வவுனியா விபத்தில் முதியவர் படுகாயம்!!

வவுனியாவில் இன்று (10.07.2018) காலை இடம்பெற்ற விபத்து ஒன்றில் மோட்டார் சைக்கிளில் சென்ற முதியவர் ஒருவர் வீதியில் சென்ற மாட்டுடன் மோதி படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையின் விபத்துப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இன்று காலை7.15 மணியளவில் வவுனியா முதலாம் குறுக்குத் தெரு சூசைப்பிள்ளையார்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வீதியில் சென்ற முதியவர் மாடு ஒன்று வீதியில் குறுக்கச் சென்றதில் மாட்டுடன் மோதிய விபத்தில் படுகாயமடைந்துள்ளதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்தில் படுகாயமடைந்த மகேஸ்வரன் என்ற 71 வயதுடைய முதியவர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து இடம்பெற்றதில் சற்று அதிர்ச்சியடைந்த நிலையில் காணப்படும் முதியவரை விபத்துப்பிரிவில் அனுமதித்த வைத்தியர்கள் தொடர்ந்து சிகிச்சையளித்து வருகின்றனர்.

இவ்விபத்து தொடர்பான விசாரணைகளைப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

வவுனியா குருமன்காடு வீதி திருத்தும் பணிகள் இடைநிறுத்தம் : காரணம் என்ன?

வவுனியா குருமன்காடு காளிகோவில் வீதியிலிருந்து செல்லும் பிரதான வீதி கடந்த ஒரு மாதகாலமாக தோண்டப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. இதனால் இரவு வேளைகளில் பயணம் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன் பகல் வேளைகளிலும் பேருந்துகள் செல்வதில் பல நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக பயணிகள் தெரிவித்துள்ளார்கள்.

வவுனியா கருமன்காடு காளிகோவில் வீதியிலிருந்து செல்லும் பிரதான வீதியின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் கடந்த ஒருமாத காலத்திற்கு முன்னர் செப்பனிடுவதற்காக அப்பகுதி தோண்டப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.

இன்று வரையில் அதை நிரவி பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வதற்கு அனுமதிக்கவில்லை. இதனால் அவ்வீதியால் செல்லும் கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன் விபத்துக்களும் ஏற்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்கள், ஆடைத் தொழிற்சாலை வாகனங்கள், அரச திணைக்களங்களுக்குச் செல்லும் ஆசிரியர்கள், அதிபர்கள் அதிகாரிகள் பெரும் நெருக்கடி நிலையில் தமது பயணத்தை எதிர்கொண்டுள்ளனர்.

வவுனியா நகரசபையினரால் ஒப்பந்ததாரரிடம் வழங்கப்பட்டுள்ள இவ்வீதி திருத்தும் பணிகள் கடந்த ஒரு மாதகாலமாக திருத்தி முடிக்கப்படவில்லை என்றும் இதனை உடனடியாக திருத்தி பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கோரியுள்ளார்கள்.

இவ்விடயம் தொடர்பாக நகரசபைதலைவரிடம் தொடர்புகொண்டு வினவியபோது,

வவுனியா கருமன்காட்டு காளிகோவில் வீதி பணிகள் இடை நடுவே நிறுத்தப்பட்டுள்ளதாக நேற்றே எமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. இது தொடர்பாக தொழில்நுட்ப உத்தியோகத்தர், ஒப்பந்ததாரர் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பணிகளை உடன் துரிதப்படுத்துமாறும் வவுனியா நகரசபைத்தலைவர் இ.கௌதமன் தெரிவித்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட தமிழ் இளைஞனின் மரண வீட்டிற்கு சென்று செல்பி எடுத்த பிரபல நடிகர்!!

மதவாதத்தை அப்புறப்படுத்துவோம் என்று போராடிய தமிழ் இளைஞன் அபிமன்யூவின் மரணம் கேரளாவை உலுக்கியுள்ளது.

