15 வயதுடைய தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை ஒருவர் 13 ம் திகதி செவனகல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமி தனது தந்தையுடன் தனக்கு தேவையான புத்தகங்கள் வாங்குவதற்கு நகரத்திற்கு சென்று திரும்பி வந்தபோது தந்தை அவளை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் தனது மகளை கரும்பு தோட்டத்திற்கு அழைத்துச் சென்று துஸ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த சிறுமியின் தாயார் அவர்களிடமிருந்து பிரிந்து வாழ்வதாகவும் சிறுமி தனது பாட்டியுடன் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
40 வயதான சந்தேக நபர் எம்பிலிப்பிட்டிய நீதவான் முன் ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 24 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சிறுமி வைத்திய பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் செவனகல பொலிஸார் தெரிவித்தனர்.
வாழ்க்கை அழகானது. அதை நாங்கள் அனுபவிக்கிறோம் என கடந்த 12 வருடங்களில் 23 நாடுகளை சுற்றியுள்ள கேரளாவைச் சேர்ந்த ‘டீக்கடை ஜோடி’ உற்சாகத்துடன் தெரிவிக்கிறார்கள். இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி நகரில் ‘ஸ்ரீ பாலாஜி காபி ஹவுஸ்’ என்ற டீக்கடையை நடத்தி வருபவர் 69 வயதான விஜயன்.
இவரது மனைவி மோகனா(67). இவர்களுக்கு திருமணமாகி 45 ஆண்டுகள் ஆகிறது. கொச்சினில் ஏழையாக வாழ்ந்து வரும் இவர்களுக்கு சிறுவயதில் இருந்தே இந்த உலகை சுற்றிப்பார்க்க வேண்டும் என்பதே கனவு என தெரிவிக்கின்றனர்.
ஆனால் அதற்கு பணம் ஒரு தடையாக இருந்துள்ளது. 55 ஆண்டுகளுக்கு முன்பாக அதாவது 1963 ஆம் ஆண்டு, தெருவில் டீக்கடை ஒன்றை ஆரம்பித்த விஜயன், அதன் மூலம் வரும் பணத்தை தன்னுடைய உலகம் சுற்றும் கனவுக்காக சேர்த்து வைத்தார்.
தங்கள் கடைக்கு ஒரு நாளைக்கு 300 லிருந்து 350 வாடிக்கையாளர்கள் வருவார்கள் எனவும் அதன்மூலம் வரும் வருமானத்தை சேகரித்து விரும்பிய இடங்களுக்கு பயணம் மேற்கொள்வோம் எனவும் விஜயன் தெரிவிக்கிறார். இதுகுறித்து விஜயன் கூறுகையில், சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து, நியூயார்க் உள்ளிட்ட நாடுகள் மிகவும் பிடித்தமானவை எனவும்,
பிரேசில், அர்ஜெண்டினா, பெரு உள்ளிட்ட பல நாடுகளுக்கும் சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அடுத்து சுவீடன், டென்மார்க், ஹோலண்ட், கிரீன்லேண்ட், நார்வே உள்ளிட்ட நாடுகள் சுற்றிப்பார்க்க வேண்டும்.
எங்கள் டீக்கடை சுவர் முழுவதும் பல்வேறு நாடுகள் குறித்த போஸ்டர்கள் தான் இருக்கும் எனவும் தெரிவிக்கிறார். இவ்வாறு உலக நாடுகளை சுற்றுவதன்மூலம் தங்களுடையை எண்ணங்களும் கலாச்சாரங்களும் மாற்றமடையும் என கூறுகிறார் விஜயன்.
மேலும் பல்வேறு நாடுகளின் டொலர்களை சேகரித்து வைத்துள்ளார். டீக்கடையின் ஒற்றை வருமானத்தை வைத்து கடந்த 12 வருடங்களில் இதுவரை 23 நாடுகள் சுற்றியுள்ளனர் விஜயன் மோகனா தம்பதியினர்.
தற்போது அர்ஜெண்டினா, பெரு, பிரேசில் நாடுகளை சுற்றிப்பார்த்துவிட்டு இந்தியா திரும்பியுள்ள இவர்கள் நீண்டகால கனவு நிறைவு பெற்றுள்ளது என குறிப்பிடுகின்றனர். மேலும் தங்கள் டீக்கடையில் வேறு யாரையும் பணியமர்த்தவில்லை எனவும் நாங்களே மேனேஜர், நாங்களே வேலையாட்கள் என பெருமையுடன் கூறுகின்றனர்.
மேலும் பயணம் மேற்கொள்ள பணம் போதவில்லை என்றால் வங்கியில் கடன் வாங்குவோம் எனவும் பயணம் சென்று வந்த பின்பு அந்த பணத்தை 3 வருடத்திற்குள் அடைத்துவிட்டு அதன்பின்பு அடுத்த பயணத்திற்கு திட்டமிட்டு பயணிப்போம் என தெரிவிக்கின்றனர்.
