முல்லைத்தீவு இராணுவ வீரர் விபத்தில் உயிரிழப்பு!!

மோட்டார் சைக்கிள் ஒன்று அம்பாறை, உஹன சமனபெத்த பரிவெனாவிற்கு அருகில் வைத்து வீதியை விட்டு விலகி, மின்சாரக் கம்பத்துடன் மோதியதில் முல்லைத்தீவு இராணுவ வீரர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கை இராணுவத்தின் மின்சார மற்றும் இயந்திரவியல் பிரிவைச் சேர்ந்த 22 வயதுடைய ஆர்.எச். உதிக மலிந்த ரணசிங்க என்ற இராணுவ வீரரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று புதன்கிழமை (25) அன்று இவ் விபத்து இடம்பெற்றுள்ளதுடன் இதில் படுகாயமடைந்த நபர் அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் முல்லைத்தீவு இராணுவ முகாமில் கடமையாற்றி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

விடுமுறையில் வந்திருந்த குறித்த இராணுவ வீரர், பொலன்னறுவையிலுள்ள தனது சித்தியின் வீட்டிற்குச் சென்று, பின்னர் மஹியங்கனையிலுள்ள தனது பாட்டியையும் பார்த்துவிட்டு,

அம்பாறை பொல்வத்தப் பகுதிக்குத் திரும்பிக் கொண்டிருந்த போதே உஹனயிலிருந்து அம்பாறை நோக்கி பயணித்த போது விபத்து நேர்ந்துள்ளது.

 

2026ம் ஆண்டு பூமிக்கு வரும் ஏலியன்கள் : பாபா வாங்காவின் கணிப்பு உண்மையாகுமா?

2026ம் ஆண்டு நவம்பர் மாதம் மிகப்பெரிய விண்கலம் பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழையும் என்றும் அப்போது மனிதர்களுக்கும்,

ஏலியன்களுக்கும் இடையிலான தொடர்பு வெளிப்படும் என பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வங்கா கணித்துள்ளதாக கூறப்படுகின்றமை உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சமீபகாலமாக விண்வெளியில் நிகழும் மாற்றங்கள் ஏலியன்கள் குறித்த பேச்சை அதிகரித்துள்ளது. அதாவது சூரிய குடும்பத்திற்குள் நுழைந்துள்ள ‘3I/ATLAS’ என்ற விண்கல் விசித்திரமான முறையில் செயல்படுவதாக கூறப்படும் நிலையில், விஞ்ஞானிகள் கவனித்து வருகின்றனர்.

இது ஒரு விண்கல் தானா? இல்லை ஏலியன்களின் உளவு வாகனமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. வேற்றுக்கிரகவாசிகள் என்று அழைக்கப்படும் ஏலியன்கள் இருக்கிறார்களா? இல்லையா? அவர்கள் பூமிக்கு வருவார்களா? என்பது நீண்டகாலமாக ஒரு பேசுபொருளாக இருந்து வருகிறது.

நமது பூமிக்கு வெளியே இருக்கும் பிற கோள்களிலோ அல்லது விண்வெளியின் பிற பகுதிகளிலோ ஏலியன்கள் இருப்பதாக பேசப்பட்டு வருகிறது. எனினும் இதற்கு நம்பகமான ஆதாரம் இல்லை.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும் ஏலியன்கள் மற்றும் பறக்கும் தட்டுகள் தொடர்பான ரகசிய கோப்புகளை வெளியிட உத்தரவிட்டுள்ளது ஏலியன்கள் குறித்த பேச்சை அதிகரித்துள்ளது.

2026ம் ஆண்டு நவம்பர் மாதம் பூமிக்கு வரும் ஏலியன்கள்

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் ‘பாபா வங்கா’ ஏலியன்கள் குறித்து முன்பே கணித்தது தான். அதாவது 2026ம் ஆண்டு நவம்பர் மாதம் மிகப்பெரிய விண்கலம் பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழையும் என அவர் கணித்துள்ளதாக கூறப்படுகின்றது.

அதேவேளை இளமையில் கண்பார்வை பறிபோன பாபா வங்கா 1911 ஜனவரி 31 அன்று பல்கேரியாவில் பிறந்தார், 1996 ஆகஸ்ட் 11 அன்று இறந்தார்.

