30 ஆண்டுகளாக என்ஜின் ஒயிலை குடித்து உயிர் வாழும் நபர்!!

இந்தியர் ஒருவர் 30 ஆண்டுகளாக என்ஜின் ஆயிலை குடித்து உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இந்திய மாநிலமான கர்நாடகாவில் உள்ள மனிதர் ஒருவரின் உணவுப் பழக்கம் பலரையும் திகைக்க வைத்துள்ளது. சாதம் அல்லது சப்பாத்தி போன்ற வழக்கமான உணவுகளுக்குப் பதிலாக, அவர் என்ஜின் ஆயிலை குடித்து உயிர் வாழ்கிறார்.

கர்நாடகாவின் சிவமோகாவைச் சேர்ந்த “ஆயில் குமார்” என்று பிரபலமாக அறியப்படும் ஒருவர், ஒவ்வொரு நாளும் ஏழு முதல் எட்டு லிட்டர் எஞ்சின் எண்ணெயைக் குடிப்பதாகக் கூறப்படுகிறது.

இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் ஒரு துறவியைப் போல உடையணிந்த “ஆயில் குமார்” ஒரு பாட்டிலில் உள்ள என்ஜின் எண்ணெயைக் குடிப்பது காணப்படுகிறது.

இவர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கமான உணவு முறையைத் தவிர்த்து, தேநீர் மற்றும் என்ஜின் எண்ணெயை குடித்து உயிர் பிழைத்துள்ளார்.

இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் மருத்துவமனைகளுக்குச் செல்லாமல் அவர் தொடர்ந்து ஆரோக்கியமாகவும் வலுவாகவும் இருப்பது மருத்துவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐயப்பனின் ஆசீர்வாதத்தால் மட்டுமே இந்த வாழ்க்கை முறை சாத்தியமாகும் என்று நம்புகிறார் குமார்.

ஆனால் என்ஜின் ஆயிலை தொடர்ந்து குடித்து வந்தாலோ சுவாசித்​தாலோ சுவாச மண்டல பாதிப்​பும் வயிற்று போக்​கும் ஏற்​படும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்துவோருக்கு வெளியான தகவல்!!

வரவு மற்றும் கடனட்டைகள் மூலம் பணம் செலுத்தும் போது அறவிடப்படும் மேலதிக கட்டணங்களை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்காக நிதி அமைச்சு, இலங்கை மத்திய வங்கி மற்றும் உள்நாட்டு இறைவரி திணைக்களம் ஆகியவற்றுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாக அந்த அமைச்சு உறுதிப்படுத்தியது.

அட்டைமூலம் பணம் செலுத்தும்போது நுகர்வோர் ஏற்படுத்தும் இழப்புகளை அரசாங்கம் ஈடுசெய்யும் வழிகள் குறித்தும் இந்த கலந்துரையாடல்களில் கவனம் செலுத்தப்பட்டன.

இதேவேளை, எதிர்காலத்தில், அனைத்து பரிவர்த்தனைகளும் படிப்படியாக கைபேசி வழியாக QR குறியீடு அடிப்படையிலான கட்டணங்களுக்கு மாறும் என்று அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

பலாலி விமான நிலையத்தில் தங்கத்துடன் சிக்கிய கொழும்புப் பெண்!!

யாழ் (Jaffna) பலாலி விமான நிலையம் உடலில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்திய பெண் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கொழும்பை சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு தங்கத்தை கடத்தி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

விசாரணை

குறித்த பெண் இந்தியாவில் இருந்து தங்கத்தை கடத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. இந்தநிலையில், யாழ். பலாலி விமான நிலைய அதிகாரிகளின் சோதனையில் ஈடுபட்டபோது தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.

தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்ட பெண் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு சிகிச்சையளிக்கப்பட்ட பின் கடத்தப்பட்ட தங்கத்தை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வீடொன்றுக்குள் இரண்டு சடலங்கள் மீட்பு : மற்றுமொருவரும் மர்மமான முறையில் மரணம்!!

