பாடசாலை கட்டும் கும்பமேளா காந்தக் கண் அழகி மோனலிசா ; குவியும் பாராட்டுக்கள்!!

கும்பமேளா மூலம் என் வாழ்க்கை நல்லபடியாக மாறி நான் இந்த நிலைக்கு வருவேன் என்று நினைக்கவில்லை. திடீரென்று கிடைத்த புகழ் மூலம் எனக்கு பொறுப்பும் வந்திருக்கிறது.

என்னை நல்ல நிலைக்கு கொண்டு வந்த சமூகத்திற்கு நான் நல்லது செய்ய விரும்புகிறேன். என் சொந்த ஊரில் பெண்களுக்கான பாடசாலையை கட்ட முடிவு செய்திருக்கிறேன் என நடிகையான கும்பமேளா மோனலிசா தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த மோனலிசா தனது குடும்பத்தினருடன் சேர்ந்து கும்பமேளாவில் ருத்ராட்ச மாலை வியாபாரம் செய்துவந்தார். இவரது அழகிய தோற்றம் காண்போரை வசீகரித்தது.

காந்தக் கண் அழகி

யூடியூபர் ஒருவர் இவரை வீடியோ எடுத்து பதிவேற்றம் செய்யவே சமூக வலைதளங்களில் பெரும் வைரலாக மாறினார் அந்த பெண். அவரது தோற்றத்தை வைத்து அவருக்கு ‘மோனலிசா போஸ்லே’ என்று நெட்டிசன்கள் பெயர் சூட்டியுள்ளனர்.

காந்தக் கண் அழகி என மிகவும் கொண்டாடப்பட்ட மோனலிசாவுக்கு சினிமா வாய்ப்பு வீடு தேடி வந்தது. சினிமாவுக்காக அவர் மும்பை வரவழைக்கப்பட்டு அவரது தோற்றத்தையே மாற்றினர்.

நகைக்கடை திறப்பு விழா, கடை திறப்பு விழாக்களில் பங்கேற்று வந்த மோனலிசா, தற்போது ஆளே மாறி போய் தேவதையாக காட்சி தருகிறார். இதை தொடர்ந்து மோனலிசா சினிமாவில் அறிமுகமாகி நடித்து வருகிறார்.

அவரது வாழ்க்கை உச்சத்துக்கு சென்று கொண்டிருக்கிறது. தற்போது ஒரு ஹிந்தி மற்றும் 2 தெலுங்கு படங்களில் நடித்து வரும் மோனலிசா அளித்துள்ள பேட்டியில்,

கும்பமேளா மூலம் என் வாழ்க்கை நல்லபடியாக மாறி நான் இந்த நிலைக்கு வருவேன் என்று நினைக்கவில்லை. திடீரென்று கிடைத்த புகழ் மூலம் எனக்கு பொறுப்பும் வந்திருக்கிறது.

என்னை நல்ல நிலைக்கு கொண்டு வந்த சமூகத்திற்கு நான் நல்லது செய்ய விரும்புகிறேன். என் சொந்த ஊரில் பெண்களுக்கான பாடசாலையை கட்ட முடிவு செய்திருக்கிறேன்.

என் முதல் படத்தின் சம்பளத்தை வைத்து அந்த பாடசாலையை கட்டப் போகிறேன். கல்வி மூலம் தான் நல்ல மாற்றம் ஏற்படும் என நம்புகிறேன். அதனால் எனக்கு கிடைக்கும் சம்பளத்தை கல்விக்கு செலவு செய்யப்போகிறேன்” என்றார்.

மோனலிசாவின் முடிவு வைரலாகி வரும் நிலையில் திடீரென பணம் கிடைத்ததும் ஆடம்பரத்துக்கு ஆசைப்படாமல் பாடசாலையை கட்ட நினைப்பது பெருமைக்குரிய விஷயம் என பலரும் வாழ்த்தியுள்ளனர்.

சட்டத்தரணி மற்றும் மனைவி மீது துப்பாகிச்சூடு : இலக்கத்தகடு கண்டுபிடிப்பு!!

தலங்கம- அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில், துப்பாக்கிதாரிகள் தப்பிச் சென்ற சிற்றூந்தின் இலக்கத் தகட்டை கொட்டாவை காவல்துறை கண்டுபிடித்துள்ளது.

