தந்தையின் உடலை துண்டு துண்டாக வெட்டிய மகன் : நேரில் பார்த்த சகோதரி!!

லக்னோவில் தந்தையின் உடலை துண்டு துண்டாக வெட்டிய 21 வயது மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

லக்னோவின் ஆஷியானா பகுதியை சேர்ந்த 49 வயது மன்வேந்திர சிங் என்பவர் மருந்து மற்றும் மதுபான தொழிலில் வெற்றிகரமாக ஈடுபட்டு வந்துள்ளார்.

அவருக்கு தன்னுடைய மகன் அக்ஷத் பிரதாப் சிங், மருத்துவ துறையில் நடைபெறும் நுழைவு தேர்வுகளுக்கு தயாராக வேண்டும் என்று விரும்பியுள்ளார்.

ஆனால் இதில் மகன் அக்ஷத் பிரதாப் சிங்கிற்கு சிறிதும் விருப்பம் இல்லாததால், தந்தைக்கும் மகனுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் மற்றும் மோதல் ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக தந்தை மன்வேந்திர சிங் காணாமல் போயுள்ளார். இதையடுத்து விசாரணையை தொடங்கிய பொலிஸார், தந்தைக்கும் மகனுக்கும் இடையே நடைபெற்று வந்த மோதலை கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் கடந்த வெள்ளிக்கிழமை தந்தைக்கும் மகனுக்கும் மோதல் மீண்டும் மோதல் ஏற்பட்டதையும், அப்போது தந்தையை மகன் அக்ஷத் பிரதாப் சிங் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

மகன் அக்ஷத் பிரதாப் சிங் கொலை செய்யப்பட்ட தந்தையின் உடலை மறைக்க அதை துண்டு துண்டாக வெட்டி பிளாஸ்டிக் பைகளில் கட்டி சிலவற்றை சதாருணா அருகே வீசியுள்ளார்.

முக்கிய மார்பு பகுதியை மட்டும் வீட்டில் இருந்த நீல நிற பேரலில் அக்ஷத் பிரதாப் சிங் மறைத்து வைத்துள்ளார்.

அக்ஷத் பிரதாப் சிங் தந்தையின் உடலை வெட்டும் போது அவரது சகோதரி நேரில் பார்த்த நிலையில், சகோதரியை மிரட்டி அடிபணிய வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கைது நடவடிக்கைக்கு பிறகு அக்ஷத் பிரதாப் சிங்கிடம் நடத்திய தீவிர விசாரணையில் அவர் கொலை குற்றத்தை ஒப்புக் கொண்டு இருப்பதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

வழிமறித்த கொள்ளையர்கள் : துணிச்சலாக செயல்பட்ட இளம்பெண்ணுக்கு குவியும் பாராட்டுக்கள்!!

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் தனது காரை வழிமறித்து கொள்ளையடிக்க முயன்ற இருவரை வாளைக் காட்டி துரத்தியடித்த இளம்பெண்ணுக்கு பாராட்டுகள் குவிகின்றன.

வெள்ளிக்கிழமை இரவு, பஞ்சாபிலுள்ள லூதியானா என்னுமிடத்தில் தனது மாமியார் மற்றும் சித்தியுடன் தனது காரில் பயணித்துக்கொண்டிருந்திருக்கிறார் ஹர்ஜிந்த் கௌர் என்னும் பெண்.

அப்போது இரண்டு பேர் தங்கள் காரை பின்தொடர்வதை அந்தப் பெண்கள் கவனித்துள்ளனர். சந்தேகம் ஏற்பட்டாலும், காரின் வேகத்தைக் குறைத்து அவர்களை முன்னே செல்ல அனுமதித்துள்ளார் கௌர்.

ஆனால், அவர்கள் முன்னேறிச் செல்லாமல் காரையே வட்டமடித்ததுடன், திடீரென ஒருவர் கார் முன் கண்ணாடி மீது முட்டையை வீசியுள்ளார்.

அப்படி முட்டையை வீசும்போது காரின் சாரதி அதை அகற்ற தனது காரின் வைப்பரை இயக்கினால், முட்டை கண்ணாடி முழுவதும் பரவி முன்னே என்ன நடக்கிறது என்று பார்க்கவிடாமல் மறைத்துவிடும்.

