பிறந்தநாளன்று நேர்ந்த துயரம் : குளிக்க சென்ற மாணவி திடீர் மரணம்!!

கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் மாணவியொருவர் தனது பிறந்தநாளன்று உயிரிழந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியருவதாவது,

சிராவட்டம் கிராமத்தைச் சேர்ந்த 12ம் வகுப்பு முடித்த ஸ்ரேயா, கல்லூரி பயணத்தை தொடங்க உள்ள சந்தோஷத்தில் இருந்தார். அவரது பிறந்த நாளன்று காலை குளிக்க சென்ற போது திடீரென மயங்கி விழுந்தார்.

அதை பார்த்த தாய் அவரை உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால், அதற்குள் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மருத்துவர்களின் ஆரம்பமான மதிப்பீட்டுப்படி, மாரடடைப்பு காரணமாக மரணம் நிகழ்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது. மரணத்திற்கான காரணம் உறுதிப்படுத்த பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மகிழ்ச்சியான பிறந்தநாள் ஒன்று, ஒரே நொடியில் துயர நினைவாக மாறியுள்ளது.

முல்லைத்தீவில் கடலில் மாயமான நபர் உயிரிழந்ததாக அறிவிப்பு!!

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தீர்த்தக்கரை பகுதியிலிருந்து கடந்த 18ஆம் திகதி இரவு கடலுக்கு கடற்றொழிலுக்காக சென்ற நபர் உயிரிழந்துள்ளதாக அவரின் உறவினர்கள் அறிவித்துள்ளனர்.

குறித்த நபர், கரை திரும்பாத நிலையில் இரண்டு நாட்கள் கடற்றொழிலுக்காக கடலில் தேடுதல் நடத்தியும் அவர் கிடைக்காத நிலையில் குறித்த நபர் இறந்திருப்பதாக உறவினர்கள் அறிவித்து கண்ணீர் அஞ்சலி செய்வதற்கான ஏற்பாட்டினை செய்துள்ளார்கள்.

62 வயதுடைய வின்சன்ரிப்போல் அன்ரனி கர்னல் என்ற 8 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு காணாமல் போயுள்ளார். இவரின் இறுதி நிகழ்விற்கான ஏற்பாடுகளை குடும்பத்தினர் மேற்கொண்டுள்ளார்கள்.

அதேவேளை, குறித்த கடற்றொழிலாளர் காணாமல் போனமை தொடர்பில் முல்லைத்தீவு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிரபல தமிழ் நடிகர் ஸ்ரீகாந் அதிரடியாக கைது : காரணம் இதுதான்!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகரான ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நடிகர் ஸ்ரீகாந்த், முன்னாள் அதிமுக பிரமுகர் பிரசாத்திடம் இருந்து போதைப்பொருள் வாங்கியதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் நடிகர் ஸ்ரீகாந்திடம் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் ஸ்ரீகாந்திற்கு சம்மன் கொடுத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடத்தினர்.

மருத்துவ பரிசோதனையில் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியான நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த் சென்னை நுங்கம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்!!

இலங்கையில் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று தங்க விலை 1,000 ரூபாவால் அதிகரித்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில், கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 269,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 247,500 ரூபாவாகவும், 18 கரட் தங்கம் பவுண் ஒன்று 202,000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 33,625 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 30,875 ரூபாவாகவும், 18 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 25,250 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக தங்க நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

கார் விபத்தில் பலர் காயம்!!

குருணாகல் – கிரிஎல்ல வீதியில் போபிட்டிய பகுதியில் இடம்பெற்ற கார் விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று திங்கட்கிழமை (23) அதிகாலை 05.15 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கார் ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மரத்தின் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தின் போது காரில் பயணித்த பலர் காயமடைந்துள்ள நிலையில்,

சிகிச்சைக்காக தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மட்டக்களப்பில் திடீரென தீப்பற்றி எரிந்த வேன்!!