நேற்று (13) மாலை அக்குரேகொட பகுதியிலுள்ள ஒரு பல்பொருள் அங்காடியின் வாகன தரிப்பிடத்தில் வைத்து இந்தத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

சிற்றூந்தில் இருந்த 45 வயதான சட்டத்தரணி புத்திக மல்லவாரச்சி மற்றும் அவரது 42 வயதுடைய மனைவி ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

சிற்றூந்தில் வந்த இருவர், கீழே இறங்கி டி-56 ரக துப்பாக்கி மற்றும் 9 மில்லிமீற்றர் பிஸ்டல் மூலம் சிற்றூந்தின் இருபுறமும் நின்று சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கெமராக்களில் பதிவாகியுள்ளன.

துப்பாக்கிச்சூட்டின் பின்னர் துப்பாக்கிதாரிகள் தப்பிச் சென்ற சிற்றூந்து, உந்துருளி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது சிற்றூந்தின் இலக்கத் தகடு கீழே விழுந்திருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது.

இந்நிலையில் சந்தேக நபர்களின் இலக்கத் தகட்டை தற்போது கொட்டாவை காவல்துறை கைப்பற்றியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

 

இன்ஸ்டாகிராம் காதல் : பெண்ணை கொன்று உடலை இரும்புப் பெட்டிக்குள் வைத்து வீசிய கொடூரம்!!

சமூகவலைத்தளமான இன்ஸ்டாகிராம் (Instagram) ஊடாக அறிமுகமான பெண்ணைக் கொலை செய்து, அவரது உடலை இரும்புப் பெட்டிக்குள் வைத்து கழிவுநீர் தொட்டியில் வீசிய சம்பவம் இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளதாவது, மகாராஷ்டிராவைச் சேர்ந்த சியா என்பவருக்கும், போபாலைச் சேர்ந்த சமீர் என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

திருமணமானவரான சமீர், தனது திருமண விபரங்களை மறைத்து சியாவுடன் பழகி வந்துள்ளார். இதனை நம்பிய சியா, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் தனது ஊரை விட்டு வெளியேறி சமீருடன் வாழ்வதற்காக போபாலுக்கு வந்துள்ளார்.

சமீருக்கு ஏற்கனவே திருமணாகி இரண்டு குழந்தைகள் இருப்பதை அறிந்த பின்னர், சியாவிற்கும் சமீரின் மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தன்னைத் திருமணம் செய்யுமாறு அல்லது 5 இலட்சம் ரூபாய் பணம் தருமாறு சியா அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில், கடந்த திங்கட்கிழமை சமீர் சியாவை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கொலை செய்த பின்னர், தடயங்களை அழிப்பதற்காக தனது சகோதரன், தாய் மற்றும் சகோதரியின் உதவியுடன் சியாவின் உடலை ஒரு இரும்புப் பெட்டிக்குள் வைத்து பூட்டியுள்ளார்.

நள்ளிரவில் வீட்டின் அருகே உள்ள பாழடைந்த காணியொன்றிலிருந்த கழிவுநீர் தொட்டியில் வீசியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை மாலை அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள், கழிவுநீர் தொட்டியிலிருந்து துர்நாற்றம் வீசுவதைக் கண்டு ஊர் மக்களுக்குத் தெரிவித்துள்ளனர்.

அங்கு இரும்புப் பெட்டி ஒன்று மிதப்பதைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு அறிவித்தனர்.

குறித்த பெண்ணின் சிதைவடைந்த நிலையில் காணப்பட்டாலும், சியாவின் கையிலிருந்த Tattoo வால் சடலம் அடையாளம் காணப்பட்டது.

தற்போது தலைமறைவாகியுள்ள காதலன் சமீரைக் கைது செய்ய காவல்துறை நடவடிக்கை எடுத்து வருவதுடன், கொலையினை மறைக்க உதவிய அவரது குடும்ப உறுப்பினர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் தொடர் கொள்ளை : கணவன் – மனைவி உட்பட மூவர் கைது!!

வவுனியாவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவம் தொடர்பில் கணவன் மனைவி உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நடவடிக்கை இன்று(14.02.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, கடந்த மூன்று தினங்களுக்கு முன் வவுனியா, சதொச வீதியில் மோட்டர் சைக்கிள் ஒன்று திருடப்பட்டிருந்தது.

