யாழில் உதவிப் பிரதேச செயலாளர் மரணம் : கணவன் அதிரடியாக கைது!!

சாவகச்சேரி உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றிய போது தீயில் எரிந்து உயிரிழந்த தமிழினியின் கணவரான கிராம சேவையாளர் சதீஸ் கொழும்பில் இருந்து வருகை தந்த பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த பெப்ரவரி மாதம் தீயில் எரிந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சாவகச்சேரி பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் தமிழினி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

குறித்த பெண் உயிரிழக்கும் போது ஆறு மாதகர்ப்பிணியாக இருந்த நிலையில், தாய் மற்றும் ஆறு மாத சிசுவை உயிருடன் மீட்கும் பணிகளும் இடம் பெற்ற வேளை சிகிச்சை பயனளிக்காத நிலையில் அவரது மரணம் சம்பவித்தது.

இந்நிலையில் இறந்த தமிழினியின் பெற்றோர் தரப்பில் கணவரான கோப்பாய் பிரதேச செயலகத்தில் கடமையாற்றி வரும் சதீஸ் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் கொழும்பில் இருந்து வந்த விசேட பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக, படுக்கை அறையில் மெழுகுவர்த்தி எரிந்து தீ விபத்து ஏற்பட்டதாக வைத்தியசாலை முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

குப்பை உணவும் கொடூர துன்புறுத்தலும் : சவுதியில் இலங்கைப் பெண்ணின் அதிர்ச்சி வாக்குமூலம்!!

சவுதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாக சென்ற 51 வயது தம்மிக்கா இலங்கை பெண் ஒருவர் குப்பைத் தொட்டியிலுள்ள உணவை உட்கொள்வதாகவும் தகாத முறைக்கு தான் உட்படுத்தப்பட்டு துன்புறுத்துவதாகவும் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும், இது தொடர்பிலான கருத்துக்களை கையடக்க தொலைபேசியில் பதிவு செய்து, தன்னை காப்பாற்றுமாரு கோரிக்கை விடுத்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

“குருநாகல் திம்புலாகல பகுதியில் இருந்து சவுதிக்கு பணிப் பெண்ணாக சென்ற 51 வயது தம்மிக்கா என்ற பெண் தகாத முறைக்கு உட்படுத்தப்படுவதோடு, மற்றும் பல துன்பங்களுக்கு முகம் கொடுப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும், குப்பைத் தொட்டியில் போடும் உணவையே தான் உட்கொண்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். குருநாகலில் உள்ள வெளிநாட்டு முகவர் மூலமாக 2024 ஆம் ஆண்டு ஜுலை 03 திகதி சவுதிக்கு சென்றுள்ளார்.

அங்கு அவர் முதலில் ஒரு வீட்டில் வேலை செய்யும் போது பல துன்புறுத்தல்களுக்கு முகம் கொடுத்து வந்ததாக தெரிவித்துள்ளார். அதன் பின்னர் தான் முகவர் நிலையத்துக்கு வந்த போது வேறு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், அங்கும் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவம் தெரிவித்துள்ளார்.

இதன்படி தான் உடம்பில் சக்தி இழக்கப்பட்டு நோய்வாய்ப்பட்டுள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த பெண்ணின் மகள், தனது தாய் இந்த விடயங்களை தொலைபேசியில் தன்னிடம் தெரிவித்ததாகவும், இது தொடர்பில் முகவர் நிலையத்திற்கு கதைத்தபோது எட்டு இலட்சம் பணத்தை செலுத்தியபின்னர் கதைக்குமாறும் தெரிவித்ததாக குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும், தனது அம்மாவை இலங்கைக்கு அழைத்துவர உதவி செய்யுமாறு ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாணவன் அதிரடியாக கைது : வங்கிக் கணக்கிற்குள் அத்துமீறி நுழைந்து பெருந்தொகை பணம் கொள்ளை!!

