60 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 18 மாத குழந்தை!!

 
கிணற்று அருகில் தனது சகோதரியுடன் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை எதிர்பாராத விதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்ததை அடுத்து குழந்தையை மீட்கும் பணி நடைபெற்று வருகின்றது.

தெலுங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டம், செவெல்லா மண்டலத்தை சேர்ந்த சந்வேலி கிராமத்தில் வீணா என்ற 18 மாத குழந்தை, 60 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது.

கிணற்று அருகில் தனது சகோதரியுடன் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை வீணா, எதிர்பாராத விதமாக தவறி விழுந்ததாக பெற்றோர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

நேற்று மாலை சுமார் 6.45 மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்றது. உடனியாக விரைந்து வந்த தீயணைப்பு படையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் குழந்தையை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர். அதேபோல், வருவாய் துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் பட்நாம் மகேந்தர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தையை காப்பாற்றுவதற்காக நடவடிக்கையை துரிதபடுத்தினார்.

கிணற்றுக்குள் தொடர்ச்சியாக ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டு வருகிறது. அதேபோல், கிணற்றை சுற்றிலும் ஆழமாக பொக்லிங் மூலம் தோண்டப்பட்டு வருகிறது.

நிலத்தின் உரிமையாளர் சில தினங்களுக்கு முன்பு ஆழ்துளை கிணறு தோண்டியுள்ளதாகவும், ஆனால் அதனை மூடாமல் சென்றதே விபத்துக்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.

20 முறை குத்தி கொலை செய்யப்பட்ட இளம் பெண் : சீ.சீ.டீ.வியில் சிக்கிய காதலன்!!

கொட்டாவையில் படுகொலை செய்யப்பட்ட இளம் பெண்ணின் பிரேத பரிசோதனை நேற்று களுபோவில வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.

29 வயதான தரிந்தி ஆலோக்க அவரது வீட்டின் படுக்கறையில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

உயிரிழந்த பெண்ணின் கழுத்து பகுதியின் முன் பக்கம் மற்றும் பின் பக்கத்தில் 20க்கும் அதிகமான முறை கத்தியால் குத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் அதிகம் இரத்தம் வெளியேறியுள்ளதாகவும், இதனால் இந்த மரணம் நிகழ்ந்துள்ளதாகவும், சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தின் சந்தேக நபர் மாத்தறை பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் அவரை கைது செய்வதற்கு விசேட பொலிஸ் குழுவொன்று அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வீட்டில் சீ.சீ.டீ.வி கமரா பொருத்தப்பட்டுள்ள நிலையில் அந்த காணொளி ஊடாக பொலிஸ் விசாரணை நடத்தப்படவுள்ளது.

சந்தேக நபர் வெளிநாட்டு யாத்திரை பயணங்களை ஏற்பாடு செய்பவர் எனவும், கடந்த 2 வருடங்களாக அவர் அந்த வீட்டிற்கு வந்து செல்பவர் எனவும் தெரியவந்துள்ளது.

இந்த நபர் தரிந்தியுடன் காதல் தொடர்பு வைத்த கொள்வதற்கு முயற்சித்துள்ள நிலையில் தரிந்தி அதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்த கொலை சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று சந்தேக நபர் அந்த பெண்ணின் வீட்டில் தங்கியிருந்ததாக தெரியவந்துள்ளது.

 

சீனாவில் பெரும் நிலச்சரிவு : 100 பேர் உயிரோடு புதைந்தனர்!!

சீனாவில் நிகழ்ந்த ஒரு பயங்கர நிலச்சரிவில் சிக்கி 100 க்கும் மேற்பட்டவர்கள் உயிருடன் புதைக்கப்பட்டனர்.

சீனாவின் தென் மேற்கு மாகாணமான சிச்சுவான், மோக்சியான் பகுதியிலுள்ள ஜின்மோ கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

அங்கு 40 வீடுகளும் கடுமையாக சேதமடைந்துள்ளன. மலையின் ஒருபக்கம் இடிந்து விழுந்தததால் இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது.

