங்கள் கையடக்க தொலைபேசிகளில் உள்ள புகைப்படங்களை அணுக மெட்டா ஏஐ-க்கு அனுமதி அளித்தால், அந்தப் படங்களை ‘கிளவுட் பிராசஸிங்’ என்ற பெயரில் ஸ்கேன் செய்து கிளவுடில் சேமித்துக் கொள்ளும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது பயனர்கள் தனிப்பட்ட தரவுகள் மற்றும் தனியுரிமை என்பனவற்றை பெரிதும் கேள்விக்குள்ளாக்கும் வகையில் உள்ளது என அச்சம் வெளியிடப்பட்டு வருகின்றது.

மெட்டா நிறுவனம், தனது ஏஐ மொடல்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக பயனர்களின் தரவைப் பயன்படுத்துகிறது என முன்பிலிரந்தே குற்றம் சுமத்தப்பட்டு வருவதுடன் ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் உள்ள தரவுகள் ஏற்கனவே இந்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டு வருவதாகப் பலர் சந்தேகிக்கின்றனர்.

இவ்வாறான ஒரு சூழ்நிலையில், இந்த புதிய மெட்டா ஏஐ (Meta AI) அம்சம் செயல்படுத்தப்பட்டால், பயனர்களின் தொலைபேசியில் உள்ள புகைப்படங்கள் தானாகவே, குறிப்பிட்ட இடைவெளியில், மெட்டாவின் கிளவுட் ஸ்டோரேஜில் பதிவேற்றப்படும்.

பிறந்தநாள் போன்ற நிகழ்வுகளுக்கான ஏஐ அடிப்படையிலான ஃபில்டர்கள், போட்டோ கோப்புக்கள் போன்ற உருவாக்க திட்டங்களை (Creative ideas) மெட்டாஏஐ இதன்மூலம் வழங்கும் என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது பாதுகாப்பானது என்று பயனர்களிடம் கூறப்பட்டாலும், பயனர்கள் பதிவேற்றாத புகைப்படங்களையும் மெட்டா ஏஐ அணுகும் என்பது குறிப்பிடத்தக்க தனியுரிமைச் சிக்கல் என்பதில் சந்தேகமில்லை.

இருப்பினும், இந்த புதிய அம்சத்தை பயன்படுத்த பயனர்கள விருப்பம் தெரிவிப்பதாகவும், அவர்கள் எப்போது வேண்டுமானாலும் இதை முடக்கலாம் என்றும் மெட்டா கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரசாங்க பாடசாலைகளில் பாட நேரங்களில் ஏற்படவுள்ள மாற்றம்!!

அரசாங்க பாடசாலைகளில் ஒரு பாடத்திற்கான கற்பித்தல் நேரத்தை 45 நிமிடங்களிலிருந்து 50 நிமிடங்களாக அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

சில பாடங்களை கற்பிப்பதற்காக ஒதுக்கப்பட்ட நேரம் போதுமானதாக இல்லை என பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இது குறித்து பல சந்தர்ப்பங்களில் கல்வி அதிகாரிகளுடன் கலந்துரையாடியதாக அவர் கூறியுள்ளார்.

இந்த வாரம் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ள ஆசிரியர் பயிற்சி கல்வித் திட்டங்களின் போது இது குறித்து இறுதி முடிவு எட்டப்படலாம் என பிரதியமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், பாடசாலை நேர நீட்டிப்பு தொடர்பாக இதுவரை கல்வி அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்கள் அனுப்பப்படவில்லை என அவர் கூறியுள்ளார்.

மேலும் இரண்டாம் தவணையின் பாடத்திட்டத்தை உள்ளடக்குவதற்காக 6-11 ஆம் வகுப்புகளுக்கான பாடசாலை நேரத்தை பிற்பகல் 3:30 மணி வரை நீட்டிக்க ஒப்புதல் அளிக்கப்படும் என வடமேற்கு மாகாண வலயக் கல்வி இயக்குநர்களுக்கு எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இரண்டாம் தவணை பாடத்திட்டத்தை உள்ளடக்கி மாணவர்களை பரீட்சைகளுக்கு தயார்படுத்தும் நோக்கில் பாடசாலையின் தினசரி கால அட்டவணையில் ஒவ்வொரு பாடத்திற்கு தலா 55 நிமிடங்கள் ஒதுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்றைய தங்க விலையில் பதிவான சடுதியான மாற்றம்!!

