வவுனியாவில் ஆழ்துளைக் கிணறுகள் : பிரதேச சபையின் அனுமதி அவசியம் : தவிசாளர்!!

வவுனியா தெற்கு தமிழ்பிரதேசசபை எல்லைக்குள் ஆழ்துளை கிணறுகளை அமைக்கும் போது பிரதேசசபையின் அனுமதியினையும் பெற்றுக்கொள்வதற்கான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளதாக சபையின் தவிசாளர் பா.பாலேந்திரன் தெரிவித்தார்.

சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நிலத்தடி நீரை பாதுகாக்கும் நிமித்தம் ஆழ்துளைகிணறுகள் அமைப்பதை தடைசெய்வது தொடர்பாக கடந்த சபை அமர்வில் கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அதற்கமைய சில காணிகளில் பாறைகள் உள்ளமையால் சாதாரண கிணறுகள் அமைக்க முடியாத சந்தர்ப்பங்களும் பொதுமக்களுக்கு ஏற்ப்படுகின்றது. இதேவேளை சில பகுதிகளில் 200 அடிவரை ஆழ்துளை கிணறுகளை அமைக்கின்றனர். இவ்விடயங்கள் தொடர்பாக நாம் ஆராய்ந்துள்ளோம்.

எனவே இவற்றை கருத்தில்கொண்டு நிலத்தடி நீரை பாதுகாக்கும் நோக்குடன் இனிவரும் காலங்களில் சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆழ்துளை கிணறுகள் அமைப்பதாயின் பிரதேசசபையின் அனுமதியினையும் பெறுமாறு வலியுறுத்தி தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு உத்தியோகபூர்வமாக அறிவிப்பதற்கான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார்.

திருமணமாகி சில மாதங்களில் விபத்தொன்றில் பலியான இளைஞன்!!

புத்தளத்தில் திறக்கப்படவிருந்த மோட்டார் சைக்கிள் அறையை அலங்கரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் புத்தளம் நகரைச் சேர்ந்த 24 வயதான தண்டநாராயண நவோத் கிம்ஹான் என அடையாளம் காணப்பட்டுள்ளார். புத்தளம் திலாடிய பகுதியில் மோட்டார் சைக்கிள் அறையை திறப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார்.

இதன்போது, ​​அலங்காரத்திற்காக பயன்படுத்தப்படும் பலூன் வேறொரு இடத்தில் அமைந்துள்ள மின்சார கம்பியில் விழுந்ததில் மின்சாரம் தாக்கி இந்த இளைஞர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த இளைஞன் ஒரு சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மின்சாரம் தாக்கி கடுமையாக பாதிக்கப்பட்ட இளைஞன் புத்தளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது ஏற்கனவே உயிரிழந்துளளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

காதலனுடன் சகோதரியை அழைத்து சென்ற காதலி பலி!!

கொழும்பு – குருநாகல் பிரதான வீதியின் வாரியகொட பகுதியில் இராணுவ கெப் வண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதிய விபத்தில் 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் பலத்த காயங்களுடன் வாரகாபொல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் அலவ்வ பகுதியை சேர்ந்த இஷாரா தேவிந்தி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விபத்து நடந்த நேரத்தில் மோட்டார் சைக்கிளில் மூன்று பேர் பயணித்துள்ளனர். நடுவில் இருந்த மாணவி விபத்தில் உயிரிழந்தாக தெரிவிக்கப்படுகிறது.

அலவ்வவிலிருந்து வரகாபொல நோக்கிச் சென்ற இராணுவ கெப் வண்டி, வரகாபொலவிலிருந்து அலவ்வ நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.

வண்டியை ஓட்டி வந்த இராணுவ கோப்ரலும் காயமடைந்த நிலையில் வரகாபொல ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த மாணவி தனது காதலனுடன் திருமணத்திற்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்ததாகவும், வழியில் தனது சகோதரனையும் மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மோட்டார் சைக்கிள் ஓட்டுநருக்கு ஏற்பட்ட நித்திரையால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

உயிரிழந்த மாணவியின் உடல் வரகாபொல ஆதார மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அமெரிக்காவில் ஈழத்து சிறுமிக்கு கிடைத்த அங்கீகாரம்!!

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலிஸ் நகரில் நடைபெற்ற “International Art & Heart Film Festival – 2025” சர்வதேச குறுந்திரைப்பட விழாவில், மன்னாரைச் சேர்ந்த இளைஞர் கவிவர்மன் இயக்கிய “மடமை தகர்” எனும் குறுந்திரைப்படம் பெருமை சேர்த்துள்ளது.