கற்கள் அப்பகுதியில் பாயும் நதியின் குறுக்கே சுமார் 2 கி.மீ தூரத்திற்கு படர்ந்து நதியின் போக்கை தடுத்து நிறுத்திவிட்டதாக சீன ஊடகங்கள் தெரிவித்தன.

இந்த சம்பவம் பெரும் மழை காரணமாக நடந்துள்ளது. புல்டோசர்கள் மூலம் இடிபாடுகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

கிரிக்கெட் மட்டையால் மகனை அடித்துக் கொன்ற தந்தை!!

புத்தளத்தில் தந்தையொருவர் தனது மகனை அடித்துக் கொலை செய்துள்ளார். நேற்று அதிகாலை 3 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதை அடுத்து, குறித்த தந்தை கிரிக்கெட் மட்டையால் மகனைத் தாக்கியுள்ளார். இதன்போது, மயக்கமடைந்த இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவத்தில் 24 வயதான இளைஞரே கொல்லப்பட்டுள்ளார். 54 வயதான தந்தை கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

எகிப்தில் 3000 ஆண்டுகள் பழமைவாய்ந்த செயற்கைக் கால் கண்டுபிடிப்பு!!

 
எகிப்தில் 3000 ஆண்டுகள் பழமைவாய்ந்த கல்லறையிலிருந்து மரத்தாலான செயற்கைக் கால் ஒன்றை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

பிரமிடுகளை ஆய்வு செய்துவரும் தொல்பொருள் ஆய்வாளர்கள், ஷேக் அப்த் அல்-குவர்னி கல்லறையை ஆய்வு செய்த போதே, 3000 ஆண்டுகள் பழமையான அந்த கல்லறையில் இருந்து மரத்தாலான செயற்கைக் கால் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த காலானது மதகுரு ஒருவரது மகள் பயன்படுத்தி வந்தது எனவும், அவரது வாழ்நாளில் குறித்த செயற்கைக் காலானது பலமுறை மாற்றியமைக்கப்பட்டு வந்துள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த செயற்கைக் காலானது மரத்தால் செதுக்கப்பட்டுள்ளது. தோலினாலான வாரினைப் பொருத்திக் கட்டப் பயன்படுத்தியுள்ளனர். தற்போது எகிப்திய நிபுணர்கள் குறித்த செயற்கைக் காலினை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.

பிரிட்டனில் குட்டைப் பாவாடை அணிந்து பாடசாலை மாணவர்கள் நூதனப் போராட்டம்!!

பிரிட்டனில் பாடசாலை மாணவர்கள் சிலர் வித்தியாசமான முறையில் குட்டைப் பாவாடை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டமை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இங்கிலாந்தில் இஸ்கா அகடமி பாடசாலை மாணவர்கள், சமீப காலமாக நிலவி வரும் வெப்பநிலை காரணமாக நீளக்காற்சட்டைக்குப் பதிலாக அரைக்காற்சட்டை அணிய பாடசாலை நிர்வாகத்திடம் அனுமதி கோரியுள்ளனர்.
ஆனால், இதற்கு பாடசாலை நிர்வாகம் அனுமதி வழங்க மறுத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை சுமார் 30 க்கும் மேற்பட்ட மாணவர்கள் குட்டைப் பாவாடை அணிந்து பாடசாலை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குட்டைப் பாவாடை, வெள்ளை நிற மேற்சட்டையுடன் மாணவர்கள் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

இதனையடுத்து, பாடசாலை நிர்வாகம் மாணவர்களின் பெற்றோருடன் கலந்துரையாடவுள்ளதாகவும், வெப்பநிலை குறையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், எதிர்காலத்தில் மாணவர்களின் கோரிக்கையைப் பரிசீலிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளது.

 

ஆடும் மனிதனும் கலந்து பிறந்த விநோத ஆட்டுக்குட்டி!!

