மின்னணு கடவுச்சீட்டு தொடர்பில் வெளியாகும் செய்திகள் : அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!

இலங்கையின் மின்னணு கடவுச்சீட்டு (e-passport) திட்டத்திற்கான டெண்டர் வழங்கப்பட்டுவிட்டதாகக் கூறப்படும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “இ-பாஸ்போர்ட் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கை முற்றிலும் தவறானது.

ஏனெனில் இதுவரை யாருக்கும் டெண்டர் வழங்கப்படவில்லை; அதன் கொள்முதல் செயல்முறைகள் இன்னும் தொடர்ந்த வண்ணமே உள்ளன” என்றார்.

இந்த மின்னணு கடவுச்சீட்டு டெண்டர் நடைமுறைகள் முந்தைய அரசாங்கத்தின் காலத்திலேயே தொடங்கப்பட்டவை என்றும், அது தொடர்பாகச் சில நிறுவனங்கள் ஏற்கனவே சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், இ-பாஸ்போர்ட் திட்டத்தின் பொது விசை உள்கட்டமைப்பு (PKI) தொடர்பான ஒரு தனி டெண்டர் செயல்முறை தற்போது ஆய்வில் இருப்பதாகவும், தேர்வு முறை குறித்து ஒரு நிறுவனம் மேல்முறையீட்டுக் குழுவிடம் மேன்முறையீடு செய்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும், அமைச்சரவை இந்த விவகாரத்தைக் கொள்முதல் ஆணைக்குழுவின் (Procurement Commission) பார்வைக்கு அனுப்பியுள்ளதாகவும் அவர் கூறினார்.

“இந்த டெண்டர் நடவடிக்கைகள் அனைத்தும் மிகவும் வெளிப்படையான முறையில் கையாளப்பட்டு வருகின்றன” என்று அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதியளித்தார்.

19 வயது இளம் பெண்ணை கடந்த 10 நாட்களாக காணவில்லை : பொதுமக்கள் உதவியை நாடும் குடும்பத்தினர்!!

முல்லைத்தீவு – மாந்தை கிழக்கு பகுதிக்குட்பட்ட 19 வயது இளம் பெண்ணொருவர் காணாமல் போயுள்ளதாக நட்டாங்கண்டல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் கடந்த 27ஆம் திகதி இடம்பெற்ற நிலையில், இதுவரையில் குறித்த பெண் வீடு திரும்பவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவதர்சன் தமிழ்வினி என்ற பெண்ணே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு – மாந்தை கிழக்கு பகுதிக்குட்பட்ட 19 வயது இளம் பெண்ணொருவர் கடந்த 27ஆம் திகதி காணாமல் போயுள்ளார்.

பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும் பெண் கிடைக்காத நிலையில், நட்டாங்கண்டல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, பெண் தொடர்பில் விவரங்கள் தெரிந்தவர்கள் 0766859799 மற்றும் 0773104228 ஆகிய இலக்கங்களுக்கு தொடர்புக் கொள்ளலாம் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாடசாலைகளில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் : எடுக்கப்படவுள்ள அவசர நடவடிக்கை!!

தெனியாய பகுதியில் பாடசாலை மாணவர்களிடையே வேகமாகப் பரவி வரும் காய்ச்சல் நிலைமை குறித்துக் கண்டறிய, சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் விசேட மருத்துவக் குழு செயற்பட உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுமித் மனதுங்க தெரிவித்துள்ளார்.

சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைக்கமைய, நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக தெனியாய வலயக் கல்விப் பணிப்பாளர் நிஷாகா ஹெட்டிகொடவினால் நேற்று (07) மற்றும் இன்று (08) தெனியாய வலயத்தைச் சேர்ந்த 4 பாடசாலைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தெனியாய மத்திய மகா வித்தியாலயம், தெனியாய ராஜபக்ச மகா வித்தியாலயம், தெனியாய புனித மத்தியூ இருமொழி வித்தியாலயம் மற்றும் பல்லேகம சித்தார்த்த வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளே இவ்வாறு மூடப்பட்டுள்ளன.