ஆக, அந்த நபர்களின் நோக்கத்தைப் புரிந்துகொண்ட கௌர், தனது காரில் வைத்திருந்த வாள் ஒன்றை எடுத்துக்கொண்டு கீழே இறங்கி அந்த நபர்களை துணிச்சலாக எதிர்கொண்டுள்ளார்.

அதற்குள் அந்த வழியாக பயணித்துக்கொண்டிருந்த பலர் கௌருக்கு ஆதரவாக திரள, அந்த இருவரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார்கள்.

கௌர் அளித்த புகாரைத் தொடர்ந்து, சந்தேகத்தின்பேரில் இருவரை பொலிசார் கைது செய்துள்ளார்கள். இதற்கிடையில், கௌரின் துணிச்சலான நடவடிக்கைக்கு சமூக ஊடகங்களில் பாராட்டுக்கள் குவிகின்றன.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார்!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை அறிவித்துள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் 101 வயதான நல்லகண்ணு, உடல்நலக்குறைவு காரணமாக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.

அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்ட நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்து வந்தனர்.

நடிகர் ரஜினிகாந்த், தவெக தலைவர் விஜய் உள்ளிட்டோர் நல்லகண்ணுவின் மகள் ஆண்டாளிடம் தொலைபேசி வாயிலாக அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர்.

இந்நிலையில், இன்று மதியம் 1.55 மணிக்கு நல்லகண்ணு உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

நல்லகண்ணுவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் முக ஸ்டாலின், முழு அரசு மரியாதையுடன் செவ்வணக்கம் செலுத்தி அவரது உடல் வழியனுப்பி வைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த நல்லகண்ணுவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நல்லகண்ணுவின் உடல் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் பொதுமக்கள் பார்வைக்காக இன்று மாலை 5 மணி முதல் நாளை மாலை 3 மணி வரை வைக்கப்படுகிறது.

நாளை மாலை 3 மணி முதல் கட்சி தொண்டர்கள் அணிவகுப்புடன் கட்சி அலுவலகத்தில் இருந்து ராஜீவ் காந்தி பொது மருத்துவமனைக்கு உடல் தானம் கொடுக்க கொண்டு செல்லப்பட உள்ளது.

உடல் எடை அதிகரிக்காமல் இருக்க இரவில் இதை செய்வது அவசியம்!!

நம் வாழ்க்கை முறை என்பது தற்போது தொழிநுட்பங்களுடன் பின்னிபிணைந்துள்ளது. அதில் உணவு பழக்க வழக்கம் பெறும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதனால் தான் உடல் எடை அதிகரித்து வருகின்றது. மாலை நேரம் தொடங்கி இருட்டத் தொடங்கும் போது வளர்சிதை மாற்றம் குறையத் தொங்குவதாக பலர் நினைக்கிறார்கள்.

ஆனால் உண்மை என்னவென்றால், உடலின் செயல்பாடு இரவில் சிறிது மாறுகிறது. மேலும் சில பழக்கவழக்கங்களும் அதை மேலும் மெதுவாக்குகின்றன.

வளர்சிதை மாற்றம் என்பது உணவை ஜீரணிப்பதன் மூலம் ஆற்றலை உருவாக்கும் செயல்முறையாகும். உடல் எடை அதிகரிக்காமல் இருக்க இரவில் நாம் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விடங்கள் பற்றி நாம் இங்கு பார்ப்போம்.

ஜங்க் உணவுகள் / துரித உணவுகள்

மெதுவான வளர்சிதை மாற்றத்திற்கு மிகப்பெரிய காரணம் இரவில் நீண்ட நேரம் விழித்திருந்து துரித உணவுகளை சாப்பிடுவதுதான். நீங்கள் படுக்கைக்கு செல்லும் முன் வறுத்த அல்லது இனிப்பான உணவை சாப்பிடும்போது,

​​உடலால் அதை சரியாக ஜீரணிக்க முடியாது. இது கொழுப்பை சேமிக்க வழிவகுக்கிறது, இது எடை அதிகரிக்க வழிவகுக்கிறது.

இரவில் சிப்ஸ், இனிப்புகள் அல்லது குளிர் பானங்களை உட்கொள்வதும் கலோரிகளை அதிகரிக்கிறது. சில நேரங்களில், இரவில் சாப்பிடும் துரித உணவு அடுத்த நாள் வாயு மற்றும் வீக்கத்தை ஏற்படுத்துகின்றன.