திருடப்பட்ட மோட்டார் சைக்கிளில் உரிமையாளர் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்தார்.

குறித்த முறைப்பாட்டுக்கமைய, வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ.எஸ்.வீரத்தின வழிகாட்டலில், வவுனியா பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி இலங்கசிங்க தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்போது, மடு, இரணைஇலுப்பைக்குளம் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய நபர் ஒருவரும், அவருடைய மனைவி (25 வயது), மற்றும் 31 வயதுடைய மனைவியின் மைத்துனர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் ரூபாய் மூன்று இலட்சம் பெறுமதியான திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டது.

அத்துடன், குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட வவுனியா பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவினர், சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!!

உலக சந்தையில் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், காதலர் தினமான இன்றையதினம் தங்கத்தின் விலை சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. அதன்படி, உலக சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 5,041 டொலராக பதிவாகியுள்ளது.

அதேநேரம், வெள்ளியின் விலையும் இன்றைய தினம் அதிகரிப்பை பதிவுசெய்துள்ளது. இதற்கமைய, ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 77.41 டொலராக பதிவாகியுள்ளது.

இவ்வாறான சூழலில் இலங்கையில் இன்றைய தினம்(14) தங்கத்தின் விலை 5000 ரூபாவால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

சர்வதேச மற்றும் உள்ளூர் சந்தை நிலவரங்களுக்கு அமைவாகவே இந்த விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அந்தச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி இன்றைய தினம் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 365400 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 395000 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த சில தினங்களாக மாறமல் இருந்து வந்த தங்கத்தின் விலையானது இன்று திடீர் அதிகரிப்பை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

17 ஆம் திகதி ஆரம்பமாகும் சாதாரண தரப்பரீட்சை : பரீட்சார்த்திகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்!!

சாதாரண தரப் பரீட்சை காலத்தில் ஓரளவு மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், ஆபத்தில் உள்ள பாடசாலைகள் குறித்த தகவல்கள் அந்த பகுதிகளில் உள்ள கல்வி அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.

மோசமான வானிலை காலத்தில் வழங்கப்படும் அறிவுறுத்தல்களின்படி பாடசாலைகள் செயல்பட வேண்டும் என்று அமைப்பின் மூத்த புவியியலாளர் வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.

அதன்படி, மக்கள் வீதிகளைப் பயன்படுத்தும் போது, ​​பாடசாலைகளின் இடங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்கள் குறித்து வழங்கப்படும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெப்ரவரி 17 முதல் பெப்ரவரி 26 திகதி வரை நடைபெற உள்ளது.

நாளை (15) முதல் தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால், எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் இது தொடர்பாக வெளியிடப்படும் அறிவிப்புகள் குறித்து பொதுமக்கள் கவனம் செலுத்துமாறு திணைக்களம் கேட்டுக்கொள்கிறது.

 

T20 – இந்தியா – பாகிஸ்தான் போட்டி பரபரப்பாகும் கொழும்பு – தயார்நிலையில் உச்சக்கட்ட பாதுகாப்பு!!

2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் இந்தியா vs பாகிஸ்தான் போட்டி, கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் வரும் 15 ஆம் திகதி நடைபெற உள்ளது.

இலங்கை மற்றும் இந்தியாவால் நடத்தப்படும் 2026 இருபது 20 கிரிக்கெட் உலகக் கோப்பையை வெற்றிகரமாகவும் பாதுகாப்பாகவும் நடத்துவதை உறுதி செய்வதற்காக விரிவான மற்றும் பன்முக பாதுகாப்புத் திட்டத்தை செயல்படுத்துவதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

போட்டியின் சர்வதேச முக்கியத்துவத்தையும், உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏராளமான வீரர்கள், அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் பார்வையாளர்களையும் கருத்தில் கொண்டு,

இலங்கை பொலிஸ், முப்படைகள், புலனாய்வு அமைப்புகள் மற்றும் பிற முக்கிய பங்குதாரர்களின் பங்கேற்புடன் தயாரிக்கப்பட்ட கூட்டு பாதுகாப்புத் திட்டத்தை அமைச்சகம் ஒருங்கிணைத்துள்ளது.