வவுனியா ஈரப்பெரியகுளத்தில் இன்று (15.01.2018) மதியம் 1.45 மணியளவில் இரு இளைஞர்கள் குளத்தினுள் தவறி வீழ்ந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
வவுனியா ஈரப்பெரியகுளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈரப்பெரியகுளம் அருகே ஆறு இளைஞர்கள் மதிய உணவு சாப்பிட்டுள்ளார் . அதன் பின்னர் கைகழுவச் சென்ற சமயத்தில் குளத்தினுள் இரு இளைஞர்கள் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்ட இரு இளைஞர்களும் 16 வயது மதிக்கத்தக்கவர்கள் எனவும் இவர்களின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஈரட்டைபெரியகுளம் பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா ஈரப்பெரியகுளத்தில் இன்று (15.01.2018) மதியம் 1.45 மணியளவில் இரு இளைஞர்கள் குளத்தினுள் தவறி வீழ்ந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
வவுனியா ஈரப்பெரியகுளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈரப்பெரியகுளம் அருகே ஆறு இளைஞர்கள் மதிய உணவு சாப்பிட்டுள்ளார். அதன் பின்னர் கைகழுவச் சென்ற சமயத்தில் குளத்தினுள் இரு இளைஞர்கள் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்ட இரு இளைஞர்களும் 16 வயது மதிக்கத்தக்கவர்கள் எனவும் இவர்களின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஈரப்பெரியகுளம் பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியாவில் தைத்திருநாளாம் தைப்பொங்கல் இன மத வேறுபாடு இன்றி கொண்டாடப்பட்டது. அனைத்து இந்து ஆலயங்களிலும் காலையில் பொங்கல் பொங்கி இந்து மக்கள் வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் இந்துக்களின் வீடுகளிலும் பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதேவேளை வவுனியா இறம்பைக்குளம் அந்தோனியார் ஆலயத்தில் கிறிஸ்தவ இளைஞர்கள் மற்றும் பங்குத்தந்தையினால் பொங்கல் பொங்கப்பட்டது.
இதேவேளை வவுனியா பேரூந்து நிலையத்தில் தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தினாலும் முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தினாலும் பொங்கல் பொங்கி பலகாரங்கள் பரிமாறப்பட்டதுடன் வர்த்தக நிலையங்களுக்கு முன்பாகவும் பொங்கல் இடம்பெற்றது.
இதேவேளை வயது வேறுபாடின்றி வெடி கொழுத்தி மக்கள் தங்கள்
மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தனர்.
வவுனியாவில் தைப்பொங்கலை முன்னிட்டு வியாபாரம் களைகட்டியதையடுத்து நகரின் மத்திய பகுதியில் பொங்கல் பொருட்கள் கொள்வனவில் பொதுமக்கள் ஈடுபட்டு வருவதைக் காணக்கூடியதாக உள்ளது. பொலிசார் பாதுகாப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.
தைப்பொங்கல் திருநாள் நாளைய தினம் (15.01) உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படவுள்ள நிலையில் வவுனியாவில் தைப்பொங்கல் பண்டிகை களைக்கட்ட ஆரம்பித்துள்ளதை காணக்கூடியதாகவுள்ளது.
இம்முறை மக்கள் மட்பாண்டப் பொருட்களை கொள்வனவு செய்து வருவது மகிழ்ச்சியளிப்பதாக மண்டபாண்ட உற்பத்தியாளர்களும் வியபாரிகளும் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் கடந்த வருடத்தினைவிட இம்முறை மக்கள் அதிக ஆர்வத்துடன் பொங்கல் பொருட்களைக் கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டி வருவதாக வவுனியா வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
வவுனியா நகரில் அமைந்துள்ள அழகிய அருள்மிகு ஸ்ரீ கந்தசாமி கோவிலின் வருடாந்த மகோற்சவம் கடந்த 12.01.2019 சனிக்கிழமை பகல் 11.30 மனியளவி சிவஸ்ரீ சர்வேஸ்வர குருக்கள் தலைமையில் கொடிஏற்றதுடன் ஆரம்பமாகியது.
வவுனியா பூவரசங்குளம் தாலிக்குளம் பகுதியில் நேற்று (13.01.2019) மாலை கிணற்றிலிருந்து பாடசாலை மாணவியின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது. தாலிக்குளம் பகுதியில் வீட்டிலுள்ள பாதுகாப்பற்ற தோட்டக்கிணற்றில் பாடசாலை உடைகளை துவைப்பதற்காக தண்ணீர் அள்ளிக்கொண்டிருந்த சமயத்தில்,
தவறுதலாக கிணற்றினுள் வீழ்ந்து 15 வயதுடைய சொக்கலிங்குமார் லோபிகா என்ற பாடசாலை மாணவி மரணமடைந்துள்ளார். குறித்த மாணவியின் பெற்றோர் பிள்ளையினை காணவில்லை என தேடிய சமயத்தில் கிணற்றில் சடலமாக மிதந்துள்ளார்.
