பிரான்ஸில் விசா இல்லாதவர்களை தேடும் பொலிஸார் : வீடுகளில் பதுங்கியுள்ள தமிழர்கள்!!

பிரான்ஸில் ஆவணங்கள் இல்லாதவர்களை கைது செய்யும் விசேட சோதனை திட்டம் ஒன்றை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

ரயில் நிலையங்கள் உட்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஆவணங்களை பரிசோதிக்கும் நடவடிக்கை நேற்று முதல் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக விசா இல்லாமல் பிரான்ஸில் பணியாற்றும் தமிழர்கள் அச்சத்துடன் வீடுகளில் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சோதனை நடவடிக்கைக்காக சுமார் நான்காயிரம் பொலிஸார் பணியில் ஈடுபட்டுள்ளதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

பிரான்ஸில் கடுமையான குடியேற்ற சட்டங்களை அமுல்படுத்தி வரும் உள்துறை அமைச்சு, ஆவணங்கள் இல்லாதவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது.

இதுபோன்று ஏற்கனவே முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 700 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் பலர் நாடு கடத்தலை எதிர்நோக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தாயும் மகளும் வெட்டிக்கொலை : அநுராதபுரத்தில் கொடூரம்!!

வீட்டில் தனியாக வசித்து வந்த தாயும், மகளும் கூரிய ஆயுதங்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கொடூர சம்பவம் அநுராதபுரம், கலன்பிந்துனுவெவை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

அந்த பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய தாயும், 23 வயதுடைய மகளுமே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். மேற்படி இருவரின் சடலங்களும் வீட்டில் இருந்து நேற்றுக் காலை மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலைக்குப் பயன்படுத்திய கூரிய ஆயுதங்களையும் வீட்டில் இருந்து பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கொலைச் சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்றிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கொலையாளிகள் எனச் சந்தேகிக்கப்படும் அயல்வீட்டின் உரிமையாளர் உட்பட மூவரைக் கைது செய்துள்ள பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா ஓமந்தை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

யாழ்.ஓமந்தை கார் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.

குறித்த விபத்தில் படுகாயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த து. சுவாமிநாத ஐயர் (சந்திரன் ஐயா) என்பவரே நேற்றையதினம் வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வவுனியா ஓமந்தை பகுதியில் கடந்த 26ஆம் திகதி அதிகாலை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கார், எதிரே வந்த டிப்பருடன் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில், யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரக அலுவலர் பிரம்மஸ்ரீ சச்சிதானந்த குருக்கள் பிரபாகரசர்மா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவருடன் காரில் பயணித்த மனைவி, மகன் மற்றும் மைத்துனர் ஆகியோர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், பிரபாகரசர்மாவின் மகனான அக்ஷே கடந்த 1ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்நிலையில், பிரபாகரசர்மாவின் மைத்துனர் நேற்றையதினம்(20.06.2025) வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

போரின் கொடூர முகம்; உணவின்றி மண்ணை உண்ணும் சிறுவன்!!

இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் முடிவுக்கு வராத நிலையில் காசாவில் கடும் உணவு தட்டுப்பாடு நிலவுகின்றது.

இந்நிலையில் காசாவில் உண்ண உணவில்லாமல், உணவு கேட்டு மண்ணை உண்ணும் சிறுவனின் காணொளி வெளியாகி காண்போரை கண்கலங்க வைக்கிறது.அக் காணொளியில் சிறுவன் பேசுகையில்,

காஸாவில் நாங்கள் சாப்பிட உணவு எதுவும் இல்லை. ஒவ்வொரு நாளும் உணவு உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய டிரக்குகள் காஸாவுக்குள் வருகின்றன. ஆனால் அதில் எங்களுக்கு எதுவும் கிடைப்பதில்லை.

நாங்கள் உணவு இல்லாமல் மணலைச் சாப்பிட்டு கொண்டிருக்கிறோம். எங்களுக்கு உணவு இல்லை. எங்குமே உணவு இல்லை. எங்களுக்கு உணவு சமைக்க மாவு தேவை. எங்கள் மீது இரக்கம் காட்டுங்கள். தயவுசெய்து கருணை காட்டுங்கள்.

எங்களிடம் உணவு இல்லை. நாங்கள் ரொட்டிக்கு பதிலாக மணலைச் சாப்பிடுகிறோம். கொஞ்சமாவது கருணை காட்டுங்கள்.

