கனடாவில் இலங்கை சேர்ந்த இளைஞன் கொலை குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்ட நிலையில், குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு நீண்டகால சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என கனேடிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
கனடாவுக்கு மாணவர் விசாவில் சென்ற 20 வயதான டி சொய்சா என்ற இலங்கை இளைஞனை குற்றவாளியாக ஓட்டா நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கொலை வழக்கு தொடர்பான விசாரணை நேற்று நடைபெற்ற போது, தனது குற்றத்தினை டி சொய்சா ஒத்துக்கொண்ட நிலையில் வழக்கு விசாரணை நிறைவுக்கு வந்துள்ளது.
அடுத்து வரும் வழக்கு விசாரணையின் போது குற்றவாளிக்கான தண்டனை அறிவிக்கப்படவுள்ளது. கடந்த வருடம் ஒட்டாவில் வசித்த வந்த இலங்கை குடும்பம் ஒன்றை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டனர்.
டி சொய்சா என்ற இளைஞனால் அவர்கள் கொலை செய்யப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்போது தாய் மற்றும் அவரின் நான்கு பிள்ளைகள் உட்பட ஆறு பேர் கொலை செய்யப்பட்டிருந்தனர்.
கொலை செய்யப்பட்ட குடும்பத்தினரின் வீட்டில் டி சொய்சா தங்கியிருந்த நிலையில், இந்த கொலைகளை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பல்வேறு பெயர்களில் பேஸ்புக் பக்கங்களை உருவாக்கி, நிதி மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பற்றிய தகவல்களைக் கொண்ட பல்வேறு விளம்பரங்களை வெளியிட்டு பணம் மோசடி செய்யும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது.
அவ்வாறு பணத்தை மோசடி செய்து வரும் குழுவை விசாரித்து வருவதாக குற்றப் புலனாய்வு பிரிவு நேற்று கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தது.
இந்த சந்தேக நபர்களால் பல பெயர்களில் பேஸ்புக் பக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பற்றிய விளம்பரங்களை வெளியிடப்பட்டுள்ளது.
அதனை நம்பிய மக்களிடம் மில்லியன் கணக்கான ரூபாய்களை மோசடி செய்துள்ளதாக, குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கொழும்பு தலைமை நீதவான் அசங்கா போதரகமவிடம் தெரிவித்தனர்.
கரந்தெனய பகுதியைச் சேர்ந்த ஒருவர், புற்றுநோய் நோயாளியான தனது மகளின் புகைப்படங்கள், தகவல்கள் மற்றும் பல்வேறு வங்கிக் கணக்குகளை சமூக ஊடகங்களில் வெளியிட்டு மோசடியாக பணம் சேகரித்துள்ளார்.
இது தொடர்பான அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் தொடர்புடைய தகவல்கள் தெரியவந்ததாக அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணைகளின் போது கைது செய்யப்பட்ட ஓபநாயக்க பகுதியை சேர்ந்த சமில் சந்தருவன், ரக்வானவையைச் சேர்ந்த முசான் ஷமிந்த மற்றும் ஓபநாயக்கவைச் சேர்ந்த ஹர்ஷ சதுரங்க ஆகிய மூன்று சந்தேக நபர்களையும் தலா 100,000 ரூபாய் பிணையில் விடுவிக்க தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.
சமூக ஊடகங்களில் புற்றுநோய் நோயாளிகளின் விளம்பரங்களை வெளியிட்டு மேற்கொள்ளப்படும் மோசடி நடவடிக்கைகள் தொடர்பில் மக்களை தெளிவுப்படுத்தும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தலைமை நீதிபதி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
யாழ் போதனா வைத்தியசாலையில் ஒரே நேரத்தில் மூன்று பிள்ளைகளை பெற்ற தாயார் , குழந்தை பெற்ற ஒரே மாதத்தில் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் வடமராட்சி வதிரி பகுதியை சேர்ந்த 46 வயதான தாயாரே உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் யாழ் போதனா வைத்தியசாலையில் கடந்த மாதம் 07 திகதி ஒரே நேரத்தில் மூன்று பிள்ளைகளை பெற்ற நிலையில் அவசர பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
திருமணமாகி நீண்ட வருடங்களின் பின் ஒரே நேரத்தில் மூன்று பிள்ளைகளை குறித்த தாய் பெற்றெடுத்திருந்த நிலையில் குழந்தைகள் பிறந்த ஒரேமாதத்தில் இத் துயரம் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் (05.11.2025) குறித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் சத்தீஸ்கரில் இறந்துவிட்டதாக கருதி தகனம் செய்யப்பட்டவர் உயிருடன் வந்ததால் உறவைனர்கள் அதிர்ச்சியடைந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரிவருகையில், சத்தீஸ்கரில் நவம்பர் 1 ஆம் திகதி சூரஜ்பூர் மாவட்டத்தின் மன்பூர் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் இருந்து ஒரு உடலம் மீட்கப்பட்டது.
