வடகிழக்கு பருவப்பெயர்ச்சி காற்று வலுவடைந்துள்ள நிலையில், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள், அலை வடிவக் குழப்பங்கள், தாழமுக்கங்கள் அல்லது புயல்கள் உருவாகும் அபாயம் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதனை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் நேற்று (12.12.2025) தெரிவித்துள்ளார்.
கடந்த 30 ஆண்டுகளில் வடகிழக்கு பருவப்பெயர்ச்சி செயற்பட்ட விதம் குறித்த தரவுகளை ஆய்வு செய்து சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் ஊடாக இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, வட மாகாணத்தில் சாதாரண மழைவீழ்ச்சியை விட அதிக மழைவீழ்ச்சியை எதிர்பார்க்கலாம் எனவும், வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சாதாரண மழைவீழ்ச்சியை அண்மித்த மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல் மற்றும் தென் மாகாணங்களில் சாதாரண மழைவீழ்ச்சியை விடக் குறைவான மழைவீழ்ச்சியே நிலவும் என அந்தத் தரவுகளின் அடிப்படையில் கணிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள் அல்லது புயல்கள் உருவாகும் பட்சத்தில், இந்த வானிலை முன்னறிவிப்புகளில் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புத்தளம் கற்பிட்டி பிரதேசத்தில் குழந்தை ஒன்று துணி துவைக்கும் வாளியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்துட சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
சம்பவத்தில் ஒரு வயதான குழந்தையே உயிரிழந்துள்ளது. நேற்று மாலை குழந்தையினை காணவில்லை என பெற்றோர் தேடிய போது குழந்தை குளியலறையில் உள்ள சிறிய பகட் (பாஸ்கட்) ஒன்றுக்குள் இருந்து சடலமாக மீட்ட்கப்பட்டுள்ளது.
துணி துவைக்கும் இடத்தில் குழந்தை விளையாடிகொண்டிருந்த நிலையில் வாளியில் தவறி விழுத்து உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
பெற்றோரின் கவனயீனத்தால் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 09ஆம் திகதி முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, இரணைப்பாலை வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் காயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி நேற்று யாழ் போதனா வைத்தியசாலையில் (12) உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது, அதே திசையில் பயணித்த கனரக வாகனமொன்றுடன் மோதி விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்த அன்ரன் செல்வராசா திலைக்சன் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர், புதுக்குடியிருப்பு இரணைப்பாலை சென் அன்ரனிஸ் விளையாட்டுக் கழகத்தின் உதைபந்தாட்ட வீரராகவும், முல்லைத்தீவு மாவட்டத்தின் உதைபந்தாட்ட நடுவராகவும் செயற்பட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த விபத்துடன் தொடர்புடைய கனரக வாகனமும் அதன் சாரதியும் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, வீதி போக்குவரத்து பொலிஸாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சந்தேக நபரான சாரதி கடந்த 10ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் வழக்கின் மேலதிக விசாரணை இன்று (13) நடைபெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கொச்சி அருகே உள்ள மலையாற்றூர் முண்டங்காமட்டத்தில் இருக்கும் ரப்பர் தோட்டத்தில், 19 வயது கல்லூரி மாணவி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.
போலீஸாரின் தீவிர விசாரணையில், அவர் காதலனால் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
பிணமாக மீட்கப்பட்ட இளம்பெண், முண்டக்காமட்டத்தைச் சேர்ந்த சித்ரப் பிரியா (19) என்பதும், பெங்களூருவில் உள்ள ஒரு கல்லூரியில் விமான பயிற்சிப் படிப்பில் படித்து வந்தவர் என்பதும் தெரிய வந்தது.
இவர் விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்தார். சித்ரப்பிரியா காணாமல் போன பிறகு, அவரது உடல் ரப்பர் தோட்டத்தில் தலை, கை, கால் உள்ளிட்ட பல இடங்களில் வெட்டுக் காயங்களுடன், அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.
சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், சித்ரப் பிரியா காணாமல் போவதற்கு முன்பு தனது காதலன் ஆலன் (21) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றதைக் கண்டறிந்தனர்.
