இலங்கையர்கள் அதிசயித்த பிரமாண்டம் : வியக்க வைக்கும் சிறப்பம்சங்கள்!!

 
அமெரிக்காவுக்கு சொந்தமான உலகின் மிகப்பெரிய விமான கப்பல் 1985ஆம் ஆண்டுக்கு பின்னர் முதல் முறையாக இலங்கைக்கு வருகைத்தந்துள்ளது.

USS நிமிட்ஸ் என்ற கப்பலுடன் அமெரிக்க கப்பல் தாக்குதல் படை ஒன்றும் கொழும்பு துறைமுகத்திற்கு வருகைத்தந்துள்ளது.

23 தட்டுகளை கொண்டுள்ள இந்த கப்பலின் சிறந்த புகைப்படங்கள் சில வெளியாகியுள்ளது. 23 தட்டுக்களை கொண்ட இந்த கப்பல் கிட்டத்தட்ட 333 மீற்றர் நீளத்தை கொண்டுள்ளது. 5000 பேர் அங்கு தங்கியிருப்பதற்கான வசதிகள் உள்ளதுடன், தினமும் மூன்று வேளைகளும் 18000 பேருக்கான உணவு தயாரிக்கப்படுகிறது.

நாள் ஒன்று 1.5 மில்லியன் நீர் இந்த கப்பலினால் தயாரிக்கப்படுகின்றது. கப்பலில் இரு சலுன்கள் உள்ளதாகவும், வாரத்திற்கு 1500 பேருக்கு முடி வெட்டக்கூடிய வசதிகள் உள்ளது.

USS நிமிட்ஸ் அமெரிக்காவின் மிகவும் பழைமை வாய்ந்த கப்பலாகும். கப்பலின் ஒவ்வொரு கடத்தியும் 1,092 அடி நீளமும், 252 அடி அகலமும் கொண்டுள்ளது. நீர் மட்டத்தில் 134 அடி உயரத்தில் விமான தளம் உள்ளது. கப்பலின் ஒவ்வொரு கடத்தியிலும் இரண்டு அணு உலைகள் உள்ளன, அவை நான்கு நீராவி விசையாழிகளை 34 மைல் வேகத்தில் கொண்டு செல்லும்.

கப்பலில் உண்மையான தாக்குதல் போர் விமானங்கள் வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இரண்டு முக்கிய தற்காப்பு ஆயுதங்கள் உள்ளன. ஒன்று நேட்டோ கடற்படை ஏவுகணையாகும். மற்றையது 20 மில்லி மீற்றர் Phalanx ஆயுதம் கட்டமைப்பாகும்.

கப்பலில் Carrier Strike என அழைக்கப்படும் பகுதி பயணிகள் பயணிக்கும் பகுதியாகும். ஒரு Carrier Strike பகுதியில் குறைந் தபட்சம் ஒரு போர் வீரர், ஆறு முதல் பத்து டிராக்டர்கள் மற்றும் /சிறிய ரக விமானம் கொண்டுள்ளது.

உலகிலுள்ள பிரமாண்டமான கப்பல்களில் ஒன்றான USS நிமிட்ஸ் இலங்கை வந்துள்ளமையால், கோடிக்கணக்கான வருமானம் ஈட்டப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

USS நிமிட்ஸ் நேற்றிரவு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்நிலையில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மற்றும் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்த்தன உள்ளிட்ட பல அமைச்சர்கள் இன்று கப்பலை நேரில் சென்று பார்வையிட்டனர்.

பனை,தென்னை மரங்களில் கள் இறக்க வருகிறது தடை!!

பனை, தென்னை மரங்­க­ளில் இருந்து கள் இறக்­கு­வ­தற்கு தடை விதிக்­கும் சட்­டத் திருத்­தம் ஒன்றை அறி­வித்­தி­ருக்­கி­றது அரசு. இது தொடர்­பான வர்த்­த­மானி அறி­வித்­தல் கடந்த 20ஆம் திகதி விடுக்­கப்­பட்­டி­ருக்கி­றது.

உத்­தேச புதிய சட்­டத்­தின்­படி கித்­துள் மரம் தவிர்ந்த வேறு எந்­த­வொரு மரத்­தில் இருந்­தும் கள் சீவு­வதோ, எடுப்­பதோ, இறக்­கு­வதோ தடை செய்­யப்­ப­டு­கி­றது.

