யாழ். செம்மணி மனிதப் புதைகுழியிள் இருந்து குழந்தைகளுக்குப் பாலூட்டும் போத்தல் அடையாளம் காணப்பட்ட பகுதியில் குழந்தையின் என்புத் தொகுதி ஒன்றும் இன்று அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழிக்கு அருகில் மேலும் புதைகுழிகள் இருக்கலாம் எனச் செய்மதிப் படங்கள் மூலம் சில பகுதிகள் சந்தேகத்தின் அடிப்படையில் அடையாளப்படுத்தப்பட்டு தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவினால் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்து.
அந்தப் பகுதி தடயவியல் அகழ்வாய்வுத் தளம் இரண்டு என நீதிமன்றத்தால் பிரகடனப்படுத்தப்பட்டு அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 17ஆம் நாள் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றபோது குழந்தைகளுக்குப் பாலூட்டும் போத்தல் ஒன்றும், வெள்ளை நிற ஆடை ஒன்றும் அடையாளம் காணப்பட்டிருந்தன.
இந்நிலையில், அந்தப் பகுதியில் இருந்து குழந்தையின் என்புத் தொகுதி ஒன்று அடையாளம் காணப்பட்டு இன்று அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் சைபர் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையின் கணனி அவசர பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
குறித்த பிரிவின் அறிக்கையின்படி 2025ஆம் ஆண்டில் மாத்திரம் 5400க்கும் மேற்பட்ட சைபர் குற்றங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. Facebook, WhatsApp, Instagram, Snapchat மற்றும் TikTok போன்ற சமூக ஊடக தளங்களை மையப்படுத்தியே இந்த குற்றங்கள் பதிவாகியுள்ளன.
அதிலும் Facebook உடன் தொடர்புடையதாக 90 வீதக்குற்றங்கள் பதிவாகியுள்ளன.
AI என்ற செயற்கை நுண்ணறிவு கருவிகளின் தவறான பயன்பாடும் இந்த குற்றங்களில் அடங்கியுள்ளதாக கணினி அவசர சேவைப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதனை கருத்திற்கொண்டு பயனர்கள் கடவுச்சொற்களை ஒருபோதும் பகிர வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட இன அழிப்பிற்கு சர்வதேசநீதிப் பொறிமுறை வேண்டும் என்பதை வலியுறுத்தி வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள 8 மாவட்டங்களிலும் இன்றைய தினம் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
அந்தவகையில் வவுனியா புதியபேருந்து நிலையப்பகுதிக்கு முன்பாகவும் குறித்த போராட்டம் இடம்பெற்றது.
வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப்போராட்டமானது இலங்கையில் மனித குலத்திற்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பாக எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் எடுக்கப்படும் இலங்கை தொடர்பான தீர்மானத்தை வலுப்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்படுவதாக ஏற்ப்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
குறிப்பாக ஈழத்தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட இனஅழிப்பிற்கு பன்னாட்டு நீதிப் பொறிமுறை ஊடான விசாரணைகள் உடன் மேற்கொள்ளப்படல் வேண்டும், இனப்படுகொலைகளுக்கான நடவடிக்கைகள் காலம் தாழ்த்தப்படாமல் உடன் மேற்கொள்ளப்படல் வேண்டும்,
தமிழர்களுக்கு எதிராக ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற இன அழிப்பு உட்பட, பன்னாட்டு குற்றங்களை விசாரிக்கவும் குற்றவாளிகளை விசாரணைக்கு உட்படுத்தவும் ஒரு பன்னாட்டு குற்றவியல் நீதித்துறை அமைப்பை உருவாக்கவேண்டும்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதியை சர்வதேசம் கால இழுத்தடிப்பு செய்யாமல் உடன் சர்வதேச நீதிப் பொறிமுறையை மேற்கொள்ள வழி செய்ய வேண்டும், தமிழ் இன அழிப்பு நடந்ததை சர்வதேசம் ஏற்றுக் கொள்ள வேண்டும்,
செம்மணி, மன்னார் மற்றும் பிற பகுதிகளில் காணப்படும் பெரும்பாலான மனிதப் புதை குழிகள் தொடர்பாக பன்னாட்டு தணிக்கை நிபுணர்களை விசாரணைக்காக அனுப்ப வேண்டும்.