அருகில் உள்ள சந்தர்பூர் கிராமத்தைச் சேர்ந்த 25 வயதான புருஷோத்தமனின் குடும்பத்தினர், இரண்டு நாட்களாக அவரை காணவில்லை என பொலிஸாரிடம் முறைப்பாடு அளித்த நிலையில், உறவினர்களுக்கு அந்த உடலம் காண்பிக்கப்பட்டது.
குடும்பத்தினர், இறந்தவர் புருஷோத்தமன் என அடையாளம் காட்டிய நிலையில் காவல்துறையினர் விபத்து மரணம் என வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் உடலத்தை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து குடும்பத்தினர் உடலத்தை அடக்கம் செய்து இறுதிச் சடங்கு செய்தனர். இந்நிலையில் புருஷோத்தமனின் இறப்பு செய்தியைக் கேள்விப்பட்டு அங்கு வந்த உறவினர்கள்,
புருஷோத்தமனை சந்தர்பூரில் இருந்து 45 கிலோமீற்றர் தொலைவில் உள்ள அம்பிகாபூரில் பார்த்ததாக குடும்பத்தினருக்குத் தெரிவித்தனர். இறுதியில் புருஷோத்தமன் அங்கு ஒரு உறவினரின் வீட்டில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு நவம்பர் 4 ஆம் திகதி வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார்.
புருஷோத்தமனனின் குடும்பத்தினரால் அடக்கம் செய்யப்பட்ட நபரின் டி.என்.ஏ மாதிரிகள், கைரேகைகள், உடைகள் மற்றும் பிற உடைமைகள் பாதுகாக்கப்பட்டு உடலின் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவற்றை வைத்து உடலத்தை அடையாளம் காண பொலிஸார் விசாரணைகளி மேற்ஒண்டுள்ளதாக கூறப்படுகின்றது.
பாடசாலை நேரம் பிற்பகல் 2.00 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த நேர நீடிப்பானது தரம் 5இலிருந்து 13ஆம் தரம் வரை அமுல்படுத்தப்படுமென்றும் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க களுவெவ தெரிவித்தார்.
பாடசாலை நேர மாற்றம் தொடர்பில் விளக்கமளித்து கொழும்பில் நேற்று (06) நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
பாடசாலை நேரம் பிற்பகல் 2.00 மணிவரை நீடிக்கப்படும். அவ்வாறு மாற்றங்கள் மேற்கொள்ளப்படும். உதாரணமாக குறிப்பிடுவதானால் முதலாம் தர மாணவர்களின் பாடசாலை நேரத்தில் மாற்றம் ஏற்படாது.
தற்போது காலை 7.30 மணியிலிருந்து 11.45மணி வரையான காலம் அவ்வாறு நீடிக்கப்படும். இரண்டாம் தரத்துக்கும் 7.30 மணியிலிருந்து 11.45 மணி வரையிலான கற்றல் நடவடிக்கைகள் அவ்வாறே முன்னெடுக்கப்படும்.
அதேவேளை 03, 04ஆம் தர மாணவர்களுக்கு 7.30 மணியிலிருந்து 1.00 மணி வரையான கற்றல் காலம் அவ்வாறே இடம்பெறும். அதிலும் எவ்வித மாற்றமும் ஏற்படாது.