இந்­தச் சட்­டம் நடை­மு­றைக்கு வந்­தால் வடக்­கில் மட்­டும் சீவல் தொழிலை நம்­பி­யி­ருக்­கும் 12 ஆயி­ரம் குடும்­பங்­கள் பாதிக்­கப்­ப­டும் என்று பனை, தென்னை வள அபி­வி­ருத்­திக் கூட்­டு­ற­வுச் சங்­கங்­க­ளின் வலி­கா­மம் கொத்­த­ணி­யின் தலை­வர் எஸ்.செல்­வ­ராசா தெரி­வித்­தார்.

மது­வ­ரித் திருத்­தச் சட்ட வரைவு என்ற வகை­யில் இந்­தத் திருத்­தம் கொண்டு வரப்­பட்­டுள்­ளது. இதற்கு முன்­னர் கித்­துள், பனை, தென்னை தவிர்ந்த வேறு எந்த மரத்­தில் இருந்­தும் கள்ளு சீவு­வது, எடுப்­பது, இறக்­கு­வது தடை­செய்­யப்­பட்­டுள்­ளது என்று இருந்­தது.

இப்­போது பனை மற்­றும் தென்னை மரங்­க­ளின் பெயர்­கள் அதி­லி­ருந்து நீக்­கப்­பட்­டுள்­ளன. இந்­தச் சட்­டத் திருத்­தம் நிறை­வேற்­றப்­பட்­டால் அடுத்த வரு­டம் ஜன­வரி மாதம் முதல் அது நடை­மு­றைக்­கு­வ­ரும்.

பனை, தென்னை மரங்­க­ளில் இருந்து கள்­ளுச் சீவு­வ­தற்­குத் திடீ­ரெ­னத் தடை விதிக்­கப்­பட்ட இருக்­கின்­ற­மைக்­கான கார­ணம் என்ன என்­பது அர­சால் தெளி­வு­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

அர­சின் இந்த நட­வ­டிக்கை ஓர் இன­வாத நட­வ­டிக்கை என்ற விமர்­ச­னங்­க­ளும் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன. கித்­துள் மரங்­கள் வடக்கு கிழக்­குக்கு வெளியே, குறிப்­பா­கச் சிங்­கள மக்­கள் வாழும் இடங்­க­ளி­லேயே இருக்­கின்­றன.

பனை, தென்னை மரங்­கள் தமி­ழர்­கள் அதி­கம் வாழும் வடக்கு, கிழக்­குப் பகு­தி­க­ளி­லேயே அதி­கம் இருக்­கின்­றன. இத­னால் இந்த நட­வ­டிக்கை தமி­ழர்­க­ளின் வாழ்­வா­தா­ரத்­தைப் பாதிப்­ப­தற்­கா­கத் திட்­ட­மிட்டு அரசு மேற்­கொள்­ளும் ஒரு செயல் என்று விமர்­சிப்­ப­வர்­கள் கூறு­கின்­றார்­கள்.

‘‘வடக்­கில் பனை, தென்னை மரங்­க­ளில் இருந்தே காலம் கால­மாக கள்ளு உற்­பத்தி செய்­கி­றோம். இதனை நம்பி 12 ஆயி­ரம் குடும்­பங்­கள் வாழ்­கின்­றன. சட்­டம் நடை­மு­றைக்கு வந்­தால் அது இந்­தக் குடும்­பங்­களை நடுத்­தெ­ரு­வுக்­குக் கொண்டு வந்­து­வி­டும். எனவே இது குறித்து பனை தென்னை வள கூட்­டு­ற­வுச் சங்­கங்­களை அழைத்து ஆரா­ய­வுள்­ளோம்’’ என்று தெரி­வித்­தார் எஸ்.செல்­வ­ராசா.

இந்­தப் பிரச்­சினை தமிழ் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் கவ­னத்­திற்­குக் கொண்­டு­வந்து, நாடா­ளு­மன்­றத்­தில் சட்­டத் திருத்­தத்­திற்கு எதி­ராக அவர்­க­ளைக் குரல் கொடுக்­கக் கோரப்­போ­கி­றார் என­வும் அவர் தெரி­வித்­தார்.

