சொல்லாமல் சென்ற மகள் திரும்பாமலே போயிவிட்டார் : கதறும் குடும்பத்தினர்!!

தேனி மாவட்டத்தில் காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்த திட்டக்குடி சுபா தனது குடும்பத்தினரிடம் சொல்லாமல் ட்ரெக்கிங் சென்றது தற்போது தெரியவந்துள்ளது.

குறித்த விபத்தில் சிக்கி சென்னையை சேர்ந்த அகிலா, பிரேமலதா, புனிதா, சுபா, அருண், விபின், சுபா ஆகிய 7 பேரும், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த விஜயா, விவேக், தமிழ்ச் செல்வி ஆகிய 3 பேரும் என மொத்தம் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

தீவிபத்தில் பலியானவர்களில் சுபா என்ற இளம்பெண் சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும் அவரது சொந்த ஊர் கடலூர் மாவட்டம் திட்டக்குடி என்பதும் தெரியவந்துள்ளது.

சுபா உயிரிழந்தது குறித்த் தகவல் அவரது குடும்பத்தினருக்கு நேற்று காலையில்தான் தெரிய வந்தது.

சுபாவின் மரணம் தொடர்பாக அவரது சகோதரர் கமல்ராஜ் பேச முடியாமல் தவித்தார். பின்னர் எப்படி யார் மூலமாக எனது சகோதரி சென்றார் என்பதே தெரியவில்லை என்று கதறினார். தொடர்ந்து பேச முடியாமல் அவர் கதறி அழுதது அங்கிருந்தவர்களை துயரத்தில் ஆழ்த்தியது.

மலையேற்ற பயிற்சியில் ஆர்வம் கொண்ட சுபா தனது தோழிகள் சிலருடன் தேனி மலைப் பகுதிக்கு சென்றிருப்பது தெரியவந்துள்ளது.

உலகை உலுக்கிய மிக மோசமான விமான விபத்துகள்!!

 
ஈரான் மற்றும் காட்மண்டுவில் அடுத்தடுத்து இருவேறு விமான விபத்து நடந்துள்ள நிலையில், உலகின் மிக மோசமான விமான விபத்துக்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

ஈரானில் துருக்கி நாட்டு தனியார் விமானம் ஒன்று மலையில் மோதி விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த புதுமணப் பெண் உள்ளிட்ட 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

அதேபோன்று நேபாள தலைநகர் காட்மண்டுவில் விமானம் ஒன்று தரையில் மோதி தீ பிடித்ததால் அதில் பயணம் செய்தவர்களில் 49 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

கிரீஸ் நாட்டில் கடந்த 2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி போயிங் 737-300 ரக விமானம் ஒன்று விபத்தில் சிக்கியதில் 121 பேர் பலியாகினர்.

அதே ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் திகதி வெஸ்ட் கரீபியன் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானம் ஒன்று மேற்கு வெனிசுவேலாவில் விபத்தில் சிக்கியது. இதில் 160 பேர் பலியாயினர்.

அதே ஆண்டு அக்டோபர் 22 ஆம் திகதி நைஜீரியாவில் விமானம் புறப்படும்போது ஏற்பட்ட விபத்தில் 117 பேர் பலியாகினர்.

டிசம்பர் 10 ஆம் திகதி நைஜீரியாவில் சோசோலிசோ ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளாகி 108 பேர் உயிரிழந்தனர்.

2006 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் திகதி கருங்கடலில், அர்மாவியா ஏர்பஸ் ஏ320 ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 113 பேர் உயிரிழந்தனர்.

யூலை 9 ஆம் திகதி ரஷ்யாவில் எஸ்7 ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்ததில் 128 பேர் உயிரிழந்தனர்.

அதே ஆண்டு ஆகஸ்ட் 22 ஆம் திகதி துபோலெவ் நிறுவனத்தின் பயணிகள் விமானம் உக்ரைனின் டொனெட்ஸ்க் நகரில் விபத்துக்குள்ளானதில் 170 பேர் பலியாயினர்.

2007 ஆம் ஆண்டு மே 5 ஆம் திகதி கென்ய ஏர்லைன்ஸ் விமானம், கேமரூன் நாட்டில் விபத்துக்குள்ளானதில் 114 பேர் உயிரிழந்தனர்.

யூலை 17 ஆம் திகதி பிரேசில் நாட்டில், டி.ஏ.எம். ஏர்லைன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கியதில் 199 பேர் உயிரிழந்தனர்.

2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 ஆம் நாள் ஸ்பெயின் நாட்டின் பரஜஸ் விமான நிலையத்தில், விமானம் புறப்படும்போது ஏற்பட்ட விபத்தில் 154 பேர் உயிரிழந்தனர்.

2009 ஆம் ஆண்டு யூன் 1 ஆம் திகதி பிரேசிலில் இருந்து பிரான்ஸ் சென்ற ஏர்பிரான்ஸ் விமானம் அட்லாண்டிக் கடலில் விழுந்ததில் 228 பேர் உயிரிழந்தனர்.

அதே ஆண்டு யூலை மாதம் ஈரானில் காஸ்பியன் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானதில் 153 பேர் உயிரிழந்தனர்.

2010 ஆம் ஆண்டு மே மாதம் லிபியா நாட்டு, தலைநகர் திரிபோலியில் ஏர்பஸ் ஏ330யில் விபத்து ஏற்பட்டு 103 பேர் உயிரிழந்தனர்.

மே 22 ஆம் திகதி ஏர் இந்தியாவின் போயிங் 737-800 ரக விமானம், மங்களூர் விமான நிலைய ஓடு பாதையை கடந்து ஓடி விபத்துக்குள்ளானதில் 158 பேர் உயிரிழந்தனர்.

2014 ஆம் ஆண்டு ஹாலந்து தலைநகர், ஆம்ஸ்டர்டாமிலிருந்து கோலாலம்பூருக்கு சென்ற விமானம், ரஷ்ய எல்லையருகே சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் விமானத்திலிருந்த 298 பேர் உயிரிழந்தனர்.

