கரும்பு காட்டில் மர்மமாக இறந்து கிடந்த 10 வயது சிறுமி : முதியவரிடம் பொலிஸார் தீவிர விசாரணை!!

 

மர்மமாக இறந்து கிடந்த சிறுமி

திருவண்ணாமலை மாவட்டத்தில் பாட்டி வீட்டில் தங்கி படித்து வந்த 10 வயது சிறுமி மர்மமான முறையில் இறந்த கிடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தண்டராம்பட்டு அருகே உள்ள தென்முடியனூரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி விஜயகுமார்.

இவர் தன்னுடைய மனைவி அன்புகுமாரி மற்றும் 8 வயது மகன் பிரபுவுடன் சென்னையில் தங்கி வேலை செய்து வருகிறார். அவருடைய 10 வயது மகள் கீதா, தனது சொந்த ஊரில் இருக்கும் பாட்டி வீட்டில் தங்கி 5ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள கரும்பு காட்டில் கீதா மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் சம்பவம் இடத்திற்கு வந்த பொலிஸார், சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிறுமி என்ன காரத்திற்காக கொலை செய்யப்பட்டார் என்பது பொலிஸாருக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அப்பகுதியை சேர்ந்த கணேசன் என்கிற 60 வயது முதியவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பில் உருவாகும் அதிசயம் : ஆழ்கடலிற்குள் இப்படியொரு மாற்றமா?

 

கொழும்பில் உருவாகும் அதிசயம்

கொழும்பு துறைமுக நகருக்கான நிலத்தை உருவாக்கும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்திருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில் கடலில் நிலம் நிரப்பும் நடவடிக்கை முடிவடைந்துள்ளதை உறுதிப்படுத்தும் வகையில் சில புகைப்படங்கள் டுவிட்டரில் பதிவிடப்பட்டுள்ளன.

இதேவேளை, அங்கு கட்டுமான பணிகள் விரைவில் ஆரம்பமாகும் எனவும், உருவாக்கப்படும் 269 ஹெக்டெயர் நிலப்பகுதியில், 116 ஹெக்ரெயர் நிலமானது சீன நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும் எனவும் தெரியவருகிறது.

இதேவேளை, துறைமுக நகர் எனப் பெயரிடப்பட்ட இந்த திட்டம் தற்போது கொழும்பு நிதி நகரத் திட்டம் என பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஆழ்கடலிற்குள் கடற்கரை உருவாகும் அதிசயம் கொழும்பில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வவுனியாவில் மோட்டார் சைக்கில் விபத்து : ஒருவர் படுகாயம்!!

 

மோட்டார் சைக்கில் விபத்து

வவுனியா புகையிரநிலைய வீதியில் இன்று (16.01.2019) 11.30 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ் விபத்துச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா சைவப்பிரகாச கல்லூரி வீதியிலிருந்து வந்த மோட்டார் சைக்கில் புகையிரநிலைய வீதிக்கு ஏற முற்பட்ட சமயத்தில் புகையிரநிலைய வீதியூடாக வவுனியா நகர் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கில் மோதி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் இப்படியொரு மனிதர்களா? பிரமிக்க வைக்கும் செயல்!!

 

பிரமிக்க வைக்கும் செயல்

மாலியத்த பிரசேத்தில் ஏழ்மையிலும் எடுத்துக்காட்டாக மாறிய குடும்பம் ஒன்று தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. பிரதேசத்தில் பெண் ஒருவர் தொலைத்த 2 பவுண் தங்க சங்கிலி, பென்டன், பணத்தை உரிமையாளரிடம் கொடுப்பதற்கு இந்த குடும்பத்தினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த பொருட்களை தொலைத்த நபரின் குடும்ப உறுப்பினர் ஒருவர் இந்த செயற்பாடு குறித்து பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார். கடந்த வாரம் கதிர்காமத்தில் இருந்து கெகனதுரே பிரதேசத்திற்கு சென்ற எனது தங்கை தனது பையை தொலைத்து விட்டார். அதில் பெறுமதியான நகை, பணம், அடையாள அட்டை, கடன் அட்டை உட்பட பல முக்கியமான பொருட்கள் காணப்பட்டன.