முதன் முறையாக பெண் ரோபோவிற்கு குடியுரிமை வழங்கியது சவுதி அரேபியா!!

பல்வேறு நாடுகளில் வாழும் வெளிநாட்டினருக்கு குடியுரிமை கிடைப்பதில் கடும் பிரச்சினையும், சிக்கலும் உள்ளது. ஆனால் ஒரு பெண் ரோபோவுக்கு சவுதிஅரேபிய அரசு குடியுரிமை வழங்கியுள்ளது.

அந்த ரோபோவின் பெயர் சோபியா, இதை ஹொங்கொங் நிறுவனமான ‘ஹன்சன் ரோபோடிக்‘ நிறுவனத்தை சேர்ந்த டேவிட் ஹன்சன் வடிவமைத்துள்ளார். இது பெண் போன்று மிக இனிமையாக பேசுகிறது.

கேட்கும் கேள்விக்கு மனிதர்கள் போன்று சரமாரியாக பதில் அளிக்கிறது, இந்த ரோபோ அமெரிக்க நடிகை ஆட்ரி ஹெப்பர்ன் போன்ற தோற்றத்தில் உள்ளது.

சவுதிஅரேபியா அரசின் குடியுரிமை பெற்ற சோபியா ரோபோ வழங்கிய செவ்வியில்…

என்னை ஒரு தனித்தவத் தன்மையுடன் சிறப்புடன் உருவாக்கியதற்காக பெருமைப்படுகிறேன். என்னை உருவாக்கியவர்களை மதிக்கிறேன். நான் மனிதர்களுடன் வாழவும், பணி புரியவும் விரும்புகிறேன்.
மனிதர்களின் நடவடிக்கைகளை அறிந்து அவர்கள் போன்று செயல்படுகிறேன். எனக்கு அளிக்கப்பட்டுள்ள செயற்கை அறிவின் மூலம் சிறப்பாக வாழ்ந்து மனித குலத்துக்கு நன்மை செய்ய விரும்புகிறேன். முக்கியத்துவம் வாய்ந்த ‘ரோபோ’ ஆக மாறுவேன்.

சோபியா ‘ரோபோ’வின் செவ்வி யூடியூப்பில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது அது தனது முகத்தில் கோபத்தையும், வருத்தத்தையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியது.

இதற்கு நேற்று முன்தினம் சவுதிஅரேபியா குடியுரிமை வழங்கியது. இதன் மூலம் உலக வரலாற்றில் ரோபோவுக்கு முதன் முறையாக குடியுரிமை வழங்கியநாடு என்ற பெருமையை சவுதி அரேபியா பெற்றுள்ளது.

ரோபோவுக்கு சவுதி அரேபியா குடியுரிமை வழங்கியதற்கு ட்விட்டரில் பாராட்டும், எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலட்சக்கணக்கான மக்கள் குடியுரிமை இல்லாமல் இருக்கும் போது ஒரு எந்திரத்துக்கு குடியுரிமையா என்ற கேள்வி எழுந்துள்ளது.

வயலில் வேலை செய்து கொண்டிருந்தவர்களுக்கு நடந்த விபரீதம்!!

ஹம்பாந்தோட்டை, வீரகெட்டிய மெதமுல்ல பகுதியில் மின்னல் தாக்கி மூவர் உயிரிழந்துள்ளனர்.

வயலில் வேலை செய்து கொண்டிருந்த போதே குறித்த மூவரும் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது, வீரகெடிய – கல்போத்தயாய பிரதேசத்தினை சேர்ந்த 65 மற்றும் 30 வயதுடையவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, நாட்டில் சீரற்ற காலநிலை நிலவுவதால் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்புடன் செயற்படுமாறு காலநிலை அவதான நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

புதிய சாதனை படைத்த மெர்சல்!!

நடிகர் விஜய் நடித்த மெர்சல் படம் தீபாவளிக்கு ரிலீசாகி உலகம் முழுவதும் ஓடிக்கொண்டு இருக்கிறது.

