யாழில் விபத்திற்கு உள்ளான படகு : இருவர் பலி : 11 பேர் வைத்தியசாலையில்!!

புதிய இணைப்பு : யாழ்ப்பாணத்தில் இருந்து பாலைதீவு திருவிழாவுக்கு பக்தர்களை ஏற்றி சென்ற படகு விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்ததுடன் 11 பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடலில் மூழ்கியவர்களை மீட்கும் பணிகள் அப்பகுதி மக்கள் மற்றும் கடற்படையினரின் உதவியுடன் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மற்றும் கடற்படையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை கடலில் காணாமல் போனோரை தேடும் பணியில் சுழியோடிகள் களமிறக்கப்பட்டுள்ளனர். யாழில் பக்தர்களுடன் புறப்பட்ட படகு விபத்திற்கு உள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது்.

குருநகர் பகுதியை சேர்ந்த எம்.ஜோசப் (வயது 80) மற்றும் பிரான்ஸிஸ் (வயது 57) ஆகியோரின் சடலமே யாழ். போதனா வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை 13 வயது சிறுவன், 4 பெண்கள் 8 ஆண்கள் என 13 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் ஒரு ஆணும், இரு பெண்களும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலாம் இணைப்பு

யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் பக்தர்களுடன் புறப்பட்ட படகு ஒன்று சென்ற சிறிது நிமிடத்திலேயே தலை கீழாக கவிழ்ந்து விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

இதில் பயணித்த சிறுவர்கள், பெண்கள் உட்பட பலர் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த படகானது நாளையதினம்(07.03.2026) இடம்பெறவுள்ள பாலைதீவு அந்தோனியார் ஆலய திருவிழாவுக்காக புறப்பட்டுச் சென்றவேளை இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்கும் பணியில்

இந்த விபத்தில் மூவர் கரைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் ஒருவர் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

ஏனையவர்களை மீட்கும் பணியில் கடற்றொழிலாளர்கள், படகோட்டிகள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அம்பாறையில் கடலில் மூழ்கிய படகு!!

இயந்திரம் உட்பட வலைகளுடன் கடலில் நங்கூரத்தில் இணைக்கப்பட்டு தரித்திருந்த பாரிய ஆழ்கடல் மீன்பிடி இயந்திரப் படகு ஒன்று கடலில் மூழ்கியுள்ளது.

அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்திய சாய்ந்தமருது பிரதேச கடல் பகுதியில் இந்த சம்பவம் நேற்று(5.3.2026)மாலை இடம்பெற்றுள்ளது.

குறித்த படகினை மீட்டு கடற்கரைப் பகுதிக்கு இழுத்து கொண்டு வருவதற்கான முயற்சிகள் பல தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த படகானது கடற்கரையில் நங்கூரமிட்ட நிலையில் நிறுத்தப்பட்ட போதிலும் படகு இயந்திரம் உட்பட வலைகளுடன் கடலில் விழுந்து மூழ்கியுள்ளதாக அந்தப் பகுதி கடற்றொழிலாளர்கள் குறிப்பிட்டனர்.

இவ்வாறு மூழ்கிய படகு சுமார் ஒரு கோடிக்கும் மேல் பெறுமதியானதுடன் கனரக வாகனத்தின் உதவியுடன் கரையை நோக்கி இழுப்பதற்கான முயற்சிகளை கடற்றொழிலாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

கடற்கரைப்பகுதில் இருந்து சுமார் 500 மீற்றர் தொலைவில் மூழ்கியுள்ள குறித்த படகினை மீட்பதற்கான மற்றுமொரு முயற்சியாக இலங்கை கடற்படையினரின் உதவியும் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.

குறித்த பகுதியில் கடுமையான கடலரிப்பு இடம்பெற்று வருதுடன் படகுகளை நிறுத்தி வைக்கக் கூடிய இறங்கு துறை இன்றி பாரிய சிரமங்களை கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறாக தொடர்ச்சியாக கடலரிப்பினால் கடற்கரை பிரதேசம் காவு கொள்ளப்பட்டு போகுமேயானால் எதிர்காலத்தில் இந்தப் பிரதேசத்தில் கடற்கரை ஒன்று முழுமையாக இல்லாமல் போனலும் போகலாம் என்ற அச்சம் பிரதேச மக்களிடையே அதிகரித்துள்ளது.

