அண்மையில் இலங்கையை உலுக்கிய கோர விபத்தில் 23 பேர் உயிரிழந்த விபத்துக்கான காரணம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
பேருந்தின் சாரதி ஓய்வின்றி இருந்தமையினால் ஏற்பட்ட நித்திரையே இந்த விபத்துக்கு பிரதான காரணம் என்று விசாரணை அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் கதிர்காமம் போக்குவரத்து சபையினால் அனுபவம் வாய்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களை பயன்படுத்தி பேருந்தை முறையாக சரிசெய்யவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மோட்டார் போக்குவரத்து திணைக்களம் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில், கடைசியாக 2023 ஆம் ஆண்டு பழுதுபார்க்கப்பட்டதாக கூறப்பட்ட போதிலும், பேருந்தின் கம்பிகள் சேதமடைந்திருந்தன,
ஆனால் அவை அகற்றப்படவில்லை மற்றும் புதிய தகடுகள் பயன்படுத்தப்படவில்லை என கூறப்படுகின்றது.
இதனால் விபத்தின் போது பேருந்துக்கு பாரிய பாதிப்புகள் ஏற்பட்டதாக ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. விபத்து நடந்த இடத்தின் இருபுறமும் இரண்டு மரக் கடைகள் கட்ட 2022 ஆம் ஆண்டில் வீதி அபிவிருத்தி அதிகார சபை அனுமதி வழங்கியிருந்தது.
எனினும் குறித்த கடையின் உரிமையாளர்கள், பெரிய மரங்களை வெட்டி தமது வாடிக்கையாளர்களின் வசதிக்காக மண்ணை சமன் செய்துள்ளதாக ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 11ஆம் திகதி சம்பவித்த கோர விபத்தில் 23 பேர் உயிரிழந்த நிலையில் 60 பேர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமைகள் அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதனால், இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக கடுமையான காற்று மற்றும் மின்னல் ஆகியவற்றால் ஏற்படும் ஆபத்துகளை குறைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை எச்சரித்துள்ளது.
இதேவேளை, இன்று (29) மாலை முதல் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழையுடன் கூடிய வானிலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இதேவேளை மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
வடமத்திய மாகாணத்திலும் மன்னார் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக்கூடும். மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு,
வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 50-60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவு பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். நாட்டின் பிற பகுதிகளில் மணிக்கு 30 – 40 கி.மீ வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.
களுத்துறை – புளத்சிங்கள நாகஹதொல் பகுதியில் ஒருவர் தீவைத்து படுகொலைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். படுகொலை செய்யப்பட்ட நபர் மஹிங்கல – பாதுக்கை பகுதியைச் சேர்ந்த அமரசிங்க பந்துல நிஷாந்த என்று பொலிஸார் கூறியுள்ளனர்.
இறந்தவர் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் சாலையின் அருகே முகம் குப்புறக் கிடத்தப்பட்டு, அதன் மீது டயர்கள் பொருத்தப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இறந்தவரின் தலையில் பலத்த வெட்டுக் காயம் இருந்ததாகவும், அவரது தொடையிலிருந்து மார்பு வரை டயர்கள் அவரது உடலில் பொருத்தப்பட்டு எரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இறந்தவருக்குச் சொந்தமான முச்சக்கர வண்டியும், மரணம் நடந்த இடத்திலிருந்து 50 மீட்டர் தொலைவில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விசாரணைகளில் இருந்து, இறந்தவர் இன்று (28) காலை 10.00 மணியளவில் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
குற்றப் புலனாய்வு அதிகாரிகள் வந்து சம்பவம் குறித்து விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர், மேலும் மத்துகம நீதவான் சம்பவ இடத்தில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் மிஸ்ரோட் பகுதியில் ராயல் பாம் வில்லா எனும் குடியிருப்பில் வசித்து வருபவர் ரிஷிராஜ் பட்நாகர்.