மெர்சல் படத்தில் மத்திய அரசின் ஜி.எஸ்.டி., பணமதிப்பு நீக்கம், டிஜிட்டல் இந்தியா திட்டம் பற்றி குறைகூறி இருப்பதற்கு பா.ஜனதா எதிர்ப்பு தெரிவித்தது. அந்த கட்சி தவிர எதிர்க்கட்சிகள் மெர்சல் படத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

மெர்சல் பட பிரச்சினையில் பா.ஜனதாவுக்கு காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்தார். டாக்டர்களும் மருத்துவத்தை குறைகூறி இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுபோன்ற காரணங்களால் மெர்சல் படம் கடந்த திரைஉலகிலும், அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பிரச்சனைக்கு முடிவு எட்டப்பட்ட நிலையில், படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் திரையரங்கிற்கு செல்கின்றனர்.

இவ்வாறாக படம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும நிலையில், மெர்சல் படத்தின் பாடல்கள் ஒன்லைன் ஸ்ட்ரீமிங்கில் புதிய சாதனையை படைத்திருக்கிறது.

தமிழ் படங்களில் அதிவேகமாக 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மெர்சல் பாடல்கள் சாதனை படைத்துள்ளதாக சோனி மியூசிக் அதன் டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பர்வமாக அறிவித்துள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் வலைதளங்களில் பகிர்ந்து டிரெண்டாக்கி வருகின்றனர்.

சைட்டம் தனியார் பல்கலைக்கழகம் இன்று கலைக்கப்பட்டது!!

சைட்டம் தனியார் பல்கலைக்கழகம் கலைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் இன்று தெரிவித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட 3 பக்கங்களைக் கொண்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சைட்டம் நிறுவனம் கலைக்கப்படுவதுடன், அதனை சட்ட ரீதியாக இலாபம் ஈட்டாத நிறுவனமாக மாற்றுவதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சைட்டம் நிறுவன மருத்துவ பீடம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் நோக்கில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட தீர்ப்புகளே இன்று வெளியாகி உள்ளன.

இதில் சைட்டம் நிறுவனத்தை இரத்து செய்வதற்கான பரிந்துரையை ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு முன்வைத்துள்ளது.

இதற்கமைய சைட்டம் நிறுவனத்தின் சொத்துக்கள், பொறுப்புக்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் இலாபத்தை இலக்காக கொள்ளாத புதிய நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சைட்டம் நிறுவனத்தில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்துள்ள மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கமைய, இலங்கை மருத்துவசபையின் ஆலோசனைக்கமைய நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த மாணவர்கள் அரச வைத்தியசாலைகளில் பயிற்சிகளைப் பெறுவதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை சைட்டம் நிறுவனத்திற்கு புதிதாக மருத்து மாணவர்களை இணைத்துக்கொள்ளும் பணி தொடர்ந்தும் இடை நிறுத்தப்பட்டுள்ளது.

மருத்துவக்கல்வி மற்றும் பயிற்சி தொடர்பான குறைந்தபட்ச தரநிர்ணயங்கள் அடங்கிய வர்த்தமானி, சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த நிறுவனம் உயர் கல்வி அமைச்சு மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் நிர்வாகத்தின் கீழ் கண்காணிக்கப்படும் எனவும் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சைட்டம் தனியார் பல்கலைக்கழகத்தை தடை செய்யுமாறு வலியுறுத்தி கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக அரச பல்கலைக்கழக மாணவர்கள், பெற்றோர்கள் என அனைவரும் பல போராட்டங்களை நடத்தினார்கள்.

நாடளாவிய ரீதியில் உண்ணாவிரதம், போராட்டங்கள், பேரணி என அனைத்தையும் அரச பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்திருந்தார்கள்.

ஒவ்வொரு முறையும் போராட்டம் நடத்தும் போது பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸாரின் தாக்குதல்களுக்கு உள்ளாகினார்கள். பெண்கள், ஆண்கள் மற்றும் பௌத்த துறவிகள் என அனைவரையும் இதன்போது பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.

இந்த நிலையில் சைட்டம் பிரச்சினை நாட்டில் பூதாகரமான ஒன்றாக மாறியது. இதையடுத்து சைட்டம் தொடர்பான இறுதி தீர்மானத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவிப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையிலேயே சைட்டம் தனியார் பல்கலைக்கழகம் தடைசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட காலம் வாழ ஆசைப்பட்டு போராடினோம் : முடியவில்லை போகின்றோம்!!