இதன்படி, போட்டி நடைபெறும் இடங்கள், ஹோட்டல்கள், பயிற்சி மையங்கள், விமான நிலையங்கள் மற்றும் நியமிக்கப்பட்ட பார்வையாளர் பகுதிகளுக்கு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குறித்த போட்டி முழுவதும் பாதுகாப்பான சூழலை உறுதி செய்வதற்காக இருபத்தி நான்கு மணி நேர பாதுகாப்பு அமைப்புகள், அணுகல் கட்டுப்பாட்டு நடைமுறைகள், வாகன சோதனைச் சாவடிகள் மற்றும் பார்வையாளர்களைக் கையாளும் நடைமுறைகள் செயல்படுத்தப்படவுள்ளது.

மேலும் போட்டியில் பங்கேற்கும் அணிகள், அமைப்பாளர்கள், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் தூதர்களுக்கு நெருக்கமான பாதுகாப்பை வழங்க சிறப்பு பாதுகாப்புப் பிரிவுகள் நிறுத்தப்பட்டுள்ளன.

சிசிடிவி கண்காணிப்பு மற்றும் நிகழ்நேர உளவுத்துறை ஒருங்கிணைப்பு உள்ளிட்ட கண்காணிப்பு அமைப்புகள், சூழ்நிலை விழிப்புணர்வு மற்றும் எதிர்வினை திறன்களை மேலும் வலுப்படுத்த பாதுகாப்பு அமைச்சகம் வான்வெளி கண்காணிப்பை அதிகரித்துள்ளது.

மேலும், எந்தவொரு அவசரநிலைக்கும் பதிலளிக்க மருத்துவ பிரிவுகள் உட்பட அவசரகால மீட்புக் குழுக்களை விழிப்புடன் வைத்திருக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

போட்டியின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அதிகபட்ச பொது ஒழுங்கு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் பொதுமக்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் உறுதியளிக்கிறது.

பார்வையாளர்கள் உட்பட பொதுமக்கள் பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஒத்துழைக்கவும், அரங்க வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும்,

எந்தவொரு சந்தேகத்திற்கிடமான நடவடிக்கையும் அதிகாரிகளுக்குத் தெரிவிப்பதன் மூலம் பொது பாதுகாப்பை உறுதி செய்வதில் உதவவும் அமைச்சகம் கேட்டுக்கொள்கிறது.

உயர்ந்த தொழில்முறை மற்றும் சிறப்பம்சத்துடன் ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டியை நடத்த இலங்கையின் திறனை நிரூபிக்கும் வகையில், பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பான சூழலில் ஒரு மறக்க முடியாத இருபது20 உலகக் கோப்பையை வழங்க பாதுகாப்பு அமைச்சகம் உறுதிபூண்டுள்ளது.

 

இலங்கையில் அதிகரிக்கும் வாகனங்களின் தேவை : விலை அதிகரிப்பு குறித்து வெளியான தகவல்!!

ஜப்பானில் வாகன ஏல விலைகள் அதிகரித்ததன் காரணமாக உள்ளூர் வாகன சந்தையில் தேவை வேகமாக அதிகரித்து வருவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் உஸ்மான் அலி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

1000 சிசி முதல் 1500 சிசி வரையிலான இயந்திர திறன் கொண்ட பிரபலமான நடுத்தர ரக வாகனங்களுக்கான விலைகள் அதிகரித்துள்ளன. அத்துடன் ஹோண்டா வெசல், டொயோட்டா ரேய்ஸ் போன்ற மாடல்களுக்கு அதிக தேவை உள்ளது.

ஏப்ரல் 1, 2026 முதல் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள வாகனங்களின் இறக்குமதியில் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி (SSCL) விதிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இதன் விளைவாக, மொத்த சுங்க வரி சுமார் 2.5% அதிகரிக்கும். உலக சந்தையில் விலை அழுத்தம் மற்றும் நாட்டின் நிதி கட்டுப்பாடுகள் ஆகிய இரண்டு காரணிகளும் எதிர்காலத்தில் நாட்டில் வாகனங்களை வாங்கும் திறனை நேரடியாக பாதிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலை வகுப்பறை கதவில் சிக்கி மாணவியின் 2 விரல்கள் துண்டிப்பு : குப்பையில் வீசி எறிந்த ஆசிரியர்கள்!!

