வாகனம் வாங்கும் நடவடிக்கை நிறுத்தப்படும் :!ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு!!

அரசாங்கத்திற்கான வாகனங்கள் வாங்குவதை தற்காலிகமாக நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் கலந்து கொண்ட போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கச் செலவினங்களைக் கட்டுப்படுத்த இத்தகைய முடிவு எடுக்கப்பட வேண்டும்.

குறிப்பாக, மே மாதத்தில் மட்டும் எரிபொருள் இறக்குமதிக்காக அரசாங்கம் 550 மில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலவிட வேண்டியிருந்தது. அதன் விளைவாக, எரிபொருள் நுகர்வு ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மட்டுப்படுத்தப்பட வேண்டும்.

எரிபொருளுக்காக இவ்வளவு பெரிய தொகை செலவிடப்பட்டுள்ள நிலையில், நாட்டின் பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்காக தேவையற்ற செலவினங்களைக் குறைப்பது அவசியம்.

அதன்படி, வரும் காலத்தில் அரசாங்கத்திற்கான வாகனங்கள் வாங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

 

இலங்கையில் வாகனம் வாங்க காத்திருப்போருக்கு அதிர்ச்சி : அடுத்தடுத்த வாரங்களில் ஏற்படப்போகும் விலை மாற்றம்!!

இலங்கையில் அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களில் வாகனங்களின் விலைகள் வேகமாக உயரும் என வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திகா சம்பத் மெரிஞ்சிகே தெரிவித்துள்ளார்.

டொலரின் பெறுமதி உயர்வு, சமூக பாதுகாப்பு உதவித்தொகை அறவீடு சட்டத்திருத்தம் ஆகிய காரணங்களால் இவ்வாறு விலை அதிகரிப்பு ஏற்படுவதாக அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் இன்றைய தினம் (15.05.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் மேலும் தெரிவிக்கையில், இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை எதிர்வரும் இரண்டு வார காலப்பகுதியில் 10 சதவீதமளவில் உயர்வடையும்.

இலங்கை ரூபாவுக்கு நிகராக அமெரிக்க டொலரின் பெறுமதி சடுதியாக உயர்வடைந்துள்ளது. சமூக பாதுகாப்பு உதவித்தொகை அறவீடு சட்டத்திருத்தம் செய்யப்பட்டு வரி தொகையிலும் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் ஹய்பிரிட் டொயோடா ரைசா ரக காருக்கான சமூக பாதுகாப்பு உதவித்தொகை வரி 30 இலட்சமாக காணப்பட்டது. ஆனால் புதிய திருத்தத்துக்கமைய அந்த வரி 63 இலட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் 140 இலட்சம் ரூபா பெறுமதியான ரைசா ரக காருக்கான சமூக பாதுகாப்பு உதவித்தொகை வரி 8 இலட்சம் முதல் 10 இலட்சம் ரூபா வரையில் உயர்வடையும்.

அதேபோல் யாரிஸ் ரக வாகனத்தின் உதவித்தொகை வரி 4 அல்லது 5 இலட்சத்தாலும், வெசல் ரக காரின் உதவித்தொகை வரி 12 இலட்சத்தாலும், லேன்ட் க்ரய்சர் காரின் உதவித்தொகை வரி 30 இலட்சத்தாலும் உயர்வடையும்.

இதற்கமைய இறக்குமதி செய்யப்படும் சகல வாகனங்களின் விலைகளும் 10 சதவீதமளவில் உயர்வடையும். எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று வார காலப்பகுதிகளில் வாகனங்களின் விலை சடுதியாக உயர்வடையும் என்றார்.

இன்று காலை இடம்பெற்ற விபரீதம் : 25 வயதான மகளும் தந்தையும் பலி!!

மாத்தளை – வில்கமுவ, ஹெட்டிபொல பகுதியில் காட்டு யானை தாக்கியதில் தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளனர். இன்று காலை (15) இருவரும் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போதே காட்டு யானை தாக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அப்பகுதி மக்கள் இருவரையும் வில்கமுவ பிராந்திய மருத்துவமனையில் சேர்த்த நிலையில், இருவரும் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த சம்பவத்தில் 56 வயதான யு. ஜி. ஆனந்த சமரவிக்ரம என்ற தந்தையும் அவரது 25 வயதான மகள் தனுஜா சமரவிக்ரமவும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் தீவிரமடையும் நிலைமை : அவதானமாக இருக்குமாறு மக்களுக்கு அவசர எச்சரிக்கை!!