இடுக்கியில், ஏழ்மையான தமிழ் குடும்பத்தை சேர்ந்த அபிமன்யூ எர்ணாகுளம் மகாராஜா கல்லூரியில் இரண்டாமாண்டு வேதியியல் படித்து வருகிறார்.

கல்லூரியில் புதிதாக சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும்விதமாக அக்கல்லூரியின் சுவரில் போஸ்டர் ஒட்டுவது தொடர்பாக இருபிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஏற்பட்ட தகராறில், அபிமன்யூவின் கரங்களைப் பின்புறமாக பிடித்து கட்டி வைத்து கத்தியால் அவனின் மார்பை பிளந்து கொடூரமாக கொலை செய்துள்ளனர் மதவாதிகள்.

கொலை தொடர்பாக கேம்பஸ் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ளவர்களை பொலிசார் தேடி வருகின்றனர்.

அபிமன்யூவின் இந்தக் கொடுர மரணம் கேரளத்தை உலுக்கி எடுத்திருக்கிறது.

இந்நிலையில் பா.ஜ.க. எம்.பி.யும், பிரபல நடிகருமான சுரேஷ் கோபி மாணவர் அபிமன்யுவின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். ஆறுதல் கூறிவிட்டு வெளியே வருகையில் அவரைக் காண வந்திருந்த தொண்டர்களுடன் சிரித்தபடி சுரேஷ் கோபி செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

மரண வீட்டில் செல்ஃபி எடுத்ததற்கு கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரும் சுரேஷ்கோபியின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

நரபலி கொடுக்கப்பட்ட சகோதரர்கள் : அதிர்ச்சியூட்டும் பின்னணி தகவல்கள்!!

நாமக்கல் அருகே பரிகார பூஜை செய்வதாக கூறி சகோதரர்கள் இருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில், வாழையில் முட்டை, குங்குமம் மற்றும் இதர பூஜை பொருட்கள் வைக்கப்பட்ட நிலையில், அருகில் இருவரின் சடலங்களும் கிடப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து விரைந்து சென்ற பொலிஸார், அங்கிருந்த பொருட்களை கைப்பற்றி ஆராயும்பொழுது, மஞ்சள் பை ஒன்றில் சிவப்பிரகாசம் என்பவரின் புகைப்படம் இருந்துள்ளது.
அதை கைப்பற்றிய காவல்துறையினர் புகைப்படத்தில் இருப்பவர் குறித்து விசாரணையை மேற்கொள்ளும்பொழுது, காலையில் சாமியார் வேடத்தில் வந்து, சகோதரர்களுக்கு யாரோ செய்வினை வைத்திருப்பதாகவும், அதற்கு பரிகார பூஜை செய்ய வேண்டும் என கூறி அழைத்து சென்றதாகவும் கூறினார்.

இதனையடுத்து சிவப்பிரகாசத்தை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், கிருஷ்ணன் என்பவருக்கும், கொலைசெய்யப்பட்ட சகோதரர்கள் முத்துசாமி, சீரங்கனுக்கு இடையே நிலத்தகராறு இருந்ததாகவும், அவர் கொடுத்த திட்டத்தின் அடிப்படையிலே கொலை செய்யப்பட்டதாக வாக்குமூலம் கொடுத்தார். இதனையடுத்து கிருஷ்ணனையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவியிடம் காதல் கடிதம் கொடுக்க மறுத்த மாணவனை பெட்ரோல் ஊற்றி எரித்த அதிர்ச்சி சம்பவம்!!

இந்தியாவில் மாணவியிடம் காதல் கடிதம் கொடுக்க மறுத்த சக மாணவனை பெட்ரோல் ஊற்றி எரித்த பிளஸ் 2 மாணவனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தில் உள்ள அன்கபூபல்லியைச் சேர்ந்த தம்பதி சேகர்-வெங்கடலட்சுமி. இவர்களுக்கு ரவிதேஜா (12) என்ற மகன் உள்ளார்.

