கஹவ மற்றும் அக்குரல ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையில் உள்ள ரயில் பாதையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து இன்று வெள்ளிக்கிழமை (31.10.2025) காலை 09.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கவனக்குறைவாக செலுத்தப்பட்ட முச்சக்கரவண்டி ஒன்று பெலியத்தையிலிருந்து மருதானை நோக்கிப் பயணித்த ரயிலுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இறைச்சிகளை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மாலம்பே, அரங்கல பிரதேசத்தில் உள்ள கால்வாயில் கவிழ்ந்து கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று புதன்கிழமை (29.10.2025) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி கால்வாயில் கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் போது காரில் பயணித்த இரண்டு பேர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
திருகோணமலை உட்துறைமுக வீதியில் இன்று (30.10.2025) காலை மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. கார் – பட்டா – மோட்டார் சைக்கிள் ஆகிய மூன்று வாகனங்களே ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயங்களுடன் திருகோணமலை வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து குறித்து, மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மொனராகலை பிரதேசத்தில் காதலனை தாக்கி வலுக்கட்டாயமாக விஷம் கொடுத்ததாகக் கூறப்படும் காதலியும், அவரது இரண்டு சகோதரிகள் மற்றும் உறவினர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
29, 32 மற்றும் 36 வயதுடைய மூன்று பெண்களும், 25 வயதுடைய ஒரு ஆணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குடும்ப தகராறு காரணமாக ஒருவர் விஷம் குடித்து மொனராகலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கினர்.
பிரேத பரிசோதனை போது அது திட்டமிட்ட கொலை என்று தெரியவந்ததாகவும் வலுக்கட்டாயமாக விஷம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக் கொலை செய்ய உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண் வழக்கறிஞர் தமாரா, கெஹல்பத்தர பத்மேவின் நண்பரான தருன் என்ற பாதாள உலகக் குற்றவாளியின் தலைமையில் செயற்பட்டமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
சஞ்சீவவைக் கொல்ல துப்பாக்கியை மறைப்பதற்காக குற்றவியல் நடைமுறைச் சட்டப் புத்தகத்தின இரண்டு பிரதிகளை இஷாரா செவ்வந்திக்கு இந்த வழக்கறிஞர் வழங்கியது தெரியவந்துள்ளது.
இந்த சந்தேக நபர் இஷாரா செவ்வந்திக்கு போலி வழக்கறிஞர் அடையாள அட்டை, வழக்கறிஞர்களுக்கு வழங்கப்பட்ட வாகன நுழைவு அனுமதி மற்றும் வழக்கறிஞர்களின் உடைகளில் பொருத்தப்படும் 2 டைகளையும் வழங்கியது தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் கெஹல்பத்தர பத்மேவுக்கும் அவரது நெருங்கிய ஒருவரான தருனுக்கும் இடையே சிறிது காலமாக உறவுகளைப் பேணி வந்துள்ளார். பத்மேவின் ஆலோசனையின் பேரில், இந்த வழக்கறிஞர் சஞ்சீவவின் கொலைக்கு உதவ முன்வந்துள்ளார்.
தருனின் ஆலோசனையின் பேரில், இந்த வழக்கறிஞர் இஷாரா செவ்வந்தியை சந்தித்து சஞ்சீவவின் கொலைக்குத் தேவையான வசதிகளை வழங்கியுள்ளார்.
அதற்கமைய, சஞ்சீவவின் கொலைக்கான துப்பாக்கியை நீதிமன்றத்திற்கு இரகசியமாக எடுத்துச் செல்ல குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 2 பிரதிகள் வழங்கப்பட்டுள்ளன.
சஞ்சீவ கொலைக்கான துப்பாக்கியை மறைப்பதற்காக கொலையாளி இந்த பிரதிகளில் ஒன்றின் உள் பக்கங்களை வெட்டி எடுத்துள்ளார்.
மேலும், நீதிமன்றத்திற்குள் நுழைவதற்காக வழக்கறிஞர்கள் சங்கத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை போலியாக உருவாக்க இஷாரா செவ்வந்தி ஏற்பாடு செய்துள்ளார்.
