நாகினியாக மாறிய பெண் : அறையில் கிடந்த பொருட்களால் திகிலில் உறைந்த கிராமம்!!

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலம், அவுரையா (ஔரையா) மாவட்டம், சிங்கனூர் (சிங்கன்பூர்) கிராமத்தில் நாகினியாக மாறிய பெண் காதலனுடன் ஓட்டமெடுத்த சம்பவம் கிராம மக்களை அதிர்ச்சியடைச் செய்தது.

சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்க்ள் குறிப்பிட்டுள்ளதாவது, உத்தர பிரதேச சிங்கனூரின் ரீனா என்ற இளம்பெண், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் தூங்கச் சென்றார்.

மறுநாள் காலையில் அவர் அறையிலிருந்து வெளியே வராததால், பெற்றோர் சந்தேகம் அடைந்து அறைக்குள் சென்று பார்த்தனர். அங்கு ரீனா இல்லை. ஆனால், அவரது ஆடைகள், வளையல்கள், குங்குமம் போன்ற பொருட்கள் படுக்கையில் அடுக்கப்பட்டிருந்தன.

அதோடு அருகில் ஐந்தடி நீளமுள்ள பாம்பின் உரித்த தோல் (snake skin அல்லது கென்சுலி) கிடந்தது. அண்மைக் காலமாக ரீனா, தூங்கும்போது பாம்பு தன்னைச் சுற்றிக் கொள்வதாக பெற்றோரிடம் கூறி வந்திருந்தால் அவர் நாகினியாக மாறிவிட்டதாக ஊரவர்களும் பெற்றோரும் நம்பியுள்ளனர்.

இந்நிலையில் மகளை காணதால் அதிர்ச்சியடைத்த பெற்றோர், பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை நடத்தினர்.

அவர்கள் உடனடியாகவே இது இயற்கைக்கு மாறானது அல்ல என்று தெரிவித்தனர். பாம்பின் உரித்த தோலும், ஆடைகளும் யாரோ திட்டமிட்டு அடுக்கி வைத்திருப்பது போலத் தெரிந்தது.

ரீனாவிடம் தனி மொபைல் இல்லை என்று பெற்றோர் கூற, அவர்களது போனைப் பெற்று சோதித்த பொலிஸார், ஒரு குறிப்பிட்ட எண்ணுக்கு அடிக்கடி அழைப்புகள் சென்று வந்ததை கண்டறிந்தனர்.

அந்த எண் அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞருடையது என்பது தெரியவந்தது. அவரும் காணாமல் போயிருந்தார். ரீனாவும் அந்த இளைஞரும் காதலித்து வந்துள்ளனர்.

பெற்றோர் ரீனாவுக்கு வேறொருவருடன் திருமண ஏற்பாடு செய்திருந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களாக ரீனா பாம்பு தன்னைச் சுற்றுவதாக நாடகமாடி வந்துள்ளார்.

சில நாட்களுக்கு முன், வயல் பகுதியில் பாம்பின் உரித்த தோலைத் தேடியதை கிராமத்தினர் கவனித்திருந்தனர்.

கடந்த 08 ஆம் திகதி இரவு, பெற்றோர் தூங்கிய பின்னர், ரீனா திட்டமிட்டபடி தனது ஆடைகள், வளையல்கள், குங்குமம் பாம்பின் உரித்த தோலை அடுக்கி வைத்துவிட்டு, காதலனுடன் தப்பிச் சென்றுள்ளார்.

பல நோய்களுக்கு அருமருந்தாகும் சின்ன வெங்காயம் : அவசியம் படியுங்கள்!!

சாம்பார் வெங்காயம் என பரவலாக அழைக்கப்படும் ஒன்றுதான் சின்ன வெங்காயம். சின்ன வெங்காயத்தை உரிப்பது நேரம் எடுக்கும் என்பதாலும் அதை உறிக்கும் போது கண்ணில் நீரை வரவழைக்கும் என்பதாலும் இப்போதெல்லாம் பெரும்பாலான பெண்கள் பெரிய வெங்காயத்தையே சமையலில் பயன்படுத்த தொடங்கி விட்டனர்.

