சிலாபத்தில் பரிதாபமாக உயிரிழந்த தமிழ் இளைஞன்!!

சிலாபத்தில் கூரைத்தகடு தொழிற்சாலையில் பணியாற்றிய இளைஞன், கூரைத் தகடுகள் நிரப்பப்பட்ட கொள்கலனில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

ஆரச்சிகட்டுவ, அனவிலுண்தாவ பகுதியில் இந்த விபத்து நேற்று மதியம் நிகழ்ந்துள்ளது. சம்பவத்தில் உடப்புவ பகுதியை சேர்ந்த காந்திபன் சஷிதரன் என்ற 18 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞன் தொழிற்சாலையில் தொழிலாளியாக பணி புரிந்தார். மூன்று இளைஞர்களுடன் இணைந்து கூரைத் தகடுகளை கொள்கலனில் ஏற்றி, மற்றுமொரு இடத்தில் இறக்கச் சென்றார்.

இதன்போது, ​​கொள்கலன் வாகனத்தின் ஓட்டுநர் பிரேக்கை அழுத்தியுள்ளதால் கூரைத் தகடுகளுக்குள் சிக்கிய இளைஞன், படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சையின் பலனின்றி உயிரிழந்தார்.

இந்த விபத்துக்கு பணியாற்றியவர்களின் அலட்சியமே காரணம் அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.

விபத்து நடந்த நேரத்தில் இளைஞர் எந்த பாதுகாப்பு உபகரணங்களும் அணிந்திருக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

வெளிநாடு செல்லவிருந்த கிளிநொச்சி இளைஞன் காட்டுக்குள் சடமாக மீட்பு :; உறவுகள் அதிர்ச்சி!!

கிளிநொச்சி – அக்கராயன்குளம் பகுதியில் வசித்து வந்த இளைஞன் ஒருவர் கடந்த 19 ஆம் திகதி முதல் காணாமல் போன நிலையில் தற்போது சடலமாக மீட்கப்பட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் யூனியன் குளத்தைச் சேர்ந்த அப்சரன் (வயது 26) எனும் இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேற்படி இளைஞன் கடந்த 24ஆம் திகதி வெளிநாட்டுக்குப் பயணமாக இருந்த நிலையில் ஐந்து தினங்களுக்கு முன்னர் கடந்த 19ஆம் திகதி முதல் காணாமல்போனார்.

மாயமான மகனை பெற்றோர் தேடி வந்த நிலையில் கடந்த 21ஆம் திகதி அக்கராயன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

அந்த முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் உறவினர்களும் இளைஞனைத் தேடி வந்தனர்.

இந்தநிலையில் இளைஞனின் வீட்டில் இருந்து சுமார் 2 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள காட்டினுள் மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக நேற்று (28) கண்டுபிடிக்கப்பட்டார்.

இளைஞனின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காகக் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் அக்கராயன் பொலிஸார் பல கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பில் இருந்து சென்ற வேன் மாங்குளத்தில் விபத்து : தெய்வாதீனமாக தப்பிய சாரதி!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட A9 வீதியின் 227ஆவது கிலோமீற்றர் பகுதியில் (பனிக்கன்குளம்) கொழும்பிலிருந்து கிளிநொச்சி நோக்கி வந்த ‘ஹயஸ்’ ரக (Hiace) வேன் வாகனம் ஒன்று, வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

கொழும்பு நோக்கிப் பயணிகளை ஏற்றிச் சென்ற குறித்த வாகனம், அவர்களைக் கொழும்பில் இறக்கிவிட்டு மீண்டும் கிளிநொச்சி நோக்கித் திரும்பிக்கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது, வாகனத்தில் சாரதி மாத்திரமே இருந்துள்ளார். அவர் தெய்வாதீனமாக சிறிய காயங்களுடன் தப்பியுள்ளார். சம்பவ இடத்திற்கு வருகை தந்த மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் தொடர்ந்து குறைவடையும் தங்கத்தில் விலை : மகிழ்ச்சியில் மக்கள்!!

இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றுடன் (28.10.2025) ஒப்பிடும்போது, இன்று (29.10.2025) ​​ 2000 ரூபாய் குறைந்துள்ளது.

