இலங்கை காட்டுக்குள் உல்லாசத்தில் பெருமளவு வெளிநாட்டவர்கள் : ஒருவர் பரிதாபமாக மரணம்!!

அம்பலந்தோட்டை உஸ்ஸன்கொட காட்டுப் பகுதியில் இடம்பெற்ற சுற்றுலா முகாமில் வெளிநாட்டவர் ஒருவர் நேற்று காலை உயிரிழந்துள்ளார். சுற்றுலா அமைச்சின் அனுசரனையுடன் இடம்பெறும் இந்த முகாமில் உயிரிழந்தவர் இந்தியர் என தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர் நேற்று காலை திடீரென கீழே விழுந்துள்ளார். பின்னர் அவரை உடனடியாக அம்பியுலன்ஸ் வண்டியின் உதவியுடன் அம்பலந்தோட்டை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

எனினும் அவரை வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் அதிகளவில் மதுபானம் அருந்தியமையே இந்த மரணத்திற்கான காரணமாக கூறப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உஸ்ஸன்கொட காட்டுப் பகுதியில் சுற்றுலா பயணிகளுக்காக முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் 300 நாடுகளைச் சேர்ந்த மூவாயிரத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

துப்பாக்கி இல்லாத சதிப்புரட்சி காரணமாக 1000 மில்லியன் டொலரை இழந்த இலங்கை!!

2019 ஆம் ஆண்டு முதல் இரண்டு வாரங்களில் இலங்கை மத்திய வங்கி மற்றும் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யப்பட்டிருந்த வெளிநாடு முதலீடுகள் வேகமாக திரும்பபெறப்பட்டுள்ளன.

2018 ஆம் ஆண்டில் இலங்கை பிணை முறி மற்றும் பங்குச் சந்தையில் இருந்து ஒரு பில்லியன் (1000 million) டொலர் வெளியேற்றபட்ட நிலையில், 2019 ஆம் 11 பில்லியன் ரூபாய் வெளியேற்றப்பட்டுள்ளது.

துப்பாக்கி இல்லாத சதிப்புரட்சி என சபாநாயகர் கூறிய அரசியலமைப்பு நெருக்கடியின் விளைவாக இலங்கையில் பிணை முறி மற்றும் பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டிருந்த வெளிநாட்டு முதலீடுகள் திரும்பபெறப்பட்டன.

அரசியல் நெருக்கடி தீரக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த 12 மாதங்களில் அல்லது விரைவில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படலாம் என்ற அரசியல் நிச்சயமற்ற நிலைமை காணப்படுகிறது.

2018 ஆம் ஆண்டில் இலங்கை ரூபாய் மதிப்பிழக்க இந்த அரசியல் நிலைமைகள் பிரதான காரணங்களில் ஒன்றாக இருந்தது என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி 11 ஆம் திகதி இலங்கை பிணை முறி மற்றும் பங்குச் சந்தையில் இருந்து முதலீடுகள் வெளியேற்றபட்டுள்ளன. இலங்கை மூலதன சந்தையில் இருந்து முதலீடுகள் வெளியேற்றபடுவது தொடர்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட 2 பேர் : தோழியின் கண்முன்னே நடந்த பரிதாப சம்பவம்!!

 

பரிதாப சம்பவம்

விழுப்புரம் மாவட்டத்தில் தோழியின் கண்முன்னே இரண்டு நண்பர்களும் சுனையில் மூழ்கி இறந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் வண்டிமேடு பகுதியை சேர்ந்த தங்கராசு என்பவருடைய மகன் சுந்தர்ராஜ் (வயது 19). இவர் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் கணினி-அறிவியல் பிரிவில் 2ம் ஆண்டு படித்து வருகிறார்.

இவருடன் அதே பிரிவில் பயிலும் சுவேதா(19) மற்றும் வேறு ஒரு மாணவி என 3 பெரும் சேர்ந்து, நேற்று கல்லூரியை கட்டடித்துவிட்டு செஞ்சி அருகே பனமலை கிராமத்தின் மலை உச்சி கோவிலுக்கு சென்றுள்ளனர்.

