நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் ஒரு உணவுப்பொருள் தான் வெங்காயம். இதில் புரதச்சத்துக்கள், வைட்டமின்கள் தாது உப்புக்கள், உள்ளன, உடலுக்கு பல நன்மைகளை அளிப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.
வெங்காயத்தை நறுக்கி இரவு நம் கால்களின் பாதத்தில் வைப்பதால் பல பயன்கள் கிடைக்கிறது. இதற்கு வெங்காயத்தை இரண்டாக நறுக்கி கட் செய்து பாதத்தின் அடியில் வைத்து சாக்ஸ் அணிந்து கொள்ளுங்கள், ஒருநாள் இரவு முழுதும் அப்படியே விட்டுவிட வேண்டும்.
கால்களில் உள்ள அக்குபஞ்சர் புள்ளிகளை தூண்டுகிறது.
உடலில் ரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன், வலிகளை போக்குகிறது.
கால் பாதங்களில் உள்ள பக்டீரியா மற்றும் தொற்று கிருமிகளை அழிக்கிறது.
இதுதவிர உடலிலிருந்து துர்நாற்றத்தை போக்குகிறது.
பக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றால் ஏற்படும் காய்ச்சலை சரிசெய்யும்.
இதய ஆரோக்கியம் மேம்படும், முக்கியமாக இந்த பழக்கத்தை அன்றாடம் மேற்கொண்டு வந்தால், இதய நோயில் இருந்து விடுபடலாமாம்.
மிகுந்த தொந்தரவைக் கொடுத்துக் கொண்டிருந்த கழுத்து வலி, காது வலி நீங்கும்.
குறிப்பு : கால்களில் புண்கள் அல்லது வெங்காயம் அலர்ஜி உள்ளவர்கள் இதை செய்யக்கூடாது.
நடிகர் கமல்ஹாசனின் இரண்டாவது மனைவியும், நடிகையுமான சரிகாவின் வாழ்க்கை பாதை சோகமான பின்னணியை கொண்டது.
டெல்லியில் பிறந்த இவர் மராத்திய குடும்பத்தை சேர்ந்தவர். சரிகாவின் இளம்வயதிலேயே அவரது தந்தை குடும்பத்தைவிட்டு பிரிந்து சென்றுவிட்டார்.
இதனால் குடும்பம் வறுமைக்கு ஆட்பட்டது இதனால் இவர் வேலைக்கு செல்லவேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார். இவர் பள்ளிக்கு செல்லும் வாய்ப்பையும் பெறவில்லை.
தனது குடும்ப வறுமையை போக்க 4 வயதில் திரைத்துறையில் காலடி எடுத்துவைத்தார். சிறுவயதில் இவரது வருமானத்தை நம்பியே இவரது குடும்பம் இருந்தது. அந்த அளவுக்கு குடும்பத்தின் சுமை இவரது தோள்மீது விழுந்தது.
அதுமட்டுமின்றி இவர் தனது தாயால் அனுபவித்த கொடுமைகள் ஏராளம். சிறுவயதில் தனது தாயால் அனுபவித்த கொடுமைகள் அவர் இறந்துபின்னரும் தொடர்ந்தது என்பதற்கு சமீபத்தில் வசிப்பதற்கு வீடு இல்லாமல் சரிகா இருந்தது விடயத்தில நிரூபணமானது.
இவரின் தாயார் இவரிடம் கடுமையாக வேலைவாங்கினார். இவர் தன் வாழ்வில் உச்சநிலையில் இருந்தபோது, இவரது தாயாரால் பொது இடத்தில் தாக்கப்பட்டார்.
சரிகாவின் படிப்பிற்கு அவரது தாயே இடையூறாக இருந்துள்ளார், தனது தாயிடம் அவர் அதிக கொடுமைகளை அனுபவித்த காரணத்தால் அவரை விட்டு பிரிந்து தனியாக வசிக்க ஆரம்பித்தார்.
இந்த சமயத்தில் தான் தென் இந்திய சினிமாவில் கலக்கிவந்த கமலுடன் பழக்கம் ஏற்பட்டது, இருவரும் திருமணம் செய்துகொள்ளாமலேயே சேர்ந்து வாழ்ந்தனர். ஏனெனில் கமல் மேற்கத்திய கலாசாரத்தை விரும்புபவர்.
