கொழும்பு, புறக்கோட்டை, குணசிங்கபுர பகுதியில் உள்ள பஸ் தரிப்பிடத்தில் இரண்டு பஸ்களுக்கு மத்தியில் மரக்கிளை ஒன்று முறிந்து விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து கடந்த வியாழக்கிழமை (18.12.2025) இடம்பெற்றுள்ளது. விபத்தில் எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மரங்களுக்கு அருகில் நிற்பதையோ பயணிப்பதையோ முடிந்த அளவு தவிர்க்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தம்புள்ளை கலேவெல பகுதியில் வீட்டின் முன்பாக வாகனத்தை நிறுத்தி நித்திரை கொண்ட சாரதியின் கையை அடித்து உடைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.
குறித்த காணொளியில் வீட்டின் முன்பாக வாகனத்தை நிறுத்தி நித்திரை கொண்ட சாரதியை இளைஞன் ஒருவர் பெரிய தடி ஒன்றினால் நபர் ஒருவரை தாக்குவதுடன் இது தொடர்பில் முரண்படுகின்ற காட்சிகள் பதிவாகியுள்ளன.
சம்பவத்தின் போது தாக்கப்பட்ட நபரின் கைகளில் பலமான காயம் ஏற்பட்டிருப்தையும் குறித்த நபர் வலியால் துடிப்பதையும் காணமுடிகின்றது.
சம்பவத்தின் போது தாக்குதலை ஏற்படுத்திய நபர் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்துக்கொள்வதையும் குறித்த காணொளியில் காண முடிகின்றது.
சாதாரண விடயங்களுக்காக இது போன்று மிலேச்ச தனமாக தாக்குதலில் ஈடுபட்ட நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நுவரெலியா பத்தனை பகுதியில் தேநீர் குடிப்பதற்காக பஸ்ஸிலிருந்து கீழே இறங்கிச் சென்ற இருவர் மீது லொறி மோதி இளைஞன் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த விபத்து இன்று (20) காலை இடம்பெற்றுள்ளது.
டயகம பிரதேசத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் தேநீர் குடிப்பதற்காக பத்தனை பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
அந்த சந்தர்ப்பத்தில் தேநீர் குடிப்பதற்காக பஸ்ஸிலிருந்து இறங்கி சென்ற இளைஞன் உட்பட இருவர் மீது வேகமாக எதிர் திசையில் இருந்து பயணித்த லொறி மோதியதால் வட்டவளை பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மற்றொரு இளைஞன் படுகாயமடைந்த நிலையில் கொட்டக்கலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
நாத்தாண்டிய பகுதியில் இருந்து நுவரெலியா நோக்கி அரிசி ஏற்றிச் சென்ற லொறி மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை பத்தனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மத்திய கிழக்கின் முக்கிய நகரமான துபாயில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக, பல பகுதிகள் இடுப்பளவு வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் காலநிலை மாற்றத்தால் கடுமையான பாதிப்புக்கள் பதிவாகி வரும் நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலும் தற்போது மழை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், துபாய் பொலிஸார், கனமழை பெய்து வருவதன் காரணமாக பாதுகாப்பு கவலைகள் எழும்பியுள்ளதால், அப்பகுதி மக்களை வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், நகரின் சில பகுதிகளில் வரலாறு காணாத மழை பெய்து ஒரு வருடம் கடந்துள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்நகர மக்களின் தொலைபேசிகளுக்கு அனுப்பப்பட்ட எச்சரிக்கையில், வெள்ளிக்கிழமை நண்பகல் வரை மிகவும் கவனமாக இருக்கவும், தேவைப்படாவிட்டால் முற்றிலும் வெளியே செல்வதைத் தவிர்க்கவும் துபாய் பொலிஸார் வலியுறுத்தியுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், குறிப்பாக துபாய் மற்றும் அபுதாபியில், கனமழை எச்சரிக்கைகள் நடைமுறையில் இருந்ததாக அந்நாட்டு தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கலீஜ் டைம்ஸின் அறிக்கையின்படி, மாறிவரும் வானிலை காரணமாக அபுதாபி சிவில் பாதுகாப்பும் மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு கோரியுள்ளது.
