கிளிநொச்சி மலையாளபுரம் கிராமத்தில் பதினொரு வயது சிறுமி கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ள சோகம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
பாதுகாப்பற்ற கிணற்றில் நீர் அள்ளிக்கொண்டிருந்த போது தவறி வீழந்து மரணித்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அன்னை சாரதா வித்தியாலயத்தில் கல்வி கற்ற புவனேஸ்வரன் டிலானி என்ற சிறுமியே மரணித்துள்ளார்.
மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற குடும்பம், தந்தை நிரந்தர சுகயீனம் காரணமாக தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாதவர், தாயின் உழைப்பில் வாழ்கின்ற குடும்பத்தில் டிலானி மூத்த பிள்ளை என்பது குறிப்பிடத்தக்கது.
டிலானியின் இறுதிக் கிரிகைகளை கூட மேற்கொள்ள முடியாத நிலையில் குடும்ப வறுமை காணப்படுகிறது. இவர்கள் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகின்ற கொட்டில் ஒன்றில் வாழ்ந்து வருகின்றனர்.
நான்ஈ படத்தில் நானியுடன் நடித்திருந்தவர் நோயல். நடிப்பதை விட பாடுவதை தான் பிரதான தொழிலாக வைத்திருப்பவர்.
இவரும் தமிழில் மீன் குழம்பும் மண்பானையும் படத்தின் நடிகையும் தெலுங்கு, கன்னடத்தில் முன்னணி நடிகையுமான எஸ்தரும் கடந்த சில வருடங்களாக யாருக்கும் தெரியாமல் காதலித்து வந்தனர்.
இதையடுத்து நேற்று முன்தினம் கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள சர்ச்சில் திடீர் என ரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களது திருமணத்துக்கு நடிகர் நடிகையர் யாரும் அழைக்கப்படவில்லை. இவர்களது திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
தன் காதலன் தன்னை வெறுத்ததால் அவருக்கு 1.59 லட்சம் எஸ் எம் எஸ்களை அனுப்பி லவ் டார்ச்சர் செய்த அமெரிக்க பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர். இவர்கள் டேட்டிங் ஆப் மூலம் காதலர்கள் ஆனவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
காதல் வாழ்க்கையில் ஊடல் என்பது மிக முக்கியமான ஒரு தருணமாக பார்க்கப்படுகிறது. சேர்ந்திருக்கும் தம்பதிகள் ஏதோ ஒரு காரணத்திற்காக சண்டை போட்டு சில நாட்களோ, சில வாரங்களோ பிரிந்து இருந்து மீண்டும் சேரும் போது அவர்களுக்குள் உருவாகும் நெருக்கம் மேலும் அதிகமாகும்.
ஆனால் அந்த பிரிவு காலத்தை தாங்க முடியாத சிலர், சில பைத்தியக்கார தனங்களை செய்து அந்த பிரிவை நிரந்தரமாக மாற்றி விடுகின்றனர். அப்படியான ஒரு சம்பவம் சமீபத்தில் அமெரிக்காவில் நடந்துள்ளது.
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள பீனிக்ஸ் பகுதியை சேர்ந்தவர் ஜாக்குலின் அடஸ், இவருக்கும் இவரது காதலருக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரச்னை ஏற்பட்டு இருவரும் பிரிந்துள்ளனர்.
இந்த பிரிவை ஜாக்குலினால் தாங்க முடியவில்லை. இதனால் அவர் தனது மனதில் உள்ள ஆதங்கங்களை எல்லாம் ஒவ்வென்றாக தோன்ற தோன்ற தனது முன்னாள் காதலனுக்கு செல்போனில் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பியுள்ளார்.
இந்த எஸ்எம்எஸ்களை படித்து அதற்கு எந்த வித பதிலும் அளிக்காமல் அவரது காதலர் இருந்துள்ளார். ஆதனல் மேலும் ஆத்திரமடைந்த ஜாக்குலின் தொடர்ந்து எஸ்எம்ஸ்களை அனுப்பி கொண்டே இருந்துள்ளார். இதனால் கடுப்பான ஜாக்குலினின் முன்னாள் காதலன் பொலிசிற்கு சென்று இந்த விவகாரம் குறித்து கூறியுள்ளார்.
