தனது இரண்டு பெண் பிள்ளைகளுக்கும் திருமணம் ஏற்படவில்லை என மனமுடைந்த தந்தை ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் யாழ். மாவட்ட சங்கானை வைத்தியசாலை வீதியில் நேற்று (23) இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் அதே இடத்தை சேர்ந்த 63 வயதுடைய தந்தையே உயிரிழந்துள்ளார். பட்டதாரிகளான இரண்டு பெண் பிள்ளைகளுக்கும் திருமணம் நடைபெறவில்லை என மனமுடைந்த நிலையில் காணப்பட்ட அவர் நேற்று (23) வீட்டில் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார்.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோரில் வசித்து வந்தவர் ருச்சிகா. 25 வயதான இவர் திருமணம் செய்ய மறுத்ததற்காக தனது காதலனால் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொலையை அவரது காதலன் சிவம் மற்றும் அவரது பெற்றோரும் நேரடியாக ஈடுபட்டிருந்தனர். போலீசார் 12 நாட்களில் வழக்கை தீர்த்து வைத்து, மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
அழகு நிலையத்துக்குச் சென்று திரும்பாத ருச்சிகாவை தேடி களைத்த அவரது தந்தை தேவ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ராம்கங்கா ஃபீடர் சேனல் கால்வாயில் ஒரு பையில் சடலமாக ருச்சிகா மீட்கப்பட்டார்.
பிரேத பரிசோதனை அறிக்கைப்படி சுமார் 6-7 நாட்களுக்கு முன்பே கொலை செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டது.
விசாரணையில், சிவம் தனது காதலியான ருச்சிகாவை திருமணம் செய்து கொள்ள விரும்பியதையும், ஆனால் ருச்சிகா அவரை “முதலில் அரசு வேலையில் சேருங்கள், பிறகு திருமணம்” என மறுத்ததையும் ஒப்புக்கொண்டார்.
தொடர் வாக்குவாதத்தால் ஆத்திரம் அடைந்த சிவம் கோபத்தில் தாவணியைப் பயன்படுத்தி அவரை கழுத்தை நெரித்து கொன்றதாகவும், உடலை பெற்றோருடன் சேர்ந்து ஒரு பையில் அடைத்து ராம்கங்கா கால்வாயில் வீசிவிட்டதாகவும் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
ருச்சிகாவின் செருப்புகள் மற்றும் கொலையில் பயன்படுத்தப்பட்ட பையையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். பிஜ்னோர் கிழக்கு பகுதி எஸ்.பி அமித் கிஷோர் ஸ்ரீவஸ்தவா , “இருவரும் பல வருடங்களாக காதலித்து வந்தனர்.
திருமணத்திற்கு வற்புறுத்தப்பட்டாலும், ருச்சிகா அரசு வேலை கிடைக்கும்வரை திருமணத்தை தள்ளிப்போட விரும்பியதால், கொடூரமாக இந்த செயல் தொடர்ந்தது.மூவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர்.
அவர்கள் மீது IPC பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பார்வையற்ற இந்திய பெண்ணொருவர் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து வரலாறு படைத்துள்ளார்.
ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தின் கின்னோர் மாவட்டத்திலுள்ள சாங்கோ எனும் சிறிய கிராமத்தை சேர்ந்த பழங்குடியின பெண்ணான சொன்சின் அங்க்மோ (Chhonzin Angmo),
உலகின் மிக உயரமான மலைச் சிகரமான மவுண்ட் எவரெஸ்ட் மீது இந்திய தேசியக்கொடியை நட்டுள்ள முதல் பார்வையற்ற இந்திய பெண் என்கிற வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார்.
8 வயதில் பார்வை இழந்த அங்க்மோ, டெல்லி பல்கலைக்கழகத்தின் மிராண்டா ஹவுசில் பட்டமும் முதுநிலையும் முடித்துள்ளார். தற்போது யூனியன் வங்கியில் கஸ்டமர் சர்வீஸ் அசோசியேட்டாக பணியாற்றுகிறார்.
“பார்வையின்மையில் தான் என் பலம் இருக்கிறது” என தைரியமாக கூறும் அவர், “என் பயணம் இனிதான் ஆரம்பமே” எனத் தன்னம்பிக்கையுடன் கூறுகிறார்.
2024 அக்டோபரில் எவரெஸ்ட் பேஸ் கேம்ப் சென்று, அதையும் வெற்றிகரமாக கடந்தவர். லடாக் பகுதியில் உள்ள காங் யட்சே 2 போன்ற சவாலான சிகரங்களையும் வென்றுள்ளார்.