கமல்ஹாசனை காதலிப்பதற்கு முன்பாக, இந்திய கிரிக்கெட் ஜாம்பவன் கபில் தேவை சரிகா காதலித்துள்ளார். ஆனால், கபில் தேவ் வேறு ஒரு பெண்ணை காதலித்த காரணத்தால் சரிகா, அதிலிருந்து ஒதுங்கிகொண்டார்.
இதன்பின்னர் கமலுடன் காதல் வயப்பட்ட இவர், 1988 ஆம் ஆண்டில் கமலை திருமணம் செய்துகொண்ட இவர் 2004 ஆம் ஆண்டு இவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார்.
விவாகரத்து பெறவிருக்கும் போது சரிகா தற்கொலைக்கு முயற்சித்தார் என கூறப்படுகிறது. தற்கொலை முயற்சியின் போது பலத்த காயங்கள் மற்றும் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் மூன்று மாதங்கள் அனுமதிக்கப்பட்டிருந்தார் சரிகா.
கமலின் பிரிவுக்கு பிறகு, மும்பையில் தனது தாயுடன் வசித்து வந்தார் சரிகா. இதற்கிடையில் சரிகாவின் தாய் இறந்துபோனபோது, அவர் வாங்கிய மும்பையின் ஜூஹூ பகுதில் உள்ள குடியிருப்பை அவரது உறவினர்களுக்கு எழுதி வைத்து இறந்துவிட்டார்.
அந்த குடியிருப்பு சரிகாவின் சம்பளத்தில் வாங்கியது. இதனை மீட்க கடந்த 2017 ஆம் ஆண்டு நீதிமன்ற வாசலில் ஏறி இறங்கி வருகிறார். இன்னும் வழக்கு முடியவில்லை.
இந்த நிலையில் தங்குவதற்கு கூட வீடு இல்லாமல் இருந்து வரும் அவருக்கு பாலிவுட் நடிகர் ஆமிர் கான் உதவியுள்ளார்.
சரிகாவும் நடிகர் இம்ரானின் அம்மாவும் நல்ல நண்பர்கள், அவர் கேட்டுக்கொண்டதன் பேரில் சரிகாவிற்கு அமீர்கான் உதவியுள்ளார்.
சரிகாவை அவரது இரண்டு மகள்களான ஸ்ருதியும், அக்ஷராவும் அவ்வப்போது சந்தித்து வருகின்றனர்.
சமீப நாட்களாகவே இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் குழந்தைகளை கடத்துபவர் என நினைத்து அப்பாவி நபர்கள் பலரும் அடித்து கொலை செய்யப்படுகின்றனர். இதற்கு எல்லாம் என்ன காரணம் என ஆராயும் பொழுது வட்ஸ்அப் மூலம் பகிரப்படும் வதந்திகளே என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது.
இதனையடுத்து, வட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூகவலைத்தளங்களின் மூலம் அதிகமான வதந்திகள் பகிரப்படுவதை தடுக்கும் விதமாக, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு சில தினங்களுக்கு முன்னதாக வட்ஸ்அப் நிறுவனத்திற்கு கோரிக்கை வைத்திருந்தது.
அதில், “கொலைகள் நடைபெறக் காரணமாகும் வதந்திகள் பரவுவதைத் தடுப்பதில் தங்களுக்கான பொறுப்பு மற்றும் கடமையை வட்ஸ்அப் நிர்வாகம் தட்டிக்கழிக்க முடியாது” என்று தொலைத் தொடர்பு மற்றும் மின்னணுவியல் துறை அமைச்சகம் அனுப்பியிருந்த கோரிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இதுதொடர்பாக வட்ஸ்அப் நிறுவனம் 10 சதவித அறிவுறுத்தல்களுடன் ஒருபக்க அளவில் விளம்பரம் ஒன்றினை வெளியிட்டுள்ளது. ஒரு தகவலை இன்னும் ஒருவருக்கு பகிரும் முன்பு அதன் உறுதித்தன்மையை உணர்தல் வேண்டும்.
பரிமாறப்படும் தகவலின் உண்மைத்தன்மையை அறிதல் வேண்டும், தகவல் மீது சந்தேகம் இருப்பின் அதனை பகிர்வதற்கு முன்பாக யோசித்தல் வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பிரபல வார்த்தைகளால் பகிரப்படும் லிங்க்-ல் உள்ள எழுத்துகளை சரிபார்த்தல் வேண்டும் என்றும் வட்ஸ்அப் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
தென்னாப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைவி டேன் வான் நீகெர்க் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் மரிசான் காப் ஆகியோர் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர்.