இலங்கையில் இணையம் ஊடாக வங்கிக் கணக்கொன்றுக்குள் நுழைந்து 5 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்ட மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ருஹுணு பல்கலைக்கழக மாணவர் ஒருவரே இவ்வாறு நேற்று கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட மாணவர் வவுனியாவைச் சேர்ந்த 25 வயதுடையவராகும். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இளைஞனுக்கு எமனான மோட்டார் சைக்கிள் : அதீத வேகத்தால் பறிபோன வாழ்க்கை!!

அரநாயக்க வீதியில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, தேவதகம நோக்கி செல்லும் வீதியின் வசந்தகம சந்தி அருகில் உள்ள விமோல பகுதியில் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர் 22 வயதுடைய இளைஞர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிவேகத்தின் காரணமாக வேகக்கட்டுபாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியைவிட்டு விலகி கால்வாய்க்கு அருகிலுள்ளள மின்கம்பத்தில் மோதி குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த அடைந்த இளைஞன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

 

அவசரமாக தரையிறக்கப்பட்ட இண்டிகோ விமானம் : நூலிழையில் உயிர் தப்பிய 191 பயணிகள்!!

நடுவானில் பறந்து கொண்டிருந்த போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, இண்டிகோ விமானம் மும்பையில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது.

இதனால் பயணிகள் அனைவரும் அவதி அடைந்தனர். டில்லியில் இருந்து கோவாவுக்கு நேற்று இண்டிகோ விமானம் புறப்பட்டது. விமானத்தில் 191 பேர் இருந்தனர்.

விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டறிந்தார். இதையடுத்து, அவர் விமானத்தை அவசரமாக தரையிறக்க முடிவு செய்தார்.

பின்னர் விமானம் மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் விமான நிலையத்தில் பத்திரமாக நேற்றிரவு 9.53 மணிக்கு தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த பணிகள் 191 பேரும் வெளியேற்றப்பட்டனர்.

அவர்கள் அனைவரும் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகளை விமான நிறுவனம் செய்து கொடுத்தது.

இண்டிகோ விமானம் புவனேஸ்வரிலிருந்து வடக்கே 100 கடல் மைல் தொலைவில் பறந்து கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக மும்பை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து இண்டிகோ விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, டில்லி விமான நிலையத்தில் இருந்து கோவா நோக்கி புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டது.

வேறு வழி இல்லாத நிலையில் மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

விமானம் மீண்டும் செயல்பாடுகளைத் தொடங்குவதற்கு முன்பு தேவையான சோதனைகள் மேற்கொள்ளப்படும். பயணிகளுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இலங்கை வரலாற்றில் 47 கோடி ரூபாய் லொட்டரி பரிசை வென்ற அதிஸ்டசாலி!!

இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய லொட்டரி பரிசு தொகையை வென்றவருக்கு 47 கோடி ரூபாய் மதிப்புள்ள காசோலையை தேசிய லொத்தர் சபை வழங்கியுள்ளது.

மெகா பவர் 2210 ஆவது சீட்டிழுப்பில், 47 கோடியே 45 லட்சத்து 99 ஆயிரத்து 422 ரூபா சூப்பர் பரிசுடன் கூடிய வெற்றி பெற்ற லொட்டரி சீட்டை, கொக்கரெல்ல பகுதியைச் சேர்ந்த விற்பனை முகவரான எச்.ஏ. ஜானகி ஹேமமாலா விற்பனை செய்துள்ளார்.

தேசிய லொத்தர் சபை ஏற்பாடு செய்த விடேச நிகழ்வு ஒன்றில் கொழும்பு மேயர் வ்ராய் கெலி பல்தசாரினால் லொட்டரி பரிசை வென்ற நபருக்குரிய காசோலை உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டுள்ளது.

