பெற்றோர் இல்லாத நேரம் தூக்கில் தொங்கிய மாணவி : சிக்கிய வாக்குமூல கடிதம்!!

 

தூக்கில் தொங்கிய மாணவி

ஐதராபாத் மாநிலத்தில் பெற்றோர் வெளியில் சென்றிருந்த சமயம் பார்த்து கல்லூரி மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத் மாநிலம் மோதிநகர் பகுதியை சேர்ந்தவர் டி சந்திரசேகர் (46). இவர் தன்னுடைய மனைவி மற்றும் மகள்கள் சனி ஹரிகா (18), அபிக்கன்யா (17) உடன் வசித்து வருகிறார்.

வேகசிட்டி ஜூனியர் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வரும் அபிக்கன்யா, கடந்த 2ம் தேதியன்று வீட்டில் ஆள் இல்லாத சமயம் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து பொலிஸாருக்கு போன் செய்த சந்திரசேகர், சம்பவம் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பிலிருந்தே என்னுடைய மகள் மனசோர்வில் இருந்தார்.

அன்று காலை என்னுடைய மனைவி நடைப்பயிற்சிக்காக வெளியில் சென்றிருந்தார். அப்போது எனக்கு போன் செய்த என்னுடைய மற்றொரு மகள், அபிக்கன்யா அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்தார்.

உடனே விரைந்து சென்று அவரை மீட்டு மருத்துவமனைக்கு எடுத்து சென்றோம். ஆனால் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர் என கூறியுள்ளார். தற்போது இந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அபிக்கன்யா இறுதியாக எழுதி வைத்த கடிதம் ஒன்று கிடைத்திருப்பதாக சந்திரசேகர் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளார்.

அதில், கல்லூரியில் படிக்கும் சகமானவர்களே தற்கொலைக்கு காரணம் என குறிப்பிடப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. கடிதம் பற்றிய தகவல்களை வெளியிடாத பொலிஸார் கல்லூரி மாணவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது.

வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக மதுபான சாலை : மூடுமாறு கோரி அரச அதிபருக்கு கடிதம்!!

 

அரச அதிபருக்கு கடிதம்

வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக புதிதாக திறக்கப்பட்ட மதுபானசாலையை மூடி உதவ வேண்டுமென கோரி வவுனியா அரசாங்க அதிபருக்கு குடியிருப்பு கிராம அபிவிருத்தி சங்கம் கடிதமொன்றை கொடுத்துள்ளது.

வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக புதிதாக மதுபானசாலையொன்று திறக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் குறித்த பகுதி மக்கள் குடியிருப்பு நிறைந்த பகுதியாக காணப்படுவதுடன் கோவில்கள், வவுனியா பொது வைத்தியசாலை, மற்றும் அரசாங்கத்தின் பாரம்பரிய உணவகம் என்பன அமையப்பெற்ற இடத்தில் மக்களுக்கு இடையூறாக சில அரச அதிகாரிகளின் துணையுடன் மதுபான சாலைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை தொடர்பாக மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

இந் நிலையில் மதுபானசாலை அமைக்கப்பட வேண்டுமாக இருந்தால் குறித்த பிரதேசத்தின் கிராம அபிவிருத்தி சங்கத்தின் அனுமதி பெறப்படவேண்டும்.

எனினும் அவ்வாறான அனுமதி பெறப்படாமல் அரச அதிகாரிகள் சிலரின் துணையுடன் மதுபான சாலை திறக்கப்பட்டமை மற்றும் குறித்த கிராமத்தில் மக்களின் வாழ்வியல் சூழலுக்கு குந்தகத்தினை ஏற்படுத்தும் செயற்பாட்டுக்கு குறித்த மதுபானசாலை பாதகமாக அமையும் என்பதனை கருத்தில் கொண்டு அரசாங்க அதிபர் சமூக அக்கறை கொண்டவர் மற்றும் மக்களின் நல்வாழ்வுக்கான எதிர்பார்ப்புடையவர் என்பதனை முன்னிறுத்தி யாழ் வீதி மக்களினால் அரசாங்க அதிபரிடம் நேரடியாக கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.

