வெளிநாட்டு வேலையை விட்டு ஊருக்கு வந்த கணவன் : வீட்டுக்குள் நுழைந்த போது பார்த்த காட்சி!!

ஊருக்கு வந்த கணவன்..

தமிழகத்தில் இளம்பெண் கொ லை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞர் தாமாகவே முன்வந்து நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். துாத்துக்குடியை சேர்ந்தவர் நடேஷ் (36). இவரது மனைவி மகாராணி (29). இவர்களது மகன் விம்ரித் (5). நேற்று முன்தினம் நடேஷ் வேலைக்குச் சென்றுவிட்டார். மகன் பள்ளிக்குச் சென்றிருந்தார்.

மகன் பள்ளிக்குச் சென்றிருந்தார். வீட்டில் தனியாக இருந்த மகாராணி கழு த்து அறுக் கப்பட்டு கொ லை செய்யப்பட்டு கிடந்தார். வீட்டுக்கு வந்த நடேஷ் மனைவி சட லமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து பொலிசுக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் சட லத்தை கைப்பற்றிவிட்டு விசாரணையை தொடங்கினர்.

விசாரணையில் மகாராணியின் கணவர் நடேஷ் வெளிநாட்டு வேலைக்கு சென்றார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் இளவரசனுடன் (23) மகாராணிக்கு கூடாநட்பு ஏற்பட்டது. இதனை கணவர் கண்டித்துள்ளார். தற்போது நடேஷ் வெளிநாட்டு வேலையை விட்டு துாத்துக்குடியில் பணியில் சேர்ந்து விட்டதால் இளவரசனின் தொடர்புக்கு சிக்கல் ஏற்பட்டது.

நேற்று முன்தினம் மகாராணியை சந்திக்க அவரது வீட்டிற்கு இளவரசன் வந்துள்ளார். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் அவரை கொ லை செய்து விட்டு தாமும் தற் கொ லை செய்ய கையை பிளே டால் அறுத் துள்ளார். பின் அங்கிருந்து தப்பியதும் தெரிந்தது. இதையடுத்து பொலிசார் தனிக்குழு அமைத்து இளவரசனை தேடி வந்தனர்.

வழக்கில் திருப்பம் ஏற்படும் வகையில் இளவரசன் தென்காசி நீதிமன்றத்தில் சரணடைந்தார். மகாராணியின் மேலிருந்த ஆத்திரத்தால் அவரை கொ லை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.

நந்திக்கடல் பகுதியில் வெடித்து சிதறிய குண்டு : தற்போது வெளிவந்துள்ள விடயம்!!

நந்திக்கடல் பகுதியில்..

முல்லைத்தீவு – நந்திக்கடல் பகுதியில் நேற்றைய தினம் குண்டு வெடிப்பு சம்பவமொன்று பதிவாகியிருந்த நிலையில் அது தொடர்பான பல தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

நந்திக்கடல், பிரம்படி பகுதியில் தனியார் காணி உரிமையாளர் ஒருவர் அவருடைய சொந்த காணியை துப்பரவு செய்து கொண்டிருந்த நிலையில் நேற்று பிற்பகல் பற்றைகளுக்கு தீமூட்டியுள்ளார்.

இதன்போது நிலத்தில் புதைந்து கிடந்த குண்டொன்று தீயின் வெப்பம் காரணமாக வெடித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

எனினும் இந்த சம்பவத்தால் உயிர்ச்சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை என தெரியவருவதுடன், இது தொடர்பான விசாரணைகளை முள்ளியவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் வெடித்து சிதறிய வெடிகுண்டு தொடர்பில் தடயவியல் பொலிஸ் பிரிவினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நந்திக்கடல் பகுதியில் குண்டு வெடிப்பு : தீவிரமாக தேடும் பொலிஸார்!!

நந்திக்கடல் பகுதியில்

முல்லைத்தீவு – நந்திக்கடல் பகுதியில் குண்டு ஒன்று வெடித்து சிதறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கேப்பாபுலவு கிழக்கு 59வது படைப்பிரிவினரின் கட்டுப்பாட்டு பகுதியிலேயே குறித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

குறித்த குண்டு வெடிப்பின் சத்தம் கேப்பாபுலவு, முள்ளிவாய்க்கால், இரட்டைவாய்க்கால் உள்ளிட்ட பகுதி வாழ் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் குறித்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் இராணுவத்தினர் மேலதிக விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