மேலும் 05 ஆம் தரத்திலிருந்தே நேர மாற்றம் ஏற்படும். 05ஆம் தர மாணவர்களுக்கு 7.30 மணியிலிருந்து 2.00 மணிவரை கற்றல் நடவடிக்கைகள் இடம்பெறும் என்றும், அதாவது,
06ஆம் தரத்திலிருந்து எதிர்வரும் 13ஆம் தரம் வரையிலான மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் காலை 7.30 மணிமுதல் பகல் 2.00 மணிவரை இடம்பெறும் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க களுவெவ தெரிவித்தார்
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பிற்காக ரூபா 110 பில்லியன் ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
2026ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தினை முன்வைத்து நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
சம்பளம் மற்றும் ஓய்வூதிய கொள்கைகளை நிலைபேறாக நிர்வகிப்பது எமது பொறுப்பாகும். பல ஆண்டுகளாக எழுந்துள்ள சம்பள முரண்பாடுகளையும் அரசாங்க நிதி முகாமைத்துவம் என்பவற்றிலுள்ள சவால்களையும் கருத்திற்கொண்டு,
அரசாங்க ஊழியர்கள் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்காக சம்பளம் மற்றும் ஓய்வூதிய குழுவை தாபிப்போம்.
2025ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சம்பள திருத்தங்களுக்கு அமைய, இரண்டாம் கட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ரூபா 110 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய இந்த சம்பளங்களை அனைத்து அரச ஊழியர்களுக்கும் 2026 ஜனவரி தொடக்கம் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே வீட்டுமனை பார்க்கச் சென்ற இளம்பெண் ஒருவரை கும்பல் கொடூரமாக தாக்கி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் அவரது நகைகள் பறிக்கப்பட்டு குற்றவாளிகள் தப்பியோடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காரைக்குடி மருதுபாண்டியர் நகரை சேர்ந்த பாண்டிக்குமார். சிங்கப்பூரில் வேலை செய்து வரும் இவரது மனைவி மகேசுவரி (38), நிலம் வாங்குவதில் ஆர்வம் கொண்டவர்.
இதற்காக இடம் பார்த்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்நிலையில் நேற்று காலை அவர் தனது காரில் சிலரை அழைத்துச் சென்றார்.
ஆவுடைப்பொய்கை பகுதியில் வீட்டுமனை குறித்து பேசும் போது அவருக்கும் அழைத்துச் சென்ற நபர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தகவல்.
இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள், மகேசுவரியின் தலையை கார் கதவில் மோத வைத்தும், கழுத்தை நெரித்தும், மகேஸ்வரியின் முகத்தில் தாக்கியும் கொடூரமாக கொலை செய்துள்ளனர்.
பின்னர் அவரது தாலிச்சங்கிலி, மேலும் கழுத்தில் இருந்த ஒரு சங்கிலி உள்ளிட்ட சுமார் 20 பவுன் நகைகளை பறித்துவிட்டு, மகேஸ்வரியின் உடலை காருக்குள் விட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து புகார் பெறப்பட்டதையடுத்து குன்றக்குடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிலம் வாங்கல் தகராறு காரணமா கொலை நடந்ததா? பணப் பரிவர்த்தனை சச்சரவு பின்னணியா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பதை பல்வேறு கோணங்களில் போலீசார் ஆராய்ந்து வருகின்றனர். மேலும் தப்பிச் சென்றவர்களை பிடிக்க வலை வீசப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் நடைபெற்ற ‘அதர்ஸ்’ பட பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகை கௌரி கிஷனிடம் ஒரு நிருபர் தகாத முறையில் எடை குறித்த கேள்வி எழுப்பியதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நவம்பர் 7ஆம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தின் பத்திரிகை நிகழ்வில் நடந்த இந்த சம்பவம், திரைப்படத் துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து பரவலான விவாதத்தை தூண்டியுள்ளது.
அந்த நிருபரின் கேள்வியால் கடும் மனவருத்தமடைந்த கௌரி, “என் எடை உங்களுக்கு எப்படி சம்பந்தப்பட்டது? ஒவ்வொரு பெண்ணுக்கும் தனித்த உடல் அமைப்பு இருக்கும். என் திறமையால் பேச அனுமதியுங்கள்.
உங்களின் அங்கீகாரம் எனக்குத் தேவையில்லை,” என்று திடுக்கிடும் பதில் அளித்தார். சிலர் இதை “இலேசான கேள்வி” என கூறியபோதும், கௌரி, “உடல் அவமதிப்பை சாதாரணமாகக் காட்டுவதை நிறுத்துங்கள். இது வேடிக்கையல்ல,” என வலியுறுத்தினார்.