களு கங்கையின் கிளை நதிகளான குடா கங்கை மற்றும் மகுரு கங்கை ஆகியவற்றின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சிறிய அளவிலான வெள்ள அபாயம் ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே புளத்சிங்கள, மதுராவல மற்றும் பாலிந்த நுவர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட நதிப்பள்ளத்தாக்குகளின் தாழ்நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை இன்று (15) காலை 6 மணி நிலவரப்படி 21 பிரதான நீர்த்தேக்கங்களும், 19க்கும் மேற்பட்ட நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் தற்போது வான்பாய்கின்றதாக நீர்ப்பாசன பணிப்பாளர் நீர் முகாமைத்துவ பொறியியலாளர் எச்.எம்.பி.எஸ்.டி ஹேரத் குறிப்பிட்டார்.

  • அநுராதபுரம் மாவட்டம்: ராஜாங்கனை, நாச்சிதூவ மற்றும் யாண் ஓயா நீர்த்தேக்கம். பதுளை மாவட்டம்: அம்பேவெல நீர்த்தேக்கம்.
  • ஹம்பாந்தோட்டை மாவட்டம்: லுணுகம்வெஹெர, திஸ்ஸ வாவி, வீரவில யோத வாவி மற்றும் வெஹெரகல நீர்த்தேக்கம்.
  • குருநாகல் மாவட்டம்: அம்பகொல வாவி, உஸ்கல சியம்பலன்கமுவ, மெதியாய, மாகல்ல மற்றும் தெதுரு ஓயா நீர்த்தேக்கம்.
  • கண்டி மாவட்டம்: நாலந்தா மற்றும் வாமடில்ல நீர்த்தேக்கங்கள். மொனராகலை மாவட்டம்: ஹதபானகல மற்றும் அலிகொடஆர நீர்த்தேக்கங்கள்.
  • புத்தளம் மாவட்டம்: இகிணிமிட்டிய மற்றும் தப்போவ நீர்த்தேக்கங்கள்.
  • மன்னார் மாவட்டம்: யோத வாவி.

இலங்கையில் வேகமாகப் பரவும் இன்புளுவென்சா B வைரஸ் : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

நாடு முழுவதும் இன்புளுவென்சா B வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருவதால், இது குறித்து பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு வைரஸ் நோய் விசேட வைத்திய நிபுணர் ஜூட் ஜயமஹா கேட்டுக்கொண்டுள்ளார்.

தொற்றுநோய் விஞ்ஞாபனப் பிரிவின் தரவுகளுக்கமைய, கடந்த ஏப்ரல் மாதத்தில் பதிவான நோயாளிகளின் எண்ணிக்கை 17 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

மே மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் இந்த அளவு 24 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள 20 பிரதான வைத்தியசாலைகளை மையப்படுத்தி முன்னெடுக்கப்படும் கண்காணிப்பு நடவடிக்கைகளின் மூலம்,

காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற வரும் நோயாளிகளின் மாதிரிகளைப் பரிசோதித்ததில் இந்த அதிகரிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

பருவமழை தீவிரமடையும் காலங்களான ஏப்ரல் முதல் ஜூன் வரையிலும், டிசம்பர் முதல் பெப்ரவரி வரையிலும் இன்புளுவென்சா வைரஸ் பரவுவது இயல்பான ஒன்று என வைத்தியர் ஜூட் ஜயமஹ சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நோய் வேகமாகப் பரவும் தன்மையைக் கொண்டிருந்தாலும், பொதுவாக இரண்டு அல்லது மூன்று நாட்களில் தானாகவே குணமடையக்கூடியது.

எனினும், பரவலைக் கட்டுப்படுத்த, பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளிலேயே தங்கியிருக்க வேண்டும்.

இருமல் அல்லது தும்மலின் போது கைக்குட்டை அல்லது முழங்கையைப் பயன்படுத்தி வாய் மற்றும் மூக்கைப் பாதுகாப்பாக மூடிக்கொள்ளுதல் அவசியமாகும்.

கர்ப்பிணித் தாய்மார்கள், சிறுவர்கள், நாள்பட்ட நோயாளிகள் மற்றும் முதியவர்கள் இந்தத் தொற்று குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும்.

அவர்களுக்கு காய்ச்சல், இருமல் மற்றும் சளியுடன் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால், அது நிமோனியா நிலைக்குச் செல்ல வாய்ப்புள்ளதால் தாமதிக்காமல் மருத்துவ சிகிச்சையைப் பெற வேண்டும்.