அத்துடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், திடீர் வெள்ளம் ஏற்படக்கூடிய பகுதிகளிலிருந்து விலகி இருக்கவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதற்கிடையில், சமூக ஊடக தளமான X இல், மழை மற்றும் மூடுபனி நகர வானலையை மூடியதால், சின்னமான புர்ஜ் கலீஃபா கிட்டத்தட்ட முற்றிலும் அடர்ந்த மேகங்களுக்குப் பின்னால் மறைந்திருப்பதைக் காட்டும் காட்சிகளும் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஆசியர்களைக் கேலி செய்யும் வகையில் கண்ணை இழுத்துப் பிடித்து புகைப்படம் வெளியிட்ட விவகாரத்தில், 2025ஆம் ஆண்டிற்கான ‘ஆசியர்களைக் கேலி செய்யும் வகையில் கண்ணை இழுத்துப் பிடித்து புகைப்படம் வெளியிட்ட விவகாரத்தில்,
2025-ஆம் ஆண்டிற்கான ‘மிஸ் பின்லாந்து’ (Miss Finland) சாரா ஜாஃப்சே (Sarah Dzafce) தனது பட்டத்தை இழந்துள்ளார்.
இந்த விவகாரம் பின்லாந்து மற்றும் ஆசிய நாடுகளுக்கு இடையே பெரும் ராஜதந்திர விரிசலை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் மிஸ் பின்லாந்து பட்டத்தை வென்ற சாரா ஜாஃப்சே, தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டிருந்தார்.
அதில் தனது கண்களை ஓரமாக இழுத்துப் பிடித்தபடி, “ஒரு சீனருடன் உணவு உண்கிறேன்” (eating with a Chinese) என்ற வாசகத்தையும் குறிப்பிட்டிருந்தார். இந்தப் புகைப்படம் ஆசிய சமூகத்தினரை இழிவுபடுத்துவதாகக் கூறி பெரும் எதிர்ப்பு கிளம்பியது.
இது குறித்து விளக்கமளித்த சாரா, தனக்கு ஏற்பட்ட தலைவலியைப் போக்கவே கண்களை அப்படிச் செய்ததாகவும், அந்த வாசகத்தை தனது நண்பர் ஒருவர் தனக்குத் தெரியாமல் பதிவிட்டுவிட்டதாகவும் கூறினார்.
இருப்பினும், கடந்த டிசம்பர் 8-ஆம் திகதி அவர் தனது செயலுக்கு மன்னிப்புக் கோரினார். இந்த விவகாரம் சர்வதேச அளவில் விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து, மிஸ் பின்லாந்து அமைப்பு சாராவின் பட்டத்தைப் பறிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
“இந்தச் செயல் ஆசிய சமூகத்தினருக்கும் மற்றவர்களுக்கும் பெரும் மனவேதனையை அளித்துள்ளது. எந்த வடிவத்திலும் இனவெறி ஏற்றுக்கொள்ளப்படாது,” என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
சாரா தனது பட்டத்தை இழந்த பிறகு, பின்லாந்தின் சில தீவிர வலதுசாரி அரசியல்வாதிகள் அவருக்கு ஆதரவாகக் களமிறங்கினர்.
அவர்கள் தங்களது சமூக வலைதளங்களில் சாரா செய்த அதே செய்கையை (கண்களை இழுத்துப் பிடித்தபடி) மீண்டும் செய்து புகைப்படங்களை வெளியிட்டமை பிரச்சினையை மேலும் தீவிரமாக்கியது.
இந்தச் செயலால் ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் பின்லாந்து தூதரகத்தின் வாயிலாகத் தங்களது கடும் கண்டனங்களைப் பதிவு செய்தன.
நிலைமை மோசமடைவதைக் கண்ட பின்லாந்து பிரதமர் பெட்டரி ஓர்போ (Petteri Orpo), ஜப்பான் மற்றும் தென் கொரிய மொழிகளில் அதிகாரப்பூர்வ மன்னிப்பு அறிக்கையை வெளியிட்டார்.
அதில்:”இந்தச் செயல்கள் பின்லாந்தின் சமத்துவ விழுமியங்களைப் பிரதிபலிக்கவில்லை.” “அரசியல்வாதிகள் முன்மாதிரியாகச் செயல்பட வேண்டும்.”