மட்டக்களப்பு நகரில் பாடுமீன் வீதியிலுள்ள வீடொன்றின் முன்னால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கேடி எச் ரக வேன் ஒன்று இன்று திங்கட்கிழமை (23) அதிகாலை தீப்பற்றி எரிந்ததையடுத்து தீயணைக்கும் படையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இதன் போது வேன் முற்றாக எரிந்து சாம்பராகியுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு கொட்டாஞ்சேனையில் இருந்து மட்டக்களப்பிலுள்ள உறவினர் வீட்டிற்கு குறித்த வேனில் வந்தவர்கள்,

வேனை வீட்டின் முன் நிறுத்திவிட்டு நித்திரைக்கு சென்றுள்ள நிலையில் வேன் அதிகாலை 1.30 மணியளவில் தீப்பற்றியதை கண்டு உடன் தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டு தீயை கட்டுப்பாட்டில் கொண்டுவந்த போதும் வேன் முற்றாக தீப்பற்றி எரிந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு. தலைமையக குற்றதடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

2025இல் நடக்கும் போர்கள் பற்றிய பாபா வங்காவின் கணிப்பு : மனித குலத்திற்கு நடக்க போவது என்ன!!

2025ஆம் ஆண்டில் போர் போன்ற மோதல் காரணமாக உலக மக்கள் தொகை கணிசமாகக் குறையும் என்று பாபா வங்கா (Baba Vanga) கணித்துள்ளார்.

அதன் பின்னர் 2028ஆம் ஆண்டில், மனிதர்கள் புதிய வளங்களைத் தேடி வெள்ளி கிரகத்தை அடைவார்கள் என்றும் கூறியுள்ளார்.

இதேவேளை, 2033ஆம் ஆண்டில் பாரிய அளவில் பனிக்கட்டிகள் உருகும் என்றும், இதனால் கடல் மட்டம் அதிகரித்து பாரிய அலைகள் தாக்கி பெரும் உயிர் சேதம் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நூறு ஆண்டுகளுக்கு பின்னர், வேற்று கிரகவாசிகளுடனான மனித தொடர்பையும் பாபா வங்கா கணித்துள்ளார்.

2170 இல் பருவநிலை மாற்றம் பூமியில் அழிவை ஏற்படுத்தும் என்றும், பூமியில் வறட்சி அதிகரித்து மனித வாழ்க்கையை மோசமாக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கணிப்புகள்

மேலும், செவ்வாய் கிரத்திற்கும் நமது பூமிக்கும் இடையே 3005 இல் போர் ஏற்படும் எனவும், 3797ஆம் ஆண்டில் பூமியில் இருந்து உயிர்கள் பிரியும் என்றும், இறுதியாக 5079 இல் உலகமே அழிந்து மனித இனமும் முற்றிலும் அழிந்துவிடும் என்றும் கணித்துள்ளார்.

பால்கேரியாவைச் சேர்ந்த பாபா வங்கா 1996ஆம் ஆண்டு மறைந்தாலும், அவரது கணிப்புகள் குறித்த தகவல்கள் இன்றும் உலகளவில் பரவலாக பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தந்தை வெளிநாட்டில் : தாயுடன் காரில் பயணித்த மகளுக்கு நேர்ந்த பரிதாபம்!!

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலையில் இருந்து களுவங்கேணி நோக்கி பயணித்த கார் விபத்திற்கு உள்ளானதில் சிறுமியொருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று (23.06.2025) அதிகாலை 4.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த கார் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி பனைமரத்துடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் மட்டக்களப்பு சின்ன ஊறணி பகுதியை சேர்ந்த ஜெந்திரகுமார் சஞ்சய், 15 வயது சிறுமியான பிரதீபன் தவஸ்வாணி ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் இருந்துவரும் நிலையில் உயிரிழந்த சிறுமியான மகளுடன் கருவப்பங்கேணியில் உள்ள அவர்களது பன்றிவளர்க்கும் பண்ணையை பார்ப்பதற்காக இன்று அதிகாலை கார் சாரதியுடன் பயணித்தபோது விபத்து இடம்பெற்றுள்ளது.

படுகாயமடைந்த பெண் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் மின் தூக்கியில் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த இளைஞன் : வெளியாகிய காரணம்!!

யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் பணியாற்றிய இளைஞர் ஒருவர் நேற்றையதினம்(22) மின் தூக்கியில் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

இதன்போது அச்செழு வடக்கு நீர்வேலியைச் சேர்ந்த 19 வயதுடைய வைரவநாதன் டிலக்க்ஷன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த இளைஞன் ஹோட்டல் முகாமைத்துவ கற்கைநெறியை பூர்த்தி செய்த பின்னர் குறித்த ஹோட்டலில் பயிற்சியாளராக இணைந்து பணியாற்றி வந்துள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற மின் தூக்கியானது திறந்த வெளியான மின் தூக்கியாக காணப்படுகிறது. அதனை இயக்கும் ஆழியும் (switch) கீழேயே காணப்படுகிறது.

குறித்த மின்தூக்கியை கீழிருந்து ஒருவர் இயக்கும்போது அது மேலே செல்லும். மின்தூக்கியினுள் இருப்பவரால் அதனை இயக்க முடியாது.

அந்தவகையில் குறித்த இளைஞன் அந்த மின் தூக்கியில் ஏறிய பின்னர் அவர் தயார் நிலையில் இருப்பதற்கு முன்னர் அந்த மின் தூக்கியை இயக்கினார் இதன்போது குறித்த இளைஞனின் தலை இரும்பு கேடர் மீது மோதி விபத்து சம்பவித்துள்ளது.

இந்நிலையில் குறித்த இளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

முழுவதும் பெண்ணாக மாறிவிட்டேன் : அதிர்ச்சியளித்த முன்னாள் கிரிக்கெட் வீரர்!!

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும், முன்னாள் பேட்டிங் பயிற்சியாளருமான சஞ்சய் பங்கரின் மகன் ஆர்யன், ஹார்மோன் மாற்று சிகிச்சை எடுத்துக் கொண்டு பெண்ணாக மாறியதாக சில மாதங்களுக்கு முன் அறிவித்தார்.

அதோடு தனது பெயரையும் ‘அனயா’ என மாற்றினார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றின் மூலம் இந்த தகவல் வெளி உலகத்திற்கு தெரிய வந்துது. அவர் ஆணாக இருந்த சமயத்தில் உள்ளூர் அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் இதற்கு முன்பு விளையாடி வந்தார்.

சர்பராஸ் கான், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரோடு அவர் விளையாடியிருக்கிறார். அவர்களோடு அவர் நட்பிலும் இருக்கிறார்.

அதன்பின் தன்னை பெண்ணாக உணர்ந்து அதற்கான உடல் ரீதியான மாற்று சிகிச்சைகளை அவர் எடுத்துக் கொண்டிருக்கிறார். தற்போது முழுமையான பெண்ணாக தான் மாறியதாக அனயா அறிவித்துள்ளார்.

அதோடு தன்னை மீண்டும் கிரிக்கெட் விளையாட அனுமதிக்கும்படி ஐ.சி.சி. மற்றும் பி.சி.சி.ஐ. க்கு கோரிக்கை வைத்துள்ளார்.

இதனிடையே சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கடந்த ஆண்டு மாற்றுப் பாலினத்தவர்கள் அல்லது ஆண்/பெண்ணாக இருந்து மாற்றுப் பாலினமாக சிகிச்சை எடுத்துக் கொண்டவர்கள் சர்வதேச கிரிக்கெட் ஆட முடியாது என ஒரு விதியை அறிவித்திருந்தது.

இந்த நிலையில், அனயா பங்கர் தான் முற்றிலும் பெண்ணாக மாறிவிட்டதற்கான மருத்துவ அறிக்கை ஒன்றை கையில் வைத்துக் கொண்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அதில், தான் முழுவதுமாக ஒரு பெண் விளையாட்டு வீராங்கனையாக மாறிவிட்டதற்கான அறிக்கை இது எனவும், கடந்த ஓராண்டாக ஹார்மோன் சிகிச்சை ஆரம்பித்து அங்கிருந்து பல்வேறு ஆய்வுகளை செய்து இந்த சிகிச்சை செய்யப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த ஆய்வு அறிக்கை தனது கருத்துக்களையோ, அனுமானங்களையோ சொல்லவில்லை. ஆனால், உண்மையான தகவல்களைச் சொல்கிறது எனவும் அவர் அந்த வீடியோவில் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

எரிபொருளை பதுக்கி வைக்கவேண்டாம் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!!

எரிபொருள் தட்டுபாடு ஏற்படலாம் என பொதுமக்கள் எரிபொருளை பதுக்கி வைப்பதைத் தவிர்க்குமாறு பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் சூழ்நிலை காரணமாக எதிர்காலத்தில் பெட்ரோலிய விலைகள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக சங்கத்தின் துணைத் தலைவர் குசும் சந்தனாயக்க தெரிவித்தார்.