ஆரம்பத்தில் தன்னுடன் அழைத்துச் சென்றதை ஒப்புக்கொண்ட ஆலன், கொலை பற்றித் தனக்குத் தெரியாது என்று மறுத்துள்ளார். இருப்பினும், சந்தேகம் வலுத்ததால் போலீஸார் ஆலனிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது, ஆலன் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
ஆலன் அளித்த வாக்குமூலத்தில், சித்ரப் பிரியாவுக்கு வேறொரு வாலிபருடன் தொடர்பு இருப்பதாகச் சந்தேகப்பட்டதாகவும், செல்போனில் இருந்த வேறொரு வாலிபரின் புகைப்படத்தைக் காட்டி அதுபற்றி கேட்டபோது சித்ரப் பிரியா வாக்குவாதம் செய்ததாகவும் கூறியுள்ளார்.
மதுபோதையில் இருந்த ஆலன், ஆத்திரத்தில் சித்ரப் பிரியாவை அருகில் இருந்த கல்லால் சரமாரியாகத் தாக்கி கொலை செய்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
போலீசார் ஆலனைக் கைது செய்து, கொலை நடந்த இடத்திலிருந்து இரத்தம் படிந்த கல்லையும் கைப்பற்றினர். கல்லூரி மாணவியை காதலனே கல்லால் தாக்கி கொலை செய்த சம்பவம் கொச்சிப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேளாங்கண்ணியில் மதம் மாறி திருமணம் செய்த மாப்பிள்ளை குடும்பத்தாரை மணமகள் குடும்பத்தினர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள நாகவாடாவில் வசித்து வருபவர்கள் டேனியல் (வயது 50)- கலையரசி தம்பதியினர். இவர்களுக்கு 22 வயதில் ராகுல் என்ற மகன் உள்ளார்.
இந்த நிலையில், ராகுலுக்கும் அதே பகுதியை சேர்ந்த ராஜாராவ் மகள் கீர்த்தனாவை காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு மதம் மற்றும் சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு இளம் பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
அதனை மீறியும் ராகுலும் அந்த இளம்பெண் கீர்த்தனாவும் 3 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் தங்களது திருமணத்தை பற்றி பேசியுள்ளனர். அப்போது மீண்டும் இளம்பெண்ணின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
ஆனால் ராகுல் பெற்றோர் தனது மகனின் ஆசைக்காக சம்மந்தனம் தெரிவித்து உள்ளனர். இதையடுத்து, குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவுடன், ராகுல் கடந்த 9-ஆம் தேதி தனது காதலியை வேளாங்கண்ணிக்கு அழைத்து வந்துள்ளார்.
அங்கு இருவரும் அறை எடுத்து தங்கியுள்ளனர். இந்த சூழலில், நேற்று முன்தினம் வேளாங்கண்ணி ஆலயம் முன் ராகுலின் பெற்றோர் மற்றும் அவரது நண்பர் பிரகாஷ் முன்னிலையில் திருமணம் செய்துக்கொண்டு உள்ளனர்.
இந்த தகவலை அறிந்த இளம்பெண் கீர்த்தனாவின் பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் ராகுல் குடும்பத்தினரை தொடர்ப்புக் கொண்டு பேசியுள்ளனர்.
அப்போது திருமணத்திற்கு சம்மந்தம் தெரிவித்ததாகவும், அவர்கள் இருக்கும் விவரத்தை கேட்கவே தங்கியிருக்கும் முகவரியை தந்துள்ளனர்.பின்னர், பெங்களூரில் வசிக்கும் இளம்பெண் கீர்த்தனாவின் குடும்பத்திலிருந்து சுமார் 15 பேர் வேளாங்கண்ணிக்கு வந்துள்ளனர்.
அப்போது ராகுல் மற்றும் கீர்த்தனா தங்கியிருந்த விடுதியில் உள்ளே நுழைந்து ராகுல் மற்றும் அவரது குடும்பத்தினரை கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதத்தால் தாக்கி, இளம்பெண்ணை பலவந்தமாக அழைத்துச் செல்ல முயன்றுள்ளனர்.