Operation Blue Freedom திட்டத்தின் கீழ் 2021-இல் பங்கேற்ற அவர், உலகின் மிக உயர்ந்த போர்க்களமாக சியாச்சின் பனிப்பாறையும் கடந்தார்.
அவரது சாதனைகள் பிரதமர் மோடியின் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியிலும் பாராட்டப்பட்டுள்ளன. சர்வஷ்ரேஷ்ட திவ்யாங்ஜன் தேசிய விருது (Sarvshresth Divyangjan National Award) உள்ளிட்ட பல பாராட்டுகளும் பெற்றுள்ளார்.
அங்க்மோவின் துணிச்சல், இந்திய பெண்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலக மக்களுக்கும் ஊக்கமளிக்கிறது.
கடந்த சில நாட்களாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், கொரோனா தொற்றால் கேரளாவில் இருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கடந்த 2 நாட்களில் கேரள மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 182 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு திருவனந்தபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஆண்கள் இருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் 2020-ம் ஆண்டு முதல் தற்போது வரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 72,141 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் உயிரிழந்த 2 நபர்களுக்கு ஏற்கனவே இதய நோய் உள்ளிட்ட உடல்நல பாதிப்புகள் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. அதேவேளை கொரோனா பரவல் குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கடுமையான மின்னல் தாக்கம் தொடர்பில் நான்கு மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, ஊவா மாகாணம், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இன்று கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இன்று இரவு 11.00 மணி வரை நடைமுறையில் உள்ள இந்த எச்சரிக்கையின்படி, 21 மாவட்டங்களுக்கு மின்னல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்று (23.05) மேல், சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இந்த காலகட்டத்தில் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க பொதுமக்கள் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பலத்த மழையின் காரணமாக ஒரே மேடையில் இந்து முஸ்லீம் திருமணம் நடைபெற்று மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
புனேவின் வான்வாடி பகுதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் முஸ்லீம் குடும்பம் திருமண ஏற்பாடு செய்திருந்தது. அதே திருமண மண்டபத்திற்கு வெளியே இந்து குடும்பம் ஒன்று திருமண ஏற்பாடு செய்திருந்தது.
அப்போது மாலை 7 மணியளவில் திருமண நேரம் நெருங்கி முகூர்த்த நேரம் வந்தவுடன், திடீரென வானம் மேகமூட்டமாகி இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
இதன் காரணமாக வெளியில் அமைக்கப்பட்டிருந்த விதானம் நனைந்து சுப நிகழ்வு தடை பட்டது. இதனால் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கவலை அடைந்தனர். மேலும், மழை குறைந்த பாடில்லை.
பின்னர், மண்டபத்தில் தங்கள் திருமண வரவேற்பைக் கொண்டாடிக் கொண்டிருந்த முஸ்லிம் குடும்ப உறுப்பினர்களை இந்து குடும்ப உறுப்பினர்கள் அணுகினர்.
அவர்களிடம் தங்களது சூழ்நிலையை விளக்கி திருமண மண்டபத்தில் திருமணத்தை நடத்த அனுமதி தருமாறு கேட்டுக் கொண்டனர். அதற்கு முஸ்லீம் குடும்பமும் சம்மதம் தெரிவித்தனர்.
இதையடுத்து, அவர்களது மேடையிலே இந்து திருமண சடங்குகளுக்கு தேவையான ஏற்பாடுகளைச் செய்வதில் உதவினார்கள். பின்னர் சரியான நேரத்தில் இந்து திருமணம் நடைபெற்று முடிந்தது. இரு குடும்பத்தினரும் ஒன்றாக இரவு உணவு சாப்பிட்டனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் லோகோரா பகுதியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் நிதி. இவர் தன் கணவரை ஜூஸ் கொடுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
23 வயதான நிதி என்பவர் ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் சாந்தனு தேஷ்முக்.
இவருக்கு சம்பவ நாளில் ஜூஸில் விஷம் கலந்து கொடுத்துள்ளார். பின்னர் தன் கணவன் இறந்தபிறகு தன்னிடம் டியூஷன் படிக்கும் 3 மாணவர்களின் உதவியுடன் காட்டிற்கு கணவனின் உடலை எடுத்துச் சென்று பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டதாக தெரிகிறது.
கணவன் அடிக்கடி அடித்து ஆபாச வீடியோக்களை காண்பித்து மிரட்டி துன்புறுத்தியுள்ளார். இதனால் கணவனை தீர்த்து கட்ட முடிவு செய்தார் தலைமை ஆசிரியர்.
இச்சம்பவம் மே 15 ம் தேதி நடைபெற்ற நிலையில் காட்டில் எரிந்த நிலையில் ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தினர்.