“என் கதாபாத்திரம் பற்றி யாரும் கேள்வி கேட்கவில்லை; எல்லோருக்கும் என் எடைதான் முக்கியம்.
ஒரு ஆண் நடிகரிடம் இதே கேள்வி கேட்டிருக்கமாட்டார்கள்,” என்று கூறிய அவர், அந்த நிருபரிடம் “இது பத்திரிகைத்துறை அல்ல, உங்கள் தொழிலுக்கு அவமானம்” என சாடினார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. பாடகி சின்மயி ஸ்ரீபாதா உள்ளிட்ட பலரும் கௌரியின் துணிச்சலை பாராட்டினர்.
அதேசமயம், நிகழ்வில் இருந்த நடிகர் ஆதித்ய மாதவன் தாமதமாக பதிலளித்ததற்காக மன்னிப்பு கேட்டார். “அது எதிர்பாராத நிலை; நான் உறைந்து போனேன்.
உடல் அவமதிப்புக்கு யாரும் தகுதியற்றவர்கள்,” என்று அவர் விளக்கம் அளித்தார்.கௌரி கிஷன் மற்றும் ஆதித்ய மாதவன் நடித்த ‘அதர்ஸ்’ திரைப்படம் நவம்பர் 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இணையத்தில் ஆடைகள் விற்பனை செய்வதாக கூறி 10 மில்லியன் ரூபாய் மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை பிரிவு சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் ஹபரணையை சேர்ந்த 24 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாணந்துறை, பின்வத்த, மீகஹகோவில வீதியைச் சேர்ந்த ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
மேலும் சந்தேக நபரின் வங்கி கணக்கில் ஒரு மில்லியன் ரூபாய்க்கு மேல் பரிவர்த்தனை செய்யப்பட்டதாக வங்கி பதிவுகள் தெரிவிக்கின்றன.
டெலிகிராம் செயலி மூலம் மதிப்புமிக்க ஆடைகள் இணையத்தில் விற்கப்படுவதாகவும், இணைப்பை கிளிக் செய்ததால் பல லட்சம் ரூபாய் பரிசை வென்றுள்ளதாகவும் குறுந்தகவல் அனுப்பப்பட்டதாக பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, அதனை பெற ஒரு தொகை பணத்தை வைப்பு செய்துள்ளார். மேலும் பல சந்தர்ப்பங்களில், அவ்வப்போது அவரை தவறாக வழிநடத்தி, தொடர்புடைய இலக்கு தொகையை பெற 10 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய் வைப்பு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். மேலும் சந்தேக நபர்கள் கைது செய்யப்படுவார்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிலாபம் முனேஸ்வரம் ஆலயத்திற்கு சென்ற நிலையில் தெதுரு ஓயாவில் குளிக்கச் சென்ற போது உயிரிழந்தவர்கள் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.
கிரிபத்கொட பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உட்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
10 பேர் கொண்ட உறவினர்கள் குழு ஒன்று நேற்று தெதுரு ஓயாவில் குளிக்க சென்ற போது இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்களின் நான்கு சகோதரர்கள் அடங்குவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் கொழும்பு கிராண்ட்பாசை சேர்ந்த 16 முதல் 17 வயதுக்குட்பட்டவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தக் குழு காலையில் மாகொலவில் இருந்து சிலாபத்திற்கு சுற்றுலா சென்று திரும்பிய போது தெதுரு ஓயாவில் குளிக்கச் சென்றனர்.
அந்தப் பகுதி பாதுகாப்பற்ற இடம் என ஒரு பெரிய பலகை வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது குளித்துக் கொண்டிருந்த சுமார் 10 பேரில் 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் 5 பேர் உள்ளூர்வாசிகளால் காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த அனர்த்தத்தின் போது காப்பாற்றப்பட்ட சிறுவன் ஒருவர் தகவல் தருகையில், “முதலில் மாரவில தேவாலயத்தை பார்வையிட வந்தோம். பின்னர் முன்னேஸ்வரன் ஆலயத்திற்கு சென்று இங்கு வந்து சாப்பிட்ட பின்னர் குளித்தோம்.