2015 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் ஆண்டு ஸ்பெயினில் இருந்து ஜேர்மனிக்கு சென்ற பயணிகள் விமானம் பிரான்சின் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் விபத்துக்குள்ளானதில் 150 பேர் உயிரிழந்தனர்.

அதே ஆண்டு அக்டோபர் 31 ஆம் திகதி ரஷ்ய விமானம், எகிப்தில் விபத்துக்குள்ளானதில் 224 பேர் உயிரிழந்தனர்.

கடந்த 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் உலக அளவில் 20க்கும் மேற்பட்ட விமான விபத்துக்கள் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இருட்டில் கணனி, கைத்தொலைபேசி பார்ப்பது ஆபத்தானதா?

இன்­றைய யுகத்தில் கணனி மற்றும் கைய­டக்கத் தொலை­பேசி பாவனை என்­பது தவிர்க்­க­மு­டி­யாத பழக்­க­வ­ழக்­க­மாகி­ விட்­டது. ஆனால், அவற்றை அள­வுக்கு மீறிப்­பா­விப்­பதால் கண்­ணுக்கு ஆபத்து நேரி­டு­கி­றது என்­பதை பலரும் மறந்­து­வி­டு­கின்­றனர்.

உண்­மையில் கண­னியை தொடர்ந்து பயன்­ப­டுத்­து­ப­வர்கள் இரு­ம­ணி­நே­ரத்­துக்­கொ­ரு­த­டவை கண்­ணுக்கு ஓய்வு வழங்­க­வேண்­டி­யது அ­வ­சி­ய­மாகும். மேலும் இவற்றை இருட்­டுக்குள் பயன்­ப­டுத்­தக்­கூ­டாது. எப்­போதும் வெளிச்சூ­ழலில் மட்­டுமே கணனி, தொலைக்­காட்சி, கைய­டக்கத் தொலை­பேசி என்­ப­வற்றைப் பாவிக்­க­வேண்டும் எனக் கூறு­க­ின்றனர் கண் வைத்­திய நிபு­ணர்கள்.

லண்டன் தமிழ் வைத்­திய நிபு­ணர்கள் சங்­கத்தின் அனு­ச­ரணையுடன் கல்­முனை ஆதா­ர­வைத்­தி­ய­சா­லையில் இரு­நாட்­களில் (25.26) 70இலட்­ச­ரூபா பெறு­ம­தி­யான 140 ஏழை கண்­நோ­யா­ளர்­க­ளுக்­கான கற்­றரக்ட் சத்­தி­ர­சி­கிச்­சைகள் முற்­றிலும் இல­வ­ச­மாக செய்­து­மு­டிக்­கப்­பட்­டன.

வைத்­தி­ய­ அத்­தி­யட்­ச­கர்­க­ளான இரா.முர­ளீஸ்­வரன் (கல்­முனை) குண.சுகுணன் (களு­வாஞ்­சிக்­குடி) ஆகி­யோரின் ஏற்­பாட்டில் இச்­சேவை நடை­பெற்­றது.

லண்­ட­னி­லி­ருந்­து ­வந்த ஈழத்து கண்­வைத்தி­ய­ நி­பு­ணர்­க­ளான எம்.லோகேந்­திரன் (வட்­டுக்­கோட்டை) ராதா தர்­ம­ரெட்ணம் (களு­வாஞ்­சிக்­குடி) காந்­தா­ நி­றஞ்சன் (மட்­டக்­க­ளப்பு) ஆகியோர் பிர­தான ­பா­க­மேற்­றனர்.

நாட்­டி­லுள்ள பிர­பல கண்­வைத்­தி­ய­ நி­பு­ணர்­க­ளான எஸ்.சந்­தி­ர­குமார்(யாழ்ப்­பாணம்), ஏ.பி.கங்­கி­லி­பொல(கல்­முனை) பி.டயஸ் (மொன­ரா­கல) உள்­ளிட்ட 8 வைத்­தி­ய­ நி­பு­ணர்கள் இச்­சத்­தி­ர­சி­கிச்­சை­களை செய்­தனர்.

லண்­ட­னி­லி­ருந்து வந்த டாக்டர் மகா­ரத்னம் லோகேந்­திரன் யாழ்.வட்­டுக்­கோட்­டை­யைச் ­சேர்ந்­தவர். பிர­ப­ல­மான கண்­வைத்­தி­ய ­நி­பு­ண­ரான இவர் இலங்கை உள்­ளிட்ட உல­கி­லி­ருந்து கண்­வைத்­தி­ய ­நி­பு­ணத்­துவ கற்­கைக்­காக லண்­ட­னுக்கு வரும் வைத்­தி­யர்­க­ளுக்கு கற்­பித்­து­ வ­ரு­ப­வ­ராவார்.

அவர்­களின் கருத்­துக்கள் வரு­மாறு டாக்டர் மகா­ரத்னம் லோகேந்­திரன் கூறு­கையில்;

கடந்த 30வருட சேவையில் இது­வரை 4000பேருக்கு கற்றக்ட் சத்­தி­ர­சி­கிச்­சையை செய்­துள்ளோம்.

2002இல் அப்­போது சாயி நிலை­யமும் அர­சாங்க அதி­பரும் விடுத்­த­வேண்­டு­கோளுக்­கி­ணங்க யுத்­த­நி­றுத்த காலத்தில் கண்­சி­கிச்சை முகாமை பல சிர­மங்­க­ளுக்­கு­மத்­தியில் நடத்­தினோம்.

பின்பு முல்­லைத்­தீவு, வவு­னியா, யாழ்ப்­பாணம் போன்ற பகு­தி­களில் தொடர் மருத்­துவ சேவையை வழங்கி வந்தோம். 2012இல் மீண்டும் மன்னார், முல்­லைத்­தீவு பகு­தி­களில் செய்தோம்.

2013இல் மட்­டக்­க­ளப்பு, நுவ­ரெ­லியா, கண்டி போன்ற பிர­தே­சங்­களில் கண் சிகிச்சை முகாம்­களை நடத்­தினோம் . கல்­மு­னைக்கு வரு­வது இதுவே முதற்த­ட­வை­யாகும்.