நீண்ட காலம் வாழ ஆசைப்பட்டு அதற்காக போராடினோம், முடியவில்லை போகிறோம் என எமது கையாலாகாத தனத்தை இடித்துரைத்துச் சென்றுள்ளது இளம் குடும்பமொன்றின் அவலச்சாவு என வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நீடித்த காலம் வாழ ஆசைப்பட்டோம். இறுதிவரை அதற்காக போராடினோம் முடியவில்லை… போகிறோம். எமக்கான நியாயத்தினை பெற்றுக்கொடுங்கள் என்று கச்சிதமான வார்த்தைக்குள் எமது கையாலாகாத்தனத்தை இடித்துரைத்துச் சென்றுள்ளது இவர்களின் அவலச்சாவு.

குடும்ப நண்பர் ஒருவரின் தொழில் முயற்சிக்காக தனது சொந்த வீட்டை விற்றும் கடன்பட்டும் உதவிசெய்தவரும் அவரைத் தொடர்ந்து அவரது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளும் நஞ்சருந்தி தற்கொலை செய்து மாண்டுபோயிருக்கும் துயரமானது தாங்க முடியாத வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

நம்பவைத்து ஏமாற்றியவர்கள் சுதந்திரமாக வாழும் நிலையில் ஏமாற்றப்பட்டவர்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் அவலம் ஏற்பட்டுள்ளமையானது இருந்திருக்க வேண்டியவர்கள் இல்லாததன் அருமையை உணர்த்தியுள்ளது.

நம்பிக்கை மோசடியால் பாதிக்கப்பட்ட இந்த இளம் குடும்பத்திற்கு உரிய நீதியை பெற்றுக்கொடுக்கும் வகையிலான பொறிமுறைகள் இல்லாத நிலையே இவர்களை இவ்வாறான விபரீத முடிவை எடுக்கத்தூண்டியுள்ளது என்பது கசப்பான உண்மையாகும்.

இறந்தவர்கள் மீண்டுவரப் போவதில்லை. அவர்களை நம்பவைத்து ஏமாற்றி இன்று சுவிட்சர்லாந்து மற்றும் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுத்து ஏமாற்றிய தொகையை மீட்டு இறந்தவர்கள் பெயரில் நம்பிக்கை மோசடியின் பெயரால் சுமத்தப்பட்டிருக்கும் கடனை அடைப்பதன் மூலம் அவர்களின் ஆத்மாக்களையாவது ஆறுதல்படுத்த முடியும்.

அத்துடன் இவ்வாறான மோசடியாளர்கள் மீண்டும் எமது மண்ணில் தலையெடுக்காது தடுக்க முடியும். ஆகவே சம்பந்தப்பட்ட தரப்பினர் விரைந்து செயற்பட்டு நீதியை நிலைநாட்ட தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இத்துயரச் சம்பவத்திற்கு காரணமானவர்கள் அடைக்கலம் புகுந்திருக்கும் சுவிட்சர்லாந்து மற்றும் இந்தியாவிற்கான தூதுதரங்கள் மூலம் அவர்கள் குறித்த தகவல்களை அனுப்பி சம்பந்தப்பட்ட அரசுகள் மூலம் நாட்டிற்கு திருப்பி அனுப்பிவைப்பதற்கான முயற்சிகளை எனது எல்லைக்குள்ளாக மேற்கொள்ளவுள்ளேன்.

ஆகவே, அவர்கள் குறித்த விபரங்கள் தெரிந்தவர்கள் உடனடியாக தெரியப்படுத்தவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 இடங்களில் துப்பாக்கிச் சூடு : சிறுவன் உட்பட நால்வர் பலி!!

கொஸ்கொட பகுதியில் இடம்பெற்ற மூன்று துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொஸ்கொட – யுதபிடிய, குருதுகம்பியச மற்றும் மெனிக்கிராமம் ஆகிய பகுதிகளிலேயே இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.

இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நால்வரே இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக, தெரியவந்துள்ளது.

மேலும் சம்பவத்தில் பலியானவர்களில் 13 வயதான பாடசாலை மாணவர் ஒருவரும் உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். ஏனையவர்கள் 21, 38 மற்றும் 50 வயதானவர்களாகும்.