ரவிதேஜா அங்கிருக்கும் அரசு உயர்நிலைப் பள்ளியில் 7-ஆம்வகுப்பு படித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் மதியம் உணவு இடைவேளையின்போது பள்ளி சுற்றுச்சுவர் அருகே ரவிதேஜா உடலில் தீப்பிடித்து எரிந்த நிலையில் அலறி துடித்துக் கொண்டிருந்தான்.

இதைக் கண்ட சக மாணவர்களும், ஆசிரியர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து மாணவனை ஆசிரியர்கள் ஆம்புலன்சில் ஏற்றிச் சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சம்பவம் குறித்து பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரவிதேஜாவிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது. நான் கழிவறைக்கு செல்வதற்காக காம்பவுண்ட் அருகே நின்றிருந்தேன். அப்போது, பிளஸ் 2 படிக்கும் மாணவர் ஒருவர், தன்னிடம் ஒரு காதல் கடிதம் ஒன்றை கொடுத்து, அங்குள்ள ஜூனியர் கல்லூரியில் படிக்கும் மாணவியிடம் கொடுக்கும்படி கூறினார்.

நான் மறுத்து கடிதத்தை கிழித்து எறிந்துவிட்டதால், ஆத்திரத்தில் அவன் என் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு தப்பியோடி விட்டான் என்று கூறியுள்ளார்.

அதன் பின் தலைமறைவாக இருந்த பிளஸ் 2 மாணவனை கைது செய்த பொலிசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணமான ஒரு மாதத்தில் உயிரிழந்த புதுமாப்பிள்ளை : கதறும் மனைவி!!

இந்தியாவில் போதை பழக்கத்துக்கு அடிமையான இளைஞர் திருமணமான ஒரு மாதத்தில் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தரை சேர்ந்தவர் ரிக்கி லஹோரியா (23). போதை மருந்துகளுக்கு அடிமையான இவருக்கு கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் தான் திருமணம் நடைபெற்றது.

இதையடுத்து இனி போதை மருந்துகளை தொடமாட்டேன் என ரிக்கி தனது தாயிடம் கூறியுள்ளார். இதோடு போதை பழக்கத்திலிருந்து விடுபட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் ரிக்கி. இந்நிலையில் ரிக்கியின் கல்லீரல் அதிகளவு சேதமடைந்த காரணத்தால் அவரின் உயிர் நேற்று பிரிந்தது.

ரிக்கியின் மாமா ராஜேஷ்குமார் கூறுகையில், வீட்டிலிருந்த பொருட்களை விற்று போதை மருந்துகள் வாங்கும் அளவுக்கு ரிக்கி சென்றான்.

ஆனால் திருமணம் ஆனபின்னர் திருந்திவாழ ஆசைப்பட்டான், அது நடக்காமலேயே போய்விட்டது என சோகத்துடன் கூறியுள்ளார்.

8 மாத குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்த தந்தை!!

தமிழ்நாட்டில் 8 மாத ஆண் குழந்தையை கழுத்து நெரித்து கொன்ற தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மதுரையில் உள்ள அம்மச்சியாபுரத்தை சேர்ந்த அஜித்குமார் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் அத்தை மகள் பாண்டிசெல்வியை காதலித்து திருமணம் செய்த நிலையில் தம்பதிக்கு கிஷோர் என்ற 8 மாத ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் அஜித்குமாருக்கு அதே பகுதியை சேர்ந்த வேறு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனையறிந்து கணவருடன் தகராறில் ஈடுபட்ட பாண்டிசெல்வி கிஷோரை தூக்கி கொண்டு தாய் வீட்டில் சென்று வசித்து வந்தார்.

இந்நிலையில், தனது இரண்டாவது திருமணத்திற்கு குழந்தை தடையாக இருக்கும் என கருதிய அஜித்குமார், தனது மனைவியிடம் தான் திருந்தி விட்டதாக கூறி நயவஞ்சகமாக அழைத்து வந்துள்ளார்.