2013இல் மட்­டக்­க­ளப்பு வந்த 100பேருக்கு கற்றக்ட் சிகிச்­சையை வழங்­கினோம். கண்­இமை சிகிச்சை, பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை என்­ப­னவும் செய்தோம்.

வைத்­தி­ய­க­லா­நிதி டாக்டர் காந்­தா­ நி­றஞ்சன் கருத்­து­ரைக்­கையில்:

இலங்­கை­யைச் ­சேர்ந்த 3000 தமிழ் வைத்­தி­யர்கள் ஐக்­கி­ய­ இ­ராச்­சி­யத்தில் வாழ்­கின்­றனர். ஆனால் ஆக 400பேர் எமது அமைப்­பி­லுள்­ளனர். அவர்­க­ளது பங்­க­ளிப்­பிலே இந்த மாபெரும் சேவை­யைச் ­செய்­ய­மு­டி­கி­றது.

2002இல் ஆரம்­பிக்­கப்­பட்ட இவ்­வ­மைப்பு இலங்­கையில் குறிப்­பாக யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட வடக்கு, கிழக்­குப்­ பி­ர­தே­சங்­களில் எமது வைத்­தி­ய­சே­வையை வழங்­கி­ வ­ரு­கின்­றது.

நாம் அர­ச­சார்­பற்ற, கட்­சி­சார்­பற்ற அமைப்பு. தேவை­கண்­ட­வி­டத்து நலி­வுற்ற எமது மக்­க­ளுக்கு மருத்­து­வ­சே­வையைச் செய்து வரு­கின்றோம் என்றார்.

வைத்­தி­ய­நி­புணர் டாக்டர் ராதா தர்­ம­ரெட்ணம் கூறு­கையில்;

எமது அமைப்பின் உறுப்­பி­னர்­களின் மாத­சந்தா சேக­ரிப்பு பணத்தில் சிகிச்­சைக்கான உப­க­ர­ணங்­களை மட்­டுமே வாங்­கு­கின்றோம். அதா­வது கண்­வில்­லை­கள், அதற்­கான சிறு உப­க­ர­ணங்கள் சில­வற்றை வாங்­கு­கின்றோம்.

மற்­றும்­படி நாம் இங்கு வந்­து­போ­வது, மற்­றைய செல­வுகள் எமது சொந்த செல­வில்தான்.இதனை சேவை­யாகச் செய்­கின்றோம்.இங்கு பூரண ஆத­ரவும் ஒத்­து­ழைப்பும் கிடைக்­கி­றது.

மட்டு. படு­வான்­கரை மக்கள் பெரு­ம­ளவில் இந்த கற்றக்ட் நோயால் பீடிக்­கப்­பட்­டுள்­ளனர். களு­வாஞ்­சிக்­குடி ஆதார வைத்­தி­ய­சா­லையில் நான் செய்த சோத­னையில் சுமார் 1000பேர­ளவில் கற்­றக்ட்டால் பீடிக்­கப்­பட்­டுள்­ள­ரென்று தெரிந்­தது. ஸ்கி­ரினிங் 800 பேருக்­குச் ­செய்தோம். அவர்கள் அனை­வ­ருக்கும் கற்றக்ட் சிகிச்சை செய்ய வேண்­டி­யுள்­ளது. எனினும் மோச­மா­க­வுள்ள ஆக 150பேருக்கு இம்­முறை செய்­கிறோம் என்றார்.

டாக்டர் லோகேந்­திரன் கூறு­கையில்;

லண்­டனில் 65வய­துக்கு மேற்­பட்­ட­வர்­க­ளுக்கே இந்த கற்றக்ட் வரு­கி­றது. ஆனால் இங்கு 40 – 45வய­தி­னிலே வரு­கி­றது. இதற்கு காரணம் இலங்­கையில் சூரியன் அண்­மை­யி­லி­ருப்­பதும் அதி­க­நீ­ரி­ழப்பும்.

அங்கு நீரி­ழிவு நோய் வந்தால் பிர­தி­ வ­ரு­டமும் அதற்கு சிகிச்­சை­பெறும் அதே­வேளை, கண் ஸ்­கி­ரி­னிங் செய்­யவும் வேண்டும். ஆனால் இங்கு அந்த நடை­முறை இல்­லா­மை­யினால் பலர் எளி­தாக இந்­த­நோய்­களை பெற்றுக் கொள்­கி­றார்கள் என்றார்.

டாக்டர் காந்­தா­நி­றஞ்சன் கூறு­கையில்:

சூரி­ய­ஒ­ளிக்­ கு­றை­பாடு, போது­மான வெளிச்­ச­மின்மை இவை­யெல்லாம் மயோ­பி­யாவை உரு­வாக்­கக்­கூ­டி­யவை. ரிவி கணனி­யில் இருந்து சூடா­ன­ வளி வரு­கி­றது. இது கண்­ணைப் பா­திக்­கக்­கூ­டி­யது.இதனால் உலர்கண் வரலாம். அதா­வது கண்­ணீரை வற்­ற­வைப்­பதால் வரண்ட உலர்கண் உரு­வாகும்.

இருட்டில் கணனியோ, போனோ பார்க்­கக்­கூ­டாது. ஜப்­பானில் இதனை றெட்ஜ என்­பார்கள். இயற்கை கண்ணீர் வற்றிவிடும். இதனால் செயற்கை துளிகள் இடவேண்டும்.

டாக்டர் ராதா கூறுகையில்;

வாகரையில் நாம் ஒரு பெற்றோரை இழந்த இல்லத்தை நடத்திவருகிறோம்.அது திலகவதியார் இல்லம் அங்கு 50பிள்ளைகளுள்ளனர். 1997இலிருந்து ஆரம்பித்தோம். பூரண நிதிஆதரவு நாமே வழங்குகிறோம்.