இத்திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரமாக நடித்த மன்னார் ஓலைத்தொடுவாய், சின்ன கரிசல் பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி ரஞ்சித் குருஸ் சுவேதா, “Best Monologue” என்ற விருதை வென்றுள்ளார்.

தற்கொலை என்பது ஒரு தீர்வல்ல என்பதை மையக்கருவாகக் கொண்டு உருவாக்கப்பட்ட “மடமை தகர்” குறுந்திரைப்படம், இதற்கு முன் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற சர்வதேச குறுந்திரைப்பட விழாவில் “சிறந்த இயக்குநர்” என்ற விருதையும் வென்றிருந்தது.

இப்போது மீண்டும் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளதால், மன்னார் மண்ணைச் சேர்ந்த இளம் திறமைசாலிகளுக்கு பெருமை சேர்த்துள்ளது.

சினிமா துறையில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற மன்னாரைச் சேர்ந்த சிறுமி சுவேதா, இவ்விருதின் மூலம் முதன்முறையாக ஒரு சர்வதேச நாட்டில் சிறந்த நடிப்பிற்கான விருதை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் ஒரே நாளில் சடுதியாக குறைந்த தங்கத்தின் விலை!!

நாட்டில் தற்போது தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஒப்பிடுகையில் பாரிய உச்சத்தை அடைந்து வருகின்றது. இதன்படி, இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றைய (17) தினத்துடன் ஒப்பிடும்போது ரூ.20,000 குறைந்துள்ளது.

அதன்படி, இன்று (18.10.2025) காலை கொழும்பு ஹெட்டியார் தெரு தங்கச்சந்தையில் ஒரு பவுண் “22 கரட்” தங்கத்தின் விலை ரூ.360,800 ஆக குறைந்துள்ளது. நேற்று, ரூ.379,200 என விலை நிர்ணயிக்கப்பட்டது.

இதற்கிடையில், நேற்று (17) ரூ.410,000 ஆக இருந்த “24 கரட்” தங்கத்தின் விலை இன்று ரூ.390,000 ஆக குறைந்துள்ளதாக கொழும்பு தங்கச்சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை 4,230 அமெரிக்க டொலரை அடைந்துள்ளமையினால் இவ்வாறு தங்கம் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

கோர விபத்தில் ஒருவர் பலி : மூவர் காயம்!!

அநுராதபுரத்தில் கெப்பித்திகொல்லேவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மஹநெட்டியாவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக கெப்பித்திகொல்லேவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (17) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கெப்பித்திகொல்லாவ நோக்கிப் பயணித்த கெப் வாகனம் ஒன்று காருடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது காரின் சாரதியும் அதில் பயணித்த இருவரும் கெப் வாகனத்தின் சாரதியும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் கார் சாரதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் எடவீரகொல்லேவ பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் ஆவார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கெப்பித்திகொல்லேவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சொகுசுப் பேரூந்து – கார் மோதி விபத்து!!

புத்தளத்தில் ஆனமடு – நவகத்தேகம் வீதியில் பொத்திக்கட்டுவ கால்வாய்க்கு அருகில் உள்ள பாலத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று சனிக்கிழமை (18) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சொகுசு பஸ் ஒன்று காருடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது சொகுசு பஸ்ஸின் சாரதி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

இலங்கையில் பல மாவட்டங்களுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய, வட-மத்திய, சபரகமுவ, ஊவா மற்றும் வடமேற்கு மாகாணங்கள் மற்றும் அம்பாறை மாவட்டத்தில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

இன்று இரவு 11.00 மணி வரை அமுலில் இருக்கும் வகையில், இந்த எச்சரிக்கையின்படி, 12 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் மேலும் 11 மாவட்டங்களுக்கு இளம் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே மின்னல் நடவடிக்கைகளால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இலங்கையில் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அந்த வகையில் இன்று மேற்கு, சபரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமேற்கு மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீட்டருக்கு மேல் கனமழை பெய்யக்கூடும்.

எனவே, இடியுடன் கூடிய மழை பெய்யும் போது கனமழை, பலத்த காற்று மற்றும் பலத்த மின்னலால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

திடீரென்று நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல் : 3 ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பலி!!

பாகிஸ்தான் எல்லைக்கு அருகே நடந்த வான்வழித் தாக்குதலில் 3 ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானின் கிழக்கு பக்திகா மாகாணத்தில், பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள ஷரானா என்ற இடத்தில், அடுத்த மாதம் பாகிஸ்தான் மற்றும் இலங்கையுடன் நடைபெறவிருந்த முத்தரப்பு கிரிக்கெட் தொடருக்காக, ஆப்கானிஸ்தான் வீரர்கள் தயாராகி வந்தனர்.

