ஐபோனுக்காக உயிரை விட்ட இளம் யுவதி : கொழும்பில் நடந்த துயரம்!!

கொழும்பை அண்டிய புறநகர் ஒன்றில் ஐபோன் கிடைக்காமையினால் 17 வயது யுவதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பிலியந்தலை பிரதேசத்தை சேர்ந்த 17 வயதான யுவதி ஒருவர் உடலில் மண்ணெண்ய் ஊற்றி தீயிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

உயிரிழந்த மகள் தொடர்பில் கொழும்பு மரண விசாரணை பிரிவிடம் தந்தை வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

“உயிரிழந்தவர் என முதல் பிள்ளையாகும். அவர் சற்று அடம்பிடிக்கும் குணமுடையவர். பல முறை வீட்டில் சண்டடையிட்டு வீட்டை விட்டுச் சென்றுள்ளார். பின்னர் பொலிஸாரின் உதவியுடனே அவரை கண்டுபிடித்தோம்.

பொலிஸ் அதிகாரிகளே அவருக்கு ஆலோசனை வழங்கி எங்களிடம் அனுப்பி வைத்தார்கள். இறுதியாக மகள் ஐபோன் ஒன்று கேட்டார். அவரது நிலை அறிந்தமையினால் ஐபோன் ஒன்றை கொள்வனவு செய்து கொடுக்க தீர்மானித்தோம்.

இன்னும் இரண்டு நாட்களில் பெற்றுத் தருவாக கூறிவிட்டு அதற்கு தேவையான பணத்தை தேடி கொண்டிருந்தோம். எனினும் அவர் அதற்கு முன்னர் கோபத்தில் உடலில் மண்ணெண்ய் ஊற்றி கொண்டு தாயின் முன்னால் சென்று தீயிட்டு கொண்டார்.

தான் ஐபோன் கிடைக்காதென நினைத்து தாயை அச்சுறுத்துவதாக இந்த வேலை செய்தாக கூறினார். அவரை காப்பாற்றி களுபோவில வைத்தியசாலைக்கு அழைத்து சென்றோம். அந்த வைத்தியசாலையில் இருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அவரை மாற்றி அனுப்பினார்கள். எனினும் மகளை காப்பாற்ற முடியவில்லை என தந்தை கூறியுள்ளார்

முன்னாள் போராளி வீட்டிலிருந்து பசு மாட்டினை திருடிச் சென்ற நபர்கள் செய்த மோசமான காரியம்!!

கிளிநொச்சியில் பெண் தலைமைத்துவ குடும்பமொன்றுக்கு வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்ட பசு மாட்டினை, அடையாளம் தெரியாத நபர்கள் இரவோடு இரவாக திருடிச் சென்று இறைச்சிக்காக வெட்டியுள்ளனர்.

ஜெயந்திநகரில் அமைந்துள்ள வீட்டு வளவில் கட்டப்பட்டிருந்த பசுவினை நேற்று முன்தினம் இரவு திருடிச் சென்ற அடையாளம் தெரியாத நபர்கள் ஜெயந்திநகர் மீனாட்சி அம்மன் கோவிலருகில் வைத்து வெட்டி இறைச்சியினை எடுத்துவிட்டு எச்சங்களை விட்டுச் சென்றுள்ளனர்.

முன்னாள் போராளியும், இரண்டு பிள்ளைகளின் தாயுமான குறித்த பெண்ணுக்கு வழங்கப்பட்ட பசுவே களவெடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் நிரந்தரமாக குடியேற விரும்புபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

அவுஸ்திரேலியாவில் நிரந்தர வதிவிடம் பெறுவதற்கான விசா நடைமுறையை அந்த நாட்டு அரசாங்கம் இன்னமும் இறுக்கமாக்கலாம் என குடியுரிமை தொடர்பான அமைச்சர் Alan Tudge மறைமுகமாக கூறியுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில்,