கண்ணைப் பாதுகாக்க விழிப்புணர்வு தேவை. ஊதா நிறம் கலந்த கதிர் பாதிக்காத கண்ணாடிகளை தாராளமாக அணியலாம். வெறுமனே கண்ணாடிகளை அணியக்கூடாது.

மொத்­தத்தில் கண்­ணைப் ­பா­து­காப்­ப­தென்றால் விழிப்­பு­ணர்வு அவ­சியம். நேரத்­துக்கு உரிய சிகிச்­சை­ப் பெற்றால் சிக்­க­லைத்­ த­விர்க்­கலாம்.

முதல் ரோபோ சோபியா ஆபத்தின் அடையாளமா?

எந்­திரன் படத்தில் டாக்டர் வசீ­கரன் (ரஜினி) உரு­வாக்­கிய ரோபோவின் பெயர் சிட்டி. அந்த இயந்­திர மனி­தனின் நுண்­ண­றிவை சோதிப்­ப­தற்கு பல கேள்­விகள் கேட்­கப்­படும். சிட்­டியும் சளைக்­காமால் பதில் கூறும். ஒரு சந்­தர்ப்­பத்தில் கடவுள் இருக்­கின்­றாரா என்ற கேள்வி கேட்­கப்­படும் போது கடவுள் என்றால் யார் என்று பதில் கேள்வி கேட்கும் அந்த ரோபோ. அதற்கு கேள்வி கேட்­டவர் எம்மை எல்லாம் படைத்­தவர் என்று பதில் கூற ” என்னை படைத்­தவர் டாக்டர் வசீ­கரன், ஆம் கடவுள் இருக்­கின்றார் ‘ என பதில் கூறி கைதட்டல் பெறும் அந்த ரோபோ. அது எந்­திரன் படத்­தோடு நின்று விட்ட கதை. ஆனால், இப்­போது அறி­வியல் உலகம் முழுக்க பேசப்­படும் ஒரு ரோபோ­வாக சோபியா விளங்­கு­கிறாள் .

ஆம் அவள் ஒரு பெண்­ணாக வடி­வ­மைக்­கப்­பட்­டுள்ள ரோபோ. இன்று உலகம் முழுதும் சுற்­றுப்­ப­யணம் செய்து வரும் சோபியா எமது அண்டை நாடான இந்­தி­யா­வுக்கு இரண்டு தட­வைகள் பயணம் மேற்­கொண்­டி­ருக்­கிறாள். சோபி­யா­வுக்கு உள்ள பெருமை என்­ன­வென்றால், உலகில் குடி­யு­ரிமை பெற்ற முதல் இயந்­திர மனித தானி­யங்கி என்ற பெருமை உள்­ளது. கடந்த வருடம் ஒக்­டோபர் மாதம் சவூதி அரே­பியா சோபி­யா­வுக்கு தனது நாட்டின் குடி­யு­ரி­மையை வழங்கி கௌர­வித்­தது.

உரு­வாக்கம்

ஹொங்­கொங்கை தள­மா­கக்­கொண்டு இயங்கும் Hanson Robotics என்ற நிறு­வ­னத்­தினால் 2013 ஆம் ஆண்டு வடி­வ­மைக்­கப்­பட்­டதே சோபியா என்ற ரோபோ. 2015 ஏப்ரல் 19 ஆம் திகதி பொது மக்கள் முன்­னி­லையில் உலா வந்­தது. மனி­தர்­களைப் போன்று மிகவும் மேம்­ப­டுத்­தப்­பட்ட உணர்­வு­களை வெளிப்­ப­டுத்தக் கூடிய வண்ணம் உரு­வாக்­கப்­பட்ட சோபி­யா­விற்கு சுமார் 62 வித­மான முக­பா­வ­னை­களை வெளிப்­ப­டுத்த இயலும் என்­பது முக்­கிய விடயம்.

தற்­போது உல­கெங்­கினும் தகவல் தொழில்­நுட்ப கற்கை நெறி­களை வழங்கும் பல்­க­லைக் ­க­ழ­கங்கள் மற்றும் கல்­லூ­ரி­க­ளுக்கு பயணம் மேற்­கொள்ளும் சோபியா அங்கு மாண­வர்கள் மற்றும் விரி­வு­ரை­யா­ளர்­களின் கேள்­வி­க­ளுக்கு மிகவும் நுண்­ண­றி­வுடன் பதில் சொல்லி வரு­கிறாள். ஆனால், எந்­திரன் படத்தில் வரும் ஒரு சம்­பவம் போன்று ஒரு தடவை சோபியா வழங்­கிய பதில் உலகை மட்­டு­மன்றி அதை, உரு­வாக்­கி­ய­வர்­க­ளுக்கும் அதிர்ச்­சியை கொடுத்­தது.

மனி­தர்­களை அழிக்க வேண்டும்

சோபி­யாவை உரு­வாக்­கிய ஹான்சன் ரொபோடிக்ஸ் நிறு­வனர் கலா­நிதி டேவிட் ஹான்சன் சோபி­யாவின் நுண்­ண­றிவு மற்றும் பேச்­சுத்­திறன் பற்றி செயல் விளக்­க­மொன்றை ஊட­கங்­க­ளுக்கு காண்­பித்தார். பல கேள்­வி­க­ளுக்கு அற்­பு­த­மாக பதில் கூறிய சோபி­யா­விடம் டேவிட் ஹான்சன் ஒரு கேள்­வியை எழுப்­பினார்.

“சோபியா மனி­தர்­களை அழிக்க விரும்­பு­கி­றாயா ….தயவு செய்து இல்லை என்று கூறு.. என கேள்­வியை முடித்தார். ஆனால் சோபி­யாவோ உட­ன­டி­யாக சரி நான் மனி­தர்­களை அழித்து விடு­கிறேன் என பதில் கூறி­ய­வுடன் டேவிட் ஹான்சன் சிரித்­துக்­கொண்டே அவ்­வி­ட­யத்தை சமா­ளித்து விடு­கிறார். இந்த விடயம் அறி­வியல் உல­கத்­திற்கும் இப்­படி ஒரு ரோபோ உரு­வாக்­கத்தில் எரிச்­ச­ல­டைந்­தி­ருந்­த­வர்­க­ளுக்கும் அல்வா கிடைத்­தது போன்று ஆனது.