வைத்திய ஆலோசனையின்றி சுயமாக வலி நிவாரணிகளை உட்கொள்வது, நிமோனியா அல்லது உடல் உறுப்புகள் செயலிழப்பு போன்ற பாரதூரமான சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என வைத்தியர் எச்சரித்துள்ளார்.

எதிர்வரும் வெசாக் பண்டிகை காலத்தில் மக்கள் அதிகளவில் ஒன்றுகூடும் இடங்களில் இந்த வைரஸ் இலகுவாகப் பரவக்கூடும்.

எனவே, பொது இடங்களுக்குச் செல்லும்போது சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டும்” வைத்திய நிபுணர் ஜூட் ஜயமஹா மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தொடரும் மோசமான வானிலை ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு : உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரிப்பு!!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 2 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய அனர்த்த முகாமைத்துவ மையம் (Disaster Management Centre – DMC) தெரிவித்துள்ளது.

இன்று (15) காலை 6 மணிக்கு தேசிய அனர்த்த முகாமைத்துவ மையம் வெளியிட்ட அறிக்கையின்படி, மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

மேலும், மோசமான வானிலை காரணமாக 8 மாவட்டங்களில் உள்ள 35 பிரதேச செயலகப் பிரிவுகளில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

இதற்கிடையில், இதுவரை 1,113 குடும்பங்களைச் சேர்ந்த 3,475 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 104 பேர் தற்போது இரண்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், 88 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதாகவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, இன்று (15) முற்பகல் 5 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகூடிய மழைவீழ்ச்சி அவிசாவளை பகுதியில் பதிவாகியுள்ளது.

இதேவேளை, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளதால், பல ஆற்றுப் பள்ளத்தாக்குகளின் நீர்மட்டங்கள் கணிசமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றும் ஈரவலயப் பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதால், ஆறுகளை அண்டிய மற்றும் தாழ்நிலப்பகுதிகளில் வாழும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டுமென எல்.எஸ். சூரியபண்டார அறிவுறுத்தினார்.

2023 இற்கு பின்னர் இலங்கை ரூபாவிற்கு எதிரான டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட சடுதியான மாற்றம்!!

இலங்கை ரூபாவிற்கு எதிரான அமெரிக்க டொலரொன்றின் விற்பனை விலையானது 331.15 ரூபாவாக உயர்ந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் (15.05.2026) வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ நாணய மாற்று விகிதங்களின் படி இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இது கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் 22ஆம் திகதிக்கு பிறகு பதிவான மிக உயர்ந்த மதிப்பாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அன்று, ஒரு அமெரிக்க டொலரின் விற்பனை விலையானது 331.30 ரூபாவாகப் பதிவாகியிருந்தது.

இந்த நிலையில் கடந்த காலத்தில் ஒப்பீட்டளவில் நிலையாக இருந்த டொலரின் மதிப்பானது மீண்டும் 331 ரூபா என்ற எல்லையைத் தாண்டியுள்ளது என பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இம்மாத தொடக்கத்தில், அமெரிக்க டொலரின் விற்பனை விலை 323 ரூபாவாகவம், கொள்வனவு விலை 315 ரூபாவாகவும் இருந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

மேலும் கடந்த 2024ஆம் ஆண்டு செப்டெம்பர் 23 ஆம் திகதி அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்றபோது, ​​அமெரிக்க டொலரின் விற்பனை விலையானது 309.2836 ரூபாவாகவும், கொள்வனவு விலை 300.1800 ரூபாவாகவும் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பல்கலைக்கழக அனுமதி பெற்றிருந்த மாணவனுக்கு நேர்ந்த துயரம்!!

காலி பிடிகல – பெலவத்தை வீதியின் கரவ்வ 15ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 21 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (13.05.2026) பலத்த மழை நிலவிய நிலையில், குறித்த இளைஞர் மோட்டார் சைக்கிளில் வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது, வாகனம் வீதியை விட்டு விலகி பாதுகாப்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் படுகாயமடைந்த அவர் எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மேல் ஹேவெஸ்ஸ பகுதியைச் சேர்ந்தவர் எனவும், உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியிருந்த இளைஞர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் பிடிகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

பாழடைந்த வீடு ஒன்றிற்கு அருகில் இருந்து இரு பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு!!