அங்கு சுவாமி தரிசனம் முடிந்த பின்னர், கோவிலின் பின்புறம் அமைந்துள்ள சுனை கரையோரத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது திடீரென அங்கிருந்த பாசியில் கால் தடுமாறி சுவேதா சுனையில் சிக்கியுள்ளார். நீச்சல் தெரியாமல் சுவேதா திணறுவதை பார்த்த சுந்தர்ராஜ் வேகமாக தண்ணீருக்குள் குதித்து காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால் அவருக்கும் நீச்சல் தெரியாததால் நீருக்குள் மூழ்கியுள்ளார்.

இதனை பார்த்த மற்றொரு தோழி என்ன செய்வதென தெரியாமல் அதிர்ச்சியில் சுனையில் குதித்துள்ளார். ஆனால் அவரையும் சுனை மூழ்கடிக்க முயன்றதால், அங்கிருந்த கல்லை பிடித்து கொண்டு உதவி கேட்டு கூச்சலிடம் ஆரம்பித்துள்ளார்.

சத்தம் கேட்டு கோவிலில் இருந்து ஓடிவந்த பொதுமக்கள் வேகமாக அந்த பெண்ணை மீட்டெடுத்தார். அதன் பிறகு அந்த மாணவி கொடுத்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் ஆற்றில் மூழ்கிய சுந்தர்ராஜ் மற்றும் அவருடைய தோழி சுவேதாவை சடலமாக மீட்டெடுத்தனர்.

இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பொலிஸார், சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மனைவியின் வட்ஸ் அப்பால் வந்த வினை : உயிரை விட்ட கணவன்!!

 

உயிரை விட்ட கணவன்

இந்தியாவில் மனைவி தொடர்ந்து வட்ஸ் அப்பில் மெசேஜ் செய்து கொண்டிருந்த விடயம் தொடர்பாக ஏற்பட்ட சண்டையில் கணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தெலுங்கானா மாநிலத்தின் பெட் பஷீர்பத் கிராமத்தை சேர்ந்தவர் சரண்தேஜ் ரெட்டி (25) ஆட்டோ ஓட்டுனரான இவரும் பவானி என்ற பெண்ணும் இரண்டாண்டுகளுக்கு முன்னர் காதல் திருமணம் செய்து கொண்டனர். தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. சில தினங்களுக்கு முன்னர் பவானி தொடர்ந்து வாட்ஸ் அப்பில் யாருக்கோ மெசேஜ் அனுப்பி வந்துள்ளார்.

இது தொடர்பாக கணவன் – மனைவி இடையில் சண்டை ஏற்பட்ட நிலையில் பவானி கோபித்து கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதன் காரணமாக மன வேதனையடைந்த சரண்தேஜ் வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து சரண்தேஜின் குழந்தை அருகில் அழுது கொண்டிருந்த நிலையில் சத்தம் கேட்டு அங்கு வந்த அருகில் வசிப்பவர்கள் சரண்தேஜ் சடலமாக தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்து பொலிசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் சரண்தேஜின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

வவுனியா ஓமந்தையில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் படுகாயம்!!

 

முதியவர் படுகாயம்

வவுனியா ஓமந்தையில் நேற்று(12.01) இரவு இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஓமந்தை நகர்ப் பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் நேற்று இரவு உணவருந்திவிட்டு வீதியை கடக்க முற்பட்ட முதியவரை வவுனியாவிலிருந்து சென்ற கப்ரக வாகனம் ஒன்று மோதியுள்ளது.

இதன் காரணமாக தலையில் பலத்த அடிபட்டமையின் காரணமாக முதியவரை அங்கிருந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த வாகனத்தை செலுத்திய சாரதியை ஓமந்தை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், குறித்த வாகனத்தையும் பொலிஸார் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இலங்கையில் ஹீரோவாக செயற்பட்ட தந்தை : அரசாங்கம் கொடுத்த இன்ப அதிர்ச்சி!!