அவுஸ்திரேலியாவிற்குள் வரமுன்னரேயே பலருக்கு நிரந்தர வதிவிட உரிமை கிடைத்துவிடுவதாக தெரிவித்துள்ள அவர், இது தொடர்பில் மேலதிகமாக ஆலோசிக்க வேண்டியுள்ளதுடன், ஒருவருக்கு நிரந்தர வதிவிட உரிமை வழங்க முதல், அவர் அவுஸ்திரேலிய விழுமியங்களை அறிந்துகொள்ளும் வகையில் பரீட்சைக்கு முகங்கொடுக்க வேண்டுமென கூறியுள்ளார்.

தற்போதைய நடைமுறையின்படி அவுஸ்திரேலியாவில் சில வருடங்கள் வாழ்ந்த பின்னர் நிரந்தர வதிவிட உரிமை வழங்கப்படும் வகையில் ஒருபகுதி விசாக்கள் அமைந்துள்ளன. ஆனால் மீதி விசாக்கள் ஊடாக அவுஸ்திரேலியாவுக்குள் வரமுதலே நிரந்தரவதிவிட உரிமையைப் பெற்றுக்கொள்ளலாம்.

குறிப்பாக அவுஸ்திரேலியாவில் நிரந்தரமாக குடியேறுவதற்கான வழிகளாக Skilled Migration விசா மூன்றில் இரண்டு பாகமாகவும், பெற்றோர், மனைவி, பிள்ளைகளுக்கான குடும்ப விசாக்கள் மூன்றில் ஒரு பாகமாகவும் காணப்படுகின்றன.

இந்தப் பின்னணியில் அவுஸ்திரேலியாவில் குடியேறுவதற்கு முன்னரேயே நிரந்தர வதிவிடம் பெறுபவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில், விசா நடைமுறைகளில் அவுஸ்திரேலிய அரசாங்கம் மேலும் இறுக்கமான கட்டுப்பாடுகளைக் கொண்டுவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை வருடமொன்றுக்கு 190,000 பேர் நிரந்தரமாக குடியேறுவதற்கான அனுமதி வழங்கப்படும் நிலையில், கடந்த ஆண்டு 162,000 பேருக்கே இதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்ததாக அவுஸ்திரேலிய ஊடகம் தெரிவித்துள்ளது.

கட்டுநாயக்க விமான நிலைய நீர்தொட்டியில் சிக்கிய மர்மம்!!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிநீர் தொட்டிக்கு பின்னால் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபா பெறுமதியான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

2 கோடி ரூபாய் பெறுமதியான தங்க பிஸ்கட்கள் 28, விமான நிலையத்தின் சுங்க பிரிவின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிநீர் தொட்டிக்கு பின்னால் மறைத்து வைக்கப்பட்டிருந்த பையிலேயே இந்த பிஸ்கட்கள் மீட்கப்பட்டுள்ளதாக சுங்க பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

விமான நிலையத்தில் தீர்வை வரியற்ற கடையின் ஊழியர் ஒருவரினால் இந்த பார்சல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தங்க பிஸ்கட்களை புகையிலை சுற்றும் பையில் சுற்றி மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் சிகிச்சை பலனின்றி 6 வயதுச் சிறுமி உயிரிழப்பு!!

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 6 வயதான சிறுமி ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த ஷர்மிளரூபன் யக்ஷிதா என்ற 6 வயதுச் சிறுமி கடந்த 18ம் திகதி திடீரென்று மயக்கமுற்ற நிலையில் அவரை வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்துள்ள நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுமி பிறந்த சில நாட்களில் அவசியத் தேவை கருதி சத்திரசிகிச்சைக்குட்படுத்தப்பட்டிருந்தார். எனினும் அதன் பின்னர் வழமைக்குத்திரும்பியதுடன் உடல் ஆரோக்கியமாகவே காணப்பட்டுள்ளார்.