இந்நிலையில் 1970களின் பிற்பகுதியிலும் 1980களிலும் கிழக்கு ஐரோப்பாவில் அவரது தெளிவுத்திறன் மற்றும் முன்னறிவிப்புத் திறன்களுக்காக அவர் பரவலாக அறியப்பட்டார். அவர் பல தசாப்தங்களுக்கு முன்பே கணிப்புகளைச் செய்துள்ளார்.

அதேசமயம் பாபா வங்க கணித்த 2001 அமெரிக்கா இரட்டை கோபுர தாக்குதல், கொரோனோ வைரஸ் ஆகியவை உண்மையில் நடந்துள்ள நிலையில், தற்போது ஏலியன்கள் தொடர்பில் அவர் கணித்திருப்பது உலகை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

முல்லைத்தீவில் இடம்பெற்ற கோர விபத்து : வீதியை கடக்க முற்பட்ட பெண் ஸ்தலத்தில் பலி!!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விசுவமடு, புளியடி பகுதியில் வீதியை கடக்க முற்பட்ட குடும்பப் பெண்ணை மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார்.

அதிவேகத்தில் வேகட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியை கடக்க முற்பட்ட பெண்ணை மோதி தள்ளியதில் குறித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மேலதிக விசாரணை இதேவேளை மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில் தர்மபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தின்போது விசுவமடு புளியடி பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயாரான 53 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார் குறித்த சம்பவம் தொடர்பாக புதுக்குடியிருப்பு பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

2026 சனி பெயர்ச்சி : ஆட்டத்தை தொடங்கும் சனி பகவான் : இந்த ராசிகளுக்கு அதிஷ்டம்!!

ஜோதிடத்தில் சனிபகவான் மிக முக்கியமான கிரகமாக பார்க்கப்படுகிறார். இவர் நம்முடைய கணக்கு வழக்குகளை சரியாக தீர்ப்பவர். அதாவது பாவ புண்ணியம் எது செய்திருந்தாலும் அதற்கு தகுந்தார் போல் இரட்டிப்பு பலன்களை நமக்கு கொடுத்து அருள் பவர்.

அதன் அடிப்படையில் மார்ச் மாதம் 6 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அன்று காலை 7.56 மணி அளவில் பூரட்டாதி நட்சத்திரம் நான்காம் பாதத்தில் மீன ராசியில் வாக்கிய கணித ரீதியாக சனி பகவான் பெயர்ச்சி ஆகிறார்.

12 ராசிகளுக்கும் எப்படி

அவர் அங்கு 24. 4. 2028 சஞ்சாரம் செய்கிறார். இந்த பெயர்ச்சி மிகப்பெரிய அளவில் தாக்கத்தை உண்டு செய்யும். அதில் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை சேர்க்க போகிறது.

மீனம்: மீன ராசிக்கு ஜென்ம சனி தொடங்குகிறது. இதனால் உடல் நலத்தில் கவனம் தேவை. தேவை இல்லாத அலைச்சல் உண்டாக்கும். ஆனால் உழைப்பிற்கு ஏற்ற உயர்வு கிடைக்கும்.

கும்பம்: கும்ப ராசியினருக்கு பாத சனி நடக்கிறது. அதாவது ஏழரை சனியின் கடைசி கட்டமாக உள்ளது. பணவரவு இருந்தாலும் செலவுகளும் இருந்து கொண்டே இருக்கும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து சென்றால் நல்லது.

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு விரைய சனி அதாவது ஏழரை சனி ஆரம்பமாகிறது. இதனால் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். சுப விரயங்கள் ஏற்படலாம். முதலீடு செய்யும் பொழுது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.

சிம்மம்: சிம்ம ராசிக்கு அஷ்டம சனி தொடங்குகிறது. இதனால் இவர்களும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். வண்டி வாகனங்களில் எச்சரிக்கையாக செல்ல வேண்டும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும்.

தனுசு: தனுசு ராசிக்கு இவர்களுக்கு சுகஸ்தானத்தில் சனி இருப்பதால் தாயாரின் உடல் நிலையில் மிகுந்து கவனமாக இருக்க வேண்டும். வீடு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

கன்னி: கன்னி ராசிக்கு கண்டக சனி விலகுகிறது. அதனால் திருமண தடைகள் யாவும் விலகும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை உண்டாகும்.

துலாம்: துலாம் ராசி ருண சத்ரு ஸ்தானம் நடக்கிறது. அதனால் சனி பெயர்ச்சியால் இவர்களுக்கு எதிரிகள் தொல்லை விலகும். கடன் பிரச்சனைகள் குறையும்.