 

ஹீரோவாக செயற்பட்ட தந்தை

கண்டி – யட்டிநுவர வீதியில் நான்கு மாடிக் கட்டிடமொன்றில் அண்மையில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிர்தப்பிய குடும்பத்திற்கு வீடொன்றை வழங்க அமைச்சர் சஜித் பிரேமதாச நடவடிக்கை எடுத்துள்ளார்.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இந்தக் குடும்பத்தவர்கள் தற்போது வைத்தியசாலையில் இருந்து வெளியேறி கண்டி கெப்பெட்டிபொல ஓய்வு மண்டபத்தில் தற்காலிகமாக தங்கியுள்ளனர். அமைச்சர் சஜித் பிரேமதாசவின் பணிப்புரைக்கு அமைய நகர குடியிருப்பு அபிவிருத்தி அதிகார சபை அவர்களுக்கு புதிய வீடொன்றை வழங்குவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. அதிகார சபையின் தலைவர் ரஞ்சித் ஷான் கஹவெல அந்த குடும்ப உறுப்பினர்களை சந்தித்து தகவல்களைப் பெற்றுக் கொண்டார்.

கண்டி, யட்டிநுவர வீதியில் 5 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் தனது குடும்பத்தையே காப்பாற்றிய வீர தந்தையான ராமராஜ் கண்ணீருடன் கருத்து வெளியிட்டிருந்தார். தீயில் எரிந்து உயிரை விடுவதை விட பிள்ளைகளின் உயிரை காப்பாற்றுவதே நோக்கமாக இருந்ததாகவும், அதனாலேயே பிள்ளைகளை மேல் இருந்து கீழே தூக்கி வீசியதாகவும் அவர் தெரிவித்தார்.

தான் வாழ்ந்த இடம் முழுவதும் தீப்பற்றி எரிந்துள்ளது. வாழ ஒரு இடமில்லை. குடும்பத்தோடு நடு வீதிக்கு வந்துவிட்டோம். வைத்தியசாலையில் இருந்து எங்கு செல்லப்போகிறோம் என தெரியவில்லை. வாழ இடமில்லை. பிள்ளைகளுக்கு ஒரு பாடசாலை இல்லை என ராமராஜ் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். இவ்வாறான நெருக்கடியான நிலையில் அந்த குடும்பத்திற்கு வீடொன்றை வழங்க அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

வெளிநாடொன்றில் இலங்கையர்களுக்கு இடையில் மோதல் : ஒருவர் கத்தியால் குத்திக் கொலை!!

மாலைத்தீவில் இலங்கையர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார் என அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Alif Dhaalu Atoll பகுதியில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் பணியாற்றிய இலங்கையரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் மற்றுமொரு இலங்கையருடன் ஏற்பட்ட வாய்த்தகராறு மோதலாக மாறிய நிலையில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கத்தியால் குத்தியவருக்கு எந்தவொரு ஆபத்தோ, காயங்களோ ஏற்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

இரவு 08.50 மணியவில் இந்த கொலை சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இலங்கையில் கொண்டு வரப்படும் புதிய தடை!!

 

புதிய தடை

இலங்கையில் புதிய தடையொன்று விரைவில் வரவுள்ளதாக கல்வியமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் பாடசாலை நேரத்தில் அதாவது காலை 7.30 முதல் பிற்பகல் 1.30 வரையான நேரத்தில் பகுதி நேர வகுப்புக்களை நடத்த தடை விதிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த விடயத்தை கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டி கொழும்பு ஊடகமொன்று இன்றைய தினம் செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன், இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தில் கல்வியமைச்சர் கையொப்பமிட்டுள்ளதாக தெரியவருகிறது.