51 வயதாகும் இவர் தனது 8 வயது மகன் லிப்டில் சிக்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, மாரடைப்பால் உயிரிழந்தார். இவர் அந்த குடியிருப்பில் தனது மனைவி மற்றும் 2 மகன்களுடன் வசித்து வந்தார்.
ரிஷிராஜ் தனது இளைய மகன் தேவன்ஷுடன் புல்வெளியில் விளையாடிவிட்டு வீட்டிற்கு வருவதற்காக தேவன்ஷ் லிப்டில் ஏறியவுடன் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் மகன் கண்முன்னே லிப்டில் சிக்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் ரிஷிராஜ்.
உடனடியாக ஜெனரேட்டர் அறைக்குச் செல்வதற்குள், திடீரென மயங்கி விழுந்து விட்டார். அதே நேரத்தில், மின்சாரம் வந்ததால் லிப்ட் கதவு திறந்து, தேவன்ஷ் பத்திரமாக வெளியே வந்து விட்டான்.
உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்த போதும், ரிஷிராஜ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். திடீர் மாரடைப்பே மரணத்துக்கான காரணம் என மருத்துவர்கள் கூறினர்.
மகனின் லிப்ட்டில் சிக்கியதால் அதிர்ச்சி காரணமாகவே இந்த சம்பவம் நடந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மகனின் பாதுகாப்பை நினைத்து தந்தை உயிரிழந்தது அந்தப்பகுதியில் வசித்தவர்களை கண்களில் கண்ணீர் வரவழைத்தது.
பெண் டாக்டர் முகத்தில் எச்சில் துப்பிய ஆத்திரத்தில் மனவளர்ச்சி குன்றிய வாலிபரை நிர்வாணப்படுத்தி மிளகாய் பொடியை உடலில் தூவி, எறும்புகளை கடிக்க வைத்து 2 நாள் கொடுமைபடுத்திய 11 பேர் கும்பல் பின்னர் கிரிக்கெட் பேட்டால் சரமாரியாக தாக்கி கொன்றது குறித்து பகீர் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
கோவை சோமனூர் அருகே உள்ள மாதப்பூரை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மகன் வருண்காந்த் (22). இவர், மனவளர்ச்சி குன்றியவர். இதற்காக பொள்ளாச்சி அருகே உள்ள மனநல காப்பகத்தில் அவரை சிகிச்சைக்காக சேர்த்திருந்தனர்.
இந்நிலையில், வருண்காந்த் மாயமானதாக, அவருடைய பெற்றோருக்கு காப்பகத்தில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து ரவிக்குமார் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து வருண்காந்தை தேடி வந்தனர்.
இந்நிலையில் காப்பக நிர்வாகிகள் வருண்குமாரை அடித்துக் கொன்று நடுப்புணி அருகே உள்ள பி.நாகூரில் உள்ள தோட்டத்தில் குழிதோண்டி புதைத்தது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து கடந்த 24ம் தேதி வருண்காந்த் சடலத்தை போலீசார் தோண்டி எடுத்தனர். கொலையாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதில் காப்பக நிர்வாகி கிரிராம் (36), நிர்வாகி சாஜியின் தந்தை செந்தில்பாபு (55), காப்பாளர்கள் ரித்தீஷ் (26), சதீஷ் (25), ஷீலா (27), பணியாளர் ரங்கநாயகி (32) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.
முக்கிய குற்றவாளிகளான சாஜி (32), டாக்டர் கவிதா (52), கவிதாவின் கணவர் லட்சுமணன் (56), மகள்கள் ஸ்ருதி (24), ஸ்ரேயா (26) ஆகிய 5 பேரை 10 நாட்களுக்கு பின்னர் தனிப்படை போலீசார் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கைது செய்தனர்.
மகாலிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 11 பேர் மீதும் கொலை செய்தது, கொலையை மறைத்தது, கூட்டு சதி, தடயங்களை அழித்தது என 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
போலீசாரிடம் கைதானவர்கள் அளித்த வாக்குமூலம்:
கடந்த பிப்ரவரி மாதம் 5ம் தேதி வருண்காந்தை அவரது பெற்றோர் எங்களது காப்பகத்தில் அனுமதித்தனர்.