பின்னர் குழந்தை கிஷோரை தனது நண்பரின் உதவியோடு கழுத்தை நெறித்து கொலை செய்து ஒன்றும் தெரியாது போல் நாடகமாடியுள்ளார்.

ஆனால் மருத்துவர்கள் குழந்தையின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறிய நிலையில் பொலிசார் அஜித்குமாரிடம் விசாரித்தனர்.

விசாரணையில் அவர் உண்மையை ஒப்பு கொண்ட நிலையில் அவரையும், நண்பர் மணியையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

கடைசி நேரத்தில் உயிர் பிழைக்க போராடிய அந்த நபர் : 11 பேர் மரணத்தில் பரபரப்பு தகவல்!!

இந்தியாவை உலுக்கிய 11 பேர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், கடைசியாக ஒருவர் மட்டும் தப்பிக்க போராடியதாக தடயவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் சமீபத்தில் ஒரே வீட்டை சேர்ந்த 11 பேரும் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அனைவரது கண்கள் மற்றும் கைகள் கட்டப்பட்ட நிலையில், வழக்கு குறித்து பொலிசார் விசாரணை நடத்தினர். அப்போது வீட்டுக்குள்ளேயே கோயிலை கட்டி வழிபாடு செய்து வந்ததும், மோட்சம் அடைவதற்காக இவ்வாறு செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதவிர டைரியின் மரண குறிப்புகள், 11 குழாய்கள் என பல தகவல்கள் வெளியாகி பொலிசாரை குழப்பத்தில் ஆழ்த்தின.

இதனை தொடர்ந்து லலித் சுண்டவத் என்பவர் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது, 10 ஆண்டுகளுக்கு முன்னர் மரணமடைந்த தந்தை உயிரோடு இருப்பதாக எண்ணி வாழ்ந்து வந்ததும், சொர்க்கத்தை அடைய தற்கொலை தான் வழி என குடும்பத்தாருக்கு தெரிவித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் 130 பேரிடம் விசாரணை நடத்தியதில், அந்த 11 பேரில் புவனேஷ் என்பவர் மட்டும் கடைசி நேரத்தில் உயிர் பிழைக்க போராடி இருக்கிறார் என தடயவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவரது ஒரு கை, கழுத்தில் மாட்டியிருந்த கயிற்றை பிடித்து இழுப்பது போன்று இருந்தது, கைகளிலும் கயிறுகள் இறுக்கமாக கட்டப்படவில்லை, எனவே கடைசி நேரத்தில் தப்பிக்க போராடி இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

சினிமாவை மிஞ்சிய நிஜ காதல் காட்சி : காதலை நிரூபிக்க உயிரிழந்த காதலனின் இதயத்தை பார்த்து கதறிய காதலி!!

மத்திய பிரதேசத்தில் பாஜக இளைஞரணி தலைவர் ஒருவர் தன்னுடைய காதலை நிரூபிக்க தன்னை தானே சுட்டுக்கொண்ட சம்பவம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி தலைவராக இருப்பவர் அதுல். 30 வயதான இவர், தன்னுடைய தோழி ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

ஆனால், இருவரின் திருமணத்துக்கு பெண்ணின் தந்தை ஒப்புக்கொள்ளவில்லை. பெண்ணிடம் வீட்டைவிட்டு வந்துவிடு திருணம் செய்து கொள்ளலாம் என ஹண்டே கூறியபோதிலும், தந்தையைவிட்டு வரமுடியாது என அந்தப் பெண் கூறியுள்ளார். இதனால், அடிக்கடி தனது வருங்கால மாமனாரிடம் தனது திருமணத்தை பற்றி அதுல் லோக்ஹண்டே பேசியுள்ளார்.