மேலும், கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் பாடசாலை நேரத்தில் மாணவர்களுக்கு பகுதி நேர வகுப்பு நடத்தப்படுவதாகவும், இது தொடர்பில் பெற்றோர்களும் அவதானிக்க வேண்டும் எனவும் கல்வியமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

வவுனியாவில் வன்னிப் பல்கலைக்கழகத்தை உடனடியாக ஆரம்பிக்கவும் : சத்தியலிங்கம் கோரிக்கை!!

சத்தியலிங்கம் கோரிக்கை

வவுனியாவில் இயங்கும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை வன்னிப்பல்கலைக் கழகமாக தரமுயர்த்துவது தொடர்பிலான தீர்மானத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு வடமாகாணம் முன்னாள் சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று முன்தினம் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் அமைந்துள்ள அமைச்சரின் அலுவலகத்தில் அமைச்சர் ரவூக் ஹக்கீமை சந்தித்த போதே இந்தக்கோரிக்கையை முன்வைத்தார்.

கடந்த 28 வருடங்களுக்கு முன்னர் வவுனியா பல்கலைக்கழக கல்லூரியாக ஆரம்பிக்கப்பட்டு பின்னர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகமாக இயங்கிவரும் நிலையில் பலரது வேண்டுகோளிற்கமைய வன்னி பல்கலைக்கழகமாக தரமுயர்த்த உயர்கல்வி அமைச்சால் அறிவிக்கப்பட்டிருந்த போதும் இதுவரையில் வர்த்தமானியில் அறிவித்தல் வெளியிடப்படவில்லை.
இந்த நிலையிலேயே மேற்படி சந்திப்பு நடைபெற்றது.

உயர்கல்வி அமைச்சருடனான சந்திப்பில் வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம், பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மோகன், வவுனியா வளாக முதல்வர் கலாநிதி மங்களேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

வவுனியாவில் சஜித் பிரேமதாசவின் பிறந்ததினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் வழங்கல்!!

 

வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார துறை அமைச்சர் சஜித் பிரேமதாசாவின் 52 வது பிறந்ததினத்தை முன்னிட்டு வவுனியாவில் இன்று (12.01) மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது.

வவுனியா ஓமந்தை வேப்பங்குளத்தில் வன்னி மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பிரச்சாரச் செயலாளர் கே.கே.சந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் தலைவர் கெ.கலன்சூரிய கலந்து கொண்டு மரக்கன்றுகளை வழங்கி வைத்தார்.

வவுனியா மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பிரச்சாரச் செயலாளர் எஸ்.சுரேஸ்குமாரின் ஏற்பாட்டில் ஓமந்தை வேப்பங்குளம் ஸ்ரீ சித்திவினாயகர் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாட்டினைத் தொடர்ந்து அதிதிகள் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியிருந்தது.

நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் தலைவர் கெ.கலன்சூரிய, இன மத கட்சி பேதமின்றி எந்த மக்களுக்கு வீடுகள் இல்லையோ அந்த மக்களுக்கு வீடுகள் வழங்கப்படும்.

அத்துடன் ஓமந்தை பிரதேசத்தில் வீடில்லாத 247 குடும்பங்களுக்கு வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். வடக்கு மாகாணத்திற்கு மாத்திரம் இலவச வீட்டுத்திட்டங்களை வழங்க வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார துறை அமைச்சர் சஜித் பிரேமதாச உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.

நிகழ்வில் ஐக்கிய தேசியக்கட்சியின் வவுனியா மாவட்ட பிரதான அமைப்பாளர் பி.ஏ.கருணாதாச, வவுனியா தெற்கு தமிழ் பிரதேசபையின் உறுப்பினர் ஆர்.ஏ.அமலியா, வவுனியா நகரசபை உறுப்பினர் ஆர்.ஜானக மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

வவுனியாவில் பாடசாலை மாணவர்களுக்கு வெளிச்சம் நிறுவனத்தினால் உதவிகள்!!