ஆனால் சின்ன வெங்காயத்தில் இருக்கும் சத்துக்களை பற்றி பலரும் அறிவதில்லை.அதுபற்றி இங்கே பார்ப்போம்.

ஜலதோஷம், இதய நோய் பிரச்சனை இருப்பவர்கள், சின்ன வெங்காயத்தை மென்று சாப்பிட்டு வெந்நீர் குடித்தால் ஜலதோஷம் குறைவதோடு தும்மலும் நின்றுவிடும்.

சின்ன வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி நல்லெண்ணெய் விட்டு வதக்கி சாப்பிட்டால் ரத்த கொதிப்பு குறைவதோடு இதயமும் பலமாகும். இதய நோய் மற்றும் மாரடைப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயத்தை சாப்பிட வேண்டும்.

மேலும் சின்ன வெங்காயத்துடன் சிறிது வெல்லத்தை சார்ந்து சாப்பிடும் பொழுது பித்தம் குறையும்.

அதேபோல் மூலநோயால் அவதிப்படுபவர்களுக்கும் சின்ன வெங்காயம் ஒரு அருமருந்து. மேலும் பொடுகு தொல்லை, முடி கொட்டுதல் வழுக்கை போன்ற பிரச்சனைகளும் சின்ன வெங்காயம் நல்ல மருந்தாக இருக்கிறது.

வழுக்கை விழுந்த இடங்களில் சின்ன வெங்காயத்தை தேய்ப்பதன் மூலம் முடி வளரவும் வாய்ப்பிருக்கிறது.

தலைவலி பிரச்சினை இருப்பவர்கள் வெங்காய நெடியி சுவாசித்தால் நிவாரணம் கிடைக்கும். அதேபோல் உடல் உஷ்ணத்தால் ஏற்படும் ஆசன கடுப்பு, மூல பிரச்சினைகளும் நீங்கும்.

சின்ன வெங்காயத்தை சாறு எடுத்து உண்பதால் உடல் உள்ள கொழுப்புகள் கரையும். தொடர்ந்து 48 நாட்கள் சின்ன வெங்காயத்தை சாப்பிடும் போது உடல் குளிர்ச்சியடையும். மூளைக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும்.

ரோஸ் டே கொண்டாடிய ஜோடியை தேடி வந்த காவல்துறை : காதல் சொன்ன காணொளியால் வந்த சிக்கல்!!

இந்தியாவின் பீகார் மாநிலம், முங்கர் மாவட்டத்தில் ‘ரோஸ் டே’ (Rose Day) கொண்டாட்டத்தின் போது, மதுபான போத்தல்களுடன் காணொளி எடுத்து அதனை இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கில் பதிவிட்ட பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் எதிராக காவல்துறையினர் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்.

காஞ்சன் தேவி என்ற பெண், தனது கணவருக்கு ரோஜாப் பூவை வழங்கி, பின்னர் ஒரு கிளாஸில் மதுவை ஊற்றி அவரிடம் கொடுப்பது போன்ற காணொளியை பதிவிட்டிருந்தார்.

பீகாரில் மதுபானத்திற்கு கடுமையான தடை உள்ள நிலையில், இந்த காணொளி வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதேவேளை, குறித்த பெண் பியூட்டி பார்லர் ஒன்றில் கைத்துப்பாக்கியுடன் (Pistol) போஸ் கொடுக்கும் புகைப்படம் ஒன்றும் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சமூக வலைதளங்களில் இந்த காணொளி பரவியதை அடுத்து, முங்கர் காவல்துறை கண்காணிப்பாளர் (SP) சையத் இம்ரான் மசூத் தலைமையிலான விசேட குழுவினர் குறித்த பெண்ணின் வீட்டில் சோதனை நடத்தினர்.

விசாரணையில் அந்தத் துப்பாக்கி விஷால் குமார் என்பவருக்குச் சொந்தமான அனுமதிப்பத்திரம் பெற்ற துப்பாக்கி எனத் தெரியவந்தது.

