யாழ்ப்பாணத்தை அச்சுறுத்தும் அபாயம் : பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழப்பு!!

யாழ்ப்பாணத்தில் உயிர் ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய காய்ச்சல் ஒன்று பரவி வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த நோயின் தாக்கம் காரணமாக 45 வயதான பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உரும்பிராயை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கடந்த மாதம் 30 ஆம் திகதி இரணைமடுவில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்ற திரும்பிய பெண்ணுக்கு அன்றைய தினமே காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. 31ம் திகதி அருகிலுள்ள தனியார் வைத்தியசாலையில் தொடர் சிகிச்சை பெற்றுள்ளார்.

இந்நிலையில் கடந்த 7ம் சிகிச்சை பெறச் சென்ற வேளையில் மயங்கி வீழந்துள்ளனர். உடனடியாக அவர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணை பரிசோதித்த வைத்தியர்கள், அவர் உண்ணிக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளார் என கண்டுபிடித்துள்ளனர்.

எனினும் உரிய சிகிச்சை வழங்கப்பட்ட போதும், கடந்த 13 ஆம் திகதி அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தக் காய்ச்சல் குறித்து யாழ். குடாநாட்டு மக்கள் கவனம் செலுத்த வேண்டும் என வைத்தியர்கள் எச்சரித்துள்ளர்.

16 வயது மகளின் தலையை தனியாக துண்டித்த பெற்றோர் : அதிரவைக்கும் பின்னணி!!

 

அதிரவைக்கும் பின்னணி

இந்தியாவின் பீகாரில் காதல் வயப்பட்ட 16 வயது மகளை அவரது பெற்றோர் தலையை துண்டித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாட்னாவை சேர்ந்த 16 வயது சிறுமி காணாமல் போனதாக அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து பொலிசார் சிறுமியை தேட ஆரம்பித்தனர். அப்போது சிறுமி தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக கண்டுபிடிக்கப்பட்டார்.

இது குறித்து பொலிசாருக்கு சிறுமியின் பெற்றோர் மீது சந்தேகம் வரவே அவர்கள் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். இதில் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தது. சிறுமி ஒரு வாலிபரை காதலித்து வந்துள்ளார்.

காதலனுடன் ஓடிப்போன பெண்ணை மீட்ட பெற்றோர் கோபத்தில் சிறுமியை தலையை துண்டித்து கொலை செய்துள்ளனர். இதையடுத்து பொலிசார் சிறுமியின் பெற்றோரை கைது செய்து சிறையில் அடைத்தனர் இதனிடையில் சிறுமிக்கு இறப்புக்கு இரங்கல் தெரிவித்து அப்பகுதி மக்கள் மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

பாடசாலை மாணவியுடன் காதல் : ஒரு மாதம் கழித்து எலும்பு கூடாக கிடைத்த 17 வயது மகன்!!

 

பாடசாலை மாணவியுடன் காதல்

சிவகாசி மாவட்டத்தில் ஒரு மாதத்துக்கு முன்னர் காணாமல் போன 17 வயது மகன் எலும்புகூடாக கிடந்ததை பார்த்த பெற்றோர் கதறி அழுதுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கூடலிங்கம் என்ற சிறுவன் பள்ளி மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளான். இதனை அறிந்த பெற்றோர் கூடலிங்கத்தை அடித்துள்ளனர்.

இந்நிலையில் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி கூடலிங்கம் காணாமல் போயுள்ளார். இதுகுறித்து பொலிசில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. காட்டு பகுதியில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கூடலிங்கம் எலும்பு கூடாக மீட்கப்பட்டுள்ளர்.

சம்பவ இடத்தை தடவியல்துறை நிபுணர்களும், மோப்பநாய் மூலமாகவும் விசாரணை மேற்கொண்ட போலீசார், கூடலிங்கம் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பதை பற்றி தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடிக்க பணம் தர மறுத்த தந்தையை ஆத்திரத்தில் குத்திக் கொன்ற மகன்!!