வருண்காந்த் எங்களது பேச்சை கேட்காமல் அதிகமாக கோபப்பட்டார். காப்பக நிர்வாகி டாக்டர் கவிதா முகத்தில் எச்சில் துப்பினார்.
இதனால் கடந்த 9ம் தேதி அங்குள்ளவர்களை மேட்டுப்பாளையத்திற்கு சுற்றுலா அழைத்துச்சென்றபோது வருண்காந்த்தை மட்டும் காப்பகத்திலேயே விட்டு சென்றோம்.
இதேபோல் ஒரு பிறந்தநாள் விழாவிற்கும் வருண்காந்தை விட்டுவிட்டு மற்ற குழந்தைகளை அழைத்துச்சென்றோம்.
இதனால் வருண்காந்த் ஆத்திரமடைந்து, எங்களை பார்த்து கூச்சல் போட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த நாங்கள் அவரை பயங்கரமாக தாக்கினோம். இதன் பின்னர் அவர் சரிவர சாப்பிடவில்லை.
இதன்பின்னர் அவரை அரை நிர்வாணமாக்கி உடலில் சர்க்கரையை தூவி எறும்பை விட்டு கடிக்க செய்து, மிளகாய்களை வாயில் திணித்து, கிரிக்கெட் பேட் மற்றும் ஸ்டெம்பால் தாக்கினோம்.
இதில் மயங்கி விழுந்த வருண்காந்த் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து இந்த சம்பவத்தை வெளியில் சொல்லக் கூடாது என்று ஊழியர்களை மிரட்டினோம். அவர்களது செல்போனை வாங்கி சுவிட்ச்-ஆப் செய்து வைத்துக் கொண்டோம்.
கொலையை மறைப்பதற்காக, அவரது உடலை காரில் ஏற்றி நடுப்பணியில் உள்ள கவிதாவின் தோட்டத்திற்கு கொண்டு சென்று அங்கு குழிதோண்டி புதைத்து, அதன்மேல் செடிகளை நட்டுவித்தோம்.
இதையடுத்து கொலை சம்பவத்தை மறைக்க வருண்காந்தை ஆழியாருக்கு அழைத்து சென்றதாகவும், அங்கு காணாமல் போனதாகவும் நாடகமாடினோம். ஆனால் போலீசார் விசாரணையில் கண்டுபிடித்து விட்டனர். இவ்வாறு அவர்கள் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் கூறினர்.
கிளீன் சிறீலங்கா என்னும் வேலைத்திட்டத்திற்கமைய பேருந்துகள் மற்றும் முச்சக்கரவண்டிகள் குறித்து சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி பேருந்துகள் மற்றும் முச்சக்கரவண்டிகளில் மேலதிகமாக பொருத்தப்படும் அலங்கார பொருட்களை அகற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் அவற்றை அகற்றாவிடின் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் பொலிஸ் திணைக்களம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் வவுனியா மாவட்டத்தில் மோட்டார் திணைக்கள பிரதான பரிட்சையாளர் ஆர்.எம்.என்.கே.ராஜகுரு தலைமையில் வவுனியா பொலிஸ் நிலைய மற்றும் மாவட்ட பிரிவு போக்குவரத்து பொலிஸாரினால் திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
குறித்த செயற்பாடானது வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் ஏ9 வீதியில் இன்று காலை 10.30 மணி தொடக்கம் மதியம் 1.30 மணி வரை முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன் போது அரச மற்றும் தனியார் பேரூந்துகள், அதிவேக மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கரவண்டிகள் என்பன சோதனைக்குட்படுத்தப்பட்டன.