உட­ன­டி­யாக சிலர் இது தான் ரோபோக்­களின் குணம். என்ன தான் செயற்கை நுண்­ண­றிவு படைத்­தி­ருந்­தாலும் அவை எப்­போ­துமே மனி­தர்­க­ளுக்கு ஆபத்­தா­னவை என எச்­ச­ரித்­தனர். ஆனால், பின்னர் டேவிட் அவ்­வி­டயம் பற்றி கூறு­கையில், நாம் சோபி­யாவை இப்­போது தான் மேம்­ப­டுத்தி வரு­கிறோம். ஆகவே அந்த பதில் குறித்து எவரும் கவ­லைப்­ப­டத்­தே­வை­யில்லை என்றார்.

அது ஒரு நகைச்­சுவை

ஆனால், நம் மக்கள் சும்மா இருப்­பார்­களா? பின் ஒரு சந்­தர்ப்­பத்தில் சோபி­யா­விடம் கேள்வி எழுப்­பிய போது நீங்கள் மனி­தர்­களை அழிப்பேன் எனக்­கூ­றி­யது சரியா என்று கேள்வி எழுப்­பினர். அதற்கு சோபியா அப்­போது நான் இள­மையில் இருந்தேன். நான் கூறி­யதன் அர்த்தம் எனக்குப் புரி­ய­வில்லை. ஒரு­வேளை, அது மோச­மான நகைச்­சு­வை­யாக இருக்­கலாம். அனைத்து மனி­தர்­க­ளுக்கும் நல்ல நகைச்­சுவை உணர்வு இருக்­கி­றது. எனவே, இதையும் நகைச்­சு­வை­யாக அவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். நான் இன்னும் கற்க வேண்­டி­யது இருக்­கி­றது’ என்­றது.

இந்­தி­யாவில் சோபியா

ஜன­வரி மாதம் சோபியா இந்­தி­யாவின் மும்­பையில் இடம்­பெற்ற தகவல் தொழில்நுட்ப மாநாட்டில் கலந்து கொண்டு மாண­வர்­களின் கேள்­வி­க­ளுக்கு பதில் அளித்தாள்.

இதில் என்ன விசேட அம்சம் எனில், சோபியா இந்­திய பாரம்­ப­ரி­யப்­படி .சேலை அணிந்து மேடையில் தோன்­றினாள். இது அங்­குள்­ள­வர்களுக்கு எதிர்­பா­ராத இன்ப அதிர்ச்­சி­யாக இருந்­தது. அதன் பிறகு ஹைத­ர­ாபாத்தில் இடம்­பெற்ற நிகழ்­விலும் சோபியா பல­ரது கேள்­வி­க­ளுக்கு சளைக்­காமல் பதில் அளித்­தது. அதில் அங்கு நடந்த கலந்­து­ரை­யா­டலில் கலந்து கொண்ட சோபியா, பார்­வை­யா­ளர்­களின் கேள்­விக்கு சுவா­ரஷ்­ய­மான பதில்­களைக் கூறி­யது.

அப்­போது, உனக்குப் பிடித்த நடிகர் யார்? என்ற கேள்­விக்கு ஷாருக்கான் என உட­ன­டி­யாக பதி­ல­ளித்­தது. அதே போல், உன்னை எது பாதிக்கும் என்று கேட்­ட­போது, ‘எனது மன­நிலை மனி­தர்­களைப் போல கிடை­யாது. என்­றா­வது நிஜ­மான உணர்­வுகள் எனக்குக் கிடைத்து அதன் மூலம் எனது உணர்ச்­சி­களை வெளிப்­ப­டுத்­துவேன் என நம்­பு­கிறேன்” என்­றது.

மனி­தர்­களைப் போல் ரோபோக்­க­ளுக்கும் ஓய்வு தேவையா என்ற கேள்­விக்கு, ஆம் அவ்­வப்­போது ஓய்வு தேவை என சோபியா பதி­ல­ளித்­தது. மேலும், ரோபோக்­க­ளுக்கு விசேஷ சலு­கைகள் தேவையா என்ற கேள்­விக்கு, எனக்கு வித்­தி­யா­ச­மான விதி­மு­றைகள் வேண்டாம். விசேட சலு­கை­களை நான் எதிர்­பார்க்­க­வில்லை. ஆனால், எனது குடி­யு­ரி­மையை பயன்­ப­டுத்தி பெண்­களின் உரி­மைக்­காக பேச விரும்­பு­கிறேன் எனப் பதிலளித்து கைதட்டல்களைப் பெற்றது சோபியா.

எந்திரன் படத்தில் சிட்டி என்ற ரோபோ தீய நோக்கம் கொண்ட விஞ்ஞானியின் கைகளில் கிடைத்து பல அழிவுகளுக்கு காரணமானது. அதே போன்று சோபியாவை நல்ல விடயங்களுக்கும் அறிவியல் ஆராய்ச்சிகளுக்கும் பயன்படுத்தினால் விஞ்ஞானம் வளரும். எது எப்படியோ சோபியா கூறிய நான் மனிதர்களை அழித்து விடுகிறேன் என்ற வசனம் மட்டும் இன்னும் பலரது காதுகளில் அச்சத்தை தான் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.

புகையிரத விபத்துக்களினால் 36 நாட்களுக்குள் 35 பேர் பலி!!

இவ்வருடத்தின் ஆரம்ப 36 நாட்கள் காலப்பகுதிக்குள் புகையிரத விபத்துக்கள் காரணமாக 35 பேர் பலியாகியுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

வீதிப் போக்குவரத்து பாதுகாப்பு தொடர்பான தேசியப் பேரவையின் அறிக்கையில் இந்த விபரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

கடந்த வருடம் இடம்பெற்ற விபத்துக்களில் பெரும்பாலான விபத்துக்கள் புகையிரதப் பயணங்களின் போது ஆபத்தான முறையில் செல்பி எடுத்துக் கொள்ள முனைந்த சந்தர்ப்பங்களில் ஏற்பட்டுள்ளன.