தென்னாபிரிக்காவில் ஆடு ஒன்றிற்கு பிறந்த குட்டியானது, ஆடும் மனிதனும் சேர்ந்த கலவை போன்று இருந்ததால், அதனைக் கண்ட கிராம மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

தென்னாபிரிக்காவின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ளது கிறிஸ் ஹானி மாவட்டம். இங்கு அமைந்துள்ள சிறிய கிராமமே லேடி பிரரி. இந்த கிராமத்தில் அதிகளவில் விவசாயிகள் வாழ்ந்து வருகின்றனர்.

இங்குள்ள ஆடு ஒன்றிற்கு பிறந்த குட்டிதான் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பாதி மனிதன் மற்றும் பாதி ஆடு போன்ற உடலமைப்புடன் இந்த குட்டி காணப்படுவது தான் இதற்கு காரணம்.

இதைக் கண்டவுடன் கிராம மக்கள் அனைவரும் இந்த குட்டியானது சாத்தானால் அனுப்பப்பட்டுள்ளது என்று பேசிக்கொண்டதால், கிராமத்தில் பரபரப்பு உண்டானது.

இது தொடர்பான தகவல் தெரிய வந்தவுடன், கிராமப்புற அபிவிருத்தி அதிகாரிகள் உடனடியாக மருத்துவர் ஒருவருடன் அங்கு விரைந்து சென்று ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.

இது கண்டிப்பாக ஆட்டுக்குட்டிதான். மக்கள் பயப்பட வேண்டாம். மேலும், இந்த குட்டி கருவிலிருக்கும் பொழுது, அதன் தாய்க்கு ரிப்ட் வேலி என்ற நோய் பாதிப்பு இருந்துள்ளது. இதனால் குட்டி பிறக்கும் பொழுதே இறந்த நிலையில், இவ்வாறு பிறந்துள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இருந்தும் மக்களின் சந்தேகம் தீராத காரணத்தால், அந்த குட்டியின் பிரேதப் பரிசோதனை அறிக்கையை மக்கள் முன்னிலையில் தெரியப்படுத்தவுள்ளதாக மருத்துவர் கூறியுள்ளார்.

 

குடல் புற்றுநோயிற்கு காரணமாகும் கொழுப்பு!!

 

நாற்பதைக் கடக்கும் ஆண்களும், திருமணமாகி, குழந்தைப் பெற்ற பெண்களும் தங்களின் உடல் எடையால் பெரும்பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள். அதிலும் வயிற்றுப் பகுதியில் சேர்ந்துவிடும் அல்லது முறையற்ற உணவு பழக்கத்தால் சேகரிக்கப்படும் கொழுப்பால் தான் இவர்கள் பிரச்சினைகளை சந்திக்கிறார்கள்.

அதிக உடல் எடையுடன் கூடிய தொப்பை இருந்தால் இனிஅதனை குறைப்பதில் தீவிர கவனம் செலுத்துங்கள். ஏனெனில் இத்தகைய தொப்பைகள் தான் மார்பக புற்றுநோய், குடல் புற்றுநோய், உணவுக்குழாய் புற்றுநோய், சிறுநீரகப் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், பித்தப்பை மற்றும் கர்ப்பப் பை வாய் புற்றுநோயையும் உருவாக்குவதில் அதிக பங்களிப்பு செய்கிறது.

இடுப்புபகுதியில் சேமிக்கப்படும் கொழுப்பானது குடல் புற்றுநோயை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிப்பதாக ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

உங்களின் உணவு பழக்கத்தால் உடலில் சேரும் கொழுப்பு, ஈஸ்ட்ரோஜன் மற்றும் டெஸ்டோஸ்டிரோனின் உற்பத்தியையும் அளவையும் சமச்சீரற்றதாக்குகிறது. இதனால் உடலில் இயல்பாக சுரக்கவேண்டிய இன்சுலீனின் அளவில் சமச்சீரின்மை உண்டாகி வயிற்றின் கொள்ளளவை அதிகரிக்கிறது. இவையனைத்தும் புற்றுநோய் ஏற்படுவதை ஊக்குவிக்கும் காரணிகளாகவும் செயல்படுகின்றன.

