அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வின் பிரகாரம் 2020 ஆம் ஆண்டளவில் அரச ஊழியர்களுக்கான சம்பளம் பன்மடங்காக அதிகரிக்கும் என உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
இதன்படி விசேட வைத்திய நிபுணர்களின் அடிப்படை சம்பளம் 1 இலட்சது 20 ஆயிரம் ரூபாவாகவும் சாதாரண சாரதி ஒருவரின் அடிப்படை சம்பளம் 28 ஆயிரம் ரூபாவாகவும் அதிகரிக்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதற்கிணங்க 2020 இல் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு மேலதிகமாக 30 பில்லியன் ரூபாவை அரசாங்கம் ஈட்ட வேண்டியுள்ளது என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பு மாவட்டத்தின் பிரதேச செயலாளர்கள், அபிவிருத்தி அதிகாரிகள், கிராம உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் தொடர்பில் அறிவுத்தும் நிகழ்வு அலரி மாளிகையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அரச அதிகாரிகளை எந்த காரணம் கொண்டும் அரசியல்வாதிகள் பகைத்து கொள்ள கூடாது. ஏனெனில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுபவர்கள் அவர்களேயாவர். அரச அதிகாரிகள் உன்னதமான சேவையில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதன்போது மனிதன் என்ற வகையில் தவறுகள் ஏற்படலாம். அதற்காக எக்காரணம் கொண்டும் அவர்களை தவறுதலாக நினைத்து விட கூடாது.
எனினும் பிரதேச அபிவிருத்தி நடவடிக்கைகளின் போது அரசியல்வாதிகளை இணைத்து கொள்ளாது செயற்படுவது அரச அதிகாரிகளின் தவறாகும். எக்காரணம் கொண்டும் அரச அதிகாரிகள் சுயாதீனமாக தீர்மானங்கள் மேற்கொள்ளக்கூடாது. அரசியல்வாதிகளுடன் இணைந்து செயற்பட வேண்டும்.
அத்துடன் அரச ஊழியர்களுக்கான சம்பளத்தை இதுவரை எந்தவொரு அரசாங்கமும் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு அதிகரித்தோம். இதன்படி 10 ஆயிரம் ரூபா சம்பளம் அதிகரிக்கப்பட்டது. அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வின் பிரகாரம் அரச ஊழியர்களுக்கான சம்பளம் 2020 ஆம் ஆண்டு ஆகும் போது பன்மடங்காக அதிகரிக்கும்.
இதன்படி விசேட வைத்திய நிபுணர்களின் சம்பளம் 1 இலட்சது 20 ஆயிரமாக அதிகரிக்கும். அதேபோன்று தற்போது 12 ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் பெறும் சாரதிகள் 2020 இல் 28 ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளத்தை பெற்றுக்கொள்வர். இதற்கிணங்க 2020 ஆம் ஆண்டளவில் அரச ஊழியர்களின் சம்பளம் வழங்குவதற்கு மேலதிகமாக 30 பில்லியன் அரசாங்கம் ஈட்ட வேண்டியுள்ளது.
இருந்த போதிலும் இவ்வளவு தொகை சம்பளத்தை அதிகரித்தும் ஒரு சில அரச அதிகாரிகள் கட்சி போக்கின் அடிப்படையில் தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில்லை. முன்னைய ஆட்சியின் கொள்கைகளை கொண்டு செல்வதிலேயே குறியாக உள்ளனர். இது தவறாகும்.
கட்சி பேதங்களின் அடிப்படையில் அரச அதிகாரிகள் செயற்பட கூடாது. அதற்கு மாறாக அரச அதிகாரிகள் என்ற வகையில் இவ்வளவு தொகை சம்பளத்தை அதிகரித்து தந்த அரசாங்கம் என்ற வகையில் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றார்.
நாட்டில் சீரற்ற காலநிலை நீடித்து வரும் நிலையில் நாளை முதல் காற்றின் வேகம் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அந்த வகையில் நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்பில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், சப்ரகமுவா, மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன
மதவாச்சி – பிஹிவியகொலாவ பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (14.09) மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்பத்தகராறு காரணமாக 23 வயதுடைய இளம் குடும்பஸ்தர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மதவாச்சி, பிஹிவியகொலாவ பகுதியில் வசித்து வரும் சிசிர குமார (வயது 23) , என்பவருக்கும் அவரது மனைவிக்குமிடையில் சிறு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் அதிகரித்ததன் காரணமாக வீட்டை வீட்டு வெளியேறிய சிசிரகுமார என்ற இளைஞன் வீட்டின் அருகேயுள்ள பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதேவேளை, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நீட் தேர்வுக்கு எதிராகவும் அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும் பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருநங்கை கிரேஸ் பானு என்பவரும் இதற்காக போராடியுள்ளார். இதனால் அவரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
இது குறித்து அவர் பேசும்பொழுது, நீட் தேர்விற்கு எதிராக கடந்த 7-ம் தேதி WTO அலுவலகத்தில் பூட்டுபோடும் போராட்டம் நடத்தினோம். இதன் காரணமாக கைது செய்த போலீசார் மாஜிஸ்திரேட் முன்பு நிறுத்தினார்கள்.
