கடைசியாக கணவருக்கு அனுப்பிய மெசேஜ் : அலுவலக ஜன்னல் வழியே குதித்த காதல் மனைவி!!

கடைசியாக கணவருக்கு அனுப்பிய மெசேஜ்

மேற்குவங்க மாநிலத்தில் காதல் திருமணம் செய்துகொண்ட இளம்பெண், அலுவலக கட்டிடத்தின் ஜன்னலில் இருந்து திடீரென வெளியில் குதித்து த ற்கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த ஜாஸ்மின் மித்ரா (28) என்கிற இளம்பெண் கடந்த 7 வருடங்களுக்கு முன் அனிருத்தா என்பவரை காதலித்து கலப்பு திருமணம் செய்துகொண்டார். ஜாஸ்மினுக்கு நீண்ட நாட்களாகவே குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ஆசை இருந்துள்ளது.

ஆனால் அவருடைய மருத்துவ நிலைமைகள் மற்றும் நிதி நெருக்கடி காரணமாக, ஒரு நிலையான மனநிலையில் இல்லை என கூறப்படுகிறது. 6 மாத காலம் அவருடைய கணவர் வேலை இல்லாமல் வீட்டில் இருந்ததால், நிதி நெருக்கடியை சமாளிக்க, மாமியார் வீட்டிலிருந்து வெளியேறி தன்னுடைய தாய் வீட்டில் வந்து தங்கியிருந்தார்.

இந்த நிலையில் அலுவலகத்திற்கு வந்த ஜாஸ்மின், என்னுடைய நிதி விவரங்கள் மற்றும் வங்கி பின் எண்களைப் பற்றித் உனக்கு தெரியுமா என கணவரின் வட்ஸ் ஆப் எண்ணிற்கு மெசேஜ் செய்துள்ளார். பின்னர் 7 மாடியில் அமைந்திருக்கும் தன்னுடைய அலுவலகத்தின் ஜன்னல் பகுதிக்கு சென்ற அவர் காலணிகளை கழற்றி வைத்துவிட்டு அங்கிருந்து சத்தமிட்டபடியே வெளியில் குதித்துள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த காவலாளி, ஜாஸ்மின் ர த்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயி ரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், கணவன் மனைவி இருவருமே மகிழ்ச்சியாக இருந்து வந்துள்ளதால் என்ன காரணம் என தெரியாமல் திகைத்துள்ளனர். மேலும், ஜாஸ்மின் செல்போனை கைப்பற்றி அதனை ஆராய்ந்து வருகின்றனர்.

மாறுவேடத்தில் காதலிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க கடல் கடந்து சென்ற காதலன் : ஆனால் அங்கு கண்ட காட்சி!!

கடல் கடந்து சென்ற காதலன்

ஜப்பானில் காதலியைப் பார்ப்பதற்காக 2,400 கி.மீட்டர் பயணம் செய்து சென்ற காதலனுக்கு காத்திருந்த அதிர்ச்சி சம்பவத்தை அவர் வேதனையுடன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சீனாவைச் சேர்ந்த இளைஞன் ஜப்பானில் இருக்கும் தன் காதலிக்கு சர்பிரைஸ் கொடுப்பதற்காக சுமார் 2,400 கி.மீட்டர் பயணம் செய்து கரடி உடையணிந்து சென்றுள்ளார். அப்போது அவர் கண்ட காட்சி அதிர்ச்சியை அளித்துள்ளது.

இது குறித்து அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில்,எனது காதலிக்கு ஆச்சர்யமளிக்கும் விதமாக சீனாவிலிருந்து 2,400 கி.மீற்றர் தூரம் பயணம் செய்து ஜப்பானுக்குச் சென்றேன். காதலிக்கு ஆச்சர்யமளிப்பதற்காக, கரடி போன்ற உடையணிந்து முகத்தை மூடியபடியே சென்றேன். ஆனால், இது முழுக்க ஒரு முட்டாள்தனமான முயற்சி என்பது பின்னரே தெரிந்தது என்று வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

முதல் பதிவில், அவர் தன்னுடைய காதலியை அவருடைய காதலியை மூகமூடியைக் கழற்றாமல் வேறொரு நபருடன் பார்க்கிறார். அதன் பின் புகைப்படத்தில் தன் முகத்தில் இருந்த கரடி பொம்மை முகமூடியை நீக்கிவிட்டு அந்த பெண்ணை பார்கிறார், அந்த பெண்ணும் அவரை எதிர்நோக்குகிறார்.

