கேரள மாநிலத்தில் குடும்பத்தாருடன் இணைந்து கள்ளநோட்டு அடித்த தொலைக்காட்சி நடிகையை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கள்ளநோட்டு கும்பலின் பின்னணியில் மலையாள தொலைக்காட்சி நடிகை சூரிய சசிகுமாருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து அவரது பங்களா வீட்டை பொலிசார் ரகசியமாக கண்காணித்து வந்துள்ளனர். நேற்று அதிகாலை நேரத்தில் பொலிஸ் படையினர் அவரது பங்களா வீட்டில் நுழைந்து அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு கள்ள நோட்டுகள் அச்சடிக்கப்படுவது கண்டு பிடிக்கப்பட்டது.
டிகை சூரிய சசிகுமார் அவரது தாயார் ரமா தேவி தங்கை சுருதி ஆகியோரை கைது செய்தனர்.அங்கிருந்து ரூ.57 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகளும் கைப்பற்றபட்டது.
கடந்த 8 மாதங்களாக நவீன கருவிகள் மூலம் கள்ள நோட்டுகள் அச்சடித்து புழக்கத்தில் விட்டது விசாரணையில் தெரியவந்தது.
தற்போது இவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது, சொகுசு வாழ்க்கை வாழவும் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளவும் இவ்வாறு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 12 வயது சிறுமி கற்சிலையாக மாறப்போகிறாள் என்ற செய்தி பரவியதால் மக்கள் கோவிலில் குவிந்துள்ளனர்.
பழநி என்பவரின் மகள் 6 ஆம் வகுப்ப படித்து வருகிறாள். கடவுள் பக்தி அதிகம் கொண்ட சிறுமி, தனது 13 வது வயதில் கற்சிலையாக மாறிவிடுவாள் என கனவு கண்டுள்ளார்.
இந்நிலையில், 13 வது பிறந்தநாளான நேற்று சிறுமிக்கு சேலை உடுத்து அம்மன் கோயிலுக்கு அழைத்து சென்றுள்ளார். இந்த செய்தி அங்கு பரவியதால் மக்கள் அங்குகூடி ஓம் சக்தி என கூச்சமிட்டுள்ளனர், ஆனால் அப்படி எதுவும் நடக்காத காணத்தால் மக்கள் திரும்பி சென்றுள்ளனர்.
விரலை காட்டி செல்பி எடுத்து சமூக வலைதளத்தில் பதிவேற்றுவது மிகவும் தவறான விடயம் என்று ஐ.பி.எஸ்.ரூபா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சசிகலா அடைக்கப்பட்டு இருக்கும் பெங்களூர் பரப்பன அக்கிரகார சிறையில் நடக்கும் முறைகேடுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர் ஐ.பி.எஸ்.ரூபா.
இந்த விடயத்தில் அவரின் அணுகுமுறை காரணமாக இந்தியா முழுக்க பலரது கவனத்தையும் தன்பக்கம் ஈர்த்தவர் இந்த பொலிஸ் அதிகாரி.
இந்த நிலையில் இவர் செல்பி குறித்து கூறிய விடயம் ஒன்று பலரது பாராட்டுதலையும் பெற்று வருகிறது.
சமூக வலைத்தளங்களில், கை விரல்கள் தெரியும்படி செல்பி எடுத்து போடக்கூடாது என்று சில தினங்களுக்கு முன்னர் தகவல் வெளியானது.
அப்படி செய்தால் நம்முடைய கைரேகை தகவல்கள் வெளியாகிவிடும் என்றும் கூறப்பட்டது. இதெல்லாம் வதந்தி என்றும் சிலர் மறுத்தனர்.