தூக்கம்

கொழுப்பு அதிகரிப்பதற்கு தூக்கமின்மையும் ஒரு முக்கிய காரணியாகும். தூக்கமின்மை ஹார்மோன்களை சீர்குலைத்து, பசியை அதிகரிக்க வழிவகுக்கிறது. நீண்ட நேரம் மொபைல் போன்களைப் பயன்படுத்துவதும்,

ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தூங்காமல் இருப்பதும் வளர்சிதை மாற்றத்தைப் பாதிக்கிறது. உடலுக்கு சரியான ஓய்வு கிடைக்காதபோது எடை படிப்படியாக அதிகரிக்கிறது. இரவு ஷிப்டுகளில் வேலை செய்பவர்களில் இந்தப் பிரச்சனை குறிப்பாகப் பரவலாக உள்ளது.

உடல் செயல்பாடு

இரவில் உடல் செயல்பாடு இல்லாதது ஆரோக்கியத்தையும் கணிசமாக பாதிக்கிறது. நீங்கள் நாள் முழுவதும் உட்கார்ந்து உடனடியாக படுக்கைக்குச் சென்றால்,

கலோரி எரிப்பு குறைகிறது, இது உங்கள் வளர்சிதை மாற்றத்தைக் குறைக்கிறது. எனவே, உணவுக்குப் பிறகு லேசான நடைப்பயிற்சி அல்லது நீட்சி செய்வது எப்போதும் நன்மை பயக்கும்.

ஆரோக்கியமான பழக்கங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்

சில எளிய பழக்கங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் மெதுவான வளர்சிதை மாற்றத்தைத் தவிர்க்கலாம். லேசான இரவு உணவை சரியான நேரத்தில் சாப்பிடுவது நல்லது.

படுக்கைக்கு இரண்டு மணி நேரத்திற்கு முன் இரவு உணவை உட்கொள்ளவும். இரவில் அதிகப்படியான இனிப்புகள் அல்லது வறுத்த உணவுகளைத் தவிர்க்கவும். தினமும் ஏழு முதல் எட்டு மணி நேரம் தூக்கம் அவசியமாகும். பகலில் சிறிது உடற்பயிற்சி செய்வது நல்லது.

 

திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட இளம் தம்பதி விபத்தில் பலி!!

தம்புள்ளையில் திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட தம்பதி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்துள்ளனர். பெற்றோர்களினால் நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட தம்பதி 3 மாதங்களின் பின்னர் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

தம்பதியினரின் இறுதிச் சடங்குகள் இன்று மதியம் யாபகம பொது மயானத்தில் இடம்பெற்றுள்ளது. தம்புள்ள யாபகமவைச் சேர்ந்த 22 வயதுடைய டிலந்த பூர்ணா என்ற இளைஞரும், அவரது வருங்கால மனைவியான நவோத்யா செனவிரத்ன என்ற இளம் பெண்ணுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

கம்பஹா பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்த இந்த ஜோடி அதே பகுதியிலுள்ள வாடகை வீட்டில் தங்கியிருந்தனர்.

விடுமுறைக்காக தம்புள்ளையில் உள்ள தங்கள் பெற்றோர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிள்களில் சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது கண்டி-கொழும்பு பிரதான வீதியில் உள்ள வத்துபிடிவல பகுதியில் பேருந்து மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

காதலியின் தந்தைக்கு அதிர்ச்சி கொடுத்த இளம்வயது காதலன்!!

தனது காதலியின் தந்தையை கத்தியால் குத்தியதற்காக கைது செய்யப்பட்ட பாடசாலை மாணவனை 500,000 ரூபாய் பிணையில் விடுவிக்க மஹர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தற்போது நடைபெற்று வரும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் களனியைச் சேர்ந்த 16 வயது மாணவனே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டார்.

சந்தேக நபர் தனது பாடசாலையில் ஒரே வகுப்பில் படிக்கும் மாணவியுடன் காதல் உறவைத் ஏற்படுத்தியிருந்தார். இருவரும் களனிப் பகுதியைச் சேர்ந்தவர்களாகும்.