இந்த நிலையில், உர்குன் மாவட்டத்தைச் சேர்ந்த கபீர், சிப்கத்துல்லா மற்றும் ஹாரூன் ஆகிய மூன்று கிரிக்கெட் வீரர்கள், பயிற்சி முடிந்து தங்களது சொந்த ஊரான உர்குனுக்குத் திரும்பியுள்ளனர். அங்கு, அவர்கள் ஒரு கூட்டத்தில் பங்கேற்றிருந்தபோது, பாகிஸ்தான் இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

“பாகிஸ்தான் ஆட்சியாளர்களால் நடத்தப்பட்ட இந்த கோழைத்தனமான தாக்குதலில்,” இந்த மூன்று வீரர்களுடன் மேலும் ஐந்து பேரும் உயிரிழந்ததாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை (ACB) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தத் துயரச் சம்பவத்திற்குத் தனது கடும் கண்டனத்தைத் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

“பக்திகா மாகாணத்தைச் சேர்ந்த எங்களது துணிச்சலான கிரிக்கெட் வீரர்களின் சோகமான மரணத்திற்கு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை தனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறது,” என்று ACB தனது (X) பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

இதனையடுத்து, அடுத்த மாதம் பாகிஸ்தான் மற்றும் இலங்கையுடன் நடைபெறவிருந்த முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இருந்து விலகுவதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை (ACB) அறிவித்துள்ளது.

இருப்பினும், சில ஊடக அறிக்கைகளின்படி, கிரிக்கெட் வீரர்கள் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்டதாகவும், நான்கு பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் குறித்த மேலதிக விபரங்களை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை வழங்கவில்லை.”

பாதிக்கப்பட்டவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில்”, அடுத்த மாதம் நவம்பர் 17 முதல் 29 வரை ராவல்பிண்டி மற்றும் லஹோரில் நடைபெறவுள்ள முத்தரப்பு T20I தொடரில் இருந்து விலகுவதற்கு முடிவெடுத்ததாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை கூறியுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே சமீபத்தில் ஏற்பட்ட எல்லை மோதல்களைத் தொடர்ந்து, 48 மணி நேரப் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருந்தது. ஆனால், அந்த ஒப்பந்தத்தை மீறி, பாகிஸ்தான் இந்த வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக ஆப்கானிஸ்தான் அரசு குற்றம் சாட்டியுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றத்தைத் தணிப்பதற்காக தோஹாவில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவரும் நிலையில், இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம், ஆப்கானிஸ்தான் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் பெரும் கோபத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பஸல்ஹக் ஃபரூக்கி, முகமது நபி, ரசித் கான் ஆகியோர் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

இந்தத் துயரச் சம்பவத்தால், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் உலகம் ஈடுசெய்ய முடியாத ஒரு இழப்பைச் சந்தித்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB) இதுவரை இந்த விவகாரத்தில் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வந்தி கைதின் பின்னணி : பொலிசாரின் கவனத்தை திசைதிருப்ப வகுத்த இரகசிய திட்டம்!!

கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ‘கணேமுல்லை சஞ்சீவ’ என்ற பாதாள உலக கும்பல் உறுப்பினரின் கொலை வழக்கில் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி கடந்த மே மாதம் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் இடம்பெற்ற காலப்பகுதியில் நாட்டிலிருந்து இந்தியாவுக்கு தப்பிச்சென்றதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

‘கனேமுல்லை சஞ்சீவ’ கொலை செய்யப்பட்டதன் பின்னர் சுமார் மூன்று மாதங்களாக அவர் நாட்டினுள் ஒழிந்திருந்ததாகவும் இஷாரா செவ்வந்தி விசாரணை அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்தின் பக்கம் பாதுகாப்பு அதிகாரிகளின் கவனம் திசை திரும்பியிருந்த போது, குறித்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.

மித்தெனியவிலிருந்து தற்போது கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சுபுன் என்னும் அரச அதிகாரியுடன் யாழ்ப்பாணத்துக்குச் சென்று அங்கிருந்து ஜே.கே. பாய் எனப்படும் கெனடி செபஸ்தியன் பிள்ளையுடன் மீன்பிடி படகின் மூலம் இந்தியாவுக்கு தப்பிச்சென்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் இஷாரா செவ்வந்தி நாட்டினுள் தலைமறைவாகியிருந்த காலப்பகுதியில் அவருக்கு அடைக்கலம் கொடுத்த பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட சந்தேகநபர்கள் மூவர் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பக்தபூர் திப்பஸ் பார்க் பிரதேசத்தில் வைத்து செவ்வந்தி உட்பட மேலும் ஐந்து சந்தேகநபர்கள் கடந்த 13 ஆம் திகதி கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்.