குறித்த பாடசாலைகளின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே நோய் பரவல் அதிகரித்துள்ளதைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

இருப்பினும், இந்த நிலைமை தீவிரமடையவில்லை என்று மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுமித் மனதுங்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, சுகாதாரப் பிரிவினரால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களின் அடிப்படையில், பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்த தீர்மானம் எடுக்கப்படும் என தென் மாகாணக் கல்விச் செயலாளர் என்.கே.ஆர். பத்திரண தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் தவிசாளரின் சொகுசு வாகனத்திற்காக 5 மாதங்களில் 17 இலட்சம் காலி!!

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளர் மக்களின் வரிப்பணத்தைப் பயன்படுத்தி மிக அதிக விலைக்கு வாடகை வாகனம் ஒன்றை ஒப்பந்த அடிப்படையில் பெற்றுள்ளமை மக்களிடையே கடும் அதிருப்தியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் ஏற்கனவே அதிகாரிகளினதும் தவிசாளரினதும் பயன்பாட்டிற்காக ஒரு ‘சிங்கிள் கப்’ (Single Cab) ரக வாகனமும் , ஒரு முச்சக்கர வண்டியும் பயன்பாட்டில் உள்ளன.

இதற்கு முன்னர் பதவியில் இருந்த தவிசாளர்கள் இந்த வாகனங்களையே பயன்படுத்தி வந்தனர். இது தவிர மேலதிக தேவைக்காக அரசாங்க அதிபரினால் மற்றுமொரு ‘பிக்கப்’ (Double Cub Pickup) ரக வாகனமும் சபைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் தற்போது பதவியிலுள்ள இலங்கை தமிழரசு கட்சியின் தவிசாளர் புதிய வாகனம் ஒன்றை வாடகைக்கு அமர்த்தியுள்ளார். இந்த வாகனத்தின் ஒப்பந்தத்தின் வாகனத்தின் மாதாந்த வாடகை 3 லட்சத்து 40 ஆயிரம் ரூபா (3000 கிலோமீட்டர் வரை) மற்றும் மேலதிக கட்டணமாக நிர்ணயிக்கப்பட்ட தூரத்தைத் தாண்டினால் ஒரு கிலோமீட்டருக்கு 150 ரூபாய் எனவும் ஒப்பந்த காலம் ஓராண்டு காலப்பகுதி (2025.11.13 முதல் 2026.11.12 வரை) செய்யப்பட்டுள்ளமையுடன் வாகன வகை டொயோட்டா பிக்கப்(Toyota Double Cup Pickup) ஆகும்

கடந்த ஜந்து மாதங்களில் மாத்திரம் வாடகைக்கு அமர்த்திய டொயோட்டா பிக்கப்(Toyota Double Cup Pickup) வாகனத்திற்காக 17லட்சத்தி 24750 ரூபா கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதேச சபை தெரிவித்துள்ளது.

சபையிடம் போதிய வாகன வசதிகள் இருந்தும் மக்களின் வரிப்பணத்தை வீண் விரயம் செய்யும் வகையில் இவ்வளவு அதிக தொகைக்கு ஆடம்பர வாகனம் எதற்கு? என்ற கேள்வி எழுந்துள்ளது.

மக்களுடைய அடிப்படைத் தேவைகளான வீதிகள், வடிகால்கள் மற்றும் மின்விளக்குகளைச் சீரமைக்க நிதியில்லை என்று கூறும் சபை தனிப்பட்ட ஆடம்பரத்திற்கு மட்டும் எங்கே இருந்து இவ்வளவு பணத்தைக் கொண்டு வருகின்றது?’ என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

மேலும் இந்த வாகன கொள்வனவு அல்லது வாடகை ஒப்பந்தம் தொடர்பான எந்தவொரு விளம்பரமும் அல்லது கோரிக்கையும் பத்திரிகைகளில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிப்படைத்தன்மையற்ற முறையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்ற ஐயம் உருவாகியுள்ளது.

ஏற்கனவே சபையிடம் ‘சிங்கிள் கப்’ வாகனம், அரசாங்க அதிபரினால் வழங்கப்பட்ட ‘பிக்கப்’ வாகனம் மற்றும் முச்சக்கர வண்டி எனப் பயன்பாட்டிற்கு வாகனங்கள் வரிசையாக இருக்கும்போது எதற்காக மீண்டும் ஒரு டொயோட்டா பிக்கப் வாகனத்தை மக்கள் பணத்தில் வாடகைக்கு அமர்த்த வேண்டும்?