அப்போது தடுக்க முயன்ற போது ராகுல், அவரது தந்தை டேனியல், மாமா பிரகாஷ் மற்றும் அம்மா கலையரசி ஆகியோரை சரமாரியாக வெட்டியுள்ளனர்.
இதனால் 4 பேரும் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தனர். இந்த சம்பவத்தை அறிந்த அக்கம்பத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக விரைந்து வந்த கன்னியாகுமரி காவல்துறையினர் வெட்டுக் காயங்களுடன் ஆபத்தான நிலையில் இருந்த அவர்களை நாகை ஒரத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தற்போது சிகிச்சை பெறுகின்றனர்.
இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக வேளாங்கண்ணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் சம்பவ இடத்திலிருந்த சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில், பெண் குடும்பத்தார் சென்ற காரை விரட்டிப் பின்தொடர்ந்தனர்.
கடலூர் மாவட்டம், சேத்தியாதோப்பு பகுதியில் பெங்களூரில் வசிக்கும் குபேந்திரா ராவ் மகன்கள் வெங்கோராவ் (வயது 30) மற்றும் ராம்நாத் ராவ் (வயது 40) ஆகிய இருவரை கைது செய்தனர்.
இதற்கையடுத்து, மணப்பெண்ணுடன் தப்பி சென்ற அவரது குடும்பத்தினரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தில் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
தேனி மாவட்டம், தேவாரம் அருகே உள்ள முத்தையன் செட்டி பட்டியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் 27 வயதுடைய பிரதீப் இவர் சட்டம் பயின்றுள்ள நிலையில் சின்னமனூர் பகுதியை சேர்ந்தவர் நிகிலா என்பவருடன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.
பின்னர் இருவரும் முத்தையன் செட்டி பட்டியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தனர். பிரதீப் தந்தை அமமுக கட்சி பொறுப்பில் உள்ள நிலையில் பிரதீப் எந்த வேலைக்கும் செல்லாமல் குடித்துவிட்டு அடிதடி, கட்டப்பஞ்சாயத்து என்று ஊர் சுற்றி கொண்டு இருந்ததாக சொல்லப்படுகிறது.
மேலும் பிரதீப் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதாக சொல்லப்படுகிறது இதன் காரணமாக கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்திருக்கிறது.
ஒரு கட்டத்திற்கு மேல் பிரதீப் செய்யும் அட்டகாசத்தை பொறுக்கமுடியாத நிகிலா கணவனை பிரிந்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தாய் வீட்டிற்கு சென்றிருக்கிறார்.
இதைத் தொடர்ந்து உறவினர்கள் பேச்சுவார்த்தை நடத்தி கடந்த வாரம் நிகிலாவை மீண்டும் கணவருடன் சேர்த்து வைத்தனர்.
இந்த நிலையில் நான்கு நாட்களுக்கு முன் இருவருக்கும் மீண்டும் பிரச்சனை ஏற்பட்டதில், பிரதீப் நிகிலாவை சரமாரியாக தாக்கினார் என சொல்லப்படுகிறது.
இதில் படுகாயம் அடைந்த அவர் சின்னமனூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில்,பிரதீப் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக போடி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
பின்னர் இனிமேல் பிரதீப்புடன் வாழ முடியாது என முடிவு செய்த நிகிலா தனது அண்ணன் மற்றும் சில உறவினர்களுடன் சேர்ந்து பிரதீப் வீட்டில் இருந்த தனக்கு சொந்தமான பொருட்களை எடுக்க சென்றிருக்கின்றனர்.
அப்போது வீட்டு வாசலில் காத்திருந்த பிரதீப் மற்றும் அவரது தந்தை சிவகுமார் நிகிலாவிடம் வாக்குவாதம் செய்திருக்கின்றனர்.
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதை ஆத்திரமடைந்த பிரதீப் மாற்று அவரது தந்தை நிகிலாவின் அண்ணனை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.
இதனை பார்த்து நிகிலா மயங்கிய நிலையில் அவரையும் சரமாரியாக வெட்டியுள்ளனர். படுகாயமடைந்த நிகிலா மற்றும் அவரது அண்ணன் இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.