இந்த நிலையில் நீதிமன்ற வளாகத்திற்குள் வாகனம் நுழைய வழக்கறிஞர்களுக்கு வழங்கப்பட்ட வாகன நுழைவு அனுமதியையும் இந்த வழக்கறிஞர் வழங்கியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
கொலையை செய்த கமாண்டோ சாலிந்து வழக்கறிஞர் சீருடை அணிய தேவையான இரண்டு டைகளையும் வழக்கறிஞர் செவ்வந்திக்கு வழங்கியதாக புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சஞ்சீவ கொலைக்கு உதவிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இஷாராவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த வழக்கறிஞர் பற்றிய தகவல்கள் வெளியாகின.
அதற்கமைய, நேற்று முன்தினம் இரவு கடவத்தை பகுதியில் நடந்த சோதனையின் போது விசாரணை அதிகாரிகள் இந்த வழக்கறிஞரை கைது செய்ய முடிந்தது.
குற்றப் புலனாய்வுத் துறை இது தொடர்பாக விசாரணைகளை நடத்தி வருகிறது.
பத்மே மற்றும் பாதாள உலகக் கும்பல் டுபாயில் இருந்தபோது, பேலியகொட குற்றப் பிரிவின் அதிகாரி லிண்டன் சில்வாவை மிரட்டி வெளியிட்ட குரல் பதிவு சமீபத்திய நாட்களில் பரவியது.
அந்த பதிவில், லிண்டனை திட்டி கொலை மிரட்டல் விடுத்தது தருன் என்பதும் குறிப்பிடத்தக்கது. பத்மே மற்றும் அவரது கும்பல் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டபோது தருன் டுபாயில் இருந்ததுடன், அவர் இன்னமும் டுபாயில் இருப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன், வெளிநாட்டிலிருந்து தற்காப்புக்காக மூன்று ஆபத்தான மிளகு ஸ்ப்ரேக்கள் (pepper spray) மற்றும் மிளகு தோட்டாக்களை கொண்டு வர அனுமதிக்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ரிவால்வர் வகையிலான இந்த உபகரணம் நீண்ட தூரம் மிளகை ஸ்பிரே செய்யக்க கூடியதாகும் என அதன் தன்மையை குறிப்பிட்டு தான் கொள்வனவு செய்த இதை அனுமதிக்குமாறு கோரி அக்டோபர் 18 ஆம் திகதி பொலிஸ்மா அதிபர் வீரசூரியவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், இலங்கை சுங்க விதிமுறைகளின்படி இதுபோன்ற பொருட்களை இறக்குமதி செய்வதற்கு முன் அங்கீகாரம் தேவை என்பதை வாங்கும் நேரத்தில் தனக்குத் தெரியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், பாதுகாப்பு அமைச்சின் பாதுகாப்பு மதிப்பீட்டை மேற்கோள்காட்டி, தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களில் எம்.பி.க்கு அச்சுறுத்தல் இருப்பதாக இதுவரை வெளிப்படுத்தவில்லை என்றும்,
அது குறைந்தபட்ச ஆபத்து மட்டத்தில் உள்ளது என்றும், அக்டோபர் 23 திகதியிட்ட கடிதத்தில், நாடாளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன எம்.பி.க்கு தெரிவித்துள்ளார்.
ஒரு எம்.பி.உயிராபத்து இருப்பதாக நம்பகமான புலனாய்வு அறிக்கைகள் தெரிவித்தால், அத்தகைய எம்.பி.க்களுக்கு இலவச துப்பாக்கி உரிமத்தின் கீழ் அரசுக்கு சொந்தமான துப்பாக்கியை வழங்குவது குறித்து அமைச்சகம் பரிசீலிக்கலாம் என்று வலியுறுத்தி,
இந்த சாதனங்களைக் கொண்டுவர பாதுகாப்பு அமைச்சின் நேரடி ஒப்புதலைப் பெறுமாறு பதில் செயலாளர் நாயகம் எம்.பி.க்கு உத்தரவிட்டுள்ளார்.
கிண்ணியா – கண்டி பிரதான வீதி, முனைச்சேனை பகுதியில் சிறிய ரக லொறி ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து, இன்று(30.10.2025) காலை முனைச்சேனை சுமையா அரபு கல்லூரிக்கு முன்னால் இடம்பெற்றுள்ளது.
சூரங்கல் பகுதியில் இருந்து கிண்ணியா நோக்கி வந்து கொண்டிருந்த வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெய்வாதீனமாக எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணம் கச்சேரி கிழக்குத் தெருவில் தெருவில் குப்பை கொட்டிய பெண்ணை மீண்டும் அள்ள வைத்த காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் யாழ்ப்பாணம் கச்சேரி கிழக்குத் தெருவில் பெண் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்து வீதியில் குப்பையை வீசி சென்றுள்ளார். இதனை அவதானித்த நபர் ஒருவர் பெண்ணை மறித்து , அவரது தவறை சுட்டிக்காட்டினார்.