அவர் அளித்த புகாரில் ஜாக்குலின் தன்னை தொந்தரவு செய்யும் வகையில் சுமார் 60 ஆயிரம் எஸ்எம்எஸ்களை அனுப்பியுள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து பொலிசார் அவரது செல்போனை வாங்கி சோதனை செய்ததில் அவர் அவருக்கு சுமார் 1.59 லட்சம் எஸ்எம்எஸ்களை அனுப்பியுள்ளார்.
இந்த எஸ்எம்எஸ்கள் அனைத்தும் தன் காதலனிடம் ஜாக்குலின் தன்னை விட்டு பிரிந்தால் செத்து விடுவேன் என மிரட்டுவது, அவரை கொன்று விடுவேன் என மிரட்டுவது, தன்னுடன் மீண்டும் சேர வேண்டும் என கெஞ்சுவது என விதவிதமாக தனது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார்.
இதையடுத்து பொலிசார் ஜாக்குலின் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். ஜாக்குலினும் அவரது காதலரும் ஒரு டேட்டிங் சைட் மூலம் சந்தித்தாகவும், அவர்கள் ஒரு முறை டேட் சென்றபோதே ஜாக்குலினிற்கு அவர் மீது காதல் ஏற்பட்டதாகவும் அடுத்த டேட்டிற்கு அவரது காதலர் ஜாக்குலினுடன் செல்ல விரும்பாததால் ஜாக்குலின் இதை செய்ததாக கூறப்படுகிறது.
மகாராஷ்டிராவில் பேஸ்புக் நேரலையில் எலி மருந்து குடித்து பெண் ஓருவர் தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் லடூர் மாவட்டத்தை சேர்ந்தவர் 31 வயதான வ்ருஷாலி காம்ப்ளே. இவர் இன்று காலை 8.30 மணிக்கு தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் நேரலை செய்துள்ளார்.
அதில் பேசிய அவர், கடந்த சில நாட்களாகவே அவருடைய நிறுவனத்தில் சிலர் காயப்படுத்தியதால் வேலையை ராஜினாமா செய்துள்ளார். அதிலிருந்து மீண்டு வரமுடியாமல் விரக்தியில் தற்கொலை செய்வதாக பேசிக்கொண்டே எலிமருந்தை குடித்துள்ளார்.
இதனை பார்த்த பதறிப்போன நண்பர்கள் சிலர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், வ்ருஷாலியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த வ்ருஷாலி உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
PIA ஏர்-லைன்ஸ் நிறுவனம் தனது பணியாளர்களிடம் உடல் எடையை குறைக்கா விடில் ஜூலை மாதம் பணி இழக்க நேரிடும் என்று அறிவித்துள்ளது பணியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தான் இன்டர்நேசனல் ஏர்லைன்ஸ் நிறுவனமான PIA கடந்த சில மாதங்களாக பயணிகள் வரத்து குறைவால் பில்லியன் ரூபாய் அளவிற்கு இழப்பை சந்தித்துள்ளது. இதனை அடுத்து அந்நிறுவனம் சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி, நிறுவனத்தின் பணியாளர்கள் அனைவரும் தங்களது எடையை குறைக்க வேண்டும் என்றும். அனைவருக்கும், உயரத்திற்கு ஏற்ற பருமன் இருக்க வேண்டும் என்றும், தங்களை அனைத்து ஊழியர்களும் அழகான உடல் வடிவம் கொண்டவர்களாக மாற்றி கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளது.