அதே சமயத்தில் உடலில் இருக்கும் கொழுப்பு, திசுக்களில் உள்ள நோய் எதிர்ப்பு உயிரணுக்களை ஈர்த்துவிடுகிறது. இதன் காரணமாக இத்தகைய உயிரணுக்கள் வெளியிடும் வேதிப் பொருள்கள் உடலில் வீக்கத்தை அதிகரித்து புற்றுநோயை உண்டாக்கக்கூடிய செல்களின் செயல்பாட்டை தூண்டிவிடுகின்றன.

அதனால் தொப்பைகளை குறைப்பதில் உடனடியாக கவனம் செலுத்துங்கள். அப்பிள், வெள்ளரிக்காய், தர்பூசணி, பாதாம் பருப்பு, கீரை வகைகள், பீன்ஸ் போன்றவற்றை அதிகளவில் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். தினமும் நடைபயிற்சியும்,உடற்பயிற்சியும் செய்வதை தவிர்க்காதீர்கள்

2030ம் ஆண்டில் உலக சனத்தொகை 860 கோடியாக உயரும்!!

ஐ.நா. மக்கள் தொகை பிரிவு உலக மக்கள் தொகை குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில் தற்போது உலக மக்கள் தொகை 760 கோடியாக உள்ளது. அது வருகிற 2030ம் ஆண்டில் 860 கோடியாக உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் எதிர்வரும் 2100ம் ஆண்டில் உலக அளவில் மக்கள் தொகை 1120 கோடியாகும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தற்போது மக்கள் தொகை 134 கோடியாக உள்ளது. இது படிப்படியாக உயர்ந்து வருகிற 2030ம் ஆண்டில் 151 கோடியாக மாறும். 2050-ம் ஆண்டில் 166 கோடியாக அதிகரிக்கும்.

மக்கள் தொகை பெருக்கம் அதிகம் உள்ள மற்றொரு நாடான சீனாவில் தற்போதைய மக்கள் தொகை 141 கோடியாக உள்ளது.

2024ம் ஆண்டில் அது 144 கோடியாக மாறும் வாய்ப்பு உள்ளது. மேலும் இந்தியாவில் தொடர்ந்து மக்கள் தொகை அதிகரிக்கும் வேளையில் சீனாவின் மக்கள் தொகை பெருக்கம் கட்டுக்குள் அடங்கி பின்னர் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா, நைஜீரியா, காங்கோ ஜனநாயக குடியரசு, பாகிஸ்தான், எத்தியோப்பியா, தான்சானியா, அமெரிக்கா, உகாண்டா மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட 9 நாடுகளில் உலக மக்கள் தொகையில் பாதி அளவு மக்கள் தொகை பெருக்கம் இருக்கும்.

மக்கள் தொகை பெருக்கம் விகிதாச்சாரம் 2017-2050ம் ஆண்டுக்கு இடையில் மேற்கண்ட அளவில் இருக்கும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில், அமெரிக்காவை விட நைஜீரியாவில் மக்கள் தொகை பெருக்கம் அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பிச்சை எடுக்கும் நகைச்சுவை நடிகர்!!

பரத், சந்தியா நடித்த காதல் திரைப்படத்தில் தன் வித்தியாசமான தோற்றத்தால் பலரையும் சிரிக்க வைத்தவர் பல்லு பாபு. இவர் அப்படத்தில் விருச்சககாந்த் என சினிமா சான்ஸ் கேட்பது போல வருவார்.

இவரை தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி இயக்குனர் ஒரு நேர்காணல் செய்ய நினைத்தாராம். இதற்காக அவர் பல்லு பாபு தொடர்புகொள்ள முயற்சித்திருக்கிறார்.

ஆனால் அப்போது அவரின் முகவரியோ, தொலைபேசி எண்ணோ எதுவும் கிடைக்கவில்லையாம். இதனால் அவரின் நண்பர் ஒருவரிடம் விசாரித்தபோது அவருக்கு அதிர்ச்சியான தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

காதல் படத்தில் விருச்சகாந்த் என பெயர் வைத்துக்கொண்டு. நடிச்சா ஹீரோ சார். நான் வெய்ட் பன்றேன் சார். முதல்ல சினிமா. அப்புறம் அரசியல். அப்புறம் பி.எம் என அவர் பேசிய வசனத்தை கேட்டு சிரிக்காதவர்களே இருக்க முடியாது.