 

தந்தையை கொன்ற மகன்

தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் மது குடிக்க பணம் தராத தந்தையை மகன் கத்தியால் குத்தி கொன்ற கொடூரம் தடந்தேறி உள்ளது. சேலம் மாவட்டத்தில் சேர்ந்தவர் விவசாயி செல்லமுத்து. இவரது மகன் செல்லக்கண்ணு கறிக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் தந்தைக்கும் மகனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதனால் செல்லக்கண்ணு சண்டையிட்டு தனது மனைவியின் அம்மா வீட்டில் சென்றுள்ளார். இதனிடையே, அவ்வப்போது தந்தையை பார்க்க செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார் செல்லகண்ணு. இந்நிலையில் அவர் தந்தையை பார்க்க வந்த இடத்தில் குடிக்க பணம் கேட்டு தகராறு செய்து செய்துள்ளார்.

ஆனால் செல்லமுத்து பணம் தர மறுத்துள்ளார். இதனால் ஆவேசம் அடைந்த செல்லக்கண்ணு, வீட்டில் இருந்த ஆடு வெட்டும் கத்தியால் செல்லமுத்துவை குத்தி கொலை செய்துவிட்டு அருகிலிருந்த பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார். அங்கு வந்த பொலிசார் செல்லமுத்துவின் உடலை கை பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். செல்ல கண்ணுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தைப்பொங்கல் தினத்தில் இலங்கையில் நடந்த சோகம் : நீரில் மூழ்கி 8 பேர் மரணம்!!

 

நீரில் மூழ்கி 8 பேர் மரணம்

தைப்பொங்கல் தினமான நேற்று நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நீரில் மூழ்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் கடலிலும், குளங்களிலும் குளித்த போதே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 5 பேர் இளைஞர்கள் எனவும், 2 பேர் குடும்பஸ்தர்கள் எனவும், ஒருவர் சிறுவன் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, திருகோணமலை, சங்கமித்த கடற்கரையில் நேற்று சுழிக்குள் சிக்குண்ட நால்வரை திருகோணமலை பொலிஸார் காப்பாற்றியுள்ளனர். காப்பாற்றப்பட்டவர்கள் அனைவரும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தங்கத்தால் செய்யப்பட்ட கரும்பு, பானை, தங்க மாடு : அசத்திய நபர்!!

 

அசத்திய நபர்

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சி.எஸ்.தேவன் என்ற நகைத்தொழிலாளி தங்கத்தில் கரும்பு, பானை செய்து அசத்தியுள்ளார். கின்னஸ் சாதனைப் புரிவதற்காக மில்லி கிராம் தங்கத்தில் நுண்ணிய அளவில் பல்வேறு மாதிரி பொருட்களை திறம்பட உருவாக்கி வருகிறார்.

இந்த நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி மூன்று கரும்பு, பானை, அடுப்பு, விறகு, காளை மாடு, கரண்டி ஆகியவற்றை தங்கத்தால் தத்ரூபமாக உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.

24 மணி நேர இடைவிடாத தொடர் முயற்சியால் இவற்றை உருவாக்கியதாக தேவன் தெரிவித்துள்ளார். 1 கிராம் 900 மில்லி தங்கம் இதற்காக செலவிடப்பட்டுள்ளது.

பெண்ணின் தலையில் கல்லை போட்டு கொடூர கொலை!!

 

கொடூர கொலை

சென்னையில் ரோஜா என்ற பெண்ணின் தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆவடி பகுதியில் கணவர் வியாபாரத்திற்கு சென்றுவிட்ட நிலையில், வீட்டில் தனியாக இருந்த ரோஜா என்ற பெண்ணும் அவரது 3 வயது குழந்தையும் தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.

வீட்டிற்கு வந்த கணவன் இருவரும் இறந்துகிடப்பதை பார்த்து அதிர்சியடைந்துள்ளார். தாயும் மகளும் தலையில் கல்லை போட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உடலை கைப்பற்றிய ஆவடி பொலிசார் இந்த கொலை செய்தது யார் என தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

கொடிய விஷம் கொண்ட பாம்பை பிடித்து அதற்கு பார்வை வரவைத்த இளைஞன் : நெகிழ்ச்சி சம்பவம்!!