மேலும் வரும் ஜூலை மாதத்திற்குள் பருமனை குறைத்து அழகானவர்களாக மாற்றி கொள்ளவில்லை எனில் பணி நீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
அளவான உடல் எடை கொண்டவர்களாக பணியாளர்கள் கருதினால், அவர்களை முழு சோதனைக்கு உட்படுத்திய பின்னரே விமானத்தில் ஏற அனுமதிக்க உள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து இதுவரை 800 பணியாளர்களுக்கு PIA – நிறுவனம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வட மாகாண ஆளுநராக கலாநிதி சுரேன் ராகவன் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். கடந்த காலங்களில் தென்னிலங்கையை சேர்ந்த சிங்களவர்கள் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய வம்சவாளியான இவர் கம்பாஹவில் பிறந்து, அரசியல் மற்றும் கல்வித்துறையில் பல பரிணாமங்களை கொண்டுள்ளார். அரசியல் ரீதியான பல சாணக்கியங்களை கொண்ட சுரேன், ஜனாதிபதி ஊடகப்பிரிவின் முன்னாள் பணிப்பாளராக செயற்பட்டுள்ளார்.
ஆசியாவில் முதன்முறையாக ஜேம்ஸ் மெடிசன் நம்பிக்கை புலமைப் பரிசிலை இரண்டு தடவைகள் பெற்று சாதனை படைத்தவர். பிரித்தானியா, கனடா போன்ற நாடுகளில் மேற்படிப்புகளை மேற்கொண்டுள்ளதுடன், அந்நாடுகளின் பல விருதுகளையும் வென்றுள்ளார்.
2008-2011ஆம் ஆண்டுகளில் அவருக்கு பிரித்தானிய அரசாங்கத்தின் புலமைப்பரிசிலும் வழங்கப்பட்டது. கனடா – ஒன்டோரியோ பல்கலைக்கழகத்தின் OSAP விருதினையும் அவர் பெற்றுள்ளார். தற்போது வரையில் கனடா ஒட்டாவா சென் போல் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளராக செயற்பட்டு வருகின்றார்.
அவர் ஒரு பௌத்த சிந்தனைவாதியாக கருதப்படுகின்றது. பௌத்த துறவிகளுக்கும், யுத்தத்துக்குமான இடைத் தொடர்புகள் குறித்த இரண்டு புத்தகங்களையும், ஏனைய சில புத்தகங்களையும் அவர் எழுதி வெளியிட்டுள்ளார்.
அவரது அரசியல் தொடர்பான பல்வேறு ஆய்வுகள் பல முன்னணி பல்கலைக்கழகங்களில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்ட 16 வயது சிறுமியின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நேற்று முன்தினம் பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள நாவற்குடா பூநொச்சிமுனை வீதி 2 குறுக்கு வீதியைச் சேர்ந்த 16 வயதுடைய கிருஸ்ணபிள்ளை கிருஷந்தினி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுமி க.பொ.த சாதாரணதரத்தில் கல்வி கற்று வருகின்ற நிலையில் சம்பவதினமான நேற்று முன்தினம் பகல் 12 மணியளவில் மட்டக்களப்பு நகருக்கு சென்று விண்ணப்பம் ஒன்றை நிரப்ப செல்வதாக வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார்.
இந்த நிலையில் குறித்த சிறுமி ஆரையம்பதியைச் சேர்ந்த 23 வயதுடைய ரவீந்திரன் வசந்தன் என்ற இளைஞனை காதலித்து வந்துள்ள நிலையில் இருவரும் சம்பவதினமான பிற்பகல் 2 மணியளவில் சம்பவத்தின் போது கல்லடி பாலத்தில் காதலன் மற்றும் காதலனின் நண்பருடன் சந்தித்த நிலையில் காதலனுக்கும் காதலிக்கும் இடையே சம்பாசனை இடம்பெற்றவேளை காதலி பாலத்தில் இருந்து திடீரென ஆற்றில் குதித்துள்ளார்.
இதனை தொடர்ந்து காதலனுக்கு நீந்த தெரியாததால் காதலனின் நண்பன் நண்பனின் காதலியை காப்பாற்ற ஆற்றில் குதித்த போதும் அவரை காப்பாற்ற முடியாமல் அவர் நீந்தி கரைசேர்ந்தார். சிறுமியின் சடலம் இன்று காலை கரை ஒதுங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பொலிசார் குறித்த காதலனை கைது செய்துள்ளதுடன் இது தொடர்பாக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.
