பகலில் சாதாரண மனிதன், இரவில் பல்லி முகம் கொண்ட மனிதன் : இந்தோனேசியாவில் ஆச்சரியம்!!

இந்தோனேசியாவில் ஆண் ஒருவருக்கு காலையில் ஒரு முகமும், இரவில் ஒரு முகமும் மாறி மாறி தோன்றும் விசித்திர தன்மை உருவாகியுள்ளது. இந்தோனேசியாவில் முராங் என்பவரது குடும்ப கதை மிகவும் ஆச்சரியம் நிறைந்ததாக உள்ளது.

அதாவது முராங் குடும்பத்தின் உறுப்பினர்கள் பகலில் ஒரு முகத்துடனும், இரவில் மற்றொரு முகத்துடனும் வாழ்கின்றனர். உள்ளூர்வாசிகள் இவற்றை பல்லிகளின் முகங்கள் என்று கருதி வருகின்றனர்.

இந்தோனேசியாவின் தொலைதூரப் பகுதியை சேர்ந்தவர் சூர்யா முராங் என்ற நபர் 12 வயது வரை சாதாரணமாக இருந்த நிலையில், அதன் பிறகு இந்த முகம் மாறும் விசித்திர மாற்றம் ஏற்பட்டுள்ளது.

பகல் நேரங்களில் சாதாரணமாகவும், இரவில் கண்கள் வீங்கி, தோல் இறுக்கமடைந்து, முகம் பல்லியைப் போல மாறத் தொடங்கி விடுகிறது. காலை முழுவதும் சாதாரண மனிதரை போல இருக்கும் இவர் , இரவில் மட்டும் பல்லியின் முகத்தை கொண்டவர் போல் மாறிவிடுகிறார்.

இந்த விசித்திரமான மாற்றம் அவருக்கு மட்டுமல்லாமல், அவரது குழந்தைக்கும் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

87 வயதில் தந்தையான நபர் : மனைவிக்கு வயது 37 : வியக்க வைக்கும் சொத்து மதிப்பு!!

சீனாவைச் சேர்ந்த பிரபல ஓவியரான ஃபேன் செங், தனது 87வது வயதில் தந்தையாகியுள்ளார். பாரம்பரிய சீன ஓவியங்களுக்கு புகழ்பெற்ற கலைஞர் ஃபேன் செங் (Fan Zeng).

இவருடைய ஓவியங்கள் 2008 முதல் 2024ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 4 பில்லியனுக்கும் அதிகமான யுவானுக்கு ஏலம் போயின.

இந்த தொகையானது இந்திய மதிப்பில் சுமார் 5,000 கோடி ரூபாய் ஆகும். குறிப்பாக, இவர் 1991யில் வரை ஒரு ஓவியம் 18.4 மில்லியன் யுவானுக்கு (2011யில்) விற்கப்பட்டது.

87 வயதான ஃபேன் செங் 37 வயது பெண்ணான சூ மெங்குடன் திருமண உறவில் வாழ்ந்து வருகிறார். இந்த தம்பதிக்கு கடந்த 11ஆம் திகதி குழந்தை பிறந்தது. இதனை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ஃபேன் செங் அறிவித்தார்.

ஆனால், தனது ஒரே மகன் என்று அவர் கூறியது சர்ச்சையானது. ஏனெனில், ஃபேன் செங்கிற்கு ஏற்கனவே சியாவோஹுய் என்ற மகளும், ஃபேன் சோங்டா என்ற வளர்ப்பு மகனும் உள்ளனர்.

என்றாலும், அவர்களுக்கும் தனக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்றும், அவர்களின் குடும்பங்களுடனான உறவுகளை முழுமையாகத் துண்டிப்பதாகவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.