அதன்படி, இன்று (29) காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 294,000 ரூபாயாகக் குறைந்துள்ளது. அதேவேளை நேற்று, இதன் விலை 296,000 ரூபாயாகக் காணப்பட்டது.

இதற்கிடையில், நேற்று (28) 320,000 ரூபாவாகவிருந்த 24 கரட் ஒரு பவன் தங்கத்தின் விலை இன்று (29) 318,000 ரூபாயாகக் குறைந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான ஊழியர்களை தாக்கிய பயணி : நடுவானில் களேபரம்!!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான ஊழியர்களை விமானத்தில் பயணி ஒருவர் தாக்கும் காணொளி வெளியாகியுள்ளது

அக்டோபர் 26 ஆம் தேதி ரியாத்தில் இருந்து கொழும்புக்கு வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL266 இல் நடந்த பதட்டமான சம்பவத்தை சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது,

அதில், சவுதி அரேபிய பயணி ஒருவரை விமான ஊழியர்கள் தாக்கியதாகக் கூறப்படுவதைத் தடுக்க முயற்சிப்பது தெரிகிறது.

கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறையின் முதற்கட்ட விசாரணைகளின்படி, விமானம் தரையிறங்கத் தயாராகும் போது இந்த வாக்குவாதம் ஏற்பட்டது.

அந்த நேரத்தில், பயணிகள் சீட் பெல்ட்களை அணிந்தபடி இருக்க வேண்டும், ஆனால் சந்தேக நபர் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி கழிப்பறைக்குள் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது.

கேபின் குழுவினர் தலையிட்டபோது, ​​பயணி ஆக்ரோஷமாக நடந்து கொண்டார், இதன் விளைவாக மற்ற பயணிகள் தங்கள் மொபைல் போன்களில் மோதலை பதிவு செய்தனர்.

கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விமானம் வந்தடைந்ததும் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாகவும், சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் விமான நிலைய பொலிஸார் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

போலி ஆவண மோசடி : பெண்ணை தேடும் பொலிஸார்!!

போலி ஆவணங்களை தயாரித்து, 150 மில்லியன் ரூபா மதிப்புள்ள காணி ஒன்றை விற்பனை செய்ததாக கூறப்படும் பெண் ஒருவரை கைதுசெய்வதற்கு குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

சந்தேக நபரான பெண் பொலிஸில் முன்னிலையாகாமல் பிரதேசத்தைவிட்டு தப்பிச் சென்று தலைமறைவாக உள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். சந்தேக நபரான பெண்ணின் புகைப்படம் ஒன்றை பொலிஸார் தற்போது வெளியிட்டுள்ளனர்.

இந்த புகைப்படத்தில் உள்ள சந்தேக நபர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் 011 – 2434504 அல்லது 011 – 2422176 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மனைவியின் தொல்லை தாங்காமல் 14வது மாடியில் இருந்து குதித்து கணவன்!!

 

ஐதராபாத்தில் மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறால் மன உளைச்சலுக்கு ஆளான சாப்ட்வேர் பொறியாளர் ஒருவர், 14வது மாடியில் இருந்து குதித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் சூர்யாபேட்டை மாவட்டம் ஹுசூர்நகர் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீனிவாசராவ் (வயது 38), ஐதராபாத்தில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

அவர், மனைவி ஜோதி மற்றும் இரு குழந்தைகளுடன் நல்லகண்ட்லா பகுதியில் உள்ள ராங்கி கேலக்ஸி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.

குடும்பத்தினர் கூறியதாவது, கடந்த சில மாதங்களாக சொத்துக்களை ஜோதி பெயரில் எழுதிக் கொடுக்க வேண்டும் என மனைவி அடிக்கடி வற்புறுத்தியதால்,

தம்பதியிடையே தகராறு அதிகரித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இரு குடும்பங்களின் மூத்தோர் கலந்து சமரச முயற்சி செய்தும் பிரச்சனை தீரவில்லை.

இந்நிலையில், மன உளைச்சலுக்குள்ளான ஸ்ரீனிவாசராவ், நேற்றிரவு தாங்கள் வசிக்கும் 14வது மாடியில் இருந்து கீழே குதித்தார். அவருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டதால் கீழே குதித்த வேகத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த சந்தாநகர் போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், ஸ்ரீனிவாசராவின் தாய் கமலம்மா, தனது மகன் மரணத்தில் மருமகள் ஜோதி பங்குடையவர் எனக் கூறி போலீசில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில், ஜோதி மீது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் ஐதராபாத் நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்ப சொத்து சண்டை உயிரிழப்பாக முடிந்துள்ளதால், அந்த பகுதி மக்கள் துயரத்தில் மூழ்கியுள்ளனர்.