அவர் எங்களை 15 நாள்கள் ரிமாண்டில் வைக்க உத்தரவிட்டார். பின்னர், புழல் சிறைக்கு எங்களை அழைத்துச் சென்ற போலீஸார், ‘பெண் கைதிகள் அறையில் வைத்து சோதனை நடத்த வேண்டும் என்றும், அதற்கு நீங்கள் நிர்வாணமாக நிற்க வேண்டும்’ என்றும் கூறினர்.
நான் எதற்கு உங்கள் முன்பு நிர்வாணமாக நிற்க வேண்டும்’ என்று மறுப்பு தெரிவித்து பலமணி நேரம் போராடினேன். என்னுடைய பேச்சைக் காதில் வாங்காதவர்களாக அவர்கள் பிடிவாதமாக என் ஆடையைக் களையச் செய்தனர் .அதைவிடக் கொடுமை, அறுவை சிகிச்சை செய்துகொண்ட இடத்தைப் பார்த்துக் கிண்டல் செய்து சிரித்தனர். அதைப் பார்த்துத் துடிதுடித்துப் போனேன்.
எங்களை பெண்கள் அல்லது ஆண்கள் சிறையில் வைக்க வேண்டும். ஆனால் தொற்றுநோயுள்ள கைதிகளை அடைத்துவைக்கும் இடமான தொற்றுத் தடைப்பிரிவில் அடைத்துவைத்தனர் என கூறினார்.
மண்டைதீவு 3 ஆம் வட்டாரத்தில் உள்ள சமுர்த்தி உத்தியோகஸ்தர் ஒருவர் 14 வயதுச் சிறுமியை தவறான முறையில் அணுகியதை தனது தொலைபேசி மூலம் புகைப்படம் எடுத்தது தொடர்பாக ஊர்காவற்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிறுவர் பாலியல் உரிமை மீறல்கள் மற்றும் சிறுமி சகிதம் வேலணை துறையூரில் வசிக்கும் குறித்த சமுர்த்தி உத்தியோகஸ்தருக்கு எதிராக பெற்றோர் ஊர்காவற்துறைப் பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்த நிலையில் மண்டைதீவு 3 ஆம் வட்டாரத்தில் உள்ள சமுர்த்தி உத்தியோகஸ்தர் ஒருவர் நேற்று முன்தினம் அந்த பகுதியைச் சேர்ந்த 14 வயதுச் சிறுமியை தனது அலுவலகத்திற்குள் அழைத்து தவறான முறையில் அணுகியுள்ளார்.
அத்துடன், அவற்றினை தனது தொலைபேசி மூலம் புகைப்படம் எடுத்துள்ளார். இவற்றினை அவதானித்த சிலர், சமுர்த்தி உத்தியோகஸ்தரின் தொலைபேசியை பறித்ததும் அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
மேலும் இந்த விடயம் தொடர்பில் ஊர்காவற்துறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வருங்காலத்தில் தற்போதைய அரசாங்கத்தை கவிழ்க்க செய்யக் கூடிய அனைத்தையும் முன்னெடுக்கவுள்ளதாக, முன்னாள் பிரதியமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
தன்னை பதவி நீக்கம் செய்தமை தொடர்பில் கருத்து வௌியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
கட்சிகள் இரண்டிலும் சிறந்தவர்கள் இருப்பதாக குறிப்பிட்ட அவர், குழப்பம் இருப்பது, அரசாங்கம் தொடர்பிலேயே தவிர ஜனாதிபதியுடன் இல்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கம் சிற் சில விடயங்கள் தொடர்பில் தவறான செயற்பாடுகளை பின்பற்றுவதாகவும், அதனை விமர்சிப்பதில் ஒருபோதும் தவறில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது வரை பிளவுபட்டுக் காணப்படும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை ஒன்றிணைத்து அரசாங்கத்தை ஸ்தாபிப்பதே எதிர்கால எதிர்பார்ப்பு எனவும் அருந்திக்க பெர்ணான்டோ மேலும் தெரிவித்துள்ளார்.
யாழ். வடமராட்சி உடுப்பிட்டி தெற்கு பதினாறாம் கட்டைப் பகுதியில் ஊடகவியலாளரொருவரின் வீட்டின் யன்னலை உடைத்து உள் நுழைந்த திருடர்கள் 40 பவுன் தங்க நகைகளைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
குறித்த வீட்டின் உரிமையாளர்களான ஊடகவியலாளர் மற்றும் அவரது மனைவியும் வேலைக்கு சென்ற பின்னர் இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வேலை முடிந்து வீட்டிற்குச் சென்ற வீட்டின் உரிமையாளரான பெண்மணி வீட்டின் யன்னல் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து கத்தியுள்ளார். அதனையடுத்து அயலவர்கள் அப்பகுதியில் ஒன்று திரண்டுள்ளனர்.