நேபாளத்தில் அழைத்துவரப்பட்ட 6 பேரில், இஷாரா செவ்வந்தி (26), டம்மி இஷாரா என அறியப்படும் தக்ஷி நந்தகுமார் (23), ஜே.கே. பாய் எனப்படும் கெனடி செபஸ்தியன் பிள்ளை (35), ஜப்னா சுரேஷ் எனப்படும் ஜீவதாசன் கனகராசா ஆகியோரிடம் சி.சி.டி. எனப்படும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவர் திருந்தமாட்டார் : உருக்கமான கடிதம் எழுதி விட்டு, இரட்டை குழந்தைகளைக் கொன்று தாய் விபரீத முடிவு!!

அவரு திருந்த மாட்டாரும்மா என்று தாய்க்கு உருக்கமாக கடிதம் எழுதி வைத்து விட்டு, தனது இரட்டைக் குழந்தைகளையும் கொன்றுவிட்டு சாய் லட்சுமி தானும் தற்கொலைச் செய்துக் கொண்டுள்ளார்.

ஆந்திரா மாநிலம் குண்டூரைச் சேர்ந்த சாய் லட்சுமி (27) என்பவர், ஐதராபாத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றும் அனில் குமார் (30) என்பவரை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு மகன் சேதன் கார்த்திகேயா மற்றும் மகள் லாஸ்யத வள்ளி (2) என்று இரட்டை குழந்தைகள் உள்ளனர்.

இதில் மகனுக்கு பேச்சு தெளிவாக வராததால், அதை மனைவியின் ஜீன் பிரச்சினையாக கூறி, கணவர் அடிக்கடி தனது மனைவி சாய் லட்சுமியுடன் தகராறு செய்து துன்புறுத்தல் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

மகனுக்கு சிகிச்சைக்காக பல மருத்துவமனைகளில் சாய் லட்சுமி சிகிச்சை அளித்தும் பலன் இல்லை. இதனால் தம்பதியரிடையே விரக்தி ஏற்பட்டு உறவில் விரிசல் விழுந்தது.மாதக்கணக்கில் இருவரும் பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்தனர்.

இந்நிலையில் கணவர் விசாகப்பட்டினம் சென்றிருந்த சமயத்தில், மனமுடைந்த சாய் லட்சுமி தன் இரு குழந்தைகளின் முகத்தில் தலையணை வைத்து மூச்சுத்திணறச் செய்து கொலை செய்து விட்டு, பின்னர் குடியிருப்பின் நான்காவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துக் கொண்டார்.

தற்கொலை செய்துக் கொள்வதற்கு முன் பெற்றோருக்காக ஒரு வீடியோ பதிவு செய்திருக்கிறார். அதில் “அவர் மாற மாட்டார். என் பிள்ளைகள் உயிரோடு இருப்பது அவசியமில்லை. மன்னித்து விடுங்கள்” என்று கூறியிருந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையில் ஈடுபட்டு, சாய் லட்சுமியின் கணவர் அனில் குமார் மற்றும் அவரது பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட கல்வி அமைச்சு!!

அடுத்த கல்வியாண்டில், தரம் 1 மற்றும் தரம் 6 மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படாது என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இதன்படி, தரம் 1 மற்றும் தரம் 6 மாணவர்களுக்கு சுய கற்றல் கையேடுகள் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சுய கற்றல் கையேடுகள் தற்போது அச்சிடப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, குறித்த தரங்களில் கற்கும் மாணவர்களுக்கான பாடசாலை பைகளின் எடையும் குறைக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

வியக்க வைக்கும் தாயின் பாசம் : மகனுக்கு புதிய வாழ்வு கொடுத்த தாய்!!

சிறுநீரகப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட மகனுக்கு 72 வயது தாயொருவர் தனது சிறுநீரகத்தை வழங்கிய நெகிழ்ச்சி சம்பவம் இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த 72 வயதான மூத்த பெண்மணி ஒருவர் அவரது 46 வயதான மகனுக்கு சிறுநீரகத்தை வழங்கியுள்ளார். சிறுநீரக செயலிழப்பு காரணமாக பாதிக்கப்பட்ட குறித்த ஆண் கடந்த இரு வருடங்களாக கூழ்மப்பிரிப்பு (dialysis) சிகிச்சையைப் பெற்று வந்துள்ளார்.

எனினும் உடல் நலனில் எவ்வித முன்னேற்றங்களும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுநீரகத்தை நன்கொடையாக வழங்க அவரது தாயார் முன்வந்துள்ளார்.