தங்காலை, சீனிமோதர பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வந்த வீட்டில் இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

விசாரணையின் போது, ​​வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு லொரியில் ஐஸ் போதைப்பொருள் அடங்கிய 10 பக்கெட்டுகளையும் கண்டுபிடித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை வீட்டில் இருந்த மற்றொரு நபர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக தங்காலை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும் அவரும் அங்கு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து அரச தடயவியல் நிபுணர் பிரேத பரிசோதனை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

34 ஆண்டுகளின் பின் நாடற்றவர் என முத்திரை குத்தப்பட்ட இலங்கையர்!!

இலங்கை பெற்றோருக்கு, இந்தியாவில் பிறந்து வளர்ந்து, 34 ஆண்டுகளுக்குப் பிறகு ‘நாடற்றவர்’ என அறிவிக்கப்பட்ட ஒருவர், நீதிக்கோரி சென்னை மேல் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

இந்தநிலையில், மத்திய அரசும், தமிழக அரசும் குறித்த மனுதாரருக்கு எதிராக கட்டாய நடவடிக்கை எடுப்பதைத் தடுக்கும் உத்தரவை நீதிபதி எம். தண்டபாணி பிறப்பித்துள்ளார்.

அத்துடன் அவரின் குடியுரிமை விண்ணப்பத்தின் நிலையை அறிவிக்குமாறும் நீதிபதி எம். தண்டபாணி உத்தரவிட்டுள்ளார். ராமாபுரத்தைச் சேர்ந்த ஆர். பாஹிசன், என்பவரே ஆட்சியர் அலுவலகத்தால் ‘நாடற்றவர்’ என்று முத்திரை குத்தப்பட்டுள்ளார்.

குறித்த இலங்கையர் இந்திய கடவுச்சீட்டு, ஆதார் அட்டை, பான் அட்டை, ரேசன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பலவற்றை வைத்திருந்தாலும் திருச்சியில் உள்ள ஒரு சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்படும் அச்சுறுத்தலை அவர் எதிர்கொள்கிறார்.

இந்தநிலையிலேயே பாதிக்கப்பட்டவர் நீதிகோரி சென்னை நீதிமன்றை நாடியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பிறந்தநாளில் லொறி மோதி இளைஞன் பலி : துயரத்தில் உறவுகள்!!

உடப்புசல்லாவ – நுவரெலியா பிரதான வீதியில் ஹவேலியா சந்தியில் நேற்று (21) இரவு மோட்டார் சைக்கிள் மீது லொறி மோதியதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர் ஹவேலியா பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் ஆவார்.

இந்த விபத்து ராகலை பகுதியில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த லொறி ஒன்று எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இடம்பெற்றுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின்போது மோட்டார் சைக்கிளை செலுத்திய இளைஞன் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன் பின்னர் இன்று (22) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பில் சந்தேகத்தின் பேரில் லொறியின் சாரதியை கைது செய்துள்ளதாக மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும் நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர் .

அதேவேளை உயிரிழந்த இளைஞனின் பிறநத நாள் இன்று என கூறப்படும் நிலையில் இளைஞனின் மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

2025 ஆண்டுக்கான 2வது சூரிய கிரகணம்!!

2025 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது சூரிய கிரகணம் இன்றைய தினம் செப்டம்பர் 21 ஞாயிற்றுக்கிழமை அமாவாசை நாளில் நடைபெறவுள்ளது.

இன்று சர்வ பித்ரு அமாவாசை, நாளை நவராத்திரி பண்டிகை ஆரம்பமாகிறது. சூரிய கிரகணம் இலங்கை நேரப்படி, இன்று இரவு 11.00 மணி முதல் அதிகாலை 3.23 மணி வரை இருக்கும். இரவில் நடப்பதால் இலங்கை, இந்தியாவில் தெரியவதற்கு வாய்ப்பு இல்லை.

மேலும், இன்று ஆரம்பமாகும் சூரிய கிரகணம் தெற்கு பசிபிக் பெருங்கடல், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, இந்தியப் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், தென் பெருங்கடல், பாலினீசியா, மெலனேசியா, நோர்போக் தீவு, கிறைஸ்ட்சர்ச், வெலிங்டன் போன்ற நாடுகளில் இருந்து பார்க்கலாம்.

இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் சில நாடுகளில் சூரியன் 80% வரை மறைந்து, பகல் நேரம் திடீரென இருள் சூழ்ந்திருக்கும். சூரிய கிரகணம் நிகழும் இடங்களில் இருந்து பார்ப்பவர்கள் நேரடியாக பார்ப்பதை தவிர்க்கவும்.

விசேஷ கிரகணக் கண்ணாடிகள் (Eclipse Glasses) அல்லது பாதுகாப்பான தொலைநோக்கிகள் மூலம் மாத்திரமே பார்க்க முடியும். இதனை தவறும் பட்சத்தில் கண்களுக்க பாதிப்பு வரலாம்.

யாழில் மதிலின் மீது ஏறிய முச்சக்கரவண்டி : சாரதிக்கு நேர்ந்த கதி!!

யாழ்ப்பாணம் – ஆனைக்கோட்டை பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று நேற்று முன்தினம் (20.09.2025) விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த முச்சக்கரவண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து, மதில் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது முச்சக்கரவண்டியில் சாரதி மாத்திரமே அதில் பயணித்துள்ளதோடு, அவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியாவில் பெண்ணின் மரணத்திற்கு காரணமான வாகனம் பொலிசாரால் மீட்பு : இருவர் கைது!!

கனகராயன்குளம் பகுதியில் பெண் ஒருவரை மோதிக்கொன்றுவிட்டு தப்பிச்சென்றிருந்த வாகனம் வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாரால் நேற்று (20.09) மீட்கப்பட்டதுடன் இருவர் கைதுசெய்யப்பட்டனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், கனகராயன்குளம் பகுதியை சேர்ந்த குடும்பபெண் ஒருவர் கடந்த 16ஆம் திகதி இரவு கணவருடன் ஏற்ப்பட்ட முரண்பாட்டைத் தொடர்ந்து கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கச் சென்றுள்ளார்.

இதன்போது எ9 வீதியில் வைத்து வாகனம் ஒன்று அவரை மோதியதில் படுகாயமடைந்த அவர் உயிரிழந்துள்ளார். விபத்தை ஏற்படுத்திய வாகனம் நிறுத்தாமல் அங்கிருந்து தப்பிச்சென்றிருந்தது.

சம்பவத்தில் அந்தபகுதியை சேர்ந்த ம.இதயரஞ்சினி என்ற 32 வயதான நான்கு பிள்ளைகளின் தாயே உயிரிழந்திருந்தார்.

இது தொடர்பாக வவுனியாமாவட்ட குற்றத்தடுப்பு பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர். இதனையடுத்து விபத்தை ஏற்ப்படுத்திய வாகனத்தையும் அதன்சாரதி,மற்றும் உரிமையாளர் ஆகியோர் விசுவமடு பகுதியில் வைத்து வவுனியா குற்றத்தடுப்பு பொலிசாரால் கைதுசெய்யப்பட்டனர்.

வாகனத்தின் நிறம் உட்பட ஏனைய அமைப்புக்களை மாற்றியமைக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

குறித்த கைது நடவடிக்கை வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி சிரேஸ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயதிலக்க மற்றும் பொலிஸ் பரிசோதகர் ராஜபக்ச தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டது.

உலகில் வேறு எங்கும் கண்டதில்லை : வெளிநாட்டு தம்பதியால் பெருமைகொள்ளும் இலங்கை!!

இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்ட வெளிநாட்டு தம்பதியினர் தமது சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள புகைப்படமொன்று தற்போது வைரலாகி வருகிறது.

இந்தப் புகைப்படத்தில் அவர்களுக்கு பின்னர் காணப்படும் வீதி சமிக்ஞையில் முன்னால் யானைகள் வரும் பாதை என விளக்கமளிக்கும் குறியீடு உள்ளது.

இந்நிலையில் இதுபோன்ற குறியீட்டை நாம் உலகில் வேறு எங்கும் கண்டதில்லை என வெளிநாட்டு தம்பதி பதிவிட்டுள்ளனர்.