எவ்வளவு தேடியும் அதனை கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியில் மனதை சமாதானப்படுத்தி கொண்டு தேடும் நடவடிக்கையை கைவிட்டோம். இந்நிலையில் நேற்று காலை கடிதம் ஒன்று கிடைத்தது. அடையாள அட்டை ஆவணங்களை பெற்றுக் கொள்ள வருமாறு விலாசம் குறிப்பிடப்பட்டது.

அதில் பெயர், தொலைபேசி இலக்கம் ஒன்றும் காணப்படவில்லை. பணம் நகை அனைத்தையும் எடுத்து கொண்டு அடையாள அட்டை மற்றும் சாரதி அனுமதி பத்திரத்தை மாத்திரம் யாரோ விட்டு சென்றுள்ளார்கள் என நாங்கள் நினைத்தோம்.

பரவாயில்லை என நினைத்து அவ்விடத்திற்கு சென்ற போது கடை நடத்து ஒருவர் பையை எங்களிடம் கொடுத்தார். அதில் அனைத்து பொருட்களும் அப்படியே காணப்பட்டன. கண்களில் கண்ணீர் வந்துவிட்டது. இந்த மனிதாபிமானம் குறித்து கூற வார்த்தையில்லை. அதில் 2 லட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் காணப்பட்டன.

அதனை எடுத்தவர்கள் வைத்து கொள்வதற்கான தேவைகள் அவர்களிடம் அதிகம் காணப்பட்டது. திருப்பி கொடுத்தவர்கள் மிகவும் ஏழ்மையான குடும்பத்தினர். மற்றவர்களின் கழுத்தில் இருப்பதனை பறித்து செல்லும் மக்கள் மத்தியில் இந்த குடும்பத்தினரை பாராட்ட வார்ததைகள் இல்லை” என குறிப்பிடப்பட்டிருந்தது.

வீதி விபத்தில் இரு இளைஞர்கள் பரிதாபமாக பலி!!

 

இரு இளைஞர்கள் பரிதாபமாக பலி

பொலன்னறுவை – தலுகான பகுதியில் நேற்று இடம்பெற்ற வீதி விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். மோட்டார்சைக்கிள் ஒன்றின் மீது ரிப்பர் வாகனம் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இதில் 17 மற்றும் 18 வயதுடைய இளைஞர்களே இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மேலும், இந்த விபத்திற்கு காரணமான ரிப்பர் வாகனம் தப்பிச் சென்றுள்ளதாக அப்பகுதியை சேர்ந்தோர் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் உயிரிழந்த இளைஞர்களையும், அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளையும் மீட்டுள்ளனர். இது தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கி சூடு : தமிழ் இளைஞன் மீது 21 முறை துப்பாக்கி சூடு!!

கொழும்பின் புறநகர் பகுதியான வத்தளையில் கடந்த வாரம் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் இரண்டு தமிழ் இளைஞர்கள் உயிரிழந்தனர்.

போதைப்பொருள் வர்த்தக குழுக்கள் இரண்டிற்கு இடையில் நீண்ட காலம் ஏற்பட்ட முரண்பாட்டுக்கு அமைய இந்த துப்பாக்கி பிரயோம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

டி56 ரக துப்பாக்கி பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழவர்களின் சட்ட வைத்திய அறிக்கை வெளியாகியுள்ளது.

அதற்கமைய உயிரிழந்த 35 வயதான ராஜேந்திரன் எனப்படும் சால்ஸ் என்பவரின் மீது 21 முறை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவரது உடலில் 21 துப்பாக்கி சன்னங்கள் பாய்ந்த காயங்கள் உள்ளதாக கூறப்படுகின்றது.