அதன் பின்னர் வீட்டுக் கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டு அறையினுள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 40 பவுன் தங்க நகைகள் களவாடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
குறித்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் வீட்டின் உரிமையாளரால் வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இத் திருட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வடகொரியா அண்மையில் நடத்திய அணுவாயுதப் பரிசோதனையையடுத்து, அதன் மீது பொருளாதாரத் தடை விதிக்க ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை பிரேரணை கொண்டுவந்தது.
திங்களன்று கொண்டுவரப்பட்ட இந்தப் பிரேரணையில், வடகொரியாவின் ஆடை ஏற்றுமதியையும், வடகொரியாவுக்கான எரிபொருள் வினியோகத்தையும் தடை செய்வதாக குறிப்பிட்டிருந்தது.
அந்தப் பிரேரணைக்கு ஜப்பானும் அமெரிக்காவும் ஆதரவளித்தன. இதையடுத்தே, அவ்விரு நாடுகளையும் வடகொரியா எச்சரித்துள்ளது.
அமெரிக்காவிடம் இருந்து இலஞ்சம் பெற்றுக்கொள்ளும் நாடுகளால் அமைக்கப்பட்டுள்ள அமைப்பு என்றும், சாத்தானின் கருவி என்றும் பாதுகாப்புச் சபையை விமர்சித்திருக்கும் வடகொரியா, அதனுடனான உறவுகளை முறித்துக்கொள்வதாகவும் அறிவித்துள்ளது.
தனது ஆறாவாது அணுவாயுதப் பரிசோதனையை கடந்த மூன்றாம் திகதி வடகொரியா நடத்தியிருந்தது. இதுவரை நடத்திய பரிசோதனைகளில் இது மிகுந்த சக்தி வாய்ந்தது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
Afghan security police stand guard near the site of a deadly suicide attack outside a cricket stadium, in Kabul, Afghanistan, Wednesday, Sept. 13, 2017. (AP Photo/Rahmat Gul)
காபூல் கிரிக்கெட் மைதானம் அருகே மேற்கொள்ளப்பட்ட தற்கொலைபடை தாக்குதலில் பொலிஸார் உள்பட 3 பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில் அமைந்துள்ள கிரிக்கெட் மைதானத்தில் நேற்று உள்ளூர் அணிகள் பங்கேற்ற கிரிக்கெட் போட்டி நடைபெற்று கொண்டிருந்தது.
இந்நிலையில், மைதான வாயிலில் அமைக்கப்பட்டிருந்த சோதனை சாவடியைக் கடந்து தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவன் திடீரென நுழைய முயன்றவேளையில், பாதுகாப்பு பணியிலிருந்து பொலிஸார் குறித்த தீவிரவாதியினை மடக்கி பிடிக்க முயற்சித்த போது,தீவிரவாதி இடுப்பில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தாக்குதலில் பாதுகாப்புக்கு பணியில் ஈடுப்பட்டிருந்த பொலிஸார் உள்பட 3 பேர் பரிதாபமாக பலியாகியதோடு, மேலும், 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.படுகாயமடைந்த 5 பேரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுகுறித்து ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை அதிகாரிகள் கூறுகையில், தற்கொலைபடை தாக்குதல் நடந்தபோது மைதானத்தில் போட்டி நடைபெற்று கொண்டிருந்தது. கிரிக்கெட் வீரர்களும், கிரிக்கெட் சபை அதிகாரிகளும் பாதுகாப்பாக உள்ளாதாக தெரிவித்தனர்.
மேலும், தற்போது காபூல் கிரிக்கெட் மைதானத்தினை சுற்றி பலத்த பாதுகாப்பு
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 5 பொலிஸ் அதிகாரிகளுக்கும் இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு விசாரணை இன்று இடம்பெற்ற போது, யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
குறித்த படுகொலை சம்பவம் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி யாழ். கொக்குவில் குளப்பிட்டி சந்தியில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
குறித்த மாணவர்கள் மோட்டார் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் போது மோட்டார் வாகனம் பாதையை விட்டு விலகியமை காரணமாகவே மாணவர்கள் உயிரிழந்தார்கள் என பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
இதன் பின்னர், மரணமடைந்த மாணவர்களின் பிரேத பரிசோதனைகளில் சுட்டுக் கொலைசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்ததையடுத்து,
இந்த சம்பவம் நடைபெற்ற சந்தர்ப்பத்தில் கடமையில் இருந்த குறித்த 5 பொலிஸ் அதிகாரிகளினதும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு கடந்த 11 மாதங்களாக தொடர்ச்சியாக அநுராதபுரம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் இன்று இவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், குறித்த சம்பவத்தில் யாழ்.பல்கலைக்கழக அரசறிவியல்துறை மாணவனான கஜன் (வயது 23) மற்றும் ஊடகக்கற்கை மாணவனான சுலக்சன் (வயது 24) ஆகிய இரு மாணவர்கள் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி, திருநகர் வடக்கு பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட பெண் ஒருவர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட உதவி மதுவரி பொறுப்பதிகாரி நியூட்டன் அவுட்ஸ்பேன் தெரிவித்துள்ளார்.