“இனவெறிக்குத் தங்கள் நாட்டில் இடமில்லை,” என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த விவகாரம் பின்லாந்து மற்றும் ஆசிய நாடுகளுக்கு இடையே பெரும் ராஜதந்திர விரிசலை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் மிஸ் பின்லாந்து பட்டத்தை வென்ற சாரா ஜாஃப்சே, தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டிருந்தார்.
அதில் தனது கண்களை ஓரமாக இழுத்துப் பிடித்தபடி, “ஒரு சீனருடன் உணவு உண்கிறேன்” (eating with a Chinese) என்ற வாசகத்தையும் குறிப்பிட்டிருந்தார். இந்தப் புகைப்படம் ஆசிய சமூகத்தினரை இழிவுபடுத்துவதாகக் கூறி பெரும் எதிர்ப்பு கிளம்பியது.
மிஸ் பின்லாந்து அமைப்பு சாரா
இது குறித்து விளக்கமளித்த சாரா, தனக்கு ஏற்பட்ட தலைவலியைப் போக்கவே கண்களை அப்படிச் செய்ததாகவும், அந்த வாசகத்தை தனது நண்பர் ஒருவர் தனக்குத் தெரியாமல் பதிவிட்டுவிட்டதாகவும் கூறினார்.
இருப்பினும், கடந்த டிசம்பர் 8-ஆம் திகதி அவர் தனது செயலுக்கு மன்னிப்புக் கோரினார். இந்த விவகாரம் சர்வதேச அளவில் விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து, மிஸ் பின்லாந்து அமைப்பு சாராவின் பட்டத்தைப் பறிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
“இந்தச் செயல் ஆசிய சமூகத்தினருக்கும் மற்றவர்களுக்கும் பெரும் மனவேதனையை அளித்துள்ளது. எந்த வடிவத்திலும் இனவெறி ஏற்றுக்கொள்ளப்படாது,” என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. சாரா தனது பட்டத்தை இழந்த பிறகு, பின்லாந்தின் சில தீவிர வலதுசாரி அரசியல்வாதிகள் அவருக்கு ஆதரவாகக் களமிறங்கினர்.
அவர்கள் தங்களது சமூக வலைதளங்களில் சாரா செய்த அதே செய்கையை (கண்களை இழுத்துப் பிடித்தபடி) மீண்டும் செய்து புகைப்படங்களை வெளியிட்டமை பிரச்சினையை மேலும் தீவிரமாக்கியது.
இந்தச் செயலால் ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் பின்லாந்து தூதரகத்தின் வாயிலாகத் தங்களது கடும் கண்டனங்களைப் பதிவு செய்தன.
நிலைமை மோசமடைவதைக் கண்ட பின்லாந்து பிரதமர் பெட்டரி ஓர்போ (Petteri Orpo), ஜப்பான் மற்றும் தென் கொரிய மொழிகளில் அதிகாரப்பூர்வ மன்னிப்பு அறிக்கையை வெளியிட்டார்.
அதில்:”இந்தச் செயல்கள் பின்லாந்தின் சமத்துவ விழுமியங்களைப் பிரதிபலிக்கவில்லை.” “அரசியல்வாதிகள் முன்மாதிரியாகச் செயல்பட வேண்டும்.” “இனவெறிக்குத் தங்கள் நாட்டில் இடமில்லை,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
டயகமவிலிருந்து கொழும்பு நோக்கிச்சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துடன் லொறியொன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் திம்புல பத்தனை சந்திப்பில் இன்று ( 20.12.2025) காலை 7:00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது விபத்தில் காயமடைந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு பயணி கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவத்தில் 21 வயது மதிக்கதக்க லிந்துலை கவ்லிணா பகுதியை சேர்ந்த நபரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
டயகமவிலிருந்து கொழும்பு நோக்கிச்சென்ற பேருந்தின் சாரதி ஓய்வெடுக்க எதிர் திசையில் பேருந்தை நிறுத்தியபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது பேருந்தில் பயணித்த இரு பயணிகள் பின்புற கதவிலிருந்து இறங்கி பிரதான வீதிக்கு வந்தபோது நாத்தண்டியாவிலிருந்து நுவரெலியாவுக்கு அரிசி ஏற்றிச்சென்ற லொறியுடன் மோதுண்டுள்ளனர்.