முன்னாள் தவிசாளர்கள் செய்யாத எந்த ‘அதிமேதாவித்தனமான’ பணியைச் செய்ய தற்போதைய தவிசாளருக்கு இவ்வளவு விலையுயர்ந்த வாகனம் தேவைப்படுகிறது? இது மக்கள் பணத்தில் நடத்தப்படும் திட்டமிட்ட பகல் கொள்ளை இல்லையா?

நிர்வாக ரீதியான தேவைகளை விட மக்கள் பணத்தில் இத்தகைய செலவுகள் செய்யப்படுவது வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் மீண்டும் மழை : அடுத்த சில நாட்களில் ஏற்படப்போகும் மாற்றம்!!

இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக, நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று(7.5.2026) பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேல், வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் திருகோணமலை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சப்ரகமுவ, மத்திய, ஊவா, தென் மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படும் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைக் குறைத்துக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.

தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்!!

இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்றைய தினம் (07.05.2026) சிறிய அதிகரிப்பொன்று பதிவாகியுள்ளது. அதன்படி நேற்று (06.05.2026) 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 395,000 ரூபாயாக விற்பனையாகியிருந்த நிலையில், இன்று அது 1000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 396,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 366,300 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,500 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,788 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ட்ரோன் அட்டகாசம் தாங்கமுடியவில்லை : திருமணவீட்டு கமராவைச் சுட்டுத் தள்ளிய முதியவர்!!

திருமண விழாக்களில் ட்ரோன் கேமராக்கள் மூலம் வான்வழியாக வீடியோ எடுப்பது தற்போது ஃபேஷனாகி விட்ட நிலையில், ஒரு திருமணத்தில் பறந்த ட்ரோனை முதியவர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கூட்டத்தின் மேலே வட்டமடித்துக் கொண்டிருந்த அந்த ட்ரோன் கேமராவால் ஆத்திரமடைந்த அந்தப் பெரியவர், எவ்விதத் தயக்கமும் இன்றித் தனது கையில் இருந்த துப்பாக்கியால் ஒரே ஒரு சுட்டில் அதைத் தரைமட்டமாக்கினார்.

இந்தச் சம்பவம் அங்கிருந்தவர்களை ஒரு நிமிடம் அதிர்ச்சியில் ஆழ்த்திய போதிலும், தற்போது இந்த வீடியோ பலரிடையே சிரிப்பைக் கிளப்பியுள்ளது.

ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்ட அடுத்த நொடியே அது கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்ததைக் கண்ட உறவினர்கள் எவ்வித எதிர்வினையும் ஆற்ற முடியாமல் மௌனமாக நின்றனர்.

எதற்காக அவர் இத்தகைய அதிரடி முடிவை எடுத்தார் என்பது தெரியவில்லை என்றாலும், ட்ரோனின் சத்தமும் அது மீண்டும் மீண்டும் தலைக்கு மேல் பறந்ததும் அவருக்கு எரிச்சலை உண்டாக்கியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் நிலையில், “தாத்தாவுக்கு ட்ரோன் மேல அப்படி என்ன கோபம்?” எனப் பலரும் கிண்டலாகக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

நெட்டிசன்கள் பலரும் இந்த வீடியோவைப் பகிர்ந்து பல்வேறு நகைச்சுவையான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

சிலர் இதை வேடிக்கையாகப் பார்த்தாலும், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் துப்பாக்கியைப் பயன்படுத்தியது பாதுகாப்பு ரீதியாகச் சரியல்ல என்ற கருத்தையும் முன்வைத்துள்ளனர்.

எது எப்படியோ, வீடியோ எடுக்க வந்த ட்ரோனைத் துப்பாக்கியால் “ஷூட்” செய்த அந்த முதியவரின் செயல், அந்தத் திருமணத்தில் நடந்த சுவாரசியமான மற்றும் மறக்க முடியாத நிகழ்வாகப் பதிவாகிவிட்டது.

ரேபிஸ் நோய் தாக்கி 6 வயது சிறுமி பரிதாபமாக பலி!!

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள செருத்திருத்தி பகுதியைச் சேர்ந்த அலி சகாபி – சபியா தம்பதியின் 6 வயது மகள் சன்ஹா மஹ்ரின், ரேபிஸ் நோய் தாக்கிக் கடந்த சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார்.