தமிழர் பாரம்பரியப் பண்பாட்டுச் சின்னங்களை அழிக்கும் நடவடிக்கைகளை மற்றும் நில ஆக்கிரமிப்புக்களை உடன் நிறுத்தவேண்டும், தமிழ் அரசியல் கைதிகள் உடன் விடுதலை செய்யப்படல் வேண்டும்,
பயங்கர வாத தடை சட்டம் மற்றும் நிகழ் நிலை சட்டம் (PTA & Online Safety Act) இரத்து செய்ய ஸ்ரீலங்கா அரசிக்கு பன்னாட்டு சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும். போன்ற கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்திருந்தனர். இதேவேளை பன்னாட்டு நீதிபொறிமுறையை வலியுறுத்தி கைஎழுத்தும் திரட்டப்பட்டது.
குறித்த ஆர்பாட்டத்தில் வடகிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், சமூக செயற்ப்பாட்டாளர்கள், தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்கள்,பொது அமைப்புக்கள் கலந்துகொண்டிருந்தனர்.
வவுனியா மாநகரசபையின் மாடு வெட்டும் தொழுவத்தில் ஒரு மாதத்தில் மாத்திரம் 801 மாடுகள் இறைச்சிக்காக அறுக்கப்பட்டுள்ளமை தொடர்பிலான ஆவணம் வெளியாகியுள்ளது.
கடந்த 5ம் மாதத்தில் மாநகரசபையின் மாடு வெட்டும் தொழுவத்தில் வவுனியா நகரத்திற்கு என 172 மாடுகளும், கொழும்புக்கு என 602 மாடுகளும், குருமன்காட்டிற்கு என 27 மாடுகளும் என மொத்தமாக 5ம் மாதத்தில் மாத்திரம் 801 மாடுகள் இறைச்சிக்காக அறுக்கப்பட்டுள்ளமையுடன் வவுனியா நகரத்திற்கு என 34 ஆடுகளும் அறுக்கப்பட்டுள்ளன.
எனவே பிரதேச தேவைக்கு 199 மாடுகளும் வெளிமாவட்டத்திற்கு 602 மாடுகளும் இறைச்சிக்காக அறுக்கப்பட்டுள்ளது. மாவட்ட தேவைக்கேன குறைந்தளவிலான மாடுகளே இறைச்சிக்காக அறுக்கப்படுகின்றது. வெளிமாவட்ட தேவைக்கென அதிகளவில் மாடுகள் அறுக்கப்படுவதனால் மாவட்டத்தின் மாடுகளின் எண்ணிக்கை குறைவடைந்து பால் உற்பத்தியும் கேள்விக்குறியாகும் நிலமை உருவாகியுள்ளது.
எனவே உரிய அதிகாரிகள் இவ்விடயத்தினை கருத்தில் கொண்டு பாலின் உற்பத்தியினை அதிகரிக்கவும் பாலின் விலையினை குறைக்கவும் வழிமுறைகளை ஏற்படுத்துமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த மாட்டுத்தொழுவத்தில் கடந்த சில வாரத்திற்கு முன்னர் மாநகரசபையினரின் சுகாதாரக் குழு திடீர் விஜயம் ஒன்றினை முன்னெடுத்து மாட்டுத்தொழுவத்திற்கு சென்றிருந்தனர்.
இதன் போது சுகாதார பரிசோதகரின் அனுமதியினை மீறி அதிகளவில் மாடு வெட்டப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டிருந்தமையுடன் சுகாதார சீர்கேட்டுடன் குறித்த பகுதி காணப்பட்டமை தொடர்பிலான சர்ச்சைகளுக்கு மத்தியில் இவ் ஆவணம் வெளியாகியுள்ளது.