மதுவரி திணைக்களத்திற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்று பிற்பகல் குறித்த பகுதியில் சுற்றுவளைப்பு தேடுதலை மேற்கொண்ட போது சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்திசெய்த குறித்த பெண்ணை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட குறித்த பெண்ணை நாளை கிளிநொச்சி நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட உதவி மதுவரி பொறுப்பதிகாரி குறிப்பிட்டார்
சைட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று காலை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில் நோயாளர்கள் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
சைட்டம் மருத்துவக்கல்லூரியை மூடக்கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால் முன்னெடுக்கப்படும் மாவட்ட மட்டத்திலான எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வவுனியா மாவட்ட அரச வைத்திய அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற வைத்தியர்கள் முன்னெடுத்துவரும் பணிப்புறக்கணிப்பு காரணமாக வவுனியா பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்த மக்கள் பல்வேறு சிரமத்திற்கு முகம் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து சைட்டத்திற்கு எதிரான மக்கள் அரண் அமைப்பின் ஏற்பாட்டில் யாழில் நேற்று ஆரம்பிக்கப்பட்ட வாகனப் பேரணி இன்று வவுனியாவை வந்தடைந்து. தொடர்ந்து வவுனியாவில் இருந்து அனுராதபுரத்தை நோக்கி வாகனப் பேரணி ஆரம்பமாகியது.
வவுனியா ஏ9 விதியில் உள்ள புதிய பேரூந்து நிலையம் முன்பாக காலை 10 மணிக்கு ஆரம்பித்த குறித்த வாகனப் பேரணி மன்னார் வீதி வழியாக குருமன்காடு சந்தியை அடைந்து வைரவபுளியங்குள் ஊடாகச் சென்று வவுனியா மணிக்கூட்டு கோபுர சந்தியை அடைந்து அங்கிருந்து ஏ9 வீதி வழியாக அனுராதபுரம் நோக்கிச் செல்கின்றது.
தனியார் மருத்துவக் கல்லூரியான சைட்டத்தை நிறுத்து, இலவசக் கல்வியை சிதைக்காதே போன்ற வாசங்களுடன் மோட்டர் சைக்கிள்கள், கார்கள், முச்சக்கர வண்டிகள் என இவ் எதிர்ப்பு ஊர்வலத்தில் பங்குபற்றின.
இப் பேரணியில் வைத்தியர் சங்கம், மருத்துவ பீட மாணவர்கள், முச்சக்கர வண்டி உரிமையாளர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
கூட்டுப்பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்தியாவின் வழக்கில், சதித்திட்டம் தீட்டியமை, கடத்திச் சென்றமை, பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியமை, கொலை செய்தமை ஆகிய நான்கு பிரதான குற்றச்சாட்டுக்கள் உள்ளடங்கிய 41 குற்றச்சாட்டுக்களி லும், ஒன்பது எதிரிகளில் முதலாம் மற்றும் ஏழாம் எதிரிகள் தவிர்ந்த ஏனைய ஏழு எதிரிகளுக்கு எதிராகவும் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன என்று சட்டமா அதிபர் திணைக்கள பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குமார்ரட்ணம் ட்ரயல் அட்பார் நீதிமன்றில் தெரிவித்தார்.
அத்துடன் இவ் வழக்கின் முதலாம் எதிரியான பூபாலசிங்கம் இந்திரகுமார் மற்றும் ஏழாம் எதிரியான பழனிரூபசிங்கம் குகநாதன் ஆகிய இருவருக்கும் எதிராக எந்தவிதமான சாட்சியங்களும் இல்லையெனவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் எடுத்துக்கூறினார்.
மாணவி வித்தியாவின் கூட்டு பாலியல் வல்லுறவு படுகொலை வழக்கானது யாழ்.மேல் நீதிமன்றில் அமைக்கப்பட்டுள்ள ட்ர யல் அட்பார் நீதிமன்றில் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் மற்றும் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோரை உள்ளடக்கி வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் இடம்பெற்று வருகின்றது.