இதனையடுத்து அயலவர்களின் உதவியுடன் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதினையடுத்து பொலிசார் சடலத்தினை மீட்டெடுத்துள்ளனர்.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
மகாவலி கங்கைக்கு நீராடச் சென்ற 5 பாடசாலை மாணவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று பகல் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
தனது 4 நண்பர்களுடன் மகாவலி கங்கைக்கு குளித்தச் சென்ற போது குறித்த ஐவரில் மூவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த மூவரையும் மீட்டு வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியிலே குறித்த மாணவன் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்த மாணவன் உயர் தரத்தில் கல்வி கற்கும் நாவலபிடி அப்புகஸ்தலாவ பகுதியைச் சேர்ந்தவர் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் குறித்த மாணவனின் சடலம் நாவலபிடி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளத்தில் வரும் அனைத்தையும் நம்ப வேண்டாம். நம்புவது உங்களுடைய மிகப்பெரிய தவறு என இலங்கையின் அணியின் முன்னாள் வீரர் குமார் சங்ககாரா தெரிவித்துள்ளார். அடுத்துவரும் ஜனாதிபதி தேர்தலில் கிரிகெட் வீரர் குமார் சங்ககாரா ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் பொது வேட்பாளராக நிறுத்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகளவில் இருப்பதாகவும், இது தொடர்பான பேச்சுக்கள் இடம்பெற்றுவருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும் குமார் சங்கக்காரா எந்தவிதமான கருத்துக்களையும் சொல்லாமல் இருந்தார். இந்நிலையில் அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில் அவரின் ரசிகர் ஒருவர் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.
அதில், “ உங்களுக்கு என்று தனி மரியாதை உண்டு, கிரிக்கெட் வீரராக நீங்கள் ஒரு நல்ல பெயரைப் பெற்றிருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் அரசியல்வாதியாக மாறினால், அந்த நற்பெயரை பெறுவீர்கள் என்று நினைக்காதீர்கள்?
நீங்கள் அரசியலில் சேர விரும்பினால் உங்கள் நற்பெயர் மற்றும் கௌரவம் முடிந்து விடும். இதனால் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து கொள்ளுங்கள் ” என்று கருத்திட்டிருந்தார்.
இக்கருத்துக்கு பதில் கருத்துப் பதிவு செய்துள்ள சங்ககாரா, “ சமூக வலைத்தளத்தில் வரும் அனைத்து கருத்துகளையும் நம்ப வேண்டாம். நம்புவது உங்களுடைய மிகப்பெரிய தவறு. என்மீது வைத்துள்ள மதிப்புக்கு நன்றி ” என்று குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் ஜனாதிபதி வேட்பாளராக தான் களமிறக்கப்படுவது தவறான செய்தி என்பதை இதன் மூலமாக மறைமுகமாக அவர் குறிப்பிட்டிருக்கிறார் என அவரது ரசிகர்கள் கருத்து வெளியிட்டுவருகின்றனர்.
எவ்வாறாயினும் அடுத்த தேர்தலிலும் ஜனாதிபதியாக பொது வேட்பாளர் ஒருவர் ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் களமிறக்கப்படுவார்கள் என்கின்றன தகவல் அறிந்த வட்டாரங்கள்.
மது போதையில் பெனாயில் குடித்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் ரத்னாயக்க (வயது 45) என்ற பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, இடமாற்றம் பெற்றுச் செல்லவுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் நேற்று (12) இரவு யாழ்.நகரப் பகுதியில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் மது அருந்தியுள்ளனர்.
மது அருந்திய பின்னர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் மது போதையின் நிமித்தம் மலசல கூடத்தை தூய்மைப்படுத்த பயன்படுத்தப்படும் பெனாயிலை குடித்துள்ளார்.
இதனை அறிந்த சக பொலிஸார்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்றுக்காலை அனுமதித்த நிலையில், பொலிஸ் உத்தியோகத்தர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சடலம் பிரேத பரிசோதனைக்காக பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
நைஜீரியாவில் இளம் பெண்ணை கொலை செய்த நபரை பெண்ணின் பெற்றோர் சடலத்தை திருமணம் செய்ய நிர்பந்தித்துவரும் சம்பவம் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. நைஜீரியாவின் Akure பகுதியில் குறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. 24 வயதான Saliu Ladayo என்பவர் 19 வயதான Chidiebere என்பவரை காதலித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த Ladayo கத்தி ஒன்றை வாங்கி வந்து தமது காதலியின் மார்பை குறிவைத்து 19 முறை குத்தியுள்ளார். இதில் Chidiebere பரிதாபமாக மரணமடைந்தார். இந்த வழக்கில் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்ட Ladayo விசாரணை கைதியாக உள்ளார்.