இவ்வாறான போர் சூழல் ஏற்பட்டால் எரிபொருள் இல்லாமல் போகாது. விலைகளில் மட்டுமே மாற்றம் ஏற்படும் என்றும் அவர் கூறினார்.

அதோடு இது எங்களுடைய பிரச்சினை அல்ல என்றும், உலகின் சக்திவாய்ந்தவர்களின் பிரச்சினை என தெரிவித்த அவர், அடுத்த சில மாதங்களுக்கு எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் ஏற்கனவே செய்து வருகின்றதாகவும் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்தில் மினி சூறாவளி : தூக்கி எறியப்பட்ட கதிரைகள்!!

யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (22.06) அன்று மாலை திடீரென கடும் காற்றுட ன் மினி சூறாவளி வீசியது. இதன்போது பல இடங்களில் மரங்கள், மரக்கிளைகள் முறிந்து விழுந்ததுடன், மின்சாரமும் சில இடங்களில் தடைப்பட்டது.

சுமார் ஒரு மணி நேரம் நீடித்த கடும் காற்றுடன் கூடிய மழையால் மக்கள் பெரும் சிரமங்களையும் பாதிப்புகளையும் எதிர்கொண்டனர். அதேவேளை தென்னிந்திய பிரபலங்களின் இசை நிகழ்ச்சியும் (22) மினி சுறாவளியால் இடை நிறுத்தப்பட்டது.

இசை நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக , மங்கள விளக்கேற்றும் வேளை திடீரென கடும் காற்றுடன் கூடிய மழை பெய்தமையால் , நிகழ்வுக்காக போடப்பட்டிருந்த கதிரைகள் அருகில் இருந்த பந்தல்களின் தகரங்கள் என்பன காற்றினால் தூக்கி வீசப்பட்டமையால் , பார்வையாளர்கள் அங்கிருந்து வெளியேறி சென்றனர்.

தமிழர் பகுதியை உலுக்கிய சம்பவம் : தாய் கண் முன்னே பலியான 15 வயது மகள்!!

கார் விபத்தில் 15 வயது சிறுமி உட்பட இருவர் பலி ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலையில் இருந்து களுவங்கேணி நோக்கி பயணித்த காரொன்று,

இன்று (23.06.2025) அதிகாலை இரண்டாவது மைல் கல் பகுதியில் வேககட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி பனை மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

சம்பவத்தில் காரின் சாரதி மற்றும் அதில் பயணித்த 15 வயது சிறுமி, சாரதி உயிரிழந்ததுடன் சிறுமியின் தாயார் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் இருந்துவரும் நிலையில், உயிரிழந்த சிறுமியான மகளுடன் கருவப்பங்கேணியில் உள்ள அவர்களது பன்றிவளர்க்கும் பண்ணையை பார்ப்பதற்காக சம்பவதினமான இன்று

அதிகாலை கார் சாரதியுடன் பயணித்தபோது கார் வேககட்டுப்பாட்டை மீறி பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதாக தெரியவருகிறது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் போக்குவர்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் கிணற்றில் பெண்ணின் சடலம் : தவிக்கும் பிள்ளைகள்!!

யாழ்ப்பாணம் – வசாவிளான் பகுதியில் உள்ள தோட்டக் கிணறு ஒன்றிலிருந்து மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவரது சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் வசாவிளான் – சுதந்திரபுரம் பகுதியைச் சேர்ந்த 55 வயதான பெண்ணின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டது.

உயிரிழந்த பெண் அண்மைய நாட்களில் மன அழுத்தத்துடன் காணப்பட்டதாகவும் நேற்று (22) காலை அவரை காணவில்லை என்றும் உறவினர்கள் கூறியுள்ளனர்.

அந்தவகையில் அவரை தேடியவேளை தோட்ட கிணற்றில் சடலமாக காணப்பட்ட நிலையில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்படுள்ளது. இதனையடுத்து சடலமானது மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

சடலத்தின் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

இந்நிலையில் குறித்த பெண் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இலங்கையில் திடீரென உச்சம் தொட்ட பச்சைமிளகாய் விலை!!