கடகம்: கடக ராசிக்கு பாக்கிய சனி நடைபெறுகிறது. இது இவர்களுக்கு மிகுந்த சாதகமான பலன்களை கொடுக்கும். தந்தை வழி உறவுகளால் நல்ல ஆதரவு கிடைக்கும். ஆன்மீக பயணங்கள் மேற்கொள்வீர்கள்.

மகரம்: மகர ராசிக்கு இந்த சனி பெயர்ச்சி தைரியம் மற்றும் தன்னம்பிக்கையை கொடுக்கபோகிறது. சகோதர வழியில் நன்மைகள் உண்டாகும். இவர்கள் நினைத்த காரியம் நடக்கும்.

மிதுனம்: மிதுன ராசிக்கு தொழில் ஸ்தானம் வலுப்பெறும். பதவி உயர்வு மற்றும் புதிய தொழில் வாய்ப்புகள் இவர்களை தேடி வரும். சனி பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் உண்டாகும்.

மரத்தில் மோதிய மோட்டார் சைக்கிள் : அதீத வேகத்தால் பறிபோன உயிர்!!

அநுராதபுரம் – மிஹிந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாளுவெவ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.

மிஹிந்தலை பொலிஸ் பிரிவின் சீப்புக்குளம் – கலன்பிந்துனுவெவ வீதியின் பாளுவெவ பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சீப்புக்குளம் பகுதியிலிருந்து கலன்பிந்துனுவெவ நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மரமொன்றில் மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதியும், பின் ஆசனத்தில் அமர்ந்து சென்றவரும் பலத்த காயமடைந்த நிலையில் தம்மன்னாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி மோட்டார் சைக்கிள் சாரதி உயிரிழந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர் மிஹிந்தலை, சீப்புக்குளம் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். காயமடைந்த மற்றைய நபருக்கு வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இளம் பெண்களின் அலைபேசிகளை ஊடுருவி தகாத காணொளிகளை கோரிய இளைஞன்!!

இளம் பெண்களின் அலைபேசிகளைச் சட்டவிரோதமாக ஊடுருவி, அவர்களை மிரட்டி நிர்வாண காணொளிகளைக் கோரி வந்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட இளைஞரை எதிர்வரும் மார்ச் மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் அசங்க எஸ்.போதரகம உத்தரவிட்டார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், நீதிமன்றத்தில் நேற்று(25) முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

வழக்கு விசாரணையின் போது பொலிஸ் உதவிப் பரிசோதகர் நீதிமன்றத்தில் முன்வைத்த தகவல்கள் வருமாறு:- சந்தேகநபர் கடந்த மூன்று வருடங்களாகப் போலி இணைய இணைப்புகளைப் பயன்படுத்தி இளம் பெண்களின் அலைபேசிகளுக்குள் ஊடுருவியுள்ளார்.

அங்கிருந்து பெண்களின் அந்தரங்கத் தரவுகளைத் தரவிறக்கம் செய்ததோடு, வட்ஸ்அப் ஊடாகத் தொடர்புகொண்டு மேலதிக நிர்வாண காணொளிகளைக் கோரி மிரட்டியுள்ளார்.

தனது கோரிக்கைக்கு இணங்காவிட்டால், தன்னிடம் உள்ள காணொளிகளை இணையத்தில் கசியவிடுவதாகவும் அவர் அச்சுறுத்தியுள்ளார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு களுத்துறை மற்றும் பாணந்துறை பகுதிகளைச் சேர்ந்த இரண்டு இளம் பெண்கள் வழங்கிய முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே சி.ஐ.டி. விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.

சந்தேகநபர் தனது அடையாளத்தை மறைக்க ‘கண்டறிய முடியாத’ தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திய போதிலும், நீதிமன்ற உத்தரவின் பேரில் ‘பேஸ்புக்’ நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் அவர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபரின் மனநிலை குறித்து முழுமையான மருத்துவ அறிக்கையைப் பெற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதிவான் இதன்போது உத்தரவிட்டார். இந்தச் சம்பவம் தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தும் இளம் பெண்கள் மத்தியில் மிகுந்த எச்சரிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு நெருக்கடியை தீர்க்க புதிய கண்டுபிடிப்பு – பல பகுதிகளில் வெற்றி!!