எனினும் குப்பை கொட்டிய பெண் காணொளி எடுத்தவருடன் தகராறில் ஈடுபாட்டார். இதனையடுத்து காணொளியஒஇ வெளியிடுவேன என கூறிய்தை அடுத்து பெண் தான் கொட்டிய குப்பையை மீண்டும் எடுத்துச் சென்றுள்ளார்.
அதேவேளை நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட இடங்களில் கழிவுகளை வீசி சென்றவர்களிடம் இருந்து கடந்த இரண்டு மாத காலத்தினுள் இரண்டு லட்சம் ரூபாவுக்கு மேல் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதாக நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப.மயூரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு- மாங்குளம் வீதியில் மணவாளன் பட்டமுறிப்புக்கு அண்மித்த பகுதியில் பொலிஸாரின் வாகனம் ஒன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தானது இன்று(30.10.2025) காலை இடம்பெற்றுள்ளது. குறித்த வீதியில் பயணித்த பொலிஸ் ஜீப் ஒன்று வீதியின் குறுக்கே மாடுகள் வந்ததால் வீதியினை விட்டு விலகி விபத்தினை சந்தித்துள்ளது.
இந்த விபத்தில் வாகனத்தில் பயணித்த பொலிஸார் சிறுகாயங்களுக்கு உள்ளான நிலையில் பொலிஸ் ஜீப் கடுமையாக சேதமடைந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணையினை முன்னெடுத்து வாகனத்தினை மீட்டு கொண்டு செல்லும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் காலபோக நெற்செய்கை இடம்பெற்றுள்ளதால் வீதிகளில் கால்நடைகளின் நடமாட்டம் தற்போது அதிகாரித்து காணப்படுகின்றது.
இதனால் கால்நடைகளால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் காணப்படுவதுடன் சாரதிகள் மிகவும் கவனமாக வாகனங்களை செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகின்றது.
2025 ஒக்டோபர் 27 ஆம் திகதி, கனடா அரசாங்கம் தனது Express Entry அமைப்பின் மாகாண நியமனத் திட்டம் (PNP) வழியாக 302 வெளிநாட்டவர்களுக்கு நிரந்தர வதிவிடத்திற்கான (PR) அழைப்புகளை அனுப்பியுள்ளது. இந்த அழைப்பு, draw number 374 என அழைக்கப்படுகிறது.
இதில் குறைந்தபட்ச விரிவான தரவரிசை அமைப்பு (Comprehensive Ranking System) (CRS) மதிப்பெண் 761-ஆக இருந்தது, இது கடந்த ஒக்டோபர் 14 ஆம் திகதியிலிருந்து 17 புள்ளிகள் குறைந்துள்ளது.
வெளிநாட்டுத் தொழிலாளர்களை ஈர்க்கும்
இந்த PNP திட்டம், கனடாவின் மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களுக்குத் தேவையான திறமையான தொழிலாளர்கள், மாணவர்கள், தொழில் முனைவோர் மற்றும் பணியாளர்களைத் தெரிவு செய்யும் வாய்ப்பை வழங்குகிறது.
நிரந்தர குடியுரிமை பெறுபவர்கள், கனடாவில் வாழ வேலை செய்ய மற்றும் நிரந்தரமாக குடியிருப்பதற்கான உரிமையைப் பெறுவர்
CRS மதிப்பெண் விநியோக பட்டியலில், 451-500 மதிப்பெண் கொண்டவர்கள் 69,503 பேர் உள்ளனர். மொத்தமாக 248,253 பேர் Express Entry புலத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபரங்கள், புதிய விண்ணப்பங்கள் சேரும் போது மாறக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பு, கனடா அரசாங்கம் வெளிநாட்டுத் தொழிலாளர்களை ஈர்க்கும் புதிய குடியுரிமை திட்டத்தின் ஒரு பகுதியாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் நடந்த வினோதச் சம்பவம் ஒன்று இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமண நாளில் வாங்கிய சீஸ் கேக்கை கணவர் தனியாக சாப்பிட்டதால், மனைவி 25 வருட திருமண வாழ்க்கையை முடித்துள்ளார்.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது அனுபவத்தை ரெட்டிட் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். திருமண ஆண்டு தினத்தில் இருவரும் சேர்ந்து கொண்டாட திட்டமிட்டிருந்தனர்.