இதை அறிந்து தந்தையும் மகனும் அப்பகுதியில் இருந்து தப்பி சென்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி ஆதாரங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு பிரதீப் மற்றும் அவரது தந்தை சிவகுமார் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
குடும்பத் தகராறு காரணமாக இளைஞர் மனைவி மற்றும் மைத்துனரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் தேனி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரயிலில் யாசகம் பெற்றுக் கொண்டிருந்த பெண்ணை இளைஞர் ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் இந்தியாவின் பீகார் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
பீகார் மாநிலம் பக்ஷர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் கோலு யாதவ். இவர், அண்மையில் ரயில் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்தார். இதன்போது, அதே பெட்டியில் இளம்பெண் ஒருவர் யாசகம் பெற்றுக் கொண்டிருந்தார்.
யாசகம் பெற்ற பெண்னை பயணிகளில் சிலர் அவரை தவறான நோக்கத்துடன் பார்த்துள்ளனர். சிலர், ஆபாசமான முறையில் பேசியுள்ளனர். இதனால், அந்தப் பெண் மிகவும் தர்மசங்கடமான நிலைக்கு உள்ளாகி, கூனி குறுகியுள்ளார்.
இதைக் கண்ட கோலு யாதவ், பெண்ணின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்குடன், அவரை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். பெண்ணின் பரிதாபமான நிலை, அவரது பின்னணி மற்றும் அவர் சந்தித்த இன்னல்கள் குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.
இதனையடுத்து மகனின் மனிதநேயச் செயலைக் கண்டு நெகிழ்ந்த பெற்றோர், அந்த பெண்ணுக்கு தங்கள் வீட்டில் அடைக்கலம் கொடுக்க சம்மதித்தனர்.
நாட்கள் செல்லச் செல்ல, பெண்ணின் நிலையை முழுமையாக புரிந்து கொண்ட கோலு யாதவ், தனது பெற்றோரின் சம்மதத்துடன் அவரை திருமணம் செய்ய முடிவெடுத்தார்.
இதையடுத்து, சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட இந்தத் தம்பதியின் திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிறது.
‘மனிதநேயம், பச்சாதாபம் மற்றும் விதி ஒன்றாக வருவதற்கான அரிய எடுத்துக்காட்டு’ என்று, கோலு யாதவையும் அவரின் பெற்றோரையும் சமூகவலைத்தளவாசிகள் பாராட்டி வருகின்றனர்.
களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கு பலத்த மின்னல் தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இன்று (13) பிற்பகல் 12.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை இரவு 11.00 மணி வரை செல்லுபடியாகும் என்று தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மின்னல் தாக்கத்தை குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
ஸ்பெயினில் பலமுறை அலுவலகத்துக்கு வேலை நேரத்துக்கு 40 நிமிடங்கள் முன்பாக சென்ற பெண் ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
காலை 7.30 வேலைக்கு 6.45 அல்லது 7 மணிக்கே வருவதை அந்த பெண் வழக்கமாகக் கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது.
இதனால் சம்பந்தப்பட்ட பெண்ணிடம் 19 முறை முன்கூட்டியே வந்தது ஒழுங்கு மீறல் எனக்கூறியும், அவர் தொடர்ந்து வந்ததால் மேலதிகாரி பணியில் இருந்து நீக்கியுள்ளார்.
இதனையடுத்து நீதிமன்றில் அப்பெண் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
சூதாட்டத்தில் தோல்வியடைந்த பின்னர், வெற்றியாளருக்கு பணம் செலுத்துவதற்காக தனது காதலியின் சுமார் இரண்டு மில்லியன் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளைத் திருடிய இளைஞனையும், அதனை வாங்கியவரையும் ஹொரணைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொடகவெல பகுதியை சேர்ந்த 22 வயது இளைஞர் மற்றும் 63 வயதுடைய தங்க வியாபாரி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹொரணை, கனன்விலவைச் சேர்ந்த இளம் பெண்ணுடன் சந்தேக நபர் காதல் தொடர்பில் இருந்து வந்ததாகவும், அவர் அடிக்கடி அவரது வீட்டிற்கு வந்து சென்றதாகவும் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் வீட்டில் இருந்து இரண்டு மில்லியன் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள தங்க நகைகள் காணாமல் போனதாக இளம் பெண்ணின் தந்தை ஹொரணைப் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ததனை தொடர்ந்து விசாரணை தொடங்கப்பட்டது.