இந்நிலையில், கடந்த 3-ம் தேதி தனது காதல், திருமணம் குறித்துப் பேசியபோது, பெண்ணின் தந்தை, ‘உன் காதல் உண்மைதான் என்பதை நிரூபி’ எனக் கேட்டுள்ளார். அதற்குத் தான் என்ன செய்யவேண்டும் கேட்கவே, ‘என் வீட்டுக்கு முன்வந்து துப்பாக்கியால் உன்னை நீயே சுட்டுக்கொண்டு காதலை நிரூபிக்க முடியுமா?’ எனக் கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பாஜக நிர்வாகி அதுல், பெண்ணின் வீட்டிற்கு முன் நின்று தன்னை தானே சுட்டுக்கொண்டார். இதில் பலத்த காயமடைந்த அதுல் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆபத்துக் கட்டத்தைத் தாண்டி உயிர் பிழைத்தாலும், மூளைச்சாவு நிலைக்குச் சென்றார். மருத்துவர்கள் பல்வேறு சிகிச்சை அளித்தும் அவர் மூளைச்சாவு நிலைக்குச் செல்வதை தடுக்க முடியவில்லை.

என் உடல் உறுப்புகளை என் காதலியிடம் காண்பித்து தானம் செய்துவிடுங்கள் என உருக்கமாக தெரிவித்தார். அதுலின் ஆசைப்படி உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

அதுலின் இதயத்தையும், கண், உடல் உறுப்புகளையும் பார்த்த அவரின் காதலியும், தந்தையும் கண்ணீர்விட்டு அழுது, கதறினார்கள். மற்ற உடல் உறுப்புகள் போபாலில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டது.

சினிமாவில் வரும் துயரமான காதல் காட்சிகள் போன்று அதுல் லோக்ஹண்டேவின் காதல் அமைந்துவிட்டது.

பேஸ்புக் காதலனுக்கு நேர்ந்த துயரம் : மறக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட இளம் பெண்!!

தமிழகத்தில் காதலன் இறந்த துக்கம் தாங்க முடியாமல் இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் தென்னவன்(24). திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் படித்து வரும் இவர், சென்னை பூந்தமல்லியில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு படித்து வந்துள்ளார்.

இவருக்கும் சென்னையைச் சேர்ந்த கவிதா, சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருபவருக்கும் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் நண்பர்களாக இருந்தவர்கள், நாளைடைவில் காதலர்களாக மாறினர்.

இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் 2ம் திகதி கவிதாவிற்கு பிறந்த நாள் என்பதால் ஒரு விழா நடத்தப்பட்டுள்ளது. அந்த விழாவில் தென்னவன் பங்கேற்றுள்ளார்.

அப்போது தென்னவனை பெற்றோரிடம் கவிதா தன்னுடைய நண்பர் என்று அறிமுகப்படுத்தியுள்ளார். இதையடுத்து கடந்த மே மாதம் 3ம் திகதி கார்த்திகாவின் பெற்றோர், கேரளா மாநிலம் பாலக்காட்டுக்கு தாத்தாவின் துக்க நிகழ்ச்சிக்குச் சென்றுள்ளனர்.

இதையடுத்து கார்த்திகா தன்னுடைய காதலன் தென்னவனை வீட்டிற்கு வரும் படி அழைத்துள்ளார். வீட்டிற்கு வந்த நேரத்தில் தென்னவனுக்கு திடீரென்று வலிப்பு ஏற்பட்டதால், அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கபப்ட்டார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இந்த சம்பவத்தை அறிந்த தென்னவனின் தந்தை ரவிச்சந்திரன் காவல்நிலையத்தில் தன் மகனின் சாவில் மர்மம் இருப்பதாகவும் அது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் புகார் மனு அளித்திருந்தார். இதனால் பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்துள்ளனர்.

காதலன் இறந்த துக்கத்தில் மனம் உடைந்து காணப்பட்ட அஸ்வினியை திருவொற்றியூர் சக்திபுரத்தில் உள்ள உறவினர் ராமச்சந்திரன் என்பவரது வீட்டில் பெற்றோர் தங்க வைத்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ராமச்சந்திரன் தனது குடும்பத்துடன் உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.