திருமணமான ஒரு மாதத்தில் பரிதாபமாக பறிபோன 26 வயதுப் பெண்ணின் உயிர்!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா அடுத்துள்ள மல்லசந்திரா பகுதியை சேர்ந்தவர் லிகித் சிம்ஹா (27). இவருக்கும் நாகமங்களாவை சேர்ந்த ஐஸ்வர்யா (26) என்பவருக்கும் கடந்த நவம்பர் மாதம் இறுதியில் இரு வீட்டார் பெற்றோர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் ஐஸ்வர்யா தனது கணவருடன் மல்லசந்திராவில் வசித்து வந்தார். இந்நிலையில் இருவரது வாழ்க்கை சிறப்பாக சென்றுக்கொண்டிருந்த நிலையில் சந்தேகம் என்ற கொடூரன் புகுந்தான். அதாவது லிகித் சிம்ஹா, ஐஸ்வர்யாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு அவ்வப்போது தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

மேலும் ஐஸ்வர்யாவை அடித்து, உதைத்து துன்புறுத்தி வந்துள்ளார். நாளுக்கு நாள் இவரது டார்ச்சர் தாங்க முடியாததால் ஐஸ்வர்யா தனது பெற்றோரை தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்தை தெரிவித்தார். இதனை கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் சம்பவத்தன்று காலையில், ஐஸ்வர்யாவின் பெற்றோர் மல்லசந்திராவுக்கு வந்து லிகித் சிம்ஹாவிடம் அட்வைஸ் செய்து வைத்து இருவரையும் ஒன்று சேர்த்து வைத்தனர்.

பின்னர் அவர்கள் மாலையில் வீடு திரும்பிய பின்பு மீண்டும் கணவன்-மனைவி இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த லிகித் சிம்ஹா, ஐஸ்வர்யாவை கொடூரமாக தாக்கியுள்ளார்.

இதனால் வாழ்க்கையே வெறுத்துப்போன ஐஸ்வர்யா கணவர் வெளியில் சென்றதும் தனது சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பின்னர் கணவர் வீட்டுக்கு வந்து பார்த்த போது மனைவி தற்கொலை செய்துகொண்டதை பார்த்து அதிர்ச்சியில் அலறி கூச்சலிட்டு அழுது கதறினார்.

இதுகுறித்து ஐஸ்வர்யாவின் பெற்றோரை செல்போனில் தொடர்பு தெரிவித்ததை அடுத்து போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஐஸ்வர்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் தனது மகள் ஐஸ்வர்யாவின் பெற்றோர் மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனர். இதனையடுத்து லிகித் சிம்ஹாவை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணமாகி 10 நாளில் மனைவியை தலையணையையால் கொலை செய்த கணவன் எடுத்த விபரீத முடிவு!!

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே மூன்றாம் கட்டளை தளபதி தெருவில், புதிதாக திருமணம் செய்த தம்பதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கணினி மென்பொறியாளரான விஜய் (25), தனது அலுவலக சக ஊழியரான யுவஸ்ரீ (21)யை கடந்த டிசம்பர் 13-ம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டார். இருவரும் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தனர்.

செவ்வாய்க்கிழமை யுவஸ்ரீயின் தங்கை வீட்டிற்கு சென்ற போது, வீடு பூட்டியிருந்தது. பலமுறை கதவைத் தட்டியும் திறக்கப்படாததால் சந்தேகமடைந்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் பேரில் வந்த குன்றத்தூர் போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்ற போது, யுவஸ்ரீ உயிரிழந்த நிலையில் கிடந்தார். விஜய் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்திருந்தார்.

முதற்கட்ட விசாரணையில் குடும்ப தகராறு காரணமாக யுவஸ்ரீயை தலையணையால் மூச்சுத் திணறடித்து கொன்றுவிட்டு, விஜய் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவில் இந்திய வம்சாவளிப் பெண் கொலை : காதலன் தலைமறைவு!!

கனடாவின் டொரோண்டோ மாகாணம் மேற்கு வெல்லிங்டன் பகுதியைச் சேர்ந்த இந்திய வம்சாவளி இளம்பெண் ஹிமன்ஷி ஹரனா (30) கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹிமன்ஷியும் அப்துல் ஹபாரி (32) என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றிய நிலையில் ஹிமன்ஷியை அப்துல் கொலை செய்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறியதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதனிடையே ஹிமன்ஷி காணாமல் போனதாக அவரது உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் தேடுதல் நடத்திய போலீசார், மறுநாள் காலை வீட்டில் ஹிமன்ஷியின் சடலத்தை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. காதலியை கொலை செய்துவிட்டு தலைமறைவான அப்துல் ஹபாரியை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜீமெயில் நிறுவனத்தினால் பயனர்களுக்கு வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான செய்தி!!