துணை மேயர் ஹேமந்த வீரகோன், தேசிய லொத்தர் சபை தலைவர் M.D.C.A. பெரேரா மற்றும் பொது முகாமையாளர் ஏ.எம். ஆரிஃப் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பே பெண்ணாக மாறிய அரை நிர்வாணமாக நடமாடிய தாய்லாந்து சுற்றுலாப் பயணி!!

அருகம் குடாவில் ஹோட்டல் ஒன்றுக்கு அருகில் மேலாடையின்றி அரை நிர்வாணமாக நடமாடி சர்ச்சையை ஏற்படுத்திய தாய்லாந்து சுற்றுலா பயணி , நான்கு ஆண்டுகளுக்கு முன்பே பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து ஆணிலிருந்து பெண்ணாக மாறியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

சுற்றுலா பயணி ஆணாக பிறந்து முழு பெண்ணாக மாறுவதற்கு அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார்.

சுற்றுலாப் பயணி மேலாடையின்றி இருக்கும் படங்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்தபோது இந்த சம்பவம் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.

கடந்த 14 ஆம் திகதி சுற்றுலாப் பயணி அநாகரீகமாக நடந்து கொண்டதாகவும், பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததற்காகவும் தெரிவித்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

பின்னர் பொத்துவில் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இந்நிலையில், அவருக்கு ஐந்து ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வாரங்களும் ஒரு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அதன்படி, அவருக்கு அநாகரீகமாக நடந்து கொண்டமைக்கு இரண்டு வார சிறைத்தண்டனையும், பொது மக்களுக்கு இடையூறு விளைவித்தமைக்காக ஒரு மாத சிறைத்தண்டனையும் சிறைதண்டனை விதிக்கப்பட்டது.

வழக்கு விசாரணைகளின் போது அவரது பாலினத்தை பெண் என நீதிமன்றம் ஏற்றுக்கொண்டாலும், அவரின் கடவுச்சீட்டு புகைப்படம் ஒன்லைனில் பகிரப்பட்டது. அதில் ‘M’ (ஆண்) எனவும், பாலினம் மற்றும் ‘Mr.’ எனவும் குறிப்பிடப்பட்டிருந்தமை திருப்பத்தை ஏற்படுத்தியது.

இலங்கையில், குறிப்பாக பொது ஒழுக்கச் சட்டங்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில், பாலினம் எவ்வாறு சட்டப்பூர்வமாக விளக்கப்படுகிறது என்பது குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டது.

அவரது அங்க அடையாளத்திற்கும் உத்தியோகபூர்வ ஆவணங்களுக்கும் இடையில் வேறுபாடு காணப்படுவது, பாலின பன்முகத்தன்மையை முழுமையாகப் பூர்த்தி செய்யாத சட்ட அமைப்புகளில் திருநர்களின் உரிமைகள் மற்றும் அங்கீகாரம் குறித்து பல கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணி அமெரிக்க நாட்டவர் ஒருவருடன் இலங்கைக்கு வந்து 11 முதல் 20 ஆம் திகதி வரை அருகம் குடாவில் உள்ள சுற்றுலா ஹோட்டலில் தங்குமிடத்தை முன்பதிவு செய்துள்ளமை தெரியவந்ததுள்ளது.

கார் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து : இருவர் காயம்!!

கொழும்பு – மஹரகம நாவின்ன ரயில் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று முன்தினம் புதன்கிழமை (16.07) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கார் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அழகாய் இருந்ததால் மனைவிக்கு மொட்டையடித்த கணவன் : பெண்ணின் விபரீத முடிவு!!

இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த பெண்ணொருவர், ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள ஷார்ஜாவில் தனது ஒரு வயது மகளுடன் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மாநிலம் கேரளாவின் கொல்லத்தைச் சேர்ந்த 32 வயது பெண் விபன்சிகா. இவருக்கும் நிதீஷ் என்பவருக்கும் கடந்த 2020ஆம் ஆண்டில் திருமணம் நடந்தது. பின்னர் இருவரும் ஷார்ஜாவில் குடியேறினர்.