 

கனகராயன்குளத்தில் அமைந்துள்ள வெளிச்சம் நிறுவனத்தினால் இன்றைய தினம் பல பாடசாலைகளுக்கு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவும் பொருட்டு சுவிஸ் மென்பந்து கரப்பந்து துடுப்பாட்ட சம்மேளனத்தின் நிதி அனுசரணையுடன் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

அந்த வகையில் மு.பனிக்கன்குளம் அ.த.க பாடசாலையைச் சேர்ந்த 59 மாணவர்களுக்கும், குஞ்சுக்குளம் பண்டாரவன்னியன் வித்தியாலயத்தினைச் சேர்ந்த 12 மாணவர்களுக்கும், பெரியகுளம் அ.த.க பாடசாலையினைச்சேர்ந்த 44 மாணவர்களுக்கும், வ.கொல்லர் புளியங்குளம் ஸ்ரீ ராம கிருஷ்ண வித்தியாலயத்தினைச் சேர்ந்த 38 மாணவர்களுக்கும் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் நிறுவனத்தின் உப தலைவர் T.நடராசா, இணைப்பாளர் வே.பிரேமானந்தன், நிறுவன உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் நலன்விரும்பிகள் கலந்து கொண்டனர்.

வவுனியாவில் அமைதி கல்வித்திட்டம் தொடர்பான ஆரம்ப நிகழ்வு!!

அமைதி கல்வித்திட்டம் தொடர்பான ஆரம்ப நிகழ்வு வவுனியா பூந்தோட்டம் தேசிய கல்வியல் கல்லூரியில் பீடாதிபதி க.சுவர்ணராஜா தலைமையில் இன்று (12.01) நடைபெற்றது.

தேசிய கல்வியல் கல்லூரியில் ஆசிரியர்களாக கல்விபயிலும் மாணவர்களுக்கு அமைதி கல்வித்திட்டம் தொடர்பான பத்து நாட்கள் பயிற்சி வழங்கப்படவுள்ளது.

அமைதி, மதிப்பை உணர்தல், உள்ளேயிருக்கும் வலிமை, தன்னை உணர்தல், தெளிவு, புரிந்துகொள்ளல், தன்மானம், தேர்ந்தெடுத்தல், நம்பிக்கை மற்றும் திருப்தி போன்ற ஆற்றல்மிகு பாடத்திட்டங்கள் ஆசிரிய மாணவர்களுக்கு முன்னெடுக்கப்படவுள்ளது.

நிகழ்வில் அமைதி கல்வித்திட்டத்தின் இணைப்பாளர் பி.விமலநாதசர்மா, உளவளத்துணை ஆலோசகர் செல்வி.குகானந்தராஜா கீர்த்திகா மற்றும் கல்லூரியின் ஆசிரிய மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

வவுனியாவில் கடந்த வருடம் டெங்கு நோய் தாக்கத்தால் 596 பேர் பாதிப்பு, இருவர் மரணம்!!

 

டெங்கு நோய்

வவுனியா மாவட்டத்தில் கடந்த வருடம் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 596 பேர் என வவுனியா பிராந்திய தொற்றுநோய் தடுப்புபிரிவின் வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார். கடந்த வருடம் வவுனியாவில் ஏற்பட்டுள்ள டெங்கு நோயின் தாக்கம் தொடர்பில் அவரிடம் இன்று வினவிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அதிகபட்சமாக 405 நோயாளர்களும், செட்டிகுளம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 107 நோயாளர்களும், வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 36 நோயாளர்களும், வவுனியா தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 48 நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் டெங்கு நோய் தாக்கத்தின் மூலம் வவுனியாவை சேர்ந்த இரண்டு பேர் கடந்த வருடம் மரணித்துள்ளனர். ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்திருந்ததுடன், இன்னுமொருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் விதமாக ஒவ்வொரு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் உள்ள பொதுமக்களின் கிணறுகளில் டெங்குநுளம்பை அழிக்கும் நோக்கில் மீன்கள் விடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவைச் சேர்ந்த பெண் லண்டனில் தற்கொலைக்கு முயற்சி : கணவன் எடுத்த அதிரடி முடிவு!!