காதல் விவகாரத்தால் 16 வயது சிறுமி எடுத்த விபரீத முடிவு : மட்டக்களப்பில் நேர்ந்த சோகம்!!

 

சிறுமி எடுத்த விபரீத முடிவு

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தை அண்மித்துள்ள வாவியில் கரையொதுங்கிய நிலையில் 16 வயது சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சிறுமி கடந்த சனிக்கிழமை கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த நிலையில் தேடப்பட்டு வந்துள்ளார்.

அவரை தேடும் பணியில் மீனவர்கள், உறவினர்கள், கடற்படையினர், பொலிஸார் ஆகியோர் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையிலேயே இன்று காலை சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காத்தான்குடி – பூநொச்சிமுனை 2ஆம் குறுக்கு வீதியை சேர்ந்த கிருஸ்ணபிள்ளை கிருஷாந்தினி என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சிறுமி காதல் விவகாரம் தொடர்பில் மன விரக்திக்குள்ளாகி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.

மேலும், சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி பொலிஸார் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வடக்கு மாகாண ஆளுநராக தமிழர் நியமனம்!!

சுரேஷ் ராகவன்

                வட மாகாண ஆளுநராக கலாநிதி சுரேன் ராகவன்

வடக்கு மாகாண ஆளுநராக பேராசிரியர் சுரேஷ் ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், இன்று அவர் ஆளுநராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

சப்ரகமுவ மாகாண ஆளுநராக கலாநிதி தம்ம திசாநாயக்க

மூன்று மாகாணங்களுக்கான ஆளுநர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளனர். அதன்படி , வட மாகாண ஆளுநராக கலாநிதி சுரேன் ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் வடமாகாண ஆளுநராக ரெஜினோல்ட் குரே செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

               ஊவா மாகாண ஆளுநராக ரஜித் கீர்த்தி தென்னகோன்

அதேபோல், ஊவா மாகாண புதிய ஆளுநராக கீர்த்தி தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் , சப்ரகமுவ மாகாண புதிய ஆளுநராக தம்ம திஸாநாயக்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை , கடந்த வௌ்ளிக்கிழமையன்று மேல் , மத்திய , வடமத்திய , வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான 5 புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டனர். அதன்படி , 8 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் ,இன்னும் தென் மாகாணத்திற்கான புதிய ஆளுநர் மாத்திரம் நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா தெற்கு வலயத்தின் 22 ஆரம்ப கல்வி ஆசிரியர்களுக்கு இடமாற்றம்!!

வவுனியா தெற்கு வலயத்தில் இருந்து ஆரம்ப கல்வி ஆசிரியர்கள் 22 பேர் வவுனியா வடக்கு வலயத்திற்கு மாகாண கல்வி திணைக்களத்தால் இடமாற்றப்பட்டுள்ளனர்.

இந்த மாதம் முதலாம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும் வகையிலேயே குறித்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஜுலை மாதம் ஆசிரியர் சேவையின் தரம் – 3 இற்கு உள்ளீடு செய்யப்பட்ட ஆரம்ப கல்வி ஆசிரியர்கள் 22 பேருக்கு வவுனியா வடக்கு வலயத்திற்கு இடம்மாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

அதிலும் குறித்த 22 ஆசிரியர்களில் அதிகமானவர்கள் வவுனியாவில் பின் தங்கிய செட்டிகுளம் கோட்டத்தில் கற்பித்து வந்தவர்கள்.

செட்டிகுளம் கோட்ட பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடம் உள்ள நிலையில் வவுனியா தெற்கு வலயத்தின் செட்டிகுளம் கோட்ட ஆரம்ப கல்வி ஆசிரியர்களை பிறிதொரு கஸ்டப் பிரதேசமான வவுனியா வடக்கிற்கு மாற்றியுள்ளமை செட்டிகுளம் கோட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, குறித்த ஆசிரியர்களின் நியமனக் கடிதத்தில் நியமனம் வழங்கப்படும் பாடசாலையில் 10 வருடங்கள் கடமையாற்ற வேண்டும் எனத் தெரிவித்திருந்த நிலையிலேயேஅதனை மீறி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக சமூக நலன்விரும்பிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஐ.டி.என் தொலைக்காட்சி வளாகத்தில் பதற்றம் : ஊழியர்கள் – பொலிஸாருக்கு இடையில் மோதல்!!