ஆனால் தற்போது இதே எச்சரிக்கையை ஐபிஎஸ் ரூபாவும் விடுத்துள்ளார். விரலை காட்டி செல்பி எடுத்து சமூக வலைதளத்தில் போடுவதும் மிகவும் தவறான விடயம் என்று ஐ.பி.எஸ்.ரூபா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விரல்களை காட்டி செல்பி எடுப்பதில் ஆபத்து உள்ளது, சைபர் குற்றவாளிகள் உங்கள் தகவலை திருடி விடுவார்கள் என்றும் கூறியுள்ளார்.
இதற்கு அவர் விளக்கமும் அளித்துள்ளார், நம்முடைய, செல்பியில் உள்ள கை விரல்களை ஜூம் செய்து அதை ஸ்கேன் செய்து பின் அதை வைத்து நமது கை ரேகையை எடுப்பார்கள். பின் அதை வைத்து பெரிய அளவில் மோசடிகளை செய்வார்கள் என்று கூறியுள்ளார்.
மேலும் இதை வைத்து போலியான கைரேகை உருவாக்கி, தவறு நடக்கும் இடங்களில் நம்முடைய கைரேகையை விட்டு செல்ல வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனால் தயவு செய்து கைரேகை தெரியும்படி புகைப்படம் போட வேண்டாம் என்று ஐபிஎஸ் ரூபா கோரிக்கை வைத்துள்ளார்.
பொல்கொல்ல திறந்த பல்கலைக்கழகத்தில் எஸ்.எம்.எஸ் ஒன்றினால் மாணவ குழுக்களுக்கு இடையில் மோதல் நிலை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பல்கலைக்கழத்தின் பொறியியல் பிரிவின் இரண்டாம் வருட மாணவர்கள் குழுக்கள் இரண்டே இவ்வாறு மோதலில் ஈடுபட்டுள்ளனர். எஸ்.எம்.எஸ் ஒன்றினால் இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக கட்டுகஸ்தொட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சக மாணவ, மாணவியருக்கு இரண்டாம் ஆண்டு மாணவர் அனுப்பிய எஸ்.எம்.எஸ் பதிவில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இது விவாதமாக மாறி இறுதியில் வன்முறையாக மாறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பல்கலைக்கழத்தின் பாதுகாப்பு பிரிவினரால் இந்த மோதலில் தலையிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் பொலிஸ் அதிகாரிகளின் தலையீட்டில் மோதல் அமைதியாகியுள்ளதுடன், மாணவர்கள் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
பொலிஸ் பதிவுப் புத்தகத்தில் கையொப்பமிட்ட பின்னர் இரு குழுக்களும் பொலிஸ் நிலையத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.
பல்கலைக்கழகத்திற்கு இழிவுபடுத்தும் இவ்வகையான விடயங்களில் மீண்டும் ஈடுபடமாட்டோம் என மாணவர்கள் உத்தரவாதத்தை வழங்கிய பின்னரே விடுவிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் காணாமல் போன இளம் யுவதி ஒருவர் பண்டாரவளை பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
கடந்த இரண்ட நாட்களுக்கு முன்னர் பெற்றோருக்கு தெரியாமல் காணாமல் போயிருந்த குறித்த யுவதி பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளார்.
பண்டாரவளை பிரதேசத்தின் எல்லதொட்ட பிரதேசத்தில் சுற்றிதிரிந்த நிலையில் பண்டாரவளை பொலிஸாரினால் அவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
யாழ். தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த 19 வயதான செல்வத்துரை வனித்தா என்ற யுவதி இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
குறித்த யுவதி தனது பெற்றோருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பிற்கு சென்றுள்ளார். கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த பேருந்தில் பண்டாரவளைக்கு சென்றுள்ளார்.