இளம்பெண் மர்மமான முறையில் குளியலறையில் மரணம் : தோழியிடம் போலீசார் விசாரணை!!

பெங்களூருவில் வேலை பார்த்து வந்த இளம்பெண் ஒருவர் குளியல் அறையில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் தேவலாபுரா கிராமத்தைச் சேர்ந்த தேவராஜின் மகள் ரஞ்சிதா (27), பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துவரினார்.

சமீபத்தில் அவரது தோழி ஒருவரின் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரேவுக்கு ரஞ்சிதா தனது தோழி ரேகாவுடன் சென்றிருந்தார். இருவரும் அங்குள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்தனர்.

அன்று காலை ரேகா முதலில் குளித்து முடித்து வெளியே வந்தார். பின்னர் ரஞ்சிதா குளிக்கச் சென்றார்.

ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால் ரேகா கதவை தட்டியபோதும் எந்த பதிலும் கிடைக்கவில்லை. உடனே அவர் விடுதி ஊழியர்களையும், மூடிகெரே போலீசாரையும் தொடர்பு கொண்டார்.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, ரஞ்சிதா உயிரிழந்த நிலையில் கிடந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

போலீசார் ரேகாவிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது குளியல் அறையில் இருந்த தண்ணீர் சூடேற்றும் கருவியில் கியாஸ் கசிவு ஏற்பட்டதாக அவர் விளக்கம் அளித்தார். ஆனால் ரஞ்சிதாவின் மரணம் குறித்து போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

இதையடுத்து மர்ம மரணமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், சம்பவம் நடந்த விடுதி உரிய அனுமதி இன்றி செயல்பட்டதும், வரி பாக்கி வைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் மூடிகெரே பகுதியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வீட்டை குப்பையாக்கிய கணவன் சுத்தம் செய்யாததால் கழுத்தை அறுத்த ஆசிரியை!!

அமெரிக்காவில், வீட்டை சுத்தமாக வைக்காதது குறித்த தகராறு காரணமாக, இந்தியாவைச் சேர்ந்த ஒரு ஆசிரியை தனது கணவனை கத்தியால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த அரவிந்த் மற்றும் சந்திரபிரபா (44) தம்பதிகள், அமெரிக்காவின் வடகரோலினா மாநிலம் சார்லட் நகரில் வசித்து வந்தனர். அரவிந்த் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்; மனைவி சந்திரபிரபா அங்குள்ள பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

இருவருக்கும் வீட்டு சுத்தம் பற்றிய விஷயத்தில் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதேபோல், கடந்த 12ம் தேதி மீண்டும் வீட்டை சுத்தம் செய்யாமல் குப்பையாக வைத்திருந்ததாகக் கூறி இருவருக்கும் கடுமையான தகராறு ஏற்பட்டது.

அந்த நேரத்தில் கடும் கோபத்தில் இருந்த சந்திரபிரபா, கையில் இருந்த சமையல் கத்தியை எடுத்து கணவன் அரவிந்தின் கழுத்தில் அறுத்ததாக போலீசார் தெரிவித்தனர். இதில் ரத்தம் சிந்தி துடித்த அரவிந்தை அக்கம் பக்கத்தினர் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, காயமடைந்த அரவிந்தை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவத்திற்குப் பின்னர் போலீசார் சந்திரபிரபாவை கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த துயர சம்பவம் சார்லட் நகர இந்திய வம்சாவளியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேறுவிதமாகக் கூறும் பதிவுகளைப் பகிர வேண்டாம் : வீராங்கனை பாத்திமா ஷாஃபியா வலியுறுத்தல்!!