எனினும், சட்டப்படி அனுமதிப்பத்திரம் இல்லாத ஒருவரிடம் துப்பாக்கியை வழங்குவதும், அதனை சமூக வலைதளங்களில் காட்சிப்படுத்துவதும் குற்றமாகும்.

பொது இடங்களில் ஆயுதங்களைக் காட்சிப்படுத்துவதும், தடைசெய்யப்பட்ட மதுபானங்களை ஊக்குவிப்பதும் பாரிய குற்றமாகும் எனத் தெரிவித்த காவல்துறையினர், காஞ்சன் தேவி மற்றும் துப்பாக்கியின் உரிமையாளர் விஷால் குமார் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு பிரபல உணவகம் ஒன்றின் சாப்பாட்டில் பாம்பின் தலை : காணொளியால் சர்ச்சை!!

கொழும்பு – பம்பலப்பிட்டி பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றின் சாப்பாட்டில் பாம்பின் தலை இருப்பதாக சமூக ஊடகங்களில் காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த உணவகத்தில் நேற்று வியாழக்கிழமை (12.02.2026) காலை சாப்பிட்ட நபர் ஒருவர், தனது சாப்பாட்டில் சிறிய பாம்பின் தலை ன்ற பகுதி இருந்ததாகக் கூறி, சமூக ஊடகங்களில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த காணொளி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. எனினும் காணொளி குறித்த உணவகத்தின் நிர்வாகம் கடுமையாக மறுப்பு தெரிவித்து, தமது உணவகத்தில் இவ்வாறான ஒரு சம்பவம் நடக்க வாய்ப்பே இல்லை என கூறியுள்ளது.

அதோடு காணொளி வெளியான சிறிது நேரத்திலேயே பொது சுகாதார பரிசோதகர்கள் எமது உணவகத்திற்கு வந்து சோதனையிட்டனர். காணொளியை வெளியிட்ட நபர் அனைவரதும் கவனத்தை பெறுவதற்காக இவ்வாறான காணொளியை வெளியிட்டுள்ளார் என கூறியுள்ளது.

இது குறித்து கொழும்பு மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி கே. ஸ்ரீபிரதாபன் தெரிவிக்கையில், பம்பலப்பிட்டி உணவக சர்ச்சை குறித்து இதுவரை முறைப்பாடு எதுவும் கிடைக்கவில்லை.

ஆனால் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கூறினார். உணவகத்தின் உணவு மாதிரிகளைப் பெற்று பரிசோதனை செய்ய உள்ளோம்.

அந்த உணவகத்தில் சுகாதார சீர்கேடுகள் காணப்படுவதாக கண்டறியப்பட்டால் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளனர்

 

கண் பார்வையை இழந்த பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்!!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், சிறையில் சரியான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படாததால் தனது வலது கண் பார்வையில் 85 சதவீதத்தை இழந்துள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.

அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ள 73 வயதான இம்ரான் கானை, உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சட்டத்தரணி சல்மான் சப்தர் நேரில் சந்தித்து ஆய்வு செய்தார்.

அதன் பின் அவர் தாக்கல் செய்த 7 பக்க அறிக்கையில், கடந்த மூன்று மாதங்களாக இம்ரான் கான் கண் பார்வையில் மங்கல் மற்றும் தெளிவற்ற நிலை இருப்பதாக முறைப்பாடு அளித்தும், சிறை அதிகாரிகள் அதை அலட்சியப்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் அவருக்கு வலது கண்ணில் ‘ரெட்டினல் வெயின் அக்லூஷன்’ எனப்படும் ரத்த உறைவு பாதிப்பு ஏற்பட்டு, தற்போது வெறும் 15 சதவீத பார்வை மட்டுமே எஞ்சியுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

இந்தச் சூழலில், இம்ரான் கானின் உடல்நிலை குறித்து பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் கடும் கவலை தெரிவித்துள்ளது.