இருவருக்கும் ஏற்கனவே நிச்சயதார்த்தம் முடிந்தவிட்ட நிலையில் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக சமூகவலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.
டேன் மற்றும் மரிசான் ஆகிய இருவரும் 2009ல் ஒரே நேரத்தில் தென்னாப்பிரிக்கா அணிக்காக அறிமுகமாயினர்.
இருவரும் தென் ஆப்பிரிக்க அணிக்காக முக்கிய வீராங்கனைகளாக திகழும் நிலையில் இருவருக்குள்ளும் சில ஆண்டுகளாக இருந்த நட்பு, காதலாகி தற்போது திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர்
இதற்கான நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. அதற்கான படங்களை அவர்கள் சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
இலங்கையில் பிறந்து கனடாவில் வசிக்கும் பிரபல கவிஞரும், எழுத்தாளருமான மைக்கேல் ஒண்டாட்ஜே எழுதிய நாவலுக்காக அவருக்கு Booker பரிசு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 1943-ல் இலங்கையில் பிறந்த மைக்கேல் பின்னர் கனடாவில் குடியேறினார். கவிஞர், எழுத்தாளர், கட்டுரையாளர் என பன்முகத்தன்மையோடு வலம் வரும் மைக்கேல் இரண்டாம் உலக போரின் போது வாழ்ந்த நான்கு கதாபாத்திரங்களை அடிப்படையாக வைத்து The English Patient என்ற நாவலை எழுதியுள்ளார்.
இந்த நாவல் லண்டனில் நடைபெற்ற Golden Man Booker விருது விழாவில் சிறந்த நாவலாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பரிசை மைக்கேல் ஞாயிறு அன்று நடைபெற்ற விழாவில் பெற்று கொண்டார்.
இது Booker பரிசு போட்டியின் 50-வது ஆண்டு விழா என்பது கூடுதல் சிறப்பாகும். The English Patient நாவலானது ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது.
இது குறித்து Booker பரிசு அறக்கட்டளையின் தலைவர் பரோனஸ் ஹலினா வெளியிட்டுள்ள அறிக்கையில், The English Patient நாவல் கவிதையாகவும், நல்ல தத்துவமாகவும் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
இதே போல எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள் The English Patient நாவலை பெரிதும் பாராட்டியுள்ளார்கள்.
அமெரிக்காவில் உள்ள காட்டில் குப்பைகள் மற்றும் குச்சிகள் மத்தியில் 5 மாத குழந்தை புதைக்கப்பட்ட நிலையில் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளது.
மிசவுலா நகரில் உள்ள காட்டுப்பகுதியில் பிறந்து 5 மாதங்களே ஆன குழந்தை அழும் சத்தம் கேட்ட நிலையில் அந்த பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்துக்கு அதிகாரிகள் வந்தபோது அங்கிருந்த பிரான்சிஸ் கிரவ்லே (32) என்ற நபர், நான் தான் குழந்தையை 9 மணி நேரத்துக்கு முன்னர் புதைத்தேன் என கூறினார்.
இதையடுத்து குழந்தை புதைக்கப்பட்ட இடத்துக்கு சென்ற அதிகாரிகள் குழந்தையை மீட்டனர்.
குப்பைகள், இலைகள் மற்றும் குச்சிகள் குவியலுக்கு கீழ் குழந்தை புதைக்கப்பட்டிருந்த போதும் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளது. இதையடுத்து பொலிசார் கிரவ்லேவை கைது செய்தனர்.
கிராவ்லேவுக்கு குழந்தை என்ன உறவு என தெரியாத நிலையில் அது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இளம் பெண் பெட்ரோல் ஊற்றி எரித்ததால் மரணம் அடைந்த நிலையில் அது கொலையா அல்லது தற்கொலையா என பொலிசார் இன்னும் கண்டுப்பிடிக்க முடியாமல் திணறி வருகிறார்கள்.
ஆப்கானிஸ்தானை சேர்ந்த சதிப் கரீமி என்ற பெண் திருமணமாகி அவுஸ்திரேலியாவுக்கு சென்ற நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் பெட்ரோல் ஊற்றி எரித்ததால் மரணம் அடைந்தார்.
தற்கொலை செய்யும் எண்ணத்தில் கரீமி தன் மீது பெட்ரோல் ஊற்றி தன்னை எரித்து கொண்டதாக கரீமியின் கணவர் குடும்பத்தார் கூறினார்கள்.