வீட்டில் தனியாக இருந்த அஸ்வினி, யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவத்தை அறிந்த பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலன் இறந்த துக்கம் தாங்காமல் அஸ்வினி தற்கொலை செய்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

திருமணம் முடிந்த மறு நிமிடமே இறந்த மணப்பெண் : அதிர்ச்சி சம்பவம்!!

இந்தியாவில் திருமணம் முடிந்த மறு நிமிடமே மணப் பெண் மாரடைப்பு காரணமாக இறந்து போன சம்பவம் திருமணத்தில் வந்திருந்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானாவின் மெகபூப் நகர் மாவட்டத்தில் உள்ள அச்சம் பேட்டையில் வெங்கடேஷ் மற்றும் லட்சுமிக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணத்திற்காக அங்கு அனைவரும் கூடியிருந்தனர். அப்போது திருமணம் முடிந்ததால், வெங்கடேஷ் மற்றும் லட்சுமியை அருந்ததி நட்சத்திரம் பார்ப்பதற்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

அருந்ததி நட்சத்திரத்தைப் பார்க்கும் போது, லட்சுமி திடீரென்று வெங்கடேசனின் காலில் சரிந்து விழுந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

லட்சுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

திருமணம் நடந்து முடிந்த உடனே மணப்பெண் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி இந்த சம்பவத்தை அறிந்த பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நிர்வாணமாக ஊர்வலம் : காதல் ஜோடிக்கு நடந்த கொடூரம்!!

ராஜஸ்தானில் காதல் ஜோடி நிர்வாணமாக ஊர்வலம் அழைத்து செல்லப்பட்டது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளன.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் அருகே உள்ள பகால் என்ற கிராமத்தில் பழங்குடி கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு தரூ காம்தி என்ற நபருடன் திருமணம் நடந்துள்ளது. ஆனால் அந்த இளம்பெண்ணுக்கு அதேபகுதியை சேர்ந்த ராம்லால் காம்தி என்ற நபருடன் காதல் இருந்து வந்துள்ளது.

இதை தெரிந்துகொண்ட தரூ ஊர் பஞ்சாயத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில், இருவரது திருமணம் முறிக்கப்பட்டதாக பஞ்சாயத்தில் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் சம்மந்தப்பட்ட இளம்பெண் தனது காதலரையே திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசியுள்ளனர்.

ஒரு நாள் இதனை பார்த்த முன்னாள் கணவர் தரூ காம்தி, அந்த இளம்பெண்ணை பழிவாங்க நினைத்து ஊர் பஞ்சாயத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர் இதனை விசாரித்த பஞ்சாயத்து தாரர்கள், இருவரையும் நிர்வாணமாக்கி கட்டி வைத்து அடித்ததோடு, ஊர்வலமாகவும் அழைத்து சென்றனர்.

இதனை ஒரு சில நபர்கள் தங்களது செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணைக்கு பின்னர் 5 பேரை கைது செய்துள்ளனர்.

இந்திய கிரிக்கெட் வீரரின் மனைவி எடுத்த அதிரடி முடிவு!!

இந்திய கிரிக்கெட் வீரர் முகம்மது ஷமியின் மனைவி ஜஹான் மீண்டும் மொடலிங் துறைக்கு திரும்ப முடிவு செய்துள்ளார்.

முகம்மது ஷமிக்கு, பல்வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பதாக அவரது மனைவி ஹசின் ஜஹான் சமீபத்தில் புகார் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் ஷமி தம்மை துன்புறுத்துவதாகவும் அவர் பொலிசில் புகார் அளித்த நிலையில் இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. இதையடுத்து ஷமியும், ஹசினும் தற்போது பிரிந்து வாழ்கின்றனர்.

இந்நிலையில், மகளின் எதிர்கால வாழ்க்கையை கருத்தில் கொண்டு மீண்டும் மொடலிங் துறைக்கு செல்ல முடிவு செய்துள்ளதாக ஹசின் தெரிவித்துள்ளார்.