தற்போது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்று இருவரும் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

காணாமல் போனதாக கணவர் தவிப்பு : பெண் வெளியிட்ட காணொளியால் அதிர்ச்சி!!

மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் , வெளிநாடொன்றில் இருந்து நாடு திரும்பிய தனது மனைவியை காணவில்லையென, பெண்ணின் கணவன், கடந்த சில நாட்களின் முன்னர் முறைப்பாடு செய்திருந்தார்.

இந் நிலையில், தான் வேறொரு திருமணம் செய்து கொழும்பில் வாழ்வதாக அப்பெண் காணொளி வெளியிட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாமிமலை ஓல்ட்டன் தோட்டம் நிலாவத்தை பிரிவில் உள்ள, இரண்டு குழந்தைகளின் தாயான, மோகன் நிஷாந்தனி (வயது 33) என்ற பெண்னே காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதோடு பதுளை ஸ்பிரிங்வெளி பகுதியை சேர்ந்த ஒருவர் மனைவியை கடத்தியிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அப்பெண் வெளியிட்ட காணொளியில், தான் காணாமல் போகவில்லை என்றும், வேறொரு திருமணம் செய்து மிகவும் மகிழ்ச்சியாக கொழும்பில் வாழ்ந்து வருவதாக காணொளி வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் பெற்ற குழந்தைகளையும் , கணவனையும் விட்டுவிட்டு எப்படி உன்னால் வாழ முடிகிறது என சமூக வலைத்தளவாசிகள் பெண்ணை திட்டி தீர்த்து வருகின்றனர்.

முகநூல் வழியாக பரவும் பாலியல் நோய் : எச்சரிக்கும் அரசு!!

முகநூல் (Facebook) காரணமாக இந்த ஆண்டில் பாலியல் நோய் பரவல்கள் (STDs) இரட்டிப்பாகியுள்ளதாக அநுராதபுரம் பாலியல் சுகாதார சேவை மையத்தின் பாலியல் நோய்கள் பிரிவின் மூத்த மருத்துவ அதிகாரி ஹேமா வீரக்கோன் தெரிவித்துள்ளார்.

இவற்றில் பொதுவான பரவும் பாலியல் நோயான சிபிலிஸ் என்றும், அவற்றில் HIV தொற்றாளர்களும் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். நோயாளிகளிடமிருந்து எடுக்கப்பட்ட தகவல்கள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் இந்த நிலைமையை சுட்டிக்காட்டும் அவர்,

“முகநூல் மூலம் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு பெரும்பாலான ஆண்கள் இந்த நிலைக்கு ஆளாகிறார்கள். ஒரே பெண் முகநூல் மூலம் அதிக எண்ணிக்கையிலான ஆண்களுடன் தொடர்பில் காணப்பட்டதால் இவ்வாறான நிலைமைகள் உருவாகியுள்ளன.

இது ஒரு மாவட்டத்திற்கு மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை. நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களை பாதித்துள்ளது.

எனவே, முகநூல் தொடர்புகளில் மிகவும் கவனமாக இருப்பது முக்கியம். பல ஆண்டுகளுக்கு முன்பே சிபிலிஸ் நோய் நாட்டிலிருந்து ஒழிக்கப்பட்டாலும், அது இன்னும் பாலியல் ரீதியாக பரவும் நோயாகும்” எனத் தெரிவித்துள்ளார்.

வரலாறு காணாத வகையில் உச்சம் தொட்டுள்ள தங்கத்தின் விலை : மேலும் உயரலாம் என தகவல்!!

நாட்டில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், நேற்றையதினம்(16) 4 இலட்சத்தை விட இன்றையதினம்(17) மேலும் 10,000 ரூபாவால் அதிகரித்துள்ளது.

இதன்படி, இன்றையதினம் கொழும்பு செட்டித் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 410,000 ரூபாவாக அதிகரித்துள்ளது.

22 கரட் தங்கப் பவுண்(22 karat gold 8 grams) ஒன்றின் விலையானது 379,200 ரூபாவாக பதிவாகியுள்ளது. தங்க விலை நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,315,481 ரூபாவாக காணப்படுகின்றது.

24 கரட் தங்கம் ஒரு கிராமின்(24 karat gold 1 grams) விலை 46,410 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேவேளை 24 கரட் தங்கப் பவுணொன்று 371,250 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கம் ஒரு கிராமின்(22 karat gold 1 grams) விலையானது 42,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுணொன்றின்( 22 karat gold 8 grams) விலையானது 340,350 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை(21 karat gold 1 grams) 40,610 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று(21 karat gold 8 grams) 324,900 ரூபாவாக பதிவாகியுள்ளது.