ஆனாலும் இதை வைத்து பொலிசாரால் இது தற்கொலை தான் உறுதியான முடிவுக்கு வரமுடியாத நிலையில் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
அதாவது தனது வீட்டில் பார்த்து திருமணம் செய்துவைத்த நபரை பிடிக்காமலேயே அவருடன் கரீமி வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
விக்டோரியாவில் உள்ள உதவி மையத்தை டிசம்பர், ஜனவரியில் தொடர்பு கொண்ட கரீமி கணவர் வீட்டார் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், நடுஇரவில் மழை பெய்தபோது வீட்டை விட்டு துரத்தியதாகவும் கூறியுள்ளார்.
இதையடுத்து பொலிசார் கரீமி கணவரை கைது செய்து விசாரித்த நிலையில் அவர் மீது தவறில்லை என விடுதலை செய்தனர்.
இது குறித்து பேசிய கரீமியின் தந்தை ஹஜி ஜடா, என் மகளின் மரணத்தை இன்னும் ஜீரணிக்க முடியவில்லை.
என் உடலில் ஒரு பகுதியை இழந்தது போல உணர்கிறேன், நாங்கள் ஆப்கானிஸ்தானின் சிறுகிராமத்தில் இருந்ததால் கரீமியின் இறுதிசடங்கில் கூட கலந்து கொள்ள முடியவில்லை என வேதனை தெரிவித்துள்ளார்.
சென்னையில் கல்லூரி மாணவியை கத்தியால் முயன்ற உடற்பயிற்சி ஆசிரியரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது,
சென்னை கல்லூரியில் பயிலும் மாணவி சுமதியிடம், `நீ ஏன் வெறுக்கிறாய்’ என்று கேட்டு தகராறு செய்துள்ளார் மதன். உடற்பயிற்சி மையம் வைத்திருக்கும் மதனுக்கும், கல்லூரி மாணவி சுமதியும் காதலித்து வந்துள்ளனர். இடையில் இவர்களுக்குள் பிரிவு ஏற்பட்டதால் சுமதி, மதனை சந்திக்காமல் தவிர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், சுமதி படிக்கும் கல்லூரிக்கு கத்தியுடன் நுழைந்த மதன், நீ ஏன் என்னை வெறுக்கிறாய்?’ மதன் கேட்டுள்ளார். அதற்கு ‘உன்னை எனக்குப் பிடிக்கவில்லை’ என்று சுமதி கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த மதன், சுமதியை கத்தியால் குத்த முயன்றுள்ளார்.
அப்போது சக மாணவர்கள் சுமதியை மதனிடமிருந்து காப்பாற்றினர். பிறகு, மதனை அண்ணா சதுக்கம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பிரபல நடிகர் கவிகுமார் மாரடைப்பால் தனது 46வது வயதில் காலமானார். இந்தி திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து புகழ்பெற்றவர் கவிகுமார்.
இவருக்கு சில தினங்களுக்கு முன்னர் உடல்நலக்கோளாறு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் திடீரென நேற்று கவிகுமாருக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இயக்குனர் அஷித்குமார், திங்களன்று ஏற்பட்ட கடும் மாரடைப்பால் கவிகுமார் இறந்துவிட்டார்.
அவர் ஒரு அற்புதமான நடிகர் மற்றும் நேர்மறையான நபராவார். கவிகுமாரின் இழப்பை ஈடு செய்யவே முடியாது என தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் 10ம் வகுப்பு மாணவியை பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் உட்பட 18 பேர் சீரழித்த விவகாரத்தில் மாணவியின் வாக்குமூலம் பொலிசாரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
10 வகுப்ப மாணவியின் வாக்குமூலம் இதோ, என்னை பள்ளி கழிவறையில் வைத்து சில மாணவர்கள் ஒவ்வொருவராக பாலியல் வன்கொடுமை செய்தனர்.
அதில் பள்ளி தலைமையாசியரின் மகனும் இருந்தான். பிறகு ரத்தம் படிந்த உடையோடு வெளியே வந்தேன். அதை பார்த்த தலைமையாசியர் அவரது அறைக்கு அழைத்தார்.
நடந்ததை அவரி டம் கூறி அழுதேன். என்னை சிரழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, இதை யாரிடமும் சொல்லக் கூடாது என்று எச்சரிக்கை செய்தார்.
பின்னர் அவரது அறையில் என்னை சுத்தம்செய்துகொள்ள சொன்னார். அதன்பின்னர் நான் அங்கிருந்து வந்துவிட்டேன். பத்து நாட்களுக்குப் பிறகு மீண்டும் பள்ளிக்குச் சென்றேன்.