அமெரிக்காவில் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்களால் கூறப்பட்ட நபர் திடீரென உயிர் பிழைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ஸ்காட் மர் (60) என்ற நபருக்கு கடந்த மாதம் 12-ஆம் திகதி திடீரென பக்கவாத நோய் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார்.
ஸ்காட்டுக்கு செயற்கை சுவாசம் வைக்கப்பட்ட நிலையில் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை மூளையில் பெரியளவில் வீக்கம் ஏற்பட்டு ஸ்காட் அசைவற்று கிடந்த நிலையில் அவர் மூளைச்சாவு அடைந்ததாக உறவினர்களிடம் மருத்துவர்கள் கூறினர். அவருக்கு பொருத்தப்பட்ட செயற்கை சுவாசத்தை அகற்ற முடிவெடுக்கப்பட்டது.
இதையடுத்து செயற்கை சுவாசம் அகற்றப்பட்ட பின்னரும் அவர் நன்றாக மூச்சு விடுவதை பார்த்து மருத்துவர்கள் வியந்தனர். இதன்பின்னர் அளிக்கப்பட்ட சிகிச்சையில் ஸ்காட் குணமடைந்தார். ஸ்காட்டின் இறுதிச்சடங்குக்கே தயாரான குடும்பத்தார் அவர் உயிர் பிழைத்ததை பார்த்து மிரண்டு போனார்கள், ஸ்காட்டை அதிசய மனிதன் என அவர்கள் கூறுகிறார்கள்.
இது தொடர்பாக பத்திரிக்கையாளர்களை சந்தித்த ஸ்காட் மற்றும் குடும்பத்தினர் அனைத்து விடயங்களையும் கூறினார்கள். அப்போது மறுபிறவி எடுத்த ஸ்காட் மிகவும் உணர்ச்சிகரமாக காணப்பட்டார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மனநிலை தொடர்பில் நீதிமன்றத்தில்வழக்குத் தாக்கல் செய்த பெண் அரசாங்கத்திற்கு ஒரு இலட்சம் ரூபாவினை வழக்குத் தொகையாக வழங்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி கொட்டாஞ்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த தக்ஷிலா லக்மாலி ஜயவர்தன என்பவர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் மனோநிலையை பரிசோதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு மேன்முறையீட்டு நீதிமனறில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அவர் தாக்கல் செய்த மனுவில், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் மனநிலை குறித்து மருத்துவ அறிக்கை ஒன்றைப் பெற்றுக்கொள்ள பொலிஸ் மா அதிபருக்கும், கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கும் உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் குறித்த மனு, மேன்முறையீட்டு நீதிமன்ற தவிசாளரான நீதியரசர் ப்ரிதீ பத்மன் சூரசேன மற்றும் நீதியரசர் அர்ஜுன் ஒபேசேகர ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது போதிய ஆதாரங்கள் மற்றும் சட்ட அடிப்படையற்ற வகையில் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதால் மனுவைத் தாக்கல் செய்த மனுதாரர் ஒரு இலட்சம் ரூபாவை வழக்குக்கான செலவு தொகையாக அரசாங்கத்திற்குச் செலுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதேவேளை, மனுதாரர் ஜனாதிபதிக்கு அவமானத்தை ஏற்படுத்துவதற்கும், நாட்டுக்கும் அபகீர்த்தியை உருவாக்கும் நோக்கிலும் குறித்த மனுவைத் தாக்கல் செய்திருப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
மனநோய் தொடர்பான சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டுமானால் பொலிஸ் நிலையத்தில் மனநோய் தொடர்பில் முறையிட வேண்டும். ஆனால் மனுதாரரின் மனுவில் இதற்கான அறிக்கைகள் எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தென் கொரிய மன்னரை செம்பவளம் என்ற தமிழ்ப்பெண் மணந்தார் என்ற தகவலை தென் கொரிய தூதர் கியூஞ் சூ கிம் தெரிவித்துள்ளார். சென்னையில் முதலாம் உலக தமிழ் மாநாடு மற்றும் தமிழாய்வு அறக்கட்டளை தொடக்க விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய தென் கொரிய தூதர் கியூஞ் சூ கிம், தென் கொரியாவுக்கும், தமிழகத்திற்கும் இடையே அதிகமான பாரம்பரிய உறவுகள் உள்ளன.