காஸாவில் தற்போது ஒரு ரொட்டி துண்டின் விலை 5.30 டாலர். அந்த ஒரு ரொட்டித் துண்டு மிகவும் சிறியது. அது எங்களுக்குப் போதவில்லை” என்று பேசியுள்ளார்.

ஒவ்வொரு நாளும் உதவிப்பொருள்கள் கொண்டுவந்த டிரக்கை நோக்கி ஓடுகிறோம். உணவுதான் கிடைப்பதில்லை என தெரிவித்து மண்ணை உண்கிறார்.

இந்நிலையில் சிறுவனின் காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

ஆறுமாத காலப்பகுதிக்குள் வாகன விபத்துக்களால் 2000 பேர் பலி!!

கடந்த ஆறுமாத காலப்பகுதிக்குள் வாகன விபத்துக்கள் காரணமாக சுமார் 2000பேர் வரையிலானோர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கு மேலதிகமாக குறித்த காலப்பகுதியில் 7152 பேர் வாகன விபத்துக்கள் காரணமாக காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

பெரும்பாலான விபத்துக்கள் சாரதிகளின் அலட்சியம் காரணமாகவே நடைபெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதே போன்று போக்குவரத்துக்குப் பொருத்தமற்ற வாகனங்களில் பயணிப்பதும் விபத்துக்களை ஏற்படுத்தும் இன்னொரு முக்கிய காரணியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மாணவனின் உயிரிழப்பு தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!!

சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீட மாணவனின் மரணம் தொடர்பான தகவலை குற்றப் புலனாய்வு பிரிவு வெளியிட்டுள்ளது.

குறித்த மாணவன் துன்புறுத்தல் காரணமாகவே வீட்டில் உயிரை மாய்த்துக் கொண்டதாக குற்றப் புலனாய்வு பிரிவு நடத்திய விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மன அழுத்தம் காரணமாக மாணவன் உயிரிழக்கவில்லை என குற்றப் புலனாய்வு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழகத்திற்குள் நடைபெறும் துன்புறுத்தல் தொடர்பான விடயங்களை வெளியே வெளிப்படுத்த பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதிக்கவில்லை என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சமீபத்தில் வீட்டில் உயிரை மாய்த்துக் கொண்ட சரித் தில்ஷான் என்ற மாணவன், சம்பவத்திற்கு முந்தைய இரவு முழுவதும் துன்புறுத்தப்பட்டதாக குற்றப் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

துன்புறுத்தல் சம்பவம் தொடர்பாக இலங்கை வழக்கறிஞர்கள் சங்கம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நேற்று முன்தினம் விசாரிக்கவும் நீதிமன்றம் முடிவு செய்தது.

சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் குழுவை மேலும் விளக்கமறியலில் வைக்க பலாங்கொட நீதிமன்றம் உத்தரவிட்டது.

எயார் இந்தியா விமான விபத்தில் 7 மாத கர்ப்பிணிப் பெண்ணும் உயிரிழப்பு!!

இந்தியாவின் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட லண்டனுக்கு ஏர் இந்தியா விமான விபத்தில் இறந்தவர்களில் 7 மாத கர்ப்பிணிப் பெண்ணும் அவரது கணவரும் அடங்குவர் என தகவல் வெளியாகி உள்ளது.

29 வயதான வைபவ் படேலும் அவரது 27 வயது மனைவி ஜினல் கோஸ்வாமியும் தங்கள் வளைகாப்பு விழாவிற்காக அகமதாபாத்திற்குச் சென்றிருந்தனர்.

இந்தத் தம்பதியினர் லண்டனின் குராய்டனில் வசித்து வந்தனர், ஆனால் சமீபத்தில் படேல் பணிபுரிந்த ஹாம்ப்ஷயரில் உள்ள சவுத்தாம்ப்டனில் இருந்து குடிபெயர்ந்தனர்.

இந்நிலையில் தம்பதியினர் தங்கள் முதல் குழந்தையின் பிறப்புக்காக மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருந்ததாக அவர்களின் நெருங்கிய நண்பர் நீரவ் படேல் கூறியுள்ளார்.

உலகை உலுக்கிய தூக்குத் தண்டனை : ஈரானை பழிவாங்கும் 16 வயது சிறுமியின் ஆவி!!