பசறை பகுதியில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 300 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (24) 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்கள் பதுளை பகுதியைச் சேர்ந்த 64, 58 மற்றும் 22 வயதுடைய இரண்டு பெண்களும் ஒரு ஆணுமே இவ்வாறு காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பதுளையில் இருந்து ஒக்கம்பிட்டி பகுதிக்கு தான நிகழ்வொன்றிற்கு சென்று மீண்டும் பதுளைக்கு திரும்பும் போது பசறை எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு முன்பாக வீதியை விட்டு விலகி சுமார் 300 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த கார் விபத்துக்குள்ளாகும் போது காரில் ஐவர் பயணித்ததாகவும் அதில் மூவர் பலத்த காயமடைந்த நிலையில் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன்,
பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை. மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையின் காலி ஹினிடும்கொட கனிஷ்டக் கல்லூரிக்கு அருகில் நடந்த ஒரு கோரமான விபத்து, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
15 வயதுப் பாடசாலை மாணவன் ஒருவன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளால் மோதப்பட்டு, 40 வயதுடைய பெண் ஒருவர் காலை இழந்த சம்பவம் வெளியாகி உள்ளது.
இந்த விபத்தில் பெண்னிணி ஒருகால் துண்டிக்கப்பட்ட நிலையில், மாணவர் பெண்ணின் காலை புதிரில் வீசி சென்ற சம்பவம் பதைபதைக்க வைத்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சம்பவத்தின் போது, பாதிக்கப்பட்ட பெண் தனது குழந்தைகளை பாடசாலைக்கு அழைத்துச் செல்வதற்காக பாடசாலைக்கு அருகில் வீதியோரத்தில் காத்திருந்தார்.
அப்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் குறித்த பெண் மீது மோதியுள்ளது. இதன்போது பெண்ணின் முழங்காலுக்குக் கீழ் இருந்த ஒரு கால் துண்டாகி, உடல் பகுதியிலிருந்து முழுமையாகத் துண்டிக்கப்பட்டது.
சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள், மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் அப்பகுதியைச் சேர்ந்த ஒரு மாணவன் என்பதை அடையாளம் கண்டுள்ளனர். இதனையடுத்து உடனடியாக அந்த மாணவனின் வீட்டிற்குச் சென்று தகவலைத் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து சம்பவத்தின் மிகவும் திகிலூட்டும் அம்சம் என்னவென்றால், விபத்தின் போது துண்டிக்கப்பட்ட பெண்ணின் கால், மோட்டார் சைக்கிளில் சிக்கிக் கொண்டது.
விபத்தை ஏற்படுத்திவிட்டுச் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிய அந்தச் சிறுவன், பின்னர் துண்டிக்கப்பட்ட காலை அருகிலிருந்த ஒரு புதரில் வீசிவிட்டுச் சென்றுள்ளான். மாணவன் அளித்த தகவலின் அடிப்படையில், அப்பகுதி மக்களாலேயே பெண்ணின் துண்டிக்கப்பட்ட கால் பின்னர் மீட்கப்பட்டுள்ளது.
விபத்தில் கலை இழந்த பெண் பெண் தற்போது காலிய தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் விபத்தை ஏற்படுத்திய 15 வயதுச் சிறுவன் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளான். இந்தச் சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பேருந்து ஒன்றில் தவறவிடப்பட்ட 1,50000 பெறுமதியான கைக்கடிகாரத்தை உரியவரிடம் ஒப்படைத்த பேருந்து நடத்துநருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இது தொடர்பில் தெரிய வருவதாவது,
ஸ்பெயினைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இருவர் கண்டியிலிருந்து நுவரஹம நோக்கிச் செல்லும் தனியார் பேருந்தில் மஹியங்கனை நோக்கிப் பயணித்துள்ளர்.
பயணத்தின் போது 150000 ஆயிரம் பெறுமதியான கைக்கடிகாரம் ஒன்றை பேருந்தில் தவற விட்டுச் சென்றுள்னர். குறித்த சுற்றுலாப் பயணிகள் இருவரும் பேருந்திலிருந்து இறங்கி மஹியங்கனையில் உள்ள ஹோட்டலுக்குச் சென்றனர்.
அதன்பின்னரே கடிகாரத்தை தவறவிடப்பட்டுள்ளது என்பதை அறிந்தனர். இதனையடுத்து ஹோட்டல் உரிமையாளர்களிடம் விடயத்தைத் தெரிவித்துள்ளனர்.