பாடசாலை செல்லும் மாணவர்கள் என்பதால் உறவை முறித்துக் கொள்ளுமாறு மாணவியின் தந்தை மாணவனிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து மாணவன், மாணவியின் தந்தையை கத்தியால் குத்தினார்.

உடனடியாக தாக்குதலுக்குள்ளான தந்தை முல்லேரியாவ அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதாக களனி பொலிஸ் வழக்கு நடவடிக்கைப் பிரிவின் சார்ஜென்ட் பாலசூரிய நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கும் போது குறிப்பிட்டுள்ளார்.

இரு தரப்பினரும் முன்வைத்த தகவல்களை கருத்தில் கொண்ட கூடுதல் நீதவான், மாணவனை பிணையில் விடுவித்தார். மேலும் விசாரணை மே மாதம் 14 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தங்கத்தின் விலை 4 மடங்காக உயரும் சாத்தியம் : எகிறப்போகும் ஒரு கிராமின் பெறுமதி!!

இலங்கையிலும் உலக சந்தையிலும் தங்கத்தின் விலையானது பெரும் ஏற்ற இறக்கங்களை அண்மைய நாட்களாக சந்தித்து வருகின்றன.

இந்த நிலையில் இன்றைய தினம் கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 4 இலட்சம் ரூபாவாக பதவாகியுள்ளது.

அத்துன் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 370,000 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை உலக சந்தை தகவல்களின் படி இன்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 5180 முதல் 5190 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது.

இவ்வாறான சூழலில் தங்கத்தின் விலை நிலவரம் தொடர்பில் பிரபல இந்தியப் பொருளாதார நிபுணரான ஆனந்த் சீனிவாசன் கூறுகையில், தங்கம் 1000 டொலரில் இருந்து 5000 டொலராக உயர சுமார் 6 முதல் 7 ஆண்டுகள் ஆனது.

அதேபோல் மீண்டும் 4 மடங்கு உயர்ந்தால் 2035இற்கு அருகில் ஒரு அவுன்ஸ் 25000 டொலர்கள் ஆகலாம். அப்படியென்றால் ஒரு கிராம் சுமார் 800 டொலர்.

மேலும் இந்திய ரூபாய் மதிப்பு சரிவையும் கணக்கில் எடுத்தால் அடுத்த 10 – 12 ஆண்டுகளில் ஒரு கிராம் தங்கம் இந்திய ரூபா மதிப்பில் ஒரு இலட்சத்தை அடைய வாய்ப்புள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் வரி செலுத்துவோருக்கான விசேட அறிவிப்பு!!

வரி செலுத்துவோர் வரப்பிரசாத அட்டைத் திட்டத்தை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் ஆரம்பிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் வரி செலுத்தும் கலாசாரத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் விசேட சலுகைத் திட்டமாக இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தமது வரிப் பொறுப்புக்களைத் துல்லியமாகவும், தொடர்ச்சியாகவும் நிறைவேற்றும் வரி செலுத்துவோரை கௌரவிப்பதற்காக இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சலுகை அட்டையைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பதாரர்கள் சில முக்கிய நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

வருமான வரி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து வரிகளும் (Self-Assessment கொடுப்பனவுகள் உட்பட) உரிய திகதிக்கு முன்னரோ அல்லது திகதியன்றோ செலுத்தப்பட்டிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரரின் கடந்த கால வரி இணக்கத்தன்மை வரலாறானது சீரானதாகவும், ஏற்றுக்கொள்ளத்தக்க வகையிலும் அமைந்திருக்க வேண்டும். இந்தச் சலுகை அட்டைகள் இரண்டு பிரிவுகளின் கீழ் வழங்கப்படவுள்ளன.

1. தங்க அட்டை (Gold Card): கடந்த மதிப்பீட்டு ஆண்டில் 5 மில்லியன் ரூபாய் அல்லது அதற்கு மேல் வருமான வரி செலுத்தியவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

2. வெள்ளி அட்டை (Silver Card): கடந்த மதிப்பீட்டு ஆண்டில் 3 மில்லியன் முதல் 5 மில்லியன் ரூபாய் வரை வருமான வரி செலுத்தியவர்கள் இதற்குத் தகுதியுடையவர்கள்

இந்தத் திட்டத்தில் இணைய ஆர்வமுள்ள தகுதியான வரி செலுத்துவோர், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளமான www.ird.gov.lk ஊடாக விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு 2026 பெப்ரவரி 28ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வலுசேர்க்கும் நேர்மையான வரி செலுத்துவோருக்குக் கிடைக்கும் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

 

கொழும்பில் பணத்திற்காக பெண்களை விற்பனை செய்யும் மருத்துவர்!!