பிரதம நீதியரசர் யஹ்யா அப்ரிடி தலைமையிலான அமர்வு, உடனடியாக ஒரு மருத்துவக் குழுவை அமைத்து அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளது.

மேலும், பெப்ரவரி 16ஆம் திகதிக்குள் லண்டனில் இருக்கும் அவரது மகன்களுடன் தொலைபேசியில் பேச அனுமதிக்குமாறும் சிறைத்துறைக்கு ஆணையிடப்பட்டுள்ளது.

இம்ரான் கானின் பி.டி.ஐ (PTI) கட்சி, இந்தச் செயலை “அரசு செய்த குற்றம்” என வர்ணித்துள்ளதோடு, அவரது தனிப்பட்ட மருத்துவர்களின் சிகிச்சைக்கும் அனுமதி கோரியுள்ளது.

 

பெண்களை இலக்கு வைத்து பாரிய மோசடி : அதிரடியாக கைது செய்யப்பட்ட பெண்!!

ஒன்லைன் வர்த்தகம் மூலம் வருமானம் பெற்றுக் கொள்ளலாம் எனக் கூறி பெண்களை ஏமாற்றி நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் வடமேல் மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்வதன் மூலம் அதிக இலாபம் ஈட்டலாம் என கூறி, இந்த மோசடி செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

முறைப்பாடு ஒன்றின் மீதான விசாரணையில், பாதிக்கப்பட்டவர்களில் ஒரு பெண் ஒன்லைன் வணிகம் மூலம் பணம் பெறலாம் என ஏமாற்றப்பட்டதாகவும், மோசடி செய்யப்பட்ட 3,141,967 ரூபாய் பணத்தில் 200,000 ரூபாய் சந்தேக நபரின் பெயரில் உள்ள வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டது. பின்னர் அந்தக் கணக்கு தெரியாத ஒருவருக்கு கைமாற்றப்பட்டுள்ளது.

மற்றொரு முறைப்பாட்டில் மோசடி செய்த 3,141,967 ரூபாய் பணத்தில் சந்தேக நபரின் பெயரில் உள்ள ஒரு கணக்கில் 233,522 ரூபாய் மோசடியாக வரவு வைக்கப்பட்டு, அந்தக் கணக்கு தெரியாத ஒருவருக்கு மாற்றப்பட்டுள்ளது.

அதற்கமைய, வடமேற்கு மாகாண குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் இந்தப் பண மோசடி தொடர்பாக நேற்று காலியைச் சேர்ந்த 33 வயதுடைய பெண் சந்தேக நபரையும், பாணந்துறையைச் சேர்ந்த 36 வயதுடைய ஆண் சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.

வடமேற்கு மாகாண குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

 

ஆட்டம் காணும் தங்கத்தின் விலை : இன்று பதிவாகியுள்ள நிலவரம்!!

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றைய தினத்துடன் (12.02.2026) ஒப்பிடுகையில் இன்றையதினம் தங்கத்தின் விலை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, உலக சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4910 டொலராக பதிவாகியுள்ளது. நேற்றையதினம் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 5078 டொலர்கள் வரையில் விற்பனை செய்யப்பட்டது.

அதேநேரம், ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலையும் இன்று சரிவை சந்தித்து 74.75 டொலராக பதிவாகியுள்ளது. இந்தநிலையில், கொழும்பு செட்டியார்தெரு தகவலின் படி, 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 360,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 390000 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் 15ஆம் திகதி உருவாகவுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி : அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்!!

எதிர்வரும் பெப்ரவரி 15ஆம் திகதி தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிடும் எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் அறிவிப்புகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

முதலாம் இணைப்பு : மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் இன்று (13.02.2026) அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, நுவரெலியா, மாத்தளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு மாகாணத்திலும் அநுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யும். நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

நாட்டின் இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இன்று (13) காலை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதற்கமைய, நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை மற்றும் நில்தண்டாஹின்ன ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கண்டி மாவட்டத்தின் பாதஹேவாஹேட்ட பிரதேச செயலாளர் பிரிவுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

பாடசாலை கல்வி நடவடிக்கை குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு!!

அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் 2026ஆம் ஆண்டிற்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று (13) நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, முதலாம் தவணையின் மூன்றாம் கட்டப் பணிகள் எதிர்வரும் மார்ச் மாதம் 3ம் திகதி செவ்வாய்க்கிழமை மீண்டும் ஆரம்பமாகவுள்ளன.

இதேவேளை, 2025ஆம் ஆண்டிற்கான (2026 இல் நடத்தப்படும்) க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (17) ஆரம்பமாகி வியாழக்கிழமை (26) நிறைவடையும் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரிகளுக்கான பரீட்சை அனுமதி அட்டைகள் ஏற்கனவே தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

இலங்கையில் வாகனங்களின் விலைகளில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம்!!

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் புதிய வரி விதிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது,

இதன் விளைவாக எதிர்காலத்தில் வாகன விலைகள் அதிகரிக்கும் என்று வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடக செய்தித்தொடர்பாளர் அரூஷ் ரோட்ரிகோ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது 2026 பட்ஜெட்டில் அங்கீகரிக்கப்பட்ட வரி என்றும், தற்போது அனுமதி பெறும் வாகனங்களுக்கு இது பொருந்தாது என்றும் அவர் கூறினார்.

முந்தைய வரவுசெலவு திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட இந்த வரி, ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் சுங்கச்சாவடிகளில் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ரோட்ரிகோ கூறியுள்ளார்.

வாகனங்களின் மதிப்பு அதிகமாக இருப்பதால், இந்த வரி நுகர்வோரால் உணரப்படும் என்றும், இந்த வரி காரணமாக சுமார் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள வாகனத்தின் விலை சுமார் ரூ. 250,000 அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த சில மாதங்களாக வாகன இறக்குமதித் துறையில் சில பின்னடைவுகள் ஏற்பட்டிருந்தாலும், வாகனப் பதிவு தரவுகளின்படி, நுகர்வோர் அதிக ஆர்வத்துடன் வாகனங்களை வாங்குவது கவனிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஏப்ரல் மாதத்தில் செயல்படுத்தப்படும் வரிக்கு முன்னர், நுகர்வோர் தங்கள் வாகன கொள்முதலை இறுதி செய்ய வேண்டிய அவசியம் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஜப்பான் போன்ற நாடுகளிலிருந்து வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான சர்வதேச சந்தையில் தேவை அதிகரித்துள்ளதால், அந்த நாட்டில் ஏல விலைகளும் அதிகரித்துள்ளன.

அதன்படி, அரசாங்கத்தின் புதிய வரி மற்றும் சர்வதேச சந்தை விலை உயர்வு ஆகிய இரண்டின் காரணமாகவும், நாட்டில் வாகன விலைகள் எதிர்காலத்தில் நிச்சயமாக அதிகரிக்கும் என்று அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

T20 இந்தியா vs பாகிஸ்தான் போட்டி : பரபரப்பாகும் கொழும்பு : உச்சம்தொட்ட சொகுசு ஹோட்டல் அறைகளின் விலை!!

2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் இந்தியா vs பாகிஸ்தான் போட்டி, காரணமாக கொழும்பில் உள்ள முன்னணி ஹோட்டல்களில் அறைகளின் விலைகள் வழக்கமான விலையை விட இரண்டு மடங்கு அதிகமாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.

2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் இந்தியா vs பாகிஸ்தான் போட்டி, கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் வரும் 15 ஆம் திகதி நடைபெற உள்ளது.