இந்த தம்பதிக்கு ஒரு வயதில் பெண் குழந்தை இருந்துள்ளது. ஆனால் நிதீஷிற்கும், விபின்சிகாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் தனித்தனியாக வசித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் விபன்சிகாவும், அவரது ஒரு வயது மகளும் கடந்த 8ஆம் திகதி அடுக்குமாடி குடியிருப்பில் இறந்து கிடந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி விசாரணையைத் தொடங்கினர்.

அப்போது குழந்தை சுவாசம் தடைபட்டு இறந்தது தடய அறிவியல் ஆய்வில் தெரிய வந்தது. மேலும், விபன்சிகா எழுதிய குறிப்பு ஒன்றும் கைப்பற்றப்பட்டது. அதில் மன அழுத்தம் மற்றும் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் பற்றிய விவரங்கள் இடம் பெற்றிருந்தன.

இதற்கிடையில், விபன்சிகாவின் பெற்றோர் கேரள பொலிசாரிடம் புகார் தெரிவித்துள்ளனர். விபன்சிகாவின் தாய் பல பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

அவர் கூறும்போது, திருமணம் முடிந்ததும் வரதட்சணை கேட்டு தொடர்ச்சியாக நிதீஷ் தொல்லை கொடுத்ததாகவும், அவர் அழகாக இருந்ததால் அவரை மொட்டை அடித்து துன்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மகளின் உடலை கேராளாவுக்கு கொண்டுவர உயிரிழந்த பெண்னின் குடும்பத்தினர் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூற்பட்டுகின்றது.

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து : ஐவர் காயம்!!

குருணாகல் – புத்தளம் வீதியில் பாதெனிய மற்றும் அவுலேகம ஆகிய பிரதேசங்களுக்கு இடையில் உள்ள பகுதியில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று புதன்கிழமை (16.07.2025) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று லொறி மற்றும் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காரின் சாரதி உறங்கியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் காரில் பயணித்த இருவரும் லொறியின் சாரதியும் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

தங்கம் கடத்திய நடிகை ரன்யா ராவ்வுக்கு சிறை!!

கன்னட நடிகை ரன்யா ராவ்வுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கன்னட நடிகையான ரன்யா ராவ் கடந்த மார்ச் மாதம் 3 ஆம் திகதி தங்கம் கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில், 14 கிலோ தங்கத்தைத் தனது உடலில் மறைத்துக் கடத்தி வந்த குற்றச்சாட்டிலே குறித்த நடிகை கைது செய்யப்பட்டார்.

இதை அடுத்து அவரது வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் கணக்கில் வராத 2.67 கோடி ரூபாய் பணமும் , 2.06 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டன.

இதேவேளை, தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ரன்யா ராவ் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள நிலையில், ரன்யா ராவுக்கு சொந்தமான 34 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துக்களை அந்நாட்டு அமுலாக்கத்துறை முடக்கியுள்ளது.

குறித்த தங்கக் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் இந்த ஓராண்டு சிறைத் தண்டனை காலத்தில் ரன்யா ராவுக்கு பிணை வழங்கக்கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கோர விபத்தில் நான்கு பேர் படுகாயம்!!

ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை டிரேட்டன் பகுதியில் கார் ஒன்றும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் நான்கு பேர் காயங்களுக்கு உள்ளாகி கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் இன்று (17.07.2025) காலை 8 30 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நுவரெலியாவில் இருந்து கொழும்பு பகுதியை நோக்கி பயணித்த காரும் கொழும்பில் இருந்து நுவரெலியா பகுதியை நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த சாரதி உட்பட நான்கு பேர் காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காருக்கு பகுதியளவிலும் முச்சக்கர வண்டிக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டியின் சாரதிக்கு தூக்க கலக்கம் ஏற்பட்டதன் காரணமாகவே விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

வெள்ளை வானில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவன்!!