பின்னர் பண்டாரவளை பிரதேசத்தில் சுற்றிதிரிந்த நிலையில் பொலிஸார் கண்டுபிடித்தள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கடவுளின் உத்தரவிற்கு அமைய வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டேன் என சந்தேக நபர் ஒருவர் நீதிமன்றில் தெரிவித்துள்ளார். இரத்தினபுரி நீதவான் நீதிமன்றின் நீதவான் சாலிய சன்ன முன்னிலையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“கடவுள் கனவில் தோன்றி நீதிமன்றை உடைக்குமாறு பணித்தார், நான் உடைத்தேன். அதன் பின்னர் வங்கியைக் கொள்ளையிடுமாறு பணித்தார். அதன் அடிப்படையில் நான் வங்கியைக் கொள்ளையிட்டேன். இன்று நீதிமன்றிலிருந்து தப்பிச் செல்லுமாறு கடவுளே பணித்தார்.” என சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபரின் இந்த கூற்றின் ஊடாக கடந்த ஜூன் மாதம் 17ம் திகதி நீதிமன்றின் வழக்குப் பொருட்கள் அடங்கிய அறை உடைத்தது யார் என்பது அம்பலமாகியுள்ளது.
நீதிமன்றின் வழக்குப் பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும் அறையை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த கஞ்சா போதைப் பொருள் களவாடப்பட்டிருந்தது.
கிரியல்ல பிரதேசத்தில் அரச வங்கியொன்றில் கொள்ளையிட முயற்சித்த போது இந்த சந்தேக நபரை பிரதேச மக்கள் மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்தனர்.
நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்காக கடந்த 3ம் திகதி அழைத்துச் செல்லப்பட்ட போது சந்தேக நபர் தப்பிச் செல்ல முயற்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சந்தர்ப்பத்தில் பொலிஸார் சந்தேக நபரை பிடித்து நீதிமன்றில் மீளவும் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.
கடவுளின் உத்தரவிற்கு அமைய தாம் இவ்வாறு கொள்ளையிட்டதாக குறித்த நபர் நீதவானின் எதிரில் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றிலிருந்து தப்பிச் செல்ல முயற்சித்த குற்றத்திற்காக குறித்த நபருக்கு இரண்டாண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வழக்கிலிருந்து தப்பித்து கொள்ள குற்றவாளி வெளிப்படுத்திய தகவல்கள், நீதிமன்றில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதிலுமுள்ள இணையத்தள பாவனையாளர்களுக்கு கூகுள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜிமெயில் தொடர்பாகவே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜிமெயில் ஊடாக சமர்ப்பிக்கப்படும் மற்றும் கிடைக்கப்பெறும் தகவல்களை மூன்றாம் தரப்பினர் கண்காணிக்ககூடும் என்று தெரிவித்துள்ளது.
சுற்றுலாத்திட்டம் மற்றும் விலைகள் தொடர்பான தகவல் சேவை குறித்து கூகுள் நிறுவனத்தின் மூலம், மூன்றாம் தரப்பினர் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் கூகுள் ஊடாக சமர்ப்பிக்கப்படும் மற்றும் பயன்படுத்தப்படும் தகவல்களை வாசித்தல் அதேபோன்று சமர்ப்பிக்கப்படும் தகவல்களை அழித்துவிடுவதற்கு இந்த தரப்பினருக்கு சந்தர்ப்பம் இருப்பதாக தெரியவந்துள்ளது.
இருப்பினும் இந்த அனைத்து நடவடிக்கைகளும் தமது கொள்கைக்கு முரண்பட்டதல்ல என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், தமது பயனாளிகளின் தரவுகளை பயன்படுத்தும் அபாயகரமானதாக இந்த சந்தர்ப்பம் இருப்பதாக இந்த நிறுவனம் மூன்றாம் தரப்பினர் தொடர்பில் செயற்படும் முறை புதுமையானது என்று சர்வதேச விமர்சகர்கள் விமர்சித்துள்ளனர்.
ஜிமெயில் என்பது உலகப்புகழ் பெற்ற மின்னஞ்சல் சேவையாகும். உலகம் முழுவதிலும் 1.4 பில்லியன் பேர் ஜிமெயில் பயன்படுத்துவதாக விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கனடா, ஸ்கார்புரோ பகுதியில் தமிழ் இளைஞன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் புதிய தகவல்களை பொலிஸார் சேகரித்துள்ளனர்.