மாத்தளை, கட்டுதெனிய பிரதேசத்தில் வசித்து வந்த 52 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தை ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக மாத்தளை பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கட்டுதெனிய பிரதேசத்தில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றிற்கு அருகில் நேற்று (13.05.2026) இரவு உயிரிழந்த நபருக்கும் அவரது நண்பர்கள் சிலருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் ஏற்பட்ட மோதலில் இவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் கருதுகின்றனர்.

சம்பவம் தொடர்பாக, குறித்த மோதல் இடம்பெற்றதாகக் கருதப்படும் வீட்டின் காவலாளி மற்றும் மற்றொரு நபர் கண்டி பிரதேசத்தில் வைத்து சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக மாத்தளை பொலிஸ் குற்றப்பிரிவினர் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், மாத்தளை நீதவான் சம்பவ இடத்திற்குச் சென்று முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுத்தார்.

5 வயது மகனை கழுத்தை நெரித்து கொலை செய்து தந்தை எடுத்த விபரீத முடிவு!!

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் பகுதியில் குடும்பப் பிரச்சனை காரணமாக, தந்தை ஒருவர் தனது 5 வயது மகனைக் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கணவன் மற்றும் மனைவிக்கு இடையே நீண்ட நாட்களாகத் தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படும் நிலையில், இந்த விபரீத முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

வீட்டில் நீண்ட நேரமாக கதவு திறக்கப்படாததைக் கண்டு சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர், காவல்துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த தந்தை மற்றும் மகனின் உடல்களைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள அதிகாரிகள், தற்கொலைக்கான சரியான காரணங்கள் மற்றும் உயிரிழப்பிற்கு முன் அவர் ஏதேனும் கடிதம் எழுதி வைத்துள்ளாரா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரு 5 வயது குழந்தை இழந்த இந்த துயர சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பெரும் சோகத்தை உருவாக்கியுள்ளது.

இந்தக் கொடூரமான முடிவை எடுத்ததற்கான பின்னணி குறித்து அக்கம் பக்கத்தினர் மற்றும் குடும்பத்தினரிடம் காவல்துறையினர் வாக்குமூலங்களைப் பெற்று வருகின்றனர்.

மன அழுத்தத்தின் காரணமாகத் தந்தை இந்தச் செயலில் ஈடுபட்டாரா அல்லது திட்டமிட்டே இதைச் செய்தாரா என்பது குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன

வவுனியாவை வந்தடைந்தது முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி : உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்திய மக்கள்!!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு, தமிழினப் படுகொலையில் உயிர்நீத்த உறவுகளை நினைவு கூரும் ஊர்தி பவனி இன்று(14.05.2026) மதியம் வவுனியா நகரை வந்தடைந்தது.

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு முன்பாக இந்த ஊர்தி பவனி எழுச்சியுடன் ஆரம்பமானது. அங்கிருந்து ஏ-9 வீதி வழியாகப் பயணித்த ஊர்தி, ஓமந்தை பகுதியை வந்தடைந்து, இன்று மதியம் வவுனியா நகருக்குள் பிரவேசித்தது.

வவுனியா நகரிற்கு வந்தடைந்த ஊர்திக்கு, நீண்டகாலமாகப் போராடி வரும் “தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்” தமது கண்ணீர் மல்கிய அஞ்சலிகளைச் செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து, வவுனியா மாநகர சபை வாயிலில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பொங்குதமிழ் தூபிக்கு முன்பாக நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் சுடரேற்றி, மலர் தூவி உயிரிழந்தவர்களுக்குத் தமது வணக்கத்தைத் தெரிவித்தனர்.

வவுனியா நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்தி சென்றபோது, வர்த்தகர்களும் பொதுமக்களும் வீதியோரங்களில் திரண்டு நின்று உணர்வெழுச்சியுடன் ஊர்திக்கு அஞ்சலிகளையும் செலுத்தினர்.

வவுனியாவில் PickMe முச்சக்கரவண்டிக்குத் தடை : தனியார் விடுதி நிர்வாகத்திற்கு சாரதிகள் அச்சுறுத்தல்!!

வவுனியா புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்த சுற்றுலாப் பயணிகள், போக்குவரத்துக்காக PickMe செயலி ஊடாக முச்சக்கரவண்டியொன்றை முன்பதிவு செய்ததை அடுத்து, அங்கு பதற்றமான சூழல் நிலவியுள்ளது.