அவற்றில் மேலதிக பாகங்கள் பொருத்தியமை, வழுக்கையான ரயர்கள், லைட் மற்றும் வைசர் வேலை செய்யாமை, அதிக ஒலி எழுப்பும் கோன், விபத்தினை ஏற்படுத்தும் வகையிலான பாகங்கள் பொருத்தியமை, வர்ணம் மாற்றிய மோட்டார் சைக்கிள்,
வாகன இலக்கத்தகடு தெரியாத வண்ணம் இருந்தமை போன்ற பல்வேறு குற்றங்களுக்காக ஒர் முச்சக்கரவண்டி சாரதி, ஒர் மோட்டார் சைக்கில் சாரதி, 11 பேரூந்து சாரதிகள் என 13 வாகன சாரதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டன.
மேலும் இவ்வாறான திடீர் சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்பதுடன் வாகன சாரதிகள் மேலதிக பாகங்கள் பொருத்துவதை தவிர்ப்பதுடன் வாகனங்களில் டயர் மற்றும் லைட் , பிரேக் போன்றவற்றில் அவதானம் செலுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வவுனியாவில் கடந்த சில வாரங்களாக முன்னறிவித்தலின்றி நிறுத்தப்படும் மின்சார விநியோகத்தால் தாங்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்வதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு மின்சாரத்தை நிறுத்துவதாகவிருந்தால் முன்கூட்டியே அறிவித்தல் வழங்கும் பட்சத்தில் மாற்று ஏற்பாடுகளை செய்யக்கூடியதாக இருக்குமெனவும் மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
வர்த்தக நிலையங்களை உள்ளடக்கிய பகுதிகளில் மின்சாரத் தடை ஏற்பட்டமையினால் வர்த்தகர்கள் பெரும் இடையூறுகளுக்கு முகம் கொடுத்தனர்.
அத்துடன் திடீரென மின்சாரம் அதிகரித்து வருவதால் வீடு மற்றும் வர்த்தக நிலையங்களிலுள்ள இலத்திரனியல் சாதனங்களும் பழுதடைவதாக மக்கள் தெரிவித்தனர்.
தற்போது மின் பட்டியல் அனுப்பப்படாமல் தொலைபேசி இலக்கத்திற்கே மின் கட்டண அறிவித்தல் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மின் பட்டியலை வழங்கி சில நாட்களிலேயே முன் அறிவிப்பும் இன்றி மின்சாரசபையினர் மின்சாரத்தை துண்டித்துச் செல்வதாகவும் மேலும் பிந்திய கட்டணம் என பட்டியலுக்கு மேலதிக கட்டணம் அறவிடும் மின்சாரசபையினர் தடங்களற்ற மின்சாரத்தினை வழங்க வேண்டிய முக்கிய பொருப்பினையும் ஏற்க வேண்டும் என பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
வவுனியாவில் இன்றும் பல்வேறு பகுதிகளில் பலதடவைகள் மின்சாரம் துண்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி தேர்தலின் போது விளையாட்டு சங்கங்களுக்கு விநியோகிக்க கரம் (Carrom) மற்றும் தாம் (Checkers/Daam) விளையாட்டு பலகைகள் இறக்குமதி செய்ததில் அரசுக்கு கோடிக்கணக்கான நஷ்டத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் விளையாட்டு அமைச்சர் மகிந்தானந்த அழுத்கமகே மற்றும் சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நலின் பெர்னாண்டோ ஆகியோர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றம் இன்றைய தினம் இந்தத் தீர்ப்பினை வழங்கியுள்ளது. அதன்படி, முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அழுத்கமகேக்கு 20 ஆண்டுகள் கடுமையான சிறைத்தண்டனையும், முன்னாள் சதொச தலைவர் நலின் பெர்னாண்டோக்கு 25 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
இக்குற்றச்சாட்டுகள் தொடர்பில், இலங்கை லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, 2019ஆம் ஆண்டு நிலையான மூவரடங்கிய விசாரணை நீதிமன்றத்தில் (Permanent High Court Trial-at-Bar) வழக்கை தொடர்ந்தது.
இதில், 2015 ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் அரச நிதியை தவறாக பயன்படுத்தி 53 மில்லியன் ரூபாவிற்கு மேற்பட்ட நஷ்டத்தை அரசுக்கு ஏற்படுத்தியதாக இருவரும் குற்றம் சுமத்தப்பட்டனர்.