இலங்கையில் சமையல் எரிவாயு பற்றாக்குறை நகர்ப்புற மக்களை மட்டுமல்ல, கிராமப்புற மக்களையும் கடுமையாக பாதித்துள்ள நிலையில் அதற்கு தீர்வு Save Our Sri Lanka என்ற அமைப்பினால் கண்டுபிடித்துள்ளது.

சந்தையில் இரண்டு வகையான எரிவாயு இருந்தாலும், பல பகுதிகளில் மக்கள் ஒரு வகை எரிவாயு சிலிண்டர்கள் கூட தங்கள் பகுதிகளில் கிடைக்கவில்லை என மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பிரச்சினைக்கு நிலையான தீர்வாக, எரிவாயுவிற்கு பதிலாக சமையல் கழிவுகளிலிருந்து பயோகேஸை தயாரிக்கும் திட்டத்தை உனவட்டுன Save Our Sri Lanka அமைப்பு வெற்றிகரமாக ஆரம்பித்துள்ளது.

வீட்டுச் சமையலறைகளில் சேரும் உணவுக் கழிவுகளை அகற்றுவது இன்று நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் என இரு தரப்பினருக்கும் மிகப்பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது.

வீதியோரங்களில் பொலித்தீன் பைகளில் வீசப்படும் இக்கழிவுகள் பெரும் தலைவலியாக மாறியுள்ளன.

இந்த நிலையில், குப்பை உட்பட அப்புறப்படுத்தப்பட்ட கழிவுகளிலிருந்து பயோகேஸை உற்பத்தி செய்து, எரிவாயுவுக்கு பதிலாக அதைப் பயன்படுத்தும் திட்டத்தின் முதல் கட்டம் காலி மாவட்டத்தில் உள்ள யக்கலமுல்ல பிரதேச செயலகத்தில் உள்ள பல வீடுகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது ​​அந்த வீடுகள் எரிவாயுவுக்கு பதிலாக பயோகேஸைப் பயன்படுத்துகின்றன. “நான் சுமார் 40 வருடங்களாக இலங்கையில் இருக்கிறேன். நான் இப்போது உனவட்டுன பகுதியில் நிரந்தரமாக வசிக்கிறேன்.

இலங்கை மிகவும் அழகானது. மக்களும் மிகவும் நல்லவர்கள். ஆனால் குப்பைகளை அகற்றுவதில் மக்களுக்கு சிக்கல்கள் உள்ளன.

அதற்கு ஒரு தீர்வாக இந்த உயிரி எரிவாயுவை அறிமுகப்படுத்த முடிவு செய்தோம்” என Save Our Sri Lanka அமைப்பின் தலைவர் உலா மாஷ்பெர்கர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்ட இளம்பெண்!!

கல்கிஸ்ஸை, இரத்மலானை கடற்கரைப் பகுதியில் இளம் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய கைவிடப்பட்ட மீன்பிடி படகொன்றில் இருந்து இளம் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

24 வயதுடைய இளம் பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கல்கிஸ்ஸை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண்ணின் சடலத்தை மீட்டு, பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அடையாள அட்டைக்காக காத்திருக்கும் இலட்சக்கணக்கான இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

இலங்கையில் தேசிய அடையாள அட்டைகளுக்கு விண்ணப்பித்த 1.6 மில்லியன் பேர் தேசிய அடையாள அட்டைகளுக்குப் பதிலாக வழங்கப்பட்ட தற்காலிக காகிதத்தை வைத்துள்ளனர் என்று டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கையின் டிஜிட்டல் மாற்றம் மற்றும் 2026 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து நேற்று (25) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

தேசிய அடையாள அட்டைகளை அச்சிடப் பயன்படுத்தப்படும் பாலிகார்பனேட் அட்டைகளின் (Polycarbonate Card) பற்றாக்குறை காரணமாக, தேசிய அடையாள அட்டைகளுக்குப் பதிலாக ஆட்பதிவு திணைக்களம் ஒரு காகிதத்தை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2005 ஆம் ஆண்டு பிறந்தவர்களிடமிருந்து பாலிகார்பனேட் அட்டைகளில் அச்சிடப்பட்ட அடையாள அட்டைகளை வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாகவும், 2005 ஆம் ஆண்டு பிறந்தவர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கும் பணி தற்போது நிறைவடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