1ம் வகுப்பு படித்து வந்த அந்தச் சிறுமி, கடந்த மாதம் 27-ம் தேதி சாலையில் நடந்து சென்ற போது திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்த போதிலும், சிகிச்சை பலனின்றி அந்தச் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆரம்பத்தில் சிறுமியின் மரணத்திற்கான காரணம் சரியாகத் தெரியாததால், அது இயற்கைக்கு மாறான மரணமாகக் கருதப்பட்டது. ஆனால், சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன்பு குப்பைக் குழியில் விழுந்து கையில் காயம் அடைந்ததாக அவரது பெற்றோர் தெரிவித்தனர்.

இதையடுத்து சிறுமியின் உமிழ்நீர் மற்றும் கண் கசிவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டுத் திருவனந்தபுரத்தில் உள்ள மாநில பொது சுகாதார ஆய்வகத்திற்குப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.

அந்தப் பரிசோதனையின் முடிவில், சிறுமிக்கு வெறிநாய் கடி மூலம் பரவும் ரேபிஸ் வைரஸ் தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது.

நாய் கடித்தது சிறுமிக்குத் தெரியாமல் இருந்ததா அல்லது காயம் ஏற்பட்ட போது கவனிக்கத் தவறினார்களா என்பது குறித்துத் தெளிவான தகவல்கள் இல்லை.

இந்தச் சம்பவம் கேரளாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், செல்லப் பிராணிகள் மற்றும் தெருநாய்களிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனச் சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இலங்கையில் எச்சரிக்கை மட்டத்தில் வெப்பநிலை : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சூரிய ஒளியில் இருப்பது புற்றுநோயை ஏற்படுத்தக்கூடும் என்று சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.

களுத்துறை பொது மருத்துவமனையின் புற்றுநோயியல் நிபுணரான வைத்தியர் ஹசந்தி ஜெயலத் இதனை தெரிவித்துள்ளார். இந்த பாதிப்பிலிருந்து பாதுகாக்க உடலை முழுமையாக மறைக்கும் ஆடைகளை அணிவது அவசியம் என்று கூறியுள்ளார்.

இதேவேளை, வெப்பமான வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சபரகமுவ, வடக்கு, வடமத்திய, வடமேற்கு, கிழக்கு மாகாணங்கள் மற்றும் கொழும்பு, கம்பஹா, ஹம்பாந்தோட்டை, மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில், மனித உடல் உணரும் வெப்பநிலையான வெப்பக் குறியீடு, பகல் நேரங்களில் ‘எச்சரிக்கை’ மட்டத்தில் நீடிக்கக்கூடும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

களு கங்கை பாலத்தில் கோர விபத்தில் சிக்கிய கார் : மயிரிழையில் தப்பிய உயிர்கள்!!

கட்டுநாயக்காவில் இருந்து கஹவத்தை நோக்கி பயணித்த சிற்றூர்தி ஒன்று இன்று அதிகாலை இரத்தினபுரி பகுதியில் அமைந்துள்ள களு கங்கை பாலத்தில் விபத்துக்குள்ளானது.

பாலத்தின் மீது கட்டுப்பாட்டை இழந்த குறித்த வாகனம் மோதியதில் அதில் பயணித்த 9 பேர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர். விபத்து நேரத்தில் வாகனம் களு கங்கையில் விழுந்திருக்குமானால் பெரும் உயிர்ச்சேதம் ஏற்படும் நிலை இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவியதுடன், இது தொடர்பாக இரத்தினபுரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

யாழில் காரும் ஜே.சி.பியும் மோதி விபத்து!!

யாழ்ப்பாணம் – இணுவில் பகுதியில் இன்று காரும் ஜேசிபியும் மோதி இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில், மருதனார்மடம் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ஜேசிபியும், யாழில் இருந்து மருதனார்மடம் நோக்கி பயணித்த காரும் மோதியே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் காரின் சாரதி படுகாயமடைந்துள்ளதுடன், காரும் முழுமையாக சேதமடைந்துள்ளது. படுகாயமடைந்த நபர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளார்.

ஜேசிபியின் சாரதி சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மனைவி உடல் எடை கூடியதால் யூடியூப் உதவியுடன் கொலை செய்த கணவன்!!

