வவுனியாவில் இன்று (10.07.2018) காலை இடம்பெற்ற விபத்து ஒன்றில் மோட்டார் சைக்கிளில் சென்ற முதியவர் ஒருவர் வீதியில் சென்ற மாட்டுடன் மோதி படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையின் விபத்துப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
இன்று காலை7.15 மணியளவில் வவுனியா முதலாம் குறுக்குத் தெரு சூசைப்பிள்ளையார்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வீதியில் சென்ற முதியவர் மாடு ஒன்று வீதியில் குறுக்கச் சென்றதில் மாட்டுடன் மோதிய விபத்தில் படுகாயமடைந்துள்ளதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்தில் படுகாயமடைந்த மகேஸ்வரன் என்ற 71 வயதுடைய முதியவர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து இடம்பெற்றதில் சற்று அதிர்ச்சியடைந்த நிலையில் காணப்படும் முதியவரை விபத்துப்பிரிவில் அனுமதித்த வைத்தியர்கள் தொடர்ந்து சிகிச்சையளித்து வருகின்றனர்.
இவ்விபத்து தொடர்பான விசாரணைகளைப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.