நெகிழ்ச்சி சம்பவம்

தமிழகத்தில் பார்வையிழந்த நல்ல பாம்பிற்கு பார்வை வரச் செய்து அதை பாதுகாப்பான இடத்தில் விட்ட இளைஞனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. கோயமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேந்திரன். இவர் கடந்த 15 ஆண்டுகளாக பாம்புகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். பாம்பு இருக்கிறது என்று தகவல் கிடைத்தால், இவர் உடனடியாக அங்கே சென்று பாம்புகளை பத்திரமாம மீட்டு காட்டுப்பகுதியில் விட்டுவிடுவார்.

இந்நிலையில் கடந்த மாதம் 20-ஆம் திகதி கோயமுத்தூரின் மலுமிச்சைபட்டி அருகே நல்ல பாம்பு ஒன்று இருப்பதாக இவருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் அங்கு விரைந்து சென்ற இவர், பாம்பினை பத்திரமாக பிடித்து வீட்டிற்கு கொண்டு வந்துள்ளார். ஆனால் பாம்பின் நடவடிக்கையில் ஒரு மாற்றத்தைக் கண்டுள்ளார்.

சாதரணமாக நல்ல பாம்பு மனிதர்களைப் பார்த்தால் சீறும் தன்மை கொண்டவை. ஆனால் இவர் கொண்டு வந்த பாம்போ மனிதன் தொட்டால் மட்டுமே சீரியது. இதனால் அதை சற்று உற்று கவனித்த போது பாம்பின் கண்களில் அதன் தோல் உரிக்கப்படாமல் இருப்பதைக் கண்டுள்ளார். பாம்பின் கண்ணில் தான் பிரச்சனை, என்பதை அறிந்த இவர், உடனடியாக பவானிசாகரில் இருக்கும் கால்நடை மருத்துவமனைக்கு தன்னுடைய பாம்பை கொண்டு சென்றுள்ளார்.

அந்த மருத்துவமனையில் அசோகன் என்பவர் மருத்துவராக உள்ளார். இவர் கடந்த ஆண்டு கட்டு விரியன் பாம்பு அடிப்பட்டு கிடந்த போது, அதற்கு தண்டுவட அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றியவர்.

அவர் பாம்பை பரிசோதனை பார்த்த போது, பாம்பின் கண்ணில் அடிபட்டிருப்பதை கண்டுபிடித்துள்ளார். பாம்பிற்கு மீண்டும் கண் தெரிய வேண்டும் என்றால், அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே சாத்தியம் என்று கூறியுள்ளார்.

அதன் பின் பாம்பின் உடல்நிலையை கருத்தில் கொண்டு கடந்த 24-ஆம் திகதி பாம்பிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை நடைபெற்ற பிறகு பாம்பு வெளிச்சத்தைப் பார்க்க கூடாது என்பதால் வெளிச்சம் பரவாத இடத்தில் வைத்துப் பராமரிக்கப்பட்டது.

பாம்பின் நடவடிக்கைகளைக் கவனித்த மருத்துவர் பாம்பு சில நாட்களில் இயல்பு நிலைக்குத் திரும்பும் என தெரிவித்திருந்தார். அதன் படி தொடர்ந்து நான்கு நாட்கள் பாம்பின் கண் திறனை பரிசோதித்து வந்த மருத்துவர், பாம்பிற்குப் பார்வை தெரிகிறது என்பதை உறுதி செய்ததும் மீண்டும் சுரேந்திரனிடம் கொடுத்துள்ளார்.