மனைவி உடல் எடை அதிகமாக இருந்ததால் கணவன் யூடியூப் உதவியுடன் மனைவியை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம், பிரட்டத்தூரைச் சேர்ந்த கிரண் என்பவரது மனைவி பத்மஜா, அதிக உடல் எடையுடன் இருந்த காரணத்தினால், கிரணுக்கு அவரைப் பிடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

பத்மஜா தனது கணவரின் நடத்தையைக் குறித்து சந்தேகம் கொண்டதால், இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

மனைவியைத் தனது மீது சந்தேகம் வராத வகையில் கொலை செய்யத் திட்டமிட்ட கிரண், அதற்கான வழிகளை யூடியூப் ஊடாகத் தேடியுள்ளார்.

விஷம் கொடுத்துக் கொன்றால் சந்தேகம் வராது என்பதை அறிந்து, ஐதராபாத்தில் இருந்து 80 ஆயிரம் ரூபா செலுத்தி இணையம் ஊடாக விஷத்தை வரவழைத்துள்ளார். அதனை , பத்மஜாவுக்குப் பால்கோவாவில் விஷம் கலந்து கொடுத்துள்ளார்.

அதனை உண்ட அவர் மயங்கி விழுந்ததும், அவரது முகத்தில் தலையணையை வைத்து மூச்சுத் திணறடித்ததாக கூர்அப்படுகின்றது. பத்மஜாவின் உடலில் காயங்கள் எதுவும் இல்லாததால் சந்தேகமடைந்த காவல்துறை, கணவரான கிரணிடம் தீவிர விசாரணை மேற்கொண்டது.

விசாரணையில் அவர் தனது மனைவியின் உடல் எடை அதிகமாக காணப்பட்டதால் வெறுத்து அவரை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டதாக கூறப்படுகின்றது. இதனையடுத்து, காவல்துறையினர் கிரணைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மனைவி உடல் எடையுடன் இருந்த காரணத்தினால் கணவனே அவரைக் கொன்ற இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் அதிகரிக்கவுள்ள மின்சாரக் கட்டணம் : வெளியான தகவல்!!

இலங்கையில் ‘பவர் வீலிங்’ எனப்படும் மின்சார விநியோக சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தாமல், ஏற்றுமதித் தொழிற்சாலைகள் மீது மீண்டும் மின்சாரக் கட்டண உயர்வைத் திணிப்பது நாட்டுக்கு பாரிய பொருளாதாரப் பின்னடைவை ஏற்படுத்தும் என ஏற்றுமதி உற்பத்தியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

குறைந்த மழைவீழ்ச்சி, நுரைச்சோலை நிலக்கரி மின்நிலையத்தின் செயலிழப்பு மற்றும் உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு போன்ற காரணங்களால்

மின்சாரத் துறையில் ஏற்பட்டுள்ள 38 பில்லியன் ரூபாய் நட்டத்தை ஈடுகட்ட, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இந்த வாரம் விசேட கட்டண திருத்தத்தை மேற்கொள்ளவுள்ளது.

இந்த நிலையில், சுதந்திர வர்த்தக வலய உற்பத்தியாளர்கள் சங்கம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ள அறிக்கையில், அரசாங்கம் 95 சதவீதமான சிறிய நுகர்வோருக்கு மானியம் வழங்கியுள்ள நிலையில்,

38 பில்லியன் ரூபாய் நட்டத்தில் சுமார் 23 பில்லியன் ரூபாயை தொழிற்சாலைகள் மற்றும் பெரிய வணிக நிறுவனங்களே சுமக்க வேண்டியுள்ளது.

அத்துடன், இந்தியா, வியட்நாம் மற்றும் பங்களாதேஷ் போன்ற அண்டை நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கையில் மின்சாரக் கட்டணம் அதிகமாக இருப்பதால் சர்வதேச சந்தையில் எமது ஏற்றுமதிப் பொருட்களின் விலை அதிகரித்து, கேள்வி குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டின் மின்சாரச் சட்டத்தின்படி, தொழிற்சாலைகள் நேரடியாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியாளர்களிடம் மின்சாரத்தைப் பெற்று, தேசிய மின் கட்டமைப்பைப் பயன்படுத்துவதற்கு அனுமதி உள்ளது.

