திஸ்ஸ – மாத்தறை பிரதான வீதியில் அம்பலாந்தோட்டை லுணம எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று புதன்கிழமை (23.07) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் முச்சக்கரவண்டி ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் முச்சக்கரவண்டி சாரதியும் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மயிலம்பாவெளி பிரதான வீதியில் இன்று வியாழக்கிழமை (24.07.2025) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 28 வயதுடைய இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து இன்றைய தினம் அதிகாலை 03 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு நகரில் இருந்து ஏறாவூர் நோக்கிப் பயணித்த கார் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த கொங்கிரிட் தூணில் மோதியதில் இந்தவிபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் சமபவ இடத்திலேயே உயிரிழந்துள்ளாதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இளைஞன் ஏறாவூர் பகுதியில் இருந்து மட்டக்களப்பு நகருக்கு சென்று தனது நண்பனை வீட்டில் விட்டுவிட்டு , மீண்டும் ஏறாவூர் நோக்கி சென்றுகொண்டிருந்த வேளையிலேயே விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த இளைஞனின் சடலம் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் , மட்டக்களப்பு திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.நசீர் சடலத்தை பார்வையிட்டதுடன் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை அயனாவரம் பகுதியில் வசித்து வருபவர் 38 வயது சதீஷ். அவரது மனைவி 32 வயது ரெபெகா. இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுடைய மகள் ஸ்டெபி ரோஸி. சதீஷுக்கும் அவரது மனைவி ரெபேகாவுக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்ட நிலையில் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களுக்கான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் ஓராண்டிற்கு முன்பு மனைவியை தாக்கியதாக சதீஷை போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.
சிறையில் இருந்து வெளியே வந்த சதீஷ், மனைவி ரபேகாவிடம் தொடர்ந்து பிரச்சனை செய்து வந்தார். கடந்த 2 நாள்களுக்கு முன்பு மீண்டும் மனைவியுடன் சதீஷ் தகராறில் ஈடுபட்டது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் இருவரும் இன்று விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என போலீசார் அவர்களிடம் தெரிவித்துள்ளனர்.
இந் நிலையில் தனது 7 வயது குழந்தை ஸ்டெபி ரோஸியை சதீஷ்குமார் அழைத்து சென்று ஆலந்தூரில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளார். புதன்கிழமை காலை சதீஷ் தங்கி இருந்த அறையில் இருந்து ஸ்டெபி கழுத்தறுத்து உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
சதீஷ் கழுத்தறுக்கப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் இருந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து போலீசார் உயிரிழந்த குழந்தையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சதீஷை மீட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமாரின் மனைவி ரெபெகாவிடமும், அவரது குடும்பத்தாரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரேத பரிசோதனைக்கு பிறகு குழந்தையின் உடல் தாயிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் ஓட்டேரியில் சிறுமியின் உடல் வைக்கப்பட்டுள்ளது.
குழந்தையின் கொலைக்கு காரணமாக இருந்த குழந்தையின் தந்தை சதீஷ் மற்றும் அவருடைய தாயாரை போலீசார் இதுவரை கைது செய்யவில்லை எனக்கூறியும்,
உடனடியாக அவர்கள் இருவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி குழந்தையின் சடலத்தை வைத்து உறவினர்கள் ஓட்டேரியில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சதீஷ் தாய் ரெபேகாவை மிரட்டிய ஆடியோவும் வெளியாகி அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட்டில் எப்படியாவது பிரபலமாகி விட வேண்டும் என்பதற்காக படு கவர்ச்சியான உடைகளை அணிந்துக் கொண்டும் வித்தியாசமாக ஆடைகளை அணிந்து வலம் வருபவர் தான் உர்ஃபி ஜாவேத்.
இவர் புகைப்படங்களை வெளியிடுவது மட்டுமின்றி சினிமா நிகழ்ச்சிகளிலும் கலந்துக் கொண்டு அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்து நினைத்ததை போலவே சில வருடங்களில் பிரபலமாகி விட்டார்.