இலங்கை , இந்தியா , தாய்வான் உள்ளிட்ட பெரும்பாலான ஆசிய நாடுகளில் யானைகளை புனிதமானதாக கருதப்படும் வழங்கம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

பேரூந்து – லொறி நேருக்கு நேர் மோதி விபத்து!!

நுவரெலியா – இராகலை பிரதான வீதியில் புரூக்சைட் சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று சனிக்கிழமை (20) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தனியார் பஸ் ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது லொறியின் சாரதி காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வெளிநாடொன்றில் அட்டகாசம் செய்த இலங்கையர்கள் – பெண் உட்பட 8 பேர் நாடு கடத்தல்…….!!

இஸ்ரேலுக்கு கட்டுமான பணிகளுக்காக சென்று வேலைக்கு செல்லாமல் பல்வேறு இடங்களில் அலைந்து திரிந்த நிலையில் சமூக ஊடகங்களில் விவாதத்திற்கு உள்ளான இலங்கையர் ஒருவரை நாட்டிற்கு திருப்பி அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அவரது மன மற்றும் உடல் நிலை சரியில்லாததால், அவரை மீண்டும் அழைத்து வருவதற்காக தூதரகத்தின் தொழிலாளர் நலப் பிரிவை சேர்ந்த ஒரு அதிகாரியும் அவருடன் கொழும்புக்கு சென்றதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, இலங்கைக்கு செல்ல நேற்று காலை டெல் அவிவ் விமான நிலையத்திற்கு வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மனநிலை பாதிக்கப்பட்ட அவரை கடந்த சில தினங்களாக பல இலங்கையர்கள் பாதுகாப்பாக கவனித்துக் கொண்டதாகவும், அவர்கள் அனைவருக்கும் தூதரகம் சார்பாக நன்றி தெரிவிப்பதாகவும் தூதுவர் கூறியுள்ளார்.

அவரைத் தவிர, இஸ்ரேலுக்கு வந்து போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்பட்ட மற்றொரு இலங்கையர் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

மேலும் அவரது கடவுச்சீட்டு தொலைந்து போனதால், அவருக்கு கட்டணம் வசூலிக்காமல் தற்காலிக கடவுச்சீட்டு வழங்க தூதரகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இருவருடன், மது மற்றும் போதைப்பொருள் பாவனை காரணமாக நெருக்கடியை எதிர்கொண்ட 07 பேர் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இந்தக் குழுவில் ஒரு பெண்ணும் அடங்குவார்.

07 பேருக்கு மேலதிகமாக, மது அருந்திய பின்னர் குளியலறையில் வழுக்கி விழுந்து நிரந்தர ஊனமுற்ற ஒரு நபரும் இரண்டு வாரங்களுக்கு முன்பு இலங்கைக்கு அனுப்பப்பட்டதாக தூதுவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கிடையில், கடந்த காலங்களில் இஸ்ரேலில் உயிரை மாய்த்துக் கொண்ட இரண்டு இலங்கையர்களும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் என்று தெரிவிக்கப்பட்டதாக அவர் வலியுறுத்தினார்.

எனவே, மது மற்றும் போதைப்பொருள் பாவனைக்கு கடுமையாக அடிமையானவர்களை இஸ்ரேலில் வேலைக்கு அனுப்ப வேண்டாம் என்று தூதுவர் கேட்டுக்கொள்கிறார்.

ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர் 36 ஆண்டுகளுக்கு பிறகு ஓய்வு : யார் அவர்?

ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர் 36 ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வு பெறவுள்ளார். இந்திய மாநிலமான மஹாராஷ்டிரா, சாத்தாரா மாவட்டத்தை சேர்தவர் சுரேகா யாதவ் (60). இவர் தனது 36 ஆண்டுகால பணிக்கு பிறகு ஓய்வு பெறவுள்ளார்.

எலக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங்கில் டிப்ளமோ படிப்பை முடித்த சுரேகா யாதவ் தனக்கு 24 வயதாக இருக்கும்போது இந்திய ரயில்வேயில் உதவி ஓட்டுநராக சேர்ந்தார்.