இவ் வழக்கு விசாரணையில் வழக்கு தொடுநர் தரப்பு மற்றும் எதிரிகள் தரப்பு சாட்சிப் பதிவுகள் நிறைவடைந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை 16 ஆவது நாளாக குறித்த வழக்கு இரு தரப்பு தொகுப்புரைகளுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது. இதன்போது வழக்கு தொடுநர் தரப்பு சார்பாக இவ் வழக்கினை நெறிப்படுத்தும் சட்டமா அதிபர் திணைக்கள பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குமார்ரட்ணம் இவ் வழக்கின் தொகுப்புரையை மேற்கொண்டிருந்தார்.
அவர் தனது தொகுப்புரையில் தெரிவித்திருப்பதாவது,
இந்த வழக்கானது புங்குடுதீவு பிரதேசத்தில் இடம்பெற்ற மிகக் கொடூரமான ஓர் சம்பவம் தொடர்பானதாகும். இவ் வழக்கில் சந்தேகநபர்களாக கைது செய்யப்பட்ட ஒன்பது பேருக்கும் எதிராக சட்டமா அதிபரால் 41 குற்றச்சாட்டுக்கள் அடங்கிய குற்றப் பகிர்வு பத்திரமானது தயார் செய்யப்பட்டு பிரதம நீதியரசரால் நியமிக்கப்பட்ட அனுபவம் வாய்ந்த மூன்று நீதிபதிகள் முன்னிலையில் விசாரணை செய்யப்பட்டு வருகின்றது. இவ் வழக்கின் ஆரம்பத்தில் குறித்த சந்தேகநபர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அவர்களுக்கு வாசித்து காண்பிக்கப்பட்டு அதற்கு அவர்கள் நிரபராதிகள் என மன்றுரைத்ததை தொடர்ந்து இவ் வழக்கு சாட்சி பதிவு நடவடிக்கையானது ஆரம்பித்திருந்தது.
இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட இச் சாட்சிப் பதிவில் வித்தியாவின் தாயார் சாட்சியமளிக்கும் போது தனது மகள் சம்பவ தினமான 2015.05.13 ஆம் திகதி காலை பாடசாலையில் சுத்தம் செய்ய வேண்டியிருந்ததால் அன்று காலை 7 மணிக்கும் 7.15 மணிக்குமிடையில் பாடசாலை புறப்பட்டு சென்றதாகவும் அன்று வித்தியா தனியாகவே பாடசாலைக்கு சென்றிருந்தார் என்றும் தெரிவித்திருந்தார். அத்துடன் வித்தியா 12 ஆம் திகதி பாடசாலை செல்லவில்லை எனவும் தனியார் வகுப்பு ஒன்று பார்ப்பது தொடர்பாக சென்றுவிட்டு வந்தார் எனவும் அவ்வாறு தனியார் வகுப்பு பார்த்துவிட்டு வரும் போதே தன்னை யாரோ பார்ப்பதாக அவர் கூறியதாகவும் வித்தியாவின் தாயார் தனது சாட்சியத்தில் கூறியிருந்தார்.
இவற்றைவிட மேலும் வித்தியாவின் தாயார் சாட்சியமளிக்கும் போது வித்தியா சம்பவ தினத்தன்று அணிந்திருந்த பாடசாலை சீருடை, புத்தகப்பை, துவிச்சக்கரவண்டி என அனைத்தையும் அடையாளம் காட்டியிருந்தார்.
இதன் பின்னர் குறித்த மாணவி சடலமாக மீட்கப்பட்ட போது அங்கு அழுத வித்தியாவின் தாயார் தன்னிடம், ‘வித்தியா நேற்று சொன்னாள் தன்னை யாரோ வடிவாக பார்த்துக்கொண்டு இருக்கின்றார்கள், பார்க்க வெளிநாட்டுகாரர்கள் போல இருக்கு’ என்று கூறியே அழுதார் என ஞானேஸ்வரன் இலங்கேஸ்வரன் இந் நீதிமன்றில் சாட்சியமளிக்கும் போது கூறியிருந்தார்.
இதேபோன்று வித்தியாவின் கண்ணாடி 6 ஆவது எதிரியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரது வீட்டில் இருந்து மீட்கப்பட்டதாகவும் அதனை வித்தியாவினுடயது தான் என வித்தியாவின் தாயார் உறுதிப்படுத்தியதாகவும் விசாரணை அதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா சாட்சியமளித்திருந்தார். அத்துடன் அது வித்தியாவுக்கு தான் சிபாரிசு செய்த கண்ணாடி தான் என்பதை கண் வைத்திய நிபுணர் மலரவனும் அக் கண்ணாடியை வித்தியாவுக்கு விற்பனை செய்த கண்ணாடி கடை உரிமையாளரும் அதன் பவரை பரிசோதித்தவர்களும் இந் நீதிமன்றில் தமது சாட்சியங்களை வழங்கியிருந்தனர்.