 

சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பு வளாகத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. நிர்வாகத்தில் புதிதாக இருவரை இணைத்துக் கொண்டமைக்கு எதிராக ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

வளாகத்தில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமையினால் வன்முறை சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

இதனை கட்டுப்படுத்த சிறப்பு அதிரடி பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதன்போது ஊழியர்களுக்கும் அதிரடி படையினருக்கும் இடையில் அடிதடி மோதல்கள் இடம்பெற்றுள்ளன.

சுயானதீன தொலைகாட்சி நிறுவனத்திலிருந்து இடைநிறுத்தப்பட்ட 13 உறுப்பினர்கள் தலைமையிலான குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பெற்ற குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்ற தாய் : தலைமறைவான கணவன்!!

 

தற்கொலைக்கு முயன்ற தாய்

பீகார் மாநிலத்தில் கணவன் மனைவியிடையே நடந்த கருத்து வேறுபாட்டில் மூன்று குழந்தைகள் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பாகல்பூர் பகுதியில் கர்ஹாரியா கிராமத்தில் கடந்த சனிக்கிழமையன்று தான் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. மது போதைக்கு அடிமையாகியிருந்த மாற்றுத்திறனாளி கணவன், மனைவியிடம் ரூ.500 கேட்டுள்ளார்.

ஆனால் அதற்கு மனைவி மறுப்பு தெரிவித்ததால், அடித்து துன்புறுத்தியுள்ளார். இதில் மனமுடைந்த அந்த பெண், தன்னுடைய மூன்று குழந்தைகளையும் கழிவறை தொட்டியில் தூக்கிவீசிவிட்டு, தானும் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனை பார்த்த பக்கத்துக்கு வீட்டு பெண் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது உயிருக்கு போராடிய அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் துரதிஷ்டவசமாக தொட்டியில் தூக்கி வீசப்பட்ட ஒன்பது மாத குழந்தையான ஓம்ராஜின், இரண்டு வயதான சோனம் பார்தி மற்றும் நான்கு வயதான சுசந்தின் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தற்போது இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் தலைமறைவாகியுள்ள பெண்ணின் கணவரை தேடி வருகின்றனர்.

கிணற்றில் அழுகிய நிலையில் கிடந்த சிறுமியின் சடலத்தால் பரபரப்பு!!

 

சிறுமியின் சடலத்தால் பரபரப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் பணகுடி அருகே கிணற்றில் இருந்து அழுகிய நிலையில் சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பூந்தமல்லி பகுதியை சேர்ந்தவர்கள் 48 வயதான பாலகிருஷ்ணன் மற்றும் அவருடைய மனைவி ராஜேஸ்வரி தம்பதியினர். இவர்களுக்கு குழந்தை இல்லாத காரணத்தால் தங்கள் உறவுக்கார பெண்ணான அபிராமி (15) என்ற சிறுமியை தத்தெடுத்து வளர்ந்து வந்துள்ளனர்.

பாலகிருஷ்ணன் ஊர் ஊராக சென்று குறி சொல்லும் தொழில் செய்து வந்தார். கடந்த 5 வருடத்திற்கு முன்னதாக வள்ளியூரில் வாடகைக்கு வீடு எடுத்து பாலகிருஷ்ணன் குடும்பத்துடன் தங்கி வந்துள்ளார்.

இதற்கிடையில் டிசம்பர் மாதம் 18ம் தேதி வீட்டு வேலை சரியாக செய்யவில்லை என பாலகிருஷ்ணன் திட்டியதாகவும், அதில் கோபித்துக்கொண்டு அன்று முதல் அபிராமி மாயமாகிவிட்டதாகவும் இருவரும் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். அதன்பேரில் வழக்கு பதிவு செய்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் தெற்கு வள்ளியூர் பகுதியில் கிராமத்திற்கு ஒதுக்குபுறமாக உள்ள கிணற்றில் சிறுமியின் உடல் ஒன்று அழுகிய நிலையில் மிதப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், இறந்த நிலையில் கிடப்பது அபிராமி தான் என்பதை அடையாளம் கண்டனர். அதன்பிறகு சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காணாமல் போன சிறுமி அழுகிய நிலையில் கிடந்துள்ள சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், சிறுமி கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

வவுனியாவைச் சேர்ந்த பெண் 9 வயது மகளை கொன்று புதைத்த கொடுமை : ஒரு வருடத்திற்குப் பின் அம்பலமாகும் உண்மைகள்!!