இந்த போட்டி 100,000 க்கும் மேற்பட்ட இரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதாகவும், இந்த போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டன என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம்,” என்றும் கிரிக்கெட் சபை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குறித்த மைதானம் சுமார் 35,000 பார்வையாளர்களை மட்டுமே தங்க வைக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், கொழும்பில் உள்ள முன்னணி ஹோட்டல்களில் அறைகளின் விலைகள் வழக்கமான விலையை விட இரண்டு மடங்கு அதிகமாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இலங்கை ஹோட்டல்கள் சங்கத்தின் (THASL) முன்னாள் தலைவர் எம். சாந்திகுமார் கூறுகையில்,

இந்த காலகட்டத்தில் சராசரியாக 55%பதிவுகளை கொண்ட நகர ஹோட்டல்கள், தற்போது கிட்டத்தட்ட 90% பதிவுகளை கொண்டுள்ளன, பல முன்னணி ஹோட்டல்களின் அறைகள் ஏற்கனவே முழுமையாக விற்றுத் தீர்ந்துவிட்டன.

“அதிக தேவை காரணமாக சுமார் 40 முதல் 50% வரை விலை அதிகரிப்பையும் நாங்கள் கவனிக்கிறோம்,” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

ஐசிசி டி20 உலகக் கோப்பை மற்றும் பரபரப்பான இந்தியா vs பாகிஸ்தான் மோதல் காரணமாக, ஆயிரக்கணக்கான இரசிகர்கள் கடைசி நிமிடத்தில் பயண ஏற்பாடுகளை பெற விரைந்து வருவதால், இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து கொழும்புக்கான விமானக் கட்டணங்களும் கணிசமாக உயர்ந்துள்ளன.

இதேவேளை, இப்போட்டியைப் பார்வையிட பெருமளவான ரசிகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அதனைக் கருத்தில் கொண்டு உச்சக்கட்ட பாதுகாப்பை வழங்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதற்கமைய, பார்வையாளர்கள் விளையாட்டரங்கிற்குள் பெரிய அளவிலான பயணப் பொதிகள், கண்ணாடிப் போத்தல்கள், ட்ரோன் (Drone) கருவிகள், சிறிய கூர்மையான கத்திகள், போதைப்பொருள் மற்றும் மதுபானங்களை எடுத்து வருவது முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்களின் பாதுகாப்பிற்காகச் சிவில் உடையில் பொலிஸ் உத்தியோகத்தர்களும் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, விசேட போக்குவரத்துத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

எனவே இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான போட்டியை காண மைதானத்திற்கு வருபவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பு விரைவாக மைதானத்திற்கு வருகைத் தருமாறும் கேட்டுக்கொண்டுள்ளப்பட்டுள்ளனர்.

இந்த போட்டி மாலை 07 மணிக்கு குறித்த கிரிக்கெட் போட்டி ஆரம்பமாகும் நிலையில், மைதானத்திற்கான உள் நுழைவு மாலை 03 மணிக்கு ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கணவன் அரங்கேற்றிய கொடூரம் : இளம் மனைவிக்கு நேர்ந்த துயரம்!!

குடும்ப தகராறில் வீட்டின் மீது கணவர் பெட்ரோல் குண்டை வீசியதில், அவரது 40 வயதுடைய மனைவி தீப்பிடித்து பலத்த தீக்காயமடைந்து வெள்ளிக்கிழமை (13) அன்று உயிரிழந்துள்ளார்.

இறந்தவர் மெதகம, பரசங்கஸ்வெவ பகுதியைச் சேர்ந்த தமயந்தி ஏகநாயக்க (40) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தம்பதியினரிடையே நீண்ட காலமாக நிலவி வந்த தகராறு காரணமாக கணவர் வௌ்ளிக்கிழமை (13) அன்று வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பெட்ரோல் குண்டினால் வீடு தீப்பிடித்து எரிந்ததோடு, மனைவி வீட்டினுள் தீப்பிடித்து மனைவி உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேக நபர் தற்போது அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றுவிட்டார், அவரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் குறித்து பரசங்கஸ்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குடும்பத்தாருக்கு 262 கோடி இழப்பீடு : அமெரிக்காவில் பொலிஸ் வாகனம் மோதி பலியான இந்திய மாணவி!!