கேப்பாபுலவு-நந்திக்கடல் பகுதியில் அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் பொது மக்கள் வழங்கிய தகவலையடுத்து முள்ளியவளை பொலிஸார் மற்றும் முல்லைத்தீவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியேட்சகர் உள்ளிட்டவர்கள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த வெடிப்பு சம்பவத்தால் 8 அடி ஆழமான பாரிய குழி ஒன்று ஏற்பட்டுள்ளதாகவும், நாளை நீதிமன்றின் அனுமதியுடன் மேலதிக விசாரணைகளை அப்பகுதியில் மேற்கொள்ளவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கை உள்ளிட்ட நாடுகளை இலக்கு வைத்து சைலன்ஸ் குழு இணையக்கொள்ளை!!

இணையக்கொள்ளை

சைலன்ஸ் என அடையாளப்படுத்தப்பட்ட இணையக்கொள்ளையில் பயிற்றப்பட்ட குழு ஒன்று வங்கிகள் மீது இணையத்தாக்குதல்களை நடத்தி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரஸ்யாவை தலைமையகமாகக் கொண்ட குரூப்-ஐபி என்ற நிறுவனம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இந்த குழு முறையே பங்களாதேஷ், இந்தியா, இலங்கை மற்றும் கிர்கிஸ்தானில் நான்கு நாடுகளை இலக்கு வைத்து செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக பங்களாதேஷில் உள்ள டச் பங்க்ளா வங்கியின் மீது இணையத்தாக்குதல் நடத்தியதில் மூன்று மில்லியன் டொலர்கள் வரை நட்டமேற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த குழுவினர், ரஷ்யா, முன்னாள் சோவியத் நாடுகள் மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள வங்கிகளை குறிவைத்து செயற்பட்டிருந்தன. தற்போது ஆசிய நாடுகள் இலக்கு வைக்கப்பட்டிருப்பதாக குரூப்-ஐபி நிறுவனம் கூறியுள்ளது.

இதேவேளை, இந்த சைலன்ஸ் ழுவினர் இந்தியா,இலங்கை மற்றும் கஸ்கஸ்தானில் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். எனினும் தாக்குதல்களுக்கு உள்ளானவர்களின் பெயர்களை வெளியிடமுடியாது என்றும் குரூப் ஐபி நிறுவனம் தெரிவித்துள்ளது.

வவுனியாவில் தீ விபத்து : தீயில் கருகி இரு உயிர்கள் பலி!!

தீ விபத்து

வவுனியா, பட்டக்காடு பகுதியில் உள்ள மாட்டுக் கொட்டகை ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக இரண்டு மாடுகள் உயிரிழந்துள்ளன. இன்று நள்ளிரவு 1.30 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, பட்டக்காடு பகுதியில் உள்ள மாட்டுக் கொட்டகை ஒன்றில் திடீர் தீப் பரம்பல் ஏற்பட்டுள்ளது. இரவு வேளையில் மாட்டுக் கொட்டகை பெரிதாக தீ பிடித்து எரிவதைக் கண்ட அயலவர்கள் அவ் வட்டாரத்தைச் சேர்ந்த நகரசபை உறுப்பினர் லரீப்பிற்கு தொலைபேசியில் சம்பவத்தை தெரியப்படுத்தினர்.

இதனையடுத்து குறித்த நகரசபை உறுப்பினர் உபதவிசாளர் க.குமாரசாமி மற்றும் நகரசபை தீயணைப்பு பிரிவினருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

விரைந்து செயற்பட்ட நகரசபை தீயணைப்பு பிரிவினர் மற்றும் அப்பகுதி மக்கள் தீ தொடர்ந்தும் பரவாமல் கட்டுப்படுத்தினர். எனினும் மாட்டு கொட்டகை முற்றாக எரிந்து நாசமாகியது. இதில் இரண்டு மாடுகள் உயிரிழந்துள்ளன.

தீ விபத்துக்கான காரணம் தெரியாத நிலையில் வவுனியா பொலிசார் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா மாணவன் மிகக் குறைந்த வயதில் சாதனை : வடமாகாணத்திற்கு ஏற்பட்ட பெருமை!!

மிகக் குறைந்த வயதில் சாதனை

தேசிய ரீதியில் நடைபெற்ற ‘கிக் பொக்சிங்’ குத்துச்சண்டை போட்டியில் மிகக்குறைந்த வயதில் பங்குபற்றி வவுனியா மாணவன் சாதனை படைத்துள்ளார்.

வவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியில் இரண்டாம் வகுப்பில் கல்வி பயின்றுவரும் ஆர்.கே.மைக்கல் நிம்றொத் என்ற மாணவன் தேசிய ரீதியில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் கலந்துகொண்டு 2019 ஆம் ஆண்டுக்கான சம்பியன் பட்டத்தை தனதாக்கி கொண்டுள்ளார்.

அம்பாறையில் யூன் 28, 29, 30 ஆம் திகதிகளில் தேசிய ரீதியில் நடைபெற்ற 2019 ஆம் ஆண்டுக்கான ‘கிக் பொக்சிங்’ குத்துச்சண்டை போட்டியில் ஏழு வயதுக்குட்பட்ட 15 இலிருந்து 20 கிலோ கிராம் எடைப்பிரிவில் நடைபெற்ற போட்டியில் பங்குபற்றி தங்கப்பதக்கத்தை சுவீகரித்து வடக்கு மாகாணத்தில் மிகக்குறைந்த வயதில் குத்துச்சண்டையில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வென்றவர் என்ற சாதனையை ஆர்.கே.மைக்கல் நிம்றொத் தனதாக்கி கொண்டுள்ளார்.

இதன் மூலம் வடமாகாணத்திற்கும் அவர் கல்விபயிலும் பாடசாலைக்கும், பயிற்றுனருக்கும், பெற்றோருக்கும் பெருமை தேடி தந்துள்ளார்.

இலங்கை பிரான்ஸ் ‘சவேட்’ அமைப்பின் ஏற்பாட்டில் தேசிய மற்றும் சர்வதேச குத்துச்சண்டை பயிற்றுனர் மற்றும் இலங்கை பிரான்ஸ் ‘சவேட்’ தேசிய கூட்டமைப்பின் தலைவருமான சி.பூ.பிரசாத் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற இக் குத்துச்சண்டை போட்டியில் வடமாகாணம் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் அதிசயம் வாழைமரம்!!

அதிசயம் வாழைமரம்

வவுனியா பூந்தோட்டம் பகுதியில் வாழை மரம் ஒன்றில் பொத்தி வர முன்பே குலை வெளியே வந்துள்ளது.

வழமையாக வழையிலிருந்து பொத்தி வெளியே வந்துதான் குலை வருவது வழக்கம். ஆனால் இங்கு இரண்டும் சரிசமனாக வெளியே தெரிகின்றது.

இந்த அதிய வாழையை பலர் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.

வவுனியாவில் பாடசாலையில் தீப்பரவல்!!

தீப்பரவல்

வவுனியா ஈரற்பெரிகுளம் அலகல்ல வித்தியாலயத்தில் இன்று நண்பகல் ஏற்பட்ட தீப்பரவலால் பாடசாலை மைதானம் எரிந்துள்ளது.

இன்று நண்பகல் 12 மணியளவில் பாடசாலைக்கு அருகே காணப்பட்ட வெற்றுக் காணிக்கு வைக்கப்பட்ட தீயானது காற்றினால் பரவி அருகிலுள்ள பாடசாலை மைதானத்திற்குள் சென்றுள்ளது இதனால் பாடசாலை மைதானத்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

பாடசாலை அதிபரினால் வவுனியா நகரசபை தீ அணைக்கும் பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்டு சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைக்கும் பிரிவினர் தமது முயற்சியினால் தீப்பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். இச்சம்பவத்தில் பாடசாலை மாணவர்கள் எவருக்கும் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை.

வவுனியாவில் புகையிரத ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக பயணிகள் பாதிப்பு!!

பயணிகள் பாதிப்பு

புகையிரத தலைமை அதிகாரிக்கு போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகள் அச்சுறுத்தல் விடுத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று நள்ளிரவு முதல் தொடர் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக புகையிரத ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை புகையிரதநிலைய சாரதிகள் தொழிற்சங்கம் கடந்த இரண்டு வாரத்தின் நாட்களில் சம்பள உயர்வு, பதவியுயர்வு காரணமாக பணிப்புறக்கணிப்பு மேற்கொண்டிருந்ததனால்
வவுனியாவில் பயணிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

வவுனியா புகையிரத நிலையம் மூடப்பட்டு பொலிஸார் மற்றும் விமானப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதனால் பயணிகள் இன்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றது.