இதன் அடிப்படையில் நிதியை கைது செய்து காவல்துறையினர் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
திருகோணமலை வெருகல் பகுதியைச் சேர்ந்த திருமதி. கனகராசா ஈஸ்வரி என்ற 53 வயதுடைய தாய் கடந்த 20 ஆம் திகதி காலை திருகோணமலைக்கு செல்வதாக கூறி பஸ்ஸில் சென்றுள்ள நிலையில் இதுவரை வீடு திரும்பவில்லை என குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் பெண் காணாமல்போனமை தொடர்பில் ஈச்சிலம்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
அதேவேளை காணாமல்போன பெண், சில நேரங்களில் மன அழுத்தம் காரணமாக மறந்துபோய் எங்கே செல்கிறோம் என்று தெரியாமல் பாதை தவறிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
எனவே, காணாமல்போன பெண் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 0752440702. , 0755314983 எனும் தொலைபேசி இலக்கங்களுக்கு அறியத் தருமாறு கேட்டுக் கொள்கின்றனர்.
ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான சிங்கள மாணவர்கள் தமிழை இரண்டாவது மொழியாகவும், தமிழ் மாணவர்கள் சிங்களத்தை இரண்டாவது மொழியாகவும் கற்க வேண்டியது கட்டாயமாக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்றைய தினம் (23.05.2025) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்ட விடயம் தொடர்பில் குறிப்பிட்டார். அதன்படி, ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான தமிழ் மாணவர்கள் சிங்கள மொழியை இரண்டாம் மொழியாக கற்க வேண்டும்.
அதேவேளை, ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான சிங்கள மாணவர்கள் தமிழ் மொழியை இரண்டாம் மொழியாக கற்க வேண்டும்.
இதற்கமைய, ஆசிரியர்களுக்கு குறித்த மொழிகளைக் கற்பிக்க பயிற்சி அளிக்கப்படும் வரை இந்தத் திட்டம் ஒரு முன்னோடித் திட்டமாக மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.
இலங்கை அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் அன்ஜலோ மெத்தியூஸ் ஓய்வு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார்.
மெத்யூஸ் இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவராகவும் கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை கிரிக்கட் அணியின் சிறந்த சகலதுறை வீரர்களில் ஒருவராக மெத்யூஸ் கருதப்படுகின்றார்.
கடந்த 17 ஆண்டுகளாக இலங்கைக்காக டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் விளையாடக் கிடைத்தமை பெருமிதமானதும் மகிழ்ச்சியானதுமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய அணிக்காக விளையாடும் போது ஏற்படும் உணர்வினை வார்தைகளினால் விபரிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த கிரிக்கட் பயணத்தில் தனது ஏற்றத் தாழ்வுகளின் போது தொடர்ந்தும் ஆதரவு வழங்கிய கிரிக்கெட் ரசிகர்களுக்கு நன்றி பாராட்டுவதனை பெரும் பாக்கியமாக கருதுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விளையாட்டின் மீதான காதல் எப்போதும் தீராது என அவர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
வவுனியாவில் அண்மையில் சில நாட்களாக மலேரியா நோய் தடுப்பு செயற்றிட்ட நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது. அந்தவகையில் கடந்த மூன்று நாட்களாக சாந்தசோலைப் பகுதியிலுள்ள வீடுகள், கிணறுகள், சுற்றுப்பகுதிகள் என்பன கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்தியாவின் ஐயப்ப மலைக்குச் சென்று திரும்பிய பக்தர்கள் சிலரிடம் காணப்பட்ட மலேரியா நோய் தொற்றுக் காரணமாகவும் மேலும் இத்தொற்று சமூகத்தில் பரவாமல் இருப்பதற்காகவும் இந்நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.
மேலும், பொதுமக்கள் தமது இருப்பிடங்களைத் சுத்தம் செய்து வைத்திருக்குமாறும் தமது பகுதியில் டெங்கு நுளம்பு பெருகும் இடங்கள் இனங்காணப்பட்டால் அவற்றிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் இந்தடவடிக்வடிக்கைக்கு பொதுமக்கள் தமது பூரண ஒத்துழைப்புக்களை வழங்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் இளம் குடும்பஸ்தரின் சடலம் ஒன்று நேற்று வியாழக்கிழமை (22.05) மாலை மீட்கப்பட்டதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்டவர் புதுக்குடியிருப்பு, 10வது தொகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் ஆவார்.
நபர் ஒருவர் புதரில் கிடப்பதாக புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் குறித்த இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
பின்னர் குறித்த நபர் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் சடலம் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
காலநிலையில் இன்றையதினம் ஏற்படும் மாற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இன்று (23) மேல், சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதேவேளை, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ.க்கு மேல் மிகவும் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.
