வங்கிக் கணக்கிற்குள் ஊடுருவி பணம் கொள்ளை : நால்வர் கைது!!

மோசடியான முறையில் வங்கிக் கணக்கிற்குள் ஊடுருவி 50 இலட்சத்து 69 ஆயிரத்து 610 ரூபா பணத்தை திருடிய நான்கு சந்தேக நபர்கள் கைதாகையுள்ளனர்.

சந்தேக நபர்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் நேற்று (14) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் தெஹிதெனிய மற்றும் முருதலாவ ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 30 முதல் 38 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.

மர்ம காய்ச்சலால் சிறுமி பரிதாபமாக பலி!!

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ரங்கசாமி குளம் அருகே வசிக்கும் சக்திவேல்-சரண்யா தம்பதியரின் இரண்டாவது பெண் குழந்தை கார்த்திகா, கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு திடீர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்.

ஆரம்பத்தில் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார், ஆனால் காய்ச்சல் தீவிரம் அடைந்ததால், பெற்றோர் கார்த்திகாவை சென்னை பிரபல தனியார் மருத்துவமனையில் கொண்டு செல்லும் போதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த மர்மக் காய்ச்சல் சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. சமூக ஆர்வலர்கள், காய்ச்சலின் காரணத்தை உடனடியாக கண்டறிந்து, தொற்று பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்தல் அவசியம் என வலியுறுத்துகின்றனர்.

காஞ்சிபுரம் சுகாதாரத் துறை இணை இயக்குநர் செந்தில் தெரிவித்ததுபோல், குழந்தை வசித்த பகுதியில் தொற்று பரவலுக்கு எந்தவித ஆதாரமும் இல்லை.

தற்போதைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, மேலும் குழந்தை இறப்புக்கான காரணத்தை விசாரணை செய்து தீர்மானிக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

ஜனாதிபதி அனுரவின் Clean Sri Lanka திட்டம் : புதுபொலிவு பெற்ற முல்லைத்தீவு கடற்கரை!!

ஜனாதிபதி அனுரவின் Clean Sri Lanka திட்டத்தால் முல்லைத்தீவு கடற்கரை புதுப்பொலிவு பெற்று பார்ப்பதற்கு மிகவும் ரம்மியத்துடன் காணப்படுகின்றது.

இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க , பதவியேற்றது முதல் பலவேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்.

அமைத்து மக்களும் இலங்கை நாட்டின் குடிகள் என இன மத பேதம் பாராது மக்களுக்கு நன்மைகளை வாரி வழங்கும் பல்வேறு திட்டங்களை ஜனாதிபதி அனுரகுமார அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.

வழமையாக ஆட்சிக்கு வருவோர் வடக்கு , கிழக்கில் அபிவிருத்திகளை முன்னெடுக்க உள்ளதாக கூறினாலும் அது செயலில் காட்டுவது மிக குறைவே.

ஆனால் தற்போதைய ஜனாதிபதி அனுர குமார, வடக்கு, கிழக்கு மக்களுக்கு மட்டுமல்லாது மலைய மக்களுக்கும் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருவதுடன், ஆடம்பரமில்லாது நேரடியாக சென்று மக்களை சந்திக்கின்றார்.

இறுதிபோரில் உருக்குலைத்த முல்லைத்தீவு தற்போது ஜனாதிபதி அனுரவின் Clean Sri Lanka திட்டத்தால் கடற்கரை மிகவும் அழகாக மாறியுள்ளது. மக்களும் மகிழ்ச்சியுடன் முல்லைத்தீவு கடற்கரைக்கு சென்று தமது பொழுகளை போக்கி வருகின்றனர்.

யாழில். மோட்டார் சைக்கிள் – பேருந்து விபத்து உதைப்பந்தாட்ட நடுவர் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் உதைப்பந்தாட்ட வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் , வடமராட்சி கிழக்கு உடுத்துறையைப் பகுதியைச் சேர்ந்த செந்தமிழ் விளையாட்டுக் கழக வீரரும் உதைப்பந்தாட்ட நடுவருமான யூட் (வயது -27) என்பவரே உயிரிழந்துள்ளார்.

தனது விளையாட்டு கழகத்திற்கான சீருடைகளை யாழ்ப்பாணத்தில் பெற்றுக்கொண்டு , மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும் போது , செம்மணி பகுதியில் எதிரே வந்த பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்தவரை மீட்டு யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் யாழ்ப்பாண பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதேவேளை , குறித்த விபத்து இடம்பெற்ற வேளை வீதியில், பயணித்த முச்சக்கர வண்டி வேக கட்டுப்பாட்டை இழந்து , வயல் வெளிக்குள் பாய்ந்து விபத்துக்களாகியமையும் குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியில் மாணவியின் விபரீத முடிவால் கதறும் குடும்பம்!!