2006 ஆம் ஆண்டு பிறந்தவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கும் பணி ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாகவும், அடையாள அட்டைகளைப் பெற முடியாத அனைவருக்கும் மூன்று ஆண்டுகளுக்குள் அடையாள அட்டைகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

அடையாள அட்டைகளுக்குப் பதிலாக வழங்கப்பட்ட 1.6 மில்லியன் காகிதங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இது தொடர்பாக ஐந்து மில்லியன் பாலிகார்பனேட் அட்டைகளைப் பெறுவதற்கான தொடர்புடைய கொள்முதல் நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் இந்த கொள்முதலை முடித்து நாட்டிற்கு டிஜிட்டல் அடையாள அட்டை முறைமையை கொண்டுவர நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

உலக சந்தையில் தொடர்ந்தும் உச்சத்தில் தங்கத்தின் விலை : இலங்கையில் நகை வாங்க காத்திருப்போருக்கான தகவல்!!

உலக சந்தையில் இன்றைய தினம் (26.02.2026) ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை, 5158 டொலராக காணப்படுகிறது. தொடர்ச்சியாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் பதிவாகி வருகின்றன.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் வரலாற்றில் முதல் முறையாக உலக சந்தையில் தங்கத்தின் விலையானது ஐயாயிரம் அமெரிக்க டொலர்களை கடந்திருந்தது.

அதேநேரம் கடந்த ஆறு மாதங்களில் தங்கத்தின் விலை 52.44 சதவீதத்தால் அதிகரிப்பைப் பதிவு செய்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. அத்துடன், வெள்ளியின் விலையும் அதிகரித்து, 88 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.

கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி இன்றைய தினம் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 370000 ரூபாவாக காணப்படுகிறது. அத்துடன் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 400000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

 

குவைத்தில் உள்ள தாய்க்கு அனுப்பிய குறுஞ்செய்தி : இளம் பெண் யூடியூபர் எடுத்த விபரீத முடிவு!!

ஹைதராபாத்தில் இளம்பெண் யூடியூபர் தன் உயிரை தானே மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

21 வயது கல்லூரி மாணவியும், யூடியூபருமான போனு கோமளி(bonu komali), அவர் ஹைதராபாத்தில் வசித்து வந்த வாடகை வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவின் விசாகப்பட்டினத்தை சேர்ந்த கோமளி, ஹைதராபாத்தில் தங்கி தன்னுடைய தனியார் கல்லூரி ஒன்றில் BSc பயின்று வந்தார். அத்துடன் யூடியூப் வாழ்க்கை முறை சார்ந்த வீடியோக்களையும் பதிவிட்டு வந்துள்ளார்.

கடந்த 11 மாத காலமாக தனியாக வசித்து வரும் போனு கோமளி கடந்த திங்கட்கிழமை அதிகாலை குவைத்தில் பணிபுரிந்து வரும் அவரது தாய் சத்ய வரலட்சுமிக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில் “I Love you Mummy, தம்பியை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள்” என குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். மேலும் அவரது மொபைலும் இதன் பிறகு அணைக்கப்பட்டுள்ளது.

இதனால் சந்தேகமடைந்த தாய், ஹைதராபாத்தில் உள்ள தன்னுடைய நண்பருக்கு தகவல் தெரிவித்து உடனடியாக போய் பார்க்குமாறு தெரிவித்துள்ளார்.

திங்கட்கிழமை 3 மணியளவில் வீட்டிற்கு சென்ற காவல்துறையினர் மற்றும் நண்பர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது போனு கோமளி சடலமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

போனு கோமளி உயிரிழப்புக்கு அவரது நீண்ட கால காதலில் ஏற்பட்ட முறிவு மற்றும் அதனால் ஏற்பட்ட மன அழுத்தம் தான் காரணம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

அவர் கடந்த 6 மாதத்திற்கு முன்பே ஒரு முறை உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றதாகவும் தெரிவித்துள்ள பொலிஸார், இந்த சம்பவம் குறித்து தற்போது சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கோர விபத்தில் பலியான இளம் அதிகாரிகள் : வெளியான புகைப்படங்கள்!!

பயாகல பகுதியில் பாதுகாப்பற்ற தொடருந்து கடவையைக் கடக்க முயன்ற டொப் கார் தொடருந்தில் மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்தவர்கள் தியலகொட பால கட்டுமானத் திட்டத்தில் பணிபுரியும் இரண்டு அதிகாரிகள் என தெரிய வந்துள்ளது.