பிலியந்தலை- தேசிய பாடசாலையில் கல்விகற்கும் மாணவனொருவன் வெள்ளை வானில் வந்த ஒரு குழுவினரால் கடத்தி செல்லப்பட்டுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தரம் 11 இல் கற்கும் மாணவன், நேற்று (16.07.2025) மாலை 4.00 மணியளவில் மேலதிக வகுப்புக்கு செல்வதற்காக சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேலும், கடத்தப்பட்டதாகக் கூறப்படும் பதினைந்து வயது மாணவன் இரத்தினபுரி பகுதியில் வெள்ளை வேனில் இருந்து குதித்து தப்பிச் சென்றுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கஹதுடுவ பொலிஸார் வானையும் சிறுவனை கடத்தியதாகக் கூறப்படும் நபர்களையும் கைது செய்வதற்காக விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

உலகில் அழகான பெண்களை கொண்ட நாடுகளின் பட்டியல் : முதலிடம் எந்த நாடு தெரியுமா?

Insider Monkey என்ற தளம் உலகில் அழகான பெண்கள் கொண்ட 20 நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

கொலம்பியா

இந்த பட்டியலில், தென் அமெரிக்க நாடான கொலம்பியா முதலிடம் பிடித்துள்ளது. கொலம்பிய பெண்கள், கவர்ச்சிகரமான தோற்றம் மற்றும் துடிப்பான ஆளுமைகளுக்காக உலகளவில் போற்றப்படுகிறார்கள்.

சோபியா வெர்கரா மற்றும் கேடலினா சாண்டினோ மொரேனோ போன்றோர் ஈர்க்கக்கூடிய ஆளுமைகளுக்காகப் பாராட்டப்படுகிறார்கள்.

போலந்து

மத்திய ஐரோப்பிய நாடான போலந்து இரண்டாம் இடம் பெற்றுள்ளது. உயர்ந்த கன்ன எலும்புகள் மற்றும் முழுமையான உதடுகள் ஆகியவற்றிற்காக போலந்து பெண்கள் பாராட்டப்படுகிறார்கள்.

கிரீஸ்

தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ள நாடான கிரீஸ் மூன்றாவது இடம் பெற்றுள்ளது.

ரஷ்யா

உயரமான உடல் அமைப்பு, வெளிர் தோல் காரணமாக ரஷ்யா பெண்கள் 4வது இடம் பிடித்துள்ளனர்.

செக் குடியரசு

மத்திய ஐரோப்பிய நாடான செக் குடியரசு 5வது இடம் பிடித்துள்ளது. செக் பெண்கள், பெரும்பாலும் சர்வதேச அழகுப் போட்டிகளில் தனித்து நிற்கிறார்கள்.

ஸ்வீடன்

ஸ்காண்டிநேவிய நாடான ஸ்வீடன் இந்த பட்டியலில் 6வது இடம் பிடித்துள்ளது. ஸ்வீடன் பெண்கள் தங்களின் பொன்னிற கூந்தல், நீல நிற கண்கள் மற்றும் நேர்த்தியான உருவங்களுக்கு பெயர் பெற்றவர்கள்.

ஐஸ்லாந்து

நோர்டிக் தீவு நாடான ஐஸ்லாந்து இந்த பட்டியலில் 7வது இடத்தை பிடித்துள்ளது.

அமெரிக்கா

அமெரிக்கா இந்த பட்டியலில் 8வது இடத்தை பிடித்துள்ளது. அமெரிக்காவின் கலாச்சாரக் கலவை, அனைத்து இனங்களையும் தோற்றங்களையும் கொண்ட பெண்களை ஒன்றிணைக்கிறது.

பிரேசில்

தென் அமெரிக்கா நாடான பிரேசில், இந்த பட்டியலில் 9வது இடத்தை பிடித்துள்ளது.

