வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையின் பெற்றோர் கூட்டமும், 2019 ஆம் ஆண்டுக்கான நிர்வாகத் தெரிவும் இன்று (14.11) பாடசாலையின் அதிபர் இ.நவரட்ணம் தலைமையில் நடைபெற்றது.
இறைவணக்கத்துடன் ஆரம்பமான பெற்றோர் கூட்டத்தில் 2019 ஆம் ஆண்டுக்கான நிர்வாகத் தெரிவு இடம்பெற்றதுடன் கூட்டத்தில் பாடசாலையின் அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
பெற்றோர்கள் மத்தியில் உரையாற்றிய பாடசாலை அதிபர்
பாடசாலை அபிவிருத்தி தொடர்பாக பெற்றோரின் பங்களிப்பு குறித்து கருத்து தெரிவித்ததுடன் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுவரும் வேண்டத்தாகத பழக்க வழக்கங்கள் குறித்தும், அவைகளை கண்காணித்து மாணவர்களை நல்வழிப்படுத்துவது தொடர்பாகவும் விளக்கமளித்திருந்தார்.
அத்துடன் பெற்றோர்கள் பாடசாலை அபிவிருத்தியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். எதிர்காலத்தில் பாடசாலையில் உயர்தர கணிதம் மற்றும் விஞ்ஞான பிரிவுகள் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்விருப்பதாக தெரிவித்தார்.
பெற்றோர் கூட்டத்தில் மாணவர்களின் கல்வி மற்றும் ஒழுக்கம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன் நிகழ்வில் பெருமளவான பெற்றோர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டிருந்தனர்.










