பாண்டியநாட்டைச் சேர்ந்த செம்பவளம் என்ற பெண் பழங்காலத்தில் கொரிய வந்தபோது, கொரிய மன்னர் கிங்ஸ்ரோ என்பவரை மணந்து கொண்டார்.
செம்பவளம் தற்போது கியோ கவான் கொக் என்று கொரியா நாட்டில் அழைக்கப்படுகிறார் என்று கூறிய அவர், செம்பவளத்தின் படத்தை வெளியிட்டார். மேலும் தமது முதாரியரும் தமிழ் பெண்ணை மணந்ததாகவும் தெரிவித்தார்.
விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் பிரபலங்களுக்கு தண்ணீர் வழங்குவதற்காக அமர்த்தப்பட்ட ஒரு சாதாரண பெண், ஒரே நாளில் பிரபலமாகியிருக்கிறார். லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த மொடலான Kelleth Cuthbert, விருது வழங்கும் விழா ஒன்றில் பிரபலங்களுக்கு தண்ணீர் வழங்குவதற்காக அமர்த்தப்பட்டார்.
பிரபலங்கள் நிகழ்ச்சிக்கு வரும்போது அவர்களை ஒவ்வொருவராக புகைப்படம் எடுக்கும் வழக்கம் உண்டு. அந்த புகைப்படங்களில், பிரபலங்கள் புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கும்போது, Kellethம் அவர்களுடன் போஸ் கொடுத்திருக்கிறார்.
சில படங்களில் எங்கோ பார்த்துக் கொண்டு நின்றாலும், பல படங்களில் அவர் போஸ் கொடுப்பது நன்றாகவே தெரிகிறது. இந்த புகைப்படங்கள் வெளியானதும் ட்விட்டரில் ஏராளமானோர் Kellethஐ புகழ்ந்து தள்ள, ஒரே நாளில் உலகப் புகழ் பெற்று விட்டார் அவர்.
இந்த ஆண்டு பிரபலங்களில் என் ஃபேவரைட், அந்த தண்ணீர் வழங்கும் பெண்தான் என்று ஒருவர் ட்வீட்ட, இன்னொருவர், நிச்சயம் இந்த பெண்ணுக்கு சினிமா வய்ய்பு கிடைப்பதோடு, பல நடிகைகளை காணாமல் போகச் செய்யப்போகிறார் அவர் என்று ட்வீட்டியிருந்தார்.
தண்ணீர் வழங்குவதற்காக அமர்த்தப்பட்டாலும், தனக்கு கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொண்டுள்ளார் இந்த பெண் என பிரபல பத்திரிகை ஒன்றும் Kellethஐ பாராட்டியுள்ளது.
இலங்கையில் நடைபெற்ற முதல்தர போட்டியில், சுழற்பந்து வீச்சாளர் மலிந்த புஷ்பகுமார 10 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார். இலங்கையில் நடைபெற்ற முதல்தர கிரிக்கெட்டில் கொழும்பு கிரிக்கெட் கிளப் மற்றும் சரசென்ஸ் அணிகள் மோதின.
இதில் கொழும்பு கிரிக்கெட் கிளப் அணி, சரசென்ஸ் அணியின் வெற்றிக்கு 349 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயித்தது. அதன்படி களமிறங்கிய சரசென்ஸ் அணி மலிந்த புஷ்பகுமாரவின் மாயாஜால சுழலில் 113 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இதன்மூலம் 235 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கொழும்பு அபார வெற்றி பெற்றது. மலிந்த 37 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றி மிரட்டினார்.