தமது கிராமத்தில் எந்த பிரிவினைகளும் இல்லை. எனவே,வேறுவிதமாகக் கூறும் பதிவுகளைப் பகிர வேண்டாம் என இலங்கையின் ஓட்டப்பந்தய வீராங்கனை பாத்திமா ஷாஃபியா யாமிக் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவின் ராஞ்சியில் அண்மையில் நடைபெற்ற, 2025 ஆம் ஆண்டின் தெற்காசிய தடகள செம்பியன்ஷிப்பில் வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனை படைத்ததைத் தொடர்ந்து, அவருக்கு சொந்த ஊரான கண்டியில் சிறப்பு வரவேற்பு வழங்கப்பட்டது.

இதன்போது, பேசிய யாமிக், “எங்கள் கிராமத்தில் இதுபோன்ற பிரச்சினைகள் எதுவும் இல்லை,” “முஸ்லிம், சிங்களம், தமிழ், பௌத்தர்கள், நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம்.

நான் பிறந்த நாளிலிருந்து அவர்களுடன் வளர்ந்தேன். எனவே, வேறுவிதமாகக் கூறும் பதிவுகளைப் பகிர வேண்டாம்” என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

26 வயதான யாமிக், பெண்கள் 100 மீட்டர் அஞ்சல் ஒட்டம் , 200 மீட்டர் அஞ்சல் ஒட்டம் மற்றும் 4×100 மீட்டர் அஞ்சல் ஓட்டப் போட்டிகளில் தங்கம் வென்று வரலாறு படைத்தார், மூன்றிலும் சாதனைகளையும் படைத்தார்.

அவர் 100 மீட்டர் ஓட்டத்தில் 11.53 வினாடிகள், 200 மீட்டர் ஓட்டத்தில் 23.58 வினாடிகள் கடந்து, அஞ்சலோட்ட அணியை 44.70 வினாடிகளில் முடிக்க உதவினார் – இது பிராந்திய போட்டியில் இலங்கை தடகள வீராங்கனையின் மிகச்சிறந்த தனிப்பட்ட சாதனைகளில் ஒன்றாகும்.

நீடிக்கப்படும் பாடசாலை நேரம் : மாணவர்களுக்கு விசேட சலுகை!!

புதிய நேர அட்டவணையின்படி மாணவர்களுக்குப் போக்குவரத்து சேவைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலை கல்வி செயற்பாடுகளுக்கான நேரத்தை பிற்பகல் 2 மணி வரை நீடிக்கும் திட்டத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என கல்வி அமைச்சு முன்னதாக அறிவித்திருந்தது.

இதற்கமைய, மாணவர்களுக்கான போக்குவரத்து சேவை தொடர்பாக, போக்குவரத்து அமைச்சுடன் ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டுள்ளதாகவும் கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

அதன்படி, தற்போது இயக்கப்படும் சிசு செரிய உட்பட அனைத்து பேருந்து சேவைகளும், பாடசாலை புதிய நேர அட்டவணையின்படி இயக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், தரம் ஐந்து முதல் தரம் 13 வரையான அனைத்து வகுப்புகளுக்கான நேரமும் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் பிற்பகல் 2 மணி வரை நீடிக்கப்படுவதாக பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.

 

இலங்கையில் இனி எவரும் தப்ப முடியாது நாடு முழுவதும் தீவிர கண்காணிப்பு!!

கொழும்பு உட்பட நாடு முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலைகளிலும் வீதிகளிலும் பாதுகாப்பு கமரா அமைப்புகளை நிறுவுவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இதற்குத் தேவையான கமராக்களின் எண்ணிக்கை மற்றும் அதற்கான செலவு குறித்து கலந்துரையாடப்பட்டு வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

பாதாள உலக குற்றவாளிகள் உட்பட பல்வேறு சந்தேக நபர்களைப் பிடிக்க பாதுகாப்பு கமராக்கள் பெருமளவில் உதவியுள்ளன. மேலும் இந்த கமரா அமைப்பு பல சந்தேக நபர்களைப் பிடிப்பதை இலகுவாக்கியுள்ளதாக செய்தித் தொடர்பாளர் கூறினார்.

மாகாண மட்டத்தில் இந்த பாதுகாப்பு கமரா அமைப்பை செயல்படுத்துவது மற்றும் மேற்கு, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களை அடிப்படையாகக் கொண்டு அவற்றை செயல்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நாடு முழுவதும் இந்த கமரா அமைப்பை செயல்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

வரலாற்று சாதனை படைத்த Apple நிறுவனம் : தொடரும் வெற்றிப்பயணம்!!

