மூன்று வாகனங்கள் மோதி கோர விபத்து இருவர் பலி : மேலும் சிலர் வைத்தியசாலையில்!!

அனுராதபுரம் – பாதெனியா பிரதான வீதியில், கல்கமுவவின் குருந்தன்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். நேற்று காலை (21.12.2025) விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மற்றுமொரு விபத்தில் சிக்கிய ஒருவரை கல்கமுவ வைத்தியசாலைக்கு அழைத்துச்சென்ற முச்சக்கர வண்டியே விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது கல்கமுவ வைத்தியசாலை நோக்கிச்சென்ற முச்சக்கர வண்டி, அனுராதபுரம் நோக்கிச்சென்ற டிமோ பட்டா லொரியுடன் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதன்போது லொறியின் பின்னால் வந்த மற்றுமொரு முச்சக்கர வண்டியும் லொறியுடன் மோதியுள்ளது.

இந்த விபத்தில் நேருக்கு நேர் மோதிய முச்சக்கர வண்டியின் சாரதியும், வாகனத்தில் பயணித்த பெண் பயணியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 58 வயதுடைய தாயும் 29 வயதுடைய மகனும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த விபத்தில் முச்சக்கர வண்டியில் ஐந்து பேரும், லொறியில் மூன்று பேரும் பயணித்துள்ளதுடன், விபத்தில் காயமடைந்த அனைவரும் கல்கமுவ அடிப்படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

கோர விபத்தில் தாயும் மகனும் பரிதாபமாக பலி!!

விபத்தில் சிக்கிய ஒருவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று, அநுராதபுரம் – பாதெனிய பிரதான வீதியின் கல்கமுவ, குருந்தன்குளம் பகுதியில் இன்று (21) பகல் விபத்துக்குள்ளாகியுள்ளது.

கல்கமுவ வைத்தியசாலைக்குச் சென்றுகொண்டிருந்த குறித்த முச்சக்கரவண்டி, அநுராதபுரம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த டிமோ பட்டா ரக லொறி ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியுள்ளது.

அத்துடன், விபத்துக்குள்ளான லொறிக்கு பின்னால் வந்த மற்றுமொரு முச்சக்கரவண்டியும் இந்த லொறியுடன் மோதியுள்ளது.

எவ்வாறாயினும், இந்த விபத்தில் நேருக்கு நேர் மோதிய முச்சக்கரவண்டியின் சாரதியும், அதில் பயணித்த பெண்ணொருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், இவ்வாறு உயிரிழந்தவர்கள் தாயும் மகனும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

விபத்து இடம்பெற்ற போது முச்சக்கரவண்டியில் ஐந்து பேர் பயணித்துள்ள நிலையில், காயமடைந்தவர்கள் கல்கமுவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பின்னால் வந்த லொறியில் நான்கு பேர் பயணித்துள்ளதுடன், அவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அத்துடன் லொறியின் பின்னால் மோதிய முச்சக்கரவண்டியிலும் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதுடன் முன்பகுதிக்கு மட்டுமே சேதம் ஏற்பட்டுள்ளது.

இ.போ.ச பஸ் – முச்சக்கரவண்டி மோதி விபத்து : இருவர் படுகாயம்!!

நாவலப்பிட்டி, போகஹவத்தை வழியாக கொத்மலை மகாவெலிகம வீதியில் உள்ள பெல்டன் அம்பகஸ்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று திங்கட்கிழமை (22) காலை 10:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

அதிவேகமாக பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியில் கவிழ்ந்து எதிர்த்திசையில் பயணித்த இலங்கை போக்குவரத்து சபை சொந்தமான பஸ்ஸுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் முச்சக்கரவண்டி சாரதியும் மற்றுமொருவரும் படுகாயமடைந்த நிலையில் கொத்மலை மல்தெனிய பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் திம்புள்ள பத்தனை பொலிஸார் கொத்மலை, மஹாவெலிகமவிலிருந்து நாவலப்பிட்டி நோக்கிச் சென்ற கொத்மலை டிப்போவைச் சேர்ந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு

சொந்தமான பஸ்ஸுடன் அதிவேகமாக பயணித்த முச்சக்கரவண்டி வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் வீதியில் கவிழ்ந்து பஸ்ஸுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தனர்.