திடீரென்று மயக்கமுற்ற நிலையில் அவரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதி தீவிரசிகிச்சைப்பிரிவில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் மூளையில் கிருமித்தாக்கம் ஏற்பட்டதன் காரணமாகவே உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.

வவுனியாவில் இவ்வாறு சிறுவயதில் சிறுமிகள் உயிரிழப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இரு சகோதர சிறுமிகள் அண்மையில் குருமன்காட்டுப் பகுதியில் நோய்த்தாக்கம் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் உயிரிழந்த நிலையில் யானையின் உடல் மீட்பு!!

வவுனியா கனகராயன்குளம் காட்டுப்பகுதியிலிருந்து நேற்று (19.07.2018) மாலை உயிரிழந்த நிலையில் யானையின் எச்சங்களை கனகராயன்குளம் பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்

கனகராயன்குளம் பகுதியில் அமைந்துள்ள வயலுக்கு நேற்று காலை விவசாயிகள் சிலர் காட்டுப்பகுதிக்கு சென்றிருந்த சமயத்தில் உயிரிழந்த நிலையிலிருந்த யானையின் எச்சங்களை கண்டுள்ளனர்.

இதையடுத்து கனகராயன்குளம் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதுடன் பொலிசார் வனஜீவராசிகள் திணைக்களத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டு சம்பவ இடத்திற்குச் சென்று இது குறித்த விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் குறித்த யானை இறந்திருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.

உயிரிழந்த யானையின் சில பாகங்கள் உடற்கூற்று பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் அதிரடி நடவடிக்கை!!

வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபைக்குட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி கட்டிடங்கள் கட்டப்படுவதாக வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளர் து.நடராஜசிங்கம் (ரவி) அவர்களுக்கு பொதுமக்களினால் விடுக்கப்பட்ட முறைப்பாட்டினையடுத்து உடனடியாக தடுத்து நிறுத்தியுள்ளார்.

வவுனியா தெற்கு பிரதேச சபைக்குட்பட்ட கூமாங்குளம் , நெளுக்குளம், தாஸ்கோட்டம் பகுதிகளில் அனுமதியின்றி கட்டிடங்கள் கட்டப்படுவதாக கடந்த சில தினங்களாக மக்கள் மேற்கொண்ட முறைப்பாட்டினையடுத்து வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளர் து.நடராஜசிங்கம் (ரவி) அவர்களின் உத்தரவின் பேரின் இன்று (20.07.2018) காலை நெளுக்குளம் , தாஸ்கோட்டம் பகுதியில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிட வேலைகளை வவுனியா தெற்கு பிரதேச சபை உத்தியோகத்தர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இச் செயற்பாடு மக்கள் மத்தியில் பாரிய வரவேற்பினை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா தெற்கு பிரதேச சபைக்குட்பட்ட பொதுமக்கள் அனுமதியினை பெற்று கட்டிடங்கள் , சுற்றுமதிகள் என்பவற்றினை அமைக்குமாறும் அனுமதியின்றி கட்டப்படும் கட்டிடங்களின் உரிமையாளருக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளர் து.நடராஜசிங்கம் (ரவி) தெரிவித்தார்.

வவுனியாவில் கடும் வறட்சி : பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் வழங்கல்!!

வவுனியா பிரதேச செயலகத்தினால் வறட்சி காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாக வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கும்போது,

தற்போது வவுனியா பிரதேசத்தில் வறட்சியினால் பாதிக்கப்பட்ட நெளுக்குளம் பகுதிக்கு பிரதேச செயலகம் மற்றும் தமிழ் தெற்கு பிரதேச சபையின் உதவிகளுடன் தண்ணீர் தொட்டிகள் அப்பகுதிகளில் வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு குடி நீர் வழங்கப்பட்டு வருகின்றன.