பள்ளி வகுப்பறையில் இருந்த இரும்புக் கதவில் சிக்கி, 1ம் வகுப்பு மாணவியின் இரு விரல்கள் துண்டான நிலையில், துண்டான விரல்களைக் குப்பையில் ஆசிரியர்கள் தூக்கி எறிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் துமகுரு தாலுகாவில் உள்ள கூலூர் கிராமத்தில் இந்த துயர, கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது.

1 ம் வகுப்பு மாணவி சின்மயி தேவி, பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது வகுப்பறையில் இருந்த கனமான இரும்புக் கதவில் மாணவி சின்மயியின் விரல்கள் சிக்கி இரண்டு விரல்கள் துண்டானது.

கடந்த பிப்ரவரி 11ம் தேதி இந்த விபத்து நடந்துள்ளது. விபத்துக்குப் பிறகு குழந்தைக்கு அதிகளவிலான இரத்தப்போக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் உடனடியாக மாணவியை மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல்,

துண்டிக்கப்பட்ட விரல்களையும் பாதுகாக்காமல், வகுப்பில் இருந்த ஆசிரியர்கள், துண்டான விரல்களைக் குப்பைத்தொட்டியில் எறிந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மற்ற மாணவர்கள் இரத்தத்தை கண்டு பயப்படக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஆசிரியர்கள் சொன்னதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த பெற்றோர் பள்ளிக்கு விரைந்து சென்று, வகுப்பறையில் இருந்த சிறுமியை மீட்டு, துமகுரு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

துண்டிக்கப்பட்ட விரல்கள் சரியாக பாதுகாக்கப்பட்டு உடனடியாக கொண்டு சென்றிருந்தால், அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் இணைக்க வாய்ப்பு இருந்திருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தலைமை ஆசிரியர் நாகேஷ், ஆசிரியர்கள் ரேணுகாம்மா, வெங்கடேஷ் மற்றும் தொகுதி கல்வி அதிகாரி ஹனுமந்தப்பா மீது கிராமப்புற போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலர்கள் முகம் சிதைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சோகம்!!

உத்தரகாண்ட் மாநிலம், ஹல்த்வானி பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் கண்டெடுக்கப்பட்ட சிதைந்த உடல்கள், அந்தப் பகுதியில் நிலவும் பாதுகாப்பு குறித்த அச்சத்தை அதிகரித்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானியின் நவீன்மண்டி பகுதியில் ஒரு கிடங்கிற்குள் இளைஞர் மற்றும் இளம்பெண்ணின் சடலங்கள் இரத்த வெள்ளத்தில் கிடப்பதாகப் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.

கொலையாளிகள் மிகவும் கொடூரமாகக் கற்களைக் கொண்டு இருவரின் முகம் மற்றும் தலைப்பகுதியை நசுக்கியுள்ளனர். இதனால் சடலங்களை முதற்கட்டமாக அடையாளம் காண்பதில் போலீசாருக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டது.

காவல்துறையின் தீவிர விசாரணைக்குப் பிறகு, உயிரிழந்தவர்கள் அந்தப் பகுதியைச் சேர்ந்த சுபம் தம்தா(25) என்றும், லட்சுமி(19) என்பதும் தெரிய வந்தது.

இருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவர்கள் எதற்காகவும், யாரால் கொல்லப்பட்டார்கள் என்ற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டது.

சம்பவம் நடந்த இடத்தைச் சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, சந்தேகத்திற்கிடமான நபர்களின் நடமாட்டம் உறுதி செய்யப்பட்டது.

சிசிடிவி ஆதாரங்கள் மற்றும் செல்போன் சிக்னல்களை அடிப்படையாகக் கொண்டு, இந்தக் கொலையில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் 4 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

இது ஆணவக் கொலையா அல்லது முன்பகை காரணமாக நடந்ததா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொதுமக்கள் நடமாட்டம் உள்ள மண்டி பகுதியில் இத்தகைய கொடூரமான கொலை நடந்திருப்பது அப்பகுதி வியாபாரிகள் மற்றும் மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

260 கோடி ரூபாய் இழப்பீடு அறிவிக்கும் முன்பே தந்தை மரணம்!!

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மாணவி ஜான்வி, அமெரிக்காவின் சியாட்டில் நகரில் போலீஸ் வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் உலகளாவிய கவனத்தைப் பெற்ற நிலையில், தற்போது இந்த வழக்கில் ஒரு முக்கியத் தீர்ப்பு வெளியாகியுள்ளது.