இலங்கையில் தங்கத்தின் விலையானது கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, தங்கத்தின் விலை கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (30.06) சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்தநிலையில், இன்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 986,206 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனடிப்படையில், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 34,790 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 278,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 31,900 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 255,150 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 30,450 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 21 கரட் தங்கப் பவுணின் விலை 243,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.

விபத்துக்குள்ளான எயர் இந்தியா விமானம் : வெளியான மற்றுமொரு தகவல்!!

விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்திலிருந்து பதிவு செய்யப்பட்ட தரவை புலனாய்வாளர்கள் பதிவிறக்கம் செய்துள்ளதாக இந்திய சிவில் விமான அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜூன் 12 அன்று இந்தியாவின் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் லண்டனுக்குச் சென்ற போயிங் 787 ட்ரீம்லைனர் விபத்துக்குள்ளானது. இதில் 260 பேர் கொல்லப்பட்டனர்.

விபத்திற்கு வழிவகுத்த நிகழ்வுகள்

இந்திய விமான விபத்து புலனாய்வுப் பணியகம் மற்றும் அமெரிக்காவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் தலைமையிலான குழு விமானத்தின் முன் எதிர்கொள்ளும் பதிவாளரிலிருந்து தரவை அணுகியதாக இந்திய சிவில் விமான அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விபத்திற்கு வழிவகுத்த நிகழ்வுகளின் வரிசையை மறுகட்டமைப்பதும், விமானப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் எதிர்கால சம்பவங்களைத் தடுப்பதற்கும் பங்களிக்கும் காரணிகளைக் கண்டறிவதும் இந்த முயற்சியின் நோக்கமாகும் என்று இந்தியாவின் சிவில் விமான அமைச்சகம் கூறியுள்ளது.

கதிர்காம யாத்திரிகர்களை இறக்கி விட்டு பயணித்த பேருந்து விபத்து!!

கதிர்காமம் சென்று திரும்பிய யாத்திரிகர்ளை மட்டக்களப்பு – ஆரையம்பதியில் இறக்கிவிட்டு திரும்பிய பேருந்து கிரான்குளத்தில் விபத்தில் சிக்கிய நிலையில் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த பேருந்து இன்று காலை (30) கிரான்குளம் பகுதியில் வீதியை விட்டு விலகி மரமொன்றுடன் மோதி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

கதிர்காமம் புனித யாத்திரையை நிறைவு செய்த யாத்திரிகர்களை ஆரையம்பதியில் இறக்கி விட்டு தேற்றாத்தீவு நோக்கி திரும்பிக்கொண்டிருந்த பேருந்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விபத்து இடம்பெறும் போது பேருந்தில் சாரதியும், உதவியாளர்கள் இருவரும் இருந்துள்ள நிலையில் மூவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

விபத்தில் பரிதாபமாக பலியான ஓய்வுபெற்ற ஆசிரியை!!

பண்டாரகமயில் ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஒருவர் கெப் வாகனத்தின் கதவை திடீரென திறந்தபோது, மோட்டார் சைக்கிள் ஒன்று அதில் மோதி வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஓய்வுபெற்ற ஆசிரியை ஒருவர் உயிரிழந்ததோடு, அவரது கணவன் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் உயிரிழந்தவர் பொகுணுவிட ஹங்ச உயன பகுதியில் வசித்து வந்த 62 வயதுடைய சுமனாவதி என்ற மூன்று பிள்ளைகளின் தாய் ஆவார்.

மோட்டார் சைக்கிள் பொகுணுவிடவில் இருந்து பண்டாரகம நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, ​​நிறுத்தப்பட்டிருந்த கெப் வாகனத்தின் வலது பக்க கதவை திடீரென திறந்ததால், மோட்டார் சைக்கிள் கைப்பிடி கெப் வாகனத்தின் கதவில் மோதி வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் பயணித்த பெண் பின்னால் வந்த முச்சக்கரவண்டியில் மோதி உயரிழந்துள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களான ஓய்வுபெற்ற இராணுவ விசேட தேவையுடைய சிப்பாயும், முச்சக்கர வண்டி சாரதியும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இருவரும் இன்று (30) பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். பண்டாரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பெண் தொலைக்காட்சித் தொகுப்பாளர் எடுத்த விபரீத முடிவு!!

தெலங்கானா மாநிலத்தில் ஐதராபாத் ஜவகர் நகர் ஆர்.டி.சி கிராஸ் சாலையில் வசித்து வருபவர் 40 வயது சுக்தேவ் வோடர்கர். இவர் பிரபல தெலுங்கு டி.வி.யில் தொகுப்பாளராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை விவாகரத்து செய்தார்.