சுரேந்திரனும் அந்த பாம்பை பத்திரமாக வாங்கிச் சென்று, ஒரு காட்டுப்பகுதியில் விட்டுள்ளார். இது குறித்து சுரேந்திரன் கூறுகையில், விவசாயம்தான் நம்முடைய முதுகெலும்பு, அப்படியான உணவு உற்பத்தியில் மனிதனுக்கு உதவியாக இருப்பதில் பாம்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

விவசாயிகளுக்குத் தொல்லையாக இருக்கிற எலிகளைக் கட்டுப்படுத்துவதில் பாம்புகள் முக்கிய பங்காற்றுகின்றன. அப்படியான பாம்புகளைக் கொல்வதும் அவற்றைக் காயப்படுத்துவதும் இயற்கைக்கும் விவசாயத்திற்கும் எதிரான செயல் என்பதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும். எது விஷம் கொண்ட பாம்பு, எது விஷமில்லாத பாம்பு போன்றவை குறித்து மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

பாம்பை கண்டவுடன் மக்கள் கொல்ல தயாராகிவிடுகின்றனர். இனிமேல் பாம்பைக் கண்டால் அருகில் இருக்கும் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுங்கள் என்று கூறியுள்ளார்.

இதுவரை சுரேந்திரன் குழுவினர் 4000-க்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்து பாதுகாப்பாக காட்டுப்பகுதியில் விட்டுள்ளனர். சுரேந்திரன் தனியார் நிறுவனத்தில் இரவு நேர மேற்பார்வையாளராகப் பணிபுரிகிறார். பணி நேரம் போக இந்த செயலில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கரும்பு காட்டில் மர்மமாக இறந்து கிடந்த 10 வயது சிறுமி : முதியவரிடம் பொலிஸார் தீவிர விசாரணை!!

 

மர்மமாக இறந்து கிடந்த சிறுமி

திருவண்ணாமலை மாவட்டத்தில் பாட்டி வீட்டில் தங்கி படித்து வந்த 10 வயது சிறுமி மர்மமான முறையில் இறந்த கிடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தண்டராம்பட்டு அருகே உள்ள தென்முடியனூரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி விஜயகுமார்.

இவர் தன்னுடைய மனைவி அன்புகுமாரி மற்றும் 8 வயது மகன் பிரபுவுடன் சென்னையில் தங்கி வேலை செய்து வருகிறார். அவருடைய 10 வயது மகள் கீதா, தனது சொந்த ஊரில் இருக்கும் பாட்டி வீட்டில் தங்கி 5ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள கரும்பு காட்டில் கீதா மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் சம்பவம் இடத்திற்கு வந்த பொலிஸார், சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிறுமி என்ன காரத்திற்காக கொலை செய்யப்பட்டார் என்பது பொலிஸாருக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அப்பகுதியை சேர்ந்த கணேசன் என்கிற 60 வயது முதியவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பில் உருவாகும் அதிசயம் : ஆழ்கடலிற்குள் இப்படியொரு மாற்றமா?

 

கொழும்பில் உருவாகும் அதிசயம்

கொழும்பு துறைமுக நகருக்கான நிலத்தை உருவாக்கும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்திருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில் கடலில் நிலம் நிரப்பும் நடவடிக்கை முடிவடைந்துள்ளதை உறுதிப்படுத்தும் வகையில் சில புகைப்படங்கள் டுவிட்டரில் பதிவிடப்பட்டுள்ளன.

இதேவேளை, அங்கு கட்டுமான பணிகள் விரைவில் ஆரம்பமாகும் எனவும், உருவாக்கப்படும் 269 ஹெக்டெயர் நிலப்பகுதியில், 116 ஹெக்ரெயர் நிலமானது சீன நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும் எனவும் தெரியவருகிறது.

இதேவேளை, துறைமுக நகர் எனப் பெயரிடப்பட்ட இந்த திட்டம் தற்போது கொழும்பு நிதி நகரத் திட்டம் என பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஆழ்கடலிற்குள் கடற்கரை உருவாகும் அதிசயம் கொழும்பில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வவுனியாவில் மோட்டார் சைக்கில் விபத்து : ஒருவர் படுகாயம்!!