விபத்தில் உயிரிழந்த நபர் நாவலபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது சகோதரியை பார்வையிடுவதற்காக சென்ற போதே குறித்த அனர்த்ததிற்கு முகம் கொடுத்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக பேருந்து மற்றும் லொறி சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பேருந்தினை வலது பக்கத்தில் பாதுகாப்பின்றி நிறுத்தியமைக்காகவும், விபத்தினை தவிர்க்காமைக்காகவும் லொறி சாரதிக்கு வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புல்ல பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணம் – பொம்மைவெளி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்றையதினம்(20.12.2025) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் பொம்மைவெளி பகுதியில் கழிவுப் பொருட்களை ஏற்ற வந்த தனியாருக்கு சொந்தமான பவுசர் ஒன்றும் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் ஒருவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது சம்பவ இடத்திலேயே குறித்த பெண் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் இன்றைய (20.12.2025) நிலவரத்தின் படி தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனடிப்படையில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 378,800 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்க பவுண் ஒன்று 347,250 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,350 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,410 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
நாட்டின் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கையை மேலும் நீடிக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.
நாட்டின் பல பகுதிகளை பாதித்த கனமழை காரணமாக, ஐந்து மாவட்டங்களுக்கு வழங்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கையை நாளை (21) காலை 8.00 மணி வரை நீட்டித்துள்ளது.
கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு நிலை 3 (சிவப்பு) மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் பதுளை, குருநாகல் மற்றும் மாத்தளை மாவட்டங்களுக்கு நிலை 2 எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் இது தொடர்பாக மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் தகாத செயற்பாட்டில் ஈடுபட்ட விடுதியை நேற்று இரவு பொலிஸார் சுற்றி வளைத்துள்ளனர்.
கொழும்பு தெற்கு பிரிவு குற்றப் புலனாய்வுப்பிரிவு அதிகாரிகள் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது விடுதியின் முகாமையாளர் மற்றும் தாய்லாந்தை சேர்ந்த ஒன்பது பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
ஜா-எல பகுதியை சேர்ந்த 58 வயதான நபரே முகாமையாளராக செயற்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சந்தேகநபர்களான பெண்கள் 25 முதல் 41 வயதுக்குட்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அடுத்தகட்ட நடவடிக்கைக்காக கொள்ளுப்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மிஹிந்தலை பொலிஸ் பிரிவின் மாத்தளை சந்தியில் உள்ள குருந்தன்குளம் பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் இளைஞன் உயிரிழந்துள்ளார். விபத்தில் 23 வயதுடைய துலான் தனஞ்சய பீரிஸ் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.
நேற்று முன்தினம் அனுராதபுரம்-மாத்தளை சந்தி நோக்கிச் செல்லும் E-23 வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் வீதியின் இடது பக்கத்தை விட்டு விலகி, கவிழ்ந்தமையில் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். படுகாயம் அடைந்த இளைஞன் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும் சிகிச்சையின் பலனின்றி அவர் உயிரிழந்ததாக வைத்தியசாலையில் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். உயிரிழந்த துலான் தனஞ்சய, குடும்பத்தில் ஒரே மகனாகும்.
பொதுப் பணியில் ஈடுபட்டு வரும் துடிப்பான இளைஞர் என அந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் புர்கா அணியாததால் மனைவி மற்றும் இரண்டு மகள்களை கணவன் கொன்று புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஃப்ரூக் என்ற சமையல் கலைஞர் தன்னுடைய 32 வயது மனைவி தாஹிரா மற்றும் இரண்டு மகள்களை கொன்று புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், தன்னுடைய பெற்றோர் வீட்டிற்கு புர்கா அணியாமல் தாஹிரா சென்றதால் ஆத்திரமடைந்த ஃப்ரூக் இந்த வெறிச் செயலை செய்துள்ளார்.
புர்கா அணியாமல் வெளியே சென்றதால் தன்னுடைய மரியாதை பாதிக்கப்பட்டு விட்டதாக உணர்ந்த ஃப்ரூக் டிசம்பர் 10ம் திகதி சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்த மனைவி தாஹிராவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார்.