கிளிநொச்சியில் நேற்று முன்தினம்(12.10.2025) தற்கொலை செய்த சம்பவம் பெரு துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிளி / ஜெயபுரம் மகாவித்தியாலயத்தில் தரம் 11 இல் கல்வி பயிலும் 16 வயது மாணவியே இவ்வாரு உயிரை மாய்த்துள்ளதாக கூறப்படுகின்றது.

மாணவியின் உயிரிழப்புக்கான காரணம் வெளியாத நிலையில், சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதி பதக்கம் : யாழிற்கு பெருமை சேர்த்த மாணவி!!

சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதி பதக்கம் வென்று யாழ் மாணவி, ஒருவர் மாணுக்கும், தான் கல்வி கற்ற பாடசாலைக்க்கும் பெருமை சேர்ந்த்துள்ளார்.

சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதி பதக்கம் வழங்கும் நிகழ்வில் காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியைச் சேர்ந்த செல்வி.கதிர்காமநாதன் அருட்செல்வி ஜனாதிபதி சிறப்புப் பதக்கத்தை வென்றெடுத்துள்ளார்.

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஒழுங்குபடுத்தலில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச அரங்கில் நடைபெற்றது. இதன் போது சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதி பதக்கத்தை , ஜனாதிபதி அனுரவிடம் இருந்து மாணவி பெற்றுள்ளார்.

இந்நிலையில் சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதி பதக்கம் வென்ற யாழ் மாணவி கதிர்காமநாதன் அருட்செல்விக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றது.

இரகசிய விசாரணையில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி : அமைச்சர் வெளியிட்ட தகவல்!!

அளுத்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக்கொல்ல உடந்தையாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி, நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

இஷாரா செவ்வந்தியுடன் மேலும் 05 பேர் கைது செய்யப்பட்டதாக அமைச்சர் கூறியுள்ளார்.

குற்றப்புலனாய்வுத் துறை, கொழும்பு குற்றப்பிரிவு மற்றும் நேபாள பொலிஸார் இணைந்து இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

“சிஐடி மற்றும் கொழும்பு குற்றப்பிரிவு என்பன கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் நேபாளத்தில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையில் இந்த குழு கைது செய்யப்பட்டுள்ளது.

செவ்வந்தியை கைது செய்ய நாடு தழுவிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன், மேலும் அவர் மறைந்திருப்பதாகக் கூறப்படும் பல இடங்களில் பொலிஸார் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், எட்டு மாதங்களுக்குப் பின்னர் பொலிஸாரால் அவரை நேபாளத்தில் கைது செய்ய முடிந்ததுள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

 

இலங்கை மக்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் தேசிக்காயின் விலை!!

இலங்கையில் தேசிக்காயின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது. இதன்படி, ஒரு கிலோ கிராம் தேசிக்காய் 3,200 ரூபாவிற்கும் அதிகமான விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.

கோட்டை மற்றும் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையங்களில் ஒரு கிலோ கிராம் தேசிக்காயின் மொத்த விலை 1,900 ரூபாவில் இருந்து 2,000 ரூபாவிற்கும் அதிகமாக பதிவாகியுள்ளது.

அதேசமயம், சந்தைகளில் சில்லறை விலை 2,800 ரூபா முதல் 3,200 ரூபா வரை பதிவாகியுள்ளது. அதேசமயம் பிரபல பல்பொருள் அங்காடிகளில் தேசிக்காய் ஒரு கிலோ கிராமின் விலை 2,500 ரூபாவிற்கும் அதிகமாக பதிவாகியுள்ளது.

கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது நேற்றையதினம் தேசிக்காயின் விலை மேலும் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள விலைப் பட்டியலின் ஊடாக அறிய முடிகின்றது.

அத்துடன், ஒரு தேசிக்காயினுடைய விலை சந்தையில் 50 ரூபாவிற்கும் அதிகமாக காணப்படுவதாவும், சந்தைக்கு தேசிக்காயின் வரத்து குறைவடைந்து காணப்படுகின்றமைமே குறித்த விலை அதிகரிப்பிற்கு காரணம் என்று தெரியவந்துள்ளது.

மோட்டார் சைக்கிள் விபத்தில் மூவர் படுகாயம்!!

