அமெரிக்காவுக்கு சொந்தமான உலகின் மிகப்பெரிய விமான கப்பல் 1985ஆம் ஆண்டுக்கு பின்னர் முதல் முறையாக இலங்கைக்கு வருகைத்தந்துள்ளது.
USS நிமிட்ஸ் என்ற கப்பலுடன் அமெரிக்க கப்பல் தாக்குதல் படை ஒன்றும் கொழும்பு துறைமுகத்திற்கு வருகைத்தந்துள்ளது.
23 தட்டுகளை கொண்டுள்ள இந்த கப்பலின் சிறந்த புகைப்படங்கள் சில வெளியாகியுள்ளது. 23 தட்டுக்களை கொண்ட இந்த கப்பல் கிட்டத்தட்ட 333 மீற்றர் நீளத்தை கொண்டுள்ளது. 5000 பேர் அங்கு தங்கியிருப்பதற்கான வசதிகள் உள்ளதுடன், தினமும் மூன்று வேளைகளும் 18000 பேருக்கான உணவு தயாரிக்கப்படுகிறது.
நாள் ஒன்று 1.5 மில்லியன் நீர் இந்த கப்பலினால் தயாரிக்கப்படுகின்றது. கப்பலில் இரு சலுன்கள் உள்ளதாகவும், வாரத்திற்கு 1500 பேருக்கு முடி வெட்டக்கூடிய வசதிகள் உள்ளது.
USS நிமிட்ஸ் அமெரிக்காவின் மிகவும் பழைமை வாய்ந்த கப்பலாகும். கப்பலின் ஒவ்வொரு கடத்தியும் 1,092 அடி நீளமும், 252 அடி அகலமும் கொண்டுள்ளது. நீர் மட்டத்தில் 134 அடி உயரத்தில் விமான தளம் உள்ளது. கப்பலின் ஒவ்வொரு கடத்தியிலும் இரண்டு அணு உலைகள் உள்ளன, அவை நான்கு நீராவி விசையாழிகளை 34 மைல் வேகத்தில் கொண்டு செல்லும்.
கப்பலில் உண்மையான தாக்குதல் போர் விமானங்கள் வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இரண்டு முக்கிய தற்காப்பு ஆயுதங்கள் உள்ளன. ஒன்று நேட்டோ கடற்படை ஏவுகணையாகும். மற்றையது 20 மில்லி மீற்றர் Phalanx ஆயுதம் கட்டமைப்பாகும்.
கப்பலில் Carrier Strike என அழைக்கப்படும் பகுதி பயணிகள் பயணிக்கும் பகுதியாகும். ஒரு Carrier Strike பகுதியில் குறைந் தபட்சம் ஒரு போர் வீரர், ஆறு முதல் பத்து டிராக்டர்கள் மற்றும் /சிறிய ரக விமானம் கொண்டுள்ளது.
உலகிலுள்ள பிரமாண்டமான கப்பல்களில் ஒன்றான USS நிமிட்ஸ் இலங்கை வந்துள்ளமையால், கோடிக்கணக்கான வருமானம் ஈட்டப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
USS நிமிட்ஸ் நேற்றிரவு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்நிலையில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மற்றும் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்த்தன உள்ளிட்ட பல அமைச்சர்கள் இன்று கப்பலை நேரில் சென்று பார்வையிட்டனர்.



















