அருகிலிருக்கும் கடைக்காரர் ஒருவர், சோகத்துடன் முகத்தை மூடும் காட்சியும் படத்தில் இடம்பெற்றுள்ளது. மூன்றாவது புகைப்படத்தில், மீண்டும் முகமூடியை அணிந்துக்கொண்டு, வந்த பாதையிலே திரும்பி செல்கிறார்.

காதலனைப்பார்த்த அந்த பெண் அவரை நோக்கி ஓடுகிறார்இருவரும் ஆரத் தழுவுவது போன்ற புகைப்படம் இருக்கிறது. இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதுமட்டுமின்றி, அந்த டுவிட்டை 19, 500 பேர் ரீடுவிட்டும், 80, 400-க்கும் அதிகமானோர் லைக்கும் செய்துள்ளனர்.

வவுனியாவில் பொலிசாருக்கு ஆட்சேர்ப்பு : நேர்முகப்பரீட்சை இறுதி நாள்!!

பொலிசாருக்கு ஆட்சேர்ப்பு

வடக்கு கிழக்கு மாகாணங்களில் நிலவும் தமிழ் பேசும் பொலிசாருக்கு ஏற்பட்டுள்ள குறைபாட்டினை நிவர்த்தி செய்யும் முகமாக பொலிசாருக்கு தமிழ் இளைஞர் யுவதிகளை சேர்க்கும் நேர்முகப்பரீட்சை இன்று (23.07) வன்னி பிரதி பொலிஸ் மா அதிபர் திணைக்களத்தில் நடைபெற்றது.

வன்னி பிரதி பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ன தலைமையில் நடைபெற்ற பொலிசாருக்கான ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சையை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்களான யு.எல்.உடவத்த மற்றும் ரி.எம்.எஸ்.தென்னக்கோன், பாதுகாப்பு அமைச்சின் அதிகாரி ஓசித குணதிலக, வவுனியா உதவி பிரதேச செயலாளர் திருமதி பிரியதர்சினி சஜீவன் ஆகியோர் நடத்தியிருந்தனர்.

வவுனியாவில் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் நடைபெற்ற பொலிசாருக்கான ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சையில் 1500 இளைஞர்கள் நேர்முகப்பரீட்சைக்கு விண்ணப்பங்களை அனுப்பியிருந்தனர். இதில் 111 பெண்களும் பொலிஸ் சேவைக்கு விண்ணப்பித்திருந்தனர்.

வவுனியாவில் நடைபெற்ற பொலிசாருக்கான நேர்முகப்பரீட்சையில் இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டிருந்தனர்.

வடக்கு கிழக்கு பகுதிகளில் கடமையாற்றுவதற்கு 10 ஆயிரம் தமிழ் இளைஞர் யுவதிகளின் தேவை இருக்கிறது. இருந்தபோதும் மிகக் குறைவான அளவிலேயே தமிழ் இளைஞர் யுவதிகள் பொலிஸ் சேவைக்கு விண்ணப்பங்களை அனுப்பியுள்ளனர்.

எனவே இளைஞர் யுவதிகள் பொலிஸ் திணைக்களத்தில் ஆர்வத்துடன் இணைந்துகொள்ள முன்வரவேண்டும் என பொலிஸ் திணைக்களத்தால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நேர்முகப்பரீட்சையில் தெரிவு செய்யப்பட்ட இளைஞர் யுவதிகளுக்கான மருத்துவப் பரிசோதனையானது வடபகுதி இளைஞர்களுக்கு காங்கேசந்துறையிலும் கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்களுக்கு கொழும்பிலும் நடைபெறும் என வன்னி பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயம் அறிவித்துள்ளது.

இதுவரை காலமும் தென்னிலங்கையில் நடைபெற்று வந்த பொலிசாருக்கான ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சைகள் வடமாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் விபத்து : முதியவர் படுகாயம்!!

முதியவர் படுகாயம்

வவுனியா வைரவப்புளியங்குளத்தில் இன்று (23.07) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

வவுனியா நகரப்பகுதியிலிருந்து குருமன்காடு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த முதிவரை அதே பகுதியில் பயணித்த ஒரு மோட்டார் சைக்கிள் முந்திச்செல்ல முயற்சித்தவேளை குறித்த விபத்து நிகழ்துள்ளது.