மகாறம்பைக்குளம், ஆச்சிபுரம், ஈஸ்வரிபுரம் போன்ற பகுதிகளிலும் குடிநீருக்குத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இப்பகுதிகளுக்கும் குடிநீரை வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வவுனியாவில் மழை இன்மை காரணமாக இப்பகுதிகளிலுள்ள குளங்கள், கிணறுகளில் தண்ணீரின் மட்டம் குறைந்தளவில் காணப்படுகின்றது. இதனால் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மழை இன்மையால் மேலும் பல பகுதிகளில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் அதிகளவில் காணப்படுகின்றதாக மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் கற்பிணித்தாய்மாருக்கு பாவனைக்கு உதவாக சத்துணவுப் பொருட்கள்!!

வவுனியா, ஈச்சங்குளம் பகுதியிலுள்ள பலநோக்குக்கூட்டுறவுச் சங்கத்தினால் கற்பிணித்தாய்மாருக்கு விநியோகம் செய்யப்பட்ட சத்துணவுப் பொருட்கள் பாவனைக்கு உதவாத நிலையில் காணப்பட்டுள்ளது.

இதையடுத்து கிளை முகாமையாளர், பொதி செய்யும் முகாமையாளருக்கு எதிராக ஓமந்தை பொது சுகாதாரப்பரிசோதகரினால் பாவனைக்கு உதவாத சத்துணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக வழங்குத்தாக்கல் செய்யப்பட்டது.

இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு இருவருக்கும் எதிராக நீதவான் நீதிமன்றத்தில் தண்டம் அறிவிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

கடந்த செவ்வாய்க்கிழமை ஓமந்தை பொது சுகாதாரப்பரிசோதகர் க. சிவரஞ்சன், க.வாகீசன் ஆகியோர் ஈச்சங்குளம் பலநோக்குக்கூட்டுறவுச் சங்கத்தில் தமது வழமையான பரிசோதனை நடவடிக்கை மேற்கொண்டபோது அப்பகுதியில் 100ற்கும் மேற்பட்ட கற்பிணித்தாய்மாருக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வரும் சத்துணவுப் பொருட்கள் பொதி செய்யப்பட்டு விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன.

94 பொதிகளில் பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது 116 கிலோ பயறு, 58கிலோ கௌப்பி போன்ற பொருட்களில் வண்டு மொய்த்து பாவனைக்கு உதவாத நிலையில் காணப்பட்டுள்ளது.

இதையடுத்து பாவனைக்கு உதவாத நிலையில காணப்பட்ட உணவுப் பொருட்களைக் கைப்பற்றி கிளை முகாமையாளருக்கு எதிராக வழங்குத்தக்கல் செய்யப்பட்டது.

இன்று வவுனியா நீதவான் நீதிமன்றத்தினால் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ஈச்சங்குளம் பலநோக்குக்கூட்டறவுச்சங்கத்தின் கிளை முகாமையளருக்கும் பலநோக்குக்கூட்டறவுச்சங்கத்தின் பொதி செய்யும் முகாமையாளருக்கும் தலா 12 ஆயிரம் ரூபா தண்டமாக அறவிடப்பட்டுள்ளது.

பாவனைக்கு உதவாக பொருட்களை அழித்தொழிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக ஓமந்தை பொது சுகாதாரப்பரிசோதகர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஒரு மாதத்தில் திருமணம்… இளம்பெண்ணின் கழுத்தை அறுத்து படுகொலை செய்த இளைஞர்!!

தமிழகத்தின் பழநியில் ஒருதலைக்காதலால் ஓடும் ஆட்டோவில் கழுத்து அறுக்கப்பட்ட ஆசிரியை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துள்ளார்.

இதுதொடர்பாக அவரது அண்ணன் முறையுள்ள இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், தில்லையாடி வள்ளியம்மை தெருவை சேர்ந்த பகவதி என்பவரின் மகள் பவித்ரா(24).