 

தற்கொலைக்கு முயற்சி

லண்டனில் வவுனியாவை சேர்ந்த பெண் ஒருவர் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த சம்பவம் ஒன்று கடந்த வருட இறுதியில் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. எனினும் குறித்த பெண் காப்பாற்றப்பட்ட நிலையில், வவுனியாவிற்கே அழைத்து வந்து அந்த பெண்ணின் கணவன் விட்டுச் சென்றுள்ளதாகவும் தெரியவருகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த பெண்ணின் பெற்றோர்கள் கட்டாயத்தின் பேரில் யாழ்ப்பாணத்தை பூர்வீமாக கொண்ட லண்டன் இளைஞருக்கு திருமணம் செய்துவைத்துள்ளனர். எனினும், திருமணம் முடிந்த ஒரு மாதகாலத்திற்கு பின்னர் குறித்த பெண் தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இறுதி நேரத்தில் கணவனின் குடும்பத்தினரால் அந்த பெண் காப்பாற்றப்பட்டுள்ளார்.

தற்கொலைக்கான காரணத்தை அந்த பெண்ணிடம் வினவிய போது, திருமணத்திற்கு முன்னர் இளைஞர் ஒருவரை காதலித்தாகவும், எனினும், பெற்றோர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்டாயத்தின் பேரில் திருமணம் செய்து வைத்ததாவும் கூறியுள்ளார்.

இதனையடுத்து, குறித்த பெண்ணை வவுனியாவிற்கு அழைத்து வந்த அவரின் கணவர், நடந்ததை பெண்ணின் பெற்றோருக்கு தெரிவித்துவிட்டு அங்கேயே விட்டிட்டு லண்டன் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இடமாற்றத்தால் மனமுடைந்த வங்கி ஊழியர் தூக்கில் தொங்கி தற்கொலை!!

 

தூக்கில் தொங்கி தற்கொலை

வங்கி இடமாற்றத்தினால் மனமுடைந்த அரச வங்கி ஊழியர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார். குறித்த பெண் நேற்றிரவு வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில், மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்த பெண் திருகோணமலையைச் சேர்ந்த 29 வயதுடைய இலங்கை வங்கியில் கடமையாற்றிய ஊழியர் என தெரிவிக்கப்படுகின்றது.

அவரது கணவர் மற்றும் உறவினர்கள், இலங்கை வங்கியில் கடமையாற்றி வந்த குறித்த பெண் தற்காலிகமாக மொரவெவ இலங்கை வங்கிக்கு இடமாற்றம் கிடைத்தமையினால் மன உளைச்சல் காரணமாக தூக்கில் தொங்கியதாக பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.

பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக உட்படுத்தப்பட்டுள்ளதுடன் பொலிஸாரினால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தந்தையை கொலை செய்து தாயை தாக்கி தலைமறைவான மகன் : இலங்கையில் நடந்த பயங்கரம்!!

 

இலங்கையில் நடந்த பயங்கரம்

தனிப்பட்ட குரோதம் காரணமாக ஏற்பட்ட மோதலில் அம்பலாந்தோட்டை பகலபெரகம பிரதேசத்தில் மகன் தந்தையை கொலை செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கருத்து முரண்பாட்டின் காரணமாக அம்பலந்தொட – அரவனமுல்ல பிரதேசத்தில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். அம்பலந்தொட – பகலபெரகம – அரவனமுல்ல பிரதேசத்தினை சேர்ந்த 56 வயதுடைய இரு பிள்ளகைளின் தந்தையே தனது மகனின் மூலம் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை கொலை செய்யப்பட்டுள்ளதுடன், தாயையும் தாக்கி, தாயின் முடியை வெட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 35 வயதுடைய சந்தேக நபரான மகன் தற்போது தலைமறைவாகியுள்ளார்.

பூச்சாடி ஒன்றினால் நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்த தந்தை ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்துள்ளார். கொலையுடன் சம்பந்தப்பட்ட மகன் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதுடன், சந்தேகநபரை கைது செய்வதற்காக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.