அதற்காக பெண் ஒருவர் மிகப் பிரத்தியேகமாக சீஸ் கேக் வாங்கியிருந்தார். ஆனால், அவர் சிறிது நேரம் வெளியே சென்ற போது கணவர் அந்த கேக்கை முழுவதுமாக சாப்பிட்டு விட்டார்.
இதனால் கடும் அதிருப்தியடைந்த மனைவி, “25 ஆண்டுகளாக நான் எவ்வளவோ பொறுமையாகவும், பொருத்தமாகவும் வாழ்ந்து வந்தேன்.
ஆனால், என் உணர்வுகளையும் விருப்பங்களையும் புரிந்து கொள்ளாத ஒருவருடன் இனிமேலும் சேர்ந்து வாழ்வது பயனற்றது” என்று பதிவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து பலரும் அதிர்ச்சியும் நகைச்சுவையுமாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சிலர், “ஒரு கேக்குக்காக 25 வருட திருமணத்தை முடிப்பது மிகைப்படுத்தல்” என விமர்சித்துள்ள நிலையில், மற்ற சிலர் “இது சிறிய விஷயமல்ல, அக்கறை இல்லாமையின் வெளிப்பாடு” என மனைவிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.
கொழும்பில் வெளிநாட்டில் வசிக்கும் ஆயுர்வேத மருத்துவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த காதலர்களால் பாரிய கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
வெளிநாட்டு மதுபானங்கள் மற்றும் மதிப்புமிக்க மின் சாதனங்கள் உட்பட 1.3 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்களையும் 4.5 மில்லியன் ரூபாய் பணத்தையும் திருடிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இந்தத் திருட்டுக் குறித்து தெஹிவளை பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தீவிர தேடுதலுக்கு பின்னர் கொள்ளையில் ஈடுபட்ட 24 மற்றும் 22 வயதுடைய காதலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு பகுதியிலுள்ள பச்சை குத்தும் மையத்தில் தங்கியிருந்த போது கடந்த 22ஆம் திகதி தெஹிவளை பொலிஸாரால் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்ட அதிஷ்ட இலாபச் சீட்டிழுப்பில் இந்தியாவை சேர்ந்த அனில்குமார் பொல்லா என்ற 29 வயது இளைஞன் 240 கோடி இந்திய ரூபாய்களை வென்றுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் ஏற்றுமதி தொழில் செய்து வரும் அவர், 23ஆவது அதிஷ்ட நாள் குலுக்கலில் ஏழு வெற்றி எண்களும் பொருந்தியதால் முழு பரிசுத் தொகையையும் யாருடனும் பகிராமல் தனியாக வென்றுள்ளார்.
அதிஷ்ட இலாபச் சீட்டு குழுவிடமிருந்து அழைப்பு வந்த போது, தான் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்ததாக அனில்குமார் தெரிவித்துள்ளார்.
அதிஷ்ட இலாபச் சீட்டிழுப்பில் வெல்வது தனது நீண்ட நாள் கனவு எனவும் இதனை நம்ப முடியாது மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மொத்தம் 88 இலட்சம் போட்டியாளர்களில் அனில்குமார் பொல்லா ஒரு வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் தங்கத்தின் விலையில் சடுதியான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கத்தின் விலை, தற்போது வேகமாக சரிந்து வருகின்றது.
அதன்படி, இன்று (30) காலை கொழும்பு செட்டியார் தெரு தங்கச்சந்தையில் ஒரு பவுண் “22 கரட்” தங்கத்தின் விலை ரூ.310,500 ஆக விற்பனை செய்யப்படுகி்ன்றது.
அதன்படி, ஒரு பவுண் “24 கரட்” தங்கத்தின் விலை ரூ.ரூ.338,700 ஆக விற்பனை செய்யப்படுகி்ன்றது.
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை 4,230 அமெரிக்க டொலரை அடைந்துள்ளமையினால் இவ்வாறு தங்கம் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தியா டெல்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் அருகில் நிறுத்தப்பட்ட ஒரு பேருந்து நேற்று தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் தெய்வாதீனமாக பாரிய அனர்த்தங்கள் எதுவுமின்றி, தீயணைப்பு வீரர்களால், தீ விரைந்து அணைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
டெல்லியில் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் உள்ளது. இங்கு விமான நிறுவனங்களுக்கு ‘சாட்ஸ் ஏர்போர்ட் சர்வீசஸ்’ என்ற நிறுவனம் பேருந்து சேவை வழங்கி வருகிறது.