இதனால் இந்தியாவில் மட்டுமல்லாது ஆசியாவிலேயே முதல் பெண் ரயில் ஓட்டுநர் என்ற பெருமையை பெற்றார் சுரேகா. இதையடுத்து, 1996-ம் ஆண்டில் சரக்கு ரயிலை இயக்கிய சுரேகா, 2000-ம் ஆண்டு முதல் பயணிகள் ரயில்களை ஓட்டத் தொடங்கினார்.

இந்நிலையில், 36 ஆண்டுகால ரயில்வே பணிக்கு பிறகு வரும் செப்டம்பர் 30-ம் திகதி அன்று ஓய்வு பெறுகிறார் சுரேகா. தனது பயணத்தின் இறுதியாக ஹஸ்ரத் நிஜாமுதீன்-CSMT ராஜ்தானி எக்ஸ்பிரஸை (ரயில் எண்: 22222) சுரேகா ஓட்டியுள்ளார்.

மேலும், வந்தே பாரத் எக்ஸ்பிரஸை இயக்கிய முதல் பெண்மணி என்ற பெருமையையும் சுரேகா யாதவ் பெற்றார். எளிய பின்னணியில் இருந்து வந்த சுரேகா யாதவ் கடின உழைப்பு, விடாமுயற்சியால் தனது கனவுகளை நனவாக்கி மற்றவர்க்கு உதாரணமாக இருக்கிறார்.

பாரம்பரியமாக ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்திய ரயில்வே துறையில் சுரேகாவுக்கு பிறகு தற்போது 1500 பெண் ஓட்டுநர்கள் உள்ளனர்.

30 ஆண்டுகளாக ஒருதலைக் காதல் : காதலிக்க மறுத்த குடும்ப பெண்ணுக்கு காதலன் செய்த கொடூரம்!!

காதலிக்க மறுத்த பெண்ணை கடந்த 30 ஆண்டுகளாகத் துன்புறுத்திய குற்றச்சாட்டின் கீழ் நபர் ஒருவரைக் கைதுசெய்துள்ள சம்பவம் தமிழகத்தில் பதிவாகியுள்ளது. கடந்த 30 வருடங்களுக்கு முன் ஆணொருவர் தனது இளமைக் காலத்தில் பெண்ணொருவரை ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார்.

அவரது காதலை அந்த பெண்ணிடம் வெளிப்படுத்திய போதிலும் குறித்த பெண் அதனை ஏற்காமல் நிராகரித்துள்ளார். மேலும், வேறொரு ஆணைத் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அந்த ஆணும் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனிடையே அந்த பெண் திருமணம் ஆன ஆறே மாதத்தில் கணவரைப் பிரிந்து தனியாக வாழத் தொடங்கியுள்ளார்.

இதனால் அவரை சந்திப்பதற்காக அடிக்கடி அவரது வீட்டிற்கு செல்லும் குறித்த ஆண், தன்னை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொள்ள வலியுறுத்தி வந்துள்ளார்.

தொடர்ந்து பத்து வருடம் தனிமையில் வாழ்ந்து வந்த அந்த பெண் தொந்தரவு தாங்க முடியாமல் கடந்த 2013 ஆம் ஆண்டு முச்சக்கரவண்டி ஓட்டுநர் ஒருவரை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இதனால் கோபமடைந்த அந்த ஆண் 2015 ஆம் ஆண்டு குறித்த பெண் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் குறித்த பெண் தலை மற்றும் கைகளில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இந்த தாக்குதல் குறித்த வழக்கு நாகர்கோவில் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

10 வருடங்களாக நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இவ்வழக்கு இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. அடுத்த மாதம் அந்த பெண்ணின் சாட்சி விசாரணை நடைபெற இருந்த நிலையில் குறித்த ஆண் மீண்டும் அந்த பெண்ணை சரமாரியாகத் தாக்கியதுடன் அரிவாளால் வெட்டியுள்ளார்.

வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பெண்ணை கொலை செய்ய முயன்றது உள்ளிட்ட 6-பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தற்போது அந்த நபரைத் தமிழக பொலிஸார் கைது செய்துள்ளனர்.