கொழும்பில் பணத்திற்காக தகாத ஆசைகள் உள்ளவர்களுக்கு பெண்களை விற்பனை செய்ததாக கூறப்படும் மருத்துவரை தென்மேற்கு குற்றப்பிரிவு கைது செய்துள்ளது.

முல்லேரியா பகுதியில் மூன்று பெண்களுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அங்கு பெண் பத்தாயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அந்த இடத்திற்குச் வரும் ஆண்களுக்கு தங்கள் தகாத ஆசைகளை நிறைவேற்ற வாய்ப்புகளை வழங்கி சந்தேக நபர் பணம் பெற்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மருத்துமனையின் அலட்சியத்தால் 22 வயது யுவதி மரணம் : குற்றம் சுமத்தும் கணவன் மற்றும் பெற்றோர்!!

மினுவாங்கொடை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 22 வயதுடைய இளம் பெண் , நிலைமை கவலைக்கிடமானதை அடுத்து கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

இந்நிலையில் மினுவாங்கொடை ஆதார வைத்தியசாலையில் தனது மகளுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும், வைத்தியரின் கவனக்குறைவே யுவதியின் மரணத்திற்கு காரணம் என பெற்றோர் குற்றம் சுமத்துகின்றனர்.

மினுவாங்கொடை, ஜாபாலவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த செனுரி தக்ஷிலா என்ற 22 வயதுடைய திருமணமான பெண், சுகயீனம் காரணமாக கடந்த 18ஆம் திகதி மினுவாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் நான்கு நாட்கள் மினுவாங்கொடை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த 22ஆம் திகதி அதிகாலை 1.00 மணியளவில் கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 20 நிமிடங்களில் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்ததாகப் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த செனுரியின் பெற்றோரும் கணவரும் அவரது மரணத்திற்கு மினுவாங்கொடை ஆதார வைத்தியசாலை வைத்தியர்களின் கவனக்குறைவே பிரதான காரணம் எனத் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, உயிரிழந்த செனுரியின் மரண விசாரணையில் அவர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தமையே மரணத்திற்கு காரணம் எனத் தெரியவந்துள்ளது.

எனினும், தமது மகள் நான்கு நாட்கள் மினுவாங்கொடை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த போதிலும், அங்கிருந்த வைத்தியர்களால் அவருக்கு டெங்கு பாதிப்பு இருப்பதை கண்டறிய முடியவில்லை எனச் செனுரியின் பெற்றோர் குற்றம் சுமத்துகின்றனர். உயிரிழந்த யுவதியின் இறுதிக்கிரியைகள் நாளை (25) இடம்பெறவுள்ளது.

திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட இளம் தம்பதி விபத்தில் பரிதாபமாக பலி!!

தம்புள்ளையில் திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட தம்பதி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்துள்ளனர். பெற்றோர்களினால் நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட தம்பதி 3 மாதங்களின் பின்னர் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

தம்பதியினரின் இறுதிச் சடங்குகள் இன்று மதியம் யாபகம பொது மயானத்தில் இடம்பெற்றுள்ளது.

தம்புள்ள யாபகமவைச் சேர்ந்த 22 வயதுடைய டிலந்த பூர்ணா என்ற இளைஞரும், அவரது வருங்கால மனைவியான நவோத்யா செனவிரத்ன என்ற இளம் பெண்ணுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

கம்பஹா பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்த இந்த ஜோடி அதே பகுதியிலுள்ள வாடகை வீட்டில் தங்கியிருந்தனர்.

விடுமுறைக்காக தம்புள்ளையில் உள்ள தங்கள் பெற்றோர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிள்களில் சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது கண்டி-கொழும்பு பிரதான வீதியில் உள்ள வத்துபிடிவல பகுதியில் பேருந்து மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

உலக சந்தையில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் : இலங்கையில் 4 இலட்சத்தை கடந்த தங்கத்தின் விலை!!