இதற்கு சொந்தமான ஒரு பேருந்து நேற்று பிற்பகல் மூன்றாவது முனையத்தில் ஏர் இந்தியா விமானத்துக்கு அருகில் நின்றிருந்த பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்தது.
இதையடுத்து விமான நிலைய தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து சென்று சில நிமிடங்களில் தீயை அணைத்தனர். தீ விபத்து ஏற்பட்டபோது பேருந்தில் பயணிகளோ அல்லது உடைமைகளோ இல்லை என்றும் சாரதி மட்டுமே எருந்ததாகவும் கூறப்படுகின்றது.
தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிய பேருந்தில் ஆய்வு மேற்கொள்ளப்படும் என சாட்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இந்த சம்பவத்தால் தங்களின் வழக்கமான செயல்பாடுகள் பாதிக்கப்படவில்லை என விமான நிலையம் தெரிவித்துள்ளது.
ஆசியப் பிராந்தியத்தில், வயதான மக்கள் தொகை அதிகரிப்பின் வேகம் அதிகமாக உள்ள நாடுகளில் ஒன்றாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் சமூக சுகாதார நிபுணர் வைத்தியர் நிஷாணி உபயசேகர 2012 ஆம் ஆண்டில் நாட்டில் வயதான மக்கள் தொகை 12% ஆக இருந்தது என்றும், அது 2024 ஆம் ஆண்டில் 18% ஆக உயர்ந்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர் மேலும் கூறுகையில், “இலங்கையில், 2012 ஆம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பின்படி, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 12% ஆக இருந்தனர். 2024 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில், வயதான சமூகம் 18% ஆக உயர்ந்துள்ளது.
2040 ஆம் ஆண்டளவில் இந்த மக்கள் தொகையில் 25% பேர், அதாவது நான்கு பேரில் ஒருவர் வயதானவராக இருப்பார்கள் என்று நாங்கள் முன்னறிவித்துள்ளோம்.
ஆசியாவில் உள்ள ஒத்த நாடுகளுடன் ஒப்பிடுகையில், வயதான மக்கள் தொகை அதிகரிப்பு வீதம் அதிகமாக உள்ள நாடாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதற்குக் பிறக்கும்போதே ஆயுட்கால எதிர்ப்பார்ப்பு அதிகரித்ததும், புதிய பிறப்புகளின் எண்ணிக்கை குறைவதுமே முக்கிய காரணங்களாகும்.
வயதான சமூகத்தினரிடையே காணப்படும் பலவீனங்கள் காரணமாக ஏற்படும் தடுக்கி விழுதல் தற்போது ஒரு நோயியல் நிலைமையாக அடையாளம் காணப்பட்டுள்ளது என்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் முதியோர் நோய் நிபுணர் வைத்தியர் சிதிர செனவிரத்ன குறிப்பிட்டார்.
65 வயதுக்கு மேற்பட்டவர்களில், மூன்று பேரில் ஒருவர் ஒரு வருட காலத்திற்குள் தடுக்கி விழுவதாகவும், 80 வயதுக்கு மேற்பட்டவர்களில் பாதிப் பேர் ஒரு வருட காலத்திற்குள் தடுக்கி விழுவதாகவும் புள்ளிவிவரங்கள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
பல சமயங்களில், விழுவது ஒரு நோயாக அடையாளம் காணப்படவில்லை. ஆனால், இப்போது விழுவதையும் ஒரு நோய் என்று நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம்.
பெரும்பாலும் விழுந்த பிறகு காயம் ஏற்பட்டால், காயத்திற்கு சிகிச்சை அளிக்கிறோம்; ஆனால் விழுவதற்கான காரணம் என்ன என்பதைப் பார்ப்பதில்லை. வயதாகும்போது விழுந்தால், இது வயதின் காரணமாக நடக்கிறது என்று நினைக்கிறோம்.
ஆனால், அது சாதாரணமானது அல்ல. விழுவது என்பது ஒரு நோய்தான். விழுவதால் விபத்துகளுக்கு முகம் கொடுக்க நேரிடலாம். விழுவதால் மரணங்கள் கூட நிகழும் சந்தர்ப்பங்கள் உள்ளன.
பலவீனம் என்பது விழுவதற்கான ஒரு முக்கிய காரணியாகும். இதைப் பரிசோதித்து, தேவையான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் சிக்கல்களைத் தவிர்க்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.