தாங்கள் பயன்படுத்தி வரும் Gmail மின்னஞ்சல் முகவரியின் பெயரை மாற்ற விரும்பினாலும், இதுவரை அதற்கான வாய்ப்பு இல்லாமல் இருந்த பயனர்களின் நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு வழங்க, கூகுள் நிறுவனம் தற்போது தயாராகி வருகிறது.

இந்த புதிய வசதி நடைமுறைக்கு வந்ததும், தற்போது பயன்படுத்தப்படும் மின்னஞ்சல் முகவரிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல், அதில் தேவையான பெயரை மாற்றிக் கொள்ளும் வாய்ப்பு உருவாகும் என தெரிவிக்கப்படுகிறது.

இதன் மூலம், புதிய கணக்கொன்றை உருவாக்காமல், ஏற்கனவே உள்ள கணக்கின் தகவல்களை மாற்றாமல், புதிய ஜீமெயில் பயனர் பெயரைத் தேர்வு செய்ய பயனர்களுக்கு முடியும்.

அதன்படி, பயனர்கள் தங்களின் தற்போதைய @gmail.com மின்னஞ்சல் முகவரியை புதிய Gmail முகவரியாக மாற்றிக் கொள்ளும் வசதி பெறவுள்ளனர்.

எனினும், இந்த வசதி @gmail.com என முடியும் மின்னஞ்சல் முகவரிகளை பயன்படுத்துவோருக்கு மட்டுமே பொருந்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது. Custom domain, அலுவலகம் மற்றும் பாடசாலை மின்னஞ்சல் முகவரிகளின் பெயர்களை இந்த முறையில் மாற்ற முடியாது.

மேலும், புதிய மின்னஞ்சல் முகவரியும் @gmail.com என முடிவடைய வேண்டியதுடன், இந்த புதிய முறையை தவறாக பயன்படுத்துவதைத் தடுக்க கூகுள் நிறுவனம் சில வரம்புகளையும் விதித்துள்ளது.

அதன்படி, ஒரு @gmail பயனர் பெயரை மாற்றிய பின்னர், 12 மாதங்கள் கழித்தே மீண்டும் மாற்றம் செய்ய அனுமதி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த காலக்கெடுவுக்குள், தேவையெனில் பழைய மின்னஞ்சல் முகவரிக்கு திரும்புவதற்கே மட்டுமே அனுமதி வழங்கப்படும் என கூகுள் தெரிவித்துள்ளது.

மீண்டும் ஒரு சூறாவளி அபாயம் வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!!

‘டித்வா’ சூறாவளி போன்று எதிர்காலங்களிலும் பாரிய சூறாவளி ஏற்படலாம் என அவுஸ்திரேலியாவின் மேற்கு பல்கழைக்கலகத்தின் பேராசிரியர் சரித்த பட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் சரித்த பட்டியாராச்சி, இலங்கையில் சுனாமி ஏற்படுவதை முன் கூட்டியே அறிந்து கொள்வதற்கான திட்டத்தை உருவாக்கியவராவார்.

அத்துடன் கடல்சார் ஆராய்ச்சிக்கான அறிவியலில் பட்டம் பெற்றுக் கொண்ட முதல் இலங்கை பேராசிரியரும் ஆவார். மேலும் அவுஸ்திரேலியாவில் சிறந்த விஞ்ஞானிக்கான பட்டத்தையும் பெற்றுக் கொண்டவராவார்.

இணையத்தினூடாக கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர்,”வங்காள விரிகுடாவில் நவம்பர் மாதங்களில் தாழமுக்கம் ஏற்படுவது வழமையாகும். அது சில நேரம் சூறாவளியாக மாற்றமடையும்.

இம்முறையும் வங்காள விரிகுடாவில் நவம்பர் மாதத்தில் இரு தாழமுக்கம் ஏற்பட்டது. ஒன்று காலியிலும் மற்றையது ஹம்பாந்தோட்டையிலும் உருவானது. இந்த இரண்டும் இணைந்ததாலே சூறாவளி ஏற்பட்டது.

அதன் பின்னர் அந்த சூறாவளி வடக்கை நோக்கி நகர்ந்தது.இது மெதுவாக நாட்டை கடந்து செல்லும் தன்மையை கொண்டிருந்ததால்.மழை வீழ்ச்சி அதிகரித்து. இந்த காரணங்களாலே பாதிப்பு அதிகமாகியது.