அவரது வாகனத்தில் பயணித்த 33 வயதான மதி என்ற இளைஞனின் உடலில் 4 துப்பாக்கி பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதனால் அவர் உயிரிந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்துத வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் நடந்த அதிசயம் : இரண்டு மணித்தியாலத்தில் உயிர் தப்பிய நபர்!!

 

நடந்த அதிசயம்

ஹோமாகம வைத்தியசாலையில் அபூர்வ சத்திர சிகிச்சை ஒன்றை இலங்கை வைத்தியர்கள் செய்து சாதனை படைத்துள்ளனர். நபர் ஒருவருக்கு தொண்டைக்கு அருகில் புற்றுநோய் ஏற்பட்டதன் காரணமாக உணவு அருந்த, நீர் பருக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உயிரிழக்கும் ஆபத்து ஏற்பட்டது.

பாணந்துறை பிரதேசத்தை சேர்ந்த மொஹமட் நியாஸ் என்ற 56 வயதுடைய நபரே இந்த நிலைமைக்கு முகம் கொடுத்துள்ளார். எனினும் குறித்த நபருக்கு எவ்வித வெட்டு காயங்களையும் ஏற்படுத்தாமல், அந்த புற்றுநோயை அகற்றுவதற்கு இலங்கை வைத்தியர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Transoral endoscopic transonic தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த சத்திர சிகிச்சைக்குள்ளான நோயாளி இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் உடல்நிலை தேறியுள்ளார். இந்த சத்திர சிகிச்சை இலங்கை வரலாற்றில் மிக முக்கியமான சத்திர சிகிச்சையாக கருதப்படுகின்றது.

ஒரு வயதுக் குழந்தைக்கு கொடூரமாக சித்திரவதை : சந்தேகநபரை தந்திரமாக பிடித்த பொலிஸார்!!

 

கொடூரமாக சித்திரவதை

ஒரு வயதும், பத்து மாதமுமான குழந்தையை சிகரெட்டால் சுட்டு சித்திரவதை செய்த நபர் சியம்பலாண்டுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோத மனைவியின் குழந்தையையே குறித்த நபர் இவ்வாறு கொடூரமாக சித்திரவதை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த சம்பவத்தை பற்றி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருப்பதை அறிந்த சந்தேக நபர் அந்த பிரதேசத்தைவிட்டு தப்பிச் சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அதன் பிறகு, சந்தேக நபர் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், பல தந்திரோபாயங்களை பயன்படுத்தி பெண் பொலிஸ் அதிகாரியை நியமித்து அவருடன் தொலைபேசி ஊடாக ஒரு காதல் தொடர்பை ஏற்படுத்தியுள்ளனர்.

சந்தேக நபர் புதிய காதலியை பார்க்க தொம்பகவெல நகரத்திற்கு வந்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மாத்தறை பிரதேசத்தைச்சேர்ந்த சுகத் என்ற சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சியம்பலாண்டுவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது இந்த மாதம் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதேவேளை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட குழந்தையின் தாயார் தற்போது வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கனடாவில் கொடூரமாக சுட்டுக் கொலை செய்யப்பட்ட இலங்கை தமிழ் இளைஞன்!!

 

தமிழ் இளைஞன்

கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். Scarborough பகுதியில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 36 வயதான லிங்கதாஸன் சுந்தரமூர்த்தி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Kennedy வீதி மற்றும் Highway 401 பகுதிக்கு அருகில் உள்ள 100 Dundalk Drive பகுதியில் உள்ள குடியிருப்பில் சுந்தரமூர்த்தி வாழ்ந்துள்ளார். கடந்த சனிக்கிழமை இரவு பல முறை அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த குடியிருப்பிற்கு அதிகாலையில் பொலிஸார் அழைக்கப்பட்டுள்ளனர். அங்கு பல முறை துப்பாக்கி பிரயோகத்திற்குள்ளான நிலையில் படுகாயமடைந்த நபர் ஒருவரை பொலிஸார் அவதானித்துள்ளனர். உடனடியாக அவரை காப்பாற்றுவதற்கு வைத்தியசாலையில் பொலிஸார் அனுமதித்தனர்.