அமெரிக்க வர்த்தக கொள்கைகளை சுற்றியுள்ள நிச்சயமற்ற நிலைமையால் உலக சந்தையில் அமெரிக்க டொலரின் மதிப்பு குறைந்து வருவதாக சர்வதேச நிதி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உலக சந்தையில் அமெரிக்க டொலரின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவதுடன், தங்கத்தின் விலை கடந்த மூன்று வாரங்களில் இல்லாத அளவுக்கு உயர்வடைந்துள்ளது.

இதற்கமைய, உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,150.22 அமெரிக்க டொலராக உயர்வடைந்துள்ளது. இந்த உயர்வு கடந்த மூன்று வார காலப்பகுதியில் பதிவான அதிகபட்ச விலை என சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், இலங்கையில் 24 கரட் தங்கத்தின் விலை 4 இலட்சத்தை எட்டியுள்ளது. மேலும் 22 கரட் தங்கத்தின் விலை 370,000 ரூபாயாக பதிவாகி உள்ளது.

வங்காள விரிகுடாவில் பலவீனமடையும் காற்றழுத்த தாழ்வுநிலை : அடுத்த 24 மணித்தியாலத்திற்கு எச்சரிக்கை!!

இலங்கையின் வடகிழக்கே மத்திய வங்காள விரிகுடா கடல் பகுதியில் உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கிழக்கு நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் பலவீனமடைய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (24) பிற்பகல் 2 மணிக்கு வானிலை ஆய்வு மையம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இலங்கையின் வடகிழக்கே மத்திய வங்காள விரிகுடா கடல் பகுதியில் மீன்பிடிக்கும் கடற்றொழிலாளர்கள் மற்றும் கடலோடிகள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்கம் காரணமாக, கடல் பகுதிகளில் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும், அத்துடன் மணிக்கு 50 – 60 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும், மேலும் கடல் கொந்தளிப்பாக இருக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

பன்னிப்பிட்டியவில் கோர விபத்து : ஒருவர் பலி, மேலும் மூவர் கவலைக்கிடம்!!

ஹைலெவல் வீதி, பன்னிபிட்டிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த விபத்து இன்று (24) காலை பன்னிபிட்டிய பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றுக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்து திடீரென கவனக்குறைவாக வீதிக்குள் நுழைய முயன்ற முச்சக்கர வண்டி ஒன்றை மோதாமல் தவிர்க்க முயன்ற பேருந்து, வீதியில் நிறுத்தப்பட்டிருந்த லொறி ஒன்றுடன் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், ஏனைய இருவருக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய, விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வெளிநாட்டில் பதுங்கியிருந்து இலங்கை திரும்பியவர் அதிரடியாக கைது!!

மாத்தறை, வெலிகமவில் உள்ள W15 ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த முன்னாள் பொலிஸ் ஆய்வாளர் ஜகத் நிஷாந்த கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தின் பின்னர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற நிலையில் நேற்று மீண்டும் நாடு திரும்பிய போது கைது செய்யப்பட்டார். 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதியன்று நடந்த இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பொலிஸ் அதிகாரி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக தேசபந்து தென்னகோன் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிலையில் குறித்த அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

லிட்ரோ நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு : வர்த்தகர்களுக்கு கடும் எச்சரிக்கை!!

சந்தையில் தேவையில்லாமல் எரிவாயு இருப்புகளை பதுக்கி வைப்பதைத் தவிர்க்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை வர்த்தக முகவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

எரிவாயு இருப்புகளை தேவையில்லாமல் பதுக்கி வைக்கும் வர்த்தக முகவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரசபையின் தலைவர் ஹேமந்த சமரக்கோன் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், லிட்ரோ நிறுவனம் ஏற்கனவே 3 இலட்சம் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்தும் எரிவாயு பற்றாக்குறை நிலவுவதால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில்,எரிவாயு பற்றாக்குறை காரணமாக 3,900 மெட்ரிக் தொன் லிட்ரோ எரிவாயுவுடனான கப்பல் ஒன்று நேற்று (23) நாட்டை வந்தடைந்துள்ளது.

மேலும் நாளை (25) மற்றும் 28ஆம் திகதி 7,600 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிக்கொண்டு இரண்டு கப்பல்கள் நாட்டுக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.