தற்போது அவரை 5.3 மில்லியன் ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்து இன்ஸ்டாகிராம் செலிபிரிட்டியாகவே மாறிவிட்டார். அமேசான் பிரைமில் தனது வாழ்க்கை குறித்த டாக்குமெண்டரி ஷோவையும் வெளியிட்டு பிரபலமானார்.
இந்நிலையில், உதட்டில் ஊசிப்போட்டு தனது லிப் ஃபில்லரை நீக்கும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் உறையவைத்து இருக்கிறார் உர்ஃபி ஜாவேத்.
மாடலிங் துறையில் கலக்க வேண்டும் என்பதற்காகவும், பாலிவுட்டில் கொடி கட்டிப் பறக்க வேண்டும் என்பதற்காக வீட்டை விட்டு மும்பைக்கு ஓடி வந்த உர்ஃபி ஜாவேத் தனது 18 வயதிலேயே உதட்டில் லிப் ஃபில்லரை போட்டுக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.
ஆனால், அது சரியாக இல்லை என்றும் 9 ஆண்டுகள் கழித்து அதனை நீக்க முடிவு செய்த நிலையில், உதட்டில் ஊசிப்போட்டு அதன் மூலம் தனது லிப் ஃபில்லரை நீக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் உர்ஃபி ஜாவேத். ஆரம்பத்தில், தெரியாத்தனமாக ஒரு டாக்டரிடம் வாயை கொடுத்த நிலையில், ஒழுங்காகவே லிப் ஃபில்லரை வைக்கவில்லை.
அதன் காரணமாகவே நல்ல டாக்டரை தேடிப் பிடித்து தற்போது ஒட்டுமொத்தமாக லிப் ஃபில்லரை நீக்கிவிட்டு இயற்கையான அழகுடன் இருக்கலாம் என முடிவு செய்துவிட்டேன் எனக் கூறியிருக்கிறார் உர்ஃபி ஜாவேத்.
லிப் ஃபில்லரை நீக்கிய உடனே இதுபோன்ற பக்க விளைவுகள் ஏற்படும் என்பதையும் அப்படியே வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார் உர்ஃபி ஜாவேத். அந்த வீடியோவில் அவரது உதடு எல்லாம் வீங்கிப்போய், முகமெல்லாம் வீக்கத்துடன் சிவந்து போய்விட்டது.
கூடிய சீக்கிரமே அனைத்தும் சரியாகி புதிய தோற்றத்துடன் சந்திக்கிறேன் எனக் கூறியுள்ளார். இதுபோன்ற வீடியோவை வெளியிட உண்மையாகவே உர்ஃபி ஜாவேத்துக்கு தைரியம் வேண்டும் என்றும் சீக்கிரமாகவே இயற்கை அழகுடன் திரும்பி வாங்க என்றும் ரசிகர்கள் கமெண்ட் போட்டுள்ளனர்.
லிப் ஃபில்லருக்கு தான் எதிரி கிடையாது என்றும் நல்ல மருத்துவர்களை தேடிப் பிடித்து செய்யவில்லை என்றால் ஏகப்பட்ட பின் விளைவுகளை ச்ந்திக்க நேரிடும் என்றும் உர்ஃபி தனது சொந்த அனுபவத்தை ஷேர் செய்துள்ளார்.
யாழ்ப்பாணம் , காங்கேசன்துறை வீதி, தாவடியில் அமைந்துள்ள மதுபானசாலை முன்பாக நேற்று (23) இடம்பெற்ற தாக்குதலில் படுகாயமடைந்த ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
சுதுமலை மத்தி, மானிப்பாயைச் சேர்ந்த 45 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், மதுபோதையில் இருந்த இருவருக்கிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியது.
இந்நிலையில் கூரிய ஆயுதத்தால் குறித்த நபர் மீது தாக்குதல் நடாத்திவிட்டு சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் விசேட அதிரடிப் படையினர் இணைந்து குறித்த நபரை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்தன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு ரம்புட்டான் மரங்கள் சம்பந்தப்பட்ட விபத்துக்கள் அதிகரித்துள்ளதாக, வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ரம்புட்டான் மரங்களை விலங்குகளிடமிருந்து பாதுகாக்கச் சிலர் மின்சாரக் கம்பிகளை இடுவதால் இந்த விபத்துக்கள் ஏற்படுவதாக, கொழும்பு தேசிய மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவின் விசேட அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் விராஜ் ரோஹண அபேகோன் தெரிவித்தார்.