அதிக தண்ணீர் இல்லை. எனினும் நான் ஒரு அடி கால் வைத்தவுடன் இழுத்து செல்லப்பட்டேன். மூத்த சகோதரர் என்னை இழுத்து காப்பாற்றினார். ஏனையவர்களை காப்பாற்ற முடியாமல் போய்விட்டது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்து வருவதால் இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்து வருகின்றன. நேற்றைய விலையுடன் ஒப்பிடும்போது இன்று தங்கத்தின் விலையில் மாற்றம் இல்லையென தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, இலங்கையில் இன்று (06 நவம்பர் 2025) 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 316,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 290,000 ரூபாயாகவும், 18 கரட் தங்கம் பவுண் ஒன்று 237,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 39,525 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 36,250 ரூபாயாகவும், 18 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 29,625 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்தமையினால் இலங்கையிலும் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக அதிகரிப்பை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையை விட்டு தப்பிச் செல்லும் பாதாள உலக குற்றவாளிகளுக்கு மொரீஷியஸ் கடவுச்சீட்டுகளை தயாரிக்கும் மோசடி தெரியவந்துள்ளது.
கொழும்பு குற்றப்பிரிவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜே.கே. பாய் என்ற சர்வதேச ஆட்கடத்தல்காரரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த விடயம் தெரிய வந்துள்ளது.
நேபாளத்தில் இஷாரா செவ்வந்தியுடன் கைது செய்யப்பட்டு, நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட ஜே.கே. பாய் வெளிப்படுத்திய தகவல்களிற்கமைய, மொரீஷியஸ் கடவுச்சீட்டு துருக்கியில் உள்ள ஒரு கடத்தல்காரரால் தயாரிக்கப்படுகின்றன.
துருக்கி கடத்தல்காரரின் பணி டுபாயில் வசிக்கும் ஒரு அரபு நாட்டவருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மோசடியான கடவுச்சீட்டு தயாரிப்பதற்கு அவர் ஒரு மில்லியன் மற்றும் அதற்கு மேல் வசூலிப்பதாகவும் தெரியவந்துள்ளது.
20 அல்லது அதற்கு மேற்பட்ட போலி கடவுச்சீட்டுகளை ஜே.கே. பாய் தயாரித்துள்ளார். மோசடியாக தயாரிக்கப்பட்ட கடவுச்சீட்டுகளில் பல புகைப்படங்கள் அவரது கையடக்க தொலைபேசியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
உள்ளூர் குற்றவாளிகளுக்கு மேலதிகமாக, இந்திய குற்றவாளிகளுக்கும் மொரீஷியஸ் கடவுச்சீட்டுகள் தயாரிக்க ஏற்பாடு செய்துள்ளது. ஜே.கே. பாய் பெரும்பாலான உள்ளூர் குற்றவாளிகளை படகு மூலம் இந்தியாவிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
கெஹல்பத்தர பத்மே, இஷாரா செவ்வந்தி, பெக்கோ சமன், அவரது மனைவி, பத்து வயது சிறுமி உள்ளிட்ட பாதாள உலகத்துடன் தொடர்புடைய பலருக்கு மொரீஷியஸ் கடவுச்சீட்டுகளை தயாரிப்பதில் ஜே.கே. பாய் முக்கிய மூளையாக செயற்பட்டுள்ளார்.
ஜே.கே. பாய் என்ற இந்த ஆட்கடத்தல்காரருக்கு தாய்லாந்து, இந்தியா, மலேசியா, இந்தோனேசியா, நேபாளம், துபாய், மொரீஷியஸ் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளைச் சேர்ந்த மனித கடத்தல்காரர்களுடன் தொடர்பு உள்ளது என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக இன்டர்போல் மற்றும் இராஜதந்திர வழிகள் மூலம் தொடர்புடைய நாடுகளுக்குத் தெரிவிக்க பொலிஸார் நடவடிக்கை எடுக்கத் தயாராகி வருகின்றனர்.