ஒரு கிலோ பச்சை மிளகாயின் சில்லறை விலை மீண்டும் 1,200 ரூபாயாக அதிகரித்துள்ளது.

ஒரு கிலோ பச்சை மிளகாயின் சில்லறை விலை 1,200 ரூபாயாக அதிகரித்திருந்தாலும், தம்புள்ளை பொருளாதார மையத்தில் ஒரு கிலோ பச்சை மிளகாய் 500 முதல் 600 ரூபாய் வரையான மொத்த விலைக்கு விற்கப்பட்டுள்ளது.

சில நாட்களாக பச்சை மிளகாய் அறுவடை குறைந்திருப்பதால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ஒரு கிலோ போஞ்சியின் மொத்த விலையும் 600 ரூபாவாக அதிகரித்துள்ளதாக தம்புள்ளை சிறப்பு பொருளாதார மையம் தெரிவித்துள்ளது.

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவர்களால் கண் பார்வை அற்றவர்கள் பயன்படுத்தும் வெள்ளைப் பிரம்பு கண்டுபிடிப்பு : ஆளுநர் பாராட்டு!!

கண் பார்வை அற்றவர்கள் பயன்படுத்தும் மேம்படுத்திய வெள்ளைப் பிரம்பை கண்டுபிடித்த வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தை சேர்ந்த மாணவர்கள் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை ஆளுநர் செயலகத்தில் இன்று திங்கள் கிழமை (23.06.2025) சந்தித்து தமது புத்தாக்கம் தொடர்பில் தெரியப்படுத்தினர்.

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தை சேர்ந்த லின்டன் ஜெனிஸ் அறோன் அஜேய் மற்றும் திருச்செல்வம் செர்வின் ஆகிய தரம் எட்டில் கற்கும் மாணவர்களே மேற்கொண்டனர்.

கண் பார்வையற்றவர்கள் பயன்படுத்தும் வெள்ளைப் பிரம்பை இலத்திரனியல் உபகரணங்களை கொண்டு பல்வேறுபட்ட வசதிகளை மேம்படுத்தி அவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில் இக்கண்டுபிடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த கண்டுபிடிப்பானது எதிர்காலத்தில் சட்ட விதிமுறைகளுக்கு அமைய பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு எதிர்காலத்தில் கண்பார்வையற்றவர்களுக்கு விநியோகிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருக்கிறன.

இந்த மாணவர்களின் கண்டுபிடிப்பு தொடர்பில் கண் மருத்துவ சத்திர சிகிச்சை நிபுணர் மருத்துவர் மு.மலரவன் தெரிவிக்கையில், வவுனியா பல்கலைக்கழகத்தின் வழிகாட்டுதலுக்கு அமைய மாணவர்களின் கண்டுபிடிப்பை பதிவு செய்வதற்கு உரிய நடவடிக்கையை மேற்கொள்ளுவதற்கு உதவ தயார் என தெரிவித்தார்.

இயலாமைக்கு உள்ளானவர்களுக்கான தேசிய சபை அங்கத்தவர் வெ.சுப்பிரமணியம் கருத்து தெரிவிக்கையில், கண்டுபிடிக்கபட்ட கருவியில் இன்னும் சிறிய மேம்படுத்தவேண்டிய செயல்பாடு உள்ளது என்றும், அதனை நிவர்த்தி செய்து பயன்பாட்டிற்கு வந்தால் விழிப்புலன் அற்றவர்களுக்கு மிகவும் உதவியாக அமையும் எனகூறினார்

இம் மாணவர்கள் இருவரையும் ஆளுநர் வாழ்த்தியதோடு இவ்வாறான புத்தாக்க கண்டுபிடிப்புகள் எமது மாணவர்கள் மத்தியில் இருந்து இன்னும் பல தோற்றம் பெறவேண்டும். அவை எமது மக்களுக்கு பயன்படக்கூடிய வகையில் உருவாக்கப்பட வேண்டும். என கோரிக்கை விடுத்ததோடு,

இம்மானவர்கள் மேலும் இதனை மேம்படுத்தி கண்பார்வை அற்றவர்களுக்கு வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஆதரவு அளிப்போம் எனவும் ஆளுனர் தெரிவித்தார்.