ஈரான் – இஸ்ரேல் மோதல்  தொடர்வதால், மத்திய கிழக்கு பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிற நிலையில் ஈரான் தற்போது எதிர்கொண்டுள்ள இந்த இக்கட்டான நிலைக்கு 16 வயது சிறுமியை தூக்கிகிலிட்டமையே காரணம் என கூறப்படுகின்றது.

இஸ்ரேலிய தாக்குதல்களில் 585 பேர் கொல்லப்பட்டும், 1,326 பேர் காயமடைந்தும் உள்ளதாக மனித உரிமை அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

பல அணு விஞ்ஞானிகளும், ராணுவ அதிகாரிகளும் வான்வழி தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல்கள் தெஹ்ரான் உள்ளிட்ட நகரங்களில் பெரும் பீதியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளன.

இந்த பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், பல ஆண்டுகளுக்கு முன் உலகை உலுக்கிய 16 வயது சிறுமி அடெஃபே சஹாலாஹ்வின் சோகக்கதை சமூக வலைத்தளங்களில் மீண்டும் விவாதிக்கப்படுகிறது.

ஓர் அப்பாவி குழந்தையின் ஆவியால் ஈரான் சபிக்கப்பட்டுள்ளது என்று பலரும் பதிவிட்டு வருகின்றனர். அடெஃபே ஒரு ஆணுடன் பாலியல் உறவு கொண்டதாக ஈரானின் மத ஒழுங்கு காவல்துறை குற்றம் சாட்டியது. இந்த குற்றச்சாட்டின் பேரில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

மேல்முறையீட்டு நீதிமன்றமும் இந்த தீர்ப்பை உறுதி செய்தது. அடெஃபேவின் தாய் சாலை விபத்தில் இறந்துவிட்டார். தந்தை போதைக்கு அடிமையானதால், அவர் தாத்தா பாட்டியுடன் வசித்து வந்தார்.

பாசம் நிறைந்த ஓர் உறவுக்காக ஏங்கியதாக உளவியல் அறிக்கை கூறியது. ஈரானியச் சட்டப்படி, 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்க முடியாது.

எனினும் , அடெஃபேவுக்கு தனிப்பட்ட முறையில் வெறுப்பை கொண்ட நீதிபதி, அவருக்கு மரண தண்டனை விதிப்பதற்காக, ஆவணங்களை திரித்து அவரது வயதை 22 என்று குறிப்பிட்டு மரண தண்டனை நிறைவேற்றினார்.

இந்நிலையில் அந்த சிறுமியின் பாவம் தான் தற்போது ஈரானை பழிவாங்கி வருகிறது என சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.

யாழில் திடீரென மயங்கி விழுந்த குடும்பப் பெண் உயிரிழப்பு!!

காரைநகர் பகுதியில் திடீரென மயங்கி விழுந்து குடும்பப்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.காரைநகர் – களபூமியைச் சேர்ந்த கேதீஸ்வரன் சசிகலா (வயது 50) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண் நேற்று (19.06.2025) காலை கோவிலுக்கு செல்வதற்கு தயாராகிய போது திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

அதனையடுத்து குறித்த பெண் காரைநகர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார வாகனங்களை கொள்வனவு செய்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

மின்சார வாகனங்களை கொள்வனவு செய்யும் போது,பொதுமக்கள் கவனமாக பரிசீலிக்க வேண்டும் என்று இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுபோன்ற பல வாகனங்களின் சந்தை மதிப்பு ஒரு சில மாதங்களுக்குள் பல மில்லியன் ரூபாய்கள் குறையும் என்ற காரணத்தினால் இந்த வலியுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ஊடக சந்திப்பு ஒன்றில், உரையாற்றிய வாகன இறக்குமதியாளர் சங்கத் தலைவர் இந்திக சம்பத் மெரின்சிகே, இது தொடர்பான தகவல்களை பகிர்ந்துள்ளார்.

மின்சார வாகனங்கள் பிரபலமடைந்து வரும் அதே வேளையில், வாகன இறக்குமதி தடை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து,புதிய சவால்களையும் ஏற்படுத்தியுள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரபலமான மின்சார வாகனங்களை தவிர, கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டவுடன், முக்கியமாக சீனாவிலிருந்து அதிக அளவிலான மின்சார வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டன.