விபத்தில் முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளதுடன் திம்புள்ள பத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரே நாளில் மீண்டும் எகிறிய தங்கத்தின் விலை!!

நாட்டில் இன்று (22.12.2025), 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 4000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் கடந்த சனிக்கிழமை (20) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 340,000 ரூபாய்க்கு விற்பனையாகியிருந்த நிலையில், இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 344,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 318,200 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 39,775 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இப்படி ஒரு கஷ்டம் எந்த தாய்க்கும் வரக்கூடாது : தாயின் கண்முன்னே துடிதுடித்த மகள் : இரக்கமின்றி அடித்துக்கொன்ற கணவன்!!

தெலுங்கானா மாநிலம், விகாராபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் 25 வயதுடைய பரமேஷ். இவர் அதே பகுதியில் தனியார் பேருந்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்ததாக சொல்லப்படுகிறது.

அப்போது இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 20 வயதுடைய அனுஷா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டு தனியாக வீடு எடுத்து வசித்து வந்தனர்.

திருமணமான மூன்று மாதத்தில் பரமேஷ் தனது காதலி அனுஷாவை அவரது வீட்டிற்கு சென்று பணம் வாங்கி வர கூறி கட்டாயப்படுத்தியதாக சொல்லப்படுகிறது.

இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்திருக்கிறது.

எனவே அனுஷா இது குறித்து தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து அனுஷா வீட்டிற்கு வந்த அவரது தாய் பரமேஷ் மற்றும் அனுஷாவை சமாதானம் செய்து வைத்திருக்கிறார்.

ஆனால் பரமேஷ் அனுஷாவின் தாய் முன்பே அவரிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்திருக்கிறார். இதனால் மீண்டும் கணவன் மனைவி இருவருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

இதில் ஆத்திரமடைந்த பரமேஷ் அனுஷாவை வீட்டிற்கு வெளியில் இழுத்து சென்று அங்கிருந்த கட்டையால் அவரது தாய் கண் முன்னே சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அனுஷாவை மீட்டு அவரது தாய் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.

மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அனுஷாவின் தாய் போலீசாருக்கு தகவல் அளித்த நிலையில் தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த போலீசார் உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து கொலை செய்து விட்டு தப்பித்து சென்ற பரமேஷை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

காதலித்து திருமணம் செய்து கொண்ட பெண்ணை வரதட்சணை கேட்டு அவரது தாய் கண் முன்னே கணவன் கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பரமேஷ் அவரது மனைவியை வீட்டுக்கு வெளியில் கட்டையால் கொடூரமாக தாக்கி கொலை செய்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி தற்போது சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகிறது.

6 மாதக் கரு கலைந்து உயிரும் போனது… கர்ப்பிணி மகளை ஆணவக் கொலை செய்த தந்தை!!

கர்நாடக மாநிலம் ஹுப்பள்ளி மாவட்டத்தில் மனிதநேயமற்ற முறையில் ஒரு கொடூரமான கௌரவக் கொலை அரங்கேறியுள்ளது. தலித் இளைஞரைத் திருமணம் செய்ததற்காக, ஆறு மாதக் கர்ப்பிணியாக இருந்த மகளை அவரது தந்தையே அடித்துக் கொன்ற சம்பவம் இந்தியாவையே உலுக்கியுள்ளது.

ஹுப்பள்ளி இனாம்-வீரப்பூர் கிராமத்தைச் சேர்ந்த மான்யா (20) என்ற பெண், அதே பகுதியைச் சேர்ந்த விவேகானந்தா என்ற தலித் இளைஞரை உயிருக்கு உயிராகக் காதலித்து வந்தார். இவர்களது திருமணத்திற்கு மான்யாவின் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

ஜாதித் தடையை மீறி, கடந்த மே மாதம் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். பெற்றோரின் கோபத்திற்குப் பயந்து, இருவரும் சில மாதங்கள் ஹவேரி பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தலைமறைவாக வாழ்ந்து வந்தனர்.