விபத்தையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த 1990 அம்புலன்ஸ் வண்டி முதலுதவிக் குழுவினர் உடனடியாக படுகாயமடைந்து மயக்கத்திலிருந்த வயோதிபருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து வவுனியா பொது வைத்தியசாலை விபத்து பிரிவில் அனுமதித்துள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

இலங்கையில் பரவும் ஆபத்தான நோய் : இளம் ஆண்கள், பெண்களுக்கு உயி ராபத்து ஏற்படும் அ பாயம்!!

ஆபத்தான நோய்

இலங்கையில் ஆ ட்கொல்லி நோயான எயிட்ஸிற்கு இணையான மற்றுமொரு நோய் பரவி வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. HIV எ யிட்ஸ் நோய்க்கு சமமான Hepatitis B என்ற நோய் வேகமாக பரவி வருவதாக செரிமான மற்றும் கல்லீரல் நோய்கள் தொடர்பான விசேட வைத்தியர் தெரிவித்துள்ளார்.

20 – 40 வயதுடைய ஆண் மற்றும் பெண்களுக்கு இந்த நோய் அதிகமாக தாக்குதவதற்கான ஆபத்துக்கள் உள்ளதாகவும், பா லியல் தொழிலாளர்கள் மற்றும் ஆண்கள் சிலரினால் இந்த நோய் தொற்று சமூகத்தில் பரப்பப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஹெப்படைட்டிஸ் பீ நோய் தாயிடம் இருந்து பிள்ளைக்கும், போ தைப் பொருளை ஊசி மூலம் பயன்படுத்துவதினாலும், தொற்றுக்குள்ளானவரின் இரத்தத்தை பயன்படுத்துவது போன்ற நடவடிக்கைகளின் காரணமாக பரவுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நோயில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக ஹெப்படைட்டிஸ் பீ என்ற ஊசியை பெற்றுக்கொள்வது அவசியமாகும். இதனை அரச வைத்தியசாலைகளில் இலகுவாக பெற்று கொள்ள முடியும். இதன் ஊடாக இந்த நோயில் சிக்கிக்கொள்ளாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும் எனவும், அந்த ஊசியை கட்டாயம் பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் விசேட வைத்தியர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

2019ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சார்த்திகளுக்கு இணையத்தள வசதி!!

இணையத்தள வசதி

2019ஆம் ஆண்டு கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் தோற்றவுள்ள தனியார் பரீட்சார்த்திகள் இணையத்தளத்தினூடாக தமது அனுமதிப்பத்திரங்களை நாளை முதல் பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

தபால் ஊழியர்களினால் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக அனுமதி அட்டைகள் வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்பட்டிருந்ததையடுத்து பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினூடாக அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்ள முடியும்.

https://doenets.lk/ என்ற இணையத்தளத்தினூடாக பிரவேசித்து பரீட்சார்த்திகளின் தேசிய அடையாள அட்டை இலக்கத்தைப் பதிவு செய்து பரீட்சைக்கான அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த 20 பேர் கைது!!

அவுஸ்திரேலியா..

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த 20 இலங்கையர்களை அவுஸ்திரேலிய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை குறித்த இலங்கையர்களை அவுஸ்திரேலிய எல்லைப் பகுதியில் வைத்து அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மீளவும் இலங்கைக்கு நாடு கடத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த மே மாதத்தின் பின்னர் படகு மூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்க முயற்சித்த மூன்றாவது சந்தர்ப்பம் இதுவெனத் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு ரயிலில் மோதுண்ட மோட்டார் வாகனம் : இளைஞன் பலி!!

இளைஞன் பலி

காலி போப்பே பாதுகாப்பற்ற ரயில் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயி ரிழந்துள்ளார். அந்த இளைஞன் பயணித்த மோட்டார் வாகனம் பெலிஅத்தேயில் இருந்து மருதானை நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.

காலி ரிச்மன்ட பிரதேசத்தை சேர்ந்த புத்திக்க மனோஹர என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் காலி பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, விபத்து ஏற்பட்ட பகுதியிலுள்ள இருந்த பாதுகாப்பு கமராவில் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரசிகர்களிடம் உருக்கமான கோரிக்கை : முடிவை உத்தியோகபூர்வமாக அறிவித்தார் மலிங்க!!

லசித் மலிங்க..