பார்சிகுடா, ஒய்.எஸ்.ஆர் பூங்கா அருகே தனது பெற்றோர் மற்றும் 14 வயது மகளுடன் வசித்து வந்த நிலையில் சுக்தேவிற்கு மற்றொரு நபருடன் காதல் ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனால் பெற்றோரை பிரிந்து காதலன் மற்றும் மகளுடன் வசித்து வந்தார். நேற்று காலை தன்னுடன் வசித்து வந்த காதலனுக்கும் அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் அவரது காதலன் வீட்டிலிருந்து வெளியே சென்று விட்டார்.

இதனையடுத்து நேற்று இரவு வீட்டு படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் சுக்தேவ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை கண்ட அவரது மகள் தனது தாத்தா, பாட்டிக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சுக் தேவ் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காதலனுடன் ஏற்பட்ட தகராறில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாயை கிணற்றில் தள்ளி கொலை செய்த மகன் கூறிய விசித்திர கதை!!

தனது தாயை கிணற்றில் தள்ளி கொலை செய்த இளைஞரொருவர் அநுராதபுரம் – கல்னேவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒரு மாதத்திற்கு முன்பு, கல்னேவ – ஹெலபதுகமவில் விழுந்து உயிரிழந்ததாக தெரிவித்து இரண்டு பிள்ளைகளின் தாயார் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டிருந்தது. 46 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்டு வந்த தொடர் விசாரணைகளின் அடிப்படையில், உயிரிழந்த பெண்ணின் இளைய மகன் சந்தேகத்தின் பேரில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இது தொடர்பான நீதவான் விசாரணைகளின் பின்னர், தடயவியல் மருத்துவ அறிக்கையில் இந்த மரணம் நீரில் மூழ்கியதால் சம்பவித்துள்ளது என தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், இறந்தவரின் தலை திசு சேதமடைந்ததால், இந்த மரணம் ஒரு கொலையா என்பதை தீர்மானிக்க பல பிரிவுகள் மூலம் விசாரணைகள் தொடங்கப்பட்டிருந்தன. குறித்த விசாரணைகளின் அடிப்படையிலேயே உயிரிழந்த பெண்ணின் இளைய மகன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த பெண் சடலமாக மீட்கப்பட்ட நேரத்தில், அந்தப் பெண்ணின் இளைய மகன், தனது தாய் அவிசாவளையைச் சேர்ந்த ஒருவரை தனது வீட்டிற்கு அழைத்து வந்து அவருடன் வாழ்ந்து வந்ததாகவும்,

சில மாதங்களுக்கு முன்னர் குறித்த நபர் தங்களது வீட்டை விட்டுச் சென்றதால் மனமுடைந்த தாயார் கிணற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டதாகவும் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலை மாணவிகள் மூவருக்கு நேர்ந்த துயரம் : பெற்றோர்களுக்கு எச்சரிக்கை!!

களுத்துறை, மொரகஹஹேன பிரதேசத்தில் 3 மாணவிகளை பாலியல் சீண்டல் செய்த மென்பொருள் பொறியாளர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பிள்ளைகள் தொடர்பில் பெற்றோர் மிகுந்த அவதானம் செலுத்த வேண்டும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரே பாடசாலையில் கல்வி கற்கும் 3 மாணவிகளை தனது ஆடம்பர வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் சீண்டல் செய்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட 13 வயதுடைய 2 சிறுமிகளும் 16 வயதுடைய ஒரு சிறுமியும் மருத்துவ பரிசோதனைக்காக ஹொரனை மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிறுமிகளை வீட்டிற்கு அழைத்துச் செல்ல பயன்படுத்திய சொகுசு காரையும், அவர்களை அவ்வாறு செய்ய கவர்ந்திழுக்க அவர் பயன்படுத்திய கையடக்க தொலைபேசிகளையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

ஒரு வருடத்திற்கு முன்பு, 16 வயது சிறுமி பாடசாலைக்கு நடந்து செல்லும் போது அவருக்கு உதவுவதாக கூறி சந்தேக நபர் தனது காரில் ஏற்றியுள்ளார். மாணவியுடன் நட்புறவை ஏற்படுத்திய யாரும் இல்லாதபோது மூன்று முறை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

இதனையடுத்து குறித்த மாணவியுடன் மேலும் இரண்டு மாணவிகளை தனது இச்சைக்கு பயன்படுத்தும் நோக்கில் செயற்பட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.