 

மின்சார வாகனங்களின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ள புதிய புரட்சி!!

சீனாவின் முன்னணி மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனமான BYD, தனது உலகப்புகழ் பெற்ற ‘பிளேட் பேட்டரி’யின் அடுத்த தலைமுறைப் பதிப்பை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய பேட்டரி, மின்சார வாகனத் துறையில் நிலவும் முக்கியப் பிரச்சினைகளான மெதுவான சார்ஜிங் வேகம் மற்றும் குளிர்காலங்களில் பேட்டரி செயல்திறன் குறைவது ஆகியவற்றுக்குத் தீர்வாக அமையும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, கடும் குளிர் நிலவும் சூழல்களிலும் இந்த பேட்டரி மிக வேகமாக சார்ஜ் ஆகும் திறனைக் கொண்டுள்ளதோடு, வாகனத்தின் மைலேஜையும் (Range) கணிசமாக அதிகரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டாம் தலைமுறை பிளேட் பேட்டரியானது, 10 சதவீதத்திலிருந்து 80 சதவீத சார்ஜிங்கை வெறும் 10 நிமிடங்களுக்குள் எட்டிவிடும் அதிவேக சார்ஜிங் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது.

மேலும், முந்தைய பேட்டரிகளை விட அதிக ஆற்றல் அடர்த்தியைக் (Energy Density) கொண்டுள்ளதால், வாகனத்தின் எடை அதிகரிக்காமல் அதிக தூரம் பயணிக்கும் வசதியை இது வழங்குகிறது.

டெஸ்லா போன்ற உலகளாவிய நிறுவனங்களுக்குப் போட்டியாக, BYD நிறுவனம் தனது சொந்த தயாரிப்பு செலவைக் குறைக்கவும், மின்சார வாகனங்களின் விலையைச் சாமானியர்களுக்கும் எட்டும் வகையில் கொண்டு வரவும் இந்த புதிய தொழில்நுட்பம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது மின்சார வாகனச் சந்தையில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தும் என வாகனத் துறை நிபுணர்கள் கருதுகின்றனர்.

பதற்றநிலை காரணமாக இலங்கை ரூபாயின் மதிப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம் : காத்திருக்கு ஆபத்து!!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்படும் பதற்றநிலை காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் பிற பொருட்களின் விலைகள் அதிகரிப்பது இலங்கை பொருளாதாரத்தில் பல தாக்கங்களை ஏற்படுத்தும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

இறக்குமதி செலவுகள் அதிகரிப்பு, ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி மற்றும் எரிபொருள் மற்றும் கப்பல் கட்டணங்களின் அதிகரிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பணவீக்கம் நாட்டில் உருவாக்கப்படலாம் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இலங்கை ரூபாயின் மதிப்பு : மேலும், ஈரான் மோதலுக்கு மத்தியில் இலங்கையின் பொருளாதார கண்ணோட்டத்தில் இந்த ஆண்டு இலங்கை ரூபாயின் மதிப்பு சுமார் 5 சதவீதம் குறையக்கூடும் என்று கணிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், அதிகரித்து வரும் வெளிப்புற அழுத்தங்கள் மற்றும் நடப்புக் கணக்கில் ஏற்படும் தாக்கம் காரணமாக ரூபாய் மதிப்பு அதன் ஆரம்ப கணிப்பை விடக் குறையக்கூடும் என்ற தெளிவான ஆபத்து இருப்பதாக அறிக்கைகள் கூறுகின்றது.

மத்திய கிழக்கில் நடந்து வரும் பதட்டங்கள் காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான புகலிட சொத்துக்களை நாடியதால் அமெரிக்க டொலர் வலுப்பெற்றுள்ளது.