புகையிரத நிலையத்திற்குச் சென்ற பயணிகள் புகையிரத ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக திரும்பிச் செல்வதை அவதானிக்க முடிந்துள்ளது. புகையிரத ஊழியர்களின் போராட்டம் காரணமாக இரு புகையிரதங்கள் வவுனியாவில் தரித்து நிற்கின்றதனையும் அவதானிக்க முடிகின்றது.

தென்னிலங்கையில் பதற்றம் : அத்துமீறி பாடசாலைக்குள் புகுந்த மர்மநபர் இராணுவத்தால் சுட்டுக் கொலை!!

மாத்தறை அக்மீமன பாடசாலைக்குள் அத்துமீறி நுழைய முயற்சித்த சந்தேக நபர் மீது இராணுவச் சிப்பாய் துப்பாக்கிப் பிரயோகம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்த குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் 39 வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அக்மீமன நானவில உபனந்த கனிஸ்ட பாடசாலையில் கற்றுவரும் தனது மகனை வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக குறித்த நபர் பாடசாலைக்கு சென்றுள்ளார்.

எனினும் இராணுவச் சிப்பாயின் அறிவுறுத்தலை மீறி பலவந்தமான அவர் பாடசாலைக்குள் நுழைய முயற்சித்துள்ளார். இதன் காரணமாக இருவருக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது இராணுவச் சிப்பாயின் துப்பாக்கியைப் பறிக்க குறித்த நபர் முயற்சித்துள்ளார். இதனால் இந்த சூட்டுச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

சம்பவத்தில் காயமடைந்த சந்தேக நபர், கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சையின் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

வவுனியாவில் நில நடுக்கம்?

நில நடுக்கம்

வவுனியா – தாண்டிக்குளம், பத்தினியார் மகிழங்குளம் பகுதியில் இன்று காலை நில நடுக்க அதிர்வுகள் உணரப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

தாண்டிக்குளம், பத்தினியார்மகிழங்குளம் பகுதியைச் சுற்றிய சில வீடுகளில் இன்று காலை 9.52 மணியளவில் உணரப்பட்ட நில நடுக்க அதிர்வுகள் நான்கு, ஜந்து செக்கன் வரை நீடித்துள்ளது.

இதன்போது வீடுகளுக்கு எவ்வித சேதங்களும் ஏற்பட்டிருக்கவில்லை என தெரியவந்துள்ளது. இந்நிலையில் வழமைக்கு மாறாக இன்று இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக அப்பகுதிமக்கள் தெரிவித்துள்ளனர்.

தமது பயனர்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரியது பேஸ்புக்!!

மன்னிப்பு கோரியது பேஸ்புக்

உலகம் பெரும்பாலான நாடுகளில் சமூக வலைத்தளங்கள் முடங்கியமை தொடர்பில் பேஸ்புக் நிறுவனம் வருத்தத்தை வெளியிட்டுள்ளது.

பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான பேஸ்புக், வட்ஸ்அப், இஸ்ட்ராகிராம் மற்றும் மெசஞ்சர் ஆகிய சமூக வலைத்தளங்களே இவ்வாறு முடங்கியுள்ளன.பேஸ்புக் நிறுவனத்திடம் உள்ள சிக்கல் தற்போது சீரமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தங்கள் சமூக வலைத்தளங்கள் முடங்கியமை தொடர்பில் பயனாளர்களிம் மன்னிப்பு கோரியுள்ளது. நேற்று இரவில் இருந்து உலகம் முழுவதும் பேஸ்புக், வட்ஸ்அப், இஸ்ட்ராகிராம் மற்றும் மெசஞ்சர் ஆகிய சமூக வலைத்தளங்கள் முடங்கியமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் வாகனச் சாரதிகளுக்கு மிக முக்கிய அறிவித்தல்!!

முக்கிய அறிவித்தல்

குடிவெறியில் வாகனம் செலுத்துவோரை கைது செய்வதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

எதிர்வரும் 05 ஆம் திகதி முதல் ஒரு மாத காலத்திற்கு குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

அதற்கமைய, குடிவெறியில் வாகனம் செலுத்துவோரை கைது செய்யும் நோக்கில் நாடளாவிய ரீதியில் விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் எனவும், அவர் தெரிவித்தார்.

யாழில் அதிகாலையில் ஏற்பட்ட கோர விபத்து : இருவர் பரிதாபமாக பலி!!