அதன்பின்னர் பேருந்தின் ரிக்கெட்டில் இருந்த தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்புகொண்டு கைக்கடிகாரம் தவறவிடப்பட்டதை ஹோட்டல் உரிமையாளர் பேருந்தின் உரிமையாளருக்குத் தெரியப்படுத்தியுள்ளார்.
பேருந்தை துப்புரவு செய்த போது கைக்கடிகாரத்தை நடத்துநர் கண்டெடுத்தாகவும் அதனை உரியவரிடம் மறுநாள் ஒப்படைப்பதாகவும் பேருந்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
மறுநாளான நேற்று மஹியங்கனையில் சுற்றுலாப் பயணிகள் வரவழைக்கப்பட்டு குறித்த கடிகாரம் நடத்துநரால் ஒப்படைக்கப்பட்டது.
கடிகாரத்தைப் பெற்றதன் பின்னர் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தி குறித்த நடத்துநருக்கு நன்றி தெரிவித்துச் சென்றுள்ளனர்.
150000 ரூபா பெறுமதியான கடிகாரத்தைக் கண்டெடுத்தும் அதன் மீது ஆசை கொள்ளாமல் உரிமையாளர்களிடம் ஒப்படைத்த கண்டியைச் சேர்ந்த நடத்துநரின் மனிதநேயமிக்க செயற்பாட்டிற்கு பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
தனது தந்தையின் வருகைக்காக 17 வருடங்களாகக் காத்துக்கொண்டிருக்கும் ஒரு மகளின் கண்ணீர்க் குரல் ஜனாதிபதி அனுரகுமார அரசாங்கத்தின் காதுகளிள் விழாதா என தனது பிஞ்சு காலங்களில் தந்தை சிறையில் இருந்த தாயை காலன் கொண்டு சென்ற நிலையில் மகளின் கண்ணீர்க் குரல் கேட்பவர் நெஞ்சங்களை உருக வைத்துள்ளது.
2008 ஆம் ஆண்டு கிளிநொச்சி மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட இரண்டு பிள்ளைகளின் தந்தையான சச்சிதானந்தம் – ஆனந்த சுதாகர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் (PTA) கீழ் கைது செய்யப்பட்டார்.
ஒன்பது நீண்ட வருடங்கள் கழித்து, அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, கடந்த 17 வருடங்களாக கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.
2018 ஆம் ஆண்டு ஆனந்த சுதாகரின் 36 வயதான மனைவி யோகராணி, உயிரிழந்தார். தனது மனைவியின் இறுதிச் சடங்கிற்காக ஆனந்த சுதாகர் சிறைச்சாலையிலிருந்து அழைத்து வரப்பட்டபோது நடந்த ஒரு சம்பவம், பார்த்தவர்களின் மனதை உலுக்கியது.
தனது தந்தையுடன் தொடர்ந்து இருக்க வேண்டும் என்ற ஏக்கத்துடன், அவரது மகள் சங்கீதா, சிறைச்சாலை பேருந்திலேயே ஏறிச் செல்ல முயற்சி செய்த காட்சி, அங்கிருந்த அனைவரையும் கண்ணீரில் ஆழ்த்தியது.
தாய் இல்லாத நிலையில், தந்தையின் அரவணைப்பிற்காக ஏங்கித் தவிக்கும் சங்கீதா, இந்த அரசாங்கமாவது தனது தந்தையை விடுதலை செய்ய வேண்டும் என்று உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார்.
உலகம் முழுவதும் இயந்திரகதியாகி இருக்கும் நிலையில், பலரும் கூகுள் டாக்டர்களையும், யூ-ட்யூப் வீடியோக்களையும் அப்படியே நம்பி வருகின்றனர். வியூவ்ஸ்களை அள்ளுவதற்காக இந்த உணவகத்தில் உணவு வேற லெவல் என்பதில் துவங்கி,
சித்த மருத்துவ குறிப்புகள் வரையில் வாய்க்கு வந்ததை பலரும் வீடியோக்களாக பதிவிட்டு பணம் சம்பாதிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர். அதை உண்மை என்று நம்பி பலரும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
இந்நிலையில் யூடியூப் பார்த்து உடல் எடையை குறைக்க முயன்ற மாணவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கடந்த 3 மாதங்களாக, மாணவர் எந்தவிதமான திட உணவு வகைகளையும் சாப்பிடாமல் பழச்சாறு மட்டும் குடித்து உடற்பயிற்சி செய்து வந்துள்ளது தெரிய வந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் பர்ணட்டிவிளையை சேர்ந்தவர் நாகராஜன், சுங்கவரி துறையில் ஏட்டாக பணியாற்றி வருகிறார்.