தனியார் பள்ளி ஆசிரியையாக பணியாற்றிவருகிறார். நேற்று முன்தினம் இரவு ரயில்வே பீடர் சாலையில் இருந்து ஆட்டோவில் ஒரு இளைஞருடன் சென்றுள்ளர்.

பழைய அடிவாரம் காவல் நிலையம் அருகே வந்தபோது, உடன் வந்த இளைஞர் பவித்ராவின் கழுத்தை அறுத்து விட்டு, ஓடும் ஆட்டோவில் இருந்து கீழே குதித்து ஓடியுள்ளார்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த பவித்ராவை அந்த ஆட்டோ ஓட்டுநர், பழநி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பவித்ரா, நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக பழநி அடிவாரம் பொலிசார் கொலை வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், பவித்ராவின் கழுத்தை அறுத்த இளைஞர், பழநி நெய்க்காரப்பட்டியை சேர்ந்த மில் தொழிலாளி மாயவன் (26), உறவு முறையில் பவித்ராவுக்கு அண்ணன் என தெரியவந்தது.

மாயவன் ஒருதலையாக பவித்ராவை காதலித்துள்ளார். அண்ணன் முறை என்பதால் அவரது காதலை பவித்ரா ஏற்க மறுத்துள்ளார். மேலும், இவருக்கு வேறு ஒருவருடன் நிச்சயிக்கப்பட்டு ஒரு மாதத்தில் திருமணம் நடக்க இருந்தது.

இதனால் ஆத்திரமடைந்த மாயவன், பவித்ராவின் கழுத்தை அறுத்து கொலை செய்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது. தலைமறைவாக இருந்த மாயவனை பழநி அடிவாரம் பொலிசார் நேற்று மாலை கைது செய்தனர்.

பேரக்குழந்தைகள் உள்ள நிலையில் குழந்தை பெற்றெடுத்த தம்பதி : கிண்டலுக்கு பயந்து எடுத்த அதிர்ச்சி முடிவு!!

மேற்கு வங்க மாநிலத்தில் பேரக்குழந்தைகள் தங்களை கிண்டல் செய்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் தங்களுக்கு பிறந்த குழந்தையை பெற்றோர் கொலை செய்துள்ளனர்.

கூச்பெஹார் மாவட்டத்தை சேர்ந்த ராம்(47) என்ற கூலித்தொழிலாளிக்கு திருமணமாகி 3 மகள்கள், 2 மகன்கள் மற்றும் பேரக்குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், ராமின் மனைவி கர்ப்பமானதையடுத்து இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில், குடும்ப உறுப்பினர்கள் தங்களை கிண்டல் செய்வார்கள் என்ற அச்சத்தில் இருந்த தம்பதி, பிறந்த பெண் குழந்தையை கொன்று உறவினர் வீட்டின் அருகே உள்ள குளத்தில் தூக்கி போட்டுள்ளனர்.

அந்த ஊர் பொதுமக்கள் குளத்தில் மிதந்த குழந்தையின் உடலை கண்டு அதிர்ச்சியடைந்து பொலிசில் தெரிவித்ததையடுத்து, இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஜல்பைகுரியில் உள்ள நீதிமன்றத்தில் நிறுத்தினர்.

இவர்களுக்கு 3 நாட்கள் பொலிஸ் காவல் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

நடிகை பிரியங்காவின் தற்கொலைக்கு பணம் தான் காரணமா? கணவருடன் நடந்த போட்டி!!

பிரபல தனியார் தொலைக்காட்சிகள் மற்றும் தமிழ் தொடர்களில் நடித்து வந்த நடிகை பிரியங்கா கடந்த 18 ஆம் திகதி வளசரவாக்கத்தில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பிரியங்காவின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு மதுரையில் உள்ள அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

பிரியங்காவின் மரணத்தில் அவர் கடிதம் எதுவும் எழுதிவைக்காத காரணத்தால், அவரது கணவரிடம் விசாரணை மட்டும் தற்போது நடைபெற்று வருகிறது.