தங்கள் மீது தந்தைக்கும் குடும்பத்தினருக்கும் இருந்த கோபம் குறைந்திருக்கும் என நம்பி, கடந்த டிசம்பர் 8-ஆம் தேதி இந்த ஜோடி மீண்டும் சொந்தக் கிராமத்திற்குத் திரும்பியுள்ளது. ஆனால், ஆத்திரம் குறையாத மான்யாவின் தந்தை பிரகாஷ் கெளடா, அடிக்கடி விவேகானந்தாவின் வீட்டிற்குச் சென்று தகராறு செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்றிரவு பிரகாஷ் கெளடா தனது இரண்டு மகன்களுடன் ஆயுதங்களை ஏந்தி விவேகானந்தாவின் வீட்டிற்குள் புகுந்தார். கையில் இருந்த இரும்புக் கம்பிகள் மற்றும் பயங்கர ஆயுதங்களால் மான்யா, விவேகானந்தா மற்றும் அவரது பெற்றோரைச் சராமாரியாகத் தாக்கினர்.

படுகாயமடைந்த அனைவரும் ரத்த வெள்ளத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 6 மாதக் கர்ப்பிணியாக இருந்த மான்யா, சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். விவேகானந்தாவும் அவரது பெற்றோரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக இருந்த மான்யாவின் தந்தை பிரகாஷ் கெளடா மற்றும் அவரது இரண்டு சகோதரர்களைக் கைது செய்துள்ளனர்.

ஒரு மகளின் உயிரைப் பறித்தது மட்டுமல்லாமல், பிறக்காத ஒரு உயிரையும் ஜாதி வெறி பலி வாங்கியிருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஓடும் புகையிரதத்திலிருந்து புதுமணத் தம்பதி தவறி விழுந்து பலியான சோகம்!!

ஆந்திர மாநிலத்தில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து புதுமணத் தம்பதி உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவின் பார்வதிபுரம் மன்யம் மாவட்டம்,

கருகுபில்லி பகுதியைச் சேர்ந்த 25 வயதான சிம்மாசலம் மற்றும் 19 வயதான பவானி ஆகிய இருவருக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றுள்ளது.

ரசாயன தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த சிம்மாசலம், தனது மனைவியுடன் உறவினர் வீட்டு விசேஷத்திற்காகச் சென்றபோது இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது.

வாசல் அருகே நின்றதால் வந்த வினை: சிம்மாசலமும் பவானியும் விஜயவாடாவில் உள்ள தங்கள் உறவினர் வீட்டிற்குச் செல்வதற்காக, செகந்திராபாத்தில் இருந்து மச்சிலிப்பட்டினம் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறியுள்ளனர்.

ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததா அல்லது காற்றுக்காக நின்றார்களா என்று தெரியவில்லை, ஆனால் இருவரும் ரயிலின் வாசல் அருகிலேயே நின்று கொண்டு பயணம் செய்துள்ளனர்.

ரயில் அதிவேகமாகச் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாகப் பிடி நழுவி இருவரும் ஒருவரை ஒருவர் பிடித்தபடி தண்டவாளத்தில் தூக்கி வீசப்பட்டனர்.

சம்பவ இடத்திலேயே பறிபோன உயிர்கள்: வங்கபள்ளி ரயில் நிலையத்தைக் கடந்து சென்றபோது நிகழ்ந்த இந்த விபத்தில், ரயிலில் இருந்து கீழே விழுந்த கணவன்-மனைவி இருவருக்கும் தலையிலும் உடலிலும் பலத்த காயம் ஏற்பட்டது.

ரத்த வெள்ளத்தில் துடித்த அவர்கள் இருவரும் மீட்கப்படுவதற்கு முன்பே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த ரயில்வே போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருமணமாகி இரண்டே மாதங்களில், வாழ்க்கையைத் தொடங்கும் முன்பே ஒரு சிறு கவனக்குறைவால் இரு உயிர்கள் பறிபோனது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரயிலில் பயணம் செய்யும் போது வாசலில் நின்று பயணம் செய்வது எவ்வளவு ஆபத்தானது என்பதற்கு இந்தச் சம்பவம் மற்றுமொரு கசப்பான உதாரணமாக மாறியுள்ளது. இது குறித்து ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.

5 வயது மகனைக் கொன்று விட்டு, போலீஸுக்கு அழைப்பெடுத்து வரச்சொன்ன தாய்!!

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள புன்னசெரி பகுதியில் அரங்கேறியுள்ள இந்தத் துயரச் சம்பவம், ஒட்டுமொத்த மாநிலத்தையும் உலுக்கியுள்ளது.