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க எதிர்வரும் 26ம் திகதி பங்களாதேஷ் அணியுடனான ஒரு நாள் போட்டியுடன் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து பேஸ்புக் பக்கத்தில் விடுத்துள்ள காணொளி ஒன்றில் ஒருநாள் தொடர் ஓய்வு குறித்து லசித் மலிங்க உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். லசித் மலிங்க பங்களாதேஷ் அணியுடனான இத் தொடருடன் ஒருநாள் கிரிக்கெட் குறித்த ஓய்வு தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், இன்று தனது ஓய்வு குறித்து உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர், எதிர்வரும் 26ம் திகதி தான் விளையாடும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டியை கண்டுகளிக்க இயலுமானால் ஆர்.பிரேமதாச மைதானத்திற்கு வருமாறும் ரசிகர்களுக்கு உருக்கமான வேண்டுகோளையும் விடுத்துள்ளார்.

இதேவேளை, லசித் மலிங்க எதிர்வரும் 2020ம் ஆண்டு இடம்பெவுற்ற சர்வதேச இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடர் வரை இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடவுள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடற்பரப்பில் தரையிறங்கிய பயணிகள் விமானம் : விமானியின் மொபைலில் பதிவான திக் திக் காட்சிகள்!!

கடற்பரப்பில் தரையிறங்கிய பயணிகள் விமானம்..

புயலின் போது பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பில் தரையிறங்கிய பயணிகள் விமானம் தொடர்பில், விமானியின் மொபைலில் பதிவான காணொளி காட்சிகள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வருடம் பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள மைக்ரோனேசியாவில் இருக்கும் சூக் தீவில் அமைந்துள்ள விமான நிலையத்தில், பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்கும்போது எதிர்பாராதவிதமாக அருகில் உள்ள நீர்ப்பரப்பில் மோதி விபத்துக்குள்ளானது.

போன்பேய் விமான நிலையத்தில் இருந்து பப்புவா நியூ கினியாவுக்குச் செல்லும் வழியில், ஏர் நியூகினி விமானம் வெனோ தீவில் உள்ள சூக் விமான நிலையத்தில் நின்று செல்லும். குறித்த விமானத்தில் 35 பயணிகள் மற்றும் 12 ஊழியர்கள் உள்ளிட்ட 47 பேர் பயணித்துள்ளனர். மோசமான வானிலை காரணமாக நடந்த இந்த விபத்தில் யாருக்கும் பெரிய பாதிப்புகள் ஏற்படவில்லை என்றே முதலில் கருதப்பட்டது.

ஆனால், பயணி ஒருவர் இந்த விபத்தில் சிக்கி மரணமடைந்தது மேற்கொள்ளப்பட்ட மீட்புப்பணிகளில் தெரியவந்தது. ஓடுதளத்துக்கு 1,500 அடிக்கு மேலே இந்த விமானம் தரையிறங்க முயன்றது எப்படி, இதற்கு என்ன காரணமாக இருக்க முடியும் என பப்புவா நியூ கினியா விசாரணை ஆணையம் ஒன்று அமைத்து விசாரித்து வந்தது.

இதில் விமானிகளின் அலட்சியம்தான் இந்த விபத்துக்கு முக்கிய காரணம் என்பது தெரியவந்துள்ளது. மட்டுமின்றி 17 முறை கணினிகளால் தெளிவான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டும் அதைக் கண்டுகொள்ளாமல் விட்டதுதான் விபத்துக்கு முக்கிய காரணம் எனவும் தெரியவந்தது.

52 வயதான விமானியின் கீழ்தான் விபத்துக்குள்ளான இந்த விமானம் இயக்கப்பட்டது. அவருக்கு 20,000 மணிநேரத்துக்கு மேலான விமானம் ஓட்டும் அனுபவம் இருந்திருக்கிறது. ஆனாலும், அந்த வானிலையில் நிதானமில்லாத தரையிறங்கும் முயற்சியை அவர் மேற்கொண்டுள்ளார். First officer-ஆக இருந்தவரும் ஆபத்தை உணர்ந்து அவரை எச்சரிக்க தவறியிருக்கிறார்.

