சிரேஸ்ட ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் எழுதிய கால அதிர்வுகள் நூல் வெளியீடு எதிர்வரும் 29.12.2018 சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு வவுனியா வாடி வீடு கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
வவுனியா கல்வியியல் கல்லூரியின் ஓய்வு நிலை முதல்வர் கே.சிதம்பரநாதன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த வைபவத்தில் வீரகேசரி நாளிதழின் ஆசிரியர் எஸ்.ஸ்ரீகஜன் முக்கிய விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றவுள்ளார்.
மூத்த ஊடகவியலாளர் வீ.தனபாலசிங்கம் நூலை வெளியிட்டு உரையாற்றவுள்ளார்.
நூலின் முதற் பிரதியை வவுனியா கவிதா ஸ்ரோர் உரிமையாளரும் பிரபல வர்த்தகருமாகிய அ.தணிகாசலம் பெற்றுக்கொள்ளவுள்ளார்.
யாழ் பல்கலைக்கழகத்தின் அரசறிவியல்துறைத் தலைவர் கே.ரீ.கணேசலிங்கம் மதிப்பீட்டுரை வழங்கவுள்ளார். தொடர்ந்து நூலாசிரியர் பொன்னையா மாணிக்கவாசகம் ஏற்புரையாற்றவுள்ளார்.

































