38 வயதான அனு என்ற பெண், தனது 5 வயது மகன் ஹர்ஷனைத் தூக்கத்தில் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.

விளையாடித் திரிய வேண்டிய வயதில், பெற்ற தாயின் கரங்களாலேயே ஒரு பிஞ்சு உயிர் பறிக்கப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

அனு கோழிக்கோட்டில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அவரது மகன் ஹர்ஷன், அருகில் உள்ள தனியார் பள்ளியில் யூகேஜி படித்து வந்தான்.

நேற்று காலை திடீரெனத் தனது மகனைக் கழுத்தை நெரித்துக் கொன்ற அனு, அதன் பிறகு பதற்றமடையாமல் போலீசுக்குத் போன் செய்துள்ளார்.

“என் மகனை நானே கழுத்தை நெரித்துக் கொன்று விட்டேன்” என்று அவர் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கக்கூர் போலீசார், உடனடியாக அவரது வீட்டிற்கு விரைந்தனர்.

அங்கு அறையில் மயங்கிக் கிடந்த சிறுவனை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர்.

இந்தக் கொடூரச் செயலுக்கான காரணம் குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சில திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.

அனு கடந்த சில மாதங்களாகக் கடுமையான மனநலப் பாதிப்பிற்கு உள்ளாகியிருந்தது தெரிய வந்துள்ளது. இதற்காக அவர் முறையான மனநலச் சிகிச்சையும் பெற்று வந்துள்ளார்.

மன அழுத்தம் அல்லது மனநலக் குறைபாடு காரணமாக ஏற்பட்ட ஆவேசத்தில் அவர் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

சிறுவனின் உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மகனைக் கொன்ற அனுவைக் கைது செய்துள்ள போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரு தாய் தனது சொந்த மகனையே கொலை செய்த இந்தச் சம்பவம், மனநலப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வின் அவசியத்தை மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளது. உயிரிழந்த சிறுவன் ஹர்ஷனின் மறைவிற்குப் பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

இரகசிய திருமணம் செய்த இளம்பெண் : இறந்ததாக அறிவித்து உருவ பொம்மைக்கு இறுதிச்சடங்கு நடத்திய குடும்பம்!!

இந்திய மாநிலம் மத்திய பிரதேசத்தில் காதலரை திருமணம் செய்த பெண்ணுக்கு, உருவ பொம்மை வைத்து இறுதிச்சடங்கு நடத்திய சம்பவம் அரங்கேறியது.

மத்திய பிரதேசத்தின் விதிஷாவைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் கவிதா. இவர் சமீபத்தில் காணாமல் போனதால் அவரது குடும்பத்தினர் அருகில் உள்ள பகுதிகளில் தேடினர்.

அதன் பின்னர்தான் கவிதா காதலருடன் ரகசிய திருமணம் செய்தது தெரிய வந்தது. இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் தங்கள் மகள் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

மேலும், அவருக்கு அடையாளப்பூர்வமாக ஈமச்சடங்குகளை செய்ய அவர்கள் முடிவு செய்தனர். அதன்படி, மாவினால் செய்யப்பட்ட கவிதாவின் உருவ பொம்மையை பாடையில் வைத்து ஊர்வலமாக கொண்டு சென்றனர்.

மயானத்தை அடைந்த பிறகு, குடும்பத்தினர் சிதையை தயார் செய்தனர். அனைத்து சடங்குகளும் பாரம்பரிய முறைப்படி செய்யப்பட, இறுதிச்சடங்கின் ஒரு பகுதியாக, உருவ பொம்மைக்குத் தீ வைக்கப்பட்டது.

இதுகுறித்து கண்ணீருடன் பேசிய கவிதாவின் தந்தை ராம்பாபு குஷ்வாஹா, தனது மகளின் முடிவால் குடும்பம் முற்றிலும் உடைந்துவிட்டது என்றும், இது தனது வாழ்வின் மிகவும் வேதனையான தருணம் என்றும் கூறினார்.

உருவ பொம்மையை இறுதி ஊர்வலமாக கொண்டுசென்று தீ மூட்டிய காட்சிகள் இணையத்தில் பரவி வருகின்றன.

வவுனியாவில் இன்று இடம்பெற்ற கிளீன் சிறிலங்கா நடமாடும் சேவை!!

கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் கீழான விசேட நடமாடும் சேவை வவுனியாமாவட்ட செயலக வளாகத்தில் இன்று (22.12.2025) காலை இடம்பெற்றது.

மாவட்டசெயலகம், வவுனியா பிரதேசசெயலகம், தெற்கு பிரதேச செயலகம் ஆகியன இணைந்து குறித்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்திருந்தது.

நடமாடும் சேவையில் காணி அனுமதிப்பத்திரம் வழங்கிவைத்தல், காலம் கடந்த பிறப்பு இறப்பு பதிவு, மனிதவள அபிவிருத்தி தொடர்பான சேவைகள், ஜனாதிபதி செயலகத்தின் பன்முகப்படுத்தப்பட்ட சேவைகள், ஆட்பதிவு திணைக்களத்தின் சேவைகள், போதை ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு உட்பட பொதுமக்களுக்கான பல்வேறு சேவைகள் முன்னெடுக்கப்பட்டது.

நிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்துகொண்ட கூட்டுறவு பிரதி அமைச்சர் உபாலிசமரசிங்க உத்தியோகபூர்வமாக, நிகழ்வை ஆரம்பித்து வைத்திருந்தார்.

குறித்த நிகழ்வில் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செ.திலகநாதன், மாவட்ட அரசாங்க அதிபர் பி.ஏ.சரத்சந்திர, மேலதிக அரச அதிபர் நா.கமலதாசன், பிரதேச செயலாளர் இ.பிரதாபன் உட்பட திணைக்களங்களின் தலைவர்கள், உத்தியோகத்தர்கள், மற்றும் பெருமளவான பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியா தொழிற்பயிற்சி அதிகாரசபையில் (VTA)2026ம் ஆண்டுக்கான புதிய கற்கைநெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரல்!!

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களில் 2026 கல்வியாண்டிற்கான தொழிற்கல்வி நடவடிக்கைகள் தை மாதம் முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளன.

தகவல் தொடர்பாடல் தொழில்நுடபவியலாளர் (Computer Application Assistant, Information and Communication Technology Technician), நீர்க்குழாய் பொருத்துநர் (Plumber), சிகையலங்காரவினைஞர் (Hair Dresser), கணினி பட வரைஞர்(Graphic Designer),

ஆடை வடிவமைப்பு தொழில்நுட்பவியலாளர்(Dress Maker/Tailor), மோட்டார் வண்டி திருத்துனர்(Motorcycle Technician), மர கைவினைஞர்(Wood Craftsman), மின்னியலாளர்(Electrician) ஆகிய பாடநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இத்துறைகளில் தமது திறன்களை வளர்த்துக்கொள்ள ஆர்வமுடைய மாணவர்கள் இங்கே இணைக்கப்பட்டுள்ள Google படிவத்தை நிரப்பி எமது நிலையங்களுடாக தொழிற்பயிற்சியினை பெற்றுக்கொள்ள முடியும். https://forms.gle/4BRWFAnLEqsXLZxA9

மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள கீழுள்ள தொடர்பு இலக்கங்கள் மூலம் எம்மை தொடர்வு கொள்ளவும்.
0242221617, 0768304770, 0770720157, 0710318982

வவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞன் பரிதாபமாக பலி!!

வவுனியா வீரபுரம் பகுதியில் இன்று (21.12.2025) மாலை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் வவுனியா தவசிகுளத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் பரிதாபமாக சாவடைந்துள்ளார்.

குறித்த இளைஞர் உட்பட சிலர் இன்று மாலை வவுனியாவில் இருந்து வீரபுரம் பகுதிக்கு சென்றுள்ளனர். இதன்போது அவர்கள் மீது அந்த பகுதியை சேர்ந்த குழு ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் படுகாயமடைந்த இளைஞர் உடனடியாக மீட்கப்பட்டு செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

எனினும் சிகிச்சை பலனின்றி அவர் சாவடைந்துள்ளார். சம்பவத்தில் தவசிகுளம் பகுதியை சேர்ந்த யோ.அபிசாந் வயது 19 என்ற இளைஞரே சாவடைந்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சிலரை கைதுசெய்வதற்கான நடவடிக்கையினை செட்டிகுளம் பொலிசார் மேற்கொண்டுள்ளதுடன், விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியாவில் பெண் கழுத்தறுத்து கொலை : கணவன் கைது!!