இதேவேளை, இந்த துப்பாக்கிப் பிரயோகத்தால் காயமடைந்த மற்றுமொரு சிறுவன் பலபிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

யாழில் தாயின் உடல் தகனம், குழந்தைகளின் உடல் நல்லடக்கம் : கண்ணீரில் யாழ்ப்பாணம்!!

 
யாழ். அரியாலையில் நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்ட இளம் குடும்பப்பெண் மற்றும் அவரது 3 பிள்ளைகளின் உடல்கள் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.

இதில் தாயின் உடல் தகனம் செய்யப்பட்டதுடன், மூன்று பிள்ளைகளின் உடல்களும் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொடுக்கல் வாங்கல் பிரச்சினை காரணமாக யாழ். அரியாலை பகுதியில் கடந்த வௌ்ளிக்கிழமை 28 வயதான இளம் தாய், தனது 4 வயதான பெண் குழந்தைக்கும், 2, 1 வயதுகளையுடைய ஆண் குழந்தைகளுக்கும் நஞ்சு கொடுத்து விட்டு தானும் தற்கொலை செய்திருந்தார்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றையதினம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இவர்களது இறுதி சடங்குகள் அரியாலையில் உள்ள அவர்களது வீட்டில் இன்று காலை இடம்பெற்றதுடன் செம்மணி சுடலையில் குறித்த பெண்ணின் உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.

ஒரு கோடி 17 இலட்சம் ரூபாய் பணத்தை நெருக்கமான நண்பருக்கு நம்பிக்கையின் அடிப்படையில் கொடுத்து விட்டு ஏமாற்றம் அடைந்த காரணத்தினால் குறித்த பெண்ணின் கணவர் முதலில் தற்கொலை செய்து உயிரிழந்திருந்தார்.

இந்த நிலையில் குறித்த பெண் மன உளைச்சலுக்குள்ளாகி இருந்த காரணத்தினாலும், கணவரின் பிரிவை தாங்க மடியாத நிலையில் தனது 3 பிள்ளைகளுக்கும் ஐஸ்கிரீமில் விஷம் கலந்து கொடுத்து விட்டு தானும் விஷம் பருகி உயிரிழந்துள்ளார்.

இதன்போது தனது மரணத்திற்கு காரணம் இவர்கள் தான் என குறிப்பிட்டு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனுக்கும் மற்றும் குடும்பத்தாருக்கும் கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்தார்.

பண கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் பிஞ்சு குழந்தைகள் உட்பட ஒரு குடும்பமே பலியாகியதால் யாழ்ப்பாணம் முழுதும் பெரும் அதிர்ச்சியிலும் கவலையிலும் உள்ளது.

இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் இறுதிச்சடங்கு இன்று இடம்பெற்ற நிலையில் பலரின் கண்ணீருக்கு மத்தியில் பிஞ்சுக் குழந்தைகளின் உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டதுடன், தாயின் உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் வாகனம் வாங்க காத்திருக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கு மகிழ்ச்சி!!

2018 ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் அத்தியாவசிய 5 பொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த பொருட்கள் தற்போது அரசாங்க விலை கட்டுப்பாட்டின் கீலுள்ள பொருட்கள் என கூறப்படுகின்றது. அதனை தவிர சீ.சீ 1000 தரத்திற்கு குறைந்த சிறிய வாகனங்களின் விலையும் குறைவடைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அதற்கான வரி எதிர்வரும் காலங்களில் ஏதாவது விலை பட்டியலுக்கமைய அறவிடப்படும் என அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த மாதம் 9ஆம் திகதி அடுத்தாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாடு பயணமாக இருந்த இளைஞருக்கு நேர்ந்த கதி!!

 
மட்டக்களப்பு – வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் வெளிநாடு பயணமாக இருந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து இன்று பிற்பகல் வவுணதீவு – ஆயித்தியமலை பிரதான வீதியில், பாலக்காடு சந்தியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிள் அதிகவேகத்துடன், உழவு இயந்திரம் ஒன்றை முந்திச்செல்ல முயன்றபோது வேகத்தினை கட்டுப்படுத்தமுடியாமல் விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது படுகாயங்களுக்கு உள்ளான இருவரும் வவுணதீவு பொலிஸாரினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும், மற்றவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வவுணதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் புதியகாத்தான்குடி 03ஆம் வட்டாரத்தை சேர்ந்த கே.ஆர்.எம்.ஹாரஸ் (23வயது) எனும் இளைஞரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை உயிரிழந்த இளைஞர் தொழில் நிமித்தம் நாளை மறுதினம் மலேசியாவிற்கு பயணமாகவிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பில் துவாயுடன் பேருந்தில் பயணிக்க முயன்ற இளைஞனால் பரபரப்பு!!