பல்லு பாபு சென்னை, எழும்பூர் அருகில் உள்ள சூளையில் உள்ள கோவில் வாசில் பிச்சை எடுப்பதாக தகவல் கிடைத்தது. அவரை ஒரு வழியாக கண்டுபிடித்த போது அவர் சில விசயங்களை பகிர்ந்து கொண்டாராம்.

மேலும் அவர் காதல் படத்தில் நடித்தேன். பின் எந்த படத்தில் நடிக்க முயற்சி எடுக்கவில்லை. அப்பா அம்மாவும் இறந்தவிட்டதால் இங்கேயே இருந்துவிட்டேன் என பல்லு கூறினாராம்.

அங்குள்ள மக்களும் அவரின் நிலை கண்டு பரிதாபம் அடைந்ததாக சொல்கிறார்கள். பரவிவரும் இந்த தகவலால் நடிகர் சங்கம் நடவடிக்கை எடுத்து அவருக்கு உதவி செய்யும் என்ற எதிர்பார்ப்புள்ளது.

பிராந்திய 20 க்கு 20 போட்டியிலிருந்து மஹேல விலகல்!!

இங்கிலாந்து பிராந்திய 20 க்கு 20 கிரிக்கட் போட்டிகளிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளார். குறித்த போட்டித் தொடர்களில் லேங்கஷயர் அணியை பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் விளையாடுவதற்கு மஹேல ஜயவர்தன ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தார்.

அந்த வகையில் தனிப்பட்ட காரணங்களின் அடிப்படையில் தாம் குறித்த போட்டிகளில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

2015 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கட் களத்திலிருந்து விலகிய மஹேல ஜயவர்தன கடந்த வருடம் இங்கிலாந்து பிராந்திய கிரிக்கட் தொடர்களில் சமர்செட் அணிக்காக விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் மாணவர்களிடையே குழு மோதல் : இரு மாணவர்கள் படுகாயம்!!

வவுனியாவில் பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் க.பொ.த உயர்தர மாணவர்களும் க.பொ.த சாதாரண தர மாணவர்கள் இன்று (23.06.2017) இரவு 7.30 மணியளவில் வைரவப்புளிங்குளம் தனியார் கல்வி நிலையத்தில் குழுவினராக மோதிக்கொண்டதில் இரு மாணவர்கள் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..

கடந்த இரண்டு தினங்களாக குறித்த பாடசாலையில் மாணவர்கள் குழுவினராகப் பிரிந்து வகுப்பறையில் மோதிக்கொண்டனர். இதையடுத்து இன்று இரவு 7.30 மணியளவில் வைரவப்புளிங்குளம் பகுதியில் தனியார் கல்வி நிலையங்கள் அதிகமாக காணப்படும் பகுதியில் ஒன்றிணைந்த மாணவர்கள் அதே பாடசாலையில் க.பொ.த சதாரணத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதையடுத்து இரண்டு மாணவர்களும் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வைரவப்புளியங்குளம் பகுதியில் தனியார் கல்வி நிலையங்கள் அதிகமாக காணப்படுகின்ற அதேவேளை மாணவர்கள் குழுவினராக மோதிக்கொள்ளும் சம்பவங்கள் அடிக்கடி இடம்பெற்று வருகின்றன.

இப்பகுதியில் பொலிசாரரை கடமையில் நிறுத்துவதற்கு வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மதவாச்சியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!!

 
மதவாச்சி ஹிக்கிரிகொலாவ பகுதியில் நேற்று (22.06) மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டியை செலுத்தி வந்தவர் பலியாகியதாக மதவாச்சி பொலிசார் தெரிவித்தனர்.