கடந்த மே மாதம் 27ஆம் திகதி இரவு, யோர்க் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் 21 வயதான வினோஜன் சுதேசன் என்ற இளைஞர் இனந்தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
சுதேசன் Pickle Barrelல் தனது வேலைகளை முடித்துவிட்டு ஜிம்மிற்கு செல்ல தயாரானதாக குடும்பத்தினர் முன்னர் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த சம்பவத்தின் சந்தேக நபர் ஆயுதம் ஒன்றுடன் southbound பகுதியில் தப்பி ஓடுவது அவதானிக்கப்பட்டுள்ளதாக இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டிற்கான சரியான காரணம் இன்னமும் பொலிஸாரினால் கண்டறியப்படவில்லை. ஆனால் தவறாக அடையாளம் காணப்பட்டு அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கூற்றினையும் பொலிஸார் நிரூபிக்கவில்லை.
சந்தேக நபர் 5 அடி ஆண் எனவும், கறுப்பினத்தவராக இருக்கலாம் எனவும், பொலிஸார் அடையாளப்படுத்தியுள்ளனர். அத்துடன் வெள்ளை நிறத்துடனான ஜெக்கட் மற்றும் காக்கி நிறத்திலான காற்சட்டை ஒன்றையும் சந்தேக நபர் அணிந்திருந்தார் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்திற்கும், இந்த சம்பவத்திற்கும் இடையில் என்ன தொடர்பு இருக்கும் என தாம் விசாரித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்வதற்காக வாகனம் அங்கு நிறுத்தப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கறுப்பு நிறத்திலான கார் ஒன்றே நிறுத்தப்பட்டிருந்ததாகவும், கொலை செய்யப்படுவதற்கு முன்னர் 40 நிமிடங்களாக அந்த கார் குறித்த பகுதியில் சுற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருவேறு இடங்களில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் காயமடைந்த இளைஞர்கள் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவங்கள் நேற்று இரவு இடம்பெற்றுள்ளன. இதில் யாழ். கொக்குவில் மேற்கு பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்த நபர்கள் வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
இதில் 24 வயதான இளைஞர் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, குப்பிளான் தெற்கு பகுதியிலும் நேற்று இரவு வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் இதில் 15 வயது பாடசாலை மாணவர் ஒருவர் காயமடைந்துள்ளார். இவர் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் பழைய மாணவனும் இயந்திரவியல் பொறியியளாலருமான கனகேஸ்வரன் கணேஸ்வரன் என்ற இளைஞனே உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டு மின்சார பொருளான பிளக் ‘பொய்ன்ற்’ (‘நீள் மின் இணைப்பு பொருத்தி’)(Power Strip) தயாரிப்பில் உலகில் அதிக நீளமான ‘மின் இணைப்பு பொருத்தி’ (Power Strip) தயாரித்து சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளார் .
மேற்படி சாதனை முயற்சி வவுனியா தமிழ் மத்திய கல்லூரி மண்டபத்தில் கல்லூரியின் அதிபர் எஸ்.அமிர்தலிங்கம் தலைமையில் (28.02.2018) அன்று இடம்பெற்றிருந்தது .
அந்த வகையில் 2.914 மீற்றர் நீளமும், 0.074 மீற்றர் அகலமும், 0.050 மீற்றர் உயரமும் கொண்ட நீள் மின் இணைப்பு பொருத்தியை க. கணேஸ்வரன் தயாரித்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்
இவ்விளைஞனின் உலக சாதனை முயற்சியை நில அளவை திணைக்களத்தினை சேர்ந்த அரச நில அளவையாளர் பி.நிமலன் மற்றும் மின் பொறியிலாளர் கெ.ராஜ்குமார் ஆகியோர் பார்வையிட்டு பரிசோதித்ததுடன் க.கணேஸ்வரனின் உலக சாதனை முயற்சி சம்பந்தமான அறிக்கையை கின்னஸ் சாதனை சான்றிதழுக்காக அனுப்பி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது .
மேற்படி கின்னஸ் உலகசாதனை தொடர்பாக கனகேஸ்வரன் கணேஸ்வரன் தன்னுடைய சமூக வலைதளத்தில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார் .
இந்த கின்னஸ் உலக சாதனையானது இலங்கையின் தனி ஒருவரால் நிகழ்த்தப்பட்ட தொழில்நுட்பரீதியான முதலாவது கின்னஸ் சாதனையாகவும் வட மாகாணத்தில் நிகழ்த்தப்பட்ட தொழில்நுட்பரீதியான முதலாவது கின்னஸ் சாதனையாகவும் வவுனியா மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட முதலாவது கின்னஸ் சாதனையாகவும் மற்றும்
#வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் நிகழ்த்தப்பட்ட முதல் கின்னஸ் சாதனையாகவும் நிகழ்த்திக்காட்டியதில் தமிழனாக பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.
கின்னஸ் உலகசாதனையாளனான வவுனியாவை சேர்ந்த கனகேஸ்வரன் கணேஸ்வரன் அவர்களை வவுனியா நெற் நிர்வாகவும் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கின்றது .
அமெரிக்காவில் தனது குழந்தைகளைக் காப்பாற்றுவதற்காக கடலில் குதித்த இரண்டு குழந்தைகளின் தாய் குழந்தைகளைக் காப்பாற்றி விட்டு தான் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
San franciscoவில் வசித்து வரும் ஆர்த்தி செந்தில்வேல் தனது குடும்பத்தினருடன் Cowell Ranch State கடற்கரைக்கு சென்றிருந்தார்.
ஆர்த்தி தனது பிள்ளைகளை நிற்க வைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக வந்த பெரிய அலை ஒன்று பிள்ளைகளை இழுத்துச் சென்றது.
முன்பின் யோசிக்காத ஆர்த்தி தனக்கு பெரிய அளவில் நீச்சல் தெரியாது என்பதையும் எண்ணாமல் கடலுக்குள் பாய்ந்தார்.
அதற்குள் அவரது உறவினர்கள் அனைவரும் மனித சங்கிலி போல் வரிசையாக நின்று குழந்தைகளை மீட்டனர்.
ஆனால் அதற்குள் ஆர்த்தி கடலில் மூழ்கினார். அவரைக் கண்டுபிடிக்க இயலவில்லை. சிறிது நேரத்திற்குபின் அலை ஒன்று அவரை கரைக்கு கொண்டு வந்தது.
அவருக்கு உயிர் மீட்கும் முதலுதவி நடவடிக்கைகள் (CPR)மேற்கொள்ளப்பட்டும் அவரை காப்பாற இயலவில்லை.
சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் கலிபோர்னியா பொலிஸ் அதிகாரிகள் இந்த கடற்கரை பகுதியில் அலைகள் ஆபத்தானவை என்றும் சுற்றுலாப்பயணிகள் பாதுகாப்பாக இருக்குமாறு நினைவூட்டிக் கொள்வதாகவும் தெரிவித்தனர்.
தன்னை வளர்த்த முதியவர் மற்றும் தன்னுடன் இருந்த மாடு உயிருக்கு போராடிய நிலையில் தன்னுயிரையும் பொருட்படுத்தாமல் மின்வயரை கடித்து இழுத்து நாயும் உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள கல்கொண்டான்பட்டியில் நேற்று மாலை பெய்த மழையின் காரணமாக அங்குள்ள மின் வயர் ஒன்று அறுந்து கிடந்துள்ளளது.
இன்று காலை அவ்வழியாக சென்ற கல்கொண்டான்பட்டியைச் சேர்ந்த மொக்குசு என்ற முதியவரும் அவர் வளர்த்த நாய்யுடனும் தனது தோட்டத்தில் மாடு மேய்க்க சென்றுள்ளனர்.