குறித்த நபரை சுற்றி வளைத்து பலர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட போதிலும், இருவர் மாத்திரமே பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். 17 மற்றும் 25 வயதுடையவர்களே சந்தேக நபர்களாக கொலைச் சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சந்தேக நபர்களுக்கும் உயிரிழந்தவர்களுக்கும் இடையில் தொடர்பிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டவர்கள் இரண்டு வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளதாக குறித்த சம்பவம் தொடர்பில் சாட்சி வழங்கியவர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் டொரொன்டோ பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

15 வயதான மகளை துஸ்பிரயோகம் செய்த தந்தை!!

15 வயதுடைய தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை ஒருவர் 13 ம் திகதி செவனகல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமி தனது தந்தையுடன் தனக்கு தேவையான புத்தகங்கள் வாங்குவதற்கு நகரத்திற்கு சென்று திரும்பி வந்தபோது தந்தை அவளை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் தனது மகளை கரும்பு தோட்டத்திற்கு அழைத்துச் சென்று துஸ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த சிறுமியின் தாயார் அவர்களிடமிருந்து பிரிந்து வாழ்வதாகவும் சிறுமி தனது பாட்டியுடன் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

40 வயதான சந்தேக நபர் எம்பிலிப்பிட்டிய நீதவான் முன் ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 24 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சிறுமி வைத்திய பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் செவனகல பொலிஸார் தெரிவித்தனர்.

23 நாடுகளை சுற்றிய 69 வயது டீக்கடை ஜோடி : வியக்கவைக்கும் சம்பவம்!!

 

வியக்கவைக்கும் சம்பவம்

வாழ்க்கை அழகானது. அதை நாங்கள் அனுபவிக்கிறோம் என கடந்த 12 வருடங்களில் 23 நாடுகளை சுற்றியுள்ள கேரளாவைச் சேர்ந்த ‘டீக்கடை ஜோடி’ உற்சாகத்துடன் தெரிவிக்கிறார்கள். இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி நகரில் ‘ஸ்ரீ பாலாஜி காபி ஹவுஸ்’ என்ற டீக்கடையை நடத்தி வருபவர் 69 வயதான விஜயன்.

இவரது மனைவி மோகனா(67). இவர்களுக்கு திருமணமாகி 45 ஆண்டுகள் ஆகிறது. கொச்சினில் ஏழையாக வாழ்ந்து வரும் இவர்களுக்கு சிறுவயதில் இருந்தே இந்த உலகை சுற்றிப்பார்க்க வேண்டும் என்பதே கனவு என தெரிவிக்கின்றனர்.

ஆனால் அதற்கு பணம் ஒரு தடையாக இருந்துள்ளது. 55 ஆண்டுகளுக்கு முன்பாக அதாவது 1963 ஆம் ஆண்டு, தெருவில் டீக்கடை ஒன்றை ஆரம்பித்த விஜயன், அதன் மூலம் வரும் பணத்தை தன்னுடைய உலகம் சுற்றும் கனவுக்காக சேர்த்து வைத்தார்.

தங்கள் கடைக்கு ஒரு நாளைக்கு 300 லிருந்து 350 வாடிக்கையாளர்கள் வருவார்கள் எனவும் அதன்மூலம் வரும் வருமானத்தை சேகரித்து விரும்பிய இடங்களுக்கு பயணம் மேற்கொள்வோம் எனவும் விஜயன் தெரிவிக்கிறார். இதுகுறித்து விஜயன் கூறுகையில், சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து, நியூயார்க் உள்ளிட்ட நாடுகள் மிகவும் பிடித்தமானவை எனவும்,

பிரேசில், அர்ஜெண்டினா, பெரு உள்ளிட்ட பல நாடுகளுக்கும் சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அடுத்து சுவீடன், டென்மார்க், ஹோலண்ட், கிரீன்லேண்ட், நார்வே உள்ளிட்ட நாடுகள் சுற்றிப்பார்க்க வேண்டும்.