இதனிடையே இளம் பெண்ணின் பெற்றோர் வினோதமாக கோரிக்கையை முன்வைத்துள்ளனர். அதாவது தமது மகளின் சடலத்தை Ladayo உரிய முறைப்படி திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனவும், இறுதிச்சடங்குக்கான அனைத்து பொருளதவியையும் Ladayo ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.
ஆனால் Ladayo அதற்கு மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இதனால் கொல்லப்பட்ட Chidiebere-ன் சடலம் கடந்த 8 மாதங்களாக பிணவறையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. தற்போது Ladayo மீது கொலை மற்றும் பாலியல் துஸ்பிரயோகம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஷகிலா என்றால் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவும் திரும்பி பார்க்கும். அவருக்கு அப்படியான ஒரு பெரும் வரவேற்பு இருந்தது. படங்களில் நடிக்க ஒரு சக நடிகை போல தான் வந்தார். ஆனால் ஆபாச பெண் என்பது போல அவர் மீது முத்திரை பதிந்தது.
அவரின் படங்கள் வந்தால் ஹீரோக்கள் படங்கள் கூட வெளியாக தயங்கும். சினிமாவிலிருந்து ஓய்வு பெற்றுள்ள அவரின் வாழ்க்கை வரலாறு தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. இதில் ரிச்சா சத்தா என்பவர் ஷகிலாவாக நடித்து வருகிறார்.
அண்மையில் அவர் பேட்டி கொடுத்திருந்தார். இதில் அவர் நான் 15 வயதிலிருந்தே நடிக்க தொடங்கிவிட்டேன். ஆனால் குடும்பத்துக்காகவே கவர்ச்சியாக நடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது.
ஆனால் என்னுடைய குடும்பத்தில் இருந்த ஒருவரே என்னை ஏமாற்றி நான் சம்பாதித்த பணத்தை பிடுங்கி கொண்டார். நிறைய காதல் தோல்விகளும் கூட. இதனால் தற்கொலை கூட செய்ய முடிவெடுத்தேன்.
வீட்டில் இருக்கும் போது நான் கமல்ஹாசனின் படங்களை தான் பார்ப்பேன். அவரின் ரசிகை நான். அவருடைய கட்சியிலும் சேர்ந்து பணியாற்ற எனக்கு விருப்பம் இருக்கின்றது என கூறியுள்ளார்.
நடிகைகளை சினிமாவில் தான் வெறும் கவர்ச்சிக்காக பயன்படுத்துகிறார்கள் என்றால், நிஜத்திலும் அவர்கள் வெளியில் வந்தால் வெறும் மோகப்பொருளாகவே பார்க்கப்படுகிறார்கள். பல சமயங்களில் நடிகைகளிடம் சிலர் தவறான நடந்துகொண்டார்கள் என்கிற அதிர்ச்சி தகவல்களும் வந்ததுண்டு.
அதுபோல தற்போது பிரபல நடிகை சரீன் கான் அவுரங்காபாத்தில் நடந்த ஒரு விழாவில் கலந்துகொண்டுவிட்டு வெளியில் வரும் போது பெரிய கூட்டத்தில் மாட்டிக்கொண்டார்.
அப்போது ஒரு நபர் நடிகையை தகாத முறையில் தொட்டுள்ளார். அதனால் கோபமடைந்த நடிகை அந்த நபரை போட்டு அடித்துள்ளார்.
இந்த சம்பவம் கேமராவில் பதிவாகியுள்ளது. வீடியோ வெளியாகி தற்போது வைரலாகிவருகிறது. தவறாக நடந்தவரை எதிர்த்து தாக்கிய நடிகைக்கு பாராட்டுகளுக்கு குவிந்து வருகிறது.
மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற உடனேயே திருநங்கை அப்சரா ரெட்டி நடிகர் ரஜினிகாந்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த திருநங்கையான அப்சரா அதிமுக-வில் இருந்த நிலையில் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் சேர்ந்தார். இதையடுத்து அவரை தேசிய மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளராக அறிவித்தது காங்கிரஸ்.
இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அப்சரா, தமிழக மக்கள் என்றும் ஹிந்தி கட்சியை ஏற்க மாட்டார்கள். பா.ஜ.க அரசு வீட்டுக்கு போகும் நேரம் வந்துவிட்டது. ரஜினிகாந்த் பா.ஜ.கவின் கைக்கூலியாக தான் செயல்படுகிறார்.
அரசியலுக்கு வருவேன், வருவேன் என ஏமாற்றுகிறார். மக்களை அவர் ஏமாற்றக்கூடாது என கடுமையாக விமர்சித்துள்ளார்.