இந்த சத்தத்தை கேட்டு வந்த 14 வயது மகள் அஃப்ரின் என்பவரை சுட்டுக் கொன்றும், 7 வயது மகள் செஹ்ரீனை கழுத்தை நெரித்தும் கொன்றுள்ளார்.
மேலும் இந்த கொலையை மறைக்க வீட்டின் பின்புறத்தில் கழிப்பறைக்காக தோண்டப்பட்ட 9 அடி குழியில் மூவரின் உடலையும் போட்டு புதைத்துள்ளார்.
தாஹிரா மற்றும் குழந்தைகளை 6 நாட்களாக காணவில்லை என்பது குறித்து தனது மகனிடம் விசாரித்த ஃப்ரூக்வின் தந்தை தாவூத், ஃப்ரூக்வின் முன்னுக்கு பின் முரணான பதில்களால் சந்தேகமடைந்தார்.
இதையடுத்து அவர் காவல் நிலையத்தில் வழங்கிய புகாரின் அடிப்படையில் பொலிஸார் விசாரணை நடத்திய போது ஃப்ரூக் தான் செய்த குற்றச் செயல்களை ஒப்புக் கொண்டுள்ளார்.
விசாரணையின் போது ஃப்ரூக் தனது குடும்பத்தினரிடம் எவ்வளவு கடுமையான கட்டுப்பாடுகளுடன் நடந்து கொண்டுள்ளார் என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மனைவியின் முகம் வெளியே தெரிந்துவிடும் என்பதற்காக மனைவிக்கு ஆதார் கார்டு கூட எடுக்காமல் இருந்து வந்துள்ளார். மேலும் மாமனாரை கூட மனைவி சந்திக்க விடாதவாறு ஃப்ரூக் தடுத்து வந்துள்ளார்.
நாட்டில் டிட்வா சூறாவளியால் காய்கறிகளின் விலை வேகமாக அதிகரித்துள்ளதாக காய்கறி மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.
வெங்காயம், கிழங்கு மற்றும் சர்க்கரைவள்ளிக்கிழங்கு உள்ளிட்ட வளர்க்கப்படும் பல வகையான காய்கறிகள் ஒரு கிலோவிற்கு ரூ. 400-500 சில்லறை விலையில் விற்கப்படுகின்றன,
அதே நேரத்தில் ஒரு கிலோ கிராம் சர்க்கரைவள்ளிக்கிழங்கு ரூ. 650 விலையில் விற்கப்படுகிறது. கேரட், முட்டைக்கோஸ், பீட்ரூட், முள்ளங்கி மற்றும் லீக்ஸ் போன்ற காய்கறிகள் ரூ. 300-350 விலையிலும், மிளகாய் ஒரு கிலோ கிராம் ரூ. 1300 விலையிலும், போஞ்சி ரூ. 1000 விலையிலும் விற்கப்படுகின்றன.
அதேவேளை நுவரெலியா பொருளாதார மையத்திலிருந்து வியாழக்கிழமை (18) அன்று 91,510 கிலோ கிராம் காய்கறிகளுக்கான தேவை கிடைத்ததாகவும், அந்த தேவையை பூர்த்தி செய்யும் காய்கறிகள் விவசாயிகளிடமிருந்து வாங்கப்பட்டு,
அந்த காய்கறி இருப்பு நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் நுவரெலியா பொருளாதார மையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நுவரெலியா காய்கறி விவசாயிகள் நுவரெலியா பொருளாதார மையத்தின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் காய்கறி அறுவடை செய்வதால் மலையகத்தில் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகளின் விலைகள் அதிகரிக்காது என்றும் அந்த அதிகாரி கூறினார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ‘கிரீன் கார்ட்’ (Green Card) திட்டத்தை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்தியுள்ளார்.