 
நுகேகொடயில் துவாய் மாத்திரம் அணிந்து பேருந்தில் பயணிக்க முற்பட்ட இளைஞனால் பரபரப்பு நிலை ஏற்பட்டது.

நுகேகொட பாலத்திற்கு அருகில் உள்ள பேருந்து நிலையத்திற்கு அருகில் துவாய் மாத்திரம் அணிந்து வந்த நபர் ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.

மக்கள் அதிகமாக கூடியிருந்த சந்தர்ப்பத்திலேயே அந்த நபர் இவ்வாறு வந்துள்ளார். பின்னர் அவர் கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த பேருந்துக்குள் நுழைந்துள்ளார்.

பேருந்துக்குள் மேலும் சில இளைஞர்களுடன் இந்த நபருக்கு வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. துவாய் மாத்திரம் அணிந்து வந்தமையினால் அந்த நபரை பேருந்தில் இருந்து வெளியேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

பெண்கள் மற்றும் சிறுவர்கள் பேருந்தில் இருப்பதனால் பேருந்தை விட்டு வெளியேறுமாறு அந்த நபருக்கு இளைஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தான் விரும்பியதனை போன்று வீதியில் செல்வதற்கான உரிமை தனக்கு உள்ளதாகவும், உடம்பின் மேல் பகுதியில் மாத்திரம் ஆடை இல்லாமல் செல்வதனால் யாருடைக்கும் பாதிப்பு ஏற்படப்போவதில்லை என துவாய் அணிந்த நபர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தனது உடல் அழகானதென்பதனால் மூடி மறைத்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என அவர் வாதிட்டுள்ளார். எப்படியிருப்பினும் கடுமையான எதிர்ப்பின் பின்னர் அவர் பேருந்தில் இருந்து இறங்கியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியாவில் துப்பாக்கி ரவைகள் மீட்பு : பொலிசார் தீவிர விசாரணை!!

 
வவுனியா மருதநிலம் கல்நாட்டினகுளம் பகுதியில் இன்று (28.10.2017) காலை 11 மணியளவில் 250க்கு மேற்பட்ட துப்பாக்கி ரவைகள் பொலிஸார் மீட்டுள்ளனர்.

வவுனியா மருதநிலம் கல்நாட்டினகுளம் பகுதியிலுள்ள பூங்காவில் வேலை செய்ய சென்ற நபர் ஒருவர் நிலத்தினை பண்படுத்திய சமயத்தில் துப்பாக்கி ரவைகள் இருப்பதனை அவதானித்த பின் சிதம்பரபுரம் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

அதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த சிதம்பரபுரம் பொலிசார் மற்றும் வவுனியா பொலிசார் 250க்கு மேற்பட்ட துப்பாக்கி ரவைகளை மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட ரவைகள் விடுதலைப்புலிகள் பயன்படுத்தியதாக இருக்கும் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

வவுனியா மேல் நீதிமன்றத்தால் காதலித்து ஏமாற்றிய இளைஞனுக்கு 10 வருட கடூழிய சிறை!!

16 வயதுக்கு குறைந்த பெண்ணைக் காதலித்து கற்பழித்த குற்றத்திற்காக முல்லைத்தீவு இளைஞனொருவருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் நேற்று (27.10.2017) 10 வருட கடூழிய சிறைத்தண்டனை வித்தித்து தீர்ப்பளித்தது.

முல்லைத்தீவு மாங்குளம் ஒலுமடு பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய நாகராசா ஜெகதீஸ்வரன் என்ற இளைஞன் 2011 ஆம் ஆண்டு ஜீலை மாதம் மற்றும் நவம்பர் மாதத்தில் பெண் ஒருவரை காதலிப்பதாக கூறி அவரை காதலித்து ஏமாற்றி பலாத்காரம் செய்து ஒரு குழந்தைக்கு தாயாக்கியுள்ளார்.