இவருடைய மகன் சக்தீஷ்வர் (17). இவர் பிளஸ்-2 தேர்ச்சி பெற்று என்ஜினீயரிங் கல்லூரியில் சேர தயாராகி வந்தார். இந்த நிலையில் நேற்று காலையில் வீட்டில் இருந்த சக்தீஷ்வர் திடீரென மூச்சு திணறி மயங்கி கீழே விழுந்து உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த குளச்சல் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது. அதாவது மாணவன் சக்தீஷ்வர் உடல் பருமனால் அவதியுற்று வந்துள்ளார்.
தற்போது மேற்படிப்பிற்காக கல்லூரிக்கு செல்ல இருந்த நிலையில் உடல் பருமனை பார்த்து சக மாணவர்கள் கேலி, கிண்டல் செய்யலாம் என நினைத்துள்ளார்.
எனவே உடல் எடையை குறைக்கும் வழிமுறைகள் குறித்து யூடியூபில் தேடியுள்ளார். அதில் கிடைத்த தகவலின்படி கடுமையான உணவு கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து வந்துள்ளார்.
அதாவது கடந்த 3 மாதங்களாக திட உணவு சாப்பிடாமல் பழச்சாறு மட்டும் குடித்து உடற்பயிற்சி செய்து வந்துள்ளார். தொடர்ந்து பழச்சாறு குடித்து வந்ததால் சளித் தொல்லைக்கு ஆளாகி மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து இறந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Google Map காட்டிய பாதையில் சென்றதால் காரில் சென்ற கணவன் மற்றும் மனைவி இருவரும் குளத்தில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திய மாநிலமான கேரளா, கோட்டயம் செத்திப்புழையைச் சேர்ந்த தம்பதியினர் ஜோசி ஜோசப் (வயது62) மற்றும் ஷீபா (58). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மான்வெட்டம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.
இதில் காரை ஒட்டிய ஜோசப் Google Map காட்டிய பாதையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவர்கள் கருப்பந்தரை என்ற இடத்தில் சென்ற போது குளத்தில் கார் விழுந்தது.
இதனால் கணவன் மற்றும் மனைவி இருவரும் வெளியில் வர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தனர். இதையடுத்து, அந்த வழியாக வழியாக வந்த பொதுமக்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
பின்னர், அவர்களை கயிறு மூலம் காரை கட்டி இழுத்து கரைக்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து ஜோசப் கூறுகையில், “சாலையில் வெள்ளம் தேங்கியிருந்ததால் ‘கூகுள் மேப்’ காட்டிய பாதையில் சென்று கொண்டிருந்தோம். அப்போது எதிர்பாராத விதமாக கார் குளத்திற்குள் பாய்ந்தது” என்றார்.
தமிழக மாவட்டம் காஞ்சிபுரத்தில் காதலனுக்காக தனது 2 பிள்ளைகளை கொலை செய்த அபிராமிக்கு, மாவட்ட நீதிமன்றம் சாகும்வரை ஆயுள்தண்டனை விதித்துள்ளது.
இரண்டு பிள்ளைகளை கொன்ற வழக்கு
கடந்த 2018ஆம் ஆண்டில் காஞ்சிபுர மாவட்டம் மூன்றாம் பகுதியைச் சேர்ந்த அபிராமி என்ற பெண், தனது இரண்டு பிள்ளைகளை கொன்ற வழக்கு தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
டிக்டொக்கில் பிரபலமான அபிராமி, பிரியாணி கடையில் வேலைபார்த்து வந்த மீனாட்சி சுந்தரம் என்பவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்துள்ளார்.
இந்த விடயம் அவரது கணவர் விஜய்க்கு தெரிய வரவே, அவரையும் தனது இரண்டு குழந்தைகளையும் கொலை செய்ய பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்துள்ளார்.