2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், சியாட்டில் நகரில் சாலையைக் கடக்க முயன்ற ஜாஹ்னவி மீது, அதிவேகமாக வந்த போலீஸ் கார் மோதியது.

விபத்தை ஏற்படுத்திய போலீஸ்காரர் கெவின் டேவ், ஜாஹ்னவியின் மரணத்தை மிகவும் அலட்சியமாகக் கேலி செய்த வீடியோ ஆதாரங்கள் வெளியாகி இந்தியர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, அமெரிக்க நீதிமன்றம் ஜாஹ்னவியின் குடும்பத்திற்கு 260 கோடி ரூபாய் ($31 Million approx) இழப்பீடு வழங்க சியாட்டில் நகர நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது.

ஜாஹ்னவியின் உயிருக்கு விலை நிர்ணயிக்க முடியாது என்றாலும், அந்தத் துறையின் அலட்சியத்திற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்தத் தொகை நிர்ணயிக்கப்பட்டது.

இந்தத் தீர்ப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, ஜாஹ்னவியின் தந்தை கந்துலா ஸ்ரீகாந்த் (52) மாரடைப்பால் உயிரிழந்தார்.

ஆந்திரப் பிரதேச காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஸ்ரீகாந்த், தனது மகளின் மரணத்திற்குப் பிறகு கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

மகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று போராடி வந்த அவர், இறுதியாக அந்த நீதி கிடைத்த செய்தியைக் கூடக் கேட்க முடியாமல் காலமானது அக்குடும்பத்தையே நிலைகுலையச் செய்துள்ளது.

ஒரே மகளை இழந்து தவித்த அந்தத் தாய்க்கு, தற்போது கணவனும் இல்லாமல் போனது ஈடு செய்ய முடியாத இழப்பாக மாறியுள்ளது.

“பணம் என்பது எங்கள் மகளுக்கு மாற்றாகாது, ஆனால் அந்த அதிகாரி தண்டிக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் நோக்கமாக இருந்தது” என ஸ்ரீகாந்த் உயிருடன் இருந்தபோது கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.

தந்தையின் மரணத்திற்கு தாயே காரணம் எனக் கூறியதால் மூச்சுத் திணறடித்து கொலை செய்த மகள்!!

கர்நாடக மாநிலம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்திய கொலைச் சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. துமகூர் மாவட்டத்தைச் சேர்ந்த 33 வயதான சுசித்ரா என்ற பெண், தனது தாயார் புஷ்பலதாவை கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சுசித்ராவின் தந்தை அண்மையில் உயிரிழந்த நிலையில், அவரது மரணத்திற்கான காரணத்தை அறிய அவர் ஒரு ஜோதிடரை அணுகியதாக கூறப்படுகிறது. அப்போது, “உங்கள் தந்தையின் மரணத்திற்கு உங்கள் தாயாரே காரணம்” என்று ஜோதிடர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கூறுகையை உண்மையென நம்பிய சுசித்ரா, தாயார் மீது கடும் கோபம் கொண்டதாக தெரிகிறது.

சம்பவத்தன்று இரவு நேரத்தில் தாயாரை தலையணையால் மூச்சுத்திணறடித்து கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர், அது இயல்பான மரணம் போல காட்ட முயன்றதாகவும் போலீசார் கூறுகின்றனர்.

அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகம் எழுந்ததால் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் பேரில் வழக்குப்பதிவு செய்து சுசித்ராவை கைது செய்துள்ளனர்.

மேலும், சம்பவத்துக்கு காரணமாக கூறப்படும் ஜோதிடரின் பங்கும் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.மூடநம்பிக்கைகள் எவ்வாறு தீவிர விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதற்கான இன்னொரு உதாரணமாக இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது.

வவுனியாவில் பாடசாலை ஆசிரியரை மூன்று மாதங்களாக காணவில்லை : பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!!

வவுனியா நொச்சிமோட்டை பகுதியில் வசித்துவரும் ஆசிரியரான அன்ரனி ஜோய் (வயது 36) என்பவரை கடந்த மூன்றுமாதங்களாக காணவில்லை என அவரது குடும்பத்தினர் ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவுசெய்துள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம் வீட்டிலிருந்து பாடசாலைக்கு சென்ற அவர் மீண்டும் வீடுதிரும்பவில்லை என அவர்கள் தெரிவிப்பதுடன் அவரது தொலைபேசியும் இயங்குநிலையில் இல்லை எனக்கூறப்படுகின்றது.