இந்நிலையில் அறுந்து கிடந்த மின்வயரை மாடு மிதித்ததாக் மின்சாரம் பாய்ந்து துடித்தது. இதனை கண்ட முதியவர் மாட்டை காப்பாற்ற முயன்ற போதும் அவர் மீதும் மின்சாரம் தாக்கியது.
இதனையறிந்த முதியவரின் வளர்ப்பு நாய் அவர்களை காப்பாற்ற முயல்வதாக மின்வயரை கடித்து இழுத்த நிலையில் நாயின் மீதும் மின்சாரம் தாக்கி பரிதாபமாக மூவரும் உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்ப இடத்திற்கு விரைந்து வந்த உறவினர்கள் பொலிசாருக்கு தகவல் அளித்தனர்.
உத்தப்பநாயக்கனூர் பொலிசார் வழக்குப் பதிவு செய்து உடல்களை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் நடந்த இடத்தை உசிலம்பட்டி கோட்டாச்சியர் முருகேசன், உசிலம்பட்டி காவல்துணைக் கண்காணிப்பாளர் கல்யாணக்குமார் நேரில் விசாரனை நடத்தி இறந்தவரின் குடும்பத்தினருக்கு அரசின் நிவாரணமாக 1 லட்சம் நிதி வழங்கப்படும் என உசிலம்பட்டி கோட்டாச்சியர் உறுதியளித்தார்.
உலக அளவில் புகழ்பெற்ற ஆபாசப்பட நடிகைகளின் முகங்கள் வரையப்பட்ட கேரள தனியார் பேருந்து ஒன்றின் புகைப்படம் இணையவாசிகளை ஸ்தம்பிக்க வைத்துள்ளது.
கேரள மாநிலத்தின் வர்க்கல நகரில் தனியாரால் இயக்கப்படும் ஒருசில பேருந்துகளில் இளைஞர்களை கவரும் நோக்கில் உலக அளவில் புகழ்பெற்ற ஆபாசப்பட நடிகர்களான Mia Khalifa, Johnny Sins, Jordi El Nini, Kortney Kane மற்றும் Sunny Leone ஆகியோரது புகைப்படங்களை ஓவியமாக தீட்டியுள்ளனர்.
இதற்கு அப்பகுதி இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதாக குறித்த தனியார் பேருந்து நிறுவனர் ஷெரின் தெரிவித்துள்ளார்.
கல்லூரி மாணவர்கள் பொதுவாக சன்னி லியோன் புகைப்படத்தை பதாகையாக வடிவமைத்து பேருந்தின் பின்னால் இணைப்பதை வாடிக்கையாக செய்து வந்துள்ளனர்.
இதனையடுத்தே ஆபாசப்பட நடிகர்களின் புகைப்படங்களை பேருந்தின் வெளிப்புறம் முழுவதும் ஓவியமாக வரையும் திட்டத்தை செயல்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஓவியங்களை வரைய மொத்தம் 20 நாட்கள் ஆனது எனவும் சுமார் 2.6 லட்சம் செலவானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே குறித்த பேருந்தின் புகைப்படம் இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்த நிலையில், பிரபல ஆபாசப்பட நடிகர் Johnny Sins தமது டுவிட்டர் பக்கத்திலும் இதை பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கன்னியாகுமரி அருகே திருமணம் பாதியில் நின்றதால் மனமுடைந்த மணமகன், நள்ளிரவில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே பாறவிளை பகுதியில் வசித்து வருபவர் கூலித்தொழிலாளி பினு(31). நீண்ட நாட்களாகவே திருமணத்திற்கு பெண் கிடைக்காததால் மனமுடைந்து இருந்த பினுவிற்கு, கோழிப்போர்விளை பகுதியில் பெண் கிடைத்தது.