இந்த நெருக்கடியை எதிர்கொள்ளும் போது, ​​இலங்கை பல வழிகளில் பொருளாதார அதிர்ச்சிகளை எதிர்கொள்ளும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் எண்ணெய் விலைகள், கப்பல் செலவுகள் மற்றும் ரூபாய் மதிப்பு ஆகியவை உணவு, போக்குவரத்து மற்றும் எரிசக்தி துறைகளில் பணவீக்கத்தை மேலும் அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

மத்திய கிழக்கில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றங்கள் இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு கடுமையான ஆபத்தாக காணப்படுவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தென்னிலங்கையில் இளம் பெண் கழுத்தறுத்து கொலை : பொலிஸார் வெளியிட்ட தகவல்!!

தென்னிலங்கையில் இளம் பெண் ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

காலி, கஹதுடுவ பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில், பணிபுரிந்த மேற்பார்வையாளரான பெண்ணை சக ஊழியர் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வயதான கிம்ஹானி பெரேரா என்ற இளம் பெண்ணே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். புலத்சிங்கள பகுதியைச் சேர்ந்த இவர், கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக இந்த ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்துள்ளார்.

தாக்குதலை நடத்தியவர் அதே தொழிற்சாலையில் உதவியாளராகப் பணிபுரிந்த பதுளை பகுதியைச் சேர்ந்த திருமணமான நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் இரத்தக் கறையுடன் கூடிய கத்தி ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர். உயிரிழந்த பெண்ணுக்கும் சந்தேக நபருக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகத் காதல் தொடர்பு இருந்து வந்துள்ளது.

எனினும் கடந்த சில நாட்களாக அந்தப் பெண் சந்தேக நபருடன் பேசுவதைத் தவிர்த்து வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

நேற்று காலை பணிக்குச் சென்ற அந்தப் பெண், தனது கைப்பையை வைப்பதற்காக ஒதுக்கப்பட்ட இடத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, அங்கு மறைந்திருந்த சந்தேக நபர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது ஆத்திரமடைந்த சந்தேக நபர், மறைத்து வைத்திருந்த கத்தியால் அந்தப் பெண்ணின் கழுத்தை அறுத்துள்ளார்.

தாக்குதலுக்குப் பிறகு அங்கிருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர், தான் தங்கியிருந்த அறைக்குச் சென்று தனது உடைகளை எடுத்துக்கொண்டு தலைமறைவாகியுள்ளார்.

படுகாயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சந்தேக நபரை கைது செய்வதற்காக கஹதுடுவ பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்திவந்த இந்திய வம்சாவளிப் பெண் படுகொலை!!

சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்திவந்த இந்திய வம்சாவளிப் பெண்ணொருவர் கனடாவில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பஞ்சாப் பின்னணி கொண்டவரான நான்சி க்ரெவால் (45), செவ்வாயன்று இரவு மர்ம நபர்களால் கத்தியால் குத்தப்பட்டார்.

இரவு 9.30 மணியளவில், தகவலறிந்து சம்பவ இடத்துக்கு பொலிசாருடன் சென்ற மருத்துவ உதவிக்குழுவினர் நான்சியை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார்கள்.

ஆனால், காயங்கள் காரணமாக அவர் உயிரிழந்துவிட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். மேலும், நான்சி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சமூக ஊடகப் பிரபலமான நான்சி, இந்தியா கனடாவுக்கிடையிலான தூதரக உறவுகளில் ஏற்பட்ட விரிசல் மற்றும் இந்திய அரசியல், குறிப்பாக, தான் சார்ந்த பஞ்சாப் அரசியல் குறித்த கருத்துக்களை சமூக ஊடகங்களில் பகிர்வதன் மூலம் பரபரப்பை ஏற்படுத்திவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடித்து உடைக்கப்பட்ட ஆசிரியையின் வீடு : பெண்ணை கைது செய்யக் கோரி வேலைநிறுத்தப் போராட்டம்!!

டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டயகம வெஸ்ட் ஐந்தாம் பிரிவில் ஆசிரியரின் குடியிருப்பை சேதப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய பெண்ணை கைது செய்யக் கோரி வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டம் நேற்று (03.03.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஆசிரியர் வேலைக்குச் சென்றிருந்த போது, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கூலி தொழிலாளர்களை வைத்து வீடு உடைக்கப்பட்டதாகவும், அதுகுறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யச் சென்றபோது பொலிஸார் அலட்சியமாக நடந்துகொண்டதாகவும் ஆசிரியர் குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும், குறித்த பெண் ஆசிரியருக்கு தொடர்ந்து பிரச்சினைகளை ஏற்படுத்தி வருவதாகவும், சம்பவம் குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தபோதும் அவர்களால் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவத்தை நேரில் கண்ட பெண் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், ஆசிரியர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நான்கு அல்லது ஐந்து பேர் செலசு, அலவாங்கு, மண்வெட்டி போன்ற ஆயுதங்களுடன் வந்து வீட்டுக்குள் நுழைய முயன்றதாகவும்,

யாரும் இல்லாத வீட்டுக்குள் செல்ல வேண்டாம் என தாம் தெரிவித்தபோதும் அவர்கள் அதை பொருட்படுத்தாமல் செலசு கொண்டு ஆசிரியரின் வீட்டை அடித்து உடைத்ததாகவும் தெரிவித்தார்.

இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் ஆசிரியருக்கு தொலைபேசி மூலம் தகவல் வழங்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதன் பின்னரே சம்பவ இடத்திற்கு பொலிஸார் வந்ததாகவும், அவர்கள் ஆசிரியரால் அழைக்கப்பட்டிருப்பார்கள் என நினைத்திருந்தபோதிலும், நிலைமையை பார்த்துவிட்டு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அங்கிருந்து சென்றதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

எதுவாயினும், யாரும் இல்லாத வீட்டில் சட்டத்தை கையில் எடுத்துச் செயல்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் வருகை தந்தபோது அங்கு பதற்ற நிலை ஏற்பட்டதுடன், பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் காரசாரமான வாக்குவாதங்களும் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இடத்திற்கு அக்கரபத்தினை பிரதேச சபையின் தலைவி எஸ். ரதிதேவி, தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் பிரேமதாஸ் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதி ஒகஸ்டீயன் ஆகியோர் வருகை தந்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்துள்ளனர்.

மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய பெண் ஒருவரை பொலிஸார் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளதுடன், வீட்டை சேதப்படுத்திய நபர்களை கைது செய்து விசாரணை நடத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை டயகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சமையல் செய்ய விடாமல் தடுத்த மாமியார் : உயிரை மாய்த்த மருமகள்!!

சமையல் வேலையில் மாமியால் தொல்லையால் மருமகள்கள் அதிரடிகளை எடுத்திருப்பதை சினிமாவிலும் , நாடகங்களிலும் பார்த்திருப்போதும். ஆனால் சமிஅக விடவில்லை என்பதற்காக பெண் தற்கொலை செய்த விசித்திர சம்பவம் ஒன்று இந்தியாவில் அரங்கேறியுள்ளது.

இந்தியாவின் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சமையல் செய்வது தொடர்பாக மாமியாருடன் ஏற்பட்ட தகராறில் மருமகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த சுஷ்மா (35) பிரபல நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக முன்பு பணியாற்றி வந்தவர். இவருக்கும் புனீத் குமார் என்பவருக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளான். கடந்த சில காலமாகவே குடும்பத்தில் சிறு சிறு விஷயங்களுக்காக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

குறிப்பாக, சமையல் செய்வது தொடர்பாக சுஷ்மாவிற்கும் அவரது மாமியார் கல்பனாவிற்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தன்னை சமையல் செய்ய விடாமல் மாமியார் தடுத்து வந்ததாகவும், தன்னை தொடர்ந்து மனரீதியாக துன்புறுத்தி வந்ததாகவும் சுஷ்மா தனது குடும்பத்தினரிடம் முன்பே வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

நேற்று முன் தினம் (03) மாமியாருடன் ஏற்பட்ட கடுமையான வாக்குவத்தால் மனமுடைந்த சுஷ்மா, வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். சுஷ்மாவின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், வரதட்சணை கொடுமை மற்றும் தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சுஷ்மாவின் கணவர் புனீத் குமாரைப் கைது செய்த பொலிஸார், தலைமறைவான மாமியார் கல்பனாவை தேடி வருகின்ற நிலையில், சமைக்கவிடவில்லை என மருமகள் உயிரை மாய்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

12 ஆண்டுக்குப் பின் நடக்கும் குருபகவானால் : அதிஷ்டம் அடிக்கப்போகும் ராசிகாரர்கள்!!