இந்த நிலையில் எதிர்காலங்களிலும் பாரிய சூறாவளி ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே இது தொடர்பில் முன் கூட்டியே பொது மக்களுக்கு அறிவிக்ககூடிய கட்டமைப்பை உருவாக்குவதே சிறந்த தீர்வாகும்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா மாணவன் சசிகுமார் டனுசன் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனை!!

35வது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் போது 1500 மீற்றர் ஒட்டப் போட்டியில் தங்கப்பதத்தினையும் , 800மீற்றர் ஒட்டப்போட்டில் வெள்ளிப்பதக்கத்தினையும் வவுனியா மாவட்ட வீரரான சசிகுமார் டனுசன் தம்வசமாக்கியுள்ளார்.

தியாகம மகிந்த ராஜபக்ச சர்வதேச விளையாட்டு மைதானத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இவ் விளையாட்டு விழாவில் 1500 மீற்றர் ஒட்டப்போட்டியில் நான்கு நிமிடம் 2.63 செக்கனில் ஓடி முடித்து தங்கப்பதக்கத்தினையும் 800 மீற்றர் ஒட்டப்போட்டியில் ஒரு நிமிடம் 56.90 செக்கனில் ஒடி முடித்து வெள்ளிப்பதக்கினையும் பெற்று வவுனியா மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

இவ்வருட வட மாகாண மட்ட விளையாட்டு பெருவிழாவின் போதும் 1500 மீற்றர் , 800 மீற்றர் ஆகிய ஒட்டப் போட்டிகளில் பழைய சாதனையினை முறியடித்து புதிய சாதனையினை வவுனியா மாவட்ட வீரரான சசிகுமார் டனுசன் தம்வசப்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் வீதியோர வியாபார நடவடிக்கையை கடுப்படுத்த மாநகரசபை நடவடிக்கை!!

வவுனியாவில் வீதியோர வியாபாரங்களை அகற்றும் செயற்பாட்டினை வவுனியா மாநகரசபை நேற்று முன்னெடுத்திருந்தது.

நத்தார் பண்டிகை மற்றும் புத்தாண்டு வியாபாரம் வவுனியாவில் களை கட்டியுள்ள நிலையில் வர்த்தக நிலையங்களிற்கு முன்பாக நடைபாதையை தடை செய்யும் முகமாக கொட்டகை அமைத்து வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அத்துடன், வீதியோரங்களிலும் பொதுமக்களிற்கு இடையூறு ஏற்படும் வகையில் அங்காடி வியாபார நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன் காரணமாக பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருவதுடன், விபத்துக்களும் ஏற்படும் ஏற்பட்டுள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு மாநகர சபையினரால் நடைபாதை மற்றும் வீதியோரங்களை ஆக்கிரமித்து வியாபார நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் கொட்டகைகள் மற்றும் பொருட்களை அகற்றும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

மாநகர ஆணையாளரின் உத்தரவுக்கமைய வருமானவரி பரிசோதகர்கள், பொதுசுகாதார பரிசோதகர்கள், உட்பட உத்தியோகத்தர்கள் இச் செயற்பாட்டை முன்னெடுத்திருந்தனர்.

வவுனியாவில் மீண்டும் மூடப்பட்ட பீட்சா உணவகம் : மாநகரசபை தொடர் நடவடிக்கை!!

வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ள சர்வதேச நிறுவனத்தின் பீட்சா உணவகம் இரண்டாவது தடவையாகவும் வவுனியா மாநகரபையினால் மூடப்பட்டுள்ளது.

உணவகம் அமைந்துள்ள குறித்த கட்டிடம் அனுமதிப்பத்திரத்திற்கு முரணாக அமைக்கப்பட்டுள்ளது, குடிபுகு சான்றிதழ் இன்மை, சுற்றுச்சூழல் உரிமம், வியாபார உரிமம் இன்மை என பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி கடந்த 2024.12.05 அன்று வவுனியா மாநகரசபையினால் உணவகத்தினை மூடி அறிவித்தல் ஒட்டப்பட்டிருந்தன.