ஊவா மாகாணத்திலும், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் பிற்பகல் அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.
இதற்கிடையில், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேற்கு, தெற்கு மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 30-40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் காரணமாக ஏற்படும் அபாயங்களை குறைப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
கொழும்பின் புறநகர் பகுதியான மாலபேயில் உள்ள பல்பொருள் அங்காடியொன்றில் காசாளராகப் பணிபுரிந்த பெண், அந்த நிறுவனத்தின் பெட்டகத்திலிருந்து சுமார் 2.5 மில்லியன் ரூபாவை திருடியுள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
குறித்த சந்தேக நபரான பெண் தற்போது அங்கிருந்து காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவரை கண்டுபிடிக்க மாலபே பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
காசாளராக பணிபுரியும் போது, அந்த பெண் தனது ஒரு கையில் வைத்திருந்த கைக்குட்டையை பயன்படுத்தி நுட்பமான முறையில் திருட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடையில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமராவிலும் பெண்ணின் மோசடி பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அநுராதபுரத்தில் 56 சிறுமிகளின் தகாத புகைப்படங்களைப் பெற்று வைத்திருந்த ஒருவர், குற்றப் புலனாய்வுத் துறையின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுவர் மற்றும் பெண்கள் விவகார அதிகார சபையின் இணைய சேவையாளராக நடித்து, டெலிகிராம் கணக்கு மூலம் இந்த புகைப்படங்களை அவர் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
56 சிறுமிகளும் 17 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கண்டி பகுதியில் உயர்தர வகுப்புகளை நடத்தும் ஆசிரியர்களை குறிவைத்து, 2027 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவிகள் அடங்கிய டெலிகிராம் குழுக்களை இந்த நபர் அணுகியுள்ளார்.
அங்கு பெறப்பட்ட தொலைபேசி எண்கள் மூலம் அந்த சிறுமிகளை தொடர்பு கொண்டதாக சந்தேக நபர் தெரிவித்துள்ளார். அந்த தொலைபேசி எண்கள் மூலம் சிறுமிகளை தொடர்பு கொண்ட சந்தேக நபர், தன்னை ஒரு பெண் போன்று காட்டிக் கொண்டுள்ளார்.
சிறுமிகளின் தகாத புகைப்படங்கள் இணையத்தில் இருப்பதாகவும், சிறுவர் மற்றும் பெண்கள் விவகார அதிகார சபையின் ஒன்லைன் சேவைக்குத் தெரிவித்து அவற்றை அகற்ற வேண்டும் எனவும் அவர்களிடம் அவர் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர் அதிகாரசபையின் அதிகாரியாகக் காட்டிக் கொண்டு ஒரு மோசடி கணக்கை உருவாக்கி, அதைப் பயன்படுத்தி சிறுமிகளுக்கு பல்வேறு உத்தரவுகளை வழங்கவும், தகாத புகைப்படங்களை பெற்றதாகவும் தெரியவந்துள்ளது.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில், இவ்வாறு தரவுகளையும் தகாதபு கைப்படங்களையும் பதிவிறக்கம் செய்த 56 சிறுமிகள் பற்றிய தகவல்கள் சந்தேக நபரின் கணினியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இத்தாலியில் இருந்து இலங்கைக்கு வந்த பெண் ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
சிலாபம் – மாதம்பை பகுதியில் கடந்த 19ஆம் திகதி பொலிஸாரால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின்போது பெண் ஒருவர் உள்ளிட்ட ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
மரணித்த தந்தை கனவில் வந்து புதையல் தொடர்பில் தகவல் அளித்ததால் அவர்கள் இவ்வாறு புதையல் தோண்ட முயற்சித்ததாக பொலிஸாரிடம் கூறியுள்ளனர்.
புதையல் தோண்ட முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதன்போது, புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த நிலையில், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, கைது செய்யப்பட்ட பெண் இத்தாலியில் தொழில் செய்பவர் என்றும், புதையல் தோண்டுவதற்காக இத்தாலியில் இருந்து இலங்கைக்கு வருகைத் தந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.
மரணித்த தந்தை கனவில் வந்து புதையல் இருப்பது தொடர்பில் தெரிவித்ததாகவும், இதன் காரணமாக தந்தை கூறிய புதையலை கண்டெடுப்பதற்காக தான் நாட்டிற்கு திரும்பியதாகவும் அந்தப் பெண் கூறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கைது செய்யப்பட்ட பெண் உள்ளிட்ட ஐவரும் எதிர்வரும் ஜூன் மாதம் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.