விஜய் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைக்க, 2 பிள்ளைகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பில் மீனாட்சி சுந்தரம், அபிராமி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அபிராமி தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளி என்றும், அவருக்கு உடந்தையாக இருந்த சுந்தரமும் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டது.
மேலும், அபிராமிக்கு சாகும்வரை ஆயுள் தண்டனையும், மீனாட்சி சுந்தரத்திற்கு வாழ்நாள் சிறை தண்டனையும் விதித்து காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
இயற்கை வாழ்க்கையிலிருந்து இயந்திர வாழ்க்கைக்குள் புகுந்த மனிதன், பெரும்பாலான நோய்களால் அவதியுறுகிறான். அந்த வாழ்க்கை முறை மாற்றமடைந்ததுவே இன்றைய மூட்டுப் பிரச்சினைகளுக்கு காரணமாக உள்ளது.
இந்த மாற்றமே கீல்வாதம், முடக்குவாதம் போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட மூட்டு நோய்களின் காரணமாக விளங்குகிறது. இன்றைய வேலைமுறை இளையரையும் பாதித்துள்ளது.
2018 ஆம் ஆண்டு ஆய்வில், 50க்கு மேற்பட்ட பெண்களில் 21.8% பேர் கீல்வாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ச்சியான வலிக்கான தீர்வில்லாமல் நீங்களும் தவிப்பவரா?
இதற்கு தீர்வாகத்தான், ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும் நோக்குடன் ஓர்த்தோ ஷீல்ட் மூட்டு வலி நிவாரணி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு பல்கலைக்கழகத்தில் உயர் ஆய்வுகளுக்கு உட்படுத்தி இயற்கை மூலிகைகளின் பயன்படுத்தி IBMBB உடன் இணைந்து உருவாக்கப்பட்டதே ஓர்த்தோ ஷீல்ட். 100% இயற்கை மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட இந்த ஓர்த்தோ ஷீல்ட்,
பழைமையான ஆயுர்வேத மருத்துவத்தை நவீன அறிவியலுடன் இணைத்து, விரைவான உறிஞ்சுதல் மற்றும் நீண்டகால நிவாரணத்தை வழங்குகிறது.
இவை வலியை விரைவாகக் குறைத்து, மூட்டுகளை மென்மையாக்குகின்றன.
விரைவான உறிஞ்சுதல் மற்றும் நீண்டகால நிவாரணம் இதன் தனித்துவமான கலவை, வலியின் மூல காரணத்தை நிவர்த்தி செய்து, விரைவாக உறிஞ்சப்பட்டு, நீண்டகால ஆறுதலை வழங்குகிறது.
இதற்கமைய களனி பல்கலைக்கழகத்தின் ஆய்வின்படி, 90% வாடிக்கையாளர்கள் ஓர்த்தோ ஷீல்ட் பயன்பாட்டில் திருப்தி அடைந்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.
மேலும், இது கீல்வாதம், மூட்டு விறைப்பு மற்றும் தசை வலிக்கு சிறந்த தீர்வாக அமைகிறது. அத்தோடு ஸ்டீராய்டுகள் அல்லது கடுமையான இரசாயனங்கள் இல்லாத இந்த மருந்து, எரிச்சல் இல்லாத, பாதுகாப்பான பயன்பாட்டை உறுதி செய்கிறது.
நீங்கள் தொழிலுக்காக பொது இடங்களுக்கு இல்லது நிறுவனங்களுக்கு செல்பவராயின் பயமின்றி ஓர்த்தோ ஷீல்டை பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஏனைய நிவாரணிகளை போன்று விரும்பத்தகாத வாசகனை இன்றி தூய நறுமணத்துடன் ஓர்த்தோ ஷீல்ட் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் இயற்கையான மணம் மற்றும் எண்ணெய் இல்லாத தன்மை, இதை அன்றாட பயன்பாட்டிற்கு ஏற்றதாக்குகிறது.