 

அம்பலமாகும் உண்மைகள்

பதுளையில் ஒன்பது வயது சிறுமியை கொலை செய்து புதைத்ததாக சந்தேகிக்கப்படும் சிறுமியின் தாய் மற்றும் ஆணொருவர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பதுளை – ஹாலிஎல, கன்தேகெதர, சார்ணியா தோட்ட பகுதியில் சிறுமியொருவர் அவரின் வீட்டுக்கு அருகிலுள்ள மரக்கறி தோட்டத்தில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப்பட்டுள்ளது.

இதற்கு அமைய சந்தேகநபர்கள் இருவரும் நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 26 மற்றும் 30 வயதுடையவர்கள் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.

வவுனியா – செட்டிக்குளத்தை சேர்ந்த குறித்த சிறுமியின் தாய், அவரது கணவனை பிரிந்து சந்தேகநபரான ஆணுடன் ஹாலிஎல பகுதியில் வசிந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சிறுமி, தாயின் தங்கையிடம் வளர்வதாகவும், ஐந்து வருடங்களுக்கு முன்பே சிறுமியை அவரிடம் ஒப்படைத்து விட்டதாகவும் சிறுமியின் தாய் பொலிஸ் நிலையத்தில் தெரிவித்துள்ளார்.

சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த வருடம் ஜனவரி மாதம் குறித்த கொலை சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சிறுமியின் புதைக்கப்பட்ட உடல் இன்று தோண்டியெடுக்கப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆழ்கடல் மீன்பிடிக்காக சென்ற மீனவர்களுக்கு கிடைத்த பெறுமதியான பொருள்!!

முல்லைத்தீவு – நாயாறு ஆழ்கடலில் மிதந்து வந்த ஒரு தொகுதி வலை நேற்று மீனவர்களால் மீட்கப்பட்டுள்ளன.

நாயறுப்பகுதி மீனவர்கள் நேற்று காலை ஆழ்கடல் மீன்பிடி தொழிலுக்கு சென்றுள்ளனர்.

இதன்போது ஆழ்கடல் பகுதியில் பெறுமதியான வலைகள் மிதந்து வருவதனை பார்த்து அவற்றை மீட்டுள்ளனர்.

இந்த நிலையில் மீட்கப்பட்ட வலைகள் முல்லைத்தீவு பொலிஸாரிடம், மீனவர்களால் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கடந்த மாதம் 30ஆம் திகதி ஆந்திர மாநில கடற்தொழில் பதிவை கொண்ட மீனவ படகொன்று வளைஞர்மடம் பகுதியில் கரை ஒதுங்கியது.

குறித்த படகிலிருந்து மீட்கப்பட்ட வலைகளும், நேற்றைய தினம் மீனவர்களால் மீட்கப்பட்ட வலைகளும் ஒரே வகையானவை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலையிலிருந்து இரகசியமாக தப்பிச் சென்ற சர்வதேச விமானம் : தென்னிலங்கையில் பெரும் சர்ச்சை!!

தமிழர் தாயகப் பகுதியான திருகோணமலையில் இருந்து இரகசியமான முறையில் சர்வதேச விமானம் ஒன்று வெளியேறியமை தென்னிலங்கையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த செயற்பாடு குறித்து தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு வர்த்தகர்கள் சிலரை இலங்கைக்கு அழைத்து வந்த விமானம் ஒன்று உரிய அனுமதியின்றி இலங்கையை விட்டு வெளியேறி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

குறித்த தனிப்பட்ட விமானம் கடந்த 3ஆம் திகதி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு வந்தது. அதில் சிங்கப்பூர் வர்த்தகர்கள் இருவர் மற்றும் சீன வர்த்தகர்கள் மூவருடன் குறித்த விமானம் வருகைத்தந்துள்ளது.