கொட்டகலை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஆசிரியர் ஒருவர் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று (14) காலை 8.15 மணியளவில் ஹட்டன்–நுவரெலியா பிரதான வீதியில், கொட்டகலை எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் இடம்பெற்றதாக திம்புல பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் தகவலின்படி, கொட்டகலையிலிருந்து ஹட்டன் நோக்கி தனது மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற ஓட்டுநர் ஒருவர்,

முன்னால் சென்ற முச்சக்கர வண்டியை முந்திச் செல்ல முயன்றபோது, எதிர்திசையில் ஹட்டனில் இருந்து தலவாக்கலை நோக்கிச் சென்ற மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியுள்ளார்.

இதில், ஹட்டனில் இருந்து தலவாக்கலை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளில் இருந்த இருவர் உட்பட மூவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த மூவரும் ஆரம்பத்தில் கொட்டகலை பிராந்திய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

விபத்தில் சம்பந்தப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்களும் கடுமையாக சேதமடைந்துள்ளன.

இரு வாகனங்களின் அதிவேகமே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக திம்புல பத்தனை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

செவ்வந்தியின் தோற்றத்தில் நேபாளத்தில் சிக்கிய யாழ். பெண் குழப்பத்தில் பொலிஸார்…….!!

இஷாரா செவ்வந்தியுடன் சேர்த்து நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்ட பெண் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் செவ்வந்தியின் உருவ ஒற்றுமையைக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் இருவரின் உருவ ஒற்றுமை விசாரணை அதிகாரிகளை திடுக்கிட வைத்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரபல பாதாள உலகக் குழு தலைவரான கணேமுல்ல சஞ்சீவவை கடந்த பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்குள் வைத்து சுட்டுப் படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி இதுவரை நாட்களும் தலைமறைவாக இருந்தார்.

செவ்வந்தியை தொடர் விசாரணைகள் மற்றும் தேடுதல் நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டிருந்த நிலையில், இன்று காலை நேபாளத்தில் வைத்து இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்டதுடன், அவருடன் இணைத்து மேலும் ஐவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

யாழ்ப்பாணம், கம்பஹா, நுகேகொடை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஐவரே இவ்வாறு இஷாரா செவ்வந்தியுடன் இணைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

கொழும்பில் இருந்து சென்றகார் விபத்து : தெய்வாதீனமாக தப்பிய உயிர்கள்!!

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட் பட்ட குருக்கள்மடம் பகுதியில் கார் ஒன்று வீதியைவிட்டு விலகி மதகுடன் மோதி பள்ளத்தில் விழுந்து இன்று (14) காலை விபத்துக்குள்ளாகியுள்ளது.

கொழும்பிலிருந்து சம்மாந்துறை நோக்கி பயணித்த கார் குருக்கள்மடம் முருகன் ஆயத்திற்கு முன்னால் விபத்துக்குள்ளகியுள்ளது.

காரில் மூன்றுபேர் பயணித்துள்ள நிலையில் அவர்கள் காயங்களுக்குள்ளாகி கலுவாஞ்சி குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து சம்பவத்தில் உயர் சேதம் ஏற்படாமல் தெய்வாதினமாக உயிர் தப்பியுள்ளனர். வேகக்கட்டுப்பாட்டை இழந்து , வீதியை விட்டு விலகியதால் விபத்து இடம்பெற்றுள்ளதாகவும்,

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் குருக்கள்மடம் பகுதியில் அதிகளவான வளைவுகள் காணப்படுவதாகவும், மிக அவதானமாக வாகனங்களை செலுத்துமாறும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும், இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிகுடி போக்குவரத்துப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

மீண்டும் உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை!!

உள்நாட்டில் தங்கத்தின் விலை மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. அதன்படி, 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 337,600 ரூபாவாக அதிகரித்துள்ளது.

கொழும்பு, புறக்கோட்டை சந்தையில் 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை நேற்று திங்கட்கிழமை 319,000 ரூபாவாக இருந்தது. இன்று (14.10.2025) காலை 10:30 மணி நிலவரப்படி 337,600 ரூபாவாக அதிகரித்துள்ளது.

அதேவேளை, நேற்று திங்கட்கிழமை 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 345,000 ரூபாவாக இருந்தது. இன்றையதினம் 365,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாக புறக்கோட்டை சந்தை வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

மூடிய புகையிரதக் கடவையை கடக்க முயன்ற இளைஞர் ஒரு நொடியில் மரணம்!!

மூடிய ரயில்வே கேட்டை கடக்க முயன்ற இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

சமீப காலமாக ரயில் மோதி ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்துவிட்டன. இதற்காக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தும் மரணங்கள் குறைந்த பாடில்லை.