எங்கள் டீக்கடை சுவர் முழுவதும் பல்வேறு நாடுகள் குறித்த போஸ்டர்கள் தான் இருக்கும் எனவும் தெரிவிக்கிறார். இவ்வாறு உலக நாடுகளை சுற்றுவதன்மூலம் தங்களுடையை எண்ணங்களும் கலாச்சாரங்களும் மாற்றமடையும் என கூறுகிறார் விஜயன்.

மேலும் பல்வேறு நாடுகளின் டொலர்களை சேகரித்து வைத்துள்ளார். டீக்கடையின் ஒற்றை வருமானத்தை வைத்து கடந்த 12 வருடங்களில் இதுவரை 23 நாடுகள் சுற்றியுள்ளனர் விஜயன் மோகனா தம்பதியினர்.

தற்போது அர்ஜெண்டினா, பெரு, பிரேசில் நாடுகளை சுற்றிப்பார்த்துவிட்டு இந்தியா திரும்பியுள்ள இவர்கள் நீண்டகால கனவு நிறைவு பெற்றுள்ளது என குறிப்பிடுகின்றனர். மேலும் தங்கள் டீக்கடையில் வேறு யாரையும் பணியமர்த்தவில்லை எனவும் நாங்களே மேனேஜர், நாங்களே வேலையாட்கள் என பெருமையுடன் கூறுகின்றனர்.

மேலும் பயணம் மேற்கொள்ள பணம் போதவில்லை என்றால் வங்கியில் கடன் வாங்குவோம் எனவும் பயணம் சென்று வந்த பின்பு அந்த பணத்தை 3 வருடத்திற்குள் அடைத்துவிட்டு அதன்பின்பு அடுத்த பயணத்திற்கு திட்டமிட்டு பயணிப்போம் என தெரிவிக்கின்றனர்.

வவுனியாவில் குளத்தில் வீழ்ந்து இரு இளைஞர்கள் பலி!!

 

இரு இளைஞர்கள் பலி

வவுனியா ஈரப்பெரியகுளத்தில் இன்று (15.01.2018) மதியம் 1.45 மணியளவில் இரு இளைஞர்கள் குளத்தினுள் தவறி வீழ்ந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா ஈரப்பெரியகுளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈரப்பெரியகுளம் அருகே ஆறு இளைஞர்கள் மதிய உணவு சாப்பிட்டுள்ளார் . அதன் பின்னர் கைகழுவச் சென்ற சமயத்தில் குளத்தினுள் இரு இளைஞர்கள் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்ட இரு இளைஞர்களும் 16 வயது மதிக்கத்தக்கவர்கள் எனவும் இவர்களின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஈரட்டைபெரியகுளம் பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியாவில் குளத்தில் வீழ்ந்து இரு இளைஞர்கள் பலி!!

 

இரு இளைஞர்கள் பலி

வவுனியா ஈரப்பெரியகுளத்தில் இன்று (15.01.2018) மதியம் 1.45 மணியளவில் இரு இளைஞர்கள் குளத்தினுள் தவறி வீழ்ந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா ஈரப்பெரியகுளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈரப்பெரியகுளம் அருகே ஆறு இளைஞர்கள் மதிய உணவு சாப்பிட்டுள்ளார். அதன் பின்னர் கைகழுவச் சென்ற சமயத்தில் குளத்தினுள் இரு இளைஞர்கள் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்ட இரு இளைஞர்களும் 16 வயது மதிக்கத்தக்கவர்கள் எனவும் இவர்களின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஈரப்பெரியகுளம் பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா இறம்பைக்குளம் அந்தோனியார் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற பொங்கல் விழா!!