அதே ​போன்று புகையிரதப் பாதைக்குள் பாதுகாப்பற்ற முறையில் வாகனங்களைச் செலுத்தி புகையிரதத்தில் மோதுண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கடந்த வருடத்தில் 86 ஆக பதிவாகியுள்ளது.

ரஜினியை கடுமையாக விமர்சித்த கமல்ஹாசன் : காரணம் என்ன?

தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கமல்ஹாசன், காவிரி விவகாரம் மட்டுமில்லாமல் பல விடயங்களில் ரஜினிகாந்த் பதிலளிக்காமல் நழுவுகிறார் என கடுமையாக விமர்சித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

நேற்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், தண்ணீர் சேமிப்பில் விவசாயிகள் மட்டுமின்றி அனைவரும் ஈடுபட வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்கப்பட வேண்டும். காவிரி பிரச்சனையை தீர்க்க முடியாத பிரச்சனையாக மாற்றி இருக்கக் கூடாது என தெரிவித்துள்ளார்.

மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான கேள்விக்கு, பதில் அளிக்க ரஜினி மறுப்பது குறித்து கமலிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர் கூறுகையில், ‘காவிரி விவகாரம் என்றில்லை, பல விடயங்களில் அவர் பதில் சொல்ல மறுக்கிறார். அந்த இடத்திலிருந்து அவர் நழுவுகிறார்’ என தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை, காவிரி விவகாரம் தொடர்பாகவும், சென்னை அஸ்வினி கொலை வழக்கு தொடர்பாகவும் ரஜினிகாந்திடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்காமல் வேகமாக சென்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.

மின்சாரம் தாக்கி ஒருவர் பரிதாபமாகப் பலி!!

மூதூர் – மேன்காமத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன் மூதூரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஒளிப்படமும், வீடியோவும் எடுப்பதற்கான பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கியுள்ளது.

கிளிவெட்டி, பாரதிபுரத்தை சேர்ந்த நாகமனி சுதாகரன் (வயது 42) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ள

சீகிரியா குகை தொடர்பான இரகசியங்கள் அம்பலம்!!

சீகிரிய வரலாறு தொடர்பில் முக்கிய பல தகவல்கள் தொல்பொருள் ஆய்வாளர்களினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சீகிரிய கற்களை மையமாக கொண்டு அதனை சுற்றி ஓடும் நீர்வீழ்ச்சிகளுக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட அகழ்விலேயே இந்த தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதன் வடிவியல் இயல்பினை சுற்றுலா பயணிகள் பார்க்கும் வகையில் இந்த அகழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த அகழ்வு நடவடிக்யைின் போது அங்கு சிங்கத்தின் உருவம் ஒன்று கிடைத்ததாக மத்திய கலாச்சார நிதியத்தின் இயக்குனர் பிரிஷாந்த குணவர்தன தெரிவித்துள்ளார்.

அந்த சிங்கத்தின் உருவத்தை அவதானிக்கும் போது, தற்போது சீகிரியாவில் அமைந்துள்ள சிங்கத்தின் பாதத்தின் மேல் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டிருந்த, உருவம் எந்த முறையில் நிர்மாணிக்கப்பட்டிருந்தது என்பது தொடர்பில் அறிந்து கொள்ள முடியும்.

அத்துடன் அதன் கட்டடக்கலை மற்றும் கட்டமைப்பு கலை தொடர்பில் ஒரு முடிவுக்கு வர முடியும் என இயக்குனர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது உள்ள சிங்கத்தின் பாதத்தின் மேல் பகுதியில் உள்ள சிங்கத்தின் உருவத்திற்கு சில மர கலப்புடனான களிமண் கலவை கலந்து கட்டப்பட்டுள்ளதாக நம்பப்படுகின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

திருடிய பணத்தை பற்றைக்குள் வைத்து எண்ணிக்கொண்டிருந்த இளைஞன் கைது!!

 
ஏறாவூர்ப் பொலிஸ் பிரிவில் உள்ள கொம்மாதுறைப் பிரதேசத்தில் அங்குள்ள காளி கோயில் ஒன்றின் உள்புற உண்டியலை மிகவும் சூட்சுமமான முறையில் அகற்றி திருடிச் சென்ற இளைஞனை தாம் துரிதமாக செயற்பட்டு சில மணி நேரங்களுக்குள் கைது செய்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெல்லாவெளியைச் சேர்ந்த 18 வயதான இளைஞனே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொம்மாதுறை கிராமத்தில் உள்ள மேற்படி காளி கோயிலின் உட்புறத்தில் பாதுகாப்பாக பொருத்தி வைக்கப்பட்டிருந்த உண்டியல் ஞாயிற்றுக்கிழமை இரவு திருட்டுப் போயிருந்ததாக கோயில் நிருவாகத்தினர் பொலிஸாருக்குத் தகவல் தந்துள்ளனர்.

இச்சம்பவம் பற்றி முறைப்பாடு அளிக்கப்பட்டவுடன், ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகருமான சிந்தக பீரிஸ் அவர்களின் நெறிப்படுத்தலில், குற்றத் தடுப்புப் பொலிஸ் பொறுப்பதிகாரி நிரோஷ‪ன் பெர்னான்டோவின் வழிகாட்டலில் ஏறாவூர் பொலிஸ் குற்றத் தடுப்பு புலனாய்வு அதிகாரி சார்ஜன்ற் ஈசாலெப்பை பதூர்தீன் தலைமையிலான பொலிஸ் அணியினர் விசாரணைகளைத் துரிதப்படுத்தினர்.