இந்நிலையில் பல மாதங்களாக இயங்காத நிலையில் காணப்பட்ட இவ் பிரபல பீட்சா உணவகம் கடந்த இரு வாரத்திற்கு முன்பாக மீண்டும் வியாபாரத்தினை ஆரம்பித்த சமயத்தில் வவுனியா மாநகரசபை ஆணையாளர் சாந்தசீலனால் மீண்டும் அறிவித்தல் ஒட்டப்பட்டு உணவகம் மூடப்பட்டுள்ளது.

1982ஆம் ஆண்டின் 4ஆம் இலக்க மற்றும் 1984ஆம் ஆண்டின் 44ஆம் இலக்கச் சட்டத்தின் மூலம் திருத்தம் செய்யப்பட்ட 1978ஆம் ஆண்டின் 41 ஆம் இலக்க நகர அபிவிருத்தி அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் குடிபுக சான்றிதழ் பெறப்படாமல் இயக்கப்படுவதாக தெரிவித்து குறித்த வர்த்தக நிலையத்தின் இரு பிரதான வாயில்களும் திறக்க முடியாத வண்ணம் வாயிலில் இவ் அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளது.

வவுனியாவில் கிராம சேவையாரிடம் 25000 ரூபா கொடுப்பனவு கோரி கடமைக்கு இடையூறு : ஒருவர் விளக்கமறியலில்!!

வவுனியா நகரம் வடக்கு கிராம அலுவலகத்திற்கு கிராம சேவையாளரிடம் 25000 ரூபா கொடுப்பனவு கோரி கடமைக்கு இடையூறு விளைவித்த நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

‘டித்வா’ புயலுக்கு பின்னர் வீடுகளை சீரமைப்பதற்கும் அரசாங்கத்தினால் வழங்கப்படும் 25,000 ரூபா கொடுப்பனவு கிராம சேவையாளர்களுடாக வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அனைத்து கிராம சேவையாளர் பிரிவிலும் இவ் கொடுப்பனவுகளை கிராம சேவையாளர்கள் ஊடாக வழங்கி வருகின்றனர்.

வவுனியா நகரம் வடக்கு கிராம அலுவலகத்திற்கு சென்ற நபரொருவர் தனக்கு 25,000 ரூபா கொடுப்பனவு தர வேண்டுமென கிராம சேவையாளரின் கடமைக்கு இடையூறு விளைவிக்கும் முகமாகவும், கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் செயற்பட்டதாக தெரிவித்து குறித்த நபருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டது.

கிராம சேவையாளரின் முறைப்பாட்டிற்கமைய கைது செய்யப்பட்ட குறித்த நபர் பொலிஸாரினால் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட சமயத்தில் குறித்த நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்

தென்னிலங்கையில் பேருந்து விபத்து : 30 பேர் காயம் : சாரதி தப்பியோட்டம்!!

தென்னிலங்கையில் சம்பவித்த பேருந்து விபத்தில் 30 பேர் காயம் அடைந்துள்ள நிலையில், அதன் சாரதி தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாத்தறை-பெலியத்த பிரதான வீதியில் ஹந்தபன்கொடெல்ல பகுதியில் இன்று பிற்பகல் வேளையில் விபத்து ஏற்பட்டுள்ளது.

வீரகெட்டிய பகுதியிலிருந்து மாத்தறை நோக்கிச் சென்ற தனியார் பேருந்தும், மாத்தறையிலிருந்து பெலியத்த நோக்கிச் சென்ற டிப்பர் லொறியும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து நிகழ்ந்துள்ளது.

டிப்பர் லொறியும் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 30 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காயமடைந்தவர்களை உடனடியாக திக்வெல்ல மற்றும் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு வாகனங்களும் நேருக்கு நேர் மோதியுண்டமையினால் கடுமையாக சேதம் அடைந்துள்ளன. இந்நிலையில் தப்பியோடிய பேருந்தின் சாரதியை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

பிரான்ஸ் வாழ் தமிழர்களுக்கு பெருமை சேர்ந்த ஈழத்தமிழ்ச் சிறுமி!!