கொழும்பு அணி வீசிய ஓவர்களில் பாதி ஓவர்களை மலிந்த வீசினார். அதாவது கொழும்பு அணி மொத்தம் வீசிய 36.4 ஓவர்களில், மலிந்த 18.4 ஓவர்களை வீசினார். 31 வயதாகும் மலிந்த புஷ்பகுமார 123 முதல்தர போட்டிகளில் 715 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் உள்ள தேசிய பூங்காவில் மந்திர சக்தியால் யானையை கட்டுப்படுத்துவதாக கூறிய நபரை யானை மிதித்து கொன்றது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கையில் யால என்ற தேசிய பூங்கா அமைந்துள்ளது. இதில் அனைத்து வகையான காட்டு விலங்குகளும் உள்ளன. மேலும் காட்டு விலங்குகளை சுற்றுலா பயணிகள் பார்பதற்காக வாகனங்களில் அழைத்து செல்லப்படுகின்றனர்.
மேலும், பூங்கா நிர்வாகம் பயணிகள் வாகனைத்தை விட்டு இறங்க அனுமதிப்பதும் இல்லை இந்நிலையில் அவ்வாறு வாகனத்தில் சென்ற நபர் ஒருவர் குடித்துவிட்டு, தான் காட்டு யானையை மந்திர சக்தியால் கட்டுபடுத்துவதாக கூறி, இறங்கி அதன் அருகில் சென்றுள்ளார்.
பின், அதனிடம் கைகளை உயர்த்தி காண்பித்துள்ளார். இதை பார்த்த யானை கோவம் கொண்டு அவரை பலமாக மிதித்ததில் அவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். சுற்றுலாவாகனத்தில் இருந்த சுற்றுலா பயணிகள் இதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
வடமாகாணத்தில் குழந்தைகளின் பிறப்பு வீதம் அதிகரித்து வருவதாக வடமாகாண சுகாதார திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அதிகரிப்பு வடமாகாணத்தில் உள்ள சகல மாவட்டங்களிலும் காணப்படுவதாக தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.
கடந்த 2016 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2017ஆம் ஆண்டில் பிறப்பு வீதம் அதிகரித்துள்ளது.
யாழ்.மாவட்டத்தில் 2016ஆம் ஆண்டு 7ஆயிரத்து 892 குழந்தைகள் பிறந்துள்ளன. 2017ஆம் ஆண்டு 8ஆயிரத்து 152 குழந்தைகள் பிறந்துள்ளன. அதேபோல் வவுனியா மாவட்டத்தில் 2016ஆம் ஆண்டு 2 ஆயிரத்து 572 குழந்தைகளும் , 2017ஆம் ஆண்டு 2 ஆயிரத்து 796 குழந்தைகளும் பிறந்துள்ளன.
அதேவேளை மன்னார் மாவட்டத்தில் 2016ஆம் ஆண்டு ஆயிரத்து 833 குழந்தைகளும், 2017ஆம் ஆண்டு ஆயிரத்து 839 குழந்தைகளும் பிறந்துள்ளன. அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் 2016ஆம் ஆண்டு ஆயிரத்து 498 குழந்தைகளும், 2017ஆம் ஆண்டு ஆயிரத்து 516 குழந்தைகளும் பிறந்துள்ளன. அதேபோன்று கிளிநொச்சி மாவட்டத்தில் 2016ஆம் ஆண்டு ஆயிரத்து 576 குழந்தைகளும், 2017ஆம் ஆண்டு ஆயிரத்து 880 குழந்தைகளும் பிறந்துள்ளன.
இவ்வாறாக வடமாகாணத்தில் 2016 ஆம் ஆண்டு 15 ஆயிரத்து 371 குழந்தைகளும், 2017ஆம் ஆண்டு 16 ஆயிரத்து 182 குழந்தைகளும் பிறந்துள்ளன. அதன் பிரகாரம் 2016ஆம் ஆண்டை விட 2017ஆம் ஆண்டு வடமாகாணத்தில் 811 குழந்தைகள் அதிகமாக பிறந்துள்ளன என வடமாகாண சுகாதார திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிங்கள இளைஞர்கள் நால்வரை மடுவில் உள்ள மக்கள் நையப்புடைத்த சம்பவத்தினால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மன்னார், மடு, பெரியபண்டிவிரிச்சான் பகுதியில் உள்ள வீடுகளிற்கு சென்று அநாதை குழந்தைகளுக்கு நிதி திரட்டுவதாக கூறி, மக்களை மிரட்டியும் நிதி வசூலித்தவர்கள் தாம் அனுராதபுரம் என தங்களை அடையாளப்படுத்திக்கொண்டனர். இந்நிலையில் சிங்கள இளைஞர்கள் நால்வர் குறித்து சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் துரத்தி பிடித்து இன்று (7) நையப்புடைத்துள்ளனர்.