இதனால் மகிழ்ச்சியில் திளைத்த பினுவின் குடும்பம் உடனடியாக திருமண வேலைகளை பார்க்க ஆரம்பித்தனர். அதன்படி திருமணம் நிச்சயிக்கப்பட்டு, மண்டைக்காடு பகுதியில் உள்ள ஆலயத்தில் நேற்று திருமணம் நடக்கவிருந்தது.
இதில் கலந்துகொள்வதற்காக உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் வருகை தந்திருந்தனர். வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தவேளையில், திடீரென சினிமாவில் வரும் ஒரு வசனம் போல, “திருமணத்தை நிறுத்துங்கள்” என குரல் ஒலித்துள்ளது.
இதனையடுத்து பதறிப்போன குடும்ப உறுப்பினர்கள், என்ன நடக்கிறது என விசாரிக்கையில், வந்திருந்தவர்கள் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் எனவும், மணப்பெண்ணுக்கு 16 வயது மட்டுமே நிரம்பியுள்ளதால்,தற்போது திருமணம் செய்யக்கூடாது என கூறியுள்ளனர். மேலும், இதனை மீறி திருமணம் செய்தால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவீர்கள் என பினு குடும்பத்தாரை எச்சரித்துள்ளனர்.
சிறுமிக்கு 18 வயது நிரம்பியவுடனே, திருமணம் மற்றும் அதுதொடர்பான சடங்குகள் நடத்தப்படும் என பினு வீட்டார் உறுதியளித்ததையடுத்து சிறுமியை அழைத்துக்கொண்டு அதிகாரிகள் அங்கிருந்து கிளம்பினார்.
ஒருபுறம் விழாக்கோலத்தில் இருந்த நிகழ்வு, திடீரென அமைதி மயமாக மாற, மறுபுறம் நீண்ட நாட்களுக்கு பிறகு நடக்கவிருந்த திருமணமும் நின்றுவிட்டதே என பினு மனமுடைந்துள்ளார். இதனால் இரவு முழுவதும் சோகமாகவே இருந்த பினு, யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
விடிந்ததும் காலையில் அறையை திறந்தபொழுது பினு சடலமாக தூக்கில் தொங்குவதை பார்த்து கதறி அழுத குடும்பத்தார், உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் உடனடியாக பினுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பெற்றோர்களின் தவறான முடிவால் திருமணம் தடைபட்டதோடு, இளைஞர் ஒருவரும் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் காவலரை வெட்டிய ரவுடியை பொலிசார் எண்கவுண்டரில் சுட்டுத்தள்ளியுள்ளனர்.
சென்னை ராயப்பேட்டை தர்கா குடிசை மாற்று வாரிய குடியிருப்பு அருகே நேற்றிரவு சிலர் குடித்துவிட்டு தகராறு செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் வந்துள்ளது.
இதனால் அப்பகுதியின் E2 ராயப்பேட்டை காவல்நிலைய முதல்நிலை காவலர் ராஜவேலு ரோந்து பணியில் சென்றுள்ளார்.
அப்போது அங்கு 5-க்கும் மேற்பட்ட ரவுடிகள் மது அருந்திக் கொண்டிருந்ததைப் பார்த்த அவர், இங்கிருந்து செல்லுமாறு கூறியுள்ளார்.
ஆனால் அங்கிருந்த சுமார் 10-க்கும் மேற்பட்டோர் காவலரை கத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளனர். அவரை தலையில் கத்தியால் வெட்டியுள்ளனர்.
இதனால் தலையில் பலத்த வெட்டுக் காயமுடன் ரத்தம் வடிந்த நிலையில் ராகவேலு காவல்நிலையத்திற்கு ஓடி வந்துள்ளார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மற்ற காவலர்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, அதிகாலை தாக்குதல் நடத்தியவர்கள் பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த அதிரடி தேடலில் ரவுடி ஆனந்தன் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இருப்பினும் ஆனந்தன் உள்ளிட்ட 4 முக்கிய குற்றவாளிகள் தப்பிச் சென்றுள்ளனர்.