குறித்த விடுதியில் தங்கியிருந்த பயணிகள் தமது பயணத் தேவைகளுக்காக செயலியான PickMe மூலம் முச்சக்கரவண்டி ஒன்றினை அழைத்துள்ளனர்.

இதனையறிந்த அப்பகுதியில் உள்ள முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் வழமையாகச் சேவையில் ஈடுபடும் சாரதிகள், குறித்த இடத்திற்கு வந்து கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.

தமது தரிப்பிடப் பகுதியில் வெளிவாரி முச்சக்கரவண்டிகள் அல்லது செயலி மூலமான சேவைகளை அனுமதிக்க முடியாது எனக் கூறி, சாரதிகள் விடுதி நிர்வாகத்தினருடன் கடுமையான வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது விடுதி நிர்வாகத்தினருக்கு அவர்கள் அச்சுறுத்தல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

“எமது பகுதியில் நாம் நீண்டகாலமாகச் சேவையில் ஈடுபட்டு வருகிறோம். எமது வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் இவ்வாறான செயலி மூலமான சேவைகளை விடுதிக்குள் அனுமதிக்கக் கூடாது” எனத் தெரிவித்தே இந்த எதிர்ப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் மீற்றர் இன்றியும், இரவு பகல் என அதிகரித்த கட்டணங்களை முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் இருந்து சேவையில் ஈடுபடுபவர்கள் கோருவதினால், தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இலகுவாகவும், குறைந்த செலவிலும் பயணங்களை மேற்கொள்ள முற்படும் பயணிகளுக்கு, இவ்வாறான உள்ளூர் முச்சக்கரவண்டி சாரதிகளின் செயற்பாடுகள் பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளன.

இது வவுனியாவிற்கு வருகை தரும் பயணிகளின் வருகையைப் பாதிக்கும் என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இவ்விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி, பயணிகளின் தெரிவுரிமைக்கு ஏற்ற வகையில் முறையான தீர்வொன்றைப் பெற்றுத்தர வேண்டும் என விடுதி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சகோதரி உயிரிழந்து 8 நாட்களில் சகோதரனும் மரணம் : சோகத்தில் குடும்பத்தினர்!!

மொனராகல, சிரிபுரகம பகுதியில் கடந்த 3ஆம் திகதி ஏற்பட்ட விபத்தில் படுகாயம் அடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.

கடந்த மூன்றாம் திகதி இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டது.

விபத்தின் போது சகோதரி உயிரிழந்த நிலையில் கடந்த 11ஆம் திகதி சகோதரன் உயிரிழந்துள்ளார். சிரிபுரகம பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சாமிக தேஷான் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதிவிட்டு, அதன் பெறுபேறுகளுக்கு காத்திருந்த மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 3ஆம் திகதி, சாமிக தேஷான் தனது சகோதரியுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்து நடந்த அன்றைய தினமே, மோட்டார் சைக்கிளின் பின்னால் பயணித்த 9ஆம் தரத்தில் கல்வி பயின்ற சந்தலி என்ற சிறுமி உயிரிழந்திருந்தார்.

உயிரிழந்த சிறுவன் விபத்தில் பலியான சிறுமியின் பெரியப்பாவின் மகன் என தெரியவந்துள்ளது.

விபத்தில் பலத்த காயங்களுடன் மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்.

ஆசிரியை படுகொலை : மாணவர்களின் கொடூர செயல்!!

ஆந்திர மாநிலம் அல்லது வடமாநிலங்களில் ஒன்றில் நடந்ததாகக் கூறப்படும் ஒரு படுகொலைச் சம்பவம், கல்வி உலகத்தையே அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

10ம் வகுப்பு பயிலும் மாணவன் ஒருவன், தனது நண்பருடன் சேர்ந்து பாடம் நடத்த வந்த ஆசிரியையை மிகக் கொடூரமாகக் கொலை செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சம்பந்தப்பட்ட மாணவனின் பெற்றோர் சுற்றுலா சென்றிருந்த நேரத்தில் இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது, சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாடம் நடத்த வந்த ஆசிரியைக்கு, அந்த மாணவர்கள் மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தைக் கொடுத்துள்ளனர்.