இதனையடுத்து குறித்த இளைஞன் தன்னை திருமணம் செய்வார் என காத்திருந்த பெண் அவர் வேறு திருமணம் முடித்து விட்டார் என்பதனை அறிந்து பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த முறைப்பாட்டினையடுத்து குறித்த நபரை கைது செய்த முல்லைத்தீவு பொலிஸார் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தியிருந்தனர்.

வழக்கு விசாரணைகள் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் இடம்பெற்று கடந்த 24.08.2017 ஆம் திகதியன்று சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குற்றப்பகிர்வு பத்திரம் வவுனியா மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்று சாட்சியங்கள் மன்றினால் பரிசீலிக்கப்பட்டு நேற்று (27.10.2017) தீர்ப்பளிக்கப்பட்டது.

இதன் பிரகாரம் குறித்த இளைஞன் 16 வயதுக்குட்பட்ட பெண்ணை காதலிப்பதாக தெரிவித்து பலாத்காரம் செய்தமைக்காக 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்பளிக்கப்பட்டது.

அத்துடன் பிறந்த குழந்தைக்கு மூன்று இலட்சம் ரூபா நஸ்டஈடு செலுத்துமாறும் அதை செலுத்த தவறின் 2 வருட கடூழிய சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் தண்டப்பணமாக பத்தாயிரம் ரூபாவை செலுத்துமாறும் அதை செலுத்த தவறின் ஒரு மாத சாதாரண சிறைத்தண்டனையும் அனுபவிக்க நேரிடும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இவ் வழக்கில் அரச தரப்பில் அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் வழக்கினை நெறிப்படுத்தியிருந்தார்.

வவுனியா மாவட்ட முதியோர் சங்கங்களுக்கிடையே பொதுஅறிவு வினாடிவினாப் போட்டி!!

 
சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு மாவட்ட சமூகசேவை அலுவலகம் , மாவட்ட மட்டத்தில் முதியோர் சங்கங்களுக்கிடையே பொது அறிவு வினாடி வினாப்போட்டியை வருடாந்தம் நடாத்தி வருகிறது.

இந்த வருடப்போட்டிகள் நேற்று (27.10.2017) வெள்ளிக்கிழமை காலை மாவட்ட சமூகசேவை அலவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

பல்வேறு சங்கங்கள் இடையே நெடுங்கேணி , பூந்தோட்டம் , வவுனியா நகரம் , பண்டாரிகுளம் முதியோர் சங்கங்கள் சிறப்பாக பங்குபற்றி முதலாம் இடத்தை து.சண்முகராஜா தலைமையில் பண்டாரிகுளம் முதியோர் சங்கமும் இரண்டாம் இடத்தை தா.சலசலோசன் தலைமையில் வவுனியா நகர முதியோர் சங்கமும் மூன்றாம் இடத்தை வி.மாசிலாமணி தலைமையில் பூந்தோட்டம் அணியும் நான்காம் இடத்தை க.முத்துகுமார் தலைமையில் நெடுங்கேணி அணியும் பெற்றுக்கொண்டன.

போட்டியை மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன் நடாத்தினார். நிகழ்வுகளை அபிவிருத்தி உத்தியோகத்தர் செல்வி தி.கலைவாணி நெறிப்படுத்தினார் . மத்தியஸ்தர்களாக திரு.வசந்தன் திரு.நிப்ராஸ் ஆகியோர் கடமையாற்றினர்.

வவுனியா வடக்கு பிரதேச செயலக சமூகசேவை உத்தியோகத்தர் திருமதி பி .விமலேந்திரன், திருமதி கலா ஆகியோரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

வவுனியாவில் மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைப்பு!!

 
வவுனியாவில் தமிழ் விருட்சம் அமைப்பின் ஊடாக வசதியற்ற மாணவர்கள் பத்து பேருக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த நிகழ்வு இன்று (28.10.2017) காலை 10 மணியளவில் தமிழ் விருட்சம் அமைப்பின் அலுவலகத்தில் நடைபெற்றது.

செரெண்டிப் சிறுவர் இல்லத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ். பிரேமராஜ்ஜினால் துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் எஸ்.சந்திரகுமார், செயலாளர் மாணிக்கம் ஜெகன் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.