உயிரிழந்தவர்கள், போலகம, ரம்புக்கன பகுதியைச் சேர்ந்த 22 வயதான ரணசிங்க ஆராச்சிலாக் பசிந்து சுபுன் ரணசிங்க, திட்ட நிர்வாக அதிகாரி எல்லெதெனியவத்த, மற்றும் 28 வயதான ஆய்வக தொழில்நுட்ப அதிகாரி கருணாரத்ன முதியன்செலாகே விஹங்க ருக்‌ஷன் பண்டார கருணாரத்ன என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

விபத்தின் போது வாடகை வண்டியின் ஓட்டுநர், புலத்சிங்கள, பரகொட பகுதியைச் சேர்ந்த 39 வயதான தெடிகமுவகே குஷான் பிரதீப், படுகாயமடைந்து, களுத்துறை, நாகொட போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இந்த மரணங்கள் தொடர்பான பிரேத பரிசோதனை கடந்த 23ஆம் திகதி காலை களுத்துறை நாகோடா போதனா மருத்துவமனையின் மரண விசாரணை அதிகாரி கே.டி. விராத் பரத் முன்னிலையில் நடத்தப்பட்டன.

பெலியத்தவிலிருந்து மருதானை நோக்கிச் செல்லும் காலி குமாரி தொடருந்தின் 57ஆம் இலக்க ஓட்டுநர், பேருவளை, பங்களாவத்தையைச் சேர்ந்த, கொஸ்வத்த ஆராச்சிகே டான் மகேந்து மனவாசர (52),

தனக்கு 26 வருட சேவை அனுபவம் இருப்பதாகவும், தான் ஓட்டி வந்த சிவப்பு நிற டொப் கார் காலி சாலையில் தொடருந்து பாதைக்கு இணையாக பயணிப்பதை உணர்ந்ததாகவும், திடீரென அதை பாதுகாப்பற்ற கடவையில் செலுத்த முயன்றதாகவும் கூறினார்.

தொடருந்து ஹாரனை அடித்து அவசரகால பிரேக்குகளைப் பயன்படுத்திய போதிலும், டொப் கார் தொடருந்தில் மோதி சுமார் 420 அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.

அன்று காலை 8.41 மணியளவில் தொடருந்து மணிக்கு 45 கிலோமீட்டர் வேகத்தில் செலுத்தப்பட்ட போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தின் போது, அப்பகுதிவாசிகளால், வாகனத்தின் கதவுகளை உடைத்து, சிக்கிய மூன்று பேரை வெளியே எடுத்து மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மின்சார சபை ஊழியர்கள் நாளை 6 மணிநேர பணிப்புறக்கணிப்பில்!!

இலங்கை மின்சார சபையின் (CEB) தொழிற்சங்கங்கள் நாளை (26.02.2026) அடையாள பணிபுறக்கணிப்பு போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளன.

நாளை நண்பகல் 12:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை 6 மணிநேர அடையாள பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமது கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த போராட்டம் காரணமாக மின்சார சபையின் நாளாந்த சேவைகள் மற்றும் பராமரிப்புப் பணிகளில் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இலங்கை மக்களுக்கு அறிமுகமாகும் டிஜிட்டல் அடையாள அட்டை!!

இலங்கையில் அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் செயற்பாட்டிற்கமைய, இந்த ஆண்டு இறுதிக்குள் டிஜிட்டல் அடையாள அட்டையை பொதுமக்களுக்கு வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கையின் டிஜிட்டல் மாற்றம் மற்றும் 2026 ஆம் ஆண்டுக்கான திட்டமிடப்பட்ட எதிர்கால மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று (25) இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தனிநபரின் அடையாளத்தை உறுதிப்படுத்தல்
இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு தனிநபரின் அடையாளத்தை 100 சதவீத துல்லியத்துடன் சரிபார்க்கக்கூடிய டிஜிட்டல் அடையாள அட்டையை பொதுமக்களுக்கு வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

நாட்டில் இந்த டிஜிட்டல் அடையாள அட்டை முறையை அறிமுகப்படுத்த 2012 முதல் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், அந்த முயற்சிகள் வெற்றிபெறவில்லை.