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான Apple, தனது சந்தை மதிப்பை $4 ட்ரில்லியன் வரை உயர்த்தி, வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது.

இதன்படி $4 ட்ரில்லியன் சந்தை மதிப்பை எட்டிய மூன்றாவது நிறுவனமாக Apple நிறுவனம் பதிவாகியுள்ளது. இதற்கு முன்னர் Nvidia மற்றும் Microsoft ஆகிய நிறுவனங்கள் இந்தச் சாதனையை அடைந்தன.

iPhone 17 இன் வலுவான விற்பனையால் Appleஇன் பங்குகள் இன்று 0.1% அதிகரித்து இந்தச் சாதனையை அடைந்தன.

Apple நிறுவனம் 2018 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதத்தில் $1 ட்ரில்லியன் மதிப்பையும், 2020 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதத்தில் $2 ட்ரில்லியன் மதிப்பையும், 2022 ஆம் ஆண்டு ஜனவரியில் $3 ட்ரில்லியன் மதிப்பையும் கடந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை கடலில் மிதந்து வந்த திரவத்தால் பறிபோன உயிர்கள் : துயரத்தில் உறவுகள்!!

புத்தளம், நாரக்கல்லி பிரதேசத்தில் தற்காலிகத் தங்குமிடம் ஒன்றில் இருந்த இருவர், ஒருவகை திரவத்தை அருந்திய பின்னர் ஏற்பட்ட சுகவீனத்தால் உயிரிழந்துள்ள சம்பவம் துயரத்தை ஏர்படுத்தியுள்ளது.

குறித்த இடத்தில் நால்வர் இருந்துள்ளதுடன், கடலில் இருந்து மிதந்து வந்த போத்தலொன்றில் இருந்த திரவத்தையே அவர்கள் அருந்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

திரவத்தை அருந்திய பின்னர், ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் ஏனைய மூவரும் புத்தளம் வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட பின்னர், அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் மற்றைய இருவரும் தற்போதும் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வவுனியாவில் சட்டவிரோதமான முறையில் சொத்து சேர்ந்தவர்களை தேடி தீவிர விசாரணை!!

சட்ட விரோதமான முறையில் சொத்து சேர்த்தமை தொடர்பில் வவுனியாவிலும் பொலிஸாரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சட்டவிரோதமான முறையில் சொத்து சேர்த்தவர்கள் தொடர்பில் விசாரணை செய்ய பொலிஸாரின் விசேட பிரிவு ஒன்று அண்மையில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

அந்த பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து யாழ்ப்பாணத்தில் பலருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், வவுனியாவிலும் மீற்றர் வட்டி மற்றும் போதைப்பொருள் விற்பனை, மக்களிடம் அதிகமான காசோலைகளை பெற்றுக் கொண்டு அதை அடிப்படையாகக் கொண்டு மிரட்டப்பட்டு சொத்துக்களை பெற்றமை, மோசடியான முறையில் காணிகளை அபகரித்து சொத்து சேர்த்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் பொலிஸார் சிலரிடம் வாக்கு மூலங்களைப் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, வவுனியாவில் அதிகரித்து வரும் மீற்றர் வட்டி மற்றும் போதைப் பொருள் மாபியாவுக்கு எதிராக மக்கள் தகவல்களை எமக்கோ அல்லது பொலிஸாருக்கோ வழங்கினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் சடுதியாக குறைந்த தங்கத்தின் விலை!!

இலங்கையில் தங்கத்தின் விலையானது கடந்த சில நாட்களாக ஏற்றத்தாழ்வினை பதிவு செய்து வருகின்றது. உள்ளூர் சந்தையில் கடந்த வாரம் சாதனையாக 24 கரட் தங்கத்தின் விலை 410,000 ரூபாவாக உயர்ந்திருந்தது.

இதன்படி, இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (28) 3,000 ரூபாவினால் குறைந்துள்ளது.

எனினும் இன்று (28) , செட்டியார் தெரு தங்க சந்தையில் 24 கரட் தங்கத்தின் விலை 325,000 ரூபாவாகவும் 22 கரட் தங்கத்தின் விலை298,000 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை 4,230 அமெரிக்க டொலரை அடைந்துள்ளமையினால் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக அதிகரிப்பை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.