இவர்கள் இருவருக்குமிடையே குடும்ப பிரச்சனை அதிகம் இருந்ததாக கூறப்படுவதால், பிரியங்காவின் கணவரிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், பிரியங்கா தனது கணவரை விட அதிகமாக பணம் சம்பாதித்துள்ளார். தொலைக்காட்சி தொடர்கள் தவிர, அழகு நிலையம் வாயிலாகவும் வருமானம் ஈட்டியுள்ளார். ஆனால், கணவர் அருண்குமாருக்கு அந்த அளவுக்கு வருமானம் கிடையாது. இதனால், நீ அதிகமாக சம்பாதிக்கிறாயா? நான் அதிகமாக சம்பாதிக்கிறேனா? என இவர்கள் இருவருக்குக்கும் இருந்த போட்டியின் காரணமாக குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

எனவே, பிரியங்காவின் தற்கொலைக்கு பணம் தான் காரணமா? என்ற சந்தேகத்தில் அடிப்படையில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

7 மாத கர்ப்பிணியின் வயிற்றில் எட்டி உதைத்த பெண் : அடுத்து நடந்த விபரீதம்!!

தமிழ்நாட்டில் கர்ப்பிணியாக இருந்த அங்கன்வாடி சமையலர் வயிற்றில் சத்துணவு அமைப்பாளர் எட்டி உதைத்ததால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சமையலராக உள்ளவர் தனலட்சுமி.

7 மாத கர்ப்பிணியான தனலட்சுமி சத்துணவு அமைப்பாளர் உமா அரிசி, முட்டை போன்றவற்றை வெளியே கொண்டு சென்று விற்பதாக உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வியாழனன்று இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் கர்ப்பிணி என்றும் பாராமல் தனலட்சுமியை உமா வயிற்றில் எட்டி உதைத்தாக சொல்லப்படுகிறது.

இதில் சுருண்டு விழுந்த தனலட்சுமி, உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

புகாரின் அடிப்படையில் ராசிபுரம் பொலிசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எஜமானை எரித்து கொலை செய்தது ஏன்? வேலைக்கார பெண்ணின் அதிர்ச்சி வாக்குமூலம்!!

சென்னையில் செல்போன் வியாபாரி எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அவரது வீட்டில் வேலைபார்த்த வேலைக்கார பெண் பொலிசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சுல்தான் என்பவர் செல்போன் உதிரிபாகங்கள் விற்பனையுடன், ரியல் எஸ்டேட் புரோக்கர் தொழிலும் செய்துவந்தார்.

இவர் கடந்த 18 ஆம் திகதி கை, கால்களை கட்டிப்போட்ட நிலையில் பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதுகுறித்து பொலிசார் விசாரணையி சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. சுல்தானுடன் கடைசியாக வேலைக்கார பெண் ரெனியாபானு பேசியுள்ளார்.

இதுகுறித்து ரெனியாவிடம் பொலிசார் விசாரணை நடத்தியபோது அவர் அளித்த வாக்குமூலத்தில், எனக்கு முகமது சுல்தான் பாலியல் தொல்லை கொடுத்ததால் இதுபற்றி எனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட இமாமுதீனிடம் கூறினேன்.

இமாமுதீன் , முகமது சுல்தானிடம் இதுதொடர்பாக பேசினார். அப்போது எங்களை முகமது சுல்தான் மிரட்டினார். எங்களை அவர் வாழவிடமாட்டார் என்பதால் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தோம்.

இதையடுத்து 18 ஆம் திகதி மாலை வீட்டிற்கு சென்று முகமது சுல்தானின் கை, கால்களை கட்டிப்போட்டு, பெட்ரோல் ஊற்றி எரித்து கொலைசெய்துதோம் என கூறியுள்ளார். தற்போது இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தோழிக்கு அனுப்பிய அந்த கடைசி மெசேஜ் : இளம்பெண் மரணத்தில் அதிரடி திருப்பம்!!