அந்தப் பானத்தை அருந்திய ஆசிரியை மயக்கமடைந்த நிலையில், ஆண்மை ஊக்க மருந்துகளை உட்கொண்ட அந்த இரு மாணவர்களும் சேர்ந்து அவரைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இந்த வன்முறைத் தாக்குதலில் ஆசிரியை பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்த தகவல்கள் வெளியாகி அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கொடூர சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், தொடர்புடைய மாணவர்களையும் அவரது நண்பரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்த ஆசிரியையின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் மற்றும் மாணவர் உறவைச் சிதைக்கும் இத்தகைய குற்றச் செயல்கள், சிறுவர்களிடையே அதிகரித்து வரும் ஒழுக்கச் சீரழிவு குறித்துப் பெரும் கவலையை உருவாக்கியுள்ளன.

திருமணமான 4 நாளில் புதுப்பெண் மர்ம மரணம்!!

பீகார் மாநிலத்தில் திருமணம் முடிந்த நான்கே நாட்களில் இளம்பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம், வரதட்சணை கொடுமையின் கோர முகத்தை மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.

மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி, அவரது பெற்றோர் கண்ணீர் மல்கக் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

பீகாரைச் சேர்ந்த சஞ்சு குமாரி என்பவருக்கும், வினோத் என்பவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணச் சடங்குகள் நடந்து கொண்டிருந்தபோதே,

மணமகன் வினோத் தரப்பினர் மணமகள் வீட்டாரிடம் கூடுதலாக ஒரு தங்கச் செயின் கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், அந்த நேரத்தில் போதிய பணம் இல்லை எனக் கூறி,

சஞ்சு குமாரியின் பெற்றோர் திருமணத்திற்குப் பிறகு தருவதாக உறுதியளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சமாதானமடைந்த மாப்பிள்ளை வீட்டார் திருமணத்தை முடித்துள்ளனர்.

திருமணம் முடிந்து புகுந்த வீட்டிற்குச் சென்ற சஞ்சு குமாரி, மகிழ்ச்சியாகத் தனது வாழ்க்கையைத் தொடங்குவார் என அவரது பெற்றோர் எதிர்பார்த்தனர்.

ஆனால், திருமணமான நான்காவது நாளிலேயே சஞ்சு குமாரி தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இந்தச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், உடனடியாகச் சஞ்சு குமாரியின் புகுந்த வீட்டிற்கு விரைந்து சென்றனர்.

தங்கள் மகள் தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு பலவீனமானவள் அல்ல என்றும், கூடுதல் நகை கேட்டு மாப்பிள்ளை வீட்டாரால் கொடுக்கப்பட்ட மன உளைச்சல் அல்லது சித்திரவதை காரணமாகவே அவர் உயிரிழந்திருக்கக் கூடும் என்றும் பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்.

திருமணத்தின் போது நிலவிய நகை விவகாரமே இந்த மரணத்திற்கு முக்கியக் காரணமாக இருக்கலாம் என்பது அவர்களது வலுவான சந்தேகமாக உள்ளது.

பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். சஞ்சு குமாரியின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின் முடிவில் தான் இது தற்கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது உறுதியாகத் தெரியும் எனப் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், மணமகன் வினோத் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் வரதட்சணை கொடுமை சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

திருமணமான சில நாட்களிலேயே ஒரு இளம்பெண்ணின் வாழ்க்கை இப்படி மர்மமான முறையில் முடிவுக்கு வந்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், வரதட்சணை உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம்,

புனே மாவட்டத்தில் வசித்து வந்த இளம்பெண் ஒருவர், வரதட்சணை கொடுமை காரணமாக விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருமணமான சில ஆண்டுகளிலேயே கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்ந்து வரதட்சணை கேட்டுத் துன்புறுத்தி வந்ததாகப் பெண்ணின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

மனவேதனை அடைந்த அந்தப் பெண், தனது வாழ்வை முடித்துக்கொள்ளும் விபரீத முடிவை எடுத்ததாகக் கூறப்படுவது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், பெண்ணின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வரதட்சணை கொடுமை தொடர்பான புகார்கள் அதிகரித்த வண்ணம் உள்ள நிலையில், இந்தச் சம்பவம் சமூகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து மீண்டும் பல விவாதங்களைக் கிளப்பியுள்ளது.

பெண்களுக்கு எதிரான இத்தகைய கொடுமைகளைத் தடுக்க அரசு மற்றும் சமூக அமைப்புகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் குடும்பத்தினர் நீதி கேட்டுப் போராடி வருகின்றனர். காவல்துறை விசாரணையின் முடிவில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

இத்தகைய துயரமான நிகழ்வுகள் மீண்டும் நடக்காமல் இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிகவும் அவசியம்.