 

மோட்டார் சைக்கில் விபத்து

வவுனியா புகையிரநிலைய வீதியில் இன்று (16.01.2019) 11.30 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ் விபத்துச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா சைவப்பிரகாச கல்லூரி வீதியிலிருந்து வந்த மோட்டார் சைக்கில் புகையிரநிலைய வீதிக்கு ஏற முற்பட்ட சமயத்தில் புகையிரநிலைய வீதியூடாக வவுனியா நகர் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கில் மோதி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் இப்படியொரு மனிதர்களா? பிரமிக்க வைக்கும் செயல்!!

 

பிரமிக்க வைக்கும் செயல்

மாலியத்த பிரசேத்தில் ஏழ்மையிலும் எடுத்துக்காட்டாக மாறிய குடும்பம் ஒன்று தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. பிரதேசத்தில் பெண் ஒருவர் தொலைத்த 2 பவுண் தங்க சங்கிலி, பென்டன், பணத்தை உரிமையாளரிடம் கொடுப்பதற்கு இந்த குடும்பத்தினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த பொருட்களை தொலைத்த நபரின் குடும்ப உறுப்பினர் ஒருவர் இந்த செயற்பாடு குறித்து பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார். கடந்த வாரம் கதிர்காமத்தில் இருந்து கெகனதுரே பிரதேசத்திற்கு சென்ற எனது தங்கை தனது பையை தொலைத்து விட்டார். அதில் பெறுமதியான நகை, பணம், அடையாள அட்டை, கடன் அட்டை உட்பட பல முக்கியமான பொருட்கள் காணப்பட்டன.

எவ்வளவு தேடியும் அதனை கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியில் மனதை சமாதானப்படுத்தி கொண்டு தேடும் நடவடிக்கையை கைவிட்டோம். இந்நிலையில் நேற்று காலை கடிதம் ஒன்று கிடைத்தது. அடையாள அட்டை ஆவணங்களை பெற்றுக் கொள்ள வருமாறு விலாசம் குறிப்பிடப்பட்டது.

அதில் பெயர், தொலைபேசி இலக்கம் ஒன்றும் காணப்படவில்லை. பணம் நகை அனைத்தையும் எடுத்து கொண்டு அடையாள அட்டை மற்றும் சாரதி அனுமதி பத்திரத்தை மாத்திரம் யாரோ விட்டு சென்றுள்ளார்கள் என நாங்கள் நினைத்தோம்.

பரவாயில்லை என நினைத்து அவ்விடத்திற்கு சென்ற போது கடை நடத்து ஒருவர் பையை எங்களிடம் கொடுத்தார். அதில் அனைத்து பொருட்களும் அப்படியே காணப்பட்டன. கண்களில் கண்ணீர் வந்துவிட்டது. இந்த மனிதாபிமானம் குறித்து கூற வார்த்தையில்லை. அதில் 2 லட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் காணப்பட்டன.

அதனை எடுத்தவர்கள் வைத்து கொள்வதற்கான தேவைகள் அவர்களிடம் அதிகம் காணப்பட்டது. திருப்பி கொடுத்தவர்கள் மிகவும் ஏழ்மையான குடும்பத்தினர். மற்றவர்களின் கழுத்தில் இருப்பதனை பறித்து செல்லும் மக்கள் மத்தியில் இந்த குடும்பத்தினரை பாராட்ட வார்ததைகள் இல்லை” என குறிப்பிடப்பட்டிருந்தது.

வீதி விபத்தில் இரு இளைஞர்கள் பரிதாபமாக பலி!!

 

இரு இளைஞர்கள் பரிதாபமாக பலி

பொலன்னறுவை – தலுகான பகுதியில் நேற்று இடம்பெற்ற வீதி விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். மோட்டார்சைக்கிள் ஒன்றின் மீது ரிப்பர் வாகனம் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இதில் 17 மற்றும் 18 வயதுடைய இளைஞர்களே இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மேலும், இந்த விபத்திற்கு காரணமான ரிப்பர் வாகனம் தப்பிச் சென்றுள்ளதாக அப்பகுதியை சேர்ந்தோர் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் உயிரிழந்த இளைஞர்களையும், அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளையும் மீட்டுள்ளனர். இது தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கி சூடு : தமிழ் இளைஞன் மீது 21 முறை துப்பாக்கி சூடு!!