இந்நிலையில், இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் மூடியிருந்த ரயில்வே கேட்டை கடக்க முயன்ற போது ரயில் மோதி உயிரிழந்துள்ளார்.

அம்மாநிலத்தில் உள்ள கிரேட்டர் நொய்டாவில் இருக்கும் தாத்ரி பகுதியைச் சேர்ந்த இளைஞர் துஷார். இந்த இளைஞர் ஒக்டோபர் 13-ம் திகதி அன்று தன்னுடைய பைக்கில் ரயில்வே கிராசிங்கிற்கு வந்த போது தான் விபரீத சம்பவம் நடந்துள்ளது.

ரயில்வே கேட் மூடப்பட்டிருந்த நிலையிலும், ஆபத்தை உணராமல் அதன் அடியில் புகுந்து தண்டவாளத்தைக் கடக்க முயன்றுள்ளார் துஷார்.

அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக அவருடைய பைக் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்த நிலையில் துஷாரும் தண்டவாளத்தில் கீழே விழுந்தார்.

அப்போது ரயிலும் வேகமாக வந்து கொண்டிருந்ததால் பைக்கை எடுக்க முயன்ற துஷார் ரயில் நெருங்கி வந்ததும் பைக்கை விட்டுவிட்டு தண்டவாளத்தில் ஓடினார்.

ஆனால், துஷார் மீது ரயில் வேகமாக மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பான வீடியோவும் வெளியாகி காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.

கிணற்றில் குதித்த பெண்ணை மீட்க முயன்றதில் தீயணைப்பு வீரர் உட்பட 3 பேர் உயிரிழப்பு!!

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் நெடுவத்தூரில் அர்ச்சனா (33) என்ற பெண் 80 அடி ஆழமான கிணற்றில் குதித்துள்ளார். இது குறித்து தகவல் கிடைத்ததும், கொட்டாரக்கரா தீயணைப்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு முயற்சிகளை தொடங்கினர்.

சோனி குமார் என்ற தீயணைப்பு வீரர் பாதுகாப்பு உபகரணங்களுடன் கிணற்றில் இறங்கி அர்ச்சனாவை காப்பாற்ற முயன்றார். ஆனால் எதிர்பாராத விதமாக கிணற்றின் சுவர் இடிந்து விழுந்து, குமார் மற்றும் அர்ச்சனா மீது கிணற்றுக்குள் விழுந்தது.

மேலும் கிணற்றின் அருகில் நின்று கொண்டிருந்த அர்ச்சனாவின் நண்பர் சிவகிருஷ்ணனும் சுவர் இடிந்ததில் கிணற்றுக்குள் தவறி விழுந்தார்.

மூவரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர், ஆனால் மருத்துவர்கள் மூவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அர்ச்சனாவுக்கும் சிவகிருஷ்ணனுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக அர்ச்சனா கிணற்றுக்குள் குதித்து தற்கொலை செய்துக் கொள்ள முயன்றது தெரிய வந்துள்ளது.

இரு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் விபரீத முடிவு!!

நெல்லை அருகே குடும்பத் தகராறில் இரண்டு குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் அருகே பருத்திக் குளம் கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் முத்தையாவின் மனைவி முத்துலட்சுமி (27) இரண்டு பெண் குழந்தைகளான முத்தமிழ் (4) மற்றும் சுசீலா (3) ஆகியோருடன் வசித்து வந்தார்.

நேற்று இரவு கணவன்-மனைவிக்குள் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான முத்துலட்சுமி, தன் இரு குழந்தைகளையும் கிணற்றில் தள்ளிய பின்னர் தானும் கிணற்றில் குதித்து உயிரை மாய்த்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள், இரண்டு குழந்தைகளின் உடலை மீட்டனர். மேலும் தாய் முத்துலட்சுமியின் உடலை இன்று காலை மீட்டனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

யாழில் வெளிநாட்டு அனுப்புவதாக கூறி 30 கோடி ரூபா மோசடி!!

வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி பலரிடம் கோடிக்கணக்கான பணத்தினை பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ், யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில், இவருக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் நான்கு முறைப்பாடுகளும், வவுனியாவில் நான்கு முறைப்பாடுகளும் காணப்படுகின்றன.

அந்தவகையில் இது குறித்து யாழ்ப்பாணம் மாவட்ட நிதிசார் குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபரை நேற்றையதினம்(14) கைது செய்தனர்.

கைது செய்து விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை 14 நாட்களுக்கு விளக்கம் மறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.