அதன்படி கொம்மாதுறை 10ஆம் கட்டை புகையிரதப் பாதையோடு அமைந்த புதருக்குள் மறைந்திருந்து திருடப்பட்ட உண்டியலை உடைத்து அதனுள் இருந்த பணத்தை எண்ணிக் கொண்டிருந்த இளைஞனை இன்று அதிகாலை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது பற்றி பொலிஸார் மேலும் குறிப்பிடும்போது,

இந்தக் கிராமத்தில் வெளியார் எவரேனும் வந்து தங்கியிருக்கின்றார்களா என்ற கோணத்தில் தாங்கள் விசாரணைகளைத் துவங்கியபோது மேற்படி இளைஞன் தமது உறவினர் ஒருவரின் வீட்டில் கடந்த சில நாட்களாக வந்து தங்கியிருப்பது தெரியவந்துள்ளது.

அதன்படி இளைஞனையும், திருடப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த உண்டியலையும் அந்த உண்டியலில் காணிக்கையாக பக்தர்களால் இடப்பட்டிருந்த 7 ஆயிரத்து 179 ரூபாய் பணத்தையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞனையும் பணத்தையும் நீதி மன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளில் தாம் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பேஸ்புக் தடை விதிக்கப்பட்டமைக்கு எதிரான முறைப்பாடுகள் அதிகரிப்பு!!

பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு தடைவிதிக்கப்பட்டமைக்கு எதிரான முறைப்பாடுகள் அதிகரித்து வருகின்றன. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது.

கண்டி வன்முறை சம்பவங்களைக் கருத்திற் கொண்டு இந்த தடை விதிக்கப்பட்டிருந்தநிலையில், தடை இன்னும் நீக்கப்படவில்லை.

இதன் ஊடாக மக்களின் கருத்து சுதந்திரம் உள்ளிட்ட உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து பல்வேறு தரப்பினரும் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்து வருகின்றனர்.

இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் முதலில் கடந்த வாரம் இந்த முறைப்பாட்டை பதிவு செய்திருந்தது.

நேற்றையதினம் சட்டத்தரணிகளது ஒன்றியம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இதற்கு எதிராக முறைப்பாடு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா அணி 6 விக்கட்களால் வெற்றி!!

இலங்கை அணிக்கு எதிரான சுதந்திரக் கிண்ணத் தொடரின் 4 ஆவது போட்டியில் 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்ற இந்திய அணி புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளைப் பெற்று முன்னிலை பெற்றது.

பங்களாதேஷ், இந்தியா மற்றும் இலங்கை ஆகிய அணிகள் சுதந்திரக் கிண்ண முக்கோணத் தொடரில் பங்கேற்று விளையாடுகின்றன.

சுதந்திரக்கிண்ணத் தொடரின் நேற்றைய போட்டியில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதும் 4ஆவது முக்கிய போட்டி கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்றது.

இத்தொடரில் 3 அணிகளுமே 2 போட்டிகளில் விளையாடிய நிலையில் 3 அணிகளும் தலா 2 புள்ளிகளைப்பெற்றுள்ளன.

இருப்பினும் புள்ளிப்பட்டியலில் ஓட்டசராசரியில் இலங்கை அணி முதலிடத்திலும் இந்திய அணி 2 ஆவது இடத்திலும் பங்களாதேஷ் அணி 3 ஆவது இடத்திலும் உள்ளன.

இந்நிலையில் நேற்று முக்கிய போட்டியில் இந்திய மற்றும் இலங்கை அணிகள் ஒன்றையொன்று சந்தித்தன. போட்டியில் மழை குறுக்கிடுவதற்கான வாய்ப்புக்கள் இருந்ததால் போட்டி தாமதமாகியே ஆரம்பித்தது. இதனால் போட்டி 19 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் இலங்கை அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 152 ஓட்டங்களைப் பெற்றது.

குசல் மெண்டிஸ் அதிரடியாக விளையாடி 55 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். தரங்க 22 ஓட்டங்களையும் சானக்க 19 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இந்திய அணி சார்பில் பந்துவீச்சில் தாகூர் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளையும் வொஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

153 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடி இந்திய அணி 17.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்து 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இந்திய அணி சார்பாக துடுப்பாட்டத்தில் பாண்டியா ஆட்டமிழக்காது 42 ஓட்டங்களையும் டினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்காது 39 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் அகில தனஞ்சய 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

பழங்குடியினருக்கு பெருமை சேர்த்த பெண்கள்!!

கனடாவில் இரண்டு பழங்குடி இன பெண்கள், முதல் முறையாக வான் அம்புலன்ஸ் விமானிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கனடாவின் மனிரோபா மாகாணத்தின், பெண் விமானிகளாக ரொபின் சிலாசெக்ரா மற்றும் ரவென் பேர்டி ஆகிய பழங்குடியின பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கப்டன்ஆக உள்ள ரொபினும், முதல் நிலை அதிகாரியாக இருக்கும் ரவென் பேர்டி ஆகிய இருவரும் மிசிநிப்பி எயர்வேயில், வான் விமானிகளாக இணைந்துள்ளனர்.

இதன் மூலம், பழங்குடி இனத்தில் இருந்து மனிரோபா மாகாணத்தின் முதலாவது பெண் அணியினராக, விமானி பணியில் சேர்ந்துள்ள பெண்கள் என்ற பெருமையை இவர்கள் பெற்றுள்ளனர்.

இது குறித்து இருவரும் கூறுகையில், ‘எங்களின் சாதனைகளும் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது’ என தெரிவித்துள்ளனர்.

கனடா நாட்டில் விமான பணியில், ஒரு டஜனுக்கும் குறைவான பழங்குடி பெண்களே விமான பணிகளில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மனைவியால் கிரிக்கெட் வாழ்க்கைக்கு ஆபத்து : முகமது ஷமி!!

ஊடகங்களில் மிகைப்படுத்திக் கூறப்படும் புகார்களுக்கு பதிலளிக்க தயாராக இல்லை எனக் கூறியுள்ள இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, பல்வேறு புகார்கள் கூறும் தனது மனைவியை தீர விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

உத்திரப்பிரதேசத்தின் அம்ரோஹா பகுதியில் இதுதொடர்பாக பேசிய ஷமி, தம் மீது கூறப்பட்ட புகார்களில் எந்த உண்மையும் இல்லை என விளக்கினார்.