ஜோதிட சாஸ்திரத்தில் குருபகவான் நேர்மறையான மற்றும் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் கிரகமாகக் கருதப்படுகிறார். அதனால்தான் குருபகவானின் இயக்கம் ஜோதிடத்தில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

குருபகவானின் நேரடி இயக்கத்தால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கைத் தலைகீழாக மாறபோகிறது. அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று நாம் இங்கு பார்ப்போம்.

மிதுனம் : குருபகவானின் நேரடி இயக்கம் மிதுன ராசியில் நடைபெற இருப்பதால் அவர்கள் பல நன்மைகளை அனுபவிக்கப்போகிறார்கள். இந்த கிரக மாற்றம் அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், அமைதியையும் தரப்போகிறது.

இந்த பெயர்ச்சியால் அவர்களின் நற்பெயரும் சமூக அந்தஸ்தும் மேம்படும். குடும்பத்தில் நிலவிவந்த கடந்த கால மோதல்கள் இப்போது தீர்க்கப்படலாம். இந்த காலகட்டத்தில் அவர்கள் வாழ்க்கையில் பல்வேறு துறைகளில் வெற்றியைப் பெற முடியும்.

அவர்களின் திருமண மகிழ்ச்சியாக இருக்கும், அவர்களுக்குள் ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதை மற்றும் பொறுப்புணர்வு அதிகரிக்கும். சொத்து அல்லது நிலம் தொடர்பாக நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பிரச்சினைகள் இப்போது முடிவுக்கு வரும்.

வேலையில் இருப்பவர்கள் இந்த காலகட்டத்தில் சாதகமான பலன்களை அனுபவிக்கலாம், மேலும் தொழில் வளர்ச்சிக்கு பல வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட காலமாக நிலவி வந்த ஆரோக்கியப் பிரச்சினைகள் இப்போது முடிவுக்கு வரலாம்.

தனுசு : தனுசு ராசிக்காரர்கள் குருபகவானின் இந்த நேரடி இயக்கத்தால் அற்புதான நன்மைகளை அனுபவிக்கப் போகிறார்கள். இந்த காலகட்டத்தில் அவர்களின் அனைத்து முயற்சிகளிலும் அதிர்ஷ்டம் துணை நிற்கும்.

அதிர்ஷ்டம் காரணமாக அவர்கள் பல்வேறு துறைகளில் பயனடையலாம். அவர்கள் வேலையை மாற்றுவதற்கு இது சிறந்த காலம் மற்றும் வியாபாரிகள் பல்வேறு ஒப்பந்தங்களிலிருந்து பெரிய அளவில் சம்பாதிக்கலாம்.

அவர்களின் நிதி நிலைமை சிறப்பாக இருக்கும் மற்றும் சேமிப்பை உயர்த்தலாம். வணிகர்கள் பல்வேறு முதலீடுகளிலிருந்து லாபம் ஈட்டலாம். தேவையற்ற செலவுகளைத் தவிர்ப்பது நல்லது.

பணியிடத்தில் வெற்றி கிடைக்கும், மேலும் அவர்களின் முயற்சிகள் மேலதிகாரிகளிடமிருந்து பாராட்டுகளைப் பெறும். குருபகவானின் ஆசீர்வாதத்தால் இது அவர்களுக்கு பொற்காலமாக இருக்கும்.

மீனம் : மீன ராசிக்காரர்கள் குருபகவான் ஆசியால் சிறப்பான பலன்களை அடையப்போகிறார்கள். இந்த காலகட்டத்தில் அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் தொழில் வாழ்க்கையிலும் வெற்றி பெறுவார்கள்.

அவர்களின் முதலீடுகள் சிறந்த பலன்களைத் தரும், மேலும் பல்வேறு ஒப்பந்தங்களிலிருந்து லாபம் ஈட்டலாம். வீட்டில் சுப காரியங்களில் நடப்பதற்கும், குடும்ப உறுப்பினர்களுடன் தரமான நேரத்தைச் செலவிடுவதற்கும் இது ஒரு நல்ல காலமாக இருக்கும்.

இந்த குரு பெயர்ச்சியால் மீன ராசிக்காரர்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் அமைதியை அடைய முடியும்.

திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன, மேலும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். இந்த காலகட்டத்தில் பெரிய உடல்நலப் பிரச்சினைகள் எதுவும் இருக்காது, பழைய உடல்நல பிரச்சினைகளும் முடிவுக்கு வரும்.

 

மகனின் தலையில் ஆணி அடித்து சித்ரவதை செய்த தந்தை!!

உத்தரப் பிரதேசம் பிரோசாபாத் பகுதியில் 22 வயதான சுனில் என்ற இளைஞர் தலையில் இரும்பு ஆணி அடிக்கப்பட்ட நிலையில் காவல் நிலையத்துக்கு சென்றார்.

அவரது தலையில் இரண்டரை அங்குல நீளமான ஆணி அடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சுனில் தெரிவித்ததாவது, குடும்பத்தில் நீண்ட நாட்களாக நிலவிய சொத்து பிரச்சினை காரணமாக தந்தை மற்றும் சகோதரர் இணைந்து இவர் மீது இந்த கொடூரச் செயலைச் செய்துள்ளனர்.

இதுவே முதல் சம்பவமல்ல. கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி சுனிலின் தலையில் இதேபோல் தாக்குதல் நடைபெற்றது.

அப்போது சம்பவத்தை மறைக்க அவர் போதை மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பப்பட்டார். அடுத்த நாளே மருத்துவமனையில் அனுப்பப்பட்ட இவர் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

போலீஸ் இதுவரை எழுத்துப்பூர்வ புகார் பெறவில்லை. இருப்பினும் புகார் கிடைத்தவுடன் தந்தை மற்றும் சகோதரர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி செய்துள்ளனர்.

குடும்பத்தில் பாதுகாப்பாக இருக்க வேண்டிய இடம் சில நேரங்களில் ஆபத்தான சூழலாக மாறும் என்பதை இந்த சம்பவம் வெளிப்படுத்துகிறது. பொதுமக்கள் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையுடன் உள்ளனர்.

 

குடும்பத்தை காப்பாற்றுவதாக பெருந்தொகை லஞ்சம் பெற்றவருக்கு நேர்ந்த கதி!!

5 மில்லியன் ரூபா லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் வர்த்தகர் ஒருவர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோத சொத்து அல்லது சொத்து விசாரணைப் பிரிவால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட சந்தேக நபருக்கு பிணை பெற உதவுவதற்காகவும், அவரது குடும்ப உறுப்பினர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்க உதவுவதற்காகவும் சந்தேக நபரான வர்த்தகர் லஞ்சப் பணத்தைப் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபர் கொழும்பு 12 இல் வசிக்கும் வர்த்தகர் என இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அறிவித்துள்ளது. சந்தேக நபர் கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

 

தங்கத்தின் விலை மீண்டும் உச்சத்தில்!!

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று (05.03.2026) அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

அதற்கமைய, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 5,175 டொலராக விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம், வெள்ளி ஒரு அவுண்ஸ் இன்றையதினம் 84.96 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில நாட்களாக உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட நிலையில், சர்வதேச விலை அதிகரிப்பு காரணமாக இன்று இலங்கையிலும் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

மேலும், டொலரின் வலுவூட்டல் மற்றும் சர்வதேச அரசியல் நகர்வுகள் இந்த விலை மாற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைகின்றன எனவும் வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

 

இலங்கை கடற்பரப்பில் வெடித்துச் சிதறிய IRIS Dena : ஈரானின் அதிரடி அறிவிப்பால் அதிகரிக்கும் பதற்றநிலை!!

ஈரானியக் கப்பலை மூழ்கடித்ததற்கு அமெரிக்கா மிக மோசமாக வருத்தப்படும் என்று ஈரான் அறிவித்துள்ளது. இந்தியப் பெருங்கடலில், ஈரானிய போர்க்கப்பலான தேனாவை அமெரிக்கா எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் தாக்கியது.

இதனை தொடர்ந்து, அதன் விளைவுகள் குறித்து ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், அந்தக் கப்பல் இந்தியக் கடற்படையின் விருந்தினராக சென்றிருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள X தள பதிவில், “அமெரிக்கா தான் அமைத்த முன்னுதாரணத்திற்கு கடுமையாக வருத்தப்படும்” என்று அப்பாஸ் அரக்சி தெரிவித்துள்ளார்.

நேற்று, வளைகுடாவிலிருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் உள்ள இலங்கையின் தெற்கு கடற்கரையில் ஈரானியக் கப்பலை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்கியமை பதற்றத்தை அதிரகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பதற்றத்தினால் மூடப்படும் வான் பரப்புகள் : விமான சேவை தொடர்பில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் அறிவிப்பு!!

புதிய இணைப்பு : மத்திய கிழக்கில் நிலவும் சூழ்நிலை காரணமாக விமானங்கள் இரத்து செய்யப்பட்டதால் சிரமத்திற்கு உள்ளான பயணிகளுக்கு உதவ, மார்ச் 08, 2026 அன்று கொழும்புக்கும் லண்டனுக்கும் இடையே கூடுதல் விமானத்தை இயக்க ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் முடிவு செய்துள்ளது.

அதன்படி, UL1205 என்ற எண்ணைக் கொண்ட கூடுதல் விமானம் மார்ச் 8, 2026 ஞாயிற்றுக்கிழமை காலை 06.50 மணிக்கு கொழும்பிலிருந்து புறப்பட்டு அதே நாளில் பிற்பகல் 01.10 மணிக்கு லண்டனை வந்தடையும்.

அதன் பின்னர் UL1206 விமானம் அதே நாளில் பிற்பகல் 03.05 மணிக்கு லண்டனில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 06.55 மணிக்கு கொழும்பு வந்தடையும்.

மேலும் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உதவ, தேர்ந்தெடுக்கப்பட்ட பாதைகளில் விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளது.

மேலதிக தகவலுக்கு, 1979 (இலங்கைக்குள்) அல்லது +94 11 777 1979 (சர்வதேசம்) அல்லது WhatsApp (+94 74 444 1979) (செய்திகளுக்கு மட்டும்) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். மேலும் தகவலுக்கு உங்கள் பயண முகவரைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது www.srilankan.com ஐப் பார்வையிடலாம் என அறிவித்துள்ளது.

இரண்டாம் இணைப்பு

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் வான்பரப்பு மூடப்பட்டிருப்பதன் காரணமாக, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தனது முக்கிய விமான சேவைகளை தற்காலிகமாக இரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

இதன்படி, 2026 மார்ச் 05 மற்றும் 06 ஆகிய இரு தினங்களிலும் கொழும்பிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து கொழும்பு வரும் 12 விமானங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விமான நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மத்திய கிழக்கின் துபாய், ரியாத், டோஹா, தம்மாம் மற்றும் குவைத் ஆகிய இடங்களுக்கான சேவைகளே இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளன.

முதலாம் இணைப்பு

ரியாத் மற்றும் டுபாய்க்கான ஸ்ரீலங்கள் எயார்லைன்ஸ் விமானங்கள் இன்று (05) இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தற்காலிகமாக அதன் வான்வெளியை திறந்ததன் மூலம் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மற்றும் பல விமான நிறுவனங்களால் பல சிறப்பு விமானங்கள் இயக்கப்படும் என்று சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் நேற்று அறிவித்தது.

இருப்பினும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை மற்றும் வான்பரப்பு கட்டுப்பாடுகள் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

விமானங்கள்

கொழும்பு – டுபாய்: இன்று பயணிக்கவிருந்த UL 225 வானூர்தி சேவை.

டுபாய் – கொழும்பு: டுபாயிலிருந்து நாடு திரும்பவிருந்த UL 226 வானூர்தி சேவை.

கொழும்பு – ரியாத்: ரியாத் நோக்கிப் பயணிக்கவிருந்த UL 265 மற்றும் அங்கிருந்து வரவிருந்த UL 266 ஆகிய வானூர்தி சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

பயணிகளுக்கான அறிவுறுத்தல்

இதேவேளை பயணிகள் மேலதிக விபரங்கள் மற்றும் மாற்று ஏற்பாடுகள் குறித்து அறிந்து கொள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 24 மணிநேர தொடர்பு மையத்தை 1979 எனும் இலக்கத்தினூடாகத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நேற்று (04) விமான நிலையத்திலிருந்து துபாய்க்கு 04 விமானங்கள் இயக்கப்பட்டதாக விமான நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

இதேபோல், மஸ்கட்டிலிருந்து ஸ்மார்ட் விங்ஸ் விமானம் 3.Z.- 7648 சரக்கு சுமையுடன் ஓமானின் மஸ்கட்டிலிருந்து ஃபிட்ஸ் ஏர் விமானம் 8.D.- 822 ஆகியவை 133 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களை ஏற்றிக்கொண்டு அதிகாலை 12.05 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தன.