எனினும், இந்த வாகனங்களின், சந்தை விலை, கொள்வனவு செய்த மாதங்களுக்குள் இரண்டு முதல் மூன்று மில்லியன் ரூபாய் வரை குறைந்துள்ளன என்று மெரின்சிகே கூறியுள்ளார். இது, சீன மின்சார வாகன சந்தையில் நிலவும் விரைவான மாதிரி மாற்றங்கள் என்று அவர் விளக்கமளித்துள்ளார்.

சீன வாகன தயாரிப்பாளர்கள், ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் புதிய ரக வாகனங்கள் மற்றும் மேம்படுத்தல்களை வெளியிடுகிறார்கள், இது பழைய மாடல்களின் விரைவான மதிப்பிழப்புக்கு வழிவகுக்கிறது.

ஜப்பானிய வாகனங்களில் அவ்வாறான நிலை இல்லை. அந்த நாட்டின் வாகன தயாரிப்பாளர்கள் சிறிய மேம்படுத்தல்கள் இருந்தபோதிலும் நிலையான சந்தை மதிப்பைப் பராமரிக்கிறார்கள் என்றும், வாகன இறக்குமதியாளர் சங்கத் தலைவர் இந்திக சம்பத் மெரின்சிகே, குறிப்பிட்டார்.

20 மில்லியனுக்கு கொள்வனவு செய்யப்பட்ட ஒரு சீன மின்சார வாகனம், ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளுக்குள் அதன் மறுவிற்பனை மதிப்பில், 7 முதல் 8 மில்லியன் ரூபாய்கள் குறையக்கூடும் என்று மெரின்சிகே சுட்டிக்காட்டியுள்ளார்.

காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு!!

குருணாகலில் எஹெட்டுவெவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக எஹெட்டுவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (19.06.2025) அதிகாலை இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் குருணாகல் – மொரகொல்லாகம பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் எஹெட்டுவெவ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக எஹெட்டுவெவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பலரையும் வியக்கவைத்த பெரிய மூக்கு பூனை பார்னி பப்பிள்!!

வடக்கு அயர்லாந்தில் பெரிய மூக்கு கொண்ட பூனை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பூனையின் பெயர் “பார்னி பப்பிள்” என அழைக்கப்படுகிறது.

இந்த பூனைக்கு கிரிப்டோகாக்கஸ் என்ற தொற்றுநோய் ஏற்பட்டதன் காரணமாகவே பூனையின் மூக்கு இவ்வாறு பெரிதாக இருப்பதாக பூனையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது பூனைக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் பூனையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இணைய உலகினை கதிகலங்கச் செய்யும் அதிர்ச்சித் தகவல் : கடவுச் சொற்களை மாற்றுமாறு அறிவுறுத்தல்!!

இணைய உலகினை கதிலங்கச் செய்யக்கூடிய அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இணைய உலகின் மிகப்பெரிய தகவல் திருட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரை பதிவான தகவல் திருட்டுகளில் மிகப்பெரிய அளவிலான தகவல் திருட்டு சம்பவம் இது என தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் இணைய உலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சுமார் 16 பில்லியன் கடவுச்சொற்கள் உள்ளிட்ட முக்கிய தரவுகள் களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 30 பாரிய அளவிலான தரவு தளங்களில் இருந்து இந்த தகவல்கள் கசிந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னணி சமூக ஊடக வலைத்தளங்கள் மற்றும் இணையதளங்களின் தகவல்கள் இவ்வாறு தளவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பயனர் விவரங்கள், கடவுச்சொற்கள் உள்ளிட்ட மிக முக்கியமான தகவல்கள் களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உலகில் சுமார் 5.5 பில்லியன் மக்கள் இணையத்தை பயன்படுத்துவதாகவும் பெரும் எண்ணிக்கையிலான பயனர்களின் தகவல்கள் களவாடப்பட்டு இருக்கலாம் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

பயனர்கள் உடனடியாக தங்களது கடவுச் சொற்களை மாற்றி அமைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு செய்யத் தவறினால் சைபர் குற்றவாளிகள் இந்த கடவுச்சொற்களை பயன்படுத்தி குற்ற செயல்களில் ஈடுபட கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு களவாடப்பட்ட தகவல்களில் தனிப்பட்ட நபர்களின் தரவுகள் மட்டுமின்றி அரசாங்கங்களின் நாடுகளில் அரசாங்கங்களின் தகவல்களும் களவாடப்பட்டு இருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்ரேலியா, கனடா, சீனா, இந்தியா இஸ்ரேல், சவுதி அரேபியா உள்ளிட்ட 29 நாடுகளின் அரசாங்க இணையதள தகவல்களும் களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