இந்த ஓர்த்தோ ஷீல்ட்டை, உடலில் பாதிக்கப்பட்ட பகுதியை வெதுவெதுப்பான நீரில் கழுவி, ஒரு நாளைக்கு இரண்டு முறை பயன்படுத்துவது சிறந்த பலனை பெற்றுத்தரும் என ஆய்வாளர்கள் நம்பிக்கையளித்துள்ளனர்.
பெற்றுக் கொள்வதற்கு, நாடு முழுவதும் உள்ள மருந்தகங்கள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் www.fadnals.lk,வழியாக பெற்றுக்கொள்ளமுடியும்.
மேலும், பாலூட்டும் தாய்மார்கள், குழந்தைகள்(18 வயதுக்கு கீழ்ப்பட்டவர்கள்) இதை பயன்படுத்துவதற்கு முன் மருத்துவரின் ஆலோசனையை பெற்றுக்கொள்ள வேண்டும்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 40 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளுடன் வெளிநாட்டு பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாட்டிற்குள் நுழைய முயன்றபோது, விமான நிலைய சுங்க போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவால் இன்று காலை அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கனடாவின் ஒன்ராறியோவை சேர்ந்த 52 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
அவர் கனடாவிலிருந்து கட்டார், தோஹாவிற்கு போதைப்பொருள் கொண்டு வந்துள்ளார். அங்கிருந்து, அவர் கட்டார், எயபர்வேஸ் விமானமான QR-662 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.
அவர் 12 கிலோகிராம் 196 கிராம் ஹஷிஷ் மற்றும் 05 கிலோகிராம் 298 கிராம் கோகைனை இலங்கைக்கு கொண்டு வந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரும் அவர் கொண்டு வந்த போதைப்பொருளும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள சுங்க போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.
இந்தியா – ஜலாவர் மாவட்டத்தில் உள்ள அரச பாடசாலை கட்டிடத்தின் ஒரு பகுதி, இன்று காலை இடிந்து விழுந்ததில் குறைந்தது நான்கு மாணவர்கள் பலியாகியுள்ளதுடன் எட்டு பேர் காயமடைந்துள்ளனர்.
அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காலை 7.45 மணியளவில் அரச மேல்நிலைப் பாடசாலையில் காலை பிரார்த்தனைக்காக மாணவர்கள் கூடியிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.
6 மற்றும் 7ஆம் வகுப்புகளுக்கான வகுப்பறைகளின் ஒரு பகுதி இடிந்து விழுந்தபோது, கட்டிடத்திற்குள் குறைந்தது 17 மாணவர்கள் இருந்ததாக அந்நாட்டு பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நான்கு பேர் பலியான நிலையில், 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் இருவர் மிகவும் ஆபத்தான நிலைமையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தின் போது பாடசாலை வளாகத்தில் இருந்த 27 மாணவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில நாட்களாக இலங்கையில் தங்கத்தின் விலையானது வீழ்ச்சியடைந்த நிலையிலேயே பதிவாகி வருகின்றது. இதன்படி, தங்கத்தின் விலை நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (25) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இந்தநிலையில், இன்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,018,168 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனடிப்படையில், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 35,920 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 287,350 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 32,930. ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 263,450 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 31,430 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 21 கரட் தங்கப் பவுணின் விலை 251,450 ரூபாவாக பதிவாகியுள்ளது.
சைபர் நிதி மோசடி கும்பலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் சீன நாட்டவர் ஒருவர் நாட்டிற்கு வந்த நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் எல்லை கண்காணிப்பு பிரிவு, கைது செய்யப்பட்ட சீன நாட்டவரை நாட்டிலிருந்து நாடு கடத்த நடவடிக்கை எடுத்துள்ளது.
28 வயதான அந்த நபர் மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.
அதிகளவிலான கணினி உபகரணங்களை எடுத்துச் சென்ற சீன நாட்டவரை, குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் எல்லை கண்காணிப்புப் பிரிவு விசாரித்துள்ளது.
இலங்கை பங்குச் சந்தையுடன் தொடர்புடைய ஒரு முக்கிய தொழிலதிபரை சந்திக்க வந்ததாக அவர் கூறியுள்ளார்.
மேலும், அவரது விசாரணையின் போது, சர்வதேச சைபர் நிதி மோசடி கும்பல் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அவர் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளார்.