அனுராதபுரம் பகுதியில் இருந்து மதவாச்சி நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி எதிர் திசையில் பயணித்த கண்டர் ரக வாகனத்தை முந்திசெல்ல முற்பட்ட போது கண்டர் வாகனத்தின் மீது முச்சக்கர வண்டி மோதுண்டதிலே இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதன்போது முற்சக்கரவண்டியின் சாரதி படுகாயமடைந்த நிலையில் றம்பாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

இவ் விபத்து தொடர்பான விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கணவரை ஏமாற்றி காதலனுடன் சென்ற பெண்ணை வீதியில் பிச்சையெடுக்க வைத்த அவலம்!!

கணவரை ஏமாற்றி காதலனுடன் சென்ற இளம் பெண்ணை, அவனது காதலன் தெருவில் பிச்சையெடுக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் வேலூர் சங்கரன்பாளையத்தில் அழகுகலை நிபுணராக பணியாற்றி வந்தவர் பிரியா. இவருக்கு சுரேஷ் என்ற கணவர் உள்ளார். இவர்களுக்கு பத்து மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது.

இந்நிலையில் பிரியா, தனது கணவரை ஏமாற்றி விட்டு, காதலனான மல்லன் என்பவருடன் வீட்டை விட்டுச் சென்றுள்ளார். அதன் பின்னர் பிரியாவிற்கு வேலை இல்லாததால், மல்லன் அவரை கொடுமைபடுத்த ஆரம்பித்துள்ளார்.

அவரை மட்டுமின்றி அவரது குழந்தையையும் கொடுமைபடுத்தியுள்ளார். ஒரு கட்டத்தில் மல்லன் இருவரையும் கோவில் கோவிலாக பிச்சை எடுக்க வைத்துள்ளான்.

இது குறித்து பிரியா கூறுகையில், தான் மற்றொருவருடைய மனைவி என்று தெரிந்தும், பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்தும் நிகழ்ச்சிக்கு என்னை அழைத்துச் சென்று, நான் இல்லை என்றால் இறந்துவிடுவேன் என்று கூறினார்.

அதன் பின் இரண்டு வருடங்களாக நீ இன்னொருவரின் மனைவி என்று கொடுமைபடுத்தினார். அதுமட்டுமின்றி குழந்தையை வைத்து தமிழகத்தின் சில இடங்களில் பிச்சை எடுக்க வைத்ததாக கண்ணீருடன் கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து அவர் கூறுகையில், தன்னுடைய பத்து மாத குழந்தையை யாரோ விலைக்கு கேட்பதாக கூறியதாகவும், அதற்கு தான் மறுப்பு தெரிவித்ததால், தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும், தான் கடைக்கு சென்ற நேரத்தில் தன்னுடைய குழந்தையை எடுத்துச் சென்று விட்டதாகவும், தற்போது குழந்தை எங்கிருக்கிறது, எப்படி இருக்கிறது என்பது தெரியவில்லை என்று கண்ணீர் வடித்துள்ளார் பிரியா.

இது தொடர்பாக பிரியா பொலிசில் புகார் அளித்துள்ளார். பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

பாதி மிருகம் பாதி மனிதன் : பீதியில் உறைந்த மக்கள்!!

தென் ஆபிரிக்காவில் ஆடு ஒன்றிற்கு பிறந்த குட்டி பாதி மனிதன் மற்றும் பாதி ஆடு போன்ற உடலமைப்புடன் பிறந்ததால் பொது மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவின் கிழக்கு மாகாணத்தில் Chris Hani மாவட்டத்தில் அமைந்துள்ளது Lady Frere என்ற கிராமம். இங்கு 4,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் அங்கு ஆடு ஒன்றிற்கு பாதி மனிதன் மற்றும் பாதி ஆடு போன்ற உடலமைப்புடன் குட்டி ஒன்று பிறந்துள்ளது.

இதைக் கண்ட அக்கிராம மக்கள் இதை தீய சக்தி தான் அனுப்பியுள்ளது என்று கூறியதால், அங்கு பீதி நிலவியது.

அதன் பின் இது தொடர்பான தகவல் அங்குள்ள கிராமப்புற வளர்ச்சி அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. அதைத் தொடர்ந்து கால்நடை மருத்துவர் Lubabalo அதை சோதனை செய்துள்ளார்.