அடிக்கடி வீட்டிற்குச் சென்றவர்கள் குறித்து முறைப்பாட்டாளரிடம் விசாரித்தபோது, மகளின் காதலன் பற்றிய தகவல்கள் தெரியவந்தன.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் காதலனே இந்த திருட்டைச் செய்திருப்பது தெரியவந்தது. சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், திருடப்பட்ட தங்க நகைகள் கொடகவெல மற்றும் ஹொரணைப் பகுதிகளில் உள்ள பல அடகுக் கடைகளில் அடகு வைக்கப்பட்டு பணம் பெறப்பட்டதாகத் தெரியவந்தது.
திருடப்பட்ட தங்க நகைகளில் ஒரு தங்க சங்கிலி, காதணிகள், ஒரு வளையல், மோதிரங்கள் மற்றும் ஒரு பென்டன் ஆகியவை அடங்கும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நாட்டில் மழைப் பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, தற்போது பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ள மக்கள் தொடர்ந்தும் அங்கேயே தங்கியிருக்குமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
கனமழை தணிந்திருந்தாலும், 4 மாவட்டங்களில் உள்ள 37 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழையைத் தொடர்ந்து தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் இதுவரை 494 இடங்களை ஆய்வு செய்துள்ளதாக நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
வடகிழக்கு பருவபெயர்ச்சி மழை தீவிரமடைந்ததால், மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை மேலும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
மீகஹகிவுல பகுதியில் கடந்த 10 ஆம் திகதி மண் சரிவு ஏற்பட்டது. மண்சரிவுக்கான அறிகுறிகள் கண்டறியப்பட்ட பின்னர் பதுளை மாவட்டத்தில் உள்ள பல குடும்பங்களை அந்தந்த பகுதிகளிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதற்கிடையில், இரண்டாம் கடத்தின் கீழ் 5 மாவட்டங்களில் உள்ள 34 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதேவேளை முதலாம் கட்டத்தின் 3 மாவட்டங்களில் உள்ள 17 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் மண்சரிவு எச்சரிக்கைகள் வழங்கப்பட்டுள்ளன.
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் இன்று (13.12.2025) பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று(13) காலை வெளியிடப்பட்ட சமீபத்திய வானிலை முன்னறிவிப்பின்படி, நாட்டின் பிற பகுதிகளில் பிற்பகல் 1 மணிக்குப் பிறகு பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும், சில இடங்களில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், திருகோணமலை, அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு சுமார் (30-40) கி.மீ வேகத்தில் மிதமான பலத்த காற்று வீசக்கூடும்.
சப்ரகமுவ, மத்திய மற்றும் தெற்கு மாகாணங்களில் சில இடங்களில் அதிகாலை நேரங்களில் மூடுபனி நிலவக்கூடும்.
இடியுடன் கூடிய மழையுடன் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் அபாயங்களைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களை வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
அரச அதிகாரிகளுக்கு அடுத்த ஆண்டுக்காக 4,000 ரூபாயிற்கு மிகாத விசேட முற்பணத்தை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் அலோக பண்டார வெளியிட்ட சுற்றறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சுற்றறிக்கையின்படி, அரச ஊழியர்களுக்கு 4,000 ரூபாய் வரை சிறப்பு முற்பணம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
சிறப்பு வங்கிக் கடன்கள் அல்லது முன்னர் பெறப்பட்ட சிறப்பு முன்பணங்களுக்கான தவணைகளை திருப்பிச் செலுத்தத் தவறிய எந்தவொரு அரசு அதிகாரிக்கும் இந்தக் கொடுப்பனவு பொருந்தாது என்று சுற்றறிக்கை தெளிவுபடுத்துகிறது.