எப்படியிருப்பினும் குறித்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த பின்னர் திருகோணமலை, சீனன்குடா துறைமுகத்தில் தரையிறக்கப்பட்டது.

இந்நிலையில் எவ்வித அனுமதியும் பெறாமல் குறித்த விமானம் திருகோணமலை விமானப்படை முகாமில் இருந்து சிங்கப்பூர் நோக்கி சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இலங்கைக்கு வருகைத்தந்த விமானம் ஒன்று நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றால் அனுமதிக்கப்பட்ட விமான நிலையத்தில் மாத்திரமே வெளியேற வேண்டும்.

இலங்கை குடிவரவு குடியகல்வு சட்டத்திற்கமைய விமான நிலையம் இல்லாத இடத்தில் இருந்து விமானம் ஒன்று வெளியேறுவதற்கு அனுமதியில்லை. எனினும் இந்த விமானம் திருகோணமலை விமானப்படை முகாமில் இருந்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளது.

அனுமதியின்றி வெளியேறிய விமானத்தினால் நாட்டில் பாரிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் உடனடியாக விசாரணை மேற்கொண்டு இன்றைய தினம் உத்தியோகபூர்வ தகவல் வெளியிடப்படும் என விமான சேவைகள் பிரதி அமைச்சர் அஷோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

முன்னணி நடிகை திடீர் உயிரிழப்பு : அதிர்ச்சியில் திரையுலகம்!!

 

நடிகை நிகிதா

ஒடிசாவின் பிரபல முன்னணி தொலைக்காட்சி நடிகை நிகிதா மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இவர், 2017 ஆம் ஆண்டு நடிகர் Lipan – ஐ திருமணம் செய்துகொண்டார். Ansh என்ற 4 மாத குழந்தை உள்ளது.

32 வயதான இவர் தனது தந்தையின் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு மாடியில் இருந்து தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்த இவர் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது திடீர் இறப்பு ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.

வாகன விபத்தில் மூவர் படுகாயம் : ஒருவரின் நிலை கவலைக்கிடம்!!

 

வாகன விபத்து

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிள்ளையாரடி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பேர் படுகாயமடைந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்து சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளார்.

காத்தான்குடியில் இருந்து வேகமாக வந்த வான் ஒன்று மட்டக்களப்பு-வாழைச்சேனை பிரதான வீதியில் வைத்து முச்சக்கர வண்டி ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதேவேளை, இந்த விபத்தின் போது முச்சக்கர வண்டியின் சாரதி உட்பட மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், இவர்களுள் ஒருவரது நிலை கவலைக்கிடமாகவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்து.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் விருது வழங்கும் நிகழ்வு!!

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாகாண விருது வழங்கும் விழா இன்று (06.01) மதியம் 3 மணிக்கு வவுனியா நகரசபை மண்டபத்தில் மன்றத்தின் பணிப்பாளர் என்.எம்.நௌபர் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக அரசாங்க அதிபர் எம்.கனீபா கலந்துகொண்டிருந்தார்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் வன்னி பிராந்தியத்தில் நடாத்தபட்ட இயல், இசை, நாடகம், பாட்டு, அறிவிப்பு ஆகிய கலைகளில் பங்குபற்றி போட்டிகளில் வெற்றிபெற்ற 177 இளைஞர்களிற்கான விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்வுகள் நடைபெற்றிருந்ததுடன், விருது நிகழ்வில் கலந்துகொண்டிருந்த அதிதிகளால் வெற்றி பெற்ற இளைஞர்களுக்கான விருதுகள் வழங்கி வைக்கப்பட்டது.

நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், முன்னாள் மாகாணசபை உறுப்பினர். எஸ்.மயூரன், நகரசபை உறுப்பினர்களான எஸ்.காண்டீபன், க.சந்திரகுலசிங்கம் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

கல்லடி பாலத்திலிருந்து ஆற்றுக்குள் குதித்த 16வயது சிறுமி : தேடும் பணி தீவிரம்!!