டுபாயில் நடைபெற்ற ஏழாவது Roll ball உலகக் கிண்ண போட்டியில் பிரான்ஸின் அணியின் சார்பில் ஈழத்தமிழ் சிறுமி ஒருவர் பங்கேற்று தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

பரிஸ் – பொன்டியில் வசிக்கும் 15 வயதான சானுக்கா ஜெயமன் என்ற சிறுமியே இந்த பெருமையை பெற்றுள்ளார்.

மன்னாரை சேர்ந்த குடும்பத்தை பின்புலமாக கொண்ட சானுக்கா Roll ball போட்டியில் பிரான்ஸ் அணியில் இணைந்து விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதற்கமைய கடந்த 14ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரையில் நடைபெற்று சுற்றுத்தொடரில் பிரான்ஸ் அணி சார்பாக அவர் விளையாடியுள்ளார். மன்னாரில் வசித்த காலத்தில் முறையான பயிற்சிகளை பெற்ற சானுக்கா, பிரான்ஸிலும் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

இதன் காரணமாக பிரான்ஸ் வந்து குறுகிய காலத்திற்குள் France Roll ball அணியொன்றில் விளையாடும் வாய்ப்பினை அவர் பெற்றுள்ளார்.

கோர விபத்தில் தாயும் பிள்ளைகளும் பலி – காயங்களுடன் உயிர் தப்பிய தந்தை!!

தெஹியத்தகண்டிய-மஹியங்கனை பிரதான வீதியில் ஏற்பட்ட விபத்தில், முச்சக்கர வண்டியில் பயணித்த தாயும் பிள்ளைகளும் உயிரிழந்துள்ளனர்.

தந்தை மட்டும் காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில், ஏனையவர்கள் ஒன்றாகவே உயிரிழந்தமை அந்தப் பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த 17ஆம் திகதி ஏற்பட்ட விபத்தில் தாயும் பிள்ளையும் ஸ்தலத்தில் பலியானதுடன், மற்றுமொரு பிள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

குடும்பமாக முச்சக்கர வண்டியில் சென்ற போது விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்த சாரதியான தந்தை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்தில் டிஸ்னா ஐரங்கனி என்ற இளம் தாயும் 10 வயதான பிம்சார சதேவ் அபேவர்தன, 4 வயதான செத்மினா டின்ஷான் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் இறுதிக்கிரிகைகள் ஒன்றாக நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் உயிரிழந்த மாணவன், புலமைப்பரிசில் தேர்வில் 163 மதிப்பெண்களைப் பெற்று பாடசாலைக்கு பெருமை தேடிக்கொடுத்த திறமையானவர் என பாடசாலையின் அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த மாணவனுக்கு சிறந்த எதிர்காலம் இருப்பதாக நாம் எண்ணியிருந்த நிலையில், இந்த துயர சம்பவம் ஏற்பட்டுள்ளதாக அதிபர் கவலை வெளியிட்டுள்ளார்.

கிறிஸ்துமஸ் தினத்தில் உலகம் அழியுமாம் : அதிர்ச்சியை கிளப்பிய தீர்க்கதரிசி!!

உலகமெங்கும் உள்ள மக்கள் நாளை கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடும் நிலையில் நாளை ராட்சச வெள்ளத்தின் மூலம் கடவுள் உலகத்தை முடிவுக்கு கொண்டு வரப் போகிறார் என தன்னைத்தானே தீர்க்கதரிசி என சொல்லிக் கொள்ளும் கானா நாட்டை சேர்ந்த எபோ நோவா (eboh noah)என்பவர் பகீர் தகவலை கூறியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல நாடுகளிலும் அவ்வப்போது ஏற்பட்டும் இயற்கை பேரழிவுகள் சுனாமி, தீ பிடிப்பது, மழை வெள்ளத்தால் மக்கள் மடிவது, மண் சரிவு ஏற்பட்டு மக்கள் இறப்பது என பல இயற்கை பேரழிவுகளால் மக்கள் உயிரிழப்பு ஏற்படும்.

அவற்றில் இருந்து மக்களை பாதுகாக்கலாமே தவிர நடப்பதை தடுக்க முடியாது. அதேசமயம் இன்னமும் இயற்கை பேரழிவுகளை முழுதாக கணிக்கும் அளவுக்கு உலக விஞ்ஞானமும் முன்னேறவில்லை.