இந்தக் கொடுப்பனவுகள் அடுத்த வருடம் ஜனவரி 1 முதல் பெப்ரவரி 28 வரை வழங்கப்படும் என கூறப்படுகின்றது.
இந்த தொகை பத்து சமமான மாதாந்திர தவணைகளில் வசூலிக்கப்படும் என்றும், வருடாந்திர வட்டி 8 சதவீதமாக வசூலிக்கப்படும் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டு நிலவரப்படி, தெற்காசியாவில் இலங்கையர்கள் 102 என்ற சராசரி IQ(நுண்ணறிவு)அளவை கொண்டுள்ளனர். இதன்படி, உலகின் மிக உயர்ந்த சராசரி IQ அளவைக் கொண்ட முதல் 12 நாடுகளில் இலங்கையும் ஒன்றாகவும் உள்ளது என்று சர்வதேச IQ தரவுகள் தெரிவிக்கின்றன.
IIQஇன் படி, உலகளாவிய சராசரி IQ நிலை 100 ஆகும், இலங்கையில் இருந்து மொத்தம் 2840 பங்கேற்பாளர்கள் ஒரு நிலையான IQ சோதனையின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டனர்.
இந்தநிலையில் சீனாவே உலகின் மிக உயர்ந்த சராசரி IQ மட்டத்தில் 107 என்ற அளவுடன் சராசரியுடன் முதலிடத்தில் உள்ளது.
2024 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், நல்ல உணவுப் பழக்கம் உள்ள சிறுவர்கள் மற்ற சிறுவர்களை விட அதிக IQவைக் கொண்டுள்ளனர் என்பதைக் காட்டுகிறது.
தொடர்ந்து சதுரங்கம் விளையாடுவது சிறுவர்களின் IQக்களை அதிகரிக்கும் என்று 2022 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்விலும் கண்டறியப்பட்டுள்ளது.
அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட புகலிட விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த இலங்கையின் குடியேறி ஒருவர்,மேற்கு லண்டனில் 15 வயது சிறுமியைக் கடத்தி, துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .
எனினும்,சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டை, குறித்த இலங்கையர் மறுத்துள்ளார் 20 வயதான யாஷின் ஹிமாசார என்ற அவர், ஐல்வொர்த் கிரவுன் நீதிமன்றத்தில் காணொளி இணைப்பு மூலம் முன்னிலையானார்.
இதன்போது, சிங்கள மொழிபெயர்ப்பாளரின் உதவியுடன் சாட்சியம் அளித்த ஹிமாசார, கடத்தல், துஸ்பிரயோகம், சிறுவர் துஸ்பிரயோக செயற்பாடு மற்றும் உள்ளிட்ட ஏழு குற்றச்சாட்டுகளில் தாம் குற்றமற்றவர் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் நவம்பர் 1 ஆம் திகதி மேற்கு லண்டனில் உள்ள ஃபெல்தாமில் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
ஹிமாசார, புகலிடம் கோருபவர்களை தங்க வைக்க அரசாங்கத்தால் பயன்படுத்தப்படும் மூன்று நட்சத்திர வசதியான செயிண்ட் கில்ஸ் விருந்தகத்தில் வசித்து வரும் நிலையிலேயே இந்த குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளார்.
இந்த நிலையில், ஹிமாசாரவை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் மேலதிக விசாரணையை 2026 ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதிக்கு, நீதிபதி ஒத்திவைத்ததாக பிரித்தானிய தகவல்கள் கூறுகின்றன.
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 69 வெளிநாட்டு மதுபான போத்தல்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால், இன்று (13) காலை இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் இன்று (13) அதிகாலை 12.30 மணிக்கு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் EK – 648 மூலம் டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளார்.
இதன்போது கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளுக்கமைய, கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் மினுவங்கொடை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
மேலும் சந்தேகநபர் மற்றும் அவர் சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வந்த விமதுபான போத்தல்களுடன் (12/15 ) திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படவுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமானநிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மேற்கொண்டு வருகிறது.