விமான பணிப்பெண் தற்கொலை விவகாரத்தில் அவர் கடைசியாக தோழிக்கு அனுப்பிய மெசேஜ் மேலும் சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.

டெல்லியை சேர்ந்த அனிசியா பத்ரா தனது கணவர் மாய்ங்க் சிங்வியுடன் வசித்து வந்த நிலையில் கடந்த 13ம் திகதி வீட்டு மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இறப்பதற்கு முன்னால் தனது கணவர் மாயங்க் சிங்விக்கு தான் இறக்க போவதாக செல்போனில் மெசேஜ் அனுப்பியதாக பொலிசார் ஏற்கனவே தெரிவித்தனர்.

மேலும், திருமணமானது முதலே வரதட்சணை கேட்டு மனைவியை மாயங்க் அடித்து கொடுமைப்படுத்தியதாகவும், அவர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் பத்ரா குடும்பத்தார் பொலிசிடம் கூறியிருந்தனர்.

இந்நிலையில் பத்ரா இறப்பதற்கு முன்னர் தனது தோழிகளுக்கு மெசேஜ் அனுப்பியது தெரியவந்துள்ளது.

இது குறித்து பத்ராவின் தோழியை பொலிசார் விசாரித்துள்ளனர். அவர் கூறுகையில், பத்ரா இறப்பதற்கு முன்னர் அவர் கணவர் எனக்கு போன் செய்தார்.

அவர்கள் பிரச்சனை எனக்கு தெரியும் என்பதால் நான் சமாதானம் செய்தேன். பின்னர் மாலை 3.56 மணிக்கு பத்ரா எனக்கு மெசேஜ் அனுப்பினார். அதில், தன்னை அறையில் அடைத்து வைத்திருப்பதாகவும் இது குறித்து பொலிசில் சொல் என கூறினார்.

நான் டெல்லியில் இல்லாததால் உடனடியாக என்னால் உதவ முடியவில்லை, நீ தோழி வீட்டுக்கு தப்பி சென்றுவிடு என கூறினேன்.

சிறிது நேரத்தில் மீண்டும் வந்த மெசேஜில் இந்த முடிவை எடுப்பதற்கு நான் தள்ளப்பட்டுவிட்டேன். நடந்ததை இனி சரி செய்ய முடியாது என கூறப்பட்டிருந்தது என தெரிவித்துள்ளார்.

தோழியின் வாக்குமூலத்தை வைத்து பத்ரா தற்கொலை செய்தாரா அல்லது கொல்லப்பட்டாரா என பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.

மனைவி, மகன்களை படுகொலை செய்த கணவன் : அதிர்ச்சி சம்பவம்!!

தமிழ்நாட்டில் குடிபோதையில் தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களை படுகொலை செய்த திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மகனை பொலிசார் தேடிவருகின்றனர்.

தஞ்சையின் அன்னப்பன்பேட்டை பகுதியில் திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செல்லப்பனின் மகன் ஜெயக்குமார் வசித்து வருகிறார்.

நேற்று குடிபோதையில் வீட்டிற்கு வந்த ஜெயக்குமார் தனது மனைவி அனிதாவை மண் வெட்டியால் வெட்டியுள்ளார்.

தனது தாயாரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த 9 வயதான தினேஷ் மற்றும் 7 வயது தருண் ஆகியோரையும் ஜெயக்குமார் வெட்டியுள்ளார்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த 3 பேரையும் அப்பகுதி மக்கள் மருத்துவமனையில் சேர்ந்த்தனர். படுகாயம் அடைந்த 3 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இதையடுத்து தலைமறைவாக உள்ள ஜெயக்குமாரை பொலிசார் தேடி வருகிறார்கள்.