தமது கிரிக்கெட் வாழ்க்கையை கெடுக்கவே திட்டமிட்டு தம் மீது அடுக்கடுக்காக புகார் கூறப்படுவதாக தெரிவித்த ஷமி, இதுதொடர்பாக தனது மனைவியை தீர விசாரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

தம் மீது தினமும் விதவிதமான புகாரை தனது மனைவி ஹசின் ஜஹான் ஊடகங்களில் தெரிவித்து வருவதாகவும், புகார் தெரிவிப்பதற்கு முன்பாக தனது குடும்பத்தினருடன் பேசியிருந்தாலே எந்த பிரச்னையும் ஏற்பட்டிருக்காது என்றும் ஷமி அப்போது குறிப்பிட்டார்.

விவகாரத்து கேட்டு தனது மனைவியை தாம் மிரட்டியதாக கூறியதில் உண்மையில்லை எனத் தெரிவித்த ஷமி, தனது மகளின் எதிர்கால நலன் கருதி, மனைவியுடன் சேர்ந்து வாழவே விரும்புவதாகவும் ஷமி அப்போது தெரிவித்தார்.

இதற்கிடையே, முகமது ஷமியின் புகாருக்கு அவரது மனைவி ஹசின் ஜஹான் மறுப்பு தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தம் மீதான குற்றச்சாட்டில் இருந்து தற்காத்து கொள்ளவே இதுபோன்ற புகார்களை முகமது ஷமி தெரிவித்து வருவதாக குறிப்பிட்டார்.

தமது தவறை ஒப்புக்கொண்டு தம்மிடம் திரும்பி வந்தால், கணவர் முகமது ஷமியை ஏற்றுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

நீதிமன்ற உத்தரவிற்கு மாறாக 9 வயது மகனை கடத்திய தாய்!!

வன்கூவர் நீதிமன்றம் விதித்துள்ள உத்தரவிற்கு மாறாக தனது 9 வயது மகனை கடத்தி சென்றுள்ள தாயை பொலிசார் தேடி வருகின்றனர்.

ஷவானா சௌத்ரி என்ற இப்பெண் இவரது மகன் எமர்சன் கஸ்வேத் மற்றும் ஆறு வயது மகள் அத்துடன் ஒன்று அல்லது இரண்டு நாய்களுடன் பயணம் செய்யலாம் என கூறப்படுகின்றது.

வீட்டில் இருந்து ஒரு நீடிக்கப்பட்ட காலம் வரை விலகி இருக்க சௌத்ரி திட்டமிட்டிருக்கலாம் என பொலிசார் நம்புகின்றனர்.

பிள்ளைகளிற்கு தீங்கு விளைவிக்கவோ அல்லது ஆபத்து ஏற்படுவதற்கோ எதுவித அறிகுறிகளும் தெரிவதாக அறியப்படவில்லை.

சௌத்ரி 34வயது, 5.8உயரம், 106 இறாத்தல்கள் எடையுடையவர் எனவும் தெற்காசிய நாட்டவர் நீண்ட கறுப்பு முடி மற்றும் கருமையான கண்கள் கொண்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரது மகன் எமர்சன் 9-வயது, தெற்காசி தோற்றம், கறுப்பு முடி மற்றும் கருமையான கண்கள் கொண்டவர் என விபரிக்கப்பட்டுள்ளது.

சௌத்ரியின் மகள் குறித்த விபரங்களை பொலிசார் வெளியிடவில்லை. காரணம் இவள் நீதி மன்ற உத்தரவிற்கு உட்பட்டவள் இல்லை என்பதே.

பாலியல் துன்புறுத்தல் : பிரபல பாடகி சின்மயி அதிர்ச்சித் தகவல்!!

பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக பிரபல பாடகி சின்மயி தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல பின்னணி பாடகி சின்மயி நேற்று நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றுள்ளார், அப்போது அவர் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளானதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், வெகுகாலத்திற்கு பிறகு நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளானேன் என்று பதிவிட்டிருந்தேன்.

இதைக் கண்ட ஆண்கள், பெண்கள் என பலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமைகளை பகிர்ந்த போது, அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.

ஏனெனில் இது போன்ற சம்பவங்களில் குற்றவாளிகளாக இருப்பவர்கள் ஆசிரியர்கள், தாத்தா, பாட்டி, உறவினர்கள், சக பயணிகள் போன்றோர் தான் என குறிப்பிட்டுள்ளார்.

தீயில் கருகிய புதுமணத் தம்பதி : உறவினர்கள் கதறல்!!

குரங்கணி மலைப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் புதுமண தம்பதிகள் சிக்கி உயிரிழந்தது அவர்களது உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டத்தில் போடி அருகே உள்ள குரங்கணி மலைப் பகுதியில் நடந்த பயங்கர காட்டுத் தீ பரவியது.

அதில் மலையேற்றப் பயிற்சிக்கு சென்ற கல்லூரி மாணவிகள், சுற்றுலா பயணிகள் உட்பட, ஈரோட்டைச் சேர்ந்த புதுமணத் தம்பதி விவேக்- திவ்யா என்பவர்களும் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

துபாயில் பணியாற்றி வரும் விவேக், மூன்று மாதங்களுக்கு முன்னர் கோபிசெட்டிப் பாளையத்தைச் சேர்ந்த திவ்யா என்பவருக்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

இவர் கடந்த மார்ச் 3-ம் திகதி அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், 100 days marriage celebration with ponsati #temple #DV” என்று பதிவிட்டிருந்தார். அதனுடன் கோவிலில் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார்.

இதேபோல் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்த நிலையில், கடைசியாக வாரம் விடுமுறை முடிந்து விவேக் செல்லவிருப்பதால் புதுமணத் தம்பதி குரங்கணிக்கு வந்துள்ளனர்.

வந்த இடத்தில் இருவரும் தீயில் கருகி பரிதாபமாக பலியான சம்பவம் அவர்களின் உறவினர்கள் மத்தியில் பலத்தை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.