வவுனியா, கருவேப்பங்குளம் பகுதியில் குடும்பப் பெண் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் அவரது கணவன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் பொலிஸ் பாதுகாப்புடன் யாழ் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளார்.

வவுனியா, ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருவேப்பங்குளம் பகுதியில் 37 வயதுடைய குடும்பப் பெண் ஒருவர் கழுத்து பகுதியில் கூரிய ஆயுதத்தால் வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இதன்போது கணவனை பொலிசார் கைது செய்ய முற்பட்ட போது கழுத்து பகுதியில் கத்தியால் அவர் குத்தி மயக்கமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ஈச்சங்குளம் பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளில் குறித்த சம்பவம் தொடர்பில் கணவன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் பொலிஸ் பாதுகாப்புடன் மேலதிக சிகிசசைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு சென்ற நீதவான் சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்த உத்தரவிட்டதுடன், தடவியல் பொலிசாரின் உதவியுடன் விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

வாடகை வாங்கச் சென்ற பெண் மாயம் : பின்னர் தெரியவந்த அதிர்ச்சி உண்மை!!

இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில், வீட்டு வாடகை வசூலிக்கச் சென்ற வீட்டின் உரிமையாளரான பெண் மாயமானார்.

அவரது வீட்டில் வேலை செய்யும் பெண் கொடுத்த தகவலின்பேரில் பொலிசார் தேடுதல் வேட்டையில் இறங்க, அனைவருக்கும் ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது!

உத்தரப்பிரதேசத்திலுள்ள் Ghaziabad என்னுமிடத்தில் வாழ்ந்துவந்த தீப்ஷிகா ஷர்மா என்னும் பெண், தனது வீடு ஒன்றை ஒரு தம்பதியருக்கு மாதம் 18,000 ரூபாய்க்கு வாடகைக்கு விட்டிருந்தார்.

பிப்ரவரி மாதம் அந்த வீட்டுக்கு வாடகைக்கு வந்த ஜெய் குப்தா (37), ஆக்ரிதி குப்தா (32) தம்பதியர், கடந்த ஐந்து மாதங்களாக வாடகை கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், புதன்கிழமையன்று, வீட்டு வாடகை வசூலிப்பதற்காக, தனது வீட்டில் வேலை செய்யும் மின்னி என்னும் பெண்ணை அழைத்துக்கொண்டு குப்தா தம்பதியர் வீட்டுக்குச் சென்றுள்ளார் தீப்ஷிகா.

மின்னி, கீழே தீப்ஷிகாவின் நாயுடன் நிற்க, தீப்ஷிகா ஐந்தாவது தளத்திலுள்ள குப்தா தம்பதியர் குடியிருக்கும் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

வெகுநேரமாகியும் தீப்ஷிகா திரும்பி வராததால் குழப்பமடைந்த மின்னி, அலுவலகம் சென்றிருந்த தீப்ஷிகாவின் கணவருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அவர் வந்து தேடியும் தீப்ஷிகாவைக் காணாததால் பொலிசார் அழைக்கப்பட்டுள்ளார்கள்.

கடைசியாக தீப்ஷிகா, குப்தா தம்பதியர் வீட்டுக்குச் சென்றதாக மின்னி கூறியதைத் தொடர்ந்து அங்கு சென்ற பொலிசார் வீட்டை சோதனையிட, ஒரு கட்டிலுக்கடியில் சூட்கேஸ் ஒன்றிற்குள் தீப்ஷிகாவின் உயிரற்ற உடல் மறைத்துவைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

விசாரணையில், ஆறு மாதங்களுக்கு முன் தனது பிஸினஸ் நஷ்டமடைந்ததால் தன் நிறுவனத்தை மூடிவிட்டதாக தெரிவித்த ஜெய் குப்தா, தீப்ஷிகா தொடர்ந்து பலமுறை வந்து வீட்டு வாடகை கேட்டதாகவும், புதன்கிழமை, அது தொடர்பில் வாக்குவாதம் ஏற்படவே கோபத்தில் தாங்கள் அவரைத் தாக்கிக் கொன்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

தான் தீப்ஷிகாவை குக்கர் ஒன்றால் தலையில் தாக்க, தன் மனைவி துப்பட்டாவால் அவரது கழுத்தை நெறித்ததாக தெரிவித்துள்ளார் ஜெய் குப்தா.