அப்போது, தலைமையாசிரியர் அவரது அறைக்கு அழைத்தார். அங்கு சென்றபோது, என்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார்.
நான் தப்பிக்க நினைத்தேன். மறுத்தால் என் வாழ்க்கையை நாசமாக்கிவிடுவதாக மிரட்டி, ஆசையை தீர்த்துக்கொண்டார் என கூறியுள்ளார்.
பேஸ்புக் மூலமாக நண்பரான ஒருவர் தனக்கு தொடர்ந்து தொல்லை கொடுப்பதாக திருநங்கை எஸ்.ஐ. பிரித்திகா யாஷினி பொலிசில் புகார் அளித்துள்ளார்.
இந்தியாவின் முதல் திருநங்கை சப்-இன்ஸ்பெக்டராக தேர்வான பிரித்திகா யாஷினி சென்னை சூளைமேடு காவல் நிலையத்தில் பணிபுரிகிறார்.
இந்நிலையில் நேற்று அவர் அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில், தனக்கு கடந்த சில நாட்களுக்கு முன் பேஸ்புக் மூலமாக ஜனார்த்தனன் என்பவர் அறிமுகமானதாகவும், சில காலம் அவருடன் நட்பாக பழகி வந்ததாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்ததால் பிரிந்து விட்டதாகவும் கூறியுள்ளார்.
ஆனால் ஜனார்த்தனன் தொடர்ந்து தனக்கு தொல்லை கொடுத்து வருவதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் பிரித்திகா கேட்டுக்கொண்டார்.
இதுதொடர்பான நடவடிக்கையில் இறங்கிய பொலிசார் ஜனார்த்தனனை நேரில் அழைத்து விசாரித்தனர்.
இதனைத்தொடர்ந்து பிரித்திகாவுக்கு தொல்லை கொடுக்க கூடாது என்று எழுதி வாங்கிக் கொண்டனர்.
எஸ்.ஐ. ஒருவரே பாதுகாப்பு கேட்டு பொலிசிடம் புகார் அளித்தது பொலிஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டையே அதிரவைத்த சிறுமி ஹாசினியின் கொலை வழக்கில் குற்றவாளிக்கு தரப்பட்ட தூக்கு தண்டனை தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
2017ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் திகதி வீட்டில் விளையாடி கொண்டிருந்த 7 வயது சிறுமி ஹாசினி காணாமல் போனார்.
விசாரணையில் சிறுமியை, பக்கத்துக்கு வீட்டுக்காரரான தஷ்வந்த் பாலியல் துன்புறுத்தல் செய்ததுடன் கொலை செய்து சடலத்தை எரித்த சம்பவத்தால் தமிழ்நாடே பதறியது.
இதனை தொடர்ந்து கொலைகாரன் தஷ்வந்தை குண்டர் சட்டத்தில் அடைத்தனர், ஆனாலும் சில மாதங்களில் ஜாமீன் தரப்பட்டது.
ஜாமீனில் வெளிவந்த தஷ்வந்த் தனது தாய் சரளாவை கொன்றுவிட்டு நகைகளுடன் மும்பைக்கு தப்பிச்சென்றான்.
தொடர்ந்து மும்பையில் தஷ்வந்தை கைது செய்த பொலிசார் புழல் சிறையில் அடைத்தனர். கடந்த பிப்ரவரி 19ஆம் திகதி இந்த வழக்கை விசாரித்த காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
இந்த தண்டனையை எதிர்த்து தஷ்வந்த் தரப்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டிருந்தது.
தனது தூக்கு தண்டனையை ரத்து செய்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று தஷ்வந்த் தரப்பில் கேட்கப்பட்டிருந்தது.
இன்று விசாரணைக்கு வந்த வழக்கில், காஞ்சிபுரம் மகளிர் நீதிமன்றம் விதித்த தண்டனை சரியானதுதான் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர், தஷ்வந்தின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
தமிழகத்தில் ஆசிரியர் ஒருவருக்கு பள்ளி மாணவன் தலையில் மசாஜ் செய்வது போன்ற வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன் சத்திரம் அருகே உள்ள இடையகோட்டையில், நேருஜி அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை இயங்கி வரும் இந்த பள்ளியில், சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பள்ளியின் ஆண்டு விழாவை முன்னிட்டு, ஆசிரியர் இளங்கோவன் என்பவர் மாணவர்களுக்கு ஒத்திகை நடத்தியுள்ளார். அதன்படி, 8ஆம் வகுப்பு மாணவர் விஷால் கார்த்தி என்ற மாணவருக்கு ஒத்திகை நடத்த ஆசிரியர் இளங்கோவன் அழைத்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
அப்போது ஆசிரியருக்கு மாணவர் விஷால்கார்த்தி தலையில் மசாஜ் செய்துள்ளார். இதனை ரங்கராஜ் எனும் மற்றொரு ஆசிரியர் தனது சட்டைப் பையில் வைத்திருந்த கைப்பேசியில் வீடியோவாக எடுத்துள்ளார்.