மேலும் இவ் வழக்கில் பதினொராவது சந்தேகநபராக கைதுசெய்யப்பட்டு பின்னர் சட்டமா அதிபரது சிபாரிசின் அடிப்படை யில் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு அரச தரப்பு சாட்சியாக மாற்றப்பட்ட உதய சூரியன் சுரேஸ்கரன் சாட்சியமளிக்கும் போது, மாப்பிள்ளை என்பவர் வீட்டில் 5 ஆம், 6ஆம், 2ஆம், 3ஆம் எதிரிகள் கள்ளு குடிக்கும் போது 6ஆம் எதிரி தாம் வித்தியாவை காதலிப்பதாகவும் அவளை தூக்கி தர வேண்டும் என 2ஆம் எதிரியிடம் கேட்டதாகவும் அதற்கு 2ஆம் எதிரி தனக்கு அதற்காக 23 ஆயிரம் ரூபா பணம் கேட்டதாகவும் சாட்சியமளித்திருந்தார்.
இதன்படி தானும் 5 ஆம், 6 ஆம் எதிரிகள் வித்தியாவின் நடமாட்டம் தொடர்பாக அவதானித்ததாகவும் 11 ஆம் திகதி வித்தியா வேறொரு பிள்ளையுடன் பாடசாலைக்கு சென்றதாகவும் 12 ஆம் திகதி வித்தியா பாடசாலைக்கு செல்லவில்லை என்பதும் தம்மால் அவதானிக்கப்பட்டதாகவும் சாட்சியமளித்திருந்தார்.
பின்னர் 13ஆம் திகதி வித்தியா தனியாக வரும் போது வித்தியாவை 6ஆம் எதிரியே வழிமறித்ததாகவும் தன்னை காதலிக்கிறாயா? இல்லையா? என கேட்டு அவரது கன்னத்தில் அறைந்ததாகவும் இதன்போது அவரது கண்ணாடி கீழே வீழ்ந்ததாகவும் சாட்சியமளித்தார். அதன் பின்னர் வித்தியாவை பலவந்தமாக பற்றைக்காட்டுக்குள் இழுத்து சென்று பாழடைந்த வீட்டிற்குள் படுக்க வைத்து மாறி மாறி பாலியல் வல்லுறவு புரிந்ததாகவும் சாட்சியமளித்தார்.
இவரது சாட்சியத்தை போன்றே இவ் வழக்கின் மற்றுமொரு சாட்சியான கள்ளு விற்பனை செய்யும் மாப்பிள்ளை என்பவரும் சாட்சியமளித்திருந்தார். அவற்றைவிட இவ் வழக்கில் முன்வைக்கப்பட்ட மற்றுமொரு சாட்சியமான மணிவண்ணன் தனுராம், தானும் தனது நண்பனான இலங்கேஸ்வரன் தனுஜன் என்பவனும் பாடசாலை செல்லும் போது சம்பவம் நடந்த அன்று வித்தியா கட்டப்பட்டிருந்த இடமான பகுதியில் தனது நண்பனின் செருப்பு கழன்று வீழ்ந்த போது தான் அதனை இறங்கி எடுத்ததாகவும் அப்போது அங்கே ரவி மாமா மஞ்சள் நிற ரீசேட்டுடன் நின்ற தாக சாட்சியமளித்தார். அத்துடன் அங்கு ம்ம்ம்ம் என்ற சத்தம் ஒன்று வந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.
மற்றுமொரு சாட்சியமான பாலசிங்கம் பாலசந்திரன் என்பவரது சாட்சியம் பதிவு செய்யப்பட்டது. இது ஒரு முக்கியமான சாட்சியமாகும். அதாவது இச் சாட்சியானது யாருடைய தூண்டுதலும் இன்றி சுயாதீனமாக வழங்கப்பட்ட சாட்சியாகும். இவ் சாட்சி சாட்சியமளிக்கும் போது வித்தியாவின் சம்பவம் நடந்த இடத்தில் அச் சம்பவ தினத்தன்று 2ஆம், 3ஆம் எதிரிகளை தாம் கண்டதாக சாட்சியமளித்திருந்தார்.
இதேபோன்று இலங்கேஸ்வரன் என்ற சாட்சி சாட்சியமளிக்கும் போது சின்னாலடி பகுதியில் 2015.05.12 ஆம் திகதி வித்தியா பஸ் வண்டியில் இருந்து இறங்கி வீடு நோக்கி துவிச்சக்கரவண்டியை எடுத்துக்கொண்டு செல்லும்போது வெள்ளை நிற வானில் நின்று 4ஆம், 5ஆம், 8ஆம், 9ஆம் எதிரிகள் அவளை பார்த்துக்கொண்டு நின்றதாக சாட்சியமளித்திருந்தார்.