பேருந்தின் கண்ணாடியை உடைத்துக் கொண்டு உள்நுழைந்த மூங்கில்!!

நோட்டன் – மஸ்கெலியா பிரதான வீதியின், எடிட் பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

காயமடைந்த இருவரும் லக்ஷபான பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நோட்டன் பகுதியிலிருந்து பயணித்த இ.போ.சபைக்கு சொந்தமான பேருந்து மீது எடிட் பிரதேசத்தில் வைத்து மூங்கில்கள் சரிந்து விழுந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது மூங்கிளொன்று பேருந்தின் முன் கண்ணாடியை உடைத்துக் கொண்டு பேருந்திற்குள் நுழைந்ததாலேயே இருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

பலத்த காற்று வீசியதாலேயே பிரதான வீதியின் அருகில் உள்ள மூங்கில்கள் உடைந்து பேருந்து மீது விழுந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் நோட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆற்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்பு!!

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெசல்கமுவ ஓயாவிற்கு நீர் வழங்கும் கிளை ஆறான சென். ஜோன்டிலரியிலிருந்து பெண்ணொருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் இன்று காலை மீட்கப்பட்டதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த ஆற்றில் சடலமொன்று கிடப்பதாக அப்பகுதியிலுள்ள தேயிலைமலைக்கு சென்று கொண்டிருந்த தொழிலாளர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

30 அல்லது 35 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரது சடலமே மீட்கப்பட்டுள்ளதாகவும், எனினும் இது தொடர்பில் மேலதிக தகவல்கள் கிடைக்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சடலம் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பிரான்ஸில் இலங்கை தமிழ் மாணவி சாதனை : வரலாற்றில் முதற்தடவையாக வாய்ப்பு!!

பிரான்ஸில் இலங்கை தமிழ் பெண்ணொருவர் சாதனை படைத்துள்ளார்.

பிரான்ஸின் LORRAINE மாகாணத்தில் முதல் தடவையாக இலங்கைத் தமிழ்ப்பெண் ஒருவர் வைத்தியராக தெரிவாகி உள்ளார்.

2018 ஆம் ஆண்டுக்கான மருத்துவர்களுக்கான பட்டமளிப்பு விழா கடந்த மாதம் 23ம் திகதி நடைபெற்றது. நான்சி பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட மாணவர்கள் 300 பேருக்கு வைத்தியர் பட்டம் வழங்கப்பட்டது. இதில் இலங்கையை சேர்ந்த சிநேகிதா ஸாகரியும் ஒருவராக பட்டம் பெற்றார்.

இவர் பிரான்ஸ் மெட்ஸ் நகரில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களான சுந்தரவடிவேல்பிள்ளை சந்திரவதனி புதல்வி ஆவார்.

இலங்கையில் ஆரம்ப கல்வியை ஆங்கில மொழியில் தொடர்ந்த சிநேகிதா, பிரான்ஸிற்கு குடிபெயர்ந்த நிலையில் பிரெஞ்சு மொழியில் தனது படிப்பினை தொடர வேண்டிய நிலை ஏற்பட்டது.

2008ம் ஆண்டு மெட்ஸ் நகரிலிருந்த கல்லூரிகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 28 சிறந்த மாணவர்களில் ஒருவராகத் தெரிவு செய்யப் பட்டு GASTON-HOFFMANN விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

தானொரு வைத்தியராக வர வேண்டும் என்ற கனவோடு தீவிரமாக படித்தமையினால் இன்று அது நனவாகி உள்ளதாக சிநேகிதா குறிப்பிட்டுள்ளார்.

பிரான்ஸின் LORRAINE மாகாணத்தில் ஒரு இலங்கைத் தமிழ்ப்பெண் ஒருவர் வைத்தியராக வந்திருப்பது இதுவே முதற் தடவையாகும்.