ஆனால், இதுவரை இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன் சில கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளன.

குறைந்த விலையில் கிடைக்கும் சூரிய சக்தி அல்லது காற்றாலை மின்சாரத்தை நேரடியாகப் பெற்றுக்கொள்ளும் வசதியை உடனடியாக வழங்க வேண்டும் தொழிற்சாலைகள் மீதான கட்டண உயர்வுக்கு ஒரு உச்ச வரம்பை நிர்ணயிக்க வேண்டும்.

2026 ஆம் ஆண்டுக்கான ஒப்பந்தங்கள்

இந்தக் கட்டண உயர்வு தற்காலிகமானதாக இருக்க வேண்டும். 2026 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டுடன் இது தானாகவே காலாவதியாக வேண்டும்.

மின்சார சபை எதிர்பார்த்ததை விட குறைந்த நட்டம் அல்லது லாபம் ஈட்டினால், மேலதிகமாக அறவிடப்பட்ட பணத்தை நுகர்வோருக்கு மீள வழங்க வேண்டும்.

தொழிற்சாலைகளுக்கு நேரடியாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை வழங்க அனுமதிப்பதன் மூலம், இலங்கையின் எரிபொருள் இறக்குமதிச் செலவை ஆண்டுக்கு சுமார் 50 முதல் 80 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை குறைக்க முடியும் என உற்பத்தியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் 8.7 சதவீதக் கட்டண உயர்வு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மீண்டும் ஒரு உயர்வு ஏற்பட்டால் அது 2026 ஆம் ஆண்டுக்கான ஏற்றுமதி ஒப்பந்தங்களைப் பாதிக்கும் என அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

நள்ளிரவு முதல் பல உணவுப் பொருட்களின் விலைகளில் அதிரடி மாற்றம்!!

இலங்கையில் ரைஸ், பிரியாணி மற்றும் நாசிகுரான் ஆகிய உணவு வகைகளின் விலை அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று (07) நள்ளிரவு முதல் குறித்த உணவுகளின் விலை 25 ரூபாவினால் அதிகரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, லாஃப்ஸ் எரிவாயுவைப் பயன்படுத்தி நடத்தப்படும் சிற்றுண்டிச்சாலைகளில் சாதாரண தேநீர் மற்றும் பால் தேநீரின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் இது குறித்துத் தெரிவிக்கையில், சுமார் 25% – 30% வரையான சிற்றுண்டிச்சாலைகள் லாஃப்ஸ் எரிவாயுவைப் பயன்படுத்துவதாகவும், தற்போதுள்ள நிலையில் அவர்களால் அந்த எரிவாயுவின் விலையைத் தாங்கிக்கொள்ள முடியாதுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதற்கமைய, லாஃப்ஸ் எரிவாயுவைப் பயன்படுத்தும் சிற்றுண்டிச்சாலைகளில் ஒரு சாதாரண தேநீரின் விலை 5 ரூபாவினாலும், பால் தேநீரின் விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சிற்றுண்டி வகைகளின் விலைகள் 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், முட்டை ரொட்டி மற்றும் பராட்டாக்களின் விலைகளில் மாற்றம் இல்லை என ஹர்ஷன ருக்ஷான் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் பல பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு வானிலையில் ஏற்படப்போகும் மாற்றம்!!

இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக, நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று(7.5.2026) பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேல், வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் திருகோணமலை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சப்ரகமுவ, மத்திய, ஊவா, தென் மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படும் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைக் குறைத்துக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.

வவுனியாவில் இளம் பெண்ணை காணவில்லை!!

டென்சிகா (வயது 19) என்ற இளம் பெண்ணை நேற்று (05.05.2026) இரவு முதல் காணவில்லை.

அவரை கடைசியாக காலை இன்று (06.05.2026) வவுனியா சிறைச்சாலை முன்பாக பச்சை நிற மலர் வடிவ உடை அணிந்தபடி ஒருவர் பார்த்ததாக தகவல் கிடைத்துள்ளது.

அவரை எங்காவது பார்த்தால் அல்லது ஏதேனும் தகவல் தெரிந்தால் தயவு செய்து உடனடியாக கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களுக்கு தொடர்பு கொள்ளவும்.

📞 076 3231693
📞 076 7571208