மட்டக்களப்பு, கல்லடி பாலத்தில் இருந்து 16 வயது சிறுமியொருவர் தற்கொலை செய்தகொள்ளும் நோக்கில் ஆற்றில் குதித்ததாக தெரிவிக்கப்படும் நிலையில் கல்லடி பாலத்தில் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகளை கடற்படையினர் மற்றும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று சனிக்கிழமை சிறுமி ஒருவர் கல்லடி பாலத்தில் இருந்து குதித்த நிலையில் அவரைக் காப்பாற்ற இளைஞர் ஒருவர் ஆற்றில் குதித்து தேடியபோதும் சிறுமியை கண்டுபிடிக்க முடியாமற்போயுள்ளது.

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள நாவற்குடா பூநொச்சிமுனை வீதி, 2ஆம் குறுக்கு வீதியைச் சேர்ந்த 16 வயதுடைய கிருஸ்ணபிள்ளை கிருஷாந்தினி என்பவரே இவ்வாறு ஆற்றில் குதித்துள்ளார்.

குறித்த சிறுமி க.பொ.த. சாதாரணதரத்தில் கல்வி கற்று வருகின்ற நிலையில் சம்பவ தினமான நேற்று பகல் 12 மணியளவில் மட்டக்களப்பு நகருக்கு சென்று விண்ணப்பம் ஒன்றை நிரப்புவதற்காக செல்வதாக வீட்டில் இருந்து சென்றுள்ளார்.

இந்நிலையில் அச்சிறுமி ஆரையம்பதியைச் சேர்ந்த 23 வயதுடைய ரவீந்திரன் வசந்தன் என்ற இளைஞனை காதலித்து வந்துள்ள நிலையில் இருவரும் சம்பவதினமான பிற்பகல் 2 மணியளவில் கல்லடி பாலத்தருகில் சந்தித்து பேசியுள்ளனர்.

இருவருக்குமிடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சிறுமி பாலத்தில் இருந்து திடீரென ஆற்றில் குதித்துள்ளார். அச் சிறுமியை தேடும் பணிகளை இன்றைய தினமும் கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து தேடும் பணிகளை மேற்கொண்டுவருகின்றனர்.

அத்துடன் குறித்த காதலன் கைது செய்யப்பட்டதோடு அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா செட்டிகுளத்தில் மக்களின் காணியை சுவீகரித்து பண்ணை அமைத்துள்ள இராணுவம்!!

 

வவுனியா செட்டிகுளத்தில் மக்களின் காணியை சுவீகரித்து பண்ணை அமைத்து விவசாயம் செய்து அதனை அக் காணி மக்களுக்கே விற்பனை செய்யும் இராணுவத்தின் செயற்பாடு குறித்து காணி உரிமையாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

வவுனியா, செட்டிகுளம் இராமையன்குளம் பகுதியில் பொதுமக்களுக்கு சொந்தமான 123 ஏக்கர் விவசாய காணியை கையகப்படுத்தியுள்ள இராணுவம் அப் பகுதியில் பண்ணை அமைத்து விவசாய உற்பத்திகளில் ஈடுபட்டு வருவதுடன், அதன் அறுவடையை அக் கிராம மக்கள் வசிக்கும் வாழவைத்தான் குளம் பகுதியில் விற்பனை செய்து வருமானத்தைப் பெற்றுக் கொள்கிறார்கள்.

இதன்காரணமாக இக் கிராமத்தில் விவசாயம் செய்து தமது வாழ்வாதாரத்தைப் போக்கிய மக்கள் தொழில் செய்ய முடியாத நிலையில் மிகவும் சிரமங்களை அனுபவித்து வருகின்றார்கள்.

2009 ஆம் ஆண்டு வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை தங்கவைப்பதற்கான இடைத்தங்கல் முகாம் அமைக்க பெற்றுக் கொள்ளப்பட்ட தமது விவசாய காணியை இராணுவம் கையகப்படுத்தியுள்ளதாகவும், அதனை விடுவித்து தமது வாழ்வாதரத்திற்கு உதவ அரசியல்வாதிகளும், நாட்டின் ஜனாதிபதியும் முன்வர வேண்டும் எனவும் அம் மக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.