அவர்கள், அரசின் பணத்தை பயன்படுத்தி சதொச ஊடாக பெருமளவில் கரம் மற்றும் தாம் பலகைகள் இறக்குமதி செய்து, அவற்றை விளையாட்டு சங்கங்களுக்கு விநியோகித்தனர் என வழக்கில் கூறப்பட்டுள்ளது. இது தேர்தல் அரசியல் நோக்கங்களுக்காக நடைபெற்றது என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
நீண்ட நாள் விசாரணைகளின் பின்னர், மேல் நீதிமன்றம் இருவரும் அரச நிதி முறைகேடு மற்றும் அதிகாரப் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதைக் கண்டறிந்து, குற்றவாளிகள் என அறிவித்தது இந்த தண்டனையை விதித்துள்ளது.
குருணாகல் – புத்தளம் வீதியில் பாதெனிய சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று செவ்வாய்க்கிழமை (27.05) பிற்பகல் 03.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் ஒன்று முன்னால் பயணித்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. அநுராதபுரத்திலிருந்து குருணாகல் நோக்கிப் பயணித்த கார் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
காரின் சாரதி உறங்கியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தின் போது நான்கு பேர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வாரியப்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கொழும்பு செட்டியார்தெருவில் கடந்த அட்சயதிருதியை வரை வரலாறு காணாத அதிகரிப்பை பதிவு செய்து வந்த தங்கத்தின் விலையானது தற்போது தலைகீழ் போக்கை பதிவு செய்து வருகிறது.
கொழும்பு செட்டியார் தெருவின் தங்க நிலவரப்படி நாளுக்கு நாள் தங்கத்தின் விலை குறைவடையும் போக்கு காணப்படுகிறது.
தங்க பவுணின் விலை
இந்த நிலையில் இன்றைய தங்க விலை நிலவரப்படி 24 கரட் தங்க பவுண் ஒன்று 263,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்க பவுண் ஒன்று 241,500 ரூபாவாகவும், 18 கரட் தங்கம் பவுண் ஒன்று 197,500 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் தங்கத்தின் விலை
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 32,875 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 30,188 ரூபாவாகவும், 18 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 24,688 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை பொதுமக்களின் வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளது.
காற்று மற்றும் பலத்த மழையின் விளைவாக மரங்கள் வீழ்ந்து மண் மேடுகள் சரிந்து பல முக்கிய வீதிகளில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளன.
நேற்று ஹட்டன் செனன் தோட்டத்திற்கு அருகில் உள்ள ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் பல பெரிய மரங்கள் வீழ்ந்து, போக்குவரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தின.
ஹட்டன்-பொகவந்தலாவ வீதியிலும் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து தடைப்பட்டது. வனராஜா பெருந்தோட்டத்தில் உள்ள வீடுகளின் மீது ஒரு பெரிய மா மரம் வீழ்ந்ததில் மூன்று வீடுகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
ஹட்டன், நோர்வுட், கொட்டகலை மற்றும் நோர்டன் ஆகிய இடங்களில் உள்ள பிரதான மின்சார இணைப்புகள் சேதமடைந்துள்ளன.
பண்டாரவளையில் உள்ள வேவதென்னவில் உள்ள ஒரு தேவாலயத்தின் மீது ஒரு மரம் விழுந்ததில் கட்டடத்திற்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. எனினும், யாருக்கும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை.
இதற்கிடையில், இலங்கையின் இன்றைய வானிலை குறித்து வானிலை மையம் தகவல்களை வெளியிட்டுள்ளது.
மன்னாரிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடற்கரைப் பகுதிகளில் 2.5 மீட்டர் முதல் 3 மீட்டர் வரை உயரமான அலைகள் எழும்பக்கூடும் என்று திணைக்களம் எதிர்வை வெளியிட்டுள்ளது.
எனவே, சிலாபம் முதல் புத்தளம் மற்றும் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடல் பகுதிகளுக்கு,
மறு அறிவிப்பு வரும் வரை செல்ல வேண்டாம் என்று கடற்படை மற்றும் கடற்றொழிலாளர் சமூகங்களுக்கு வானிலை ஆய்வுத் மையம் அறிவுறுத்தியுள்ளது.