ஒருபக்கம் உலக பேரழிவுகளை கணிப்பதாக சில தீர்க்கதரிசிகளும் உலக நாடுகளில் இருக்கிறார்கள். பல்கேரிய தீர்க்கதரி பாவா வாங்கா கணிப்புக்கள் உலகளவில் அதிகம் மக்களால் நம்பப்படுகின்றது.

இந்த வருடம் சுனாமி வரும், இந்த வருடம் மழை வெள்ளத்தில் மக்கள் இறந்து போவார்கள், இந்த வருடம் அரசியலில் பெரும் மாற்றம் ஏற்படும், இந்த வருடம் ஒரு முக்கிய அரசியல் தலைவர் இறந்து போவார் என்றெல்லாம் அவர்கள் ஜோதிடம் சொல்வார்கள்.

அதில் ஆச்சரியப்படும் வகையில் அவற்றில் ஒரு சில விஷயங்கள் நிஜத்தில் நடப்பதும் உண்டு. அப்படி நடக்கும் போது அவர்களை கடவுளாக சிலர் வணங்குகி அவர்களை பின்பற்றுகிறார்கள்.

இவ்வாறான நிலையில் தான் கிறிஸ்துமஸ் தினமான நாளை ராட்சச வெள்ளத்தின் மூலம் கடவுள் உலகத்தை முடிவுக்கு கொண்டு வரப் போகிறார் என கானா நாட்டை சேர்ந்த எபோ நோவா என்பவர் கூறியுள்ளார்.

அழிவுக்குப் பின் பூமியில் மீண்டும் மக்களை குடியமர்த்த பைபிளில் வருவது போல 8 நோவா பேழைகளை கட்ட கடவுள் தன்னை பணியமர்த்தியிருப்பதாகவும் அவர் கூறியதால் அவரை பின்தொடர்பவர்கள் தங்களை சொத்துக்களை விற்று அவருக்கு பணங்களை கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு மருத்துவமனையில் உயிரிழந்த சிறுமி : தோழியின் உடலை சுமந்துசென்ற மாணவிகள்!!

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிறுமியொருவர் உயிரிழந்துள்ளமை மருத்துவமனையின் தவறு என்றும் சிறுமி உயிரிழப்பிற்கு சரியான நீதிவேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு சிலாவத்தையில் கடந்த 20.12.2025 அன்று உணவு ஒவ்வாமை காரணமாக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுதிக்கப்பட்ட 12 அகவை சிறுமி ஒருவர் 21.12.2025 அன்று உயிரிழந்துள்ளார்.

எனவே, இந்த சிறுமி உயிரிழப்புக்கு நீதியான விசாரணை தீர்வு வழங்கப்படவேண்டும் என சிலாவத்தை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே மக்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

இறந்த சிறுமிக்கு ஒரு நீதியான தீர்வு கிடைக்கவேண்டும் வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்படும் பிள்ளைகளுக்கு இதேமாதிரி எதிர்காலத்தில் நடக்கக்கூடாது.

போரில் அடிபட்டு இறந்துவிட்ட நிலையில் இப்போது ஒவ்வொரு உயிராக வளர்த்துக்கொண்டிருக்கின்றோம். கவனயீனத்தினால் பிள்ளைகள் செத்துக்கொண்டிருப்பார்களானால் இதனை நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கமாட்டோம்.

இதற்கான தீர்வினை மருத்துவமனை அதிகாரிகள் தரவேண்டும் தவறும் பட்சத்தில் சிலாவத்தை மக்கள் யார் என்பதை இந்த அரசாங்கத்திற்கு காட்டிக்கொள்வோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இந்த நிலையில் குறித்த சிறுமியின் இறுதி நிகழ்வுகள் (24) இன்று சிலாவத்தை பகுதியில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்றுள்ளது.

பெருமளவான மக்கள்,பாடசாலை மாணவர்கள் கண்ணீர்மல்க சிறுமியின் உடல் வீதிவழியாக பாடசாலைமாணவிகள் மாணவர்கள் ஆசிரியர்கள் ஆகியோர் காவிச்சென்று சிலாவத்தை தமிழ்வித்தியாலயம் மாணவி கல்விகற்ற பாடசாலைக்கு முன்பாக நின்று அஞ்சலி செய்தபின்னர் உடலம் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.