இருப்பினும், தற்போதைய நிர்வாகத்தின் முதல் ஆண்டில் ஏற்பட்ட முன்னேற்றம் காரணமாக, கொள்முதல் செயல்முறை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

மேலும் வரும் ஏப்ரல் மாதத்திற்குள் கொள்முதல் செயல்முறையை முடித்து, ஆண்டின் மூன்றாவது அல்லது நான்காவது காலாண்டிற்குள் முதல் டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்க அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது பயன்பாட்டில் உள்ள பாரம்பரிய அடையாள அட்டைகளுக்குப் பதிலாக தனிநபர்களின் பயோமெட்ரிக் தரவைப் பயன்படுத்துவதன் மூலம், குடிமக்கள் எந்த இடத்திலும் அவர்கள் யார் என்பதை துல்லியமாக நிரூபிக்க முடியும்.

இது அரசு நிறுவனங்களுக்கும் மக்களுக்கும் இடையிலான உறவில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் புதிய முறையை செயல்படுத்துவதன் மூலம், மக்கள் அரசு அலுவலகங்களுக்கு நேரில் சென்று பார்வையிட வேண்டிய அவசியம் பெருமளவில் குறையும்.

நிதி மோசடி, திருட்டு மற்றும் வேறொருவரைப் போல ஆள்மாறாட்டம் செய்வதன் மூலம் செய்யப்படும் பல்வேறு முறைகேடுகளைத் தடுக்கவும் இது பயன்படும் என்றும் அரசாங்கம் வலியுறுத்துகின்றது.

இந்த டிஜிட்டல் அடையாள அட்டையின் அறிமுகம் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கிய பயணத்தில் ஒரு தீர்க்கமான காரணியாக இருக்கும் என்று அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

படகு விபத்து : கணவன் கண்ணெதிரே மனைவி நீரில் மூழ்கி பலி : நீரில் தத்தளித்த பிள்ளைகள்!!

புதுச்சேரி வீராம்பட்டினம் முகத்துவாரம் பகுதியில் தனியார் சிறிய படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பெங்களூரு குஷால் நகரை சேர்ந்த விஜய் தனது குடும்பத்தினர் உள்ளிட்ட 8 பேருடன் சுற்றுலா வந்திருந்தார்.

கடந்த 19ஆம் தேதி அவர்கள் கடலில் சவாரி சென்றபோது திடீரென பலத்த காற்று மற்றும் பெரிய அலைகள் எழுந்தன. அதனால் படகு கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.

இந்த விபத்தில் விஜய்யின் மனைவி சோனியா (33) நீரில் மூழ்கி உயிரிழந்தார். மற்ற 7 பேர் கடலில் தத்தளித்தனர். அருகில் இருந்த மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் விரைந்து சென்று அனைவரையும் மீட்டனர்.

சோனியாவின் மகள்கள் சந்தியா, சக்தீஸ்வரி ஆகியோர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். மற்றவர்கள் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். படகு உரிமையாளர் விஜயகுமார் மற்றும் படகோட்டி தங்கமணி கைது செய்யப்பட்டனர்.

உரிய அனுமதி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததா என்ற கேள்வியில் விசாரணை தீவிரமாக நடக்கிறது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது.

அலட்சியம் வேண்டாம் : நாய் நக்கியதால் நான்கு உடல் உறுப்புகள் அகற்றம் : மருத்துவர்கள் எச்சரிக்கை!!

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த மஞ்சித் சங்கா (52) கடந்த ஜூலை மாதம் தனது நாயுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது கையில் இருந்த சிறிய காயத்தை நாய் நக்கியது. ஆரம்பத்தில் அது சாதாரணமாக தோன்றியது. ஆனால் சில நாட்களில் அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்தது.

மருத்துவ பரிசோதனையில் ரத்த நச்சுத் தொற்று ஏற்பட்டது தெரியவந்தது. இதயம் ஆறு முறை நின்று மீண்டும் துடித்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பல வாரங்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. உயிர் பிழைத்தாலும், இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டதால் இரண்டு கைகளும் இரண்டு கால்களும் அகற்றப்பட்டன.

தற்போது வீட்டில் சிகிச்சை பெற்று வரும் அவர், சிறிய காயங்களையும் அலட்சியம் செய்ய வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்.

செல்லப் பிராணிகளின் எச்சிலில் உள்ள கிருமிகள் திறந்த காயங்களில் பட்டால் ஆபத்து ஏற்படலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் உடல்நல பாதுகாப்பின் அவசியத்தை மீண்டும் உணர்த்தியுள்ளது