அவரது உடலை ஒரு சூட்கேசில் வைத்து இரவு எங்காவது கொண்டு போட்டுவிடலாம் என எண்ணிக்கொண்டிருந்த நேரத்தில், மின்னி கொடுத்த தகவலால் பொலிசார் உடனடியாக வீட்டுக்கு வர, தாங்கள் சிக்கிக்கொண்டதாக தெரிவித்துள்ளார் ஜெய் குப்தா.

ஜெய் குப்தாவும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தீப்ஷிகாவின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அதீத வேகத்தால் விபரீதம் : பரிதாபமாக பலியான 17 வயது இளைஞன்!!

களுத்துறை – பதுரலிய, அகலவத்த திரிவனகெட்டிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பதுரலிய பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று (19) மதியம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அகலவத்தையிலிருந்து பதுரலிய நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டுவிலகி எதிர்திசையில் பயணித்த கெப் வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் காயமடைந்து நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர் பதுரலிய பகுதியை சேர்ந்த 17 வயதுடைய இளைஞன் என தெரியவந்துள்ளது.

சடலம் நாகொடை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பதுரலிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காதல் திருமணம் செய்த மனைவியை நடுரோட்டில் அடித்தே கொன்ற கணவன்!!

தெலுங்கானா மாநிலம் விக்ரபாத் மாவட்டத்தில், காதல் திருமணம் செய்த மனைவியை வரதட்சணைக் கொடுமை காரணமாகக் கணவனே நடுரோட்டில் அடித்துக் கொன்ற துயரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விக்ரபாத் மாவட்டம் சாய்புரி கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் பரமேஷ் என்பவரும், கரங்கோட்டா கிராமத்தைச் சேர்ந்த அனுஷா (20) என்ற இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்குப் பெற்றோர் பச்சைக்கொடி காட்டவே, கடந்த மார்ச் 12-ம் தேதி இருவருக்கும் கோலாகலமாகத் திருமணம் நடைபெற்றது.

ஆரம்பத்தில் மகிழ்ச்சியாகச் சென்ற இவர்களது வாழ்க்கையில், மூன்றே மாதங்களில் வரதட்சணைப் பிசாசு புகுந்தது. தனது மனைவி அனுஷாவிடம் கூடுதல் பணம் மற்றும் நகை கேட்டுப் பரமேஷ் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இது தொடர்பாகக் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அனுஷாவைப் பரமேஷ் கடுமையாகத் தாக்கியுள்ளார். தனது மகள் சித்திரவதை செய்யப்படுவதை அறிந்த அனுஷாவின் தாயார், மகளைத் தனது வீட்டிற்கு அழைத்துச் செல்ல சாய்புரி கிராமத்திற்கு வந்துள்ளார்.

அப்போது, மாமியாரிடம் நைசாகப் பேசிச் சமாதானம் செய்த பரமேஷ், “இனி இதுபோல நடக்காது” என்று கூறி அனுஷாவைத் தன்னுடனேயே இருக்கச் சம்மதிக்க வைத்துள்ளார்.

ஆனால், தாயார் சென்ற சில நிமிடங்களிலேயே பரமேஷின் கோர முகம் மீண்டும் வெளிப்பட்டது. வீட்டின் அருகே தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அனுஷாவுடன் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பரமேஷ்,

ஆத்திரத்தில் அங்கிருந்த ஒரு பெரிய உருட்டுக் கட்டையை எடுத்து அனுஷாவைச் சரமாரியாகத் தாக்கினார். பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியிலேயே இந்தத் தாக்குதல் நடந்தது. இதில் பலத்த காயமடைந்த அனுஷா ரத்த வெள்ளத்தில் அங்கேயே சுருண்டு விழுந்தார்.

அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அனுஷா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

மனைவியைக் கொன்றுவிட்டுத் தலைமறைவான பரமேஷ் மற்றும் அவரது பெற்றோரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அனுஷாவைப் பரமேஷ் கொடூரமாகத் தாக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பார்ப்போரை உலுக்கியுள்ளது.

காதலித்துத் திருமணம் செய்த பெண்ணையே வரதட்சணைக்காக அடித்துக் கொன்ற சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.