காதலிக்க மறுத்த பெண்ணை 30 ஆண்டுகளாகத் தொல்லை செய்து வந்தது மட்டுமல்லாமல் இரு முறை கொலை முயற்சி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாழில் ஆலயத்திலேயே பலியான பட்டதாரி இளைஞன் : அதிர்ச்சி கொடுத்த உடற்கூற்று பரிசோதனை!!

யாழ்ப்பாணத்தில், ஏழாலை – மயிலங்காடு வைரவர் ஆலயத்தில் பூஜை செய்யச் சென்ற பட்டதாரி இளைஞர் ஒருவர் ஆலயத்திலேயே உயிரிழந்த சம்பவம் நேற்று (19) பதிவாகியுள்ளது.

மானிப்பாய் – சுதுமலை தெற்கு பகுதியைச் சேர்ந்த இளைஞரே இவ்வாறு உயிரிழந்தார். கிடைத்த தகவல்களின்படி, இவருக்கு செப்டம்பர் 14 முதல் உடல்நலக் குறைவு ஏற்பட்டு, மானிப்பாயில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், ஆலயத்தில் பூஜை செய்யச் சென்றபோது மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனை அவர் தனது தந்தைக்கு தொலைபேசி மூலம் தெரிவித்தார்.

உறவினர்கள் ஆலயத்திற்கு சென்று பார்த்தபோது, அசைவற்ற நிலையில் இருந்துள்ளர். அவரை உடனடியாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தினர்.

உடற்கூற்று பரிசோதனைகளில், நுரையீரலில் ஏற்பட்ட இரத்தக் கசிவு காரணமாக மரணம் நிகழ்ந்ததாக தெரியவந்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நடத்திய விருந்தில் இலங்கையர்!!

அமெரிக்கா வெள்ளை மாளிகையில் தொழில்நுட்பத் துறைத் தலைவர்களுக்காக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நடத்திய செயற்கை நுண்ணறிவு (AI) முயற்சி தொடர்பான தனியார் இரவு விருந்தில்,

இலங்கையில் பிறந்த அமெரிக்க வாழ் தொழில்நுட்ப தொழில்முனைவோரான சமத் பலிஹாபிட்டிய ( Chamath Palihapitiya), கலந்து கொண்டுள்ளார்.

மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ், ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக், மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்,

ஓபன்ஏஐ தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் மற்றும் கூகிள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை உள்ளிட்ட பல முக்கிய நபர்கள் கலந்து கொண்டதாக அமெரிக்காவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை , இந்த இரவு விருந்தில் டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் கலந்து கொள்ளவில்லை. இந்த இரவு உணவு விருந்து வெள்ளை மாளிகை ரோஸ் கார்டனில் நடைபெற்றது.

49 வயதான சமத் பலிஹாபிட்டிய ( Chamath Palihapitiya), இலங்கையில் பிறந்து பின்னர் அமெரிக்காவில் குடியேறிய கனேடிய-அமெரிக்கர் ஆவார்.

சமத் பலிஹாபிட்டிய, சோஷியல் கேபிடலின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் பிரபலமான ‘ஆல்-இன்’ பாட்காஸ்டின் இணை தொகுப்பாளர் ஆவார்.

பேஸ்புக்கின் முன்னாள் மூத்த நிர்வாகியான பாலிஹாபிட்டி, 2023 ஆம் ஆண்டு நிலவரப்படி, 4 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் நிகர மதிப்புள்ள ஒரு பில்லியனர் துணிகர முதலீட்டாளர் ஆவார்.

தனித்தனியாக, இரவு உணவிற்கு முந்தைய நாள், அமெரிக்காவின் முதல் பெண்மணி மெலனியா டிரம்ப் தலைமையில் AI கல்வி பணிக்குழுவின் கூட்டம் நடைபெற்றது, இதில் கூகிள் மற்றும் OpenAI இன் மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அதேவேளை சர்வதேச அறிக்கைகளின்படி, அமெரிக்காவில் AI கல்வியை ஆதரிக்க கூகிள் 150 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் கொடுத்த விருந்தில் இலங்கையை பூர்வீகமாக் கொண்ட வெளிநாட்டு வாழ் இலங்கை தொழிலதிபர் ஒருவர் கலந்துகொள்வது இதுவே முதல் முறை ஆகும்.