அமெரிக்காவின் சீத்தெல் நகரில் போலீஸ் வாகனம் ஒன்று இரவு நேரத்தில் வேகமாக சென்றுக் கொண்டிருந்த போது, அந்த வழியே சென்றுக் கொண்டிருந்த இந்திய மாணவி மீது பயங்கர வேகத்தில் மோதியதில், சம்பவ இடத்திலேயே இந்திய மாணவி ஜானவி கந்துலா பரிதாபமாக உயிரிழந்தார்.

மாணவி உயிரிழந்த நிலையில், காவல் வாகனத்தை நிறுத்திவிட்டு, கீழிறங்கி வந்த போலீஸ் அதிகாரி, மாணவி உயிரிழந்ததைப் பார்த்ததும், சிரித்துக் கொண்டே கமெண்ட் செய்து விட்டு, வாகனத்தில் ஏறி சென்ற வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்களைக் குவித்தது.

அமெரிக்காவிலும் இந்த விஷயம் சர்ச்சையைக் கிளப்பி கடும் கண்டனங்களைக் குவித்த நிலையில், இந்த வழக்கில் உயிரிழந்த மாணவி ஜானவியின் குடும்பத்துக்கு 29 மில்லியன் டாலர் (சுமார் ரூ.262 கோடி) இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த ஜானவி கந்துலா, Northeastern University-யின் சியாட்டில் வளாகத்தில் முதுநிலை தகவல் தொழில்நுட்பப் படிப்பு பயின்று வந்தார். 2023-ம் ஆண்டு சியாட்டில் நகரில் சாலை கடக்கும் போது, சைரன் ஒலி எழுப்பியபடி அவசரமாக சென்ற போலீஸ் வாகனம் மோதியதில் அவர் உயிரிழந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய King County Superior Court, ஜானவியின் குடும்பத்துக்கு 29 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.

போலீஸ் வாகனத்தை கவனக்குறைவாக ஓட்டியதாக கூறப்படும் அதிகாரி கெவின் டேவ் பணி நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு 5,000 டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், குற்ற வழக்கு பதிவு செய்யப்படவில்லை.

மேலும், விபத்து நடந்தபோது இச்சம்பவத்துக்கு குறைந்த இழப்பீடு வழங்கலாம் என இழிவாக கருத்து தெரிவித்ததாக குற்றம்சாட்டப்பட்ட மற்றொரு போலீஸ் அதிகாரி டேனியல் ஆடரர் (Daniel Auderer) பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தனது பணி நீக்கத்தை எதிர்த்து அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

கனடாவில் தீப்பற்றிய வீட்டுக்குள் சிக்கிய இளம்பெண் : அவரது கடைசி வார்த்தைகளை எண்ணிக் கலங்கும் குடும்பம்!!

கனடாவில் இளம்பெண்ணொருவர் தன் வீட்டில் பற்றிய தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது குடும்பத்தினர் அந்தப் பெண்ணின் இழப்பைத் தாங்க இயலாமல் தவித்துவரும் நிலையில், அவரது கடைசி வார்த்தைகளை எண்ணி கண்ணீர் வடிக்கிறார்கள்.

கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள Loyalist Township என்னுமிடத்தில் வாழ்ந்துவந்த பிரமிளா (Premila Neeil), சற்று முன்தான் வீட்டை விட்டு வெளியே புறப்பட்டிருந்தார்.

அவர் காரில் பயணித்துக்கொண்டிருக்கும்போது, அவரது மகளான லக்‌ஷாவிடமிருந்து (Lucksha Neeil, 19) மொபைல் அழைப்பு வரவே, காரை ஓரங்கட்டினார் பிரமிளா.

மொபைலில் அவர் கேட்ட விடயம் அவரை அதிர்ச்சியடைய வைத்தது. அவரது மகளான லக்‌ஷா, தங்கள் வீட்டில் தீப்பற்றி எரிவதாகவும், தான் வீட்டுக்குள் சிக்கிக்கொண்டுள்ளதாகவும் பயத்துடன் கூறியுள்ளார்.