விபத்துக்கு முன்பு விமான காக்-பிட்டில் என்ன நடந்துகொண்டிருந்தது என்பதை விமானி ஒருவர் வீடியோவாகப் படம்பிடித்திருந்தார். காக்-பிட்டில் கமெரா வைப்பது தங்களது கவனத்தை சிதறடிக்கும் என்று கூறும் விமானிகளே இப்படி வீடியோ எடுக்கலாமா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. இந்த விபத்தில் மரணித்த ஒருவரும், சீட் பெல்ட் அணியாததால் ஏற்பட்ட மோதலில் உண்டான காயத்தின் காரணமாகத்தான் உயி ரிழந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

கைவிட்ட தந்தை : மீன் விற்றுக்கொண்டே கல்வியில் உச்சம் தொட்ட இளைஞர்!!

கைவிட்ட தந்தை

இந்திய மாநிலம் கேரளாவில் கடும் வறுமையிலும் மீன் விற்றுக்கொண்டு இளைஞர் ஒருவர் பி.எச்.டி படித்திருப்பது அனைவரையும் நெகிழச் செய்துள்ளது. கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள முவாற்றுபுழா பகுதியை சேர்ந்தவர் அஜித். 30 வயது இளைஞரான இவர் வறுமையிலும் போராடி பி.எச்.டி படித்துள்ளார்.

சினிமாக்களில் வருவது போல இவரது வாழ்க்கையும் சிறுவயது முதலே போராட்டமாக இருந்துள்ளது. ஆனால் அதையெல்லாம் தாண்டி தன்னம்பிக்கையுடன் முயற்சி செய்து வாழ்க்கையின் பாதை எட்டிப்பிடித்துள்ளார் அஜித். அஜித் பிறந்து மூன்று மாதங்கள் இருக்கும் போது, அவரது தாயை தந்தை விவாகரத்து செய்விட்டார்.

அதன்பின்னர் தன் மகனுக்காவே தனது வாழ்வை அர்பணித்துவிட்டார் அந்த தியாகத் தாய். அவரது உறவினர்கள் மறுமணம் செய்துகொள்ளச் சொன்னாலும் மகனுக்காக அதை மறுத்துவிட்டார்.

கடுமையான வறுமையில் பள்ளி பயின்ற அஜித் வீட்டில் மின்சார வசதியோ, தண்ணீர் வசதியோ இல்லை. குடும்பத்தின் சூழ்நிலை காரணமாக 8வது படிக்கும்போது மரம் ஏறும் வேலைக்கு சென்றார் அஜித்.

அவரது தாயார் அன்னாசி பழம் தோட்டத்தில் வேலைக்கு சென்றுள்ளார். இதையடுத்து 10வது படிக்கும்போது கல்குவாரிக்கு வேலைக்கு சென்றுள்ளார்.
அங்கு வேலை செய்யும் போதே மாலை நேரத்தில் பள்ளிக்கு அருகே மீன் விற்கும் தொழில் செய்துள்ளார்.

இதனால் பள்ளிக்கு செல்வதற்கு சங்கடப்பட்ட அவர் தனது படிப்பை நிறுத்திவிட்டார். அதன்பின்னர் தனது ஆசிரியர்கள் அளித்த தன்னம்பிக்கையால் 12ஆம் வகுப்பு தேர்வை எழுதிய அஜித், அதில் தேர்ச்சி பெற்றார்.

அவரது படிப்பு திறமையை பார்த்த அவரது ஆசிரியை ஜோபி, அஜித்தை டிகிரி படிக்குமாறு வலியுறுத்தியுள்ளார். அவர் அளித்த அந்த தன்னபிக்கை இன்று அஜித்தை பி.எச்.டி வரை கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.

இதற்கிடையே கல்லூரிகளில் படிக்கும்போது அஜித் ஆட்டோ ஓட்டிக்கொண்டே படித்தது குறிப்பிடத்தக்கது.

வவுனியா இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!!

விமான நிலையத்தில் கைது

பெருந்தொகை பணத்தை சட்டவிரோதமாக நாடு கடத்த முயன்ற இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 89 மில்லியன் ரூபா பெறுமதியான சவுதி ரியால் நாணயத்தை இந்தியாவுக்கு கொண்டு செல்ல முனைந்த வேளையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்திய விமான சேவைக்கு சொந்தமான AJ- 274 என்ற விமானத்தின் ஊடாக செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார். இதன்போது குறித்த இளைஞனின் பயண பொதியை சோதனையிட்ட போது பெருந்தொகை பணம் கண்டுபிடிக்கப்பட்டதாக சுங்க பிரிவு பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த இளைஞன் வவுனியாவை சேர்ந்த வர்த்தகர் என விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது. அவரது பணம் அரசுடமையாக்கப்பட்டுள்ளதாக சுங்க பிரிவு அறிவித்துள்ளது.