சாந்தரூபினி என்ற சாட்சி சாட்சியமளிக்கும் போது 5ஆவது எதிரி சம்பவ தினத்தன்று சாரத்தை மடித்து கட்டிக்கொண்டு ஐயனார் கோவில் பக்கம் சென்றதாக சாட்சியமளித்தார். ஆனால் 5ஆவது எதிரி சாட்சியமளிக்கும் போது தான் மீன்பிடிக்க கடலுக்கு சென்றதாக கூறினார்.
வேலணை பிரதேச சபையில் குறித்த 6ஆவது எதிரி சம்பவ தினத்தன்று காலை 9.15 மணிக்கு சென்று 8.15 மணிக்கு சென்றதாக வரவுப்புத்தகத்தில் கையெழுத்திட்டிருந்தமையும் அதற்கான சான்றுகளும் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.
இவற்றைவிட இவ் வழக்கில் மற்றுமொரு முக்கிய சாட்சியாக பிரேத பரிசோதனை செய்த சட்ட வைத்திய அதிகாரி உருத்திரபசுபதி மயூரதன் சாட்சியம் காணப்படுகின்றது. இவரது சாட்சியத்தில் வித்தியாவின் சடலத்தில் தலைப்பகுதியில் காணப்படும் காயங்கள் அது ஏற்பட்டதற்கான காரணங்கள் தொடர்பானவை உதயசூரியன் சுரேஸ்கரன் மற்றும் மாப்பிள்ளை என்பவர் கூறிய சாட்சியங்களுடன் ஒத்துப்போவதாகவுள்ளது. அதாவது வித்தியாவை பாழடைந்த வீட்டில் கீழே படுக்க வைத்து அவர் மீது மேற்கொள்ளப்பட்ட பாலியல் துஷ்பிரயோகத்தில் அவரது தலை பலமுறை நிலத்தோடு உராய்வுபட்டதால் மரணம் ஏற்பட்டிருக்கலாம் என சட்டவைத்திய அதிகாரியின் வைத்திய அறிக்கையுடனான சாட்சியம் குறிப்பிடுகின்றது.
மேலும் இவ் வழக்கில் எதிரிகளில் முதலாம் எதிரி சாட்சியமளிக்கும் போது தான் தனது சகோதரனான 3ஆம் எதிரியுடன் சம்பவ தினத்தன்று ஊர்காவற்றுறை நீதிமன்றுக்கு செல்வதற்காக துவிச்சக்கரவண்டியில் பேருந்து நிலையத்துக்கு சென்றதாக சாட்சியமளிக்கவில்லை. ஆனால் 3ஆம் எதிரி மேற்கூறியவாறு சாட்சியமொன்றை முதல் தடவையாக மன்றில் தெரிவித்தார். எனினும் இவ் வழக்கில் முதலாம் எதிரிக்கு எதிராக எந்தவொரு சாட்சியமும் காணப்படவில்லை.
6ஆவது எதிரி சாட்சியமளிக்கும் போது இவ் வழக்கில் முதல் தடவையாக கூறினார் தம்மிடம் பொலிஸார் குடிபோதையில் வாக்குமூலம் பெற்றதாக. ஆனால் அது தொடர்பாக குறுக்கு விசாரணையின் போது எந்தவிதமான கேள்விகளும் பொலிஸார் சாட்சியமளிக்கும் போது அவர்கள் தரப்பு சட்டத்தரணிகளால் கேட்கப்பட வில்லை.
8 ஆவது எதிரி சாட்சியமளிக்கும் போது தன்னை பொலிஸார் சித்திரவதை செய்து பின்னர் முகத்தை கழுவி பவுடர் போட்டு வீடியோ எடுத்ததாக கூறினார். ஆனால் இது தொடர்பாக பொலிஸார் சாட்சியமளிக்கும் போது அது தொடர்பாக குறுக்கு விசாரணையில் எந்தவிதமான கேள்விகளையும் அவர்கள் தரப்பு சட்டத்தரணிகள் கேட்கவில்லை. அத்துடன் இவர் தனது சாட்சியத்தில் தனக்கு கம்பியூட்டர் தொடர்பாக அனைத்தும் தெரியும் எனவும் சாட்சியமளித்திருந்தார்.
இதனை தொடர்ந்து இவ் வழக்கின் 9 ஆவது எதிரி சாட்சியமளிக்கும் போது தான் ஒருமுறை இலங்கை வந்தால் தனக்கு 20 இலட்சம் செலவாகும் என சாட்சியமளித்திருந்தார். அப்படியாயின் இவர் வவுனியா சிறையில் வைத்து இப்லார் ஊடாக நிஷாந்த சில்வாவுக்கு 2 கோடி இலஞ்சம் கொடுக்க முற்பட்டதை ஏற்றுக்கொள் ளக் கூடியதாக இருக் கும். அத்துடன் இவர் சார்பில் சாட்சிக்காக அழைக்கப்பட்ட இவரது மனைவி சாட்சியமளிக்கும் போது 2015.05.08ஆம் திகதியில் இருந்து 2015.05.13ஆம் திகதி வரை வெள்ளவத்தை ஏஞ்சல் லொட்ஜில் தனது கணவரான 9ஆம் எதிரியுடன் இருந்ததாகவும் வெளியே எங்கும் சென்றதில்லை எனவும் சாட்சியமளித்திருந்தார்.