கோர விபத்து

கிளிநொச்சி பச்சிளைப்பள்ளிக்கு உட்பட்ட இத்தாவில் பகுதியில் இன்று அதிகாலை 2 மணியளவில் மரக்கறிகள் ஏற்றி யாழ் நோக்கி பயணித்த லொறி ஒன்றும் எதிர் திசையில் வந்து கொண்டிருந்த டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் சம்பவ இடத்திலேயே லொறி சாரதியும் டிப்பர் வாகன சாரதியும் பரிதாபமாக உயிரழந்துள்ளனர்.

இதுதொடர்பான மேலதிக விசாரணையினை பளை பொலிசார் மேற்கொண்டு வருவதுடன் முதற்கட்ட விசாரணையில் லொறியினை செலுத்திவந்த சாரதி மதுபோதையில் இருந்ததாக தெரியவந்துள்ளதாக பளை பொலிஸ் நிலைய அதிகாரிகள் கூறினர்.

ஆடு மேய்க்க சென்ற 14 வயது சிறுமிக்கு நடந்தது என்ன : வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!

சிறுமிக்கு நடந்தது என்ன

தமிழகத்தில் மனவளர்ச்சி குன்றிய சிறுமியை கர்ப்பமாக்கிய 55 வயது நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். திண்டிவனம் அடுத்துள்ள கிராமம் கிராண்டிபுரம். இங்கு விருத்தாம்பாள் என்பவர் வசித்து வருகிறார்.

இவருக்கு 3 மகள்கள் உள்ள நிலையில் சுகன்யா, சுமதி என்ற 2 பெண்கள் உடல் ஊனமுற்றவர்கள். அதிலும் சுமதி (14) மன வளர்ச்சி குன்றியவரும் கூட. சுமதி அடிக்கடி கிராமத்தில் ஆடு மேய்த்த நிலையில் ஒருநாள் மலையடிவாரத்தில் ஆடு மேய்த்து கொண்டிருந்தாள்.

அப்போது அதே ஊரை சேர்ந்த கன்னியப்பன் (55) என்பவரும் ஆடு மேய்க்க அங்கு வந்தார். பின்னர் அவர் சுமதியை துஷ்பிரயோகம் செய்தார். ஆனால் இதை வெளியில் சொல்லக்கூட சுமதிக்கு தெரியவில்லை.

இந்நிலையில், சென்னையில் வசித்து வரும், விருத்தம்பாளின் மூத்த மகளான மாலதி, சுமதி 8 மாதம் கர்ப்பிணியாக இருக்கும் விடயத்தை கண்டுபிடித்து அதிர்ந்தார். இது குறித்து அவர் பொலிசில் புகார் அளித்த நிலையில் பொலிசார் தீவிர விசாரணை நடத்தி கன்னியப்பனை கைது செய்துள்ளனர்.

ஒட்டு மொத்த குடும்பத்தையும் இழந்து நிற்கும் 8 வயது சிறுமி : கண்கலங்க வைக்கும் சம்பவம்!!

இந்தியாவில் 8 வயது சிறுமி ஒருவர் தன்னுடைய ஒட்டு மொத்த குடும்பத்தையும் இழந்து நிற்கும் புகைப்படம் வெளியாகி பார்ப்போரை கண்கலங்க வைக்கிறது.

தென்மேற்கு பருவமழை தீவிரமானதால், மும்பையில் கடந்த சில தின நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதனால் நகரின் முக்கிய பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. கனமழை காரணமாக சாலை மற்றும் இரயில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதால், மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலை கிழக்கு மலாட் பகுதியில் இருக்கும் குடிசைப்பகுதியில் வீட்டின் சுவர் தொடர் மழை காரணமாக தாங்க முடியாமல் திடீரென்று இடிந்து விழுந்ததில் 22 பேர் பரிதாபமாக பலியாகினர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த கோர சம்பவத்தில் பிரியா நானாவரே என்ற 8 வயது சிறுமி ஒருவர் தன் ஒட்டு மொத்த குடும்பத்தையும் இழந்து நிற்கிறார். அவர் சம்பவம் நடந்த தினத்தன்று இரவு வெளியில் விளையாட சென்றுவிட்டு, வீட்டிற்கு தாமதமாக வந்ததால், அவர் உயிர் தப்பியுள்ளார்

இதில் பிரியாவின் தந்தை, தாய் மற்றும் சகோதரிகள் ஆகிய அனைவரும் விபத்தில் பலியாயினர். தனது சிறு வயதிலேயே, மொத்த குடும்பத்தையும் பிரியா இழந்து நிற்பது அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சிறுமி பிரியாவின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி பார்போரை கண்கலங்க வைக்கிறது.