களவாடப்பட்ட தகவல்களைக் கொண்டு நேரடியாக பயனர்களின் கணக்குகளுக்குள் பிரவேசிக்க முடியும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம், மைக்ரோசாப்ட், நெட்ப்ளிக்ஸ், பேபால், ரோபோலாக்ஸ் டிஸ்கோர்ட் உள்ளிட்ட முக்கிய இணையதளங்களின் பல்வேறு முக்கியமான தகவல்கள் களவாடப்பட்டுள்ளதாகவும் இவை சுமார் 47 கிகாபைட்ஸ் அளவிலான தகவல்கள் களவாடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பயனர்கள் உடனடியாக தங்களது கடவுச்சொற்களை மாற்றி அமைப்பதன் மூலம் சைபர் தாக்குதல்களில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியும் என சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

எவ்வாறெனினும் இந்த தரவு திருட்டுச் சம்பவம் தொடர்பில் முன்னணி நிறுவனங்கள் தங்களது நிலைப்பாட்டை இதுவரையில் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

70 வயது காதலியிடமிருந்து தங்க நகை திருடிய இள வயது காதலன்!!

மாத்தறை – வாஹல்கட பிரதேசத்தில் 70 வயது காதலியிடமிருந்து தங்க நகை திருடிய இளவயது காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த குற்றச்சாட்டின் கீழ் 30 வயதான காதலனும் அவருக்கு உடந்தையாக செயற்பட்ட 24 வயதான இளைஞனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுமார் 160,000 ரூபாய் மதிப்புள்ள நகைகள் இவ்வாறு திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புத்தளம் வென்னப்புவ பகுதியை சேர்ந்த வயதான பெண், அந்தப் பகுதியில் வீட்டு வேலைகளை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Missed call மூலம் ஏற்பட்ட தொடர்பு சுமார் ஒரு வருடம் நீடித்த நிலையில் அது காதலாக மாறியிருந்தாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதன் சாதகமான பயன்படுத்திய சந்தேக நபரான காதலன், வாஹல்கட குளக்கரைக்கு வயதான பெண்ணை அழைத்து நகைகளை திருடியுள்ளனர்.

இதன்போது இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக வயதான பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை நிறுத்துவது தொடர்பான இறுதி முடிவு வெளியானது!!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை உடனடியாக இடைநிறுத்தப்படாது என்று கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, இன்று (20) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய செனவிரத்ன, 2029 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையை எந்த மாற்றமும் இல்லாமல் நடத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகக் கூறியுள்ளார்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் எதிர்காலத்தை மதிப்பிடுவதற்கும், அது 2029 க்குப் பிறகும் தொடர வேண்டுமா என்பதைத் தீர்மானிப்பதற்கும் 2028 ஆம் ஆண்டில் ஒரு குழு நியமிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பரீட்சையுடன் தொடர்புடைய தேவையற்ற அழுத்தத்தைக் குறைப்பதற்கான ஒரு திட்டத்தை பரீட்சைத் திணைக்களம் தற்போது மேற்கொண்டு வருவதாக பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், பாடசாலைகளுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வுகளை முறையாகக் குறைப்பதற்கும், புலமைப்பரிசில் பரீட்சையின் போட்டித் தன்மையால் மாணவர்கள் மீதான சுமையைக் குறைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மட்டக்களப்புக்கு பெருமை சேர்த்த பெண் மருத்துவர்!!

சர்வதேச பெண்கள் சாதனை விருது பெறும் மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரைபெருநிலம் அம்பிளாந்துறையூரைச் சேர்ந்த மருத்துவர் பாமதி ஞானசெல்வத்திற்கு கிடைத்துள்ளது.

மருத்துவர் பாமதி ஞானசெல்வன் மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான்கரைபெருநிலம் அம்பிளாந்துறையில் பிறந்து உலகப் புகழ் பெற்ற அறுவைச் சிகிச்சை நிபுணராக உள்ள மருத்துவர் ஞானசெல்வத்திற்கு “குயீன் புக்” எனப்படும் சர்வதேச பெண்கள் அமைப்பு இவ்வருடத்துக்கான ‘பெண் சாதனையாளர்’ விருதைக் கொடுத்து கெளரவித்திருக்கிறது.

தற்போது மருத்துவர் பாமதி ஞானசெல்வம் களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் கடமையாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.