இதனையடுத்து அவரது குடும்பத்தினர் ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளனர். எனினும் இன்றுவரை அவர் தொடர்பான எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.

எனவே படத்தில் உள்ள நபரை யாராவது கண்டால் ஓமந்தை பொலிஸ் நிலையத்தற்கோ அல்லது கீழேயுள்ள இலக்கங்களிற்கு அழைப்பினை ஏற்படுத்தியோ தகவலை தெரிவிக்குமாறு அவரது குடும்பத்தினர் பொது மக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

0777444117
0772011106
0743072802

கார் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து : இருவர் வைத்தியசாலையில்!!

பாதெனிய – அநுராதபுரம் வீதியில் கல்கமுவ, மெதகம பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை (12) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

காட்டு யானையுடன் செல்பி : விபரீதத்தில் முடிந்த வெளிநாட்டுப் பெண்ணின் ஆசை!!

கதிர்காமம் – புத்தல வீதியில் காட்டு யானையை நிழற்படம் எடுக்க முயன்ற ரஷ்யப் பெண் ஒருவர், அந்த யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி பலத்த காயமடைந்துள்ளார்.

வீதியோரம் நின்ற யானையைப் பார்ப்பதற்காக வாகனத்திலிருந்து இறங்கிய குறித்த பெண், அந்த யானைக்கு அருகில் சென்று நிழற்படம் எடுக்க முயன்றபோது யானை அவரைத் தாக்கியுள்ளது.

இதன்போது பலத்த காயமடைந்து கதிர்காமம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

எனினும் அவருடன் சென்ற கணவர் காயமின்றி தப்பியுள்ளார். புத்தல – கதிர்காமம் வீதி, யால தேசிய பூங்காவிற்கு அருகாமையில் அமைந்துள்ளதால், அங்கு அடிக்கடி யானைகள் நடமாடுகின்றன.

இதன் காரணமாக, குறித்த பாதையில் பயணிப்போர், வாகனத்தை விட்டு இறங்க வேண்டாம் என்றும், யானையைக் கண்டால் எந்த காரணம் கொண்டும் வாகனத்தை விட்டு வெளியே வரக்கூடாது என்றும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

அத்துடன் அவற்றுக்கு உணவு வழங்க வேண்டாம் என்று தெரிவித்துள்ள அதிகாரிகள், யானைகளுக்கு உணவளிப்பது சட்டப்படி குற்றமாகும் என்றும் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம், யானையைக் கண்டவுடன் சத்தம் எழுப்புவதையோ அல்லது அதிக வெளிச்சம் தரும் கேமராக்களை பயன்படுத்துவதையோ தவிர்க்க வேண்டும் என்றும் வனத்துறை அதிகாரிகள் கோரியுள்ளனர்.

விஷத்தன்மை கொண்ட நண்டை உண்டதால் பலியான பிரபலம்!!

சமூக வலைத்தளங்களில் உணவு தொடர்பான காணொளிகளைப் பதிவிடும் 51 வயதான பிலிப்பைன்ஸ் பெண்மணி ஒருவர், விஷத்தன்மை கொண்ட நண்டை உட்கொண்டதால் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

கடந்த 4 ஆம் திகதி, எம்மா அமித் (Emma Amit) என்பவர் தனது நண்பர்களுடன் இணைந்து சதுப்புநிலக் காட்டில் கடல் உணவுகளைச் சேகரித்துள்ளார்.

தான் பிடித்த நண்டுகளைத் தேங்காய்ப் பாலில் சமைத்து உண்பதை அவர் தனது சமூக வலைத்தளங்களுக்காக படம் பிடித்துள்ளார். இந்நிலையில் உணவு உட்கொண்ட அடுத்த நாள், நண்டிலுள்ள நச்சுத்தன்மை காரணமாக அவர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அவரது வீட்டுக் குப்பையில் பிரகாசமான நிறம் கொண்ட நண்டுகளின் ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன.

பெண்ணின் உயிரிழப்பை தொடர்ந்து, அந்த பகுதியில் வசிக்கும் மக்களை இத்தகைய நண்டுகளை உண்ண வேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.