வவுனியாவில் தைத்திருநாளாம் தைப்பொங்கல் இன மத வேறுபாடு இன்றி கொண்டாடப்பட்டது. அனைத்து இந்து ஆலயங்களிலும் காலையில் பொங்கல் பொங்கி இந்து மக்கள் வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் இந்துக்களின் வீடுகளிலும் பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதேவேளை வவுனியா இறம்பைக்குளம் அந்தோனியார் ஆலயத்தில் கிறிஸ்தவ இளைஞர்கள் மற்றும் பங்குத்தந்தையினால் பொங்கல் பொங்கப்பட்டது.

இதேவேளை வவுனியா பேரூந்து நிலையத்தில் தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தினாலும் முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தினாலும் பொங்கல் பொங்கி பலகாரங்கள் பரிமாறப்பட்டதுடன் வர்த்தக நிலையங்களுக்கு முன்பாகவும் பொங்கல் இடம்பெற்றது.

இதேவேளை வயது வேறுபாடின்றி வெடி கொழுத்தி மக்கள் தங்கள்
மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தனர்.

வவுனியாவில் களைகட்டிய தைப்பொங்கல்!!

 

வவுனியாவில் தைப்பொங்கலை முன்னிட்டு வியாபாரம் களைகட்டியதையடுத்து நகரின் மத்திய பகுதியில் பொங்கல் பொருட்கள் கொள்வனவில் பொதுமக்கள் ஈடுபட்டு வருவதைக் காணக்கூடியதாக உள்ளது. பொலிசார் பாதுகாப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.

தைப்பொங்கல் திருநாள் நாளைய தினம் (15.01) உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படவுள்ள நிலையில் வவுனியாவில் தைப்பொங்கல் பண்டிகை களைக்கட்ட ஆரம்பித்துள்ளதை காணக்கூடியதாகவுள்ளது.

இம்முறை மக்கள் மட்பாண்டப் பொருட்களை கொள்வனவு செய்து வருவது மகிழ்ச்சியளிப்பதாக மண்டபாண்ட உற்பத்தியாளர்களும் வியபாரிகளும் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் கடந்த வருடத்தினைவிட இம்முறை மக்கள் அதிக ஆர்வத்துடன் பொங்கல் பொருட்களைக் கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டி வருவதாக வவுனியா வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவில் மகோற்சவம் -2019 கொடியேற்றதுடன் ஆரம்பம்!(படங்கள்)

வவுனியா நகரில் அமைந்துள்ள அழகிய  அருள்மிகு  ஸ்ரீ கந்தசாமி  கோவிலின்  வருடாந்த  மகோற்சவம் கடந்த 12.01.2019  சனிக்கிழமை பகல் 11.30  மனியளவி  சிவஸ்ரீ  சர்வேஸ்வர  குருக்கள்  தலைமையில்  கொடிஏற்றதுடன்  ஆரம்பமாகியது.

பத்து  தினங்கள் இடம்பெறும்   மகோற்சவத்தில்

  • தேர் –20.01.2019 ஞாயிற்றுகிழமை (காலை 9.00 மணிமுதல்)
  • தீர்த்தம் – 21.01.2019 திங்கட்கிழமை ( காலை 9.00 மணிமுதல்)
  • 22.01.2019 செவ்வாய்க்கிழமை 1008 சங்காபிஷேகமும் காலை 8.30 மணிமுதலும் திருக்கல்யாணம் மாலை 4.30 மணிமுதலும் இடம்பெறவுள்ளன.
மேலும் புதிதாக அமைக்கபெற்ற அழகிய சித்திர தேரின் வெள்ளோட்டம் எதிர்வரும் 19.01.2019 சனிகிழமை பி.ப௧ல்.1.00 மணியளவில் இடம்பெறவுள்ளது.