இலங்கையின் சந்தையில் கிடைக்கும், மனிதனுக்கு ஆபத்தான பல்வேறு தோல் பூச்சுக்கள்(கிரீம்கள்)மற்றும் விசிறல்கள் (லோசன்கள்) தொடர்பில் எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
இந்த தோல் கிரீம்கள் மற்றும் லோசன்களில் ஆபத்தான அளவில் அதிக அளவு கன உலோகங்கள் இருப்பது ஆய்வக சோதனைகளில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து நுகர்வோர் விவகார ஆணையகம், இது தொடர்பில் ஒரு பொது எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அத்துடன் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய தயாரிப்புகளையும், அவற்றின் முத்திரைப் பெயர்களின் பட்டியலையும், அனுமதிக்கப்பட்ட உலோக செறிவுகளைக் கோடிட்டுக் காட்டும் வர்த்தமானியின் நகலையும் அதிகாரசபை வெளியிட்டுள்ளது.
எனவே அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பு வரம்புகளை மீறும் கிரீம்கள் மற்றும் லோசன்களை வாங்கவோ பயன்படுத்தவோ கூடாது என்று நுகர்வோர் கடுமையாக அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அநுராதபுரத்தில் வீசிய பலத்த காற்று காரணமாக திஸ்ஸ வாவிக்கு அருகில் உள்ள வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று வாவிக்குள் தூக்கி வீசப்பட்டுள்ளது.
இந்த விபத்து நேற்று (27) இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து பிரதேசவாசிகள் மற்றும் பொலிஸ் உயிர்காப்பு பிரிவினர் இணைந்து முச்சக்கரவண்டியை மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.
அதேவேளை நாட்டை சூழவுள்ள பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் எச்சரிக்கை விடுத்து இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு அறிவித்தலை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டை சூழவுள்ள பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் எச்சரிக்கை விடுத்து இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு அறிவித்தலை விடுத்துள்ளது.
சிலாபம் முதல் புத்தளம் மற்றும் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், காலி முதல் புத்தளம் மற்றும் மன்னார் வழியாக ஹம்பாந்தோட்டை வரையிலும்
உள்ள கடற்கரைக்கு அப்பால் உள்ள கடல் பகுதிகளுக்கு இந்த எச்சரிக்கை இன்று (28) பிற்பகல் 12.30 மணி முதல் நாளை (29) பிற்பகல் 12.30 மணி வரை செல்லுபடியாகும் என்று திணைக்களம் அறிவித்துள்ளது.
தென்மேற்குப் பருவமழையின் தாக்கம் காரணமாக, சிலாபம் முதல் புத்தளம் மற்றும் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும்,
காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்கரைக்கு அப்பால் உள்ள கடல் பகுதிகளில் காற்றின் வேகம் சில நேரங்களில் மணிக்கு 60-70 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும்.
இந்தக் கடல் பகுதிகள் சில நேரங்களில் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும். சிலாபம் முதல் கொழும்பு வழியாக காலி வரையிலும்,
காங்கேசன்துறை முதல் முல்லைத்தீவு வழியாக திருகோணமலை வரையிலும் உள்ள கடற்கரைக்கு அப்பால் உள்ள கடல் பகுதிகளில் காற்றின் வேகம் சில நேரங்களில் மணிக்கு 50-60 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும் என்றும்,
அந்தக் கடல் பகுதிகள் சில நேரங்களில் கொந்தளிப்பாகக் கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே, அந்தக் கடல் பகுதிகள் குறித்து மீன்பிடி மற்றும் கடல்சார் சமூகத்தினர் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மன்னார் முதல் புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலான கடற்கரைக்கு அப்பால் உள்ள கடல் பகுதிகளில் அலைகளின் உயரம் சுமார் 2.5 – 3.0 மீட்டர் வரை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
மன்னார் முதல் புத்தளம், கொழும்பு ஊடாக காலி வரையான கடலோரப் பகுதிகளில் கடல் அலைகள் நிலத்தை அடையும் வாய்ப்பும் உள்ளது.