அம்மா, நம் வீட்டில் தீப்பற்றி எரிகிறது, அம்மா, வாருங்கள், என்னைக் காப்பாற்றுங்கள் என லக்‌ஷா கதற, எப்படியாவது கதவருகே வந்துவிடு என்று கூறியுள்ளார் பிரமிளா.

ஆனால், கதவையும் தீ சூழ்ந்துள்ளது. ஆகவே, அம்மா, கதவைத் திறக்கமுடியவில்லை, வெளியே வரமுடியவில்லை என்று கதறியுள்ளார் லக்‌ஷா.

அவ்வளவுதான், அதற்குப் பிறகு மொபைல் அமைதியாகிவிட, காதில் மொபைலை வைத்தபடியே வீட்டுக்கு காரை ஓட்டிவந்த பிரமிளாவால், வீடு கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருப்பதை மட்டுமே காணமுடிந்துள்ளது.

அதுதான் தன் தங்கை பேசிய கடைசி வார்த்தைகள் என்கிறார் லக்‌ஷாவின் அண்ணனான கயா (Guyaa Neeil, 22).

ஜனவரி மாதம் 29ஆம் திகதி இந்த துயர சம்பவம் நிகழ்ந்த நிலையில், பொலிசார் விசாரணை மேற்கொண்டும், என்ன நடந்தது, எப்படி வீட்டில் தீப்பற்றியது என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை.

லக்‌ஷாவை இழந்த அவரது குடும்பத்தினர், அவரது கடைசி வார்த்தைகளை எண்ணி எண்ணி கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

வாகனத்தை முந்தி செல்ல முயன்றபோது இளைஞனுக்கு நேர்ந்த விபரீதம்!!

மோட்டார் சைக்கிள் ஒன்று உயர் மின்னழுத்த மின் கம்பத்துடன் மோதியதில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக மொரட்டுவை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மொரட்டுவை, கொரலவெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய சமிந்து நிர்மால் பெர்னாண்டோ என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் செவ்வாய்க்கிழமை (10) இரவு பாணந்துறையிலிருந்து மொரட்டுவை நோக்கி பயணித்துக்கொண்டிந்த போது கொரலவெல்ல லன்சியா தேவாலயத்திற்கு அருகில் வைத்து சிறிய ரக லொறி ஒன்றை முந்திச் செல்ல முயன்றுள்ளார்.

இதன்போது, மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசைக்கு இழுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்த மின் கம்பத்தில் மோதியுள்ளது.

இதில் படுகாயமடைந்த இளைஞன் உடனடியாக பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கை சாதனையின் புதிய அத்தியாயம் : உலக பரா தடகளத்தில் தங்கம் வென்ற ஜனனி தனஞ்சனா!!

துபாயில் நடைபெற்று வரும் 2026 உலக பரா தடகள கிராண்ட் பிரிக்ஸ் தொடரில், இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஜனனி தனஞ்சனா தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

பெண்களுக்கான 100 மீற்றர் (T46/47 பிரிவு) இறுதிப் போட்டியில் பங்குபற்றிய அவர், ஏனைய நாட்டு வீராங்கனைகளை முந்திக்கொண்டு முதலிடத்தைப் பெற்று இந்தத் தங்கப் பதக்கத்தைச் சுவீகரித்தார்.

இதன் மூலம் சர்வதேச தடகள அரங்கில் இலங்கைக்கான கௌரவத்தை அவர் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளார். இதேவேளை, இலங்கையின் புத்திக ஹேஷான் வெள்ளிப் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

ஆண்களுக்கான நீளம் பாய்தல் (T46/47 பிரிவு) போட்டியில் பங்கேற்ற அவர், மிகச்சிறந்த திறமையை வெளிப்படுத்தி இரண்டாம் இடத்தைப் பிடித்து இந்த வெள்ளிப் பதக்கத்தைச் சுவீகரித்தார்.

இலங்கை வீராங்கனை ஜனனி தனஞ்சனா தங்கம் வென்றதைத் தொடர்ந்து, தற்போது புத்திக ஹேஷான் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.