இதற்கு கூடுதலாக, துபாயிலிருந்து ஃப்ளை துபாய் விமானம் F.Z.- 569 மற்றும் எமிரேட்ஸ் விமானம் EK- 654 முறையே மாலை 4.50 மணிக்கும் 6.45 மணிக்கும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைய திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் இந்திய வம்சாவளி மாணவி உட்பட 4 பேர் பலி!!

அமெரிக்காவின் Texas மாநிலத்தில் பயங்கரவாதத் தாக்குதல் என சந்தேகிக்கப்படும் துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர்.

வெஸ்ட் சிக்ஸ்த் ஸ்டீரித் பகுதியில் கடந்த மார்ச் 1 அதிகாலை மர்ம நபர் ஒருவர் திறந்தவெளியில் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதலில் University of Texasயில் முதுகலை பட்டம் படித்து வந்த இந்திய வம்சாவளி மாணவி சவிதா சன்முகசுந்தரம் (21) உயிரிழந்தார்.

மேலும் ரைடர் ஹாரிங்டன் (19) உள்ளிட்ட 4 பேர் பலியாகினர். அமெரிக்க அதிகாரிகள் இரு பேரின் அடையாளங்களை மட்டுமே அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.

தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் செனீகல் நாட்டில் பிறந்து அமெரிக்க குடியுரிமை பெற்ற நிடியாகா டியாக்னே (53) என்பவரை போலீசார் சுட்டுக்கொன்றனர்.

சம்பவ இடத்திலும் அவரது இல்லத்திலும் இருந்து ஈரான் நாட்டுக் கொடி மற்றும் தீவிரவாத குறிப்புகள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், இது அரசியல் நோக்கத்துடன் நடைபெற்ற தாக்குதலாக இருக்கலாம் என அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

சற்று முன்னர் வெளியான தகவல் இலங்கை கடலில் மூழ்கிய ஈரானிய கப்பல் – தகவல்கள் பிழையென கடற்படை தெரிவிப்பு!!

இலங்கை கடற்பரப்பில், ஈரான் கப்பல் மீதான நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல் குறித்த முந்தைய அறிக்கையில் சில திருத்தங்கள் இருப்பதாக இலங்கை கடற்படை சற்று முன்னர் தெரிவித்துள்ளது.

இலங்கை கடற்கரையில் ஈரானிய போர்க்கப்பல் மீதான நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதலுக்குப் பிறகு குறைந்தது 101 பேர் காணாமல் போயுள்ளதாகவும் 78 பேர் காயமடைந்துள்ளதாகவும் இலங்கை கடற்படை கூறியதாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், முன்னர் கொடுக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் சரியானவை அல்ல என்று கடற்படை செய்தித் தொடர்பாளர் புத்திக சம்பத் தற்போது தெரிவித்துள்ளார்.

அதன்படி, சம்பவத்தில் காயமடைந்த 32 பேர் கடற்படையால் மீட்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக செய்தித் தொடர்பாளர் கூறுகிறார்.

தகவல் அறிந்து குறித்த பகுதிக்கு நாங்கள் சென்றிருந்த போது, கப்பல் மூழ்கியிருந்ததாகவும் அதன்போது நீரிற்குள் தேடலில் ஈடுபட தொடங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன்போதே நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த மக்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்ததாக என குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், குறித்த பகுதியில் இருந்து 32 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் சில சடலங்களும் மீட்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், மீட்கப்பட்ட சடலங்கள், ஈரானிய போர்க்கப்பலில் பயணித்தவர்களாக இருக்கலாம் என தாங்கள் சந்தேகிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை இன்னும் நடந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.