தப்பிச் சென்ற அவர்களை பொலிசார் தொடர்ந்து தேடி வந்துள்ளனர்.
இந்நிலையில் அவரை பிடிக்கச் சென்றபோது, மற்ற காவலர்களை ஆனந்தன் கத்தியால் வெட்ட வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது தங்களை காப்பாற்றிக்கொள்ள காவலர்கள், ரவுடி ஆனந்தனை தற்காப்பிற்காக என்கவுண்டர் செய்துள்ளதாகவும், இந்த சம்பவம் மத்திய கைலாஷ் செண்ட்ரல் பாலிடெக்னிக் அருகே நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 11 பேர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் சாமியாரின் தலையீடு இல்லை என்று பொலிசார் கூறியுள்ளனர்.
டெல்லி புராரி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 11 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது. முதலில் இவர்கள் அனைவரும் தற்கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், இவர்களின் உறவினர் ஒருவர் அவர்கள் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை, நிச்சயம் இது ஒரு கொலையாகத்தான் இருக்கும் என்று கூறியிருந்தார்.
இதற்கிடையில் பொலிசார் நடத்திய விசாரணையில், அந்த வீட்டில் நிறைய கடிதங்கள், டைரிகள் கைப்பற்றப்பட்டது. அதில் எப்படி தற்கொலை செய்தால் மோட்சம் கிடைக்கும், எந்த நேரத்தில் தற்கொலை செய்ய வேண்டும் என்றெல்லாம் எழுதப்பட்டிருந்தது.
இதனால் இது கொலையா, தற்கொலையா என்று தெரியாமல் பொலிசார் குழம்பி போய் நிற்கின்றனர். மேலும் இவர்களின் உடற்கு கூறு ஆய்விலும் கொலை செய்யப்பட்டதற்கான எந்த ஒரு ஆதாரமும் இல்லை.
அதுமட்டுமின்றி இந்த சம்பவத்தில் சாமியார்கள் யாரும் தலையிட்டிருக்கிறார்களா என்ற கோணத்திலும் பொலிசார் விசாரணை மேற்கொண்டனர்.
ஏனெனில் டைரிகள் மற்றும் கடிதங்களில் சொர்க்கத்திற்கு எப்படி செல்வது போன்று குறிப்பிட்டிருந்ததால், மூடநம்பிக்கை காரணமாக செய்திருக்கலாம் என்று பொலிசார் சந்தேகமடைந்தனர்.
இந்நிலையில் இந்த சம்பவத்தில் சாமியார்களின் தலையீடு இல்லை என்று பொலிசார் கூறியுள்ளனர். பொலிசார் இறந்தவர்களின் உறவினர்கள் 20 பேரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஆனால் அது குறித்து எந்த ஒரு தகவலும் தெரிவிக்கவில்லை. இறந்த 11 பேர் விவகாரத்தில் shared psychosis என்ற நோயின் தாக்கம் இருக்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
shared psychosis என்றால் ஒருவர் மூடநம்பிக்கையோ அல்லது வேறு ஏதேனும் பற்றி மற்றொருவரிடம் தொடர்ந்து கூறிக் கொண்டிருக்கும் போது அவர்களும் அதற்கு அடிமையாகிவிடுவார்களாம்.
இதனால் இந்த 11 பேர் மரணம் விவகாரத்தில் யாரேனும் மூடநம்பிக்கை மிகுந்தவர் இருந்தாரா அல்லது தற்கொலைப் பற்றி தொடர்ந்து கூறிக் கொண்டே மற்றவர்களை மாற்றினாரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் சம்பவத்தில் இறந்தவர்களை கடைசியாக அதாவது அவர்கள் இறப்பதற்கு ஒரு நாளுக்கு முன்பு டெலிவரி பையன் 20 ரொட்டிகளை டெலிவரி செய்துள்ளான்.
அவனே இறந்தவர்களை கடைசியில் பார்த்துள்ளான் என்பதால் அவனிடமும் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.