அதன் பின்னர், அந்த வீடியோவை அவர் இணையதளங்களில் வெளியிட்டார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், ஆசிரியர்கள் இளங்கோவன் மற்றும் ரங்கராஜ் ஆகியோர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
இந்நிலையில், இதுதொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுப்பிரமணி கூறுகையில்,
‘மசாஜ் சம்பவம் குறித்து ஒரு ஆண்டுக்கு முன்பு நடந்ததாக தெரிய வருகிறது. இது குறித்து விசாரணை நடத்த உள்ளோம். மேலும் சில ஆசிரியர்கள் சரியாக பணி செய்யவில்லை, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இது சம்மந்தமாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவர்கள் உட்பட 80 பேரை ஏற்றிச் சென்ற பேருந்தின் சக்கரம் ஒன்று தனியாக பயணித்தமையால் பதற்ற நிலை ஏற்பட்டது.
பதுளை – மஹியங்கனை வீதியில் பயணித்த பேருந்தின் முன் பக்க சக்கரம் திடீரென கழன்று சென்று சென்றமையால், பயணிகள் மத்தியல் பதற்ற நிலை ஏற்பட்டது.. எனினும் இதனால் ஏற்படவிருந்த பாரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
பயணித்து கொண்டிருந்த பேருந்தின் வலது பக்க சக்கரம் உட்பட பல இயந்திரங்கள் ஒன்றாக உடைந்து விழுந்துள்ளன. பேருந்தில் ஏற்பட்ட கோளாறே இந்த சம்பவத்திற்கு காரணமாகியுள்ளது.
இந்த விபத்து ஏரிக்கு அருகில் அல்லது நீர் வீழ்ச்சிக்கு அருகில் நிகழ்ந்திருந்தால் பாரிய உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தியாவில் பள்ளி மாணவி மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்த நிலையில் அது குறித்து தோழியிடம் முன்னரே அவர் பேசியுள்ளது தெரியவந்துள்ளது.
மும்பையை சேர்ந்த ஹர்சிகா மாயவன்சி (14) என்ற மாணவி கடந்த வாரம் எட்டாவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஹர்சிகாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வரும் பொலிசாருக்கு பல விடயங்கள் தெரியவந்துள்ளது.
அதன்படி அவர் பையில் இருந்த கடிதத்தை பொலிசார் கைப்பற்றியுள்ளனர். அதில், எல்லாம் முடிந்துவிட்டது, தனது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை என எழுதப்பட்டிருந்தது.
பொலிஸ் விசாரணையில், எப்படி தற்கொலை செய்வது என ஹர்சிகா தனது தோழியிடம் யோசனை கேட்டுள்ளதும், அது குறித்து இணையத்தில் தேடியதும் தெரியவந்துள்ளது.
பயம் காரணமாக இதை ஹர்சிகாவின் தோழி யாரிடமும் சொல்லாமல் இருந்த நிலையில் தற்போது வெளியில் சொல்லியுள்ளார்.
அவர் குறித்த அடையாளங்களை வெளியிடாத பொலிசார் தொடர்ந்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் பெருமாள் கோவிலுக்குள் புகுந்த நாக பாம்பு பெருமாள் சிலை மீது ஏறி காட்சியளித்தது பக்தர்களை சிலிர்க்க வைத்தது.
மதுரை திருமோகூரில் அமைந்துள்ளது காளமேகப் பெருமாள் கோவில். இந்த கோவிலின் பிராகரத்திற்குள் இன்று நாக பாம்பு ஒன்று புகுந்த நிலையில் பெருமாள் சிலை மீது ஏறி அனைவருக்கும் காட்சியளித்தது.
இதையடுத்து கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் பாம்பை ஆச்சரியத்துடன் பார்த்தது மட்டுமின்றி அதை தங்கள் செல்போனில் படமும் பிடித்தார்கள். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது பரவி வருகிறது.