எனவே மறு அறிவிப்பு வரும் வரை இந்தக் கடல் பகுதிகளுக்குள் செல்ல வேண்டாம் என மீன்பிடி மற்றும் கடல்சார் சமூகத்தினருக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த ஈஞ்சம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் பொழுதுபோக்கு மையத்தில் ராட்சத ராட்டினம் 120 அடி உயரத்துக்கு சென்ற நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக நின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
120 அடி உயரத்தில், அந்தரத்தில் தொங்கிய பொதுமக்கள் அச்சத்தில் கூச்சலிட்ட நிலையில் கீழே நின்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த ராட்டினம் செங்குத்தாக மேலே சென்று கீழே இறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நேற்று (27.05) மாலை 7 மணி அளவில் சுமார் 30 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் அந்த ராட்சத ராட்டினத்தில் ஏறி இருந்தனர். ராட்சத ராட்டினம் சுமார் 120 அடி உயரத்துக்கு சென்ற நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக மேலேயே நின்று விட்டது.
இதையடுத்து தொழில்நுட்ப கோளறாரை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இருப்பினும் அந்தரத்தில் தொங்கியவர்களில் சிலர், நடந்த சம்பவம் குறித்து தங்களது தொலைபேசி மூலம் பொலிஸாருக்கும், தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் அளித்தனர்.
தகவல் அறிந்ததும் நீலாங்கரை பொலிஸாரும், துரைப்பாக்கம், கிண்டி, நீலாங்கரை தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் ராட்சத ராட்டினத்தில் அந்தரத்தில் தொங்கிக்கொண்டு இருந்தவர்களை ‘பிராண்டோ லிப்ட்’ மூலமாக மீட்டனர்.
3 மணி நேரத்துக்கு பின்னர் அவர்கள் கீழே வந்ததும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தனியார் பொழுதுபோக்கு நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு நீலாங்கரை காவல்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
மேலும் , பொழுதுபோக்கு மையத்தை தற்காலிகமாக மூட அதன் நிர்வாகத்திற்கு காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.
மோட்டார் சைக்கிளின் முன் சக்கரத்தை உயர்த்தி ஒரு சக்கரத்தில் வீதியில் சாகசப் பயணம் செய்த இளைஞனுக்கு குளியாப்பிட்டி நீதவான் ரண்டிக லக்மால் ஜெயலத் ரூபா 55,000 அபராதம் விதித்து கடுமையான கண்டனம் தெரிவித்தார்.
இளைஞனுக்கு எதிராக பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தல், காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரம் வைத்திருத்தல்,
இலக்கத்தகடுகள் மற்றும் பக்கக் கண்ணாடிகள் சரியாக பொருத்தப்படாமல் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவித்தல் உள்ளிட்ட ஐந்து குற்றச்சாட்டுகளின் கீழ் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.
குளியாப்பிட்டி கனதுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபரான தசுன் ஷெவந்தா என்ற இளைஞன் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.
சந்தேகநபர் தனது மோட்டார் சைக்கிளை ஒரே சக்கரத்தில் ஓட்டி, பெரும் சத்தத்தை ஏற்படுத்தி பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாக குளியாப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பிரதம பரிசோதகர் கமல் ரத்நாயக்க நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த வகையில் ஒரு சக்கரத்தில் சவாரி செய்வது பாதசாரிகள் மற்றும் சவாரி செய்பவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் அவர் கூறினார்.
இதேபோன்ற குற்றங்களில் ஈடுபடும் மற்ற இளைஞர்களுக்கு ஒரு செய்தியாக இருக்கும் வகையில் தண்டனை விதிக்குமாறு அவர் கேட்டுக்கொண்ட நிலையில், நீதிமன்றம் இளைஞனுக்கு அபராதம் வித்துள்ளது.