-தமிழ்வின்-

வவுனியாவில் இடம்பெற்ற போராட்டம் : பெருந்திரளான தாய்மாரின் கண்ணீரில் நனைந்தது வவுனியா மண்!!

கண்ணீரில் நனைந்தது வவுனியா மண்

காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளால் வவுனியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறையிலான போராட்டம் 884ஆவது நாளாக இன்றைய தினமும் தொடர்கின்றது.

இந்த நிலையில் அரசியல் கைதிகளில் விடுதலையை வலியுறுத்தி, அவர்களின் விடுதலையை துரிதப்படுத்துமாறு கோரி இன்று கண்ணீர்ப் போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது கண்ணீர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், நீண்ட காலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை உடனே விடுதலை செய்யுமாறும், அமெரிக்காவே சிங்கள மற்றம் பௌத்த ஒடுக்கு முறை ஜனநாயகத்திலிருந்து தமிழர்களை விடுவிக்க உன் உதவி தேவை என்றும் வலியுறுத்தி கதறியழுதுள்ளனர். இந்த போராட்டத்தில் பெருந்திரளான தாய்மார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

       

மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கு தெரிவான தமிழச்சி : குவியும் பாராட்டுக்கள்!!

கால்பந்து தொடருக்கு தெரிவான தமிழச்சி

பிஃபா 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பெண்கள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில், தமிழகத்தைச் சேர்ந்த மாரியம்மாள் இடம்பெற்றுள்ளார். தமிழகத்தின் சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்தவர் பாலமுருகன். விசைத்தறி தொழிலாளியான இவரது மகள் மாரியம்மாள்.

நாமக்கல்லில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்று வரும் இவருக்கு, இளம் வயதில் இருந்தே கால்பந்தாட்டத்தின் மீது ஆவல் இருந்துள்ளது. அதன் விளைவாக நாமக்கல்லில் உள்ள கால்பந்தாட்ட விளையாட்டு விடுதியில் சேர்ந்தார் மாரியம்மாள். துவக்கத்தில் மாவட்ட அளவிலான போட்டிகளில் சிறப்பாக விளையாடி வந்த இவர், மாநில அளவிலான அணியில் இடம்பிடித்தார்.

இதன்மூலம் தமிழ்நாடு அணியில் பங்கேற்று, தேசிய அளவிலான போட்டிகளில் பல வெற்றிகள் பெற காரணமாக அமைந்தார். இந்நிலையில், 17 வயதுக்குட்பட்டோருக்கான பிஃபா உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் மாரியம்மாள் இடம்பிடித்துள்ளார். இந்த தொடர் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாரியம்மாள் கூறுகையில், ‘எனது அண்ணன் இளம் வயது முதலே கால்பந்தாட்ட வீரராக விளங்கியதை கண்டு, எனக்கு கால்பந்தின் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, நான் நாமக்கல்லில் உள்ள தமிழக அரசின் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதியில், கடந்த 5 ஆண்டுகளாக பயிற்சி பெற்று விளையாடி வருகிறேன்.

மேலும், எனது பயிற்சியாளர் கோகிலா அளித்த பல்வேறு தொழில்நுட்ப பயிற்சியின் வாயிலாக மாவட்ட, மாநில அளவில் சிறப்பாக விளையாடினேன். அதன் விளைவாக அடுத்தாண்டு இந்தியாவில் நடைபெறும் 17 வயதிற்கு உட்பட்டோருக்கான கால்பந்தாட்ட போட்டிகளில் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளேன். நான் தொடர்ந்து சிறப்பான பயிற்சி மேற்கொண்டு, இந்தியாவிற்காக சிறப்பாக விளையாடுவேன் என்று நம்பிக்கை உள்ளது’ என தெரிவித்துள்ளார்.

70 ஆயிரம் கடன் தொகைக்காக 24 ஆண்டுகள் கொத்தடிமையாக இருந்த குடும்பத்தினர் மீட்பு!!