சம்பவத்தை அறிந்து சம்பவ இடத்துக்குச்சென்ற அப்பகுதி கிராம நிலதாரி நடந்த சம்பவத்தை கேட்டறிந்ததுடன், மடு பொலிஸாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து விரைந்து வந்த பொலிஸார் அவர்களை காப்பாற்றும் விதமாக செயற்பட்டதுடன் தமிழ் மக்களை அச்சுறுத்தும் வகையிலும் நடந்துகொண்டிருந்தனர்.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பொது மக்கள் அப்பகுதி ஊடகவியலாளருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து அப்பகுதிக்கு சென்ற அவர் செய்தி சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். இதனை அவதானித்த மடு பொலிஸார் இங்கு எல்லாம் புகைப்படம் எடுக்க கூடாது, நீங்கள் யார் என கடுந்தொனியில் மிரட்டியுள்ளனர்.
இந்தநிலையில் நான் ஒரு ஊடகவியலாளர் என அடையாள அட்டையை காட்டிய பின்பும் அவரை செய்தி சேகரிக்க விடாமல் தடுத்ததுடன், அவரின் பேர் மற்றும் புகைப்படங்களை சேகரித்து சென்றனர்.
மடு பொலிஸாரின் குறித்த செயற்பாடு தொடர்பில் மடு பொலிஸ் நிலைய அதிகாரி (O.I.C) ராஜபக்ச குறித்த ஊடகவியலாளர் தொலைபேசி மூலம் தெரியப்படுத்தியுள்ளதுடன், மடு பொலிஸாருக்கெதிராக மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு ஒன்றும் வழங்கவுள்ளார்.
தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கூலித் தொழிலாளி ஒருவர், பனை மரத்தின் உச்சியில் தலைகீழாக தொங்கியபடியே மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் கஞ்சனூர் பகுதியை சேர்ந்தவர் கணேசன்(50). பனை மரம் ஏறும் தொழிலாளியான இவருக்கு மனைவி, ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
இந்நிலையில், கணேசன் நேற்று காலை பதநீர் எடுக்க பனை மரத்தில் ஏறியுள்ளார். மரத்தின் உச்சிக்கு சென்ற அவர் திடீரென தலைகீழாக தொங்கியுள்ளார். இதனைப் பார்த்த அங்கிருந்தவர்கள் உடனடியாக பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து, தீயணைப்பு வீரர்களுடன் அங்கு வந்த பொலிசார் கணேசன் கிழே விழுந்து விடாமல் இருக்க வலையை விரித்து கட்டினர். ஆனால், மரத்தின் உச்சிவரை செல்ல பெரிய ஏணி எதுவும் கிடைக்கவில்லை. மேலும் மரத்தில் ஏறி கணேசனை மீட்கவும் முடியவில்லை.
ஏனெனில் மரத்தில் உச்சியில் எடை தாங்காது என்ற நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக ஜே.சி.பி இயந்திரத்தின் மூலம் பனை மரத்தின் மீது மோதி கணேசனை கீழே விழ வைக்க முயற்சி செய்யப்பட்டது. ஆனால், ஒரு கட்டத்தில் கணேசன் மரத்தில் சறுக்கியபடியே வலையில் விழாமல் கீழே விழுந்துவிட்டார்.
இதனால் அங்கிருந்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர். அத்துடன் அவருக்கு முதலுதவி செய்து, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், கணேசன் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். மேலும், கணேசன் மர உச்சியில் கணேசன் ஏறியபோதே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், பொலிசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.