கொழும்பின் புறநகர் பகுதியான வத்தளையில் கடந்த வாரம் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் இரண்டு தமிழ் இளைஞர்கள் உயிரிழந்தனர்.

போதைப்பொருள் வர்த்தக குழுக்கள் இரண்டிற்கு இடையில் நீண்ட காலம் ஏற்பட்ட முரண்பாட்டுக்கு அமைய இந்த துப்பாக்கி பிரயோம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

டி56 ரக துப்பாக்கி பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழவர்களின் சட்ட வைத்திய அறிக்கை வெளியாகியுள்ளது.

அதற்கமைய உயிரிழந்த 35 வயதான ராஜேந்திரன் எனப்படும் சால்ஸ் என்பவரின் மீது 21 முறை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவரது உடலில் 21 துப்பாக்கி சன்னங்கள் பாய்ந்த காயங்கள் உள்ளதாக கூறப்படுகின்றது.

அவரது வாகனத்தில் பயணித்த 33 வயதான மதி என்ற இளைஞனின் உடலில் 4 துப்பாக்கி பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதனால் அவர் உயிரிந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்துத வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் நடந்த அதிசயம் : இரண்டு மணித்தியாலத்தில் உயிர் தப்பிய நபர்!!

 

நடந்த அதிசயம்

ஹோமாகம வைத்தியசாலையில் அபூர்வ சத்திர சிகிச்சை ஒன்றை இலங்கை வைத்தியர்கள் செய்து சாதனை படைத்துள்ளனர். நபர் ஒருவருக்கு தொண்டைக்கு அருகில் புற்றுநோய் ஏற்பட்டதன் காரணமாக உணவு அருந்த, நீர் பருக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உயிரிழக்கும் ஆபத்து ஏற்பட்டது.

பாணந்துறை பிரதேசத்தை சேர்ந்த மொஹமட் நியாஸ் என்ற 56 வயதுடைய நபரே இந்த நிலைமைக்கு முகம் கொடுத்துள்ளார். எனினும் குறித்த நபருக்கு எவ்வித வெட்டு காயங்களையும் ஏற்படுத்தாமல், அந்த புற்றுநோயை அகற்றுவதற்கு இலங்கை வைத்தியர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Transoral endoscopic transonic தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த சத்திர சிகிச்சைக்குள்ளான நோயாளி இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் உடல்நிலை தேறியுள்ளார். இந்த சத்திர சிகிச்சை இலங்கை வரலாற்றில் மிக முக்கியமான சத்திர சிகிச்சையாக கருதப்படுகின்றது.

ஒரு வயதுக் குழந்தைக்கு கொடூரமாக சித்திரவதை : சந்தேகநபரை தந்திரமாக பிடித்த பொலிஸார்!!

 

கொடூரமாக சித்திரவதை

ஒரு வயதும், பத்து மாதமுமான குழந்தையை சிகரெட்டால் சுட்டு சித்திரவதை செய்த நபர் சியம்பலாண்டுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோத மனைவியின் குழந்தையையே குறித்த நபர் இவ்வாறு கொடூரமாக சித்திரவதை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த சம்பவத்தை பற்றி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருப்பதை அறிந்த சந்தேக நபர் அந்த பிரதேசத்தைவிட்டு தப்பிச் சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அதன் பிறகு, சந்தேக நபர் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், பல தந்திரோபாயங்களை பயன்படுத்தி பெண் பொலிஸ் அதிகாரியை நியமித்து அவருடன் தொலைபேசி ஊடாக ஒரு காதல் தொடர்பை ஏற்படுத்தியுள்ளனர்.

சந்தேக நபர் புதிய காதலியை பார்க்க தொம்பகவெல நகரத்திற்கு வந்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மாத்தறை பிரதேசத்தைச்சேர்ந்த சுகத் என்ற சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சியம்பலாண்டுவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது இந்த மாதம் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதேவேளை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட குழந்தையின் தாயார் தற்போது வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.