இது தவிர, பாதாள உலகக் குற்றவாளிகள் உட்பட பல்வேறு நபர்கள் நாட்டில் சட்டவிரோதமாக வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை தயாரிக்கும் ஒரு மோசடி குறித்தும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இந்த மோசடியில் தொடர்புடைய பல சந்தேக நபர்கள் எதிர்காலத்தில் கைது செய்யப்படுவார்கள் என கூறப்படுகிறது. ஜே.கே. பாய் என அழைக்கப்படும் கெனடி செபஸ்தியன் பிள்ளை யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மொனராகலை பொலிஸ் பிரிவில் வசிக்கும் இளைஞர் ஒருவர் தனக்கு தானே துப்பாக்கி சூடு மேற்கொண்டு உயிரை மாய்த்துள்ளார்.
நேற்று மாலை 5.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் மொனராகலை மதுருகெட்டிய பகுதியை சேர்ந்த 21 வயதான ஹஷான் இந்திக பண்டார என என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் தனது வீட்டின் முன்னால் உயிரை மாய்த்துள்ளார். தன்னைத்தானே சுட்டுக் கொள்வதற்கு முன்பு தனது தாய் மற்றும் தந்தைக்கு எழுதப்பட்ட கடிதம் ஒரு மேசையில் காணப்பட்டது. அவரது பணப்பையில் அவரது காதலியின் புகைப்படமும் காணப்பட்டது.
பல நாட்களாக காதலியுடன் தொலைபேசியில் பேசாததால் அவர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
போயா தினம் என்பதால் தாய் விகாரைக்கு சென்றிருந்தார், வீட்டில் யாரும் இல்லாத நிலையல் அருகிலுள்ள கடைக்குச் சென்று திரும்பிய தாத்தா, பேரன் உயிரிழந்து கிடப்பதனை கண்டு அதிர்ச்சி அடைத்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
2025 ஆம் ஆண்டிற்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நாளை (07) முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சு இதனை அறிவித்துள்ளது. அதற்கமைய, சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளின் இரண்டாம் கட்டம் 08.12.2025 திங்கட்கிழமை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், முஸ்லிம் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் 24.11.2025 திங்கட்கிழமை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. உயர்தர பரீட்சையை முன்னிட்டு 7ஆம் திகதியுடன் நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளது.
அதற்கமைய டிசம்பர் 8ஆம் திகதி பாடசாலைகளில் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் மீள ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கனடா அரசாங்கம், தற்காலிக குடியிருப்புக்கான (temporary resident) மருத்துவ பரிசோதனை விதிமுறைகளைப் புதுப்பித்துள்ளது.
2025 நவம்பர் 3ஆம் திகதி முதல், கனடா தற்காலிக குடியிருப்புக்கான விண்ணப்பதாரர்கள் எந்த நாடுகளில் வாழ்ந்திருக்கிறார்கள் அல்லது பயணித்திருக்கிறார்கள் என்பதனை அடிப்படையாகக் கொண்டு, மருத்துவ பரிசோதனை (IME) அவசியம் என புதிய பட்டியலை வெளியிட்டுள்ளது.
6 மாதங்களுக்கு மேல் கனடாவில் தங்க விரும்பும் அனைவரும் IME செய்ய வேண்டும். குறிப்பாக, பெற்றோர் மற்றும் super visa விண்ணப்பதாரர்களுக்கு இது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
IME தேவைப்படும் நாடுகளாக ஆர்ஜென்டினா, கொலம்பியா, உருகுவே, வெனிசுவேலா போன்ற நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
IME தேவைப்படாத நாடுகளாக அர்மீனியா, போஸ்னியா, ஹெர்ஸிகோவினா, ஈராக், லாட்வியா, லிதுவேனியா, தைவான் போன்றன பெயரிடப்பட்டுள்ளதுடன், இந்த மாற்றங்கள் கனடாவின் பொதுச் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்திய மாணவர்கள் மற்றும் வேலைவாய்ப்பு விண்ணப்பதாரர்களுக்கு IME தேவையானது ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.
மேலும், IMEஐ மீண்டும் செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல் விலக்கு பெற, விண்ணப்பதாரர்கள் கடந்த 5 ஆண்டுகளில் IME செய்திருக்க வேண்டும் மற்றும் அதில் “low risk” என மதிப்பீடு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
இந்த தற்காலிக பொதுக் கொள்கை 2029 ஒக்டோபர் 5ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Express Entry வழியாக நிரந்தர குடியிருப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் வெளிநாட்டவர்கள், IME சான்றிதழ்களை முன்பே சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.