ஆனால் குறித்த 9ஆம் எதிரியான சுவிஸ்குமார் சாட்சியமளிக்கும் போது குறித்த காலப்பகுதியில் தான் வெளியில் சென்று வந்ததாக சாட்சியமளித்துள்ளார். அவ்வாறு பார்க்கும் போது குறித்த இரண்டு சாட்சியங்களுக்குமிடையே முரண்பாடுகள் காணப்படுகின்றதை அவதானிக்கலாம்.
இவ்வாறு அரச தரப்பு மற்றும் எதிரி தரப்பு சாட்சிப் பதிவுகளுடன் குறித்த வழக்கானது நிறைவுக்கு கொண்டுவரப்பட்டிருந்தது. இவ் வழக்கில் குறித்த ஒன்பது எதிரிகளில் முதலாம் எதிரியான பூபாலசிங்கம் இந்திரகுமார் மற்றும் 7ஆம் எதிரியான பழனிரூபசிங்கம் குகநாதன் ஆகிய இருவருக்கும் எதிராக எந்தவிதமான சாட்சியங்களும் முன்வைக்கப்படவில்லை.
ஆனால் இவ் ஒன்பது பேரில் மேற்கூறிய இருவரும் தவிர்ந்த ஏனைய எதிரிகளான 2ஆம் எதிரி பூபாலசிங்கம் ஜெயக்குமார், 3ஆம் எதிரி பூபாலசிங்கம் தவக்குமார், 4ஆம் எதிரி மகாலிங்கம் சசிதரன், 5ஆம் எதிரி தில்லைநாதன் சந்திரகாசன், 6ஆம் எதிரி சிவதேவன் துஷாந்தன், 8ஆம் எதிரி ஜெயதரன் கோகிலன், 9ஆம் எதிரி மகாலிங்கம் சசிக்குமார் ஆகிய ஏழு பேருக்கு எதிராகவும் சட்டமா அதிபரால் முன்வைக்கப்பட்ட 41 குற்றச்சாட்டுக்களும் நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளன என்றார்.
தொடர்ந்து குறித்த வழக்கினை விரை வாக நடத்தி முடிக்க ஒத்துழைப்பு வழங் கிய ட்ரயல் அட்பார் நீதிபகளுக்கும், குற்றச் சம்பவம் தொடர்பான விரைவான விசாரணை மேற்கொண்ட குற்றப்புலனா ய்வு பிரிவினர், பொலிஸாருக்கும் வழ க்கு நடவடிக்கையின் போது உதவி வழங் கிய நீதிமன்ற பணியாளர்களுக்கும், சிறை க்காவலர்களுக்கும், எதிரிகள் தரப்பு சட்ட த்தரணிகளுக்கும் இவ் வழக்கு தொடர் பாக குற்றச் சம்பவம் இடம்பெற்றதில் இருந்து இன்றுவரை இவ் வழக்கு தொட ர்பான செய்திகளை வெளியிட்டு வரும் ஊடகவியலாளர்களுக்கும் சட்டமா அதிபர் சார்பில் தனது நன்றிகளை தெரிவித்து இவ் வழக்கு தொடர்பான தனது இறுதி தொகுப்புரையை நிறைவு செய்திருந்தார்.
இதேவேளை, குறித்த வழக்கு தொடுநர் தரப்பு தொகுப்புரையானது நேற்றுக் காலை 9.40 மணியளவில் ஆரம்பித்து மாலை 4.25 மணிவரை நீண்ட நேரம் இடம்பெற் றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
டுபாயில் இருந்து 7.8 கிலோ கிராம் தங்க நகைகளை இலங்கைக்கு கடத்திவர முற்பட்ட இரு பெண்களை கட்டுநாயக்க விமானநிலை சுங்க அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட இருவரும் இலங்கையர்கள் எனத் தெரிவிக்கும் சுங்க அதிகாரிகள் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்க நகைகளின் பெறுமதி சுமார் 40 மில்லியன் ரூபாவெனத் தெரிவித்தனர்.
குறித்த இரு பெண்களும் தங்க நகைகளை இடுப்புப்பட்டிகளுக்குள் மிகவும் சூட்சுமமாக மறைத்து வைத்துக்கொண்டுவரும் போது சோதனையிட்ட சுங்க அதிகாரிகள் தங்க நகைகளுடன் குறித்த இருவரையும் கைதுசெய்தனர்.
கைதுசெய்யப்பட்ட இரு பெண்களிடமும் விமானநிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.