அவர் கூறுகையில், இது கண்டிப்பாக ஆட்டிற்கு பிறந்தது தான் என்றும், இதில் மக்கள் பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை என தெரிவித்துள்ளார். மேலும் இந்த குட்டி பிறக்கும் போதே இறந்த நிலையில் பிறந்துள்ளது.

இக்குட்டி ஆட்டின் வயிற்றில் இருந்த போது நோய் வாய்பட்டுள்ளது. அது மட்டுமின்றி இதன் தாய் ஆடானது Rift Valley என்ற நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த நோயின் தாக்கம் காரணமாகவே இக்குட்டி இது போன்ற உடலைப்புடன் பிறந்துள்ளது.

அதனால் பொதுமக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கூறியும் மக்கள் நம்பாத காரணத்தினால் அந்த ஆட்டுக் குட்டியின் பிரேத பரிசோதனையின் அறிக்கையை மக்கள் முன்னிலையில் தெரிவிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பேஸ்புக் நட்பால் 11 லட்சத்தை இழந்த பெண்!!

பெண் மருத்துவரிடம் பேஸ்புக்கில் நட்பாக பழகி ரூபாய் 11 லட்சத்து 43 ஆயிரத்தை கொள்ளையடித்த நபரை பொலிசார் தேடி வருகின்றனர்.

மும்பை பரேல் பகுதியில் வசிப்பவர், 38 வயது பெண் மருத்துவர். இவர் கணவர் ஜம்மு – காஷ்மீரில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். சில மாதங்களுக்கு முன் இவருக்கு பேஸ்புக்கில், பியாரோ மேட்ரிக் ஜான் என்பவரிடம் இருந்து ஒரு ஃபிரண்ட் ரெக்வஸ்ட் வந்திருந்தது.

அதை ஓகே செய்துள்ளார். ஜான் இத்தாலியை சேர்ந்தவர் என கூற, முகம் தெரியாத அவருடன் நட்பானார் பெண் மருத்துவர். இதையடுத்து அடிக்கடி பேஸ்புக்கில் பேசி வந்தனர்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் ரவி சின்கா என்பவரிடம் இருந்து ஓர் அழைப்பு வந்தது. ’டெல்லியிலுள்ள டெல்டா கார்கோ என்ற நிறுவனத்தில் இருந்து பேசுகிறேன். இத்தாலியில் இருந்து ஜான் என்பவர் உங்களுக்கு ஒரு பார்சல் அனுப்பி இருக்கிறார். வரி கட்டவேண்டும். அதைக் கட்டினால் பார்சலை எடுத்துக்கொள்ளலாம்’ என்றார் அவர்.

மருத்துவர் அதை உறுதிப்படுத்திக் கொள்ள பேஸ்புக்கில் ஜானை தொடர்பு கொண்டார்.

‘ஆமா. நான்தான் கிஃப்ட் அனுப்பியிருக்கிறேன்’ என்றார் ஜான். இதை உண்மை என்று நம்பி, ரவி சின்கா குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் ரூ.17 ஆயிரம் பணத்தைக் கட்டினார்.

பிறகு மீண்டும் பேசிய அந்த சின்கா, ‘பார்சலில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள யூரோ இருக்கிறது’ எனக் கூறி மேலும் பணம் செலுத்த வேண்டும் என்று கூறினார். அவர் தெரிவித்த தனித்தனி வங்கி கணக்குகளில் ரூ.11 லட்சத்து 43 ஆயிரம் வரை செலுத்தினார் பெண் மருத்துவர்.

அந்த நபர் இன்னும் பணம் அனுப்ப வேண்டும் என்று கேட்க, சந்தேகம் அடைந்த பெண் மருத்துவர், விமான நிலைய சுங்கத்துறை அலுவலகத்தில் சென்று விசாரித்தபோது, அவருக்கு எந்த பார்சலும் வரவில்லை என்பது தெரியவந்தது.

தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்த பெண் மருத்துவர், தாதர் போய்வாடா பொலிசில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.