அதன்படி, கொழும்பு தேசிய மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவில் தற்போது பலர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சிறுவர்களுக்கு ரம்புட்டானை ஊட்டும்போது பெற்றோர்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்று அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
ரஷ்யாவின் கபரோவ்ஸ்கிலிருந்து டைண்டா சென்ற An -24 வானூர்தி ஒன்று வீழ்ந்து நொறுங்கியுள்ளது. இதன்போது, வானூர்தியில் பயணித்த எவரும் உயிர் தப்பியிருக்க வாய்ப்பில்லை என்று ரஷ்ய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அமூர் மாகாணம் அருகே திண்டா நகரத்தை நோக்கிச் ஒரு பயணிகள் விமானம் சென்றுகொண்டிருந்தது.இந்த விமானத்தில் 5 குழந்தைகள் உட்பட மொத்தம் 49 பேர் பயணம் செய்துகொண்டிருந்தனர்.
இந்நிலையில், இந்த விமானம் திண்டா விமான நிலையத்தை நெருங்கும் வேளையில், விமானக் கட்டுப்பாட்டு நிலையத்துடன் தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டது.
மேலும் திடீரென ரேடாரிலிருந்து அந்த விமானம் காணாமல்போனதால் விமான நிலைய ஊழியர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் குழப்பத்தில் இருந்தனர்.
இதையடுத்து, இந்த சம்பவம் உறுதியானதும், ரஷ்யாவின் அவசரநிலை சேவைத் துறை மற்றும் விமானப் பாதுகாப்புத் துறைகள் இணைந்து தீவிர தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.
மேலும், Mi-8 ரக ஹெலிகாப்டர் காணாமல் போன விமானத்தை தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.
கடன் அட்டை அல்லது டெபிட் அட்டைகளை பயன்படுத்தி செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்களிடமிருந்து 2.5 சதவீத கூடுதல் கட்டணத்தை வசூலிக்க சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படவில்லை என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அட்டை செலுத்தும் இயந்திரத்தை பெறும்போது வணிகர்களுக்கும் வங்கிகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் கீழ், கூடுதல் கட்டணத்தை வாடிக்கையாளரிடம் அறிவிட முடியாது என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
பட்டியலிடப்பட்ட விலையை விட அதிகமாக ஒரு வணிகர் வசூலித்தால், வாடிக்கையாளர்கள் உடனடியாக தங்கள் அட்டை வழங்கும் வங்கிக்கு தெரிவிக்க வேண்டும் என மத்திய வங்கி அறிவித்துள்ளது.
சில கடைகள் மற்றும் சேவை வழங்குநர்கள் அட்டை செலுத்தும் கட்டணங்களுக்கு கூடுதல் கட்டணங்களை வசூலிப்பதாக வாடிக்கையாளர்களிடமிருந்து அதிகரித்து வரும் முறைப்பாடுகளை அடுத்து மத்திய வங்கி இதனை தெளிவுப்படுத்தியுள்ளது.
ஏர் இந்தியா விமான விபத்தின் பின்னர், விபத்து தொடர்பான அறிக்கை வெளியான போதும், அந்த விமான விபத்து தொடர்பில் தொடர்ந்தும் சர்ச்சைகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
குறித்த விபத்தில் கொல்லப்பட்டவர்களின் உடலங்கள் சிதைந்து போயிருந்த நிலையில், அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் எச்சங்கள் தொடர்பில் தற்போது சர்ச்சை எழுப்பப்பட்டுள்ளது.
அந்தவகையில் கொல்லப்பட்ட பெண் ஒருவர் எனக்கூறி அவருடைய மகனுக்கு அனுப்பப்பட்ட எச்சங்கள் வேறு ஒருவருடையது என்று லண்டனில் வசிக்கும் ஒருவர் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார். இதற்கு இந்திய அரசாங்கம் பொறுப்புக்கூறவேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
அகமதாபாத் விமான விபத்தில், தமது தந்தையும் தாயும் கொல்லப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்கள் என்று கூறப்படும் எச்சங்கள், குறித்த மகனுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
எனினும் அதில் தமது தாயின் சடல எச்சங்கள் வேறு ஒருவரின் எச்சங்கள் என்ற அவருடைய மகன் குற்றம் சுமத்தியுள்ளார்.
முன்னதாக உறவினர்களிடம் கையளிக்கப்பட்ட ஒருவரின் எச்சங்களில் பலரின் எச்சங்கள் உள்ளடக்கப்பட்டிருந்த முறைப்பாடு ஒன்றும் பதிவாகியுள்ளது.
இங்கிலாந்து அரசாங்கம் இது தொடர்பில் இந்திய அரசாங்கத்துடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளது. எனினும் அனைத்து எச்சங்களும் மிகவும் தொழில்முறை கண்ணியத்துடன் கையாளப்பட்டதாக இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது,
அனுராதபுரம் கல்வி வலயத்தில் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 22 ஆம் திகதி வழங்கப்பட்ட புலமைப்பரிசில் பயிற்சி வினாத்தாளில் ஏற்பட்ட அச்சு பிழை காரணமாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் புலமைப்பரிசில் தேர்வுக்கு தோற்றும் அனுராதபுரம் கல்வி வலயத்தில் 5ஆம் வகுப்பு மாணவர்கள் சுமார் 2,000 பேர் இந்த புலமைப்பரிசில் பயிற்சி வினாத்தாளில் பதிலளித்துள்ளனர்.
அனுராதபுரம் கல்வி வலய அலுவலகத்தால் தயாரிக்கப்பட்ட வினாத்தாள் உரிய பாடசாலை அதிபர்களிடம் வழங்கப்பட்ட பின்னர், அதிபர்கள் தங்கள் பாடசாலைகளில் 5ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வினாத்தாளை அச்சிட்டு விநியோகித்தனர்.
வினாத்தாளை மாணவர்களுக்கு விநியோகித்த ஆசிரியர்கள், வினாத்தாளைப் படித்த மாணவர்களும் குழப்பமடைந்துள்ளனர்.
வினாத்தாளில் தவறுதலாக தகாத வார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாகவும், அதனால்தான் மாணவர்கள் பதற்றமடைந்துள்ளதாக அடைந்துள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிபர்களின் தகவலின் பேரில், வலயக் கல்வி அலுவலகம் அச்சுப் பிழைகளை சரிசெய்து பாடசாலைக்கு புதிய வினாத்தாளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.
இது குறித்து மாகாண முதலமைச்சர் மற்றும் மாகாண கல்வி அமைச்சின் செயலாளரிடம் வினவியபோது, இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் அமைந்திருக்கின்ற அரச வீட்டுத்திட்ட பயனாளி ஒருவரின் கிணற்றிலிருந்து தாயும் இரண்டு பிள்ளைகளும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராமத்தில் இரண்டு பிள்ளைகளோடு வசித்து வந்த நிலையில் குறித்த தாய் ஒருவரும் அவரது இரண்டு பிள்ளைகளும் அவர் வசித்து வந்த வீட்டில் இருந்து சுமார் 500 மீற்றருக்கு அப்பால் உள்ள அரச வீட்டு திட்டத்தில் உள்ள வீட்டுத்திட்ட பயனாளி ஒருவரின் வீட்டு கிணற்றிலிருந்து சடலமாக இன்று மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், இன்று காலை குறித்த கிணற்றின் அருகில் கைப்பை ஒன்றும் இதர பொருட்கள் சிலவும் காணப்பட்டதை அடுத்து ஊரில் உள்ள மக்கள் அந்த விடயம் தொடர்பில் கிராம அலுவலர் மற்றும் பொலிசாருக்கு தகவல் வழங்கியதன் அடிப்படையில் அங்கு வருகை தந்த கிராம அலுவலர் மற்றும் பொலிசார் கிணற்றில் உடலங்கள் இருப்பதை அடையாளம் கண்டனர்.
இதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி சம்பவ இடத்திற்கு வருகை தந்து பார்வையிட்டதன் பின்னர் உடலங்கள் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டது.
மீட்கப்பட்ட உடலங்களை மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
உடலங்களாக மீட்கப்பட்டவர்கள் உசாகரன் மாலினி (வயது38) தாய் மற்றும் உசாகரன் மிக்சா ( வயது 11) மகள் உசாகரன் சதுசா (வயது 04) ஆகியவர்களாவர்.
இவர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது என்ன நடந்தது என்பது தொடர்பில் மாங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கண்டி, நாவலப்பிட்டி, இம்புல்பிட்டிய பிரதேசத்தில் உள்ள கைவிடப்பட்ட வீடொன்றில் பெண் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (22) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நாவலப்பிட்டி, இம்புல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயொருவரே கொலைசெய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்ட பெண், தனது கணவரிடமிருந்து பிரிந்து, தகாத உறவில் ஈடுபட்டிருந்த நபருடன் கம்பளை – புசல்லாவை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கடந்த 9 மாத காலமாக ஒன்றாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், குறித்த பெண் கடந்த 22 ஆம் திகதி மீண்டும் தனது கணவரின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
பின்னர் குறித்த பெண், பணிப்பெண் வேலைக்காக வெளிநாடு செல்லவிருப்பதாக தகாத உறவில் ஈடுபட்டிருந்த நபருக்கு தொலைபேசி அழைப்பின் மூலம் தெரிவித்துள்ளார்.
ஆனால், தகாத உறவில் ஈடுபட்டிருந்த நபர் வெளிநாட்டு வேலைக்கு முற்றிலும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் தகாத உறவில் ஈடுபட்டிருந்த நபருக்கும் குறித்த பெண்ணுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
பின்னர் தகாத உறவில் ஈடுபட்டிருந்த நபர் குறித்த பெண்ணுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தன்னை சந்திக்க வருமாறு அழைத்துள்ளார்.
இதனையடுத்து குறித்த பெண் தகாத உறவில் ஈடுபட்டிருந்த நபரை சந்திப்பதற்காக நாவலப்பிட்டி, இம்புல்பிட்டிய பிரதேசத்தில் உள்ள கைவிடப்பட்ட வீடொன்றிற்கு சென்றுள்ளார். இதன்போது இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
தகராறின் போது தகாத உறவில் ஈடுபட்டிருந்த நபர் குறித்த பெண்ணை வெட்டிக் கொலை செய்துவிட்டு கம்பளை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
இதனையடுத்து கம்பளை பொலிஸார் சந்தேக நபரை மேலதிக விசாரணைகளுக்காக நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பதுளை, மஹியங்கனை பொலிஸ் பிரிவிலுள்ள வியன்னா கால்வாயில் தவறி விழுந்த காதலனை காப்பாற்றிய போது, உயிரிழந்த காதலி பட்டமளிப்பு விழாவுக்காக தயாராக இருந்ததாக அவரின் தெரிவித்துள்ளனர்.
பட்டமளிப்பு விழாவுக்கு தேவையான ஆடைகளை பெறுவதற்கு காதலனுடன் சென்ற போதே இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. காதலனை காப்பாற்ற காதலி விழுந்ததனை அங்கிருந்த உயிர் காப்பாளர்கள் பெரியளவில் அவதானிக்கவில்லை.
இளைஞனை காப்பாற்றியவர்களுக்கு எங்கள் மகள் குறித்து அவதானம் இருக்கவில்லை என பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
சுமார் 18 மணி நேரத்தின் பின்னர் மகளின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. 3 மகன்கள் உள்ள குடும்பத்தில் ஒரே மகளான அவர் ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் கணினி பிரிவில் கற்று வந்துள்ளார்.
அன்றைய தினம் பல்கலைகழகத்திற்கு சென்று பட்டமளிப்பு விழாவிற்கான தகவல்களை வழங்கிவிட்டு அதற்கான ஆடைகளை பெற்றுக் கொண்டு திரும்பும் பொது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதென உயிரிழந்த பெண்ணின் தந்தை தெரிவித்துள்ளார்.