பிரவுன் பல்கலைக்கழகத்தில் (Brown University) அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்ததுடன், ஒன்பது பேர் காயமடைந்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திய மாணவன் இந்த கிரீன் கார்ட் திட்டத்தின் ஊடாகவே அமெரிக்காவில் குடியுரிமையை பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதற்கமைய, அமெரிக்கக் குடியுரிமையை வழங்கும் இந்த குடிவரவு சேவைத் திட்டத்தை நிறுத்துமாறு ஜனாதிபதி ட்ரம்ப் அந்நாட்டு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த விசா திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதிலுமிருந்து 50,000 பேர் சட்டப்பூர்வமாக அமெரிக்காவிற்குள் நுழைய முடியும். அந்த வகையில், இந்த ஆண்டும் ‘கிரீன் கார்ட்’ திட்டத்திற்காக சுமார் 20 மில்லியன் பேர் விண்ணப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை டிரம்பின் இந்த முடிவு இலங்கையர்கள் உள்ளிட்ட பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெல் கடந்த காலங்களில் இலங்கையர்கள் பலரும் க்ரீன் கார்ட் லோட்டரி அமெரிக்கா சென்றுள்ளனர்.
வவுனியா நகர்ப் பகுதியில் முறையான அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள சிறிய வியாபார நிலையத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என வவுனியா மாநகர சபை ஆணையாளர் மே.சாந்தசீலன் தெரிவித்துள்ளார்.
வவுனியா நகரப் பகுதியில் உள்ள அரச காணியில் முறையான அனுமதியின்றி சிறிதாக அமைக்கப்பட்டிருந்த வர்த்தக நிலையம் ஒன்றை பெரிதாக கட்டும் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்ட நிலையில்,
கடந்த நவம்பர் மாதம் 10ஆம் திகதி இதனை அகற்றுவதற்கு மாநகரசபையினர் முற்பட்ட போதும் சட்டரீதியான சரியான முன்னாயத்த நடவடிக்கையினை செய்ய தவறியதன் காரணமாக அதனை அகற்ற முடியவில்லை.
உரிய நடவடிக்கை எடுக்கப்படும்
மேலும், மாநகரசபையினால் குறித்த அபிவிருத்தியினை மேலும் மேற்கொள்ளாமல் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், நேற்றையதினம் குறித்த வியாபார நிலையத்திற்கான கூரை தகடுகள் முழுமையாக அமைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக, மாநகர சபை ஆணையாளர் மே.சாந்தசீலனிடம் கேட்ட போதே, குறித்த வியாபார நிலையத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
மேலும், குறித்த வியாபார நிலையத்திற்கு எதுவித அனுமதியும் எங்களால் வழங்கப்படவில்லை என்றும், இது தொடர்பாக நேற்றையதினம் வர்த்தக சங்கத்தினாலும் எமக்கு தெரிவிக்கப்பட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில், குறித்த தரப்பினர் பள்ளிவாசலின் குத்தகை பத்திரத்தினை எமக்கு சமர்ப்பித்து ஒரு விண்ணப்ப படிவத்தினை எமக்கு தந்துள்ளனர்.
இது தொடர்பாக பிரதேச செயலாளரிடம் கேட்ட போது குறித்த குத்தகை இருப்பதாக தெரிவித்த போதும் அதனை இதுவரை பார்வையிடவில்லை. மேலும் அனுமதியற்ற இந்த வியாபார நிலையத்திற்கான நடவடிக்கையினை கட்டாயம் எடுப்போம் என குறிப்பிட்டுள்ளார்.
போலி கடவுசீட்டு மூலம் இந்தியாவிலிருந்து வர முயன்ற இலங்கை பெண் இந்திய மத்திய குற்றப்பிரிவு பொலிஸாரால் சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 17ம் திகதி 26 வயதுடைய குறித்த இளம் பெண் இந்திய கடவுசீட்டு மூலம் இலங்கை வர முயன்றுள்ளார். அவரது கடவுசீட்டை ஆய்வு செய்தபோது, அது போலியானது என தெரியவந்துள்ளது.
குறித்த பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது அவர் இலங்கையை சேர்ந்தவர் எனவும் கடந்த 2024ம் ஆண்டு சுற்றுலா விசா மூலம் இந்தியா வந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.
திருச்சியை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டு, குடியேறியதும், அதன் பிறகு இந்திய இந்திய அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை பெற்று அதன் மூலம் இலங்கை செல்ல முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து, மத்திய குற்றப்பிரிவு பொலிஸார் இவரை கைது செய்து போலி கடவுச்சீட்டு, அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.