பூர்வீக, ஆப்பிரிக்க மற்றும் ஐரோப்பிய பாரம்பரியத்தின் கலவையானது, பிரேசில் பெண்களின் அழகில் ஒரு அற்புதமான பன்முகத்தன்மையை உருவாக்குகிறது.

ஜப்பான்

கிழக்கு ஆசிய நாடான ஜப்பான், இந்த பட்டியலில் 10வது இடத்தை பிடித்துள்ளது. ஜப்பானிய பெண்கள், வெளிர் தோல், கருப்பு அல்லது பழுப்பு நிற கண்கள் மற்றும் அடர் முடி கொண்டவர்கள்.

இலங்கை வரலாற்றில் முதல் முறை : இஸ்லாமிய பெண்ணுக்கு முக்கிய பதவி!!

இலங்கை அஞ்சல் திணைக்களத்தின் உள்ளக கணக்காய்வு உதவி அத்தியட்சகர் பதவிக்கு பாத்திமா ஹஸ்னா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இலங்கை வரலாற்றில் இந்த பதவிக்கு நியமிக்கப்படும் முதலாவது முஸ்லிம் பெண் என்ற வரலாற்று சிறப்பையும் அவர் பெற்றுள்ளார்.

மட்டக்களப்பு – ஏறாவூரைச் சேர்ந்த ஹஸ்னா, இந்த நியமனத்திற்கு முன்னர் இலங்கை அஞ்சல் பயிற்சி நிறுவனத்தில் பயிற்சிப் போதனாசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

அஞ்சல் திணைக்களம் கடந்த ஆண்டு நடத்திய உதவி அஞ்சல் அத்தியட்சகர்கள் தேர்வில், அஞ்சல் துறையில் சேவையாற்றிய 39 பேர் சித்தியடைந்திருந்தனர்.

அவர்களுள் 12 பேர் உள்ளக கணக்காய்வு உதவி அத்தியட்சகர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்த அடிப்படையில், பாத்திமா ஹஸ்னா, தன் திறமை மற்றும் பணிப்பாட்டின் மூலமாக முன்னோடியாக இந்த உயரிய பொறுப்புக்கு நியமிக்கப்படுவதன் மூலம், முஸ்லிம் பெண்களுக்கான ஊக்கத்தையும் வழிகாட்டுதலையும் உருவாக்கியுள்ளார்.

அதேவேளை அஞ்சல் திணைக்கள வரலாற்றில் இதுவரை முஸ்லிம் பெண்ணொருவரும் இந்த பதவியை வகித்ததில்லை என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

79 வயதில் 75 வயது காதலியை கரம் பிடித்த காதலர் : இணையத்தில் வைரல்!!

பிள்ளைகளால் கைவிடப்பட்டு முதியோர் காப்பகத்தில் இருந்த போது, இவர்களின் நட்பு காலப்போக்கில் காதலாக மாறிய நிலையில் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

கேரளா திருச்சூர் பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் விஜயராகவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 79 வயது ஆகிறது. இவருக்கு அதே முதியோர் இல்லத்தில் வசித்து வரும் 75 வயதான சுலோச்சனா உடன் நட்பு ஏற்ப்பட்டுள்ளது.

காதலிக்க வயது தடை இல்லை

இவர்களின் நட்பு காலப்போக்கில் காதலாக மாறிய நிலையில் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

அதற்காக சமூக நீதித்துறையிடம் தங்கள் வாழ்நாள் முழுவதையும் ஒன்றாக கழிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த நிலையில் சமூக நீதித்துறை அவர்களின் வேண்டுகோளை நிறைவேற்ற ஏற்பாடு செய்தது.

இருவருக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்ட நிலையில் பலரும் தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். முதியோர் இல்லத்தில் நடந்த காதல் திருமணம் காதலிக்க வயது தடை இல்லை என்று எடுத்து காட்டியுள்ளது.