காலி, அக்மீமன பிரதேசத்தில் வீட்டில் தனியாக இருந்த போது, 17 வயது சிறுமியை, அவரது அக்காவின் காதலன் பாலியல் சீண்டல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வலஹண்துவ பகுதியை சேர்ந்த 25 வயது சந்தேக நபர், தனியார் நிறுவனத்தில் பணி புரியும் சிறுமியின் அக்காவை காதலித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் அவர் காதலியின் வீட்டிற்கு சென்றுள்ளார். சம்பவம் நடந்த நாளில் காதலின் வீட்டுக்கு சென்ற சந்தேகநபர் அவருடன் வெளியே சென்றுள்ளார்.
பின்னர் கையடக்க தொலைபேசியின் சார்ஜரை காதலியின் வீட்டில் மறந்துவிட்டு வந்ததாக கூறி மீண்டும் வந்துள்ளார். இதன்போது வீட்டில் தனியாக இருந்த தங்கையை அவர் துஷ்பிரயோகம் செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் பொலிஸார் விசாரணையை தொடங்கிய நிலையில், சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியை கராப்பிடிய போதனா மருத்துவமனையின் சட்ட மருத்துவ அதிகாரியிடம் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் காலி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பசறை மத்திய மகா வித்தியாலயத்தில் கடமை புரியும் ஆசிரியர் ஒருவரின் ஒரு இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணத்துடன் தவறவிட்ட பணப்பையை பொலிஸ் நிலைய உத்தியோகஸ்தர் கண்டெடுத்து உரியவரிடம் ஒபடைத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
தவறவிட்ட பணப்பையை கண்டெடுத்த லுணுகலை பொலிஸ் நிலைய உத்தியோகஸ்தர் ஒருவர் பசறை பொலிஸாரிடம் இன்று (23) ஒப்படைத்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பசறை பல்லேகம பகுதியில் இருந்து கடமைக்கு செல்லும் குறித்த ஆசிரியை தனது இரு பிள்ளைகளை பசறை இசில்பத்தன பாடசாலைக்கு விடுவதற்கு சென்ற வேலை பசறை பிபிலை வீதியில் பசறை 13 ம் கட்டை பகுதியில் 170,000 ஆயிரம் ரூபாய் பணத்துடன் கைப்பையை தவறவிட்டுள்ளார்.
ஆசியை பசறை மத்திய மாக வித்தியாலய பாடசாலைக்கு கடமைக்கு வந்து பார்க்கும் போது கைப்பை இருக்கவில்லை. பின்னர் பல இடங்களில் தேடியபோதும் கைப்பை கிடைக்கவில்லை.
இந்நிலையில் கடமை நிமிர்த்தம் லுணுகலை பொலிஸ் நிலையத்தில் இருந்து பதுளைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பொலிஸ் உத்தியோகதர் ஆசியரின் கைப்பையை அவதானித்துள்ளார்.
அதனை எடுத்து பார்த்தபோது பணம் இருந்ததுள்ளது. உடனே குறித்த கைப்பையை பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் ஒப்படைத்துள்ளார். பின்னர் ஆசிரியருக்கு தன்னுடன் கடமை புரியும் மற்றொரு ஆசிரியையிடமிருந்து அழைப்பு ஒன்று வந்துள்ளது.
அழைப்பில் நீங்கள் தவற விட்ட கைப்பை பசறை பொலிஸ் நிலையத்தில் உள்ளதாக தெரிவித்து உடனடியாக பொலிஸ் நிலையத்துக்கு செல்லுமாறு தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் பசறை பொலிஸ் நிலையத்திற்கு சென்று தவற விட்ட கைப்பையை பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடமிருந்து பெற்றுக்கொண்டார். இந்நிலையில் பொலிஸ் உத்தியோகஸ்தரின் நேர்மையான செயலுக்கு பாராட்டு குட்=விந்து வருகின்றது.
புத்தளத்தில் மாரவில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாத்தாண்டிய பிரதேசத்தில் நேற்று (22) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மாரவில , நாத்தாண்டிய பிரதேசத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர் தனது மகனுடன் முச்சக்கரவண்டியில் பயணித்த பெண் ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் முச்சக்கரவண்டியில் பயணித்த 30 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளதுடன் 10 வயதுடைய மகன் படுகாயமடைந்து மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பெண் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் சிநைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டவர் என தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பெண்ணின் கணவரும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.