கொத்தடிமையாக இருந்த குடும்பத்தினர் மீட்பு

நாமக்கல் மாவட்டத்தில் 70 ஆயிரம் கடன் தொகைக்காக 24 ஆண்டுகள் கொத்தடிமையாக வேலை செய்து வந்த குடும்பத்தினரை அதிகாரிகள் பத்திரமாக மீட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள இரண்டு செங்கல் சூளைகளில் ஒப்பந்த அடிப்படையில் 10 பேர் பல வருடங்களாக கொத்தடிமைகளாக வேலை செய்து வருகின்றனர் என, ஒரு தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியர் மாவட்ட ஆட்சியருக்கு தகவல் கொடுத்தார்.

அதன்பேரில் பொலிஸாருடன் அங்கு விரைந்த அதிகாரிகள் 3 குழந்தைகள் உட்பட 10 பேரையும் மீட்டெடுத்தனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், 70,000 கடன் தொகைக்காக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் 24 வருடங்கள் கொத்தடிமையாக வேலை செய்துள்ளனர்.

3 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் ரூ.1.5 லட்சம் கடன் தொகைக்காக ஒரு வருடம் கொத்தடிமையாக இருந்துள்ளனர். மேலும், அவர்களை கொடுமைப்படுத்தி 24 மணி நேரம் தொடர்ந்து வேலை செய்யுமாறும் அதன் உரிமையாளர் வற்புறுத்தியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

யானை தனியே தும்பிக்கை தனியே : உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய புகைப்படம்!!

அதிர்வலைகளை ஏற்படுத்திய புகைப்படம்

தென் ஆப்பிரிக்காவில் ஆவணப்பட இயக்குநர் எடுத்த புகைப்படம் ஒன்று உலக அளவில் தற்போது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் உள்ள போட்ஸ்வானா பகுதிக்குச் சென்ற ஆவணப்பட இயக்குநரான ஜெஸ்டின் சுல்லிவான் தன்னுடைய ட்ரோன் கமெராவை வனத்துக்கு மேலே பறக்கவிட்டு படம் பிடித்துள்ளார்.

அப்போது அவர் படம் பிடித்த ஒரு புகைப்படம் இன்று உலக அரங்கையே அதிரச் செய்துள்ளது. யானை ஒன்று முகம் சிதைக்கப்பட்ட நிலையில் தும்பிக்கை தனியாக வெ ட்டி வீசப்பட்ட நிலையில் இற ந்துகிடந்த புகைப்படம் தான் ஜெஸ்டின் தன் கமெரா மூலம் பதிவு செய்துள்ளார்.

இது குறித்து இங்கிலாந்தின் பிரபல பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. டிஸ்கனக்ஷன் (Disconnection) என்ற தலைப்பு கொடுக்கப்பட்ட அந்த யானையின்புகைப்படம் தற்போது ஆண்ட்ரி ஸ்டெனின் சர்வதேச பத்திரிகை புகைப்படப் போட்டியில் பங்கேற்க தெரிவாகியுள்ளது.

அந்த புகைப்படம் அப்பகுதிவாசிகளை மட்டுமல்லாமல் பார்ப்பவர்களையும் கலங்கச்செய்துள்ளது. 2014 முதல் 2018 ஆம் ஆண்டுக்குள் உடல் பாகங்களுக்காக விலங்குகள் கொ ல்லப்படுவது 593 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து பேசிய ஆவணப்பட இயக்குநர் ஜெஸ்டின் சுல்லிவான், இந்தப்புகைப்படத்துக்கு டிஸ்கனக்ஷன் என பெயரிட்டுள்ளேன். தரையில் நின்று கொண்டு பார்த்தால் இதன் வீரியம் புரியாது.

மேலே இருந்து பார்த்தால் தான் புகைப்படத்தின் வலி புரியும். டிஸ்கனக்ஷன் என்பது யானைக்கும் துண்டித்து கிடக்கும் தும்பிக்கைக்கும் இடையேயானது மட்டும் அல்ல. விலங்குகள் கொ லைக்கும் அதை கண்டுகொள்ளாத நமக்கும் இடையேயாயானது என்று தெரிவித்துள்ளார்.

போட்ஸ்வானாவில் 5 வருடங்களாக அமலில் இருந்த யானைகளை வேட்டைக்கு விதிக்கப்பட்ட தடை கடந்த மாதம் திரும்ப பெறப்பட்டது. இதனால் யானைகளை கொ ல்வது அங்கு குற்றமாகாது. ஆனாலும் விலங்குகள் வேட்டை என்பது காலப்போக்